Page 92 of 210 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #911
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGRamachandiran
    URIMAI KURAL
    C.V.Sridhar
    Le 7 novembre 1974
    Le 124ème MGR

    Review :
    Chitryuga’s
    URIMAI KURAL - 1974
    starred
    MGR,
    Latha, SVSahasranamam, Anjali Devi, MNNambiyar & others...

    In the period in which directors were distinctly branded as belonging to either MGR or Sivaji camps, Sridhar, in spite of having a separate identity for himself, was considered closer to Sivaji.

    He had worked as a scriptwriter for Sivaji films like ETHIR PAARAATHATHU, UTHAMA PUTHIRAN, AMARADEEPAM and PUNARJENMAM ; and had directed Sivaji in VIDIVELLI, SIVANDHA MANN, OOTY VARAI URAVU and NENJIRUKKUM VARAI.

    In the early 70s, some of Sridhar’s films didn’t do too well commercially – (AVALUKKENDRU OR MANAM, ALAIGAL, etc…).

    He embarked on an ambitious project with Sivaji, grandly titled Hero - 72.

    Due to various reasons, the filming ran into rough weather, and Sridhar was facing financial ruin.

    (It is another story that Hero - 72 underwent some modifications and was finally released in 1975 as VAIRANENJAM).

    Sridhar, in a “do or die” situation, approached MGR to help him out (I cannot help thinking that in similar circumstances, Sridhar ‘did’, while GV ‘died’ :
    (- perhaps there aren’t people like MGR around any more).

    In an interview, Sridhar recalled how magnanimous MGR was, and how he was treated with honor, understanding and respect :

    In order not to give Sridhar a bad name that we went begging to MGR, “Makkal Thilagum” suggested that they have a discreet meeting in Nambhiyar’s house.

    But Sridhar, insisting that he had no fear of such a ‘bad name’, went to Ramavaram Thottam.

    Sridhar explained his circumstances, and asked MGR to help him out by acting a film in his direction.

    MGR replied that he was happy to get a chance to work with Sridhar.

    He then assured Sridhar of his fullest cooperation and gave him bulk dates.

    He went one step further and gave a handwritten note that he was giving priority to complete Sridhar’s film.

    Sridhar was overwhelmed when MGR explained that this note would help Sridhar to get the necessary finances for the venture.

    It was a hit Telugu film - DASARA BULLUDU (starring Nageswara Rao) that was the inspiration for URIMAI KURAL, though Sridhar adapated it to suit MGR and the Tamil milieu.

    However, MGR insisted on copying the attire of Nageswara Rao in the original, including the Andhra style dhothi.

    As was his won’t, Sridhar wanted Kannadassan to write the lyrics.

    Considering the fact the MGR and Kannadassan weren’t the thickest of pals (!), Sridhar asked MGR’s permission to do so, MGR readily gave the go ahead (“Kavignarudan thaan poosal, avar varigaludan alla- dhaaaralamaaga ezhuthattum”).

    Sridhar got two songs written by Kannadassan and composed and recorded by MSVisuwanadhan (“Vizhiye kathai ezhuthu” and “Aambalaingala neenga aambalaingalaa”).

    It was then that Kannadassan wrote a particularly virulent piece against MGR in a magazine, and Sridhar got the jitters, and asked MGR about the fate of the songs - MGR replied that he still had no objection to Kannadassan writing the songs.

    However, if Sridhar felt that MGR fans might not take kindly to Kannadassan’s songs, he was free to change the lyricist, he would not interfere in the matter and it was up to Sridhar to decide.

    Sridhar consulted some distributors, who advised him to use the two songs written by Kannadassan for some other film, and get the songs for URIMAI KURAL written by some other lyricist.

    Accordingly, Sridhar approached Vaali and got a fresh set of songs written, composed and recorded.

    (Sridhar approached Vaali only after explaining his predicament to Kannadassan, who agreed to the change).

    When MGR got to know this, he called Sridhar and told him to retain Kannadassan’s two songs as well, as those songs were really good.

    URIMAI KURAL went on to become a super hit, and the songs are popular to this day.

    The soundtrack :

    Vizhiye kathai ezhuthu
    KJYésudass and PSusheela
    Kannadassan

    Aambalaingalaa neenga aambalaigalaa
    LREswari
    Kannadasan

    Oru thaai vayitril vandha udanpirappil
    TMSoundher Radjan
    Vaali

    Kalyana valaiyosai kondu
    TMSoundher Radjan and PSusheela
    Vaali

    Nethu poothaale roja mottu
    TMSoundher Radjan
    Vaali

    Ponna porandhaa aambalaikkitta
    TMSoundher Radjan
    Vaali

    Maatikkittaaradi mayilakkaala
    LREswari
    Vaali

    Though Vizhiye kathai ezhuthu was the pick of the lot, Kalyana valaiyosai kondu has its own folksy mellow enchantment- Latha carrying MGR’s sathunavu and walking towards the field, where MGR is engaged in an honest day’s labour.

    Sighting his beloved and hearing her call, he wipes the sweat off his brow, and washes his hands in the pump-set, and wipes them in Latha’s mundhaanai.

    He has his fill of both the lunch and Latha, and returns, fully refreshed, to yer-ottify!

    Though KJYésudass and SPBalasubramanium were increasingly singing for MGR, the 70s too had some memorable TMSoundher Radjan and PSusheela s’duets in MGR s’ films- Kalyana valaiyosai kondu ranks along with Azhagiya thamizh magal ival, Nallathu kanney kanavu kanindhadhu, Kanni oruthi madiyil, Lily malarukku kondattam, Nee ennenna sonnalum kavithai, Inbamey undhan peyar pennmaiyo, Kanavugaley aayiram kanavugaley…......FL...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #912
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் மாநகரில்*திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி...
    கலையுலக பேரொளி*...
    எம்.ஜி.ஆர். அவர்கள் படைத்த மாபெரும் வெற்றி சாதனைகள்*...
    100 நாட்களுக்கு மேல் சாதனை புரிந்த திரைப்படங்களின் பட்டியல்கள்.....
    ++++++++++++++++++++++++++++
    1947 ராஜகுமாரி
    ஒரியண்டல்* : 115 நாள்
    1948 மோகினி
    ஒரியண்டல் 105 நாள்
    1950 மருதநாட்டு இளவரசி
    நியூசினிமா 100 நாள்
    1950 மந்திரிகுமாரி
    ஒரியண்டல் 147 நாள்
    1951 மர்மயோகி
    ஒரியண்டல் 126 நாள்
    *1951 சர்வாதிகாரி
    நீயூசினிமா : 116 நாள்
    *1952 என் தங்கை
    அம்பிகா : 105 நாள்*
    1954 மலைக்கள்ளன்
    ஒரியண்டல் :.147 நாள்*
    1955 குலேபகாவலி
    நியூ சினிமா 140 நாள்
    1956 அலிபாபாவும் 40 திருடர்களும்
    வெலிங்டன்* : 154 நாள்
    1956 மதுரைவீரன்
    ஒரியண்டல் : 161 நாள்*
    1956 தாய்க்குப்பின் தாரம்
    நீயூ சினிமா : 119 நாள்*
    1957 சக்கரவர்த்தி திருமகள்
    நீயூசினிமா :.112 நாள்*
    1958 நாடோடி மன்னன்
    நீயூசினிமா : 147 நாள்
    1961 திருடாதே
    நீயூசினிமா : 97நாள்*
    1961 தாய் சொல்லை தட்டாதே
    நீயூசினிமா : 116 நாள்*
    1962 தாயைக் காத்த தனயன்
    பேலஸ் : 126 நாள்*
    1963 நீதிக்கு பின் பாசம்
    நீயுசினிமா : 100 நாள்*
    1963 பரிசு
    ஒரியாண்டல் :105 நாள்*
    1964 வேட்டைக்காரன்
    நீயூசினிமா :.112 நாள்
    1964 பணக்கார குடும்பம்
    சென்ட்ரல் விக்டோரியா 112 நாள்*
    1965 எங்க வீட்டுப் பிள்ளை
    சாந்தி : 113 நாள்*
    1965 ஆயிரத்தில் ஒருவன்
    ஒரியண்டல் :125 நாள்*
    1966 அன்பே வா
    ராயல் : 112 நாள்*
    1967 காவல்காரன்
    ஒரியண்டல் : 110 நாள்*
    1968 ரகசியபோலிஸ்115
    ஒரியண்டல் :110 நாள்
    1968 குடியிருந்த கோயில்
    சங்கம் : 86 நாள்
    1968 ஒளி விளக்கு
    சங்கம் : 85 நாள்*
    1969 அடிமைப்பெண்
    சாந்தி : 133 நாள்
    1969 நம்நாடு
    பேலஸ் : 107 நாள்*
    1970 மாட்டுக்கார வேலன்
    ஜெயா : 156 நாள்*
    1970.என் அண்ணன்
    அலங்கார் : 110 நாள்*
    1070 எங்கள் தங்கம்
    பேலஸ் :* 105 நாள்
    1971 குமரிக்கோட்டம்
    பேலஸ் : 101 நாள்*
    1971 ரிக்க்ஷாக்காரன்
    அலங்கார் : 118நாள்
    1972 நல்ல நேரம்
    ஒரியண்டல் : 126 நாள்*
    1973 உலகம் சுற்றும் வாலிபன்
    சங்கம் : 126 நாள்*
    1974 உரிமைக்குரல்
    சங்கம் 127 நாள்*
    1975 இதயக்கனி*
    அலங்கார் : 115 நாள்
    1975 பல்லாண்டு வாழ்க
    அப்ஸரா* : 112 நாள்.........ur...

  4. #913
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1933 – 34 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். அவர் காந்தியவாதியாகவும், காந்தியை நேசிப்பவராகவும் எப்போதும் இருந்தார். “புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?” என்று பாடியவருக்கு, புத்தர், ஏசுவை விட காந்தியை மிகவும் பிடிக்கும். “காந்தி மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும், புத்தரும் கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்” என்பார்.

    . 1930ம் ஆண்டு வாக்கில் காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்த சமயம். காந்தியடிகள் காரைக்குடிக்கு வருகைதந்தார். அப்போது காந்தியை முதன்முதலாக பார்த்ததாக எம்.ஜி.ஆர் தெரிவித்திருக்கிறார்.

    “காந்தியக் கொள்கைகளை முழுவதுமாக கடைபிடித்த தலைவர் அண்ணா மட்டுமே. அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.” என்று தி.மு.கவில் இணைந்த போதும் காந்திய கொள்கையில் பற்றுள்ளவராகவே இருந்தார்.

    காந்தியடிகளின் பல்வேறு கொள்கைகளை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். அதிலொன்று கதர் சட்டை உடுத்துதல். நாடக நடிகராக இருந்த பொழுதிலிருந்து கதர் மீது பாசம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இளம் வயதில் அணிந்திருந்த துளசிமாலையை துறந்தவிட்ட போது கூட, கதராடையை விடவில்லை.

    அன்பே வா திரைப்படத்திற்கான படபிடிப்பு சிம்லாவில் நடைப்பெற்றது. படபிடிப்பு முழுவதும் முடிந்ததும், டெல்லியில் உள்ள காந்தி, நேரு போன்ற தலைவர்களின் சமாதிக்கு சென்றார் எம்.ஜி.ஆர். காந்தி சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்கியவர், சமாதியை ஒரு முறை சுற்றி வந்து வணங்கி அங்கேயே அமர்ந்து சில நிமிடங்கள் தியானமும் செய்திருக்கிறார்.

    . “காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார்” என்று காந்தியை நேசித்த எம்.ஜி.ஆர் மதுவிலக்கையும் தீவிரமாக கடைபிடிக்க எண்ணினார்.

    காந்தியின் கொள்கையில் மதுவிலக்கை மிகவும் நேசித்தார் எம்.ஜி.ஆர். மதுவிலக்கு கொள்கையை அண்ணா கொண்டுவந்த போது அகம் மகிழந்தார். இருந்தும் அரசியல் காரணங்களுக்காக அடுத்தமுறை தி.மு கழக அரசு அதை நிறுத்தியது. அக்காலக்கட்டத்தில் மதுவிலக்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்தார் எம்.ஜி.ஆர். “கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்” என்று யாழ்பாணத்தினைச் சேர்ந்த திரு நித்தி கனகரத்தினம் பாடிய பாடலை, தமிழ்நாட்டின் மதுவிலக்கு பாடலுக்கு தேர்ந்தெடுத்தார் எம்.ஜி.ஆர்.

    “அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.” என்று காந்தியை பார்த்த போது உணர்ந்தவற்றை பதிவு செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்

    . காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருந்த எம்.ஜி.ஆர், உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் அரிசி அனுப்பாததைக் கண்டித்து முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர். 10 மணியிலிருந்து உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். உண்ணாவிரதம் தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே மத்திய உணவு மந்திரி ராவ்பீரேந்திரசிங் தொடர்பு கொண்டு டெல்லியில் வந்து பேசும் படி கூறினார். இருந்தும் எம்.ஜி.ஆர் திட்டமிட்டபடி மாலை 5 மணி வரை உண்ணாவிரததினை தொடர்ந்தார்.

    காந்தியின் கொள்கைகளான மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று அனைத்தையும் நேசித்தவர் எம்.ஜி.ஆர். இதனை நான் கண்ட காந்தி என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழுக்கு பேட்டியாக தந்திருக்கிறார். காந்திப் படத்தையும், அண்ணா படத்தையும் வழிபட்ட பின்பே முதல்வர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்........sbb...

  5. #914
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதம், மொழி, இன வேறுபாடுகள் அற்றவர் எம்.ஜி.ஆர்


    பாரத ரத்னா விருது இந்திய இலங்கையின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டதால் நம் நாட்டின் தேசியத் தலைவர்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் வடக்கே டில்லி பம்பாய் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் அ.தி.மு.க கட்சி செயல்பட்டதால் எம்.ஜி.ஆர் தேசியக் கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றார். இந்த அந்தஸ்துக்குரிய அஸ்திவாரம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களால் 1953 முதல் அமைக்கப்பட்டது. பாரதப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இருந்த போது அவர் அந்தமான் தீவில் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை திறந்துவைத்தார். இன்றும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகள் பசுமையாக உள்ளன. வெளிநாடுகளில் குறிப்பாக ஃபிரான்ஸ், சிங்கப்பூர் மலேசியா போன்றவற்றில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா வருடந்தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. மகாராஷ்ட்டிராவின் எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் இதயக்கனி இதழுக்கு விளம்பரமும் நூற்றாண்டு விழா வாழ்த்தும் அனுப்புகிறார்.

    நாடெங்கும் கட்சிஅலுவலகமாக மாறிய ரசிகர் மன்றம்

    அவசர நிலையைப் பிரகடனம் செய்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியை விரும்பவில்லை. அவற்றை ஒடுக்கிவிடுவார் என்ற தகவல் வந்தபோது எம்.ஜி.ஆர் தனது அண்ணா தி.மு.கவை அனைத்திந்திய அண்ணா தி மு க என்ற பெயரில் தேசியக் கட்சியாக மாற்றினார். இதற்காக மற்ற மாநிலங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டன. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் சட்டமன்றத்தில் அந்த மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை மற்ற மாநிலங்களில் இயங்கி வந்த எம்.ஜி.ஆர் ரசிகர்மன்றங்கள் ஆகும்.

    எம்.ஜி.ஆர்

    மற்ற மாநிலங்களுக்குச் செய்த உதவிகள்

    எம்.ஜி.ஆர் நடித்து வந்த காலத்திலும் அரசியலுக்கு வந்த பிறகும் பிறருக்கு உதவுவதில் அவர் நம்மவர்,வேற்றவர் என்று வேறுபாடு கண்டதில்லை. எந்த மாநிலமாக இருந்தாலும் எந்த மொழி பேசும் மக்களாக இருந்தாலும் அவர் உதவி செய்யத் தயங்கியதே இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவர் செய்த உதவிகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் வந்த போது உடனே எம்.ஜி.ஆர் போர் நிதியாக ரூ. 75,000 தருவதாக அறிவித்து முதல் தவணையாக காமராஜரிடம் 25,000க்கான காசோலையை தந்தார். அதற்கு பாரத பிரதமர் நேருஜி அவர்கள் நன்றி தெரிவித்து கடிதமும் அனுப்பினார்.

    ஒரிசாவுக்கு நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் சென்னையில் ஒரு இந்தி படத்தைப் போட்டு அதன் வசூலை அனுப்ப சிலர் முயன்ற போது அதற்கான அழைப்பு எம்.ஜி.ஆருக்கு வந்தது. அந்தப் படத்தின் வசூல் தொகைக்குச் சமமான அளவு தொகையை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் வழங்கினார்.

    ராஜஸ்தானுக்கு அவர் அடிமைப்பெண் படப்பிடிப்புக்குச் சென்றபோது அண்மையில் அங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கு ஐம்பதாயிரம் நிதி உதவி அளித்தார். மறுநாள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியாக இச்செய்தியே இடம்பெற்றது.

    கர்நாடகாவில் ஒரு விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர் சென்றிருந்த போது அங்கு பார்வையற்றோருக்கும் பேசும் திறனற்றோருக்குமாக ஐம்பதாயிரம் ரூபாய் உதவியளித்தார். எம்.ஜி.ஆர் அமெரிக்கா போய் சிகிச்சை பெற்று வந்த பிறகு அவருக்குப் பேசும் திறன் குறைந்தபோது அவர் அந்தக் கஷ்டத்தை உணர்ந்து தன் ராமாவரம் தோட்டத்தில் இக்குறைபாடு உடைய சிறுவர்களுக்குப் பள்ளி அமைக்கும்படி தன் உயிலில் எழுதிவைத்திருந்தார் என்று நம்மில் பலர் கருதுகிறார்கள். ஆனால், அவர நன்றாகப் பேசி வந்த காலத்திலேயே அவருக்கு மாற்று திறனாளிகள் மீது அன்பும் அக்கறையும் இருந்தது. அவர், அவர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் அவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நிறைய உதவியிருக்கிறார்.

    கொல்கத்தாவுக்குப் பணம் படைத்தவன் படப்பிடிப்புக்குச் சென்றிருந்த போதும் அவர் அங்கு கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அச்சங்கத்தின் வளர்ச்சிக்கு நிதி அளித்தார். பின்பு அவர் முதல்வரான பிறகு அங்கு சென்றிருந்த போது அவரை அங்குள்ள ஆளுநர் மாளிகையில் தங்கச் செய்தனர். ஆனால், அங்கிருந்த கெடுபிடிகளைப் பார்த்துவிட்டு என்னைப் பார்க்க வரும் பொது மக்களுக்கு இந்த இடம் வசதிப்படாது என்று சொல்லிவிட்டு ஓர் ஓட்டலில் வந்து தங்கினார். அங்கு எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த தமிழர்களின் கையில் அவர் தனிச்செயலர் ரூபாய் நோட்டுக் கட்டிலிருந்து பிரித்து ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

    அமெரிக்காவுக்கு எம்.ஜி.ஆர் போயிருந்தபோது ஒரு பெண் அங்கு வந்து எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டார். எம்.ஜி.ஆர் அவர் கேட்டதுக்கும் அதிகமான டாலர் நோட்டுக்களை அவருக்குக் கொடுத்து உதவினார்..........

  6. #915
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1980-ல்தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக
    மீண்டும் அமோக வெற்றி பெற்றது . அந்தத் தேர்தலில்
    ஆண்டிபட்டி தொகுதியில் கழகத்தின் சார்பில் நின்ற
    இலட்சிய நடிகர் , புரட்சித்தலைவர் எம்ஜியாரை விட
    அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .
    தேர்தல் முடிவு வந்த அடுத்தநாள் தலைவரை
    சந்திக்க ராமாவரம் தோட்டம் சென்றார் எஸ்.எஸ்.ஆர் .
    அவரை அகமகிழ்ந்து வரவேற்ற தலைவர் , அவருடன்
    காலை சிற்றுண்டி உண்டபடியே , " என்ன ராஜு , மந்திரி
    ஆகணுமா ? என்ன இலாகா வேண்டும் சொல் " என்று கேட்க ,

    " அண்ணே ,மந்திரி எல்லாம் வேண்டாம் ; நான் முதல்
    மந்திரி ஆகணும் " என்று சொல்ல ,

    தலைவர் சிரித்துக்கொண்டே
    " நான் இருந்தால் என்ன , நீ இருந்தால் என்ன நீயே இருந்து
    கொள் " என்று சொல்ல , எஸ்.எஸ்.ஆர் சிரித்துக்கொண்டே
    " அண்ணே நீங்கள் இருந்தால் நாங்கள் இருந்த மாதிரி ,
    தொடர்ந்து இரண்டாம் முறையாக நீங்கள் முதலமைச்சர்
    ஆக வேண்டும் .

    அது மட்டுமல்ல நீங்கள் உள்ளவரை நீங்களே
    முதல்வராக ஆள வேண்டும் என்ற என் விருப்பத்தை
    நேரில் தெரிவிக்கவே வந்தேன் " என்று கூறினார்.
    அதன் பிறகு அமைச்சருக்கு இணையான ,
    ' சிறு சேமிப்புத்திட்டத் துணைத்தலைவர் ' பதவியை
    வழங்கி இலட்சி நடிகரை சிறப்பித்தார் புரட்சித்தலைவர்.

    ( இந்தப் பதவி திமுக ஆட்சியில் எம்ஜியார் வகித்த பதவி ).........bsm.........

  7. #916
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #டாக்டர் என்ற பட்டத்தை யாரெல்லாம் எதற்காகவோ வாங்கியிருக்கலாம்...
    தமது பெயருக்கு முன் அதைப் போட்டுக்கொண்டு பெருமதிப்பைத் தேடிக்கொள்ள விரும்பலாம்...
    பொன்மனச்செம்மலுக்குப் பல நாடுகளில் மொத்தம் 52 பட்டங்களை மக்களே விரும்பிக் கொடுத்துள்ளனர்...
    தகுதி பார்த்தே தந்தனர்...

    எந்தப்பட்டத்தையும் கொடுத்தபோது மறுக்காமல் வாங்கிக்கொண்டவர் மக்கள்திலகம் ...!!!

    அதன் உண்மையான காரணத்தை ஒரு முறை மனம் திறந்தார்...

    "நான் படிக்க ஆசை..ஆனால் முடியவில்லை...என்னை வக்கீலாக்க வேண்டும், அந்த உடை போட்டு என்னைப் பார்க்கவேண்டுமென்பது என் அம்மாவின் பெரிய ஆசை, வயிற்றைக் கிள்ளும் வறுமையால் பள்ளிக்கே செல்லமுடியாத நிலை..

    ஆனால் .. எப்படியோ வளர்ந்து நானோ என் தாயோ நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத பதவியில் உக்காரந்துட்டேன்...
    இப்போ இந்த பட்டம், அதை வாங்க ஒரு உடை. அந்த உடையோடு #என் #அம்மா #மேல்உலகத்திலிருந்தாவது #என்னைப் #பார்த்து #ஆனந்தப்படட்டும்..அதனால் தான் மறுக்காம வாங்கிக்கறேன் " என்று கண்ணீர் மல்கினார்.

    #புரட்சித்தலைவர் #பயப்படுவது #மக்களின் #விமர்சனத்துக்கே. எந்த காரியத்தையும் அடுத்தவர் விமர்சிக்கும் அளவுக்கு செய்யமாட்டார்.
    அவர்களை, டாக்டர் பட்டம் வாங்கிய தன்னை விட அறிவாளியாக ...
    தன்னிடம் நலன் கண்டால் வாதிக்கும் வக்கீலாக...
    தவறு கண்டால் தண்டனை தரும் நீதிபதிகளாகவே கருதினார்..

    அந்த நினைப்பே புரட்சித்தலைவரைப் பதவியில் நிலைக்கவைத்தது............bsm.........

  8. #917
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காந்திஜியின் பேரில் எம்.ஜி.ஆர். கொண்டுள்ள பக்திக்கு அளவேயில்லை. இதோ… காந்திஜி பற்றி சொல்கிறார் எம்.ஜி.ஆர்.
    ��காந்திஜியை நீங்கள் எப்போது முதலில் பார்த்தீர்கள்?
    1930ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த பொழுது காரைக்குடிக்கு வந்திருந்தார் காந்திஜி. அப்போது தான் அவரை பார்த்தேன்.
    அவரை பார்த்ததும் முதன்முதலில் உங்களுக்கு எத்தகைய உணர்வு ஏற்பட்டது?
    அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.
    காந்திஜியின் கொள்கைகளில் உங்களுக்கு பிடித்தமானவை எவை?
    மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
    காந்திஜியை பற்றி அண்ணா உங்களிடம் எப்போதாவது கருத்து பரிமாறிக் கொண்டதுண்டா?
    கருத்து பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நான் பேரறிஞர் அண்ணாவுக்கு சமமானவன் அல்ல. காந்திஜிக்கு முன்பு இருந்த அரசியல்வாதி“கள் எப்போதும் தாங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தின் வெற்றியை பற்றித்தான் கவலைப்பட்டார்களே தவிர அந்த வெற்றியை அடைவதற்கான வழிகளை பற்றி கவலைப்பட்டது இல்லை. காந்திஜி தான் அரசியல் உலகத்திலும் உண்மையையும், நேர்மையையும் கடைப்பிடித்து வெற்றி காண முடியும் என்று நிரூபித்தவர் என்று அண்ணா பல முறை கூறியிருக்கிறார்.
    திரைப்படங்கள் மூலமாக காந்திஜியின் கொள்கைகளை எப்படி பரப்பலாம்?
    காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார். மனித வாழ்க்கையிலுள்ள நல்ல தன்மைகள் தான் மகாத்மா. சுருக்கமாக சொன்னால் மனித தன்மை தான் மகாத்மா. ஆகவே அவருடைய கருத்துக்களை பரப்புவதற்கென்று தனியாக படம் எடுக்க வேண்டும் என்பதில்லை.
    உயர்ந்த கருத்துக்கள் உள்ள ஒரு படத்தை எடுத்தாலே, அது காந்திய கருத்துக்கள் உள்ள படம் என்று தான் பொருள்.
    காந்திஜிக்கு மது, புகை இவை பிடிக்காது. இந்த கொள்கைகயை நடைமுறையில் கடைப்பிடித்து வரும் நீங்கள் அண்மையில் சிகரெட் கம்பெனி நடத்திய விழாவில் கலந்து கொண்டது ஏன்?
    ஆரம்பத்தில் அதற்கு ஒப்புக்கொண்ட போது எனக்கு அந்த விவரம் தெரியாது. வறட்சி துயர் துடைப்பு பணிகளுக்காகம், ஸ்டான்லி மருத்துவமனைக்காகவும் நிதி சேர்க்கும் நல்ல காரியம் ஒன்று மட்டும் நினைத்து ஒப்புக்கொண்டேன். பிறகு தான் உண்மை தெரிந்தது. வருத்தப்பட்டேன். அத்துடன் நிற்கவில்லை அதை அன்று மேடையிலேயே கூறி விட்டேன். நிறைய செலவழித்து சிகரெட்டுக்கு விளம்பரம் செய்து மக்களை குறிப்பாக இளம் உள்ளங்களை கவர்வதை விட, இதே பண்தை எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு செலவழிக்கலாம் என்று பகிரங்கமாகவே பேசினேன். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு இதில் வருத்தம் தான். இருந்தாலும் எனக்கு சரியென்று பட்டதை மறைக்காமல் சொன்னேன். அப்படி பேசிய பிறகு தான் என் மனதுக்கு நிம்மதியாக இருந்தது.
    ஆனந்த விகடன்- (08.10.2008)
    நீங்கள் எந்த அரசியல் கட்சியில் முதலில் இருந்தீர்கள்?
    காங்கிரஸில். காந்திய வழியில் சமதர்மத்தை விரும்பும் ஒருவனாக இருந்தேன்.
    அந்தக் கட்சித் தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கிப் பழகி இருக்கிறீர்கள்?
    அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை. அதாவது நான்கு பேர் என்னைத் தெரிந்து கொள்ளுமளவுக்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை.
    தி.மு.க.வில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள்?
    1952-ஆம் வருடம் தி.மு.க.வில் சேர்ந்தேன்.
    தி.மு.க.வில் சேரக் காரணம் என்ன?
    எனது காந்திய வழிக் கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வில் இருப்பதை அறிந்து சேர்ந்தேன்....sbb

  9. #918
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "அப்போது நான் ‘தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர்.

    #எம்ஜிஆர் அவர்களால் நடத்தப்பட்ட இதழ் அது.

    அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து.

    அப்போது எம்.ஜி.ஆர்-தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை.

    எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை.

    அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன்.

    ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் தாமதம் ஆகும் என்பதால் நான் போய் எடுத்துப் பேசினேன்.

    எதிர்முனையிலிருந்து ஒரு குரல்...

    ”நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்… ஆசிரியர் இருக்கிறாரா?”

    அந்த நொடி எனக்குள் லேசான அதிர்ச்சி. சுதாரித்துக் கொண்டு...

    ”இன்னும் வரலை சார்….”

    ”நீங்க யார் பேசறது?”

    ”நான் உதவி ஆசிரியர், கல்யாண்குமார்”

    “சரி, கடந்த பொங்கல் தாய் சிறப்பு இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வந்தன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

    என்னிடம் அதற்கான பதில் இல்லை. காரணம் நான் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவன். விளம்பர சம்பந்தமான விபரங்களை நான் அறிய வாய்ப்பில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு,

    ”ஒரு ஐந்து நிமிடம் எனக்கு நேரம் தந்தால் அதுபற்றி முழுவிபரங்களையும் விளம்பர மானேஜர் பத்மானாபனிடம் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்.. அவர் ஏற்கனவே வந்து விட்டார்..” என்றேன்.

    “இல்லை ஆசிரியர் வந்ததும் என்னை அந்த விபரங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நன்றி. வணக்கம்.”

    -என்று நான் பதில் வணக்கம் சொல்லுமுன்னே போனை வைத்துவிட்டார்.

    ஓ! திரையில் பார்த்துப் பிரமித்த ஒரு மனிதரிடம் போனில் பேசிவிட்டோம்! பிரமிப்பாகத்தான் இருந்தது எனக்கு அந்த வாரம் முழுக்க!

    சற்று நேரத்தில் ஆசிரியர் வந்ததும் விபரத்தைச் சொன்னேன். அவரும் உடனடியாக அவர் கேட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு திரும்ப எம்.ஜி.ஆரிடம் பேசினார்.

    விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. மறுநாள் அலுவலகம் வந்த ஆசிரியர் இன்னொரு புது விஷயத்தைச் சொன்னார்.

    முதல் நாள் என்னோடு பேசுவதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆசிரியர் வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார்.

    ஆனால் அப்போதுதான் ஆசிரியர், அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார்.

    அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.

    அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:

    ”ஹலோ.. யாருங்க பேசறது?” இது வேலைக்காரச் சிறுமி.

    ”நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்”

    #எம்ஜியார் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!

    “அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க”

    “நீங்க யார் பேசறது?”

    ”நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.”

    “உங்க பேரு என்ன?”

    “லச்சுமி”

    “எந்த ஊரு?”

    “தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் “

    “இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?”

    “மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்”

    “அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?”

    “அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.”

    “உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?”

    “ம்ம்ம்… நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க”

    “சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?”

    “ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..”

    “உனக்கு அய்யாவைப் புடிக்குமா? அம்மாவப் புடிக்குமா?”

    “ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.”

    “எப்ப ஊருக்குப் போகப்போற?”

    “எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..”

    “சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு”

    “உங்க பேரு என்ன சொன்னீங்க?”

    “எம்.ஜி..ராமச்சந்திரன்”

    “மறுபடி சொல்லுங்க….”

    “எம்.ஜி.ராமச்சந்திரன்”

    அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!

    இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள்.

    அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை.

    எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள்.

    ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.

    அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்து விட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான்...

    சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.!"

    -கல்யாண்குமார் | தாய் இதழ் உதவி ஆசிரியர்.....

  10. #919
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சிதலைவர்
    #இதயதெய்வம்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
    #காலை_வணக்கம்...

    இதயதெய்வம் டாக்டர் எம்ஜியார்
    அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். அவர்...டாக்டர் எச்வி.ஹண்டே.

    ‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது மூதறிஞர் ராஜாஜி சொன்ன வாசகங்கள்தான் இவை. 1971-ம் ஆண்டு தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு திமுகவிடம் கடும் தோல்வியை சந்தித்தன.

    அதிமுகவையும் திமுகவையும் சமதூரத்தில் வைத்துப் பார்த்த காமராஜருக்கு, ராஜாஜியின் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. சுதந்திரா கட்சியில் இருந்த டாக்டர் எச்.வி. ஹண்டேயை அழைத்து தனது அதிருப்தியை ராஜாஜியிடம் தெரிவிக்குமாறு காமராஜர் கூறினார்.

    அதற்கு ராஜாஜியின் பதில், ‘‘காமராஜரும் எம்.ஜி.ஆரை ஆதரிக்க வேண்டும்’’ என்பதே. அவரது பதிலோடு தன்னை சந்தித்த ஹண்டே யிடம், ராஜாஜியை அவரது பிறந்தநாளின்போது சந்தித்து பேசுவதாகக் கூறியிருக்கிறார் காமராஜர். ‘‘ஆனால், அதற்குள் ராஜாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்துவிட்டார்’’ என்கிறார் டாக்டர் ஹண்டே. ‘‘அடுத்த சில மாதங்களில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற அமோக வெற்றி, ராஜாஜியின் கணிப்பை உறுதிப்படுத்தியது’’ என்றும் கூறுகிறார்.

    சட்டப்பேரவையில் அப்போதைய திமுக அரசை எதிர்த்து சுதந்திரா கட்சியின் பேரவைத் தலைவராக இருந்த ஹண்டேயின் செயல்பாடுகளை பார்த்த எம்.ஜி.ஆர்., ‘‘ராஜாஜி என்னை ஆதரித்தார். அவரது விருப்பப்படி நீங்கள் அதிமுகவில் சேர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, 1973 ஜூன் 19-ம் தேதி அதிமுகவில் ஹண்டே சேர்ந்தார். அதிமுகவின் முதல் தலைமை நிலையச் செய லாளர் ஆக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார். 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை ஹண்டே இழந்தாலும், அவரை அமைச்சரவை யில் சேர்த்துக்கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.!

    எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய தனது அனுபவத்தில், அவர் தனது அரசியல் எதிரிகளைக்கூட கடுமையாகப் பேசி ஹண்டே பார்த்தது இல்லை. எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களின் தொகுதிகளுக்கும் பாரபட்ச மில்லாமல் அரசின் திட்டங்களை எம்.ஜி.ஆர். செயல்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு அனுபவம் ஹண்டேவுக்கே உண்டு.

    திமுக ஆட்சியில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் புலவர் கோவிந்தன். கருணாநிதிக்கு நெருக்கமானவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக ஹண்டே இருந்தபோது, அவரை புலவர் கோவிந்தன் சந்தித்தார். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தனது செய்யாறு தொகுதியில் சுகாதாரத்துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்தார்.

    அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை ஹண்டே சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அந்தப் பணிகளை உடனே நிறைவேற்றுங்கள். புலவர் கோவிந்தன் நல்ல மனிதர். அவர் திமுகவில் இருந்தாலும் நீங்கள் செய்யாறு தொகுதிக்கு நேரடியாகச் சென்று பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார். இந்த பதிலால் ஹண்டேயின் மதிப்பிலும் மனதிலும் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

    தன் மீது வீசப்படும் கடுமையான விமர்சனங்களுக்குக் கூட எம்.ஜி.ஆர். கோபப்பட மாட்டார். அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு அவர் அளிக்கும் பதில் மிகக் கூர்மையாக இருக்கும்.

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, பரமத்திவேலூர் என்ற இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம். அதில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆருடன் ஹண்டே சென்றார். ஹண்டேயின் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. ‘‘என்ன நியூஸ்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். சொல்வதற்கு ஹண்டேக்கு தயக்கம். என்றாலும் தயங்கியபடியே சொல்லிவிட்டார். ‘‘திமுக தலைவர் கருணாநிதி உங்களுக்குப் பொருளாதாரம் தெரியாது என்று விமர்சித்திருக்கிறார்’’ என்றார் ஹண்டே.

    அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்… ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’

    ‘‘எம்.ஜி.ஆர். சொன்னது கரெக்ட்தானே’’ என்கிறார் டாக்டர் ஹண்டே!

    மூதறிஞர் ராஜாஜி நகைச்சுவை உணர்வு உடையவர். எம்.ஜி.ஆரும் அப்படியே. அதிமுகவைத் தொடங்கிய புதிதில் ராஜாஜியின் ஆசியை பெறுவதற்காக அவரை எம்.ஜி.ஆர். சந்தித்தார். படப்பிடிப்பு இருந்ததால் அதை முடித்துவிட்டு ராஜாஜியை பார்க்கச் சென்றபோது தாமதமாகிவிட்டது. வருத்தம் தெரிவித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஷூட்டிங்கினால் தாமதமாகிவிட்டது’’ என்றார். அதற்கு, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறிப்பிடும் வகையில் ‘‘ஷூட்டிங்தான் ஏற்கெனவே முடிஞ்சுடுத்தே‘‘ என்று சிலேடையாக ராஜாஜி சொல்ல, ரசித்து சிரித்தார் எம்.ஜி.ஆர்.!

    அன்புடன்...vr...

  11. #920
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆர் நல்லவனுக்கு நல்லவன் ...
    எம் ஜிஆர் வல்லவனுக்கு
    வல்லவன் ...

    சென்னையில் ஒரு பகுதி மிகுந்த பரபரப்பரப்பான ஏரியா ...அங்கு ஒரு சிறு வியாபாரி அந்த பகுதி ரௌடிகளால் தொலை அனுபவிக்கிறார் பல நாள் பொறுத்து கடைசியில் அவர் தினம் வணங்கும் பொன்மன செம்மல் எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் போடுகிறார் தன் நிலைமையை குறித்து
    ஒரு நாள் ரௌடிகள் கூடும் நேரம் ஒரு அரசு வண்டி வந்து நிற்க அதில் இருந்து சூரியன் போல் எம் ஜி ஆர் இறங்கி கடைகாரர் பெயரை கூப்பிட்டு நலமா ஏன் தோட்டத்திற்கு வரகூடாதா?! என நலம் விசாரித்துவிட்டு ஒரு பொட்டலம் பணம் கொடுத்து போகிறார் கடைகாரர் கடவுளை கண்ட பக்தனாக திகைத்து விட்டார்...
    இதன் பின் அந்த கடைகாரரிடம் எவராவது வம்பு வளர்ப்பார்களா ...
    எம் ஜி ஆர் நினைத்திருந்தால் போலீஸ் கொண்டு அடக்கி இருக்கலாம் ... ஆனால் அது கடைகாரரிடம் பகைதான் வளரும் என்று கருதியே தானே களம் இறங்கி உதவினார் ...

    இது பொதிகை டிவியில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா மேடையில் அதன் தலைமை அதிகாரி உரையில் இருந்து அறியபட்டது

    வாழ்க எம் .ஜி .ஆர் ., புகழ்.........vrh...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •