Page 90 of 210 FirstFirst ... 40808889909192100140190 ... LastLast
Results 891 to 900 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #891
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #உலகம் சுற்றிய எம்ஜியார்#

    எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார் மக்கள் திலகம்..ந*டிக*ரான ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
    #ர*ங்கூன்
    சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார்.

    #இலங்கை
    1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.

    யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டுமல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
    இலங்கை பிரதமர் டட்லி சேனநாயகாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய்யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலைஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
    1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

    #சிங்க*ப்பூர்
    சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
    ‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

    #மாஸ்கோ
    மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
    இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்!

    #லண்ட*ன்
    பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
    லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

    #பாரீஸ்
    அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்..

    #கிழ*க்கு ஆப்பிரிக்கா
    பின்ன*ர் லண்ட*னிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!

    #மொரீஷிய*ஸ்
    நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு!
    1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!

    #அமெரிக்கா
    1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
    ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!.........ns...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #892
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972 அக் 20 தேதி வெளியான படம்தான் உதயம் புரடொக்ஷன்ஸாரின் "இதயவீணை". சென்னையில் குளோப் ஸ்ரீகிருஷ்ணா மகாலட்சுமி ராஜகுமாரி ஆகிய 4 திரையரங்குகளில் வெளிவந்து குளோபில் 105 நாட்கள் ஓடிய வெற்றிக் திரைக்காவியம்.
    படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. ஆரம்ப காட்சியிலேயே காஷ்மீரின் கொள்ளை அழகுடன் தலைவர் தோன்றும் காட்சி மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது.

    "உலகம் சுற்றும் வாலிபனின்" வெளிநாட்டு படப்பிடிப்புக்கு பேருதவியாக இருந்த மணியனுக்காக எம்ஜிஆர் நடித்துக் கொடுத்த படம். "உலகம் சுற்றும் வாலிபனுக்கு" முந்தி வந்து வெற்றி பெற்ற திரைப்படம். எம்ஜிஆரின் இயல்புக்கு மாறான கதை. மணியன் 'ஆனந்த விகடனில்' தொடராக எழுதி வெற்றி பெற்ற "இதயவீணை" என்ற நாவலின் கதை. பொதுவாக பத்திரிகையில் வருகின்ற கதை வெற்றி பெற்றால் அதை சினிமாவாக தயாரிக்கும் போது அநேக படங்கள் தோல்வியானதை பார்த்திருக்கிறோம். ஆனால் எம்ஜிஆரிடம் அதுவும் பொய்த்து விட்டது.

    படம் வெற்றி பெற்று மணியனுக்கும் வித்வான் வே லெட்சுமணனுக்கும் ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.
    பெரியவர் தலைவருக்கு தந்தையாக நடித்திருப்பார். 'பொன்னந்தி மாலைப்பொழுது' எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக தோன்றும். அப்படி ஒரு நேர்த்தி. பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமையாக இருக்கும். படத்தில் தலைவரின் ஆடை வடிவமைப்பு கண்கொள்ளா காட்சி.

    'இன்று போல என்றும் வாழ்க' பாடல் சாந்தம் தவழும் தலைவரின் முகம் ஞானிகளை நினைவு படுத்தும். 'ஆனந்தம் இன்று ஆரம்பம்' பாடலில் பழைய "வேட்டைக்காரன்" ஸ்டைலில் இளமையாக வந்து கலக்கும் போது அனைவருக்கும் உற்சாகம் பீரிடுவதை பார்க்க முடியும். படத்தின் ஆரம்ப காட்சி ஷூட்டிங் அந்த பாடல் காட்சிதான் என்று நினைக்கிறேன். சிவகுமாரின் வயதுக்கு மீறிய நடிப்பை ரசிக்க முடியவில்லை. அவரெல்லாம் தலைவரை அடிக்கும் போது அவரிடம் மெச்சூரிட்டி இல்லாததை. அந்தக்காட்சி வெளிப்படுத்துகிறது.

    நீராடும் அழகெல்லாம்' அருமையான மெலடி. 'ஒரு வாலுமில்லை பாடல்'
    அன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப எழுதிய பாடல் தலைவர் குழந்தையை வைத்து பாடியிருப்பார். கேமரா கோணங்கள் அந்த பாடலில் வெகு சிறப்பாக இருக்கும். 'வசந்தா உன் கையை அய்யா வசம்தா' போன்ற வசனங்கள் படத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
    'தரையிலே ஓடுமே லாரி' என்று கேட்டதும் நம்பியார் உடனே 'தரையிலும் ஓடும் நான் நினைத்தால் நாலு பேர் தலையிலும் ஓடும்' என்பது அவரது குணாதிசயத்தை ரசிக்கக்கூடிய காட்சி.

    தலைவர் அதிமுக ஆரம்பித்தவுடன் வெளிவந்த முதல் படம். அப்போதிருந்த சூழ்நிலையில் நல்ல அரசியல் விழிப்புணர்வு மிக்க படமாக இருந்திருந்தால் ரசிகர்களுக்கு ஊக்கம், உற்சாகம் அதிகமாக பெருகியிருக்கும். ஆனால் இது போன்ற குடும்ப கதைகள் வெளிவரவேண்டிய நேரம் அதுவல்ல. அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற படம் "நம்நாடு" மாதிரியான திரைக்காவியம்தான் என்றாலும் தலைவர் படம் என்பதால் சென்னையில் சாதா திரையரங்கில் வெளியாகி 10 லட்சத்தையும் தாண்டி வசூல் செய்தது பிரமிக்க தக்கது.

    சென்னையில் மொத்தம் 331 நாட்கள் ஓடி ரூ10,12,765.80 வசூலாகப் பெற்றது. நெல்லையில் 63 நாட்கள் ஓடி மொத்தம் 1,02,078.25 வசூலாக பெற்றது குறிப்பிடதக்கது. மதுரை தேவியில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை செய்த முதல் படம் இதய வீணைதான். மொத்தம் 112 நாட்கள் ஓடி ரூ 3,11691.20 வசூலாக பெற்று சாதித்த படம் இதய வீணை.

    திருச்சி பேலஸில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. கோவையில் இரண்டு திரையரங்குகளில் தொடர்ந்து திரையிட்டு 116.நாட்களும், சேலத்தில் மூன்று தியேட்டரில் வெளியாகி 133 நாட்களும் ஓடியது.
    தமிழகத்தில் மொத்தம் 31 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி முதல் ஆறு மாத காலத்துக்குள் 75 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை
    படைத்தது.

    சென்னை குளோபில் 105 நாட்களும் ஸ்ரீகிருஷ்ணா வில் 86 நாட்களும் மகாலட்சுமி மற்றும் ராஜகுமாரியில் 70 நாட்களும் ஓடி வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும் கோவையில் தலைவர் படத்துக்கே உரிய கெத்துடன் சிவாஜி படத்தின் வசூலை கால்பந்தாடி மகிழ்ந்ததை காணலாம். 'இதயவீணை'யின் 4 வார வசூலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கணேசனின் படங்கள்
    'தரிகிணதோம்' போட்டதை
    பார்க்கவும். (இணைப்பில்). தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 40
    நாட்கள் ஓடியது மேலும் சிறப்பு............ks.........

  4. #893
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லா நடிகர்களுமே தங்களுக்கு என்று ஒரு ஸ்டைல் வைத்திருப்பார்கள். திரையில் அதைக் காட்டுவார்கள். ஸ்டைல் என்ற பெயரில் சில நடிகர்களின் செயற்கையான போஸ்களும், வேண்டுமென்றே இழு....த்து, வெட்டி வெட்டி நடக்கும் நடையும் அஷ்டகோணல் முகங்களும் பார்க்கவே கண்றாவியாக இருக்கும். சில நடிகர்கள் திரையில் ஸ்டைல் என்ற பெயரில் ஏதாவது செய்வார்கள். நேரில், பொது இடங்களில் அவர்களின் நடவடிக்கைகள் மிகச் சாதாரணமாக இருக்கும். சீ.. சீ.. என்று ஆகிவிடும்.

    ஆனால், திரையில் மட்டுமல்ல, நேரிலும், படப்பிடிப்பு இல்லாமல் இயல்பாக இருக்கும்போதும் பொது இடங்களிலும் எப்போதுமே ஸ்டைலாக தோற்றமளிக்கும் ஒரே நடிகர், ஒரே தலைவர், ஒரே மனிதர் மக்கள் திலகம் மட்டுமே. தாயின் மடியில் படத்தில் பிரம்பை வளைத்தபடி அவர் ஸ்டைலாக நிற்கும் போஸ் பாருங்கள். பிரம்பை நேராக பிடித்திருந்தால் ஸ்டைலாக இருக்காது. அதற்காக பிரம்பை அவர் எப்படி வளைத்து பயன்படுத்தியிருக்கிறார் பாருங்கள். புருவத்தை லேசாக நெரித்தபடி நெஞ்சை அள்ளும் புன்னகை. அடுத்தபடத்தை கவனியுங்கள். வழக்கமாக பொது இடங்களில் தோன்றும் தோற்றம். அப்போதும் ஸ்டைலாக நாடியில் கைவத்தபடி கலக்கல் போஸ். திரையிலோ, நேரிலோ எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மாறாத, இளமை குன்றாத வசீகர சிரிப்பு அவருக்கு மட்டுமே சொந்தமானது.

    ஸ்டைலில் மக்கள் திலகத்துக்கு ஒரே ஒருவர்தான் போட்டி. அது புரட்சித் தலைவர்தான்..........sy...

  5. #894
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் உள்ளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    #நடந்த #நிகழ்ச்சி : .........

    தென்காசிக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வேர்க்கடலை தோண்டும் வேலைகள் நடைபெற்றது. அங்கே ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வந்தனர். நாள் ஒன்றுக்கு 3 ரூபாய் கூலிக்கு வேலை பார்த்து வந்தார்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கெல்லாம் தலைவராக கமால்தீன் என்ற ஒருவர் உண்டு !

    ஒரு நாள் கமால்தீன் எல்லாப் பெண்களையும் கூப்பிட்டு வரிசையாக நிறுத்தி அதாவது இந்த கிராமத்தில் 15 நாட்கள் தொடர்ந்து வேலை கொடுத்தது நாங்கள் தானே ?

    நாளை ஒரு நாள் வேலை இருக்கும். அதனால் நாளை செய்யும் வேலைக்கு சம்பளம் கிடையாது. இலவசமாகச் செய்ய வேண்டும் என்றார். அதற்கு பெண்கள் எல்லோரும் நாங்கள் இலவசமாக செய்கிறோம் ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு எம்.ஜி.ஆரை கூட்டி வந்து நேரில் காட்டி விடுங்கள் என்றார்கள். கமால்தீன் திகைத்துப் போனார். 3 ரூபாய் சம்பாதித்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் பெண்களின் உள்ளங்களில் கூட புரட்சி நடிகர் குடிபுகுந்து இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம்.

    நேரில் மக்கள் திலகத்தை காட்டிவிட்டால் எத்தனை நாளைக்கும் பட்டினி கிடக்க கூட தயாராக இருப்பார்கள் போல்.

    ( திரைச் செய்தி - 06- 05- 1967 )

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...vs...

  6. #895
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய அளவில் ...ஏன் உலக அளவில் ...கூட அதிகமான இரட்டை வேட வெற்றி படங்களை தந்தவர் நம் இதயதெய்வம் அவர்கள் மட்டுமே.

    1958 இல் மன்னன் மார்த்தாண்டன், போராளி வீராங்கன் ஆக நாடோடி மன்னனில்...

    1960 இல் தேசிங்கு மற்றும் தாவூத்கான் ஆக ராஜா தேசிங்கில்.

    1961 இல் அறிவழகன் மற்றும் அவர் தந்தை ஆக அரசிளங் குமரியில்.

    1963 இல் விண்வெளி கோமாளி மற்றும் போஜன் ஆக கலை அரிசியில்..

    1965 இல் ராமு மற்றும் இளங்கோ ஆக எங்க வீட்டு பிள்ளையில்.

    1965 இல் மனோகர் வஜ்ரவேல் ஆக நம் ஆசைமுகத்தில்.

    1968 இல் மக்கள் திலகம்...மற்றும் சரவணன் ஆக தேர்திருவிழாவில்.

    1968 இல் ஆனந்த் மற்றும் சேகர் ஆக நாம் குடியிருந்தகோவிலில்.

    1969 இல் வீர வேங்கையன் மற்றும் அவர் தந்தை ஆக அடிமைபெண்ணில்.

    1970 இல் வேலன் மற்றும் ரகு ஆக மாட்டுக்கார வேலனில்.

    1970 இல் மக்கள் திலகம் மற்றும் தங்கம் ஆக எங்கள் தங்கத்தில்

    1971 இல் மணிவண்ணன் மற்றும் கரிகாலன் ஆக நீரும் நெருப்பில்..

    1973 இல் சரித்திர வெற்றிபடம் உ.சு.வா வில் முருகன் மற்றும் அவர் தம்பி ராஜு ஆக.

    1973 இல் பொன்னையா மற்றும் முத்தையா ஆக பட்டிக்காட்டு பொன்னையாவில்..

    1974 இல் மாணிக்கம் குமார் ஆக நேற்று இன்று நாளையில்..
    ரத்தினம் என்றும் உண்டு.

    1974 இல் ராமு மற்றும் உஸ்தாத் அப்துல் ரகுமான் ஆக சிரித்து வாழ வேண்டும் அதில்.

    1975 இல் சுந்தரம் மற்றும் ரஞ்சித் ஆக நினைத்ததை முடித்ததில்..

    1975 இல் மீண்டும் சங்கர் விஜயகுமார் ஆக நாளை நமதே இல்.

    1976 இல் செல்வம் மற்றும் ராஜா ஆக ஊருக்கு உழைத்தத்தில்.

    இன்னும் ஒப்பந்தம் செய்து வெளிவராத படங்கள் தவிர 19 இரட்டை வேட படங்களில் தனி முத்திரை பதித்த ஒரே நடிகர் நம் தலைவர் மட்டுமே ஆவார்.

    வாழ்க அவர் புகழ்.
    உங்களில் ஒருவன் நன்றி....தொடரும்.

    முடிந்தால் மோதி பாருங்கள்... இருந்தால் ஆமோதிக்கிறோம்.

    தலைவர் ஒரு பேட்டியில் சொல்கிறார்.

    உங்களுக்கு பிடித்த படம் உங்கள் இரட்டை வேடங்களில் எந்த படம் என்று ..

    அதற்கு அவர் சொன்ன பதில்..குடியிருந்த கோயில் என்று............Mn...

  7. #896
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "சபாஷ் மாப்பிளே" 1961 ஜீலை 14ம் தேதி வெளியான முழு நீள காமெடி படம். மக்கள் திலகம் காமெடி முத்திரையில் நடித்த ஒரே படம்.
    மக்கள் திலகத்திடமிருந்து இப்படி ஒரு காமெடி படத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் அந்த காலகட்டத்தில் இந்த படத்தை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் படம் வெளிவரும் நேரத்தில் பல தியேட்டர் காரர்கள் போட்டி போட்டார்கள் படத்தை எடுப்பதற்கு. அந்த அளவுக்கு படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

    மும்பையில் படப்பிடிப்பு நடத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். மும்பையை பார்க்கும் போது ஏதோ வெளிநாட்டை பார்ப்பது போல மக்கள் ரசித்தார்கள். ரசிகர்களிடம். முன்பே இது முழுநீள காமெடி படம், என்ற விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்களானு தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த படம் "சபாஷ் மாப்பிளே"

    பாடல்கள் k v மகாதேவன் இசையில் அத்தனையும் ஜொலிக்கிறது. இருப்பினும் சீர்காழி கோவிந்தராஜனை சோகப் பாடலுக்கு மட்டும் பயன்படுத்தி இருக்கலாம். சூலமங்கலத்தின் குரல் தேனாக இனிக்கிறது.. 'மாப்பிள்ளே மாப்பிள்ளே வாராரு', 'ஜிகு ஜிகு உடையிலே', 'யாருக்கு யார் சொந்தம் என்பது' போன்ற பாடல்கள் காதுக்கு இனிமை சேர்க்கின்றது., 'வெள்ளிப்பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்' இந்த பாடல் மட்டும் ராகவன் பாடியிருப்பார். 'தினம் சிரிப்பவர் சில பேர் அழுபவர் பல பேர்', 'முத்து போலே மஞ்சள் கொத்து போலே" போன்ற முத்தான பாடல்கள் நிறைந்த பொழுது போக்கு படம் "சபாஷ் மாப்பிளே".

    எம்ஜிஆருக்கு ஜோடி மாலினி. படத்தின் டைரக்டர் ராகவனின் மனைவி என்று நினைக்கிறேன்..
    ஏற்கனவே "சபாஷ் மீனா"விலும் இவர்தான் கதாநாயகி. இதைத்தவிர "அழகுநிலா" என்ற படத்திலும் நடித்த ஞாபகம். எம்ஜிஆருக்குள் இப்படி ஒரு காமெடி சென்ஸா என்று அதிசயிக்க வைத்த படம். வேலை தேடி மும்பை சென்று பணத்தை பறிகொடுத்து
    பின் சினிமாவில் நடித்து என்று சோகமயமாக சில காட்சிகள் செல்வது நமக்கு கொஞ்சம் தளர்வாக இருந்தாலும் போகப்போக காமெடியின் உச்ச கட்டத்தில் கொண்டு விடுவார்கள்.

    ரசிகர்கள் எம்ஜிஆரை காமெடி ரோலில் பார்க்க விரும்பவில்லை போலும். ஆனாலும் ஓரளவு சுமாரான வெற்றியை பதிவு செய்தது. மறு வெளியீட்டில் நிகரற்ற வெற்றியை பெற்றது. முதல் வெளியீட்டில் நான் பார்க்கவில்லை. ஆனால் பலமுறை தூத்துக்குடி ஜோசப்பில் மறுவெளியீட்டில் திரையிடும் போதுதான் பார்த்தேன். ஆனால் எப்போதுமே படம் எங்கும் ஓடுவதால் புதிய காப்பி திரையிடப்படவில்லை. மிகவும் 'கட்' ஆன பிரிண்டையே அடிக்கடி திரையிடுவார்கள்.

    விநியோகஸ்தர்கள், எப்போதுமே இரண்டு காப்பி வைத்திருப்பார்கள். ஒன்று டூரிங் தியேட்டரில் ஓட்டுவதற்கு மற்றொன்று சிட்டியில் திரையிடுவதற்கு. நல்ல பிரிண்டை தலைகீழாக நின்றாலும் டூரிங் தியேட்டருக்கு கொடுக்க மாட்டார்கள். நாம் விநியோகஸ்தரை அணுகி பிரிண்ட் கேட்டால் எந்த ஊர்? என்று கேட்டு புரஜெக்டரின் தன்மை அறிந்து கொடுப்பார்கள்.

    சில ஊரிலிருந்து வருபவர்களிடம் என்னப்பா பிரிண்டை இப்படி கொத்தி குதறி வைத்திருக்கிறீர்கள். அதை ஒட்டி எடுப்பதற்குள் 20 நிமிட காட்சி கட் ஆகிவிட்டதப்பா அதற்கு அபராதம் வசூலிக்க போகிறோம் என்று மிரட்டுவார்கள். அடுத்த தடவை புரஜெக்டரை மாத்தலைன்னா இந்த பக்கம் வந்திராதீங்க. வந்தாலும். எம்ஜிஆர் படம் தர மாட்டேன். அங்க பார் ஓடாத எத்தனையோ சிவாஜி படங்களும் மற்ற படங்களும் இருக்கு. எதையாவது எடுத்து போய் தொலை என்று சொல்லி விரட்டி அடிப்பதை பார்த்திருக்கிறேன்.

    சில படங்களை சனியன் இங்கிருந்து போய் தொலைய மாட்டேங்குது. அடிக்கடி இதை நாமதான் ஓட்ட வேண்டியிருக்குது, தியேட்டரில் எங்க ஓடுது என்று அலுத்துக்கொள்வதையும் பார்த்திருக்கேன். சிவாஜி படம் போனால் ரிட்டர்ன் டிக்கெட்டோடத்தான் போகும். இரண்டு நாளில் திரும்பவும் பெட்டிக்குள் வந்து அடைந்து விடும். ஆனால் "சபாஷ் மாப்பிளே" எப்போதும் எங்காவது ஓடிக் கொண்டே இருக்கும். சென்னையில் மார்ச் 23 வெளியீடான "திருடாதே" ஓடிய அரங்குகளான பிளாசா, பாரத், மகாலட்சுமியில் ஜீலை 14 முதல் வெளியாகி சென்னையில் 48 நாட்களும் மற்ற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்களும் ஓடி சராசரி வெற்றியை பதிவு செய்தது.

    "சபாஷ் மாப்பிளே" ஓடி முடிந்ததும் அதே அரங்குகளில் "நல்லவன் வாழ்வான்" ஆகஸ்ட் 31 முதல் திரையிடப்பட்டது. "நல்லவன் வாழ்வான்" 68 நாட்கள் ஓடியதை தொடர்ந்து நவ 7 ல் வெளியான "தாய் சொல்லை தட்டாதே" அதே திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார்கள். இப்படி ஒரே குரூப் திரையரங்குகளில் தொடர்ந்து தலைவரின் படங்களே வரிசையாக வெளிவந்து ஆண்டு இறுதி வரை ஓடியது ஒரு அதிசயமே..........ks.........

  8. #897
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல்...தன் அன்றாட வாழ்வில் என்ன செய்தாரோ .. அதைச் சொல்ல ஒரு படம் -

    "#நீதிக்குத் #தலைவணங்கு"

    இந்த தலைப்பு மக்களை எந்த அளவு கவர்ந்தது என்பதற்கு ஒரு சிறு நிகழ்ச்சி ...

    பாரிமுனையில் பழம் விற்கும் ஒரு தாய், புரட்சித்தலைவர் நினைவாற்றல் இழந்து படுத்திருக்கும் போது, அவர் துதித்து வந்த தாய் மூகாம்பிகைக்கு உயர்நீதிமன்றத்தின் சுவரை ஒட்டி ஒரு சிறு கோவில் அமைத்து, அந்த தாயும், சக வியாபாரிகளும், தலைவர் நலம் பெற வணங்கினர்.

    தினசரி பூஜை புனஸ்காரங்களுக்கான செலவுகளுக்கு அந்த தாய் மிகவும் கஷ்டப்பட்டார்...அதைப்பற்றி கேட்டதற்கு..."எனக்கு ஒரு கஷ்டமும் இல்லப்பா, நாங்க எங்க உசுரான தலைவருக்கு, எங்க திருப்திக்காக தான் செய்யறோம்...அவர் கேக்கல...

    இதில எங்களுக்கு கஷ்டம் என்னன்னா இக்கோயிலை இடிக்கச் சொல்றாங்க...நாங்க தினம் தினம் போராடறோம்..என்று கண்ணீர் மல்கினார்.

    அது சரி கோயில் கட்ட இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தீங்க..? எனக் கேட்டதற்கு..

    அந்த தாய் கூறியது ..."#என் #தலைவன் .. #நீதிக்குத் #தலைவணங்கினாருப்பா...#மத்தவங்க #போல "#நீதிக்குதண்டனை" #கொடுக்கலை...( 'நீ.தண்டனை.. படம் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதியது)

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல...
    #பொன்மனச்செம்மல் #புரட்சித்தலைவரின் #திரைப்படங்களின் "#தலைப்புகள்" #கூட #மக்களின் #மனதில் #நற்பண்புகளை #விதைத்துவிடும்............bsm...

  9. #898
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி மாநகரில் திராவிடத்தின் தலைமகன் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்தால் அழியாத திரைக்காவியங்கள்* மகத்தான முறையில் ஓடி வரலாறு படைத்துள்ளது...

    நகரில் அதிக அளவில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த திரைப்படங்கள் இன்று வரை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒருவருக்கு மட்டுமே அதிகமாகும்.

    நகரில் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனை படைத்த திரைப்படங்கள் யாவும் புரட்சித் தலைவருக்கு மட்டுமே அதிகமாகும்.

    நகரில் வெள்ளி விழாவை கடந்து 200 நாட்களுக்கு மேல் சாதனை படைத்த காவியங்கள் இரண்டு...
    எங்கவீட்டுப்பிள்ளை*
    236 நாட்கள்*
    உலகம் சுற்றும் வாலிபன்*
    203 நாட்கள்

    நகரில் மக்கள் திலகத்தின் அதிக கருப்பு-வெள்ளை திரைப்படங் களும், வண்ணப் படங்களும் அதிக அளவில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

    மக்கள் திலகத்தின் காவியங்கள் தொடர்ந்து ஓடி சாதனைகளை படைத்து முதலிடம் வகிக்கிறது.

    திரை உலக சக்கரவர்த்தி மக்கள் திலகத்தின் 43 திரைப்படங்கள் ஒரே திரையரங்கில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த அதிசயம் எந்த நடிகருக்கும் கிடையாது.

    12வாரங்களுக்கு மேல் ஓடி* தொடர் வெளியீட்டில் 17 காவியங்கள் 100 நாட்களை கொண்டாடி சாதனை படைத்து உள்ளது-

    1977 வரை நகரில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களே அதிக அளவில் வசூலில் முன்னணி படைத்துள்ளது.*

    100 நாட்களை வெற்றிக்கொண்ட திரைக்காவியங்கள் பட்டியல்.....
    தொடர்கிறது.............ur...

  10. #899
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி மாநகரில் 100 நாட்களை கடந்த ஓடிய மக்கள் திலகத்தின் முதல் திரைப்படப் பட்டியல்....

    1947 ராஜகுமாரி*
    வெலிங்டன் 147 நாட்கள்*

    1948 மோகினி*
    கெயீட்டி 105 நாட்கள்

    1950 மருத நாட்டு இளவரசி
    *கெயீட்டி 105 நாட்கள்

    1950 மந்திரிகுமாரி*
    ஸ்டார் 140 நாட்கள்*

    1951 மர்மயோகி*
    வெலிங்டன் 126 நாட்கள்*

    1951 சர்வாதிகாரி**
    ஸ்டார் 117 நாட்கள்

    1952 அந்தமான் கைதி*
    வெலிங்டன் 105 நாட்கள்*

    1952 என் தங்கை*
    ஜூபிடர் 147 நாட்கள்*

    1953 ஜெனோவா*
    ராஜா 105 நாட்கள்*

    1954 மலைக்கள்ளன்*
    வெலிங்டன் 133 நாட்கள்**

    1955 குலேபகாவலி*
    பிரபாத் 166 நாட்கள்*

    1956 அலிபாபாவும் 40 திருடர்களும்
    வெலிங்டன்147 நாட்கள்*

    1956 மதுரைவீரன்*
    ஜூபிடர் 169 நாட்கள்*

    1956 தாய்க்குப்பின் தாரம்*
    ராக்ஸி 147 நாட்கள்

    1957 சக்கரவர்த்தி திருமகள்*
    கெயீட்டி 126 நாட்கள்*

    1958 நாடோடி மன்னன்*
    ராக்ஸி 161 நாட்கள்*

    1961 திருடாதே*
    ராக்ஸி 126 நாட்கள்*

    1961 தாய் சொல்லைத்தட்டாதே**
    ஜுபிடர் 126 நாட்கள்*

    1962 தாயைக்காத்த தனயன்*
    பேலஸ் 140 நாட்கள்

    1964 பணக்கார குடும்பம்*
    பேலஸ் 115 நாட்கள்

    1965 எங்க வீட்டுப்பிள்ளை
    ஜூபிடர்* 236 நாட்கள்**

    1966 அன்பே வா*
    ராஜா 126 நாள்*

    1967 காவல்காரன்*
    ஜுபிடர் 126 நாள்.*

    1968 ரகசிய போலிஸ் 115
    ஜூபிடர் 110 நாட்கள்

    1968 குடியிருந்த கோயில்
    ராஜா 126 நாள்

    1968 ஒளி விளக்கு
    ராஜா 116 நாட்கள்

    1969 அடிமைப்பெண்
    ஜூபிடர் 133 நாட்கள்

    1969 நம்நாடு
    வெலிங்டன் 119 நாட்கள்
    +++++++++++++++++++++++
    28 படங்கள் 100 நாட்களை கடந்துள்ள முதல் பட்டியல்...

    அடுத்து வசூலுடன்*...
    பட்டியல் தொடரும்.......ur...

  11. #900
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1956 :.மதுரை வீரன்
    ஜூபிடர் :169 நாள்
    வசூல்: 2,46,381.17

    1958 : நாடோடி மன்னன்
    ராக்ஸி :.161 நாட்கள்
    வசூல் : 2,69,706. 42

    1965 : எங்கவீட்டுப்பிள்ளை
    ஜூபிடர் : 236 நாள்
    வசூல் : 3,36,407.50

    1966: அன்பே வா
    ராஜா : 126 நாள்
    வசூல்: 2,45,781.05

    1967 : காவல் காரன்
    ஜூபிடர் : 126 நாள்
    வசூல் : 2,20,137.50

    1968 ரகசிய போலிஸ்115
    ஜூபிடர் 110 நாள்
    வசூல் : 2,15,306.77

    1968 :குடியிருந்த கோயில்
    ராஜா 126 நாள்
    வசூல் : 2,68,922.30

    1968 : ஒளி விளக்கு
    ராஜா :116 நாள்
    வசூல் : 2, 41,621.65

    1969 : அடிமைப்பெண்
    ஜூபிடர் : 133 நாள்
    வசூல் :.3,14,323.24

    1969 : நம்நாடு
    வெலிங்டன் : 119 நாள்
    வசூல் : 2,63,805.38
    ++++++++++++++++++

    வசூல் விபரங்கள் தொடரும்.......ur...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •