-
28th February 2008, 03:53 AM
#21
Senior Member
Veteran Hubber
My Pleasure Pras!!
-
28th February 2008 03:53 AM
# ADS
Circuit advertisement
-
28th February 2008, 03:56 AM
#22
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
priya32
My Pleasure Pras!!
i love one song from isaikku oru kovil ... from KVM i think ... does someone has the lyrics ?? ... thirunaalum varumo swaamy ...
-
28th February 2008, 04:02 AM
#23
Senior Member
Veteran Hubber
பாடல்: யாருக்கு யார் சொந்தம்
படம்: மாலை சூட வா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலைசூடவா
குளிர்கொண்ட மேகம்தானோ மலர்க்கொண்ட கூந்தல்
கடல்கொண்ட நீலம்தானோ சுடர்க்கொண்ட கண்கள்
மடல்கொண்ட வாழைதானோ மனம்கொண்ட மேனி
தழுவாதபோது உறக்கங்கள் ஏது...
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலைசூடவா
கல்யாணமேளம் கேட்கும் நாளெந்த நாளோ
கச்சேரி ராகம் பாடும் பொழுதென்ன பொழுதோ
முதல் முதல் பார்க்கத்தோன்றும் இரவெந்த இரவோ
அலைபாயும் உள்ளம் அணைதாண்டி செல்லும்
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலைசூடவா
-
28th February 2008, 04:03 AM
#24
Senior Member
Veteran Hubber
i love one song from isaikku oru kovil ... from KVM i think ... does someone has the lyrics ?? ... thirunaalum varumo swaamy
Will post the lyrics for it in a bit!
-
28th February 2008, 04:32 AM
#25
Senior Member
Veteran Hubber
பாடல்: திருநாளும் வருமோ சுவாமி
படம்: இசைக்கு ஒரு கோவில்
பாடியவர்: பி.சுசீலா, பி.ஜெயசந்திரன்
திருநாளும் வருமோ சுவாமி
அன்பினில் மயங்கிடும்...உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி அலமேலு மங்கைக்கு
திருநாளும் வருமோ சுவாமி (2)
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி அலமேலு மங்கைக்கு
(திருநாளும்)
கருங்கடல் அலையினில் வெண்ணிர நிலவில்
காதலின் நினைவில் கரைகின்ற நங்கைக்கு
ராத்திரி நேரத்தில் நித்திரை இழந்து (2)
நயனங்கள் சிவக்கின்ற (2)
அலமேலு நங்கைக்கு...திருநாளும் வருமோ சுவாமி
மங்கையின் மனதினில் மலையென ஆசைகள்
மையலைத் தந்தது மாயவன் லீலைகள் (2)
மாமலர்த் தேன்மதி மதுமழை சிந்திட
மதுமழை சிந்திட மயக்கத்தில் சிரிக்கின்ற
அலமேலு மங்கைக்கு...திருநாளும் வருமோ சுவாமி
கமபநி திருநாளும் வருமோ...சநிதபம பமகரிச கம
திருநாளும் வருமோ சுவாமி...பநிதபமகம
பசநிதபமக பசநிரிசகரிம கரிசரிநிச
திருநாளும் வருமோ சுவாமி...
மங்கையின் மனதினில் மலையென ஆசைகள்
மையலைத் தந்தது மாயவன் லீலையில் (2)
மாமலர்த் தேன்மதி மதுமழை சிந்திட (2)
மதுமழை சிந்திட மயக்கத்தில் சிரிக்கின்ற
அலமேலு மங்கைக்கு...திருநாளும் வருமோ சுவாமி
திருநாளும் வருமோ சுவாமி
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி அலமேலு மங்கைக்கு
-
28th February 2008, 04:56 AM
#26
Senior Member
Veteran Hubber
பாடல்: ஞாயிறு ஒளிமழையில்
படம்: அந்தரங்கம்
பாடியவர்: கமலஹாசன்
ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூவுடலில் புது அழகினை படைக்க வந்தேன்
(2)
உலகெங்கும் பொங்கி ததும்பும் அழகெந்தன் ஆணைக்கடங்கும்
அங்கங்கு மெருகு படியும் அங்கங்கள் ஜாலம் புறியும்
ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்
மன்மதனின் ரதியும் உன்னால் பொன்வதனம் பெற்றதென்னால்
ஊர்வசியும் இங்கு வந்தாள் பேரழகை வாங்கி சென்றாள்
ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்
தங்கங்கள் இங்கு வருக தரமின்னும் அதிகம் பெறுக
வைரங்கள் நம்பி வருவ புது வடிவம் தாங்கி பொலிக
ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்
-
28th February 2008, 05:26 AM
#27
Senior Member
Veteran Hubber
பாடல்: போய் வா நதியலையே
படம்: பல்லாண்டு வாழ்க
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ், டி.கே.கலா
போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
(2)
கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம்
பனிவாடைக் காலம் உனைக்காண வேண்டும்
நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம்
மழைக்கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்
இதுபோதும் என்று தடுமாறி...இடம் மாறிமாறி சுகம்தேடி
ஆ உறவாடும்போது சரிபாதியாகி...உயிர்க்காணும் இன்பம் பலகோடி
போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
நுரைப்பூவை அள்ளி அலை சிந்த வேண்டும்
அலைமீது கொஞ்சம் தலைசாய வேண்டும்
வசந்தத்தை வென்று வரும் உன்னைக்கண்டு
மழைவில்லில் வண்ணம் வரகின்ற வானம்
மெதுவாக வந்து இதழ்மூடி...பதமாக அன்பு நதியோடி
ஆ மணமேடைக்கண்டு புது மாலைச்சூடி
குலமங்கை வாழ்க நலம்பாடி
போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
-
28th February 2008, 12:37 PM
#28
Senior Member
Seasoned Hubber
-
28th February 2008, 01:04 PM
#29
Senior Member
Platinum Hubber
Can we have the link for kamalhassan's song
gnaayiru oLi mazhayil?
-
28th February 2008, 03:47 PM
#30
Senior Member
Seasoned Hubber
I like the song, " Ore paadal.." from Engirindho vandhaal, especially the lines :
Kaadal kiligal parandha kaalam
Kannil theriyum nenjam urugum
Kanneer kalangi
Kannil Irangi
Nenjil vizhundhal
Sondham puriyum
Indha varigal, padippadiya azhaga irangi vara maadhiri irukkum
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
Bookmarks