Page 115 of 128 FirstFirst ... 1565105113114115116117125 ... LastLast
Results 1,141 to 1,150 of 1276

Thread: SIMBHU - Little Super Star

  1. #1141
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிம்பு யாரையும் தவறாக பேசக்கூடாது: வடிவேலு அறிவுரை...



    நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான விஷயத்தில் சிம்பு யாரையும் தவறாக பேசக்கூடாது என்று வடிவேலு பேசினார்.
    மதுரையில் செய்தியாளர்களிடம் வடிவேலு பேசியதாவது:

    ''விஷால் நரி வேலை செய்கிறார் என்று சிம்பு பேசியது தவறு. சிம்பு நல்ல தம்பி. நல்ல பிள்ளை. யாரையும் தவறாக பேசக்கூடாது.
    நடிகர் சங்கத் தேர்தலில் சமாதானம் செய்ய முயற்சிப்பதில் உள்நோக்கம் உள்ளது.

    கமல் தூண்டிவிடுகிறார் என்று சரத்குமார் அணியினர் சொல்கிறார்கள். யாரும் யாரையும் தூண்டவில்லை. விஷால் அணி நடிகர் சங்க விவகாரத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
    உண்மையைக் கண்டுபிடிக்கப் போகும் பாண்டவர் அணி எல்லா கலைஞர்களுக்கும் நல்லது செய்வார்கள். களவு போன நடிகர் சங்கத்தைக் கண்டுபிடிப்போம்'' என்று வடிவேலு பேசினார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1142
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கைவிடப்பட்டது 'கான்'?- தனுஷை இயக்கும் செல்வராகவன்! - Tamil Hindu

    செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'கான்' திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, கத்ரீன் தெரசா, டாப்ஸி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கான்'. யுவன் இசையமைத்து வந்த இப்படத்தை கீதாஞ்சலி செல்வராகவன் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து தயாரித்து வந்தார்கள்.

    சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 'அச்சம் என்பது மடமையடா' படத்தை முடித்துவிட்டு இப்படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருந்தார் சிம்பு.
    இந்நிலையில், 'கான்' திரைப்படத்துக்கு பணம் அளிக்க எந்த ஒரு பைனான்சியரும் முன்வரவில்லை. எப்போதுமே ஒரு படம் தொடங்கிய உடன் தான் பைனான்சியர் பணம் அளிக்க முன்வருவார்கள். இப்படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்ட போதும், யாருமே பணம் அளிக்க முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து இப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், செல்வராகவன் தன் அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்தில் தனுஷ் நடிப்பது மட்டுமன்றி, தயாரிப்பார் என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
    'கான்' கைவிடப்பட்ட செய்தியால், சிம்பு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது உலகளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி தீர்த்தார்கள் சிம்பு ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  4. #1143
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கான் பட விவகாரம், சிம்புவுக்கு மீண்டும் சோதனை! - VIKATAN

    செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கான் படம் திடீரென கைவிடப்பட்டுள்ளது. படம் ஆரம்பித்தும் படத்திற்கு போதிய நிதியுதவி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இது குறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

    நிறைய வதந்திகள் கான் படம் குறித்து உலாவிவருகின்றன. நான் அதற்கு தகுந்த பதிலளிக்க விரும்புகிறேன். கான் படம் என் மனதுக்கு நெருக்கமான கதையம்சம் கொண்ட படம். லட்சியம் சார்ந்த படம் மற்றும் படக்குழுவும் அமைந்தது. படக்குழுவும், நானும் இணைந்து ஒருமனதாக படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
    இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை அடுத்த வருடம் மீண்டும் துவக்கலாம் என இருக்கிறோம். சிம்பு மற்றும் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய நிமிடங்களைக் கண்டிப்பாக நான் மிஸ் பண்ணுவேன் எனக் கூறியுள்ளார்.
    ஒரு படம் ஆரம்பித்தவுடனேயே படத்திற்கான நிதியுதவி கிடைத்து படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற ஆரம்பித்துவிடும். ஆனால் கான் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி சென்றுகொண்டிருக்கும் வேளையிலும் யாரும் தயாரிப்புச் செலவுக்கு பைனான்ஸ் அளிக்க முன்வரவில்லை எனவே தான் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    சிம்பு நடிக்கும் படம் கைவிடப்பட்டுள்ள இதே வேளையில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை செல்வராகவன் இயக்க இருப்பதாகவும் அந்தப் படத்தை தனுஷ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல போராட்டங்களுக்குப் பிறகு வாலு வெளியானது. இது நம்ம ஆளு படம் எப்போது ரிலீஸ் என்றே தெரியாமல் இருக்கிறது. இப்போது கான் படம் கைவிடப்பட்டதும் சேர்ந்துகொண்டுள்ளது. எனினும் கௌதம் மேனனின் படம் வெளியானால் மட்டுமே சிம்புவுக்கே சரியான நேரம் துவங்கும் என்றே தோன்றுகிறது.

  5. #1144
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் மெகா படம்

    கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், அல்லு அர்ஜுன், புனீத் ராஜ்குமார், ஃபகத் ஃபாசில் இணையும் மெகா படம் ஒன்று தயாராக இருக்கிறது.
    இயக்குநர் கெளதம் மேனன் அடுத்தாக கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இருவரும் நடிக்கவுள்ளனர். எனவே இந்தப் படம் 4 தென்னிந்திய மொழிகளிலும் தயாராகும் என்று தெரிகிறது.

    தமிழில் சிம்பு, தெலுங்கில் நாக சைதன்யா நடிக்க, ஒரே நேரத்தில் 'அச்சம் என்பது மடமையாடா' படத்தை கெளதம் மேனன் இயக்கிவருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னரே புனீத் ராஜ்குமாருடன் இணைய திட்டமிட்டிருந்த கெளதம் மேனன், 7-அப் விளம்பர படப்பிடிப்பின்போது அவரை சந்தித்து பேசி சம்மதம் பெற்றுள்ளார். புனீத் ராஜ்குமாரும் கவுதம் மேனனுடன் இணைய ஆவலாக இருந்ததால், அவர் தற்போது அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு, தேதிகளை ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதேபோல ஃபகத் ஃபாசிலும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருந்தார். அவரது ஆசையும் நிறைவேற உள்ளது..

    தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும், தமிழிலிருந்து சிலம்பரசனும் இந்தப் படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்கள் இயக்கி பழக்கப்பட்டுள்ள கெளதம் மேனன், இந்தப் படத்தின் தமிழ் மற்றும் மலையாளம் பதிப்புகளை தயாரிப்பார் என்றும், புனீத் கன்னட பதிப்பையும், முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தெலுங்கு பதிப்பையும் தயாரிப்பார்கள் என்றும் தெரிகிறது. இந்தப் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை கெளதம் மேனன் சந்திக்கவுள்ளார்.

    ராம் சரண் தேஜாவுடன் இணைந்து மற்றொரு தெலுங்கு படத்தையும் கெளதம் மேனன் இயக்கவுள்ளார். 'தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள ராம் சரண், அது முடிந்ததும் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதல் கெளதம் மேனன் படத்தைத் தொடங்குவார். இடைப்பட்ட நேரத்தில் இந்த பன்மொழிப் படத்தை துவங்க திட்டமிட்டுள்ள கெளதம் மேனன், அது உடனடியாக நடக்கவில்லையென்றால், ராம் சரணையும் இந்த பன்மொழிப் படத்தில் நடிக்கவைப்பார் என்று தெரிகிறது.

  6. #1145
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Ponvannan : 1235 Won
    Silambarasan (Simbu) : 1107 Lose

  7. #1146
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    vikatan

    ஒரு படத்தை வெளியிடுவதற்குள்ளேயே நூடுல்ஸ்ஸான விரல்நடிகர், அடுத்துத் தயாரித்து நடித்துவரும் படமும் வெளியாவது சந்தேகமே. அந்தப் படத்தில் நடித்திருக்கும் நம்பர் நடிகைக்குப் பேசப்பட்ட சம்பளத்தில் பாதியே கொடுத்திருக்கிறார்களாம். மேலும் விரல் நடிகர் தனியாக 30 லட்சம் தருவதாகச் சொல்லிய பணமும் தரவில்லையாம். இன்னும் இரண்டு பாடல்கள் பாக்கியிருப்பதால் நடித்துத் தாருங்கள், மீதித் தொகை அனைத்தையும் தந்துவிடுகிறேன் என்று கேட்டாலும், முடியவே முடியாது என்று கறாராக சொல்லிவிட்டாராம் நம்பர் நடிகை. விரல் நடிகருக்கு எந்தப் பக்கம் திரும்புனாலும் அடிமேல் அடிவிழுந்து வருகிறது! பாவம் யார்(நடிகைகள்) விட்ட சாபமோ!

  8. #1147
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    SIMBU candid with BOSSKEY


  9. #1148
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிம்பு கைதாகிறாரா? பாடல் நீக்கப்பட்டதா?
    அதிர்ச்சி தகவல்
    சிம்பு சில நாட்களாக எந்த வம்பிலும் மாட்டாமல் இருந்தார். அப்படி இருந்தால் அது சிம்புவே இல்லையே...பீப் சாங் என ஒன்று வெளியிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார்.
    இப்பாடலுக்கு சமூக வலைத்தளங்கள் ஆதரவும், எதிர்ப்பும் குவிந்து வருகின்றது. ஆனால், ஒரு எழுத்தாளர் இது அரசியல் சதி, ஆட்சியின் குறைப்பாட்டை திசை திருப்ப, அரசே செய்த வேலை என்ற ரேஞ்சில் பேசி செம்ம காமெடி செய்துள்ளார்.
    மேலும், பல பெண் அமைப்பினர்கள் இவர்களை கைது செய்ய வேண்டும் என கொடி பிடிக்க, அட போங்கடா என அந்த பாடல் யு-டியுபில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இச்சம்பவம் திரையுலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

  10. #1149
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    திரு சிம்பு அவர்களே...ஒரு தமிழ் பெண்ணின் கடிதம் !!!!

    தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே...
    திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், "ஹிப்ஹாப் தமிழா" திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு,

    சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.

    பொதுவாக தமிழர்கள் சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பார்ப்பது கிடையாது. படங்களில், மெகா சீரியல்களில் வரும் வில்லன்கள் வில்லிகள் நன்றாக இருக்கக்கூடாது என்று வாரித் தூற்றும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை சினிமாவுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. சினிமா நடிகர்களை நாட்டை ஆள வைத்து அழகு பார்ப்பவர்கள்.
    இத்தகைய சமூகத்தில், உங்களுடைய பாடல்களை, பட வசனங்களை வைத்து இங்கு தினம் தினம் எவ்வளவு பெண்கள் 'வெர்பல் அப்யூஸ்' எனப்படும், ’வார்த்தை வதை’யை எதிர்கொள்கிறார்கள் என்பதை ரசிகர்களை மகிழ்விக்க பறந்து பறந்து வேலை பார்க்கும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ‘இது வெறும் ஜாலிக்குதான்... நாங்கள் பெண்களை திட்டவில்லை’ என்று நீங்கள் கூறும் பதில்களை கேட்டு கேட்டு காது புளித்துப்போனவர்களில் நானும் ஒருத்தி!

    அது என்ன மாயமோ புரியவில்லை, என்ன மந்திரமோ தெரியவில்லை ஜாலிக்கு திட்ட பெண்கள் மட்டுமே கிடைக்கிறார்கள். "க்ளப்புல மப்புல" பெண்கள் திரிவதாக பாடிய ’ஹிப்பாப் தமிழா’ திரு.ஆதியின் கண்களுக்கு குடிப்பழக்கம் உள்ள சுமார் நான்கு சதவீத பெண்கள் மட்டுமே தெரிகிறார்கள். அவருக்குப் பிடித்த பாரதியாரின் கூற்றின்படி நிமிர்ந்த நன்னடையில், நேர்கொண்ட பார்வையுடன் இப்புவியில் யாருக்கும் அஞ்சாத துணிவுடன் இந்த சமூகத்தில் போராடி முன்னேறும் பெண்களை பார்க்காமல் போய்விட்டார். குடிக்கும் பழக்கம் உள்ள முக்கால்வாசி ஆண்களைப் பற்றி பாடியதே இல்லை. பெண்கள் கர்சீப்பை கட்டிக் கொண்டு நடமாடுவதாகக் கூறிய திரு.ஆதி அவர்கள், ஏனோ லோ ஃஹிப், ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போடும் ஆண்களிடம் வேட்டி சட்டை கட்ட சொல்லவே மறந்து விட்டார். 'ஆண்கள் குடித்தால், பெண்கள் குடிப்பதில் என்ன தவறு... பெண்களும் குடிக்க வேண்டும் ' என்று வறட்டு பெண்ணியம் பேசும் பெண் அல்ல நான். மது அருந்துவது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். ஆனால் ‘பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள்’ என்று கூப்பாடு போடுவதுதான் இங்கு பிரச்னை.

    இங்கு பல பெண்கள் ஆசிட் வீச்சிலும் இன்னும் பல கொடூரமான வழிகளிலும் கொல்லப்பட, சித்ரவதை செய்யப்பட ‘அடிடா அவள, ஒதடா அவள, வெட்ரா அவள’ என்று பாட எப்படிதான் மனசு வருகிறதோ என்று தெரியவில்லை ’பொயட்டு’ திரு.தனுஷ் அவர்களுக்கு. நெரிசல்மிக்க நகரத்தின் பீக் ஹவரில், நகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை அறிவீர்களா நீங்கள்! சமூகக் காரணங்களால் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க முடியாமல், இஷ்டப்பட்ட வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்க ஏதோ ஒரு வேலைக்கு காலையில் செல்லும்போது, எத்தனை உரசல்கள், சீண்டல்களை நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா? உடல் முழுக்க உறுப்பு முளைத்த எத்தனை ‘ஆண்களை’க் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா? உடல் அவஸ்தையை பொறுத்துக் கொண்டு, விடுப்பு எடுக்க முடியாமல் மாதம் முழுக்க வேலைக்குச் செல்லும் எங்களை, எப்படி ஒரு போகப் பொருளாக மட்டும் உங்களால் பார்க்க முடிகிறது!?
    இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒரு படம் முழுக்கவே பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தினார் திரு.ஜி.வி.பிரகாஷ். வெர்ஜினிட்டி என்ற பிற்போக்கு தனத்தை முதன்மைப்படுத்தி, வெர்ஜின் பெண்கள் டைனோசர் காலத்திலேயே போய்விட்டனர் என்றாகவெல்லாம் பட வசனங்கள். இது முழுக்க முழுக்க முட்டாள்தனத்தின் உச்சகட்டம். ஒரு பெண்ணை வெறும் பாலியல் உறவுக்காக மட்டுமே ஒருவன் பயன்படுத்தி அவளைத் தூக்கி எறிந்தால், அந்தப் பெண் வெர்ஜினிட்டியை இழந்து விட்டதன் காரணத்தால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக் கூடாதா? காதலன் கைவிட்ட, கணவனைப் பறிகொடுத்த பெண்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா? மணமுறிவு பெற்ற பெண்கள் இன்னொரு ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா? பெண்களுக்கு பலமான பொருட்களை தூக்கினாலும், வெகு தூரம் சைக்கில் ஓட்டினாலும், கன்னித்திரை பாதிக்கப்பட்டு நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் ‘வெர்ஜினிட்டி’ போய்விடும். தடகளம் உள்ளிட்ட* விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண்களுக்கும் வெர்ஜினிட்டி இருக்காது. இது மருத்துவ உண்மை. அவர்களை என்ன செய்வது? அப்படியான பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

    இரண்டு நாட்களுக்கு முன் திரு.சிம்பு-திரு.அனிருத் கூட்டணியில் வெளிவந்த ’பீப் சாங்’... வக்கிரத்தின் உச்சம்! பாடலின் வரிகள் ஆபாசத்தின் உச்சம். அந்தப் பாடலின் ஒரு வரி, 'பெண்களை உடலுறவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம், காதல் வேண்டாம்' என்கிறது. நாங்கள் பெண்கள், ஆண்களான* உங்களைப் போலவே ரத்தமும் சதையும் உள்ளவர்கள். காமத்துக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்ல.

    ஆண்களால் காதல் என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். ஆனால் பெண்கள் ஏமாற்றுவார்கள், பொழுதுபோக்குக்காக காதலிப்பவர்கள் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான ஒரு பொது புத்தியை கட்டமைக்கிற வேலையை செய்கின்றன தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உங்களுடைய பாடல்களும் படங்களும். இப்படியான முயற்சிகள் பெண்களை ஏமாற்றிய சில ஆண்கள் மீதிருக்கும் களங்கத்தை மறைக்க முனைவதாகவே தெரிகிறது. ஆனால், ஒரு பெண்ணாக நாங்களே பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருந்து, நாங்களே குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுவது இந்தச் சமூகத்தில் எங்களுக்குப் புதிதாக நடைபெறுவதில்லை. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சுமத்தும் சமூகத்தில்தானே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

    ஒரு பெண்ணாக எங்களது சிறிய அபிலாஷை என்னவெனில், இனியாவது இது மாதிரி படங்களையும், பாடல்களையும், வசனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும், தவிர்க்கவும். உங்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்து பெண்கள் இனத்தின் வலியைப் புரிந்து கொள்ளவும்!
    அப்புறம் இன்னொரு விஷயம்... ‘இது என்னோட பெர்சனல் கலெக்*ஷன்... அதைப் பற்றி ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் போல. பெர்சனல் கலெக்*ஷன்ல் பொதுவெளிக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்படி வந்த பெர்சனல் கலெக்*ஷன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிப்பதாக இருந்தால், ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவே செய்வோம். உங்களுக்கு இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்கு ‘விமர்சன சுதந்திரமும்’ இருக்கிறது.

    இன்னுமொரு முக்கியமான விஷயம்... சென்னையே நூறாண்டு காணாத வெள்ளப் பாதிப்பில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பாடல் உங்களுக்கே கூட தெரியாமல் வெளியாக வேண்டிய தேவை என்ன? இந்திய சினிமாக்களிலேயே கிளாமர் கொடி கட்டிப் பறக்கும் தெலுங்கு திரையுலகமே, சென்னை வெள்ளத்துக்கு ஒன்றிணைந்து உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் சமயம், நீங்கள் தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை... இப்படியான உபத்திரவங்கள் செய்யாமல் இருக்கலாமே..! இந்த ஒற்றை கேடுகெட்ட பாடல், மக்களின் மனநிலையில், கவனத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டதை அறிவீர்களா? அவ்வளவு ஏன், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்த நானே, வேலை மெனக்கெட்டு இந்தக் கட்டுரைக்காக சில மணி நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறேனே!

    இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் வார்த்தைகள் திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், திரு.ஆதி ஆகியோர்களுக்கு ஏதேனும் மன சங்கடத்தை உண்டாக்கியிருந்தால்.... அதற்காக நான் வருந்தப்போவது இல்லை. அதைக் காட்டிலும் லட்சம், கோடி மடங்கு உங்கள் ’படைப்பு’கள் என்னைப் போன்ற பெண்களை அனுதினமும் துரத்துகின்றன... தீண்டுகின்றன. அது தரும் துன்பத்தையும் துயரத்தையும் ஒரு நொடி உணர்ந்தால் கூட, இனி அப்படியான ‘படைப்பு’களைப் படைக்க மாட்டீர்கள்!

    நன்றி!
    FROM VIKATAN
    - ரமணி மோகனகிருஷ்ணன் (மாணவப் பத்திரிக்கையாளர்)

  11. Likes pavalamani pragasam liked this post
  12. #1150
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஆபாச பாடல்- சமாளிக்கும் சிம்பு

    சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கும்போது, நடிகர் நடிகைகள் தங்கள் பொன்னான நேரத்தை மக்களோடு நின்று அவர்களுக்கு பணியாற்றுவதற்கு செலவிடும்போது கொஞ்சம்கூட சமூக பொறுப்பு இல்லாமல் பீப் சாங் என்ற தலைப்பில் ஒரு ஆபாச பாடல் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறது.
    இந்தப் பாடலை சிம்பு, எழுதி பாடியுள்ளார் என்றும், அனிருத் இசை அமைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. பாடல் முழுக்க ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. அந்த இடத்தில் பீப் சவுண்ட் போட்டிருந்தாலும் எல்லோரும் அந்த வார்த்தையை கணிக்க முடியும். இந்தப் பாடலை சிம்பும், அனிருத்தும் தனிப்பட்ட முறையில் வைத்திருந்ததாகவும் அதனை யாரோ வெளியிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. முதலில் லீக்காக்கி பார்ப்போம் மக்கள் வரவேற்பை பொறுத்து வெளியிடுவோம் என்ற சிம்பு தரப்பே செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
    "சிம்பு வீட்டு பாத்ரூம் கதவும், ஜன்னலும் அம்புட்டு வீக்கா" என்று கேட்கிறான் ரசிகன்.

Similar Threads

  1. Replies: 1359
    Last Post: 25th July 2014, 03:40 AM
  2. Thalaivar ^ Super Star ^ Rajini's Best Pair
    By Sarna in forum Tamil Films - Classics
    Replies: 57
    Last Post: 4th December 2009, 10:06 PM
  3. Little super star : simbu's kaalai
    By anantha krish in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 11th July 2007, 03:50 PM
  4. Super Star Next movie with Shankar
    By alias in forum Current Topics
    Replies: 0
    Last Post: 19th August 2005, 08:59 PM
  5. YSR, the new super star of TFM
    By Sanjeevi in forum Current Topics
    Replies: 19
    Last Post: 1st April 2005, 07:09 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •