Page 95 of 210 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #941
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் கலைச்சுடர் எம்.ஜி.ஆரின் திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம் (01/10/20 முதல் 05/10/20 வரை )
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    01/10/20 - மெகா டிவி - அதிகாலை 1 மணி -கலங்கரை விளக்கம்*

    * * * * * * * * * * * * மெகா 24 -* அதிகாலை 2மணி _ முகராசி*

    * * * * * * * * * சன்* லைப்* - காலை 11 மணி - ரிக்ஷாக்காரன்*

    * * * * * * * * *மெகா டிவி - மதியம் 12 மணி - விவசாயி*

    * * * * * * * * *எம்.எம்.டிவி - பிற்பகல் 2மணி - குமரிக்கோட்டம்*

    * * * * * * * * *பெப்பெர்ஸ்* டிவி -பிற்பகல் 2.30மணி - நல்ல நேரம்*

    * * * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7மணி - நீதிக்கு தலை வணங்கு*

    02/10/20* * சன் லைப் -காலை 11 மணி - நீரும் நெருப்பும்*

    * * * * * * * * *வெளிச்சம் டிவி-பிற்பகல் 2 மணி - தாயை காத்த தனயன்*

    * * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - குடும்ப தலைவன்*


    03/10/20 - முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*

    * * * * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - அடிமைப்பெண்*

    04/10/20* *மெகா 24 - பிற்பகல் 2..30 மணி - திருடாதே*

    * * * * * * * * *பூட்டோ டிவி - இரவு 8.30 மணி - அன்பே வா*

    05/10/20 -சன் லைப் - காலை 11 மணி* - உரிமைக்குரல்*

    * * * * * * * * முரசு டிவி -மதியம் 12மணி/இரவு* 7மணி - தொழிலாளி*

    * * * * * * * * வெளிச்சம் டிவி - பிற்பகல் 2 மணி - தனிப்பிறவி*

    * * * * * * * *மெகா 24 - பிற்பகல் 2.30 மணி -நல்ல நேரம்*

    * * * * * * * * புதுயுகம் டிவி -இரவு* 7மணி - அரச கட்டளை*

    * * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி - நீரும் நெருப்பும்*


    * * * * * * * **

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #942
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972 இல் சினிமா இதழ் பொம்மை குலுக்கல் முறையில் ஒரு வாசகரை தேர்ந்து எடுத்து அவர் நம் தலைவர் அவர்களை நினைத்ததை முடிப்பவன் படத்தின் காட்சிகள் எடுக்க பட்ட நேரத்தில் தலைவர் பேட்டி கொடுத்த அபூர்வ படம்...

    பேட்டியின் போது அவர் பல கேள்விகளை கேட்க அதில் ஒன்று நம் குழுவினர் பார்வைக்கு.

    கேள்வி...

    நீங்கள் ஆங்கில படத்தில் நடித்தால் என்ன?

    தலைவர் பதில்.

    ஆங்கிலம் சரளமாக வராது....அடிமைபெண் படப்பிடிப்பின் போது ஹிந்தி படங்கள் தயாரிப்பாளர் ராஜஸ்ரீ பிக்சர்ஸ் நிறுவனர் நண்பர் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார் எங்களுக்கு..

    அப்போது அவர் சொன்னார் நீங்க ஹிந்தி படங்களில் நடிக்க வேண்டும்...படம் எடுக்க நான் தயார் என்றார்..

    எனக்கும் நானே தயாரித்து நானே நடிக்க ஹிந்தி மற்றும் ஆங்கில படத்தில் நடிக்க ஆசை..

    ஆனால் அதை தாங்கி கொள்ளும் பக்குவம் சக்தி இருக்கும் என்றால் நான் தயார் என்கிறார் தலைவர்.

    மிஸ் ஆகி விட்டதே தலைவர் நெஞ்சங்களே.

    வாழ்க தலைவர் புகழ்.

    தொடரும்...உங்களில் ஒருவன்..நன்றி...

    தனிக்கட்சி தோன்றாவிட்டால் அதுவும் இனிதே நடந்து இருக்கும் போல.........Mn...

  4. #943
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தஞ்சாவூரில் 1983இல் பெரிய கோயிலில் நடைபெற்ற ஒரு விஷேஷத்தின் பொழுது எடுக்கப்பட்ட படம் .

    ஒரு நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டால் போதும் என்பது பலரது நம்பிக்கை.
    ஆனால், தஞ்சை பெரிய கோயிலுக்கு மட்டும் பிரபலங்கள் போனால் எசகுபிசகாக ஏதாவது நடந்துவிடும் என்பது இன்னொரு நம்பிக்கை. காரணம், கடந்த 50 வருடங்களாக தஞ்சை பெரிய கோயிலின் கிழக்கு வாசல் தொடர்பாக நிலவும் மர்மம். அக்டோபர் முதல் வாரம், 1984.

    அப்போதைய பிரதமர் இந்திராவும், முதல்வர் எம்ஜிஆரும் கிழக்கு கோபுர வாயில் வழியாகத் தான் தஞ்சை கோவிலினுள் நுழைந்து மேடையில் ஏறினார்கள். ராஜராஜன் சிலைக்கு இந்திராவால் அணிவிக்கப்பட இருந்த வைர கிரீடம், தயாராக மேடையில் வைக்கப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தினுள் கூட்டமே இல்லை. இந்திரா காரணம் கேட்க, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மக்களை உள்ளே விடவில்லை என்றார் எம்ஜிஆர்.

    உண்மையில், தஞ்சை கோயிலுக்குள் இருவரும் நுழைய வேண்டாம் என்று பல எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்ததால், பிரச்னைகள் வேண்டாம் என்று எம்ஜிஆர் மக்களை ஆலயத்தினுள் விடவில்லை. இந்திராகாந்தி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோதே அவருக்கு மூட் சரியில்லை. தில்லியில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தொடர்பாக பல பாதுகாப்பு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருந்தது. மேலும், தஞ்சாவூர் இடைத்தேர்தலில் ஆதரவு அளித்துவிட்டு, பிறகு விலக்கிக்கொண்ட எம்ஜிஆரின் மீது இருந்த கோபம் அவருக்கு தீரவில்லை.

    ‘‘நான் வைர கிரீடம் வைக்க, நீங்கள் மட்டும் பார்க்க, நமது இரண்டு பேருக்காகவா விழா? மக்களை உள்ளே அனுமதியுங்கள்...’’ என்று இந்திரா கூற, உடனே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட, மக்கள் உள்ளே வந்தார்கள். இந்திரா கடுமையாகப் பேசியதால், அப்போதே எம்ஜிஆருக்கு உடல் நலக்குறை ஏற்பட்டது. வைர கிரீடம் வைக்கப்பட்டு விழா முடிந்ததுமே, மயக்க நிலையை அடைந்தார். அப்போலோ மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
    அக்டோபர் 16, 1984.

    அப்போலோவில் இருந்த எம்ஜிஆரை காண்பதற்காக தில்லி யில் இருந்து பறந்து வந்தார் இந்திரா காந்தி. பத்திரிகையாளர்களிடம் பின்னர் பேசிய அவர், எம்ஜிஆர் தன்னைப் பார்த்து சிரித்ததாகக் கூறினார். அதுவே இந்திராவின் கடைசி சென்னை விஜயம். அக்டோபர் 31ல், தனது சப்தர்ஜங் தெரு வீட்டிலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தஞ்சையில் ஒரே பரபரப்பு. ‘கிழக்கு கோபுர வாசல் வழியாக நுழைய வேண்டாம் என்று தலைப்பாடமாக அடித்துக் கொண்டோமே. அதிகாரிகள் கேட்கவில்லையே! இப்போது பாருங்கள்! ஒரு மாதத்திற்குள் இந்திரா இறந்து விட்டார்... எம்ஜிஆர் உடல்நலமின்றி கிடக்கிறார்...’ என்ற பேச்சு அடிபட்டது.எம்ஜிஆரும் அமெரிக்கா சென்று பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டு வந்தார். ஆனால், மூன்று வருடங்கள்
    மட்டுமே இருந்தார்.

    ஜூன் 7, 1997. திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் யாகசாலையில் யாகம் துவக்கிய நேரம், திடீர் என்று கும்பாபிஷேகத்திற்காக போடப்பட்டிருந்த பந்தல் தீப்பற்றி எரிய... விபத்தில் 48 பேர் இறந்து போனார்கள். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்திற்கும் கிழக்கு கோபுரம்தான் பழியை ஏற்றுக்கொண்டது.

    ஏன் தஞ்சை பெரிய கோயிலின் கிழக்கு கோபுரம் அபசகுனமாகக் கருதப்படுகிறது..? இந்தக் கேள்விக்கான விடையாக மற்றொரு வினாவைத் தொடுக்கிறார்கள் சிலர். தஞ்சை பெரிய கோயில் இருந்த இடத்தில முன்பு என்ன இருந்தது?

    கி.பி.985ம் ஆண்டு அருண்மொழி, ராஜராஜனாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடைய ஆட்சியின் கடைசி காலத்தில்தான் தஞ்சை பெரிய கோயிலை எழுப்பினார். அதாவது அந்தக் கோயிலைக் கட்டி மூன்றாண்டுகளில் அவர் இறந்து போனார்...

    தஞ்சை பெரிய கோவிலின் ராஜ கோபுர கும்பமேளாவிற்கு வருகை தந்தது.இந்த நேரத்தில்தான் தலைவருக்கு கோவிலை சுற்றி வரும்பொழுது மயக்கம் அடைந்தார்

    தஞ்சை பெரிய கோயில் கிழக்கு கோபுரத்தைக் கடந்து மன்னர்கள் உள்ளே நுழைந்து வந்தால் அவர்கள் பதவியையோ, உயிரையோ இழப்பார்கள்... இந்திராவின் மரணம், எம்ஜிஆரின் மரணம் ஆகியவை சமீபத்திய உதாரணம்... என்பது சிலரது வாதம்.

    1984 தஞ்சாவூர் மீட்டிங் அடுத்த நாள் தலைவரின் முதல் நாள் இரவு திருச்சியில் தலைவர் மீட்டிங்

    இந்த நிகழ்ச்சி தான் திருமதி.இந்திராகாந்திக்கு கடைசி தமிழக நிகழ்ச்சி.......... Devaraj...

  5. #944
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரஜினியை எம்ஜிஆர்., அடித்தாரா? : மெய்க்காப்பாளர் மறுப்பு.

    நடிகர் ரஜினியை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) அடித்ததாக கூறப்படும் செய்திகளை எம்ஜிஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    கடந்த 1979ம் ஆண்டு, ரஜினிகாந்த், நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரை கட்டாயப்படுத்தியதாகவும், இதை கேட்ட எம்ஜிஆர் கோபமடைந்து ராமாவாரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை அடித்ததாகவும் பேசப்படுவது உண்டு. நடிகை லதாவுடன் சேரமுடியாத காரணத்தால் தான் அதே பெயருடைய லதாவை, ரஜினி திருமணம் செய்ததாகவும் பேசப்பட்டு வந்தது.

    இது குறித்து நடிகை லதா ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், ரஜினி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை, எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில், எம்ஜிஆர் திரைப்படத்தில் நடித்ததில் இருந்து அரசியலில் ஈடுபட்டது வரை சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு மெய்க்காப்பாளராக இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். சண்டை பயிற்சி கலைஞராகன இவர், எம்ஜிஆர்.,க்கு பல படங்களின் சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடித்துள்ளார்.

    இவர், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: கடந்த 1979ம் ஆண்டு ரஜினியை எம்.ஜி.ஆர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து அடித்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது. ஒரு போதும் ரஜினியை எம்.ஜி.ஆர், அடிக்கவில்லை. உண்மையில் ரஜினி மீது எம்ஜிஆர் மதிப்பு வைத்திருந்தார். கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நெருக்கடியைப் பயன்படுத்தி பெண் தொண்டரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரையே எம்.ஜி.ஆர் அடித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார். Dr...

  6. #945
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 74 பேரரறிஞர் அண்ணா. .

    அண்ணாவுக்கும்எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில
    1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். .
    2, நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள். .
    3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். .எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார். 4, இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள். .
    5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.
    7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர். 8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்...
    9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில். அண்ணாவின் முமு பெயர் அண்ணாதுரை எம்ஜிஆர் முமு பெயர் எம் ஜி ராமச்சந்திரன்.
    10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டிக்கு அறிஞர் அண்ணா என் வி நடராஜன் வுடன் பொதுக்கூட்டத்தற்காக செல்லும் போது கோவில்பட்டி அருகே அண்ணாவின் கார் ஒரு மரத்தடியில் அருகே நிறுத்தப்படுகிறது. வயல்வெளியில் தோட்டங்களில் வேலை பார்க்கும் விவசாயிகள் காரில் திமுக கொடி பறப்பதை கண்டு ஒடி வந்தனர். கார் அருகே வந்து நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் கட்சியா என்று அண்ணாவையும் நடராஜனையும் பார்த்து கேட்டனர். அதற்கு அண்ணாவும் ஆம் நாங்களெல்லாம் எம்ஜிஆர் கட்சித்தான் என்றவர் உங்களுக்கு எம்ஜிஆரை பிடிக்குமா? ? என்று கேட்டார்? ? .எம்ஜிஆர் எங்கள் உசுரு என்று சிலரும் அவர்தான் எங்கள் தலைவர் என்று சிலரும் எங்கள் வாத்தியார் அவர்தான் என்றும் அவரவர்க்கு தகுந்த பதில் கூறினார்கள். உடனே அங்குள்ள மக்கள் தாங்கள் வாங்கி வந்த பழங்கள் காய்கறிகள் டவல் துண்டுகள் யாவும் அண்ணாவிடம் கொடுத்து. இது எங்கள் தலைவர் எம்ஜிஆரிடம் கொடுங்கள் என்றார்கள். அவர்கள் அன்போடு கொடுத்ததை அண்ணா மறுக்காமல் வாங்கி கொண்டார். அதே நேரத்தில் அண்ணாவின் காரை துடைத்து தூய்மை படுத்தினார்கள். .எம்ஜிஆரிடம் நாங்கள் கேட்டதாக சொல்லுங்கள் என்றனர்..தான் ஒரு திமுகவின் தலைவராக இருந்தும் தன்னை யாருக்கும் தெரியவில்லை. .திமுக கொடி எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் எம்ஜிஆர் கட்சி கொடி என்றுதான் சொல்கிறார்கள் தவிர திமுக வில் உள்ள மற்ற தலைவர்கள் யாரும் அவர்கள் மனதிலும் இல்லை பார்வையிலும் இல்லை. என்று நினைத்து பெருமைப்பட்டு என் வி நடராஜனிடம் கூறினார். எம்ஜிஆர் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை அறிஞர் அண்ணா தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அத்தனை பேர்களுக்கும் முன்னால் கூறினார். அதனால்தான் எப்போதும் எந்த நிகழ்ச்சியிலும் எந்த பேச்சியிலும் செயலிலும் எம்ஜிஆரை விட்டு கொடுக்காமல் இருந்தார். .எம்ஜிஆரின் செல்வாக்கு எத்தகையது என்பதை விளக்கும் இச்சம்பவம் ஆகுக..குருவின் பெயரையும் மிஞ்சி குருவுக்கு புகழ் தேடி தந்த உண்மையான சீடனாக எம்ஜிஆர் இருந்தார். .......... Gunasekaran...

  7. #946
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 73 . பேரரறிஞர் அண்ணா

    அண்ணா மீது அதிக பாசம் வைத்த எம்ஜிஆர் அண்ணா மரணம் அடைந்தபோது கதறி அழுதார். அழுதுக்கொண்டே இருந்தார். என் தந்தை இறந்த போது தெரியாது அப்போது நான் சிறுவன் தாயை இழந்த போது எனக்கு அதிகமாக துக்கம் இருந்தது. இருந்தாலும் என் கண்ணீரை அடக்கினேன். .அண்ணாவின் மரணம் என்னை கலங்க வைத்து விட்டது என் அழுகையை அடக்கமுடியல என்று தங்கதமிழ் மகனை வங்க கடலோரம் அடக்கிய பின் சொன்னார். என் பெரும் இழப்பு அண்ணாவின் இறப்பு என்று பலர் முன் புலம்பினார். .என்னை சந்திரன் என்றார்கள் அவர்களோ சூரியன். .சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ? என்று வருந்தினார். ஒப்பாரியில் மிகவும் ரசிக்கத்தக்கதும் வருனை மிகுந்ததும் ராவணன் மனைவி காந்தாரி புலம்பியதும் கம்பன் வருனையில் களைக்கட்டி நிற்கும். .தமிழ் என்னை உன் இதயத்தில் வைத்திருப்பதாக சொன்னீர்களே ராமபாணம் அந்த இதயத்தை துளைத்த போது என்னையும் அல்லவா கொன்றிருக்க வேண்டும் என்று பொய் சொன்னீர்களா என கேட்டு அழுதாராம். அப்படி இந்த கோமகனும் தனக்குள் புலம்பினார். நடந்துக்கொண்டே வேட்டிக்கட்டும் அழகு எப்போ பார்ப்பேன். .மேடையிலே பிரசாங்கம் செய்யப்போறப்போ யாருக்கும் தெரியாமல் பொடி போடற பக்குவம் யாருக்கு வரும். என் உடன்பிறந்தவர்கள் கூட தம்பி என்று கூப்பிடறது இல்லை. நீங்கதானே கூப்பிடுவீங்க இனிமேல் யார் என்னை கூப்பிடற போறாங்க. என்றார். .

    பேரரறிஞர் அண்ணா கேட்டுக் கொண்டதற்கு இணங்க எம்ஜிஆர் நாடகம் மன்றம் சார்பில் இன்பகனவு, .இடிந்தக்கோயில். ,மற்றும் அட்வகேட் அமரன். முதலிய நாடகங்கள் நடத்தி கட்சிக்கு நிதி சேர்த்துக்கொடுத்தார். நேரம் கிடைக்கும் போதல்லாம் கழகத்தின் முக்கிய தலைவர்களுடன் இனைந்து வெளியூர்களுக்கு சென்று சிறப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு கழகத்தின் கொள்கைகளை பிரசாரம் செய்தார். .எம்ஜிஆர் கலந்துக்கொண்ட சிறப்பு கூட்டங்களில் டிக்கெட் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. .மக்களும் காசு கொடுத்து கூட்டம் கூட்டமாக அவரைக் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் திரண்டு வந்தனர். .அந்த நிதி முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. திமுக கட்சிக்காக அதிகமாக உழைத்தவர்கள் பலர் இருந்தாலும் அவர்களின் முதன்மையானவர் புரட்சிநடிகர் எம்ஜிஆர் தான். முன்னப்போதும் கேள்வி படாத சரித்திர சாதனையாகும் இது? அதைப் பார்த்து அண்ணா பூரித்துப் போனார். அன்று நம்நாடு பத்திரிகைகளில் இப்படி எழுதினார். .
    நண்பர் எம்ஜிஆருக்கும் எனக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை நாடு அறியும். எம்ஜிஆரை நான் பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வது போன்றதாகும். ..
    அவர் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கை எது என்பதை நாடறியும். முல்லைக்கு மணம் உண்டு என்பதை கூறவா வேண்டும். ? தி.மு.க கட்சியினால் எம்ஜிஆர். எம்ஜிஆரால் திமுக கட்சி. . இரவு பகல்.. உயர்வு தாழ்வு. ..கொடுப்பவன் வாங்குபவன். ..மேடு பள்ளம். .
    இவையெல்லாம் எப்படி இயற்கையில் மாற்ற முடியாதோ. அதுபோல் தான் எம் ஜி ஆர் இல்லையென்றால் கட்சி இல்லை. கட்சியில்லையென்றால் எம்ஜிஆர் இல்லை. கட்சியும் எம்ஜிஆரையும் மாற்ற முடியாது. .என்று காந்தகம் போல் ஆகிவிட்டது. .என்று அருமையாக எழுதியிருக்கார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். அதைவைத்துதான்எம்ஜிஆரை அண்ணாவின் இதயக்கனி என்று எல்லோரும் சொல்கிறார்கள்...gs.........

  8. #947
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்!

    சபாபதி படத்தில் வேலைக்காரன் சபாபதியின் நடிப்பை, இந்தத் தலைமுறை மக்கள் கூட இமை கொட்டாமல் ரசிக்கின்றனர். அந்த அளவுக்கு 1936 முதல் 1950 வரை தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த மூத்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் காளி என்.ரத்தினம்.

    சிறந்த நடிகர், பாடகர், சண்டை பயிற்சி வாத்தியார், நடிப்பு வாத்தியார், அரங்க நிர்வாகி, பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு ஆசான் என பல்வேறு சிறப்புக்களைக் கொண்டவர் அவர்.

    காளி என். ரத்தினத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள மலையப்பநல்லூர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.

    மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிகள் பலவற்றில் பணியாற்றிய இவர், கோவலன் என்ற ஒரு நாடகத்தில், முதன் முதலாக காளி வேடம் போட்டார். அதில் அவரது நடிப்பை பார்த்து பலரும் அசந்து போயினர். அன்று முதல் அவர் காளி என்.ரத்தினம் என்று அழைக்கப்படலானார்.

    அவர், காளி வேடம் கட்டி ஆடினால், அவர் ஆடும் உக்கிரமான ஆட்டத்தைப் பார்த்து பல பேர் சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுவார்கள்.

    பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ஆர் போன்றவர்களுக்கு உச்சரிப்பு, நுணுக்கமான நடிப்பு, உடல் மொழி, வாள் சண்டை, கத்தி சண்டை, சிலம்பப் பயிற்சி போன்றவற்றை எல்லாம் கற்றுக்கொடுத்தவர் காளி என். ரத்தினம்.

    தமிழ் சினிமாவில் வாத்தியார் என்றால் அது எம்.ஜி.ஆரை மட்டுமே குறிக்கும். ஆனால் எம்.ஜி.ஆரே, தமது வாத்தியார் காளி என். ரத்தினம் என்று, 1970-ம் ஆண்டு “நான் ஏன் பிறந்தேன்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டுள்ளார்

    1936-ல் வெளியான பதிபக்தி என்ற படமே காளி என். ரத்தினம் நடித்த முதல் படம். முதல் படத்திலேயே அவர் இரண்டு வேடங்களை ஏற்று அற்புதமாக நடித்திருந்தார்.

    அதைதொடர்ந்து, 1950 வரை சந்திரலேகா, பஞ்சாப் கேசரி, உத்தம புத்திரன், சபாபதி, திவான் பகதூர், ஸ்ரீ முருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆண்டாள் உள்பட 5௦ படங்களுக்கும் மேல் பாடி நடித்துள்ளார்.

    காளி என். ரத்தினம் போல ஒரே காட்சியில் எண்ணற்ற முக பாவனை காட்டக் கூடிய நடிகர் வேறு யாரும் இல்லை என்று மூத்த திரை விமர்சகர்கள் பலராலும் இன்றும் பாராட்டப் படுகிறார்.

    என்,எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் ஜோடியைபோல, அந்தக் காலத்தில், காளி என். ரத்தினம்- சி.டி.ராஜகாந்தம் ஜோடி மிகவும் பிரபலமான ஜோடியாகும்.

    காளி என். ரத்தினம் போடாத வேடமும் இல்லை, பாடாத பாடலும் இல்லை என்ற அளவுக்கு அசத்தி இருக்கிறார். கடைசியாக அவர் பொய்க்கால் குதிரை ஆட்டம் போடத் தயாரானபோதுதான், அவரை மரணம் தழுவிக்கொண்டது.

    தி இந்து நாளிதழ் கூட காளி என். ரத்தினம் பாணியைப் பற்றி பல நேரங்களில் சிறப்பாகப் பாராட்டி எழுதி உள்ளது. இளைய தலைமுறையினர் காளி என். ரத்தினம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    காளி என். ரத்தினம் முதல் வரிசை நகைச்சுவை நடிகராக வலம் வந்த 1940 களில், அன்றைய சினிமா பத்திரிகை ஒன்று காளி என். ரத்தினம் பற்றி வெளியிட்ட செய்தியை நட்சத்திர தேடல்கள் என்ற கட்டுரையில், மறைந்த முன்னணி எழுத்தாளர் அறந்தை நாராயணன் பதிவு செய்துள்ளார்.

    “ரத்தினம் பழங்கால கிராமிய பழக்க வழக்கங்களுக்கு நல்ல மெருகு கொடுத்து, சினிமா படங்களில் புகுத்தி, பட்டனப்புரங்களில் உள்ள புதுக்கால மனிதர்களும் அவற்றை தெரிந்து கொண்டு ரசிக்கும்படி செய்திருக்கிறார். கிராம மக்களோ தங்கள் சம்பந்தமான விஷயங்களை சினிமாவில் பார்க்கும்போது பிரமாதமான பூரிப்பு அடைகிறார்கள்.

    இந்தக் காரணங்களினாலே அவர்கள் ரத்தினம் நடிக்கும் படங்களைப் பல தடவை பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் நிறைய வசூலைப் பெற்று வந்ததற்கு ரத்தினத்தின் நடிப்பு ஒரு முக்கிய காரணமாகும்

    படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பாராட்டி மகிழும், மாபெரும் கலைஞன் காளி என். ரத்தினம், காலத்தால் மறைக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போனதை ஒரு சமூக அவலம் என்றே சொல்ல வேண்டும்......gr...

  9. #948
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இலங்கைக்கு போவோம் வாரீயளா!
    -----------------------------------------------------------
    நம்ம கைபிள்ளைங்க, தமிழ்நாட்டில் சாதனை என்று எதை போட்டாலும் தலைவர் ரசிகர்கள் சீக்கிரத்திலே வெட்டவெளிச்சமாக்கி விடுகிறார்கள் என்ற எண்ணத்தில் அடுத்த புளுகுமூட்டையை எங்கே ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு இராவணனின் கோட்டையான இலங்கை ஞாபகம் வந்து விட்டது. உடனே திரையிட்டு பல்லாண்டுகளான படுதோல்வி அடைந்த ஒரு படத்தை எடுத்து அதற்கு மாரீசன் போல பொய் வசூலை ஜோடித்து வெளியிட்ட படம்தான் 'உன்மத்தன்' சாரி 'உத்தமன்'.

    தமிழ்நாட்டில் ஓடி ஒளிய இடமின்றி மதுரையம்பதியில் 100
    நாட்கள் தலைமறைவாக திரிந்த "உத்தமனை" தேர்ந்தெடுத்தது இன்னும் விநோதம். மதுரை நியூசினிமாவில் போட்ட வடக்கயிறை இலங்கைக்கு எடுத்துச் சென்று இலங்கை கூட்டு ஸ்தாபன வர்த்தக சபை காலில் விழுந்து இலங்கையில் 200
    நாட்கள் வரை இழுத்து சென்றதை அனைவரும் அறிவோம்.

    சந்தடி சாக்கில் 'உன்மத்தன்' சாரி 'உத்தமன்' "உலகம் சுற்றும் வாலிபனை" வசூலில் தாண்டி விட்டதாக 'புதுக்கரடி' ஒன்றை
    விட்டு ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் உண்மையில் பலமுறை வெளிவந்த "ஒளிவிளக்கு" மீண்டும் 100 நாட்கள் ஓடிய போது பெற்ற வசூலை கூட பெறமுடியாமல் தத்தளித்த கதை வெளியாகி இருக்கிறது.

    ஒரு பழைய தலைவர் படத்துடனே தோல்வியடைந்த 'உத்தமனை' வைத்துக் கொண்டு "உலகம் சுற்றும் வாலிபனை" வெற்றி கொண்டது என்று சொல்லும் சிவாஜி ரசிகர்களின் மனதைரியத்தை பாராட்டி "நாடோடி மன்னனி"ல் அங்கமுத்து குளிக்க பயன்படுத்திய அண்டாவை பரிசாக அளிக்கிறாம்.. ஏனென்றால் முழு பூசணிக்காயை சோத்தில் மறைத்தால் சற்று சிரமமாக இருக்கும் என்பதால் அண்டாவை அனுப்பி வைத்தால் அவர்களுக்கு சற்று சிரமம் குறைபும் என்பதால்.

    சிவாஜி ரசிகர்களை, m.சரோஜா(தங்கவேலு) பாணியில் கேட்பதானால், என்றைக்காவது ஒரு நாள் உண்மை பேசியிருக்கீங்களா? ஏன் இந்த பொய் பித்தலாட்டம்?. உன்னை விட பத்து மடங்கு சம்பளம் வாங்கும் தலைவரிடம் மோதலாமா? அரசியலுக்கு போயும் ஒண்ணுமில்லாம ஆன? 10 நாளைக்கு உப்பில்லாம கஞ்சி குடிச்சா எல்லாம் சரியாயிடும்.
    போய் வேறு ஏதாவது உருப்படியான வேலையை பாருன்னு! சொன்ன மாதிரி இருக்கு.

    இன்னும் எத்தனை அவதாரம் எடுத்தாலும் நாடக மிகை நடிப்பு இவரை விடாது,
    நாளைய தலைமுறை இவரை பழிக்கும் என்றே சொல்கின்றேன். பல நாள் பொய்யன், ஒரு நாள் அகப்படுவான் பாவம் செய்தவன் தலைமுறை வரை தோற்பான், பார்க்கின்றேன், என சிவாஜி படத்தின் பாடல் வரிகளே அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.

    அதற்காக மெனக்கெட்டு பழைய இலங்கை வசூல் விபரங்களை தேடிப்பிடித்து அவர்கள் பொய் முகத்திரையை அவிழ்த்து உண்மையான வசூலை வெளிப்படுத்தியிருக்கிறேன். "உலகம் சுற்றும் வாலிபன்" ஓடி முடிய இலங்கையில் பெற்ற வசூல் 25 லட்சத்துக்கும் மேலே. இதை பார்த்தால் சிவாஜி ரசிகர்களுக்கு வடிவேலு மாதிரி பேஸ்மென்ட் வீக்காகி கால்வழியாக துர்நாற்றம் கிளம்பி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

    இலங்கையில் புரட்சித்தலைவரின்
    "உலகம் சுற்றும் வாலிபன்" படைத்த வசூல்கள்....யாரும் எளிதில் வெல்ல முடியாத ஒரு காவியமாக திகழ்ந்தது எனலாம்.....

    கொழும்பு - கெப்பிட்டல்
    203 நாள் : 9,84,588.75
    கிங்ஸிலி 40 நாள்
    வசூல் : 2,03,545.50
    ட்ரியோ 35 நாள்
    வசூல் : 1,69,185.75
    கொழும்பில் மட்டும் முதல் ரவுண்டில் பெற்ற
    278 நாள் ஒடி முடிய வசூல் :13,57,289.75

    அடுத்து.....
    யாழ் நகரில்
    மனோகரா 80 நாள்
    வசூல் : 3,01,351.75
    ஸ்ரீதர் 48 நாள்
    வசூல் : 1,56,281.70
    யாழ் நகரில் பெற்ற
    128 நாள் : 4,57,633.45

    அடுத்து...
    மட்டுநகர் விஜயா
    116 நாள் ஒடி சாதனை.

    திருமலை - சரஸ்வதி
    72 நாட்கள் ஒடியது.

    கட்டுகஸ்தோட்டா
    நியூசிகீரி - 63 நாள்
    வவுனியா
    ராயல் - 57 நாள்
    அக்கரைபற்று
    சாரதா - 50 நாள்
    கல்முனை
    தாஜ்மகால் 43 நாள்
    தெகிவளை
    ரீயோ ...36 நாள்
    மாணிப்பாய்
    வெஸ்லி ....31
    சங்காளை
    சாந்தி....40 நாள்
    சாவகச்சேரி
    வேல்......23 நாள்

    உலகம் சுற்றும் வாலிபன், இலங்கையில் முதல் ரவுண்டில் மட்டும் 25 லட்சத்தை
    கடந்து வசூலில் ...... சாதனை செய்தது.

    நன்றி : திரு டேவிட்
    யாழ் - பிரான்ஸ்
    திரு b.s.ராஜு

    என்ன சிவாஜி ரசிகர்களே! இந்த சாதனை போதுமா? இதைவிட வேறு சாதனை வேண்டுமென்றால் சொர்க்கத்தின் புதிய தலைவராக வீற்றிருக்கும் எங்கள் சுந்தர பாண்டியரை மறுபடியும் கூட்டி வந்து "கிழக்காப்பிரிக்காவில் ராஜு" எடுக்கச் சொன்னால்தான் முடியும். அவர் சாதனையை அவரால்தான் முறியடிக்க முடியும். இதுதான் திரையுலக நியதி. சிங்கத்தை வெல்ல சிங்கத்தால்தான் முடியும். சிறு நரிகளால் என்ன செய்ய முடியும். அதை வேடிக்கை பார்க்கத்தான் முடியும்..........ksr...

  10. #949
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடணும் - பொருளை
    சரிசமமா பங்குவைக்க சட்டம் போடணும்
    குவியக் குவிய விளைவதெல்லாம் கூறு போடணும் - ஏழைக்
    குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடணும்"
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து 1965ல் வெளிவந்த "கன்னித்தாய்" என்ற படத்தில் இடம்பெற்ற "கேளம்மா சின்னப்பொண்ணு" என்ற பாடலின் வரிகள் தான் இவை. திராவிட இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக எம்.ஜி.ஆர் இயங்கி கொண்டிருந்த காலத்தில் இப்படி அவரது படத்தில் சிவப்புச் சிந்தனை சிதறும் வரிகளை எழுதிய இவர் தான் இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் எழுதியவர். அவர் பெயர் "அருணன்". கண்ணதாசன் நடத்தி வந்த "தென்றல்" பத்திரிகையில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிக் கொண்டு பின்னாளில் அதன் உதவி ஆசிரியராக இருந்தவர்.
    இதற்கு அடுத்த ஆண்டு (1965) எம்.ஜி.ஆருக்கும் அவரது படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதும் கவியரசு கண்ணதாசனுக்கும் பிணக்கு ஏற்பட்டு, இனி எனக்கு நீ வேண்டாம், உனக்கு நான் வேண்டாம் என்று பிரிந்த நேரத்தில் வெளிவந்த படம் "கலங்கரை விளக்கம்". அந்தப் படத்தில் இரண்டு சூழல்களுக்கான பாடல்களை கண்ணதாசன் எழுத வேண்டி இருந்ததால் அவசர உதவியாக இவரை எழுத வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி. வழக்கம் போல பதிவான பாடல்களை எம்.ஜி.ஆருக்கு தோட்டத்தில் போட்டு காண்பித்திருக்கிறார் வேலுமணி.
    பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுவிட்டு " என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?? நான் கண்ணதாசன் வேண்டாம்னு அவ்வளவு தூரம் சொல்லியும் கேக்காம அவரையே எழுத வச்சிருக்கீங்க... மொதல்ல இதெல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வேற யாரையாவது வச்சு எழுதுங்க.." என்று சீறிச் சினந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
    "ஐயையோ.. இது கண்ணதாசன் எழுதினது இல்லங்க.. எழுதியவர் இன்னார் தான்" என்று இவரது பெயரை எவ்வளவோ சொல்லி மன்றாடி இருக்கிறார் வேலுமணி...
    "எனக்கு தெரியாதா??
    "தென்னை வனத்தினில் உன்னை முகம்தொட்டு
    எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
    உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில்
    உன் பட்டுக்கை தொடப் பாடுகிறேன்"...
    இதெல்லாம் கண்ணதாசனால மட்டும் தான் எழுத முடியும். மொதல்ல சொன்னதை செய்யுங்க" என்று திருப்பி அனுப்பிவிட்டார்..
    (இத்தனைக்கும், "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா, மணமகளே மருமகளே வா வா" போன்ற காலத்தால் அழியாத பாடல்களை ஏற்கனவே எழுதி இருந்தவர் தான் அவர்)
    பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியே நேரில் சென்று உண்மையைச் சொல்லி விளக்கிய பிறகே நம்பிய எம்.ஜி.ஆர்.. "ரொம்ப நல்லா எழுதி இருக்காரு.. இனிமேல் என் படங்களுக்கு இவர் எழுதுவார் அப்படின்னு சொல்லிடுங்க" என்று பாராட்டி இருக்கிறார்.. அந்தப் பாடலாசிரியர் தான் பின்னாளில் தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், திரைக்கதை - வசனகர்த்தா, பத்திரிகையாளர், திரைப்பட விநியோகஸ்தர் என்று பல்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை படைத்த
    திரு. பஞ்சு அருணாச்சலம். (அருணன் என்பது அவரது புனைப்பெயர்)......

  11. #950
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1969 ல் நம்நாடு முன் வசூலில் சிவந்த மண் தோல்வி அடைந்தது முந்தைய தலைமுறைக்கு தெரியும். அதேபோல் வேட்டைக்காரன் முன் போலிக் கர்ணன் வசூலில் தோற்றதும் தெரியும். சமீபத்தில் இந்த தலைமுறைக்கும் தெரியுமாறு சித்ரா லட்சுமணன் வேட்டைக்காரன் அளவுக்கு கர்ணன் வசூல் பெறவில்லை என்று உண்மையை யூடியூபில் போட்டு உடைத்துவிட்டார். அது இருக்கட்டும். சிவந்த மண் படம் காஞ்சிபுரத்தில் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் போனதாம். இப்படி ஒரு கற்பனைக் கதை. அதற்கு ஆதாரம் என்று ஒரு பொய்ச் செய்தி. இந்த செய்தியை பாருங்கள். தலைப்பில் ‘சாதனை’ என்ற எழுத்தை கவனியுங்கள். உள்ளேயும் ‘சாதனையை’ என்ற வார்த்தையை கவனியுங்கள். இந்த ‘னை’ என்ற எழுத்து பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அப்போது முதல்வராக இருந்த புரட்சித் தலைவரால் பெரியாரின் எழுத்து சீர்திருத்தமாக அறிவிக்கப்பட்டது.

    1979க்குப் பிறகுதான் இந்த புது எழுத்து அமலுக்கு வந்தது. இப்போது நடைமுறையில் உள்ளது. அதற்கு முன்பு ‘னை’ என்பது ‘ன’ என்ற எழுத்துக்கு மேல் கொம்பு முளைத்தது போலிருக்கும். இளைஞர்களுக்கு இது தெரியாது. மூத்தவர்களுக்கு தெரியும். யானை தன் துதிக்கையை தூக்கி ஆசிர்வதிப்பது போல அந்த ‘னை’ இருக்கும். இதேபோல ‘விலை’ என்ற வார்த்தையிலும் கொம்பு முளைத்த ‘லை’க்கு பதில் சீர்திருத்த எழுத்தான இப்போதைய ‘லை’ உள்ளது. 1979ல் கொண்டுவரப்பட்ட சீர்திருத்த எழுத்து எப்படி 10 ஆண்டுக்கு முன்பே அச்சில் இருக்க முடியும்?இந்த நவீன எழுத்து மூலம் இந்த செய்தி 1969-ம் ஆண்டு வெளியான செய்தியல்ல என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இது இப்போது இவர்கள் தயாரித்துள்ள பொய்ச் செய்தி. எல்லாருக்கும் வாய் இருக்கும் இடத்தில் சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு பொய் இருக்கிறது.......... Swamy............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •