-
13th October 2020, 06:52 AM
#481
Senior Member
Devoted Hubber
13-10-2020
தொலைக்காட்சி சேனல்களில்,
ஆண்டவன் கட்டளை-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 12 pm&7 pm - முரசு டிவி,
தூக்கு தூக்கி-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,... 12:30 on ராஜ் டிஜிட்டல்,
அவன் ஒரு சரித்திரம்-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,... 1:30 pm ராஜ் டிவி
திரிசூலம்-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,... 4 pm சன் லைப் தொலைக்காட்சியில்
சபாஷ் மீனா-,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ....11pm பாலிமர் சேனலில்,
Thanks Sekar .P
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th October 2020 06:52 AM
# ADS
Circuit advertisement
-
15th October 2020, 04:15 AM
#482
Senior Member
Devoted Hubber
முதன்முதலாக... 5
ஒரே ஷாட்டில் ஒரு வசனக் காட்சியும், ஒரு பாடல் காட்சியும்..
Thanks Nilaa
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th October 2020, 04:19 AM
#483
Senior Member
Devoted Hubber
இன்று 10.10.2020 வேலூர் மாவட்டம் பிரபு நற்பணி மன்றம் மற்றும் விக்ரம் பிரபு நற்பணி மன்றத்தினர்கள் திரு.B.அன்பழகன், மாவட்ட தலைவர், பிரபு மன்றம். மாவட்ட தலைவர் விக்ரம் பிரபு மன்றத்தலைவர்
திரு.வீரமணி அவர்கள் மற்றும் திரு.உத்தமன் காட்பாடி நகர மன்றத்தலைவர் திரு.குமார் ஆகியோர் இனைந்து நடிகர் திலகம் Dr.சிவாஜி கணேசன் அவர்களின் 92 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் திரு.B.டீக்காராமன். மாவட்ட தலைவர் காங்கிரஸ் அவர்கள் அன்னதானத்தை பொது மக்களுக்கு வழங்கினார்.
மேலும் வேலூர் மாவட்ட சிவாஜி மன்றத்தலைவர் திரு.V.சிவாஜிரவி அவர்கள் நேஷ்னல் பிச்சர்ஸ் திரு.கார்த்திகேயன் மற்றும் மன்ற பொருப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
அதிலிருந்து சில புகைப்படங்கள் உங்களுக்காக.
Thanks Amaran Amaran
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th October 2020, 04:25 AM
#484
Senior Member
Devoted Hubber
இப்போ எல்லா ஊர்லயும் மல்டிபிளக்ஸ் தியேட்டருங்க அதிகமாகிட்டதால எல்லாப்படமும் எல்லா தியேட்டர்யும் ரிலீஸ் ஆகுது...
ஆனா, 2005 க்கு முன்னாடி அப்படில்லாம் கெடையாது... அந்தந்த நடிகர்களுக்குனு இருந்த பேவரைட் தியேட்டர்ஸ்லதான் அவங்க படங்களை ரிலீஸ் பண்ணுவாங்க...
இப்படியொரு சிஸ்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது அனேகமா நம்ம ஐயா படங்களாத்தான் இருக்கணும். விவரம் தெரிஞ்சவங்க .இதை கன்பார்ம் பண்ணுங்க...
அப்படி ஐயாவோட பேவரைட் தியேட்டர்ஸ் சென்னையில சாந்தி, கிரவுன், புவனேஸ்வரின்னு மூனு தியேட்டருங்க.. மூனும் ஆயிரத்துக்குமேல கெப்பாசிட்டிங்க... அந்த குரூப்ஸ் தியேட்டர்ல அய்யாவோடபடம் ரிலீஸ் ஆச்சுன்னா அது கன்பார்மா ஹிட் மூவிதாங்க...
1965 ல வெளியான திருவிளையாடல்தாங்க இந்த குரூப்ஸ்ல வெளியான முதல்படம்... பர்ஸ்ட் படமே மூனு தியேட்டர்லயும் சில்வர் ஜூபிளி ஓடுச்சிங்க... கடைசிப்படம் 1985ல வெளியான நீதியின் நிழல் படம்ங்க... அது மூனு தியேட்டர்லயும் கிட்டதட்ட பத்து வாரத்துகிட்ட ஓடுச்சிங்க...
1965 ல இருந்து 1985 வரைக்கும் இதுமாதிரி மொத்தம் 40 படம் இந்த குரூப்ல ரிலீஸாகி இருக்குங்க... அதுல, 3 படம் 3 தியேட்டர்லயும் வெள்ளிவிழா ஓடுச்சிங்க... ஒருபடம் ஒரு தியேட்டர்ல சில்வரும், மத்த ரெண்டு தியேட்டர்ல 140 நாளும் ஓடுச்சிங்க... ஒரு படம் மூனு தியேட்டர்லயும் 133 நாள் ஓடிருக்குங்க... 20 படம் மூனு தியேட்டர்லயும் நூறு நாள் ஓடிருக்குங்க... நாலு படம் சென்னையில ஓடுலனாலும் வெளியூர்ல நூறு நாளு, வெள்ளிவிழான்னு ஓடி கல்லா கட்டியிருக்குங்க... ஒரு நாலஞ்சு படம் 75 நாள் வரைக்கும் 3 தியேட்டர்லயும் ஓடி, தீபாவளியோ, பொங்கலோ எதையாச்சும் காரணம்காட்டி கழட்டி விட்டிருக்காங்க...
ஒன்னு ரெண்டு படந்தாங்க அம்பது நாளுக்கு கீழே ஓடியிருக்கு...
இதுல ஒரு பியூட்டி என்னன்னா... மூணு தியேட்டர்லயும் ரிலீஸாகி ஹிட் ஆன படம் ஓடுனா மூணு தியேட்டர்லயும் நூறுநாள் தாண்டி ஓடியிருக்குங்க... இல்லைனா, மூனு தியேட்டர்லயும் எடுத்து விட்டிருக்காங்க... ஒரு தியேட்டரோ ரெண்டு தியேட்டர்லயோ இந்த குரூப்ல ஓடலீங்க... பந்தம் படம் மட்டுந்தான் சாந்தில நூன் ஷோ போட்டு, அதுவும் 77 நாளுக்கு மேல... noon show போட்டு நூறு நாள் ஓடிருக்குங்க... மத்தபடி எல்லா படமும் எல்லா தியேட்டர்லயும் ரெகுலர் ஷோவுலதாங்க ஓடிருக்கு... அதான் ஹைலைட்டு!
இப்போ இந்த மேட்டர் எதுக்கு இங்க சொல்ல வந்தனா... இப்படியொரு ரெக்கார்ட்ஸ் எந்தக் காலத்துலயும் எந்த ஹுரோவுக்கும் நம்ம ஊர்ல கெடையாதுங்குறதுதான் நம்ம அய்யாவோட கெத்து...
இனிமேலும் யாருக்கும் ஓடும்னு நெனைக்கிறீங்க...? நோ சான்ஸ்!
சாந்தி, கிரவுன், புவனேஸ்வரினு இந்த மூனு தியேட்டர்லயும் ரிலீஸான அய்யாவோட படம் லிஸ்ட்டு ஏற்கனவே குழுவுல போட்டாச்சுங்க... இருந்தாலும் மறுக்கா ஒருமுறை போட்டுருக்கேன்... பார்த்து தெரிஞ்சுக்குங்க...
இன்னைக்கு இவ்ளோதான் மேட்டரு...
குட் நைட்டுங்க!
( மீள் பதிவு)
Thanks Nilaa
................................
பின்னூட்டம்
இன்று இங்கு நண்பர் வெண்ணிலா விஜயகுமார் சாதாரணமாகத்தான் இந்த பதிவை பதிவிட்டார். உடனே அங்கே "கதறல் பதிவு" வந்துவிட்டது. பாவம் ஓவர் கதறல். அதுவும் அதே ஐந்து படங்களை (எ.வீ.பிள்ளை, அடிமை, ரிக்ஷா, உ.சு.வா . மற்றும் உரிமை) வைத்துக் கொண்டு தான் கதை அளக்கப்படுறது. சரி, ஓகே. இந்த ஐந்தும் வெற்றிப் படங்கள். மற்ற 126 -ம் தோல்விப் படங்கள்.(M T)
............................
அப்படியா..! மீள் பதிவுக்கே மிரண்டு போனார்களா?(V V)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th October 2020, 04:31 AM
#485
Senior Member
Devoted Hubber
#அரசியல்_நாயகனும்_அந்தப்புர_நாயகியும்..!
××××××××××××××××××××××××××××××××××××××××
எம்.ஜி.ஆர். தன் படத்தில் நடிக்கும் இளம் நடிகைகளை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்வது வழக்கம் . நடிகைகள் ஜெயலலிதா, மஞ்சுளா, லதா ஆகியோர் அது போன்ற ஒப்பந்தங்கள் மூலமே பிரதான நடிகைகளாக வலம் வந்தனர்.
ஜெயலலிதாவும் 1965 லிருந்து 1972 வரை மட்டுமே எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தார். பணம், புகழ், பாதுகாப்பு என்ற உத்தரவாதம் அவர்களுக்கு கிடைத்ததால் தங்க கூண்டுதான் என்று தெரிந்தே அதில் அந்த கிளிகள் வசித்தன. நடிகருக்கு இருந்த ரசிகர் செல்வாக்கும், அரசியல் செல்வாக்கும் அவர்களை அடிமைப் பெண்களாகவே வசிக்க வைத்தது.
பணமும் , புகழ், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான நாயகி என்ற பாதுகாப்பு இருந்தாலும் அதைத் தாண்டிய ஒன்று ஒரு இளம் பெண்ணுக்குத் தேவைதானே..? 1972 ல் எம்.ஜி.ஆருக்கு வயது 55.ஜெயலலிதாவுக்கு வயது 24., மஞ்சுளாவுக்கு 20, லதாவுக்கு 19. சினிமா, அரசியல் என்று பரபரப்பாக இயங்கிய ஒரு நடிகர் 24 வயது பெண்ணின் உடலியல் சார்ந்த உளவியல் தேவைக்கு என்ன தீர்வு கொடுத்து விட முடியும் ?
ஜெயலலிதா தனக்கான தேவையை வேறு நபர்களிடம் தேடியதால் எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு ஆளானார். ஆனால் கோபம் மட்டுமே தாபத்தை தீர்க்குமா..? இறுதியில் பெண்மையே வென்றது. ஆண்மை ஒரு நிபந்தனை விதித்தது..! தமிழக எல்லைக்குள் வேண்டாம். எனது இமேஜ் பாதிக்கப்படும். கிளி விட்டால் போதும் என்று ஹைதராபாத் பறந்து விட்டது காதலன் ஷோபன் பாபுவோடு வாழ. ஊரறிந்த ரகசியம் இது..!
நடிகரை விட்டு நடிகை விலகியிருந்த அந்த காலம் தான் நடிகர் நிம்மதியாக இருந்த காலம். ஆனால் அரசியல் அரைவேக்காடான நடிகர் கலைஞரை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சமாளிக்க முடியாமல் திணறினார். தி.மு.க. ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகளும், பார்ப்பனிய ஊடகங்களும், தமிழ் தேசியம் பேசிய சூத்திர பார்ப்பனிய வாதிகளும், போலி பொதுவுடமை வாதிகளும் அடுக்கிய குற்றச்சாட்டுகள் எல்லாம் நடிகரின் வாக்குகளாக மாறி அவரை 1977 ல் முதலமைச்சர் ஆக்கியது.
ஆட்சி அமைத்துவிட்ட நடிகருக்கு தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைத்து ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பது மட்டுமே ஒற்றைக் கொள்கை. அதற்காக அவர் ஆடிய கோமாளிக் கூத்துக்கள் அநேகம். அரசியல் ஆட்டத்தில் களைத்துப்போன நடிகர் மீண்டும் நடிக்க ஆசைப்பட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் வருமான வரி பாக்கியை அடைக்க வருமானம் போதவில்லை என்பதே. அந்த நடிகர்தான் தான் இறக்கும் போது சில ஆயிரம் கோடி சொத்துக்களை தன் உறவினர்களுக்கு உயில் எழுதி வைத்தார்.
எங்கே நடிகர் தன் கட்சியை தி.மு.க. வில் கரைத்து விடுவாரோ என்று அஞ்சியவர்களின் அடுத்த வாரிசாக நடிகை அவதாரம் எடுத்தார். அவரை தூக்கி நிறுத்த ஆரியப் பார்ப்பனர்களும், அடிமை சூத்திரர்களும் அரங்கேற்றிய கபட நாடகங்கள் தான் தி.மு.க. மீதான தொடர் விமர்சனங்கள்.
இன்றுவரை தி.மு.க. மீதான மக்களின் பார்வை மாறாமல் இருக்க காரணம் ஆரம்ப காலங்களில் கழகத்தின் மீது வைக்கப் பட்ட அவதூறான குற்றச்சாட்டுகளே. நடிகரும், நடிகையும் ஏதோ நல்லாட்சி கொடுத்தது போலவும், கழகம்தான் ஊழலுக்கு மொத்தக் குத்தகை என்பது போலவும் பேசியும், எழுதியும் வருவோருக்கு சரியான பதிலடி கழகத்தின் சார்பில் கொடுக்கப்படுவதில்லை.
அதே போல நடிகரையும், நடிகையையும் சரியாக அம்பலப்படுத்தாமல் கடந்து போனதும் நம் தோல்விக்கு காரணமாகி விட்டது. அதுதான் தமிழகத்தை தறுதலைகள் கொள்ளையடிக்க விட்டு விட்டது தி.மு.க. கலைஞர் ஒருவர் மட்டும்தான் கட்சியில் இயங்கினார். அவரை மக்கள் நம்பக்கூடாது என்று பலமுனைத் தாக்குதல்கள் படையெடுத்தன. கலைஞர் மட்டுமே பேசிப்பேசிக் களைத்துப் போனார். மற்றவர்கள் தலைவர் பேசட்டும் என்று ஒதுங்கிக்கொண்டனர்.
-ஜீவா வனத்தையன் தமிழரிமா
மீள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th October 2020, 06:40 AM
#486
Senior Member
Devoted Hubber
15-10-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
பூப்பறிக்க வருகிறோம்-............................. 7 am கே டிவியில்
பாவமன்னிப்பு-............................................ 9:30 am - ராஜ் டிஜிட்டல்,
பாகப்பிரிவினை-........................................ 1:30 pm வசந்த் டிவி,
ராஜ ராஜ சோழன்-..................................... 1:30 pm ராஜ் டிவி,
லஷ்மி கல்யாணம்-..................................... 2:30 pm ராஜ் டிஜிட்டல்,
தெய்வப்பிறவி-............................................ 4 pm சன் லைப் சேனலில்,
பட்டிக்காடா பட்டணமா-.......................... 11 pm பாலிமர் சேனல்,
Thanks Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th October 2020, 06:45 AM
#487
Senior Member
Devoted Hubber
Thanks Ganesh Moorthy
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th October 2020, 06:49 AM
#488
Senior Member
Devoted Hubber
Thanks Ganesh Moorthy
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th October 2020, 06:53 AM
#489
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th October 2020, 07:19 AM
#490
Senior Member
Devoted Hubber
பராசக்தி (17-10-1952 )இன்று 68 வருடங்கள் .
Thanks Vcg Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks