Page 100 of 114 FirstFirst ... 50909899100101102110 ... LastLast
Results 991 to 1,000 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #991
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி கொடையாக கொடுத்த நிலம் எங்கே?



    siva-1077.jpg


    Thanks சிவாஜி முரசு ".
    யூடியூப் லிங்க்:
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #992
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1962 இல், 40,000 மக்கள் குவிந்தனர். அதிரவைத்த சிவாஜியும், அதிர்ந்துபோன சிங்கப்பூரும்.




    siva-1088.jpg

    siva-1089.jpg

    Thanks Nadigar Thilagam Sivaji TV
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #993
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் உடல்,முக, தொடு மொழிகள்-. கவிஞனை மீறும் நடிப்பு அதிசயம்.
    கோபால் எழுதியவை

    ***தவப்புதல்வன் படத்தில் தன் அறையில் திருட வந்த வாசுவுடன் போராடும் காட்சி. பூட்ஸ் சத்தத்தை வைத்து அவர் ஒரு பக்கமாக முகம் திருப்பி. காதால் ஒலி வாங்கி போராடும் காட்சி
    ***தவப்புதல்வனில் தற்செயலாக அறையில் அரைகுறை உடையில் சகுந்தலாவை பார்த்து அடையும் கூச்சம் , அருவருப்பு டன் வாலிபலுக்கே உரிய ஆவலும் ஒரு பத்து சதம் எட்டிப் பார்க்கும் தவிப்பு.
    **பந்த பாசத்தில் நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ பாட்டில் , தான் மணந்து கொண்ட மாற்றுத் திறனாளி பெண்ணின் அன்னையிடம் அவர் பணம் பெறும் போது ஒரு பக்கம் தந்தையின் சுமை குறைவதை எண்ணி ஆசுவாசம் , இந்த மாதிரி பணம் பெறும் விதத்தை எண்ணி சுய வெறுப்பு கலந்த இயலாமை , தன் வாழ்வை துறந்து இன்னொரு உயிரை அரவணைக்க வேண்டிய சுமை. அனைத்தும் 15 நொடிக்குள். ஒரு கதாசிரியனின் வர்ணிப்பில் விவரித்தால் ஒரே கணத்தில் நிகழும் கலப்பு மனநிலைகள்.
    ***நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் , கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
    காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
    NT is always a wonder and much ahead of his time !!!
    உயர்ந்த மனிதன் படத்தில் குடித்து விட்டு விருந்தினர் முன் உளரி சொல்ல கூடாதவைகளை சொல்ல முயலும் அசோகனை பார்த்து பதறி சங்கடம் கலந்து அவமானமடையும் மனைவியை கைவிரல்களால் அவள் விரலை முதல் முறை அழுத்தும் போது பதட்டப் படாதே என்ற ஆறுதல் , இரண்டாவது அழுத்தலில் நான் சமாளிக்கிறேன் என்ற நம்பிக்கை.
    -புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்".
    "நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,
    ----படிக்காத மேதை"தன்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லும் பெரியவரோடு அப்பாவித்தனமாய் வாக்குவாதம் செய்யும் காட்சி."உன்னால தனியாப் போய்
    வாழ முடியாது..?"-என்று கோபமாய் பெரியவர்கேட்க..."முடியாது...முடியாது"என்கிற வார்த்தையை ஒரு பதிலாகசொல்லிக் கொண்டு வருபவர்,அப்படியே அந்த "முடியாது"என்கிற வார்த்தையை, தனதுஇயலாமையைக் குறிப்பிடும்
    வார்த்தையாக மாற்றும்
    லாவகம்.
    ----பாகப் பிரிவினை."தாழையாம் பூ முடிச்சு" பாடல்."தன்னன்னா"வுக்குப் பிறகுவரும் துவக்க இசைக்கு, ஊனம்மறந்து துள்ளும் சந்தோஷத்
    துள்ளல்.
    ---வியட்நாம் வீட்டில் ஒய்வு பெற்ற பிறகு ஆபிஸ் வந்து ,அலுவலக பணியாளர்களுடன் பேசி கொண்டு மேசையை தொட்டு விட ,தூசி படிந்ததை தன் கை விரல் களின் மூலம் உணர்த்தும் காட்சி.
    ---நிச்சயதார்த்தத்தில் முதல் முறை குடிக்க்கும் புகைக்கும் அறிமுகம் ஆகும் போது உடல் மொழியில் காட்டும் uneasiness மற்றும் கொட்டாவி
    ----பாரத விலாஸ் படத்தில் சகுந்தலா நடனமாடும் போது,பக்கத்து மேசையில் புகைக்கும் போது காட்டும் முகசுளிப்பு மற்றும் கைகளினால் புகையை ஒட்டும் அருவருப்புணர்வு.
    ---பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார்.
    ---வீரபாண்டிய கட்டபொம்மன்".போருக்குக் கிளம்புகையில்
    மனைவியிடம் விடைபெறும்
    போது, பல பக்க வசனங்கள்
    விளக்க வேண்டிய வீரத்தை,
    "சர்ர்ர்...ட்ட்" என்று தனது
    குறுவாளை உறைக்குள்
    செலுத்துவதில் காட்டி விடுவது.
    ---தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"
    ---இரவில் கிசு கிசு( whisper)குரலில் தன். நண்பனுடன். நான். காதலித்த பெண்ணை. இன்னொரு நண்பன் விரும்புவதை உணர்ந்து பேசும் சுய பச்சாதாப*. ஆறுதல், நடைமுறை. உணர்ந்த. சமாதானம்.நெஞ்சிருக்கும். வரை நினைவிருக்கும்.
    ---தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?
    "என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?
    ---தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
    .
    ---வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.
    --- சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.
    தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,
    ---அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)
    "***என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,
    --- மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.
    ---துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து போய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......
    ----படித்தால் மட்டும் போதுமா?"மனைவியால் வெறுக்கப்பட்ட
    வேதனையுடன் தான் மட்டும்
    வீடு திரும்புவார்.
    மகனுடன்,மருமகளைக் காணாத வியப்போடு தாய்
    "மீனா வரலையாப்பா?" என்று
    கேட்பாள்.விரக்தியில், ஏதோ சிந்தனையில்.. தாய் கேட்டதை
    கவனிக்காதவர்.. "ம்ம்? "எனும்
    ஒலியையே பதில் கேள்வியாக்குவாரே?
    ---ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....
    ---பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......
    ---கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..
    பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!
    ---நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன், வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல், சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
    மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...
    ---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,
    ---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.
    ---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.
    ---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.
    --- பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .
    ---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .
    ---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .
    ---புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.
    ---அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .
    ---பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.(இவன் எங்கே இங்கே. அழையாமல்)
    ---அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.
    ---ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.
    ---திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .
    ---சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.
    ---சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.
    ---ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?அந்த நாள் பசுமையாக.
    ***தன்னை ஏமாற்றி. விட்டதாக. சொல்லும் பெண்ணிடம். தன். பொறுப்பற்ற* உதாசீனம். காட்டி , கேலியாக* உதவும். அரையிருட்டு. சில்லௌட். காட்சியில். சைட். ஆங்கிளிளில். அவர். முகபாவத்தை உணரலாம். அந்தநாள். அதிசயமே.
    ***பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.
    --- "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?
    --- "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
    எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,
    ---"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,
    ---உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.
    ---தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.
    ---ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.
    -தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;
    ---ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம்.
    --- இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.
    ---வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்!
    ---பாபு , இதோ எந்தன் தெய்வம்--குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
    சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..
    --- படிக்காத மேதை..பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..
    ---உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை , பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..
    ---ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள்
    ---ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..
    ---பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.
    ---கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.
    ---தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.
    ---எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .
    ---சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .
    ---தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.
    ---உத்தமபுத்திரன்.யாரடி நீ மோகினி" பாடல்.ஆடிக்கொண்டே நகரும் அழகி பேரின்பமே காண்போம் வா
    மன்னவா" எனப் பாடிச்
    செல்ல...அந்தப் பெண்ணைப் பிடிக்கமுனையும் போது, மதுவின்
    போதை கொஞ்சம்,கொஞ்சமாக
    ஏறுவதைக் காட்டும் அந்த
    மெல்லிய தள்ளாடல்.
    ---உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.
    ---அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.
    ---அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.
    ---சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.
    ----சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.
    ----அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .
    ----துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.
    ---பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.
    -பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;
    ---பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.
    ---யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.
    ----வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.
    ---வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.
    ---அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.
    ----ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்
    ----ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.
    ---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.
    ---ராமன் எத்தனை ராமனடி".கே.ஆர்.விஜயாவிடம், "உங்களுக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க. இந்த கையை வெட்டிக்கணுமா?"
    என்று தனது வலது கையைக்
    காட்டுகிறவர், வேகமாய்ச்
    சுதாரித்துக் கொண்டு இடது
    கையைக் காட்டுவார்.வலது கை இல்லையென்றால்
    சாப்பிட முடியாதே?
    ----ஆலயமணி."கல்லெல்லாம்" பாடல்.பாடிக் கொண்டே ஓவியம்
    வரைந்து முடித்த பிற்பாடு,
    ஓவியர்களுக்கே உரித்தான
    பாணியில்.. சற்றே பின் தள்ளி
    ஓவியத்தை மேற்பார்வையிடல்.(simultaneously cleaning the hand)
    கோபால் எழுதியவை.


    Thamks Gopalakrishnan Sundararaman (Nadigarthilagam fans )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #994
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Nadigarthilagam celebrated Pongal Festival in his farm every year in a grand manner.When MGR was shot in January 1967 just few weeks before General Elections,NT was very much distressed over the incident.He cancelled Pongal celebration What great human being he was! This news was revealed from a question and answer published in the March issue of 'Pesun Padam',a popular film monthly.

    siva-1095.jpg

    Thanks N.Swami durai velu (Nadigar Thilakam sivaji visirigal)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #995
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    siva-1096.jpg

    siva-1097.jpg

    ஓலைக்குடிசை, கை ரிக்*ஷா, கருப்பு வெள்ளை .
    நான்கே முக்கிய கதாபாத்திரங்கள் .
    கிழிந்த உடைகள், தாடி, மீசை ,இவற்றோடு நடிகர் திலகத்தின்
    பாபு போட்ட போட்டில் வண்ணங்கள் வெளுத்துப் போயின.
    பிரமாண்டங்கள் சரிந்தன, பாபுவோ சர்வசாதாரணமாக
    வசூலை வாரிக்குவித்தது.(வாசுதேவன்)

    இந்த நடிகளுக்குத்தான் எத்தனை தன்நம்பிக்கை,
    "ஓடையில் நின்னு" மலையாளப் படத்தழுவல்.
    "பாபு"படத்தின் வெற்றியை negative ஆக பார்த்தவர்கள்
    "பாபு" படத்தின் இமாலய வெற்றி கண்டு வியந்தனர்.!

    இயக்குனர் திருலோகசந்தர் தன் நண்பர் சிவாஜிமேல்
    அசாத்திய நம்பிக்கை வைத்தார்,
    அதை நிஜமாக்கி தமிழ்பட உலகை திணறவைத்தவர் எளிமையான ஆனால் வலிமையான "பாபு".
    (This filmbecome a blockbuster at the box office and running over 100 days in many theatres ),!

    (இமேஜில் உள்ளவை)


    Thanks Thilak Ganesan (Face book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #996
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ப்ளாஷ்பேக்.


    ரசிகர்களும்,தயாரிப்பாளர்களும்,திரையுலகம் பெரிய மாறுதலை நோக்கி பயணிக்க தொடங்கியது 1952 ம் ஆண்டு ...எல்லோருக்கும்
    தெரிந்த விஷயங்களையே மறுபடியும் சொல்வதில்
    எனக்கு உடன்பாடில்லை...ஒரு முன் கதையை பார்ப்போம் .....
    திண்டுக்கல்லில் கே.என்.ரத்தினம் என்பவர் நடத்தி வந்த "என் தங்கை நாடகத்துக்கு தலைமை தாங்க
    சென்றிருந்தார் ஏ.எஸ்.ஏ.சாமி ...நாடகத்தை எழுதியவர் டி.எஸ்.நடராஜன் ...நாடகத்தில் நடித்த ஒரு நடிகரின்..உணர்ச்சிகரமான நடிப்பு ஏ.எஸ்.ஏ.சாமியை மிகவும் கவர்ந்தது ...
    திண்டுக்கல்லில்லிருந்து திரும்பியதும் தான் பார்த்தநாடகத்தை பற்றியும் தன்னை கவர்ந்த நடிகரை பற்றியும் ஜீபிடர் சோமுவிடம் சொன்னார்.
    என் தங்கையை ஜீபிடருக்காக படமாக்க போவதாகவும் அதை ஏ.எஸ்.ஏ.சாமியே இயக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ..
    ஆனால் ஜீபிடருக்காக மூன்று படங்களை இயக்கி கொண்டிருந்த சோமு தனக்கு நேரமில்லை என்றும்
    வேறு இயக்குநரை வைத்து இயக்கலாம் ஆலோசனை சொன்னதுடன் ..அந்த இயக்குனரை
    என் தங்கை நாடகத்தை பார்த்து வரச்சொன்னார்.
    அவருக்கு நாடகம் பிடிக்கவில்லை திட்டம் கிடப்பில்
    போடப்பட்டது .
    சில மாதங்களுக்கு பின் பி.ஏ.பெருமாள் தான்
    பராசக்தி நாடகத்தை படமாக இருப்பதாகவும் அதற்கு..திரைக்கதை வசனம் எழுதி தரும்படி ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கேட்டார். அவரும் "பராசக்தியும்
    என் தங்கையும் தங்கை பாசத்தை டிப்படையாக கொண்டவைதான் அதிலும் என் தங்கையில் பல சிறப்பான சம்பவங்கள் இருப்பதாகவும் அதனால்
    இரண்டு கதைகளையும் இனைத்து புதிய புதிய திரைக்கதை யை அமைக்கலாம் "என்றார் சாமி.
    நாடகத்தை பார்க்க ஆசைப்பட்டார் பெருமாள் ..
    திருச்சியில் என் தங்கை நாடகத்தை பார்த்தார்கள்
    மறுநாள் "காதல்"பத்திரிகை ஆசிரியர் அரு.ராமனாதன் வீட்டில் என் தங்கை நாடகாசிரியர்
    டி.எஸ்.நடராஜனை சந்ததித்து பேசினார்கள்.
    அவர் ஒத்து வரவில்லை ...இதோடு இதை நிறுத்தி
    கொள்ளலாம் ..
    "பராசக்தி கதையை ஏ.வி.எம்.கூட்டணியுடன் பெருமாள்..தயாரிக்க போகிறார் என்று கேள்வி பட்ட அசோகா பிக்சர்ஸ்...என் தங்கை கதையை
    வாங்கி அதே பெயரில் தயாரித்து பராசக்திக்கு முன் வெளியிட்டார்கள் படச்சுருளையே சோகத்தில்
    முக்கியெடுத்து விட்டார்கள் ..சரி அதைவிடுவோம்
    பின்னர் கலைஞர் கதைவசனம் எழுதியதும்
    மெய்யப்ப செட்டியாரின் தடுமாற்றமும் பி.ஏ.பெருமாளின் பிடிவாதமும் அனைவரும் அறிந்த விஷயம்தானே ..இங்கே ஒரு ட்விஸ்ட்
    என் தங்கை நாடகத்தில் நாயகனாக நடித்தவர்
    #நடிகர்திலகம்சிவாஜிகணேசன்..
    மீண்டும் பராசக்திக்கு வருவோம் ..
    படம் பத்தாயிரம் அடிக்கு மேல் எடுக்கப்பட்டது
    எடிட் செய்துபார்த்தார்கள் ...சிவாஜியின் நடிப்பு படத்தின் பிற் பகுதியில் சிறப்பாக இருந்ததை
    மெய்யப்ப செட்டியார் உணர்ந்தார் ..ஆரம்பத்தில் எடுத்த 7ஆயிரம் அடியை நீக்கி விட்டு மறுபடியும் இரவு பகலாக படமாக்கினார்கள் ..
    1952 அக்டோபர் 17ந்தேதி பராசக்தி வெளியானது
    அது வரையில் இப்படி கம்பீரமான குரலை கேட்டறியாத தமிழ் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள் ..படம் வெளியாகும் முன்பே
    "பணம்""பூங்கோதை "மனிதனும் மிருகமும் "ஆகிய படங்களில் ஒப்பந்தமானார் ...இப்போது ஒரு சிறப்பு செய்தி பராசக்தி வெளியான அதேநாளில்
    சௌகார் ஜானகி நடித்த..முதல் படமான "வளையாபதி "யும் வெளியானது.....

    siva-1098.jpg

    Thanks Ganesh Moorthy (வசந்தம் (பல்சுவைக் குழு)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #997
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பொய், பித்தலாட்டம், திருகுதாளம், உருட்டல், பிரட்டல், மிரட்டல் ,போன்ற அனைத்து சித்துவேலைகளையும் தாங்களே செய்துகொண்டு அதனை நாங்கள் செய்வதுபோல் எங்கள்மேல் பழிபோடும் வாத்தியின் கைகூலிகளது பித்தலாட்டம் ஆதாரத்துடன் அம்பலம் .

    திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் 100 நாட்கள் ஓடிய படம் மதுரைவீரன் என்று, இன்றுவரை கப்சாவிட்டுகொண்டு திரிகிறார்கள் வாத்தியின் கைகூலிகள்.ஒவ்வொரு வாத்தியின் கைசும் நேரத்துக்கு ஒரு கதை ,32 அரங்கில் 100 நாட்கள் என்று ஒரு கைகூலி சொல்லுவார், மற்றைய கைகூலி எழுதுவார் 34 அரங்கில் 100 நாட்கள் என்று, இன்னுமொரு கைகூலி 36 அரங்கில் என்பார். பொய் சொல்வதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

    வாத்தியின் ரசிகர்களை உண்மையை உணரவிடாமல் மூளைச்சலவை செய்யும் உரிமைக்குரல் என்ற பத்திரிகையில் மதுரைவீரன் 100 நாட்கள் ஓடிய தியேட்டர் விபரங்களுடன் வெளியிடப்பட்ட பதிவு இது. இதில் காஞ்சிபுரம் முருகன் தியேட்ரிலும், கடலூர் நியூ சினிமாவிலும் ,திருவாரூர் பேபி தியேட்டரிலும் 29/06/1956 முதல் அமரதீபம் திரையிடப்படடுவிட்டது.மேற்படி 3 தியேட்டர்களிலும் அமரதீபம் திரையிட்டு ஓடிக்கொண்டிருப்பதற்கான பத்திரிகை ஆதாரம் இது.13/04 1956 ல் மதுரைவீரன் திரையிடப்பட்டது.29/06/1956ல் அமரதீபம் திரையிடப்பட்டது.எனவே மேற்கண்ட 3 தியேட்டர்களிலும் ஏப்ரல் மாதத்தில் 18 நாட்கள், மே மாதத்தில் 31 நாட்கள், யூன் மாதத்தில் 28 நாட்கள் மொத்தம் 77 நாட்கள்தான் வருகின்றது. ஆனால் வாத்தியின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு .காஞ்சியில் 156 நாட்கள் வந்திருக்கிறது. கடலூரில் 111 நாட்கள் வந்திருக்கிறது .திருவாரூர் பேபியில் 105 நாட்கள் வந்திருக்கிறது.எங்கும் பொய் எதிலும் பொய். பொய்! பொய்!! பொய் !!! இது எங்களுக்கு கிடைத்த ஆதாரத்தின் வெளிப்பாடு ,ஆதாரம் கிடைக்காததால் இன்னும் எத்தனை பொய்கள் ஒளிந்து கிடக்கின்றனவோ.?



    அடுத்ததாக மதுரைவீரன் திரையிடப்பட்ட அதே நாளில் சதாராம் என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. அந்தத்திரைப்படம் விழும்புரம் சீதாராம் தியேட்டரில் திரையிடப்பட்டது .அதற்கான பத்திரிகை விளம்பர ஆதாரம் இங்கே இருக்கிறது.ஆனால் ரத்தத்தின் கைகூலிகளுக்கு மதுரைவீரன் அதே தியேட்டரில் 108 நாட்கள் ஓடியதாம் .இனி என்ன செய்வார்கள் தொப்பியை பிரட்டுவார்கள் எப்படி? இப்படி, முதல் வெளியீட்டில் அல்ல இரண்டாம் வெளியீட்டில் என்று தொப்பியை பிரட்டுவார்கள் அப்பாடா ஒருவழியாக மக்களை ஏமாற்றியாச்சு என்று அவர்களே தங்களுக்கு சமாதானம் சொல்லிக் கொள்வார்கள். எத்தனையோ பொய்களுக்கு மேல் பொய்களைச்சொல்லி வருடக்கணக்காக மக்களை ஏமாற்றி கொண்டு திரியும் வாத்தியின் கைகூலிகளுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி.


    vsr-184-1.jpg

    thani-12.jpg


    thani-14.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #998
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகம்
    ஒரு முறை திருச்சி சிவா ஒரு கூட்டத்துக்கு வந்திருந்த போது நிரம்பி வழிந்த சபையைப் பார்த்து சொன்னது
    உலகத்திலேயே இறந்து 20 ஆண்டுகள் ஆகியும் எந்த அரசியல் ஆதாயமோ , பலன் கருதியோ இல்லாமல் சிவாஜி ஒருவருக்கே பெயரை சொன்னாலே இவ்வளவு கூட்டம் சேரும் என்றார்.
    2012 கர்ணனுக்குப் பிறகு நவீன தொழில் நுட்பத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படங்களே அதற்கு சாட்சி.
    ஒரு ரசிகர் திருவனந்த புறத்திலிருந்து தினமும் வாட்ஸ் அப் செய்வார் . 2019 இலிருந்து தொடரும் தினநிகழ்வு. எந்தெந்த சானலில் சிவாஜியின் எந்தெந்த படங்கள் எந்த நேரம் என்று*
    உதாரணம்
    Good morning. Today main NT AIYA movies:-
    SIVANTHA MANN at 11am in Sun Life tv.
    VAZHKAI at 1.30pm in Mega tv.
    THANGA PATHAKKAM at 4pm in Jaya movies.
    OOTTY VARAI URAVU at 10.30pm in Vendhar tv.
    ____________________________
    Tomorrow (4-3-22) main NT AIYA movies:-
    "RATHA THILAGAM" at 11am in Murasu tv.
    "THANGAMALAI RAGASIYAM" at 3.30pm in Raj Digital plus.
    MOONDRU DEIVANGAL at 7.30pm in Vasanth tv.
    "RAJA RAJA CHOZHAN" at 9pm in Raj tv.
    Parameswaran
    Trivandrum.
    நான் வந்த செய்தியை தொகுத்தலில் 2020*, 2021 வருடங்களில் மட்டும் சுமார் 3200 முறை அவருடைய 138 படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டுள்ளன.
    அதே போல் 50 ஆவது படம் நூறாவது படம் என்று மொத்த எண்ணிக்கையை நடிகர்களுக்கு குறிப்பிடும் நாட்களில் சுமார் 30 வருட திரை வாழ்வில் நடிகர் திலகத்தின் பிரத்யேக சாதனையாக அவரின் 25 ஆவது 100 நாள் படம் , 50 ஆவது , 75 ஆவது , 100 ஆவது 100 நாட்கள் ஓடிய படங்கள் என்று தொகுக்கலாம்
    நடிகர் திலகம் 100 நாள் படங்கள் மொத்தம் 112 films.
    முதல் படம் பராசக்தி 100 நாட்கள் தாண்டி வெள்ளி விழா கண்டது 1952.
    25 வது 100 நாட்கள் படம் பாலும் பழமும் 1961
    50 ஆவது 100 நூறு நாட்கள் படம் சிவந்த மண் 1969
    75 ஆவது 100 நாட்கள் படம் அண்ணன் ஒரு கோவில் 1977
    100 வது 100 நாட்கள் படம்* முதல் மரியாதை 1985. வெள்ளி விழா கண்டது.
    அதேபோல் அவரது landmark படங்கள் அனைத்தும் பெரு வெற்றிப் படங்கள்.
    சிவாஜியின் முதல் படம் பராசக்தி 100 நாட்கள்.தாண்டி வெள்ளி விழா
    அவரது 75 ஆவது படம் பார்த்தால் பசி தீரும் 100 நாட்கள்.
    100 ஆவது படம் நவராத்திரி 100 நாட்கள்.
    125 ஆவது படம் உயர்ந்த மனிதன் 100 நாட்கள்.
    150 ஆவது படம் சவாலே சமாளி 100 நாட்கள்.
    175 ஆவது படம் அவன்தான் மனிதன் 100 நாட்கள்.
    200 ஆவது படம் திரிசூலம் வெள்ளி விழா
    225 ஆவது படம் தீர்ப்பு வெள்ளி விழா


    Thanks Gopalakrishnan Sundararaman (Nadigar Thilakam sivaji visirikal)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #999
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    "கொடை வள்ளல் " கலை உலக முதல்வர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வழங்கிய நன்கொடைகள் 🙏
    ------------------------------------------ சிலவற்றை நிகழ்ச்சிகளை தந்து உள்ளேன் எனக்கு கிடைத்த தகவலின் படி (இது போக இன்னும் எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்கு பல கோடி ரூபாய்யை நன்கொடையாக வழங்கி உள்ளார்
    📽 செய்தி தகவல் தொகுப்பு 🎞🎬✍
    🙏 கவிஞர் தின குரல் ப சிவகுமார் பிரபு (எழுத்தாளர்) மூத்த பத்திரிகையாளர்✍
    தேசிய திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்------
    சிவாஜி கணேசன் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழக்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில் சிறந்தவர் வேறு யாரும் இலர் எனும் கூறும் அளவுக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்த கொடைகள் பல. இவர் தமிழ் இனத்தின் சொத்து. தமிழ் தாய் ஈன்ற முத்து. சிவாஜி கணேசன் அளித்த கொடைகளில் பொதுவெளியில் பதிவு செய்யப்படாதது பல. வெளி உலகத்திற்கு தெரியவந்தது சில.
    அவற்றை காண்போம்.
    * தமிழக அரசு ஆடும் வைஜெயந்தி மாலாவுக்கு மாதம் ரூ 1000 மும், பாடும் மதுரை சோமுவுக்கு மாதம் ரூ 1000 மும் அளித்துவிட்டு, வறுமையில் வாடிய கக்கன்ஜிக்கு வெறும் ரூ 500 ஐ அளித்தது. அதைக்கண்டு வெகுண்ட சிவாஜி கணேசன் தனது 10 பவுன் தங்க சங்கிலியோடு( இன்றைய மதிப்பில் 2,50,000 ரூ) சேலம் நேரு கலை அரங்கில் " தங்கப் பதக்கம்" நாடகம் நடத்தி கிடைத்த தொகை ரூ 15000 ( இன்றைய மதிப்பு 5 லட்சம்) அளித்தார்.
    * பல கோடிகள் மதிப்புள்ள , தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்
    * கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.
    * பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம்( இன்றைய மதிப்பில் ரூ 51 லட்சம்) அளித்தார்.
    * மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு ரூ 50 லட்சம்)
    * கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.
    * தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.( இன்றைய மதிப்பு :11 கோடிக்கு மேல்)
    * சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.
    * சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
    * தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.
    * 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1.5 கோடி கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
    * மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 8.5 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
    * 1959ல் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் 70 லட்சம்) வழங்யுள்ளார்.
    * சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.
    * 1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் சிவாஜிதான்.( இன்றைய மதிப்பு :26 லட்சம்)
    * 1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தை( இன்றைய மதிப்பு 16 லட்சம்) போர் நிதியாக கொடுத்தார்.
    * 1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.
    * 1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 22 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
    * பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை(இன்றைய மதிப்பு 21 லட்சம்) யுத்த நிதியாக அளித்தார்.
    * பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம்( இன்றைய மதிப்பு 1.5 கோடி) நன்கொடையாக அளித்தார்.
    * பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.
    * கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.
    * அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் திமுகவை வளர்த்தவர்கள் வரிசையில் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
    * திமுகவை வளர்க்க பல நாடகங்களை ஒரு பைசா கூட பெறாமல நடத்திக்கொடுத்தவர் சிவாஜி, மற்றும் பல நாடகங்கள் மூலம் நிதி வசூல் செய்து திமுகவிற்கு அளித்தவர் சிவாஜி என கலைஞர் தனது நூலான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
    * தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணிக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகமெங்கும் சிலைகள் வைத்து பெருமை சேர்த்தார்.
    * தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.( இன்றைய மதிப்பு : 12 லட்சம்)
    * வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.( இன்றைய மதிப்பு 80 லட்சம்)
    * தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரிலும், திரையரங்கம் ஒன்றினை தேவர் பெயரிலும் கட்டினார்.
    * கோயில் நிதி என்றால் ரூ 2 ஆயிரம், வெள்ள நிவாரண நிதி என்றால் ரூ 75 ஆயிரம், பாரதி விழாவிற்கு ரூ 50 ஆயிரம், மருத்துவமனை கட்ட ரூ 50 ஆயிரம், பள்ளிக்கூடம் கட்ட ரூ 25 ஆயிரம், தேச பக்தர்களுக்கு சிலை அமைக்க ரூ 25 ஆயிரம், அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்க ரூ 10 ஆயிரம் எனவும் அளித்துள்ளார்.
    * சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமண மண்டபத்தின் கட்டிட நிதிக்காக தங்கப் பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
    * நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கோவில் மணி அமைக்கும் முழுச்செலவையும் ஏற்றார்.
    *திருச்சி திருவானைக்கால் கோயில், தஞ்சை பெரிய கோயில், தஞ்சை முத்து மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு யானைகளை வழங்கினார்.
    *வல்லக்கோட்டை முருகன் கோயில் திருப்பணிக்காக ரூ 10 ஆயிரம் த்தை கிருபானந்த வாரியாரிடம் அளித்தார்.(இன்றைய மதிப்பில் பல லட்சம்)
    * சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெப்பக்குளத்தில் செய்த திருப்பணி செலவை முழுமையாக ஏற்றார்.
    * 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி ரூ 12 ஆயிரம்( இன்றைய மதிப்பில் 10 லட்சம்) வசூலித்துக் கொடுத்தார்.
    * 1957ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ரூ 5 லட்சத்தை ( இன்றைய மதிப்பு 3.5 கோடி) கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான்.
    * 1960ல் தமிழகம் பெரும்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சிவாஜி கணேசன் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.
    * 1961 ல் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ 1 லட்சம் கொடையாக அளித்தார். (இன்றைய மதிப்பில் 70 லட்சம்)
    * 1964 ல் மகாராஷ்டிரா கொய்னா பூகம்ப நிதியாக அம்மாநில முதல்வர் ஒய் பி சவானை சந்தித்து ரூ 1 லட்சம் கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி தான்.( இன்றைய மதிப்பு 60 லட்சம்)
    * 1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையை அமைத்துக் கொடுத்து வாயில்லா ஜீவன்கள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.
    * 1965 ல் பிரதமர் நேருஜி நினைவு நிதியாக ரூ 1.5 லட்சம் கொடுத்தார்.
    ( இன்றைய மதிப்பு 75 லட்சம்)
    * 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-18 தேதிகளில் நீதியின் நிழல், களம் கண்ட கவிஞன் நாடகங்கள் நடத்தி வசூலான ரூ 1 லட்சத்தை யுத்த நிதியாக தமிழக முதல்வர் பக்தவச்சலத்திடம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 55 லட்சம்)
    * 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோது நிதியுதவியாக ரூ 10,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு :5 லட்சம்)
    * 1967 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு சிறக்க வள்ளுவர் சிலை அமைத்ததுடன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம் ரூ 5 லட்சம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு : 2.5 கோடி)
    * 1968 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ 40,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு 15 லட்சம்)
    * 1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ 1,30,000 அளித்தார்.( இன்றைய மதிப்பில் 50 லட்சம்)
    * 1971 ல் இராணுவ வீரர்கள் முகாமில் தானும் தனது மனைவி கமலாவும் இரத்ததானம் செய்து தனது ரசிகர்களிடம் இருந்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்தார்.
    * 1972 ல் காஷ்மீர் மாநில முதலமைச்சர் மீர்காசிமை சந்திந்து அம்மாநில தாழத்தப்பட்ட மாணவர்கள் கல்விநிதிக்காக ரூ 25 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 8.5 லட்சம்)
    *1972 ல் ஈரோடு ஸ்தாபன காங்கரஸ் மாநாட்டில் கட்சி நிதியாக ரூ 1.25 லட்சத்தை அளித்தார்.( இன்றைய மதிப்பில் 45 லட்சம்)
    * 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
    * 1974 ல் சிங்கப்பூர் சிறுநீரக மருத்துவமனைக்கு ரூ 45 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 12 லட்சம்)
    *1974 ல் கடற்படை வீரர்கள் நிதிக்காக அட்மிரல் குல்கர்னி அவர்களிடம் ரூ 50 ஆயிரம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு 14 லட்சம்)
    * 1975 ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு வந்து ஆசீர்வதித்த காமராஜரிடம் ரூ 1 லட்சம் பொதுநிதியாக அளித்தார்.( இன்றைய மதிப்பு 30 லட்சம்)
    * பீகாரில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரும் நிதியை நிவாரண நிதியாக அளித்தார்.
    * 1975 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டபோது நிதியுதவியாக 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 22 லட்சம்)
    * 1977ல் தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபொழுது கொடி நாளுக்காக 1.2 கோடியை வசூலித்து கொடுத்தார்.
    * 1978ல் புயல் நிவாரண நிதியாக மூப்பனாரிடம் ரூ 20 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 4.5 லட்சம்)
    * 1982 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களை இளைய திலகம் பிரபு நேரில் சந்தித்து தன் சார்பில் 25 ஆயிரமும் சிவாஜி கணேசன் சார்பில் ரூ 1 லட்சமும் சத்துணவு திட்டத்திற்கு அளித்தார்.( இன்றைய மதிப்பு 20 லட்சம்)
    * 1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 10 லட்சம்)
    * 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக கலைஞரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தார்.( இன்றைய மதிப்பு 6 லட்சம்)
    தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.
    நடிகர் திலகம் மறைந்த பின்பும், இளைய திலகம் பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி வருகிறார்கள் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்!
    சிவாஜி கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக வாரி வழங்க தவறியதில்லை. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிவாஜி கணேசன் தமிழ் உலகிற்கு செய்த தொண்டுகள் ஏராளம்.
    சிவாஜி கணேசனுக்கு ஏன் அரசாங்க செலவில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என வினவியவர்கள் அவரை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்வது அவசியம். அவர் தமிழுக்கும் இந்திய தேசத்திற்கும் செய்த தொண்டுகளுக்கு எத்தனை மணிமண்டபங்கள் கட்டினாலலாலும் ஈடாகது ....
    தகவல்கள் தொகுப்பு✍ கவிஞர் தின குரல்🙏
    ப சிவகுமார் பிரபு (எழுத்தாளர்) மூத்த பத்திரிகையாளர்🤝🙏


    siva-1115.jpg

    Thanks Vijaya Rai Kumar (Nabigar Thilagam Fans)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1000
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஆடு பகை
    குட்டி உறவு
    என்பார்களே
    அது போல அண்ணன் சிவாஜியிடம் போலித்தனமான அன்பும் நட்பையும் கொண்ட அன்றைய MGR ஆட்சி
    சிவாஜி மன்றத்தினர் மீது பகையுனர்வோடு நடந்து கொண்டது
    அன்றைய ஆட்சியாளர்களுக்கு
    சிவாஜி மன்றம் தான்
    சிம்ம சொப்பனமாக இருந்தது
    அதன் செயல்பாடுகள் அப்படி
    நாடாளமன்ற உறுப்பினர் பதவி ஏற்று சென்னை திரும்பிய அண்ணன் சிவாஜியை வரவேற்க அனைத்து ஊர்களில் இருந்தும் மன்றத்து மறவர்கள் சென்னை விமான நிலையத்தில் கூடினர் கட்டுக்கடங்காத கூட்டம்
    MGRன் காவல் துறை கூட்டத்தை கலைப்பதற்காக மன்ற பொதச் செயலாளர் மாவீரன் V.இராஜசேகரன் அவர்களை குறிவைத்து தாக்கியது மன்றத்து மறவர்கள் மாவீரன் V. இராஜசேகரன் அவர்களை சூழ்ந்து நின்று பாதுகாத்தனர் மீண்டும் காவல்துறை தடியடி நடத்தியது அப்படியும் அவர்களால் கூட்டத்தை கலைக்க முடியவில்லை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு
    MGRன் காவல் துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது அதற்கும் நம் மன்றத்து மறவர்கள் சளைக்காமல் கூடி நின்றனர் பின் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் பலர் குண்டடிபட்டு காயம் அடைந்தனர்
    மன்றத்து மறவர்கள் வந்த வாகனங்கள் காவல் துறையினராலேயே கடுமையாக தாக்கப்பட்டு சேதம் அடைய செய்தனர்
    அண்ணன் சிவாஜி அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவுடன் போர் களம் போல் காட்சியளித்ததை பார்த்து நிலைமையை உணர்ந்தார் தொண்டர்கள் படைசூழ வரவேற்று ஊர்வலமாக அழைத்து வரப்பற்றார்
    இடையிடையே நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது இந்த காட்டுமிராண்டிதனமான ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கடுமையாக சாடினார்
    தடியடி குண்டடிபட்டு காயமடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார் அதன் பின் தான் தன் இல்லம் சென்றார்
    இருந்தும் கெடுத்தான்
    செத்தும் கெடுத்தான்
    என உறவாடி கெடுத்ததை
    இது போல் பல உதாரணங்களுடன்
    சொல்லிக் கொண்டே போகலாம்........
    MGR ஆட்சியின்
    குறைகளையும்
    ஊழல்களையும் உடனுக்குடன் அரசியல் அமைப்புகளை விட
    சுட்டி காட்டுவது அப்போது சிவாஜி மன்றத்தின் செயல்பாடாக இருந்தது இதனால் சிவாஜி மன்ற செயல்பாடுகளை அடக்கு முறையால் அடக்க MGR முயற்சி மேற்கொண்டார்
    சிவாஜி மன்றத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அதன்
    இறக்கைகளை வெட்ட வேண்டும் என்று கூறினார் அதன் படி தான்
    மன்றத்து மறவர்களும் மாவீரன்
    V. இராஜசேகரன் அவர்களும் தாக்கப்பட்தோடு அல்லாமல்
    பல வழக்குகளும் போட்டனர் சிவாஜி மன்றத்தினர் மீது
    அப்போது அரசியலில் ஒரு அங்கமாக
    சிவாஜி மன்றத்தின் கெளரவம்
    கம்பீரம் தலை நிமிர்ந்து இருந்தது

    siva-1126.jpg

    siva-1128.jpg

    siva-1129.jpg

    siva-1127.jpg


    Thanks Satha Venkatraman
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •