Page 8 of 210 FirstFirst ... 6789101858108 ... LastLast
Results 71 to 80 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #71
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR, dominated like no other, the films and politics of India's Tamil Nadu state. A charismatic actor and philanthropist, he commanded the idolatrous adulation of millions of fans and tamils all over the world became Tamil Nadu's chief minister. ..more than 10 years continiously...



    There probably will never be a man that held the entire state of Tamil Nadu under his control like Puratchi Thalaivar M.G.R did. His films introduced the genre of entertainment into the Tamil Industry and thousands to millions flocked to see the man who had an naturally spell-binding aura on screen. From his dialogue delivery to his solo singing moments, he was an enigma at capturing hearts. The words devotees and fansclub were birthed for him. The unrivalled craze to see the man didn't stop inside his state. His popularity outside his home, grew larger than one could ever dream of ever. And he soon became a force that could not be touched. But his magic didn't stop in cinema. After his departure from the film world, his stint in Politics as the Chief Minister of Tamil Nadu will forever be the imprinted as the backbone of Tamil politics forever. It is fair to say that M.G.R had his fair share of negative influences, but the huge positive impact he had on society will always leave a mark on Tamil Nadu forever.



    43 years ...and so on MGR RULING THE TAMIL FILM.

    Even after his retirment from cinefield 1977 till today 2020 most of his movies running with packed houses in entire south india with box office .No other actor in the world have charisma l

    Audience: Almost all commercial cinema lovers were fans of his films.......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #72
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவருக்கும், ஆந்திர என்.டி.ராமாராவ் அவர்களுக்கும் உள்ள நல்ல நட்பு அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.

    ஒரு முறை சென்னைக்கு வந்த என்.டி.ஆர்...தலைவரை பார்க்க வந்த போது நம்மவர் படப்பிடிப்பில் இருக்க அங்கே வந்த என்.டி.ஆர்...முகத்தில் மூக்கில் சிவந்து காயம் போல தெரிய பதறி தலைவர் என்ன அது கேட்க.

    போன வாரம் ஷெட்டி என்ற ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் உடன் படப்பிடிப்பில் ஒரு சண்டை காட்சியின் போது அவர் மூக்கில் குத்தி விட்டார்.

    மூக்கு உடைந்து சரியான காயம்...அடி பட்டது கூட பரவாயில்லை அண்ணே அவர் அதன் சண்டை காட்சிகளில் இது எல்லாம் சகஜம் என்று அசால்டா சொல்லி விட்டார் என்று வருந்த.

    கொஞ்ச நாட்கள் கழித்து ஷோலே, தீவார் போன்ற பல இந்தி படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர் ஷெட்டி தலைவருடன் நடிக்க ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் போன்ற படங்களில் புக் செய்ய பட்டார்.

    தலைவருக்கு என்.டி.ஆர் அனுபவம் நினைவுக்கு வர ஷெட்டியின் உடல் பயிற்சி விவரங்கள் சேகரித்து அவர் 350 கிலோ வரை வெயிட் எடுப்பார் என்பதை தெரிந்து கொண்டு.

    தலைவரும் ஒரு வாரம் 350 தாண்டி 375 கிலோ வரை எடைகள் தூக்கி தன்னை தயார் செய்து கொண்டார். ஊருக்கு உழைப்பவன் படத்துக்கு அப்புறம் வந்த நவரத்தினம் படத்தில் ஹிந்தி நடிகை ஜரீனா வகாப் அவர்களுடன் ஒரு பாடல் காட்சி முடிந்து வரும் சண்டை காட்சியில் ஒரு கையில் ஈட்டி மறு கையில் கேடயம் கொண்டு ஷெட்டி சண்டை காட்சியில் தலைவர் லாவகம் ஆக நகர்ந்து தன் வலது கை கொண்டு ஷெட்டி மூக்கில் ஒரு குத்து விட அவர் மூக்குவுடைந்து ரத்தம் சிந்த ஆரம்பித்தது.

    படத்தில் அந்த சண்டை காட்சி அரை குறையாக போய்விடும்...நீக்கள் அடுத்த முறை படம் பார்த்தால் சரி பார்த்து கொள்ளவும்.

    உடனே தலைவர் அடடா சண்டை காட்சிகளில் இது எல்லாம் சகஜம் என்று சொல்லி அவர் மூக்கை துடைத்து மருத்துவ செலவுகளை அவரே ஏற்று கொண்டு.

    அதன் பின் இருநாட்கள் கழித்து ஷெட்டியை தன் வீட்டுக்கு கூட்டி கொண்டு போய் விருந்து கொடுத்து தன் உடற்பயிற்சி கூடத்தை சுற்றி காட்டி ஏராளமான பரிசு பொருட்களையும் ஒரு கவரில் ஒரு பெரிய தொகையை கொடுத்து.

    மும்பை விமானத்துக்கு அவரை ஒரு ஆள் அனுப்பி வழி அனுப்பி வைக்க...

    தன் மூக்கை தடவி கொண்டே என்ன மனிதர் இவர் என்று யோசித்து கொண்டே விமானத்தில் பறந்தார் ஷெட்டி.

    வாழ்க எம்ஜியார் புகழ்.

    நன்றி...தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி.....

    விரைவில் ....... தலைவர் காலத்தில் போடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் நடந்தவை பற்றி......... Thanks.........

  4. #73
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே....
    வணக்கம்.. வணக்கம்.. வணக்கம்...!!!

    தமிழ்நாட்டில்.! கல்வி அறிவு பெற்றவர்கள் உயர்வதற்கு காரணம் என்ன என்று ...

    ஐ.நா. சபை ஆய்வு செய்தது.
    அந்த ஆய்வில் அவர்களுக்கு கிடைத்த தகவலை உலகத்திற்கு தெரிவித்தார்கள்.

    அது யாதெனில் ....
    தமிழ்நாட்டில் கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகமாக இருபதற்கு மிக முக்கிய காரணம்.

    "#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர்_அவர்கள்."

    கொண்டுவந்த "#சத்துணவுத்_திட்டமே " முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரியவந்தது என்று... ஐ.நா.சபை கூறியது.

    இந்த தகவலை நான் கூறவில்லை.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளராக உள்ள, கே. பாலகிருஷ்ணன் அவர்கள்.. கூறினார்கள்.

    இன்றும்.. CPM... மாநில செயலாளராக,
    கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தான் உள்ளார்.

    உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    வாழிய வாழிய வாழியவே....!!!
    புரட்சித்தலைவர் நாமம் வாழியவே ...!!

    ������������������������������......... Thanks...

  5. #74
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தீய_சக்தியின் தூண்டுதலால் தாக்குதல்

    1972-ம் ஆண்டில், பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்வதற்காகச் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குச் சென்றார். அவரைப் போலவே, பாராளுமன்றக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. உறுப்பினர்கள் சிலரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள், நாஞ்சிலாரைக் கண்டதும் பதட்டமடைந்தனர்.

    ”டேய் துரோகி!” என்று கூச்சலிட்டுக் கொண்டே நாஞ்சிலார் மீது பாய்ந்து அவரைத் தாக்கினார்கள்; இதய நோயாளியான அவருடைய நெஞ்சில் சரமாரியாக குத்தினார்கள். அங்கிருந்து பதறி ஓடிய நாஞ்சிலார், விமான நிலைய நிர்வாகியின் அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டார். அங்கிருந்து தொலைபேசியின் மூலம் புரட்சித்தலைவருடன் தொடர்புகொண்டு தம்மைக் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்.

    புரட்சித்தலைவர் மனோகரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ”கவலைப்படாதீர்கள், இன்னும் பத்தே நிமிடத்தில் நம் ஆட்கள் பறந்து வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள்!” என்றும் கூறினார். புரட்சித்தலைவர் தொலைப்பேசியைக் கீழே வைத்துவிட்டு சத்யா ஸ்டுடியோ பத்மநாபனிடம் நாஞ்சில் மனோகரனின் நிலைமையைச் சொல்லி, ”உடனே தேவையான ஆள்களோடு போய் நாஞ்சிலாரைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்.

    அடுத்த நிமிடம் பத்மநாபன் பத்துப் பேரோடு ஒரு காரில் ஏறி மீனம்பாக்கத்தை நோக்கிப் பறந்து சென்றார். புரட்சித்தலைவருக்கோ அவர் நண்பர்களுக்கோ ஓர் ஆபத்து என்றால், தம்மைப் பலி கொடுத்தாவது காப்பாற்றத் துடிக்கின்ற அற்புதமான தொண்டர், பத்மநாபன்.

    பத்மநாபன் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் புயல்போல் புகுந்து, தி.மு.க. எம்.பி.க்களின் முற்றுகையைத் தகர்த்தெறிந்தார்; நாஞ்சிலாரை மீட்டுக்கொண்டு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் புரட்சித்தலைவரிடம் ஒப்படைத்தார். இப்படி இன்னும் எத்தனையோ கொலை வெறித்தாக்குதல்களுக்கு அ.தி.மு.க.வினர், ஆளாகியுள்ளனர்.

    அதே நாஞ்சில் மனோகரன் நன்றி மறந்து 1980–ம் ஆண்டு மறுபடியும் தி.மு.க வில் தன்னை இணைத்துக் கொண்டார்........ Thanks...

  6. #75
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்த காயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’ என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக் காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்து வாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக் கூறிவிட்டார்.எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத் தாய்க்கு. எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து தன் மகனின் நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார்.

    அந்த தாயின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே புரட்சித்தலைவர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார்.சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின் கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் செலவிலேயே அவருக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் புரட்சித்தலைவர் உதவி செய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார்.

    நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர். அதற்கு புரட்சித்தலைவர் அளித்த பதில் இது...

    ‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத் தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் சகோதரனாக நினைத்துத்தான் உதவி செய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன்.வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும். அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம் .."

    என்ன ஒரு பணிவு!
    என்ன ஒரு தன்னடக்கம்!

    33 வருடங்களாக அவரது பூவுடல் இப் பூமியில் இல்லாவிடினும்
    நமது மனங்களில்
    MGR என்றும் வாழ்வார்!......... Thanks...

  7. #76
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆர் அழுத ரகசியம்!"...
    " நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"...!
    🍁 அத்தியாயம் : 5🍁

    கம்பெனியில் இருந்த தனது நலன் விரும்பிகள் வெளியேறிவிட்ட கவலையில் நாடகங்களில் பங்கெடுத்துவந்த ராம்சந்தருக்கு இன்னொரு பிரச்னை உருவானது. ஆம் பி.யு.சின்னப்பாவுக்கு வந்த அதே மகரக்கட்டு பிரச்னை. பாடி நடிக்கும் குரல்வன்மை போனதால் ஒரேநாளில் எல்லாமே தலைகீழானது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல் சின்னப்பாவிடமிருந்து ராம்சந்தருக்கு வந்த ராஜபார்ட் வேடங்கள் இப்போது இன்னொருவருக்கு அளிக்கப்பட்டது.

    மகரக்கட்டு என்பது ஆண்களுக்கு பருவ வயதின் துவக்கத்தில் குரல்வளம் கடினமாக மாறிவிடும் தன்மை. சிறுவர்கள் பெரியவர்களாகிவிட்டதற்கான அடையாளம் அது. இயல்பான மனிதர்களுக்கு அதில் சிக்கலில்லை. தொழில்முறை நாடக நடிகர்களுக்கு அது வனவாசம் போன்ற காலகட்டம். எந்த பாத்திரத்திற்கும் அந்த குரல் பொருந்திவராது. இக்காலகட்டத்தில் நடிகர்கள் பெரும்பாலும் வேறு தொழிலுக்கோ அல்லது நாடக குழுவிலேயே வேறு பிரிவுக்கோ மாறிவிடுவர். மகரக்கட்டினால் பாட வாய்ப்பில்லாத சில பாத்திரங்கள் மட்டுமே ராம்சந்தருக்கு ஒதுக்கப்பட்டன. சக்கரபாணி தன் தம்பியின் நிலை கண்டு வருந்தினார்.

    'தொடர்ந்து கம்பெனியில் தங்கி தம் திறமையை மழுங்கடித்துவிடக்கூடாது. அதேசமயம் கம்பெனியை விட்டு முற்றாக வெளியேறிவிடுவதும் புத்திசாலித்தனம் இல்லை' என சிந்தித்த சகோதரர்கள், குரல் வன்மை திரும்ப வரும்வரை முதலாளிக்கு தெரியாமல் வேறு கம்பெனியில் சேர்ந்து நடிப்பது என முடிவெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தெரிந்த நண்பர்கள்தான். நாடக குழுக்களின் அறிமுகம் எதுவும் கிடையாது. கம்பெனியின் பழைய வாத்தியாரான எம்.கந்தசாமி முதலியார், மொய்தீன் என்ற நாடக ஒப்பந்ததாரருடன் இணைந்து சிங்கப்பூரில் நாடகம் போட்டுவந்த தகவலை அப்போதுதான் சக்கரபாணியின் நண்பர் ஒருவர் சொன்னார்.


    சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. நம் மீது அன்பு கொண்ட வாத்தியார் எப்படியும் நமக்கு ஒரு வழிகாட்டுவார் என்ற எண்ணத்துடன் அவரை நேரில் சந்தித்தனர். 'பசங்களா எப்படிடா இருக்கீங்க...' என நலம் விசாரித்த கையோடு சகோதரர்களின் பிரச்னைக்கும் தீர்வு சொன்னார் எம்.கே.

    மொய்தீன் குழுவில் சகோதரர்களை சிங்கப்புர் அழைத்துச்செல்வதென முடிவெடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் 12 நாட்கள் நாடக ஒத்திகை நடந்தது. ஆனால் அன்றைய அரசியல் சூழலால் அந்த பயணம் ரத்தானது. அதற்கு பதிலாக பர்மா பயணமாக முடிவானது.

    பர்மா செல்லும் நாள் வந்தது. அந்நாளில் நாடக குழுக்களில் நடிப்பவர்கள் அவ்வப்போது நாடக குழுக்களை மாற்றிக்கொள்வது சகஜம் என்றாலும் தமக்கு ஆதரவளித்த கம்பெனிக்கு துரோகம் செய்துவிட்டு வேறு குழுவுக்கு வந்தது சகோதரர்களுக்கு உறுத்தியது. அப்படி தம்முடன் பழைய குழுவில் இருந்த யாரேனும் நம்முடன் வந்து நம்மை அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற அச்சம் சக்கரபாணியை விட ராம்சந்தருக்கு அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் உண்டு.

    பாய்ஸ் கம்பெனியில் முதலாளி சச்சிதானந்தம் கோபக்காரர்தான். ஆனால் பேச்சோடு அவர் கோபம் நின்றுவிடும். ஆனால் வாத்தியார் காளி.என்.ரத்தினம் அப்படியல்ல; கோபம் வந்தால் தாறுமாறாக அடித்துவிடுவார். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த புதிதில் ராம்சந்தர் நல்லதங்காள் நாடகத்தில் நடித்தார். அதில் வறுமையினால் தன் குழந்தைகளை ஒவ்வொருவராக கிணற்றில் வீசிவிடுவாள் நல்லதங்காள். கடைசி குழந்தை ராம்சந்தர். கடைசி குழந்தையை வீசும் முன் அந்த குழந்தை அம்மாவிடம் தன்னை கொன்றுவிடாதே என்றும் தான் குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் அழுதபடி கூறவேண்டும்.

    ஆனால் ராம்சந்தருக்கு அப்போதிலிருந்தே அழுகை மட்டும் கொஞ்சம் சிக்கல் தரும் விஷயம். ஒத்திகையின்போதே டயலாக் பேசுவார். அழுகை வராது. அழவில்லையென்றால் அந்த காட்சி உருக்கமாக இருக்காது. இதற்காக காளி.என்.ரத்தினம் ஓர் உபாயம் செய்தார். முதல்நாள் நாடக அரங்கேற்றத்தின்போது அந்த காட்சியில் ராம்சந்தரை வசனம் பேசியபடி நாடக மேடையின் ஓரமாக வரச்சொல்லியிருந்தார் ரத்தினம்.

    வாத்தியார் கூப்பிடுகிறாரே என சிறுவன் ராம்சந்தர் வசனம் பேசியபடி மேடையின் ஓரம் வர, திடடமிட்டபடி அங்கு மறைந்திருந்த ரத்தினம் ராம்சந்தரின் தலையில் ஒங்கி ஒரு குட்டு வைத்தார். உயிர் போகும் வலி. ராம்சந்தர் நிஜமாகவே அழுதபடி வசனம் பேச, அதை சிறுவனின் யதார்த்தமான நடிப்பு என நம்பி, “அடடா, என்னமா நடிக்கிறான்யா பையன்! ” என அரங்கில் பலத்த கைதட்டல். வலியினால் நாடகம் முடிந்தபின்னும் அழுதுகொண்டிருந்தான் ராம்சந்தர். இப்படி நாடகத்தின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர் காளி.என். ரத்தினம்.

    கப்பல் பயணத்தில் இந்த சம்பவம்தான் திரும்ப திரும்ப நினைவில் வந்து ராம்சந்தரை பயமுறுத்திக்கொண்டிருந்தது.
    யாராவது பார்த்துவிட்டு முதலாளியிடம் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்துடனேயே பர்மா பயணமானார்கள் சகோதரர்கள். பர்மாவில் நாடகம் துவங்கியது. ஒருநாள் நாடகத்தின் க்ளைமேக்ஸ் காட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது

    தொடரும்...
    Posted : M.G.Nagarajan
    30 April 2020 6:31 PM
    Thanks for :
    Published : Naveenan

    விகடன் வண்ணத்திரை
    யாழ் இணையம்......... Thanks...

  8. #77
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பெருந்தன்மைக்கு ஒரு எம்.ஜி.ஆர்!
    மனம் திறந்த இயக்குநர் ஸ்ரீதர்
    https://www.thaaii.com/?p=36162

    ‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் 1992 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வாழ்வை கல்கி வார இதழில் தொடராக எழுதியவர் பத்திரிகையாளரான எஸ்.சந்திர மௌலி.

    நன்றியுடன் அதிலிருந்து ஒரு பகுதி:

    “இந்தி நடிகர் ராஜேந்திரகுமார் என் நெருங்கிய நண்பர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சென்னைக்கு வந்தால், என் வீட்டில் ஒரு வேளையாவது உணவருந்தி, சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தான் போவார்.

    இம்முறை சென்னை வந்திருந்தபோது, என் பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்த அவர், சித்ராலயாவின் நிலைமை பற்றி விசாரித்தார்.

    “பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளிக்க, ஹிந்தி ஹீரோ-72 பெற்ற வெற்றி உதவியது என்றாலும், முழுவதுமாகத் தீரவில்லை’’ என்றேன்.

    “தமிழில் ‘ஹீரோ 72’ என்ன ஆயிற்று?’’

    “சிவாஜியும், தம்பி ஷண்முகமும் எவ்வளவோ முயன்றும், எனக்குக் கால்ஷீட் அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுக்க முடியவில்லை. படம் தொங்கலில் தான் இருக்கிறது’’

    சிரத்தையுடன் கேட்டுக் கொண்ட ராஜேந்திர குமார், சற்று நேரம் மௌனமாக யோசித்துவிட்டுத் திடீரென்று, “ஏன் ஸ்ரீதர், நீங்க ஏன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்கக்கூடாது?’’ என்று கேட்டார்.

    எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

    என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், நான் தயங்கித் தடுமாற, அவரே தொடர்ந்து “எனக்கென்னமோ உங்க பிரச்சினை தீர அது தான் வழி என்று தோன்றுகிறது’’ என்றார்.

    நான் நிதானமாக “உங்களுக்கு என் மேல் உள்ள அக்கறை எனக்குப் புரிகிறது. ஆனால் உங்கள் ஆலோசனையைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை’’ என்றேன்.


    “ஏன், எம்.ஜி.ஆர் உங்களுக்கு கால்ஷீட் தர மாட்டாரா?’’

    “அப்படியில்லை. ஏற்கனவே எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்து, சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஒத்துழைப்பு கிடைக்காததால், படத்தை அப்படியே நிறுத்த வேண்டியதாகிவிட்டது.

    பிறகு நானே அதே கதையில் சில மாற்றங்களைச் செய்து, சிவாஜியை வைத்துப் படம் எடுத்ததும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அப்படியிருக்க…’’

    “ஸ்ரீதர்! இப்போ அந்தப் பழைய கதையை நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர் ஒத்துழைப்புத் தர மறுப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை’’


    “நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அதிலும் ஒரு தர்ம சங்கடம். இப்போ எம்.ஜி.ஆர் கால்ஷீட் தருவதாக வைத்துக் கொண்டால், சிவாஜி என்ன நினைப்பார்?

    “ஓஹோ.. நம்ம படம் பாதியிலேயே நிற்க, எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுக்கப் போய்விட்டாரா ஸ்ரீதர்’’ என்று சிவாஜி தப்பு அர்த்தம் செய்து கொள்ளக்கூடும். அல்லது எம்.ஜி.ஆரே ‘முதலில் சிவாஜி படத்தை முடித்துவிட்டு வா; அப்புறம் பார்க்கலாம்’’ என்று கூறலாம்..’’

    ராஜேந்திரகுமார் என் சமாதானங்களை ஏற்கவில்லை.

    “ஸ்ரீதர், யோசித்து யோசித்துத் தயங்காதீர்கள். எதற்கும் எம்.ஜி.ஆரை அணுகுங்கள். அவர் ஒப்புக் கொள்வார் என்றே எனக்குத் தோன்றுகிறது. உங்க பிரச்சினை எல்லாம் தீர அது தான் வழி’’

    “பெரிய ரிஸ்க் இல்லையா?’’

    “ரிஸ்க் தான். துணிந்து ரிஸ்க் எடுங்க’’

    ராஜேந்திரகுமார் உறுதியாகக் கூற, நானும் அவர் யோசனையை ஏற்பது என்று தீர்மானித்தேன்.

    இதற்கு முன்பு ஓரிரு சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆரை நான் சந்திக்க நேர்ந்தபோது அவர் “நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும்; முன்பு ஒருமுறை ஆரம்பித்த படம் கூட நின்று போய்விட்டதே’’ என்று கூறியது எனக்கு நினைவில் இருந்தது.

    அதை ஒருவேளை உபச்சாரமாகக் கூறியிருப்பாரோ?

    யார் என்ன விமர்சனம் செய்தாலும் சரி, எம்.ஜி.ஆரை அணுகுவது என்று தீர்மானத்துக்கு வந்தேன். ஆனாலும் உள்ளூர ஒரு தயக்கம்.

    எப்படி எடுத்துக் கொள்வாரோ? என்ன பதில் கூறுவாரோ?

    எனவே நான் நேரில் எம்..ஜி.ஆரைப் பார்த்துப் பேசாமல், கன்னையா என்ற நண்பரிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன்,

    ‘சின்னத்தம்பி’ போன்ற படங்களை டைரக்ட் செய்தாரோ பி.வாசு, அவருடைய அப்பா பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் மேக்கப் மேனாக இருந்தார்.

    அவரிடம் என் விருப்பத்தை கன்னையா தெரிவிக்க, பீதாம்பரம் எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைச் சொல்ல, எம்.ஜி.ஆரின் பதில் திரும்பவும் கன்னையா மூலமாக எனக்கு வந்து சேர்ந்தது.

    அதிலே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது.

    பதில் இது தான்.

    “ஸ்ரீதர் படத்தில் நடிக்கச் சம்மதம். ஆனால் மேலே இது குறித்துப் பேச வேண்டும். நாங்கள் சந்திப்பது ஸ்ரீதர் வீட்டிலும் வேண்டாம்; என் வீட்டிலும் வேண்டாம் ஒரு பொது நண்பரின் வீடாக இருக்கலாம். நம்பியார் வீடாக இருந்தால் சௌகரியம்’’

    நான் நெகிழ்ந்து உணர்ச்சிவசப்பட்டுப் போனேன்.

    எம்.ஜி.ஆர் என் வீடு தேடி வந்தால் நன்றாயிராது. அதே சமயம் அவர் வீட்டுக்கு நான் போனால், மற்றவர்கள் என்னைக் கேவலமாக- ‘அவர் வீடு தேடி அவர் காலில் விழபோனேன்’’ என்று பேசுவார்கள்.

    அந்த அவமானம் எனக்கு வரக்கூடாது என்று அவர் நினைத்தார். அதனால் பொது நண்பர் வீட்டில் சந்திக்கலாம் என்று தகவல் அனுப்பியிருக்கிறார்.

    நான் கன்னையாவிடம் சொன்னேன்,

    “எம்.ஜி.ஆரை நான் சென்று சந்திப்பது தான் முறை. எனக்கு இதில் தயக்கமோ, சங்கடமோ கிடையாது. அவர் உள்ளம் எனக்குப் புரிந்து விட்டது. ‘தோட்டத்தில் வந்து சந்திக்கிறேன்’ என்று அவரிடம் கூறிவிடுங்கள்’’.

    மறுநாள் காலை தோட்டத்தில் சிற்றுண்டிக்கு வரும்படி எம்.ஜி.ஆரிடம் இருந்து தகவல் கிடைத்தது.

    ராமாவரத்தில் ‘தடபுடலான’ சிற்றுண்டி.

    “உங்களை வைத்துப் படம் எடுக்க வாய்ப்புக் கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.’’ என்று நான் கூற,

    “உங்களுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதில் எனக்கும் சந்தோஷம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.”

    அதன் பிறகு ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் – ‘உரிமைக்குரல்’.

    #ஸ்ரீதர் #உரிமைக்குரல் #எம்ஜிஆர் #பீதாம்பரம் #சின்னத்தம்பி....... Thanks...

  9. #78
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் அவர்கள் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மகனுக்கு உதவியது சம்பந்தமாக நண்பர்கள் கொடுத்த கருத்துகள்.......
    டைப்பிஸ்ட் கோபு க்கு எம்ஜிஆர் உதவினார் என்பது நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை ஏனென்றால் நமக்கு அது வழக்கமான செய்திதான் பிறருக்கு உதவுவதை தலைவர் எப்போதுமே தன் கடமையாகக் கொண்டிருந்தார் ஆனால் அந்த காலகட்டத்தில் நடிகர்களில் மனிதராக இருந்தவர் ஜெய்சங்கர் அல்லவா அவர் கூடவா உதவவில்லை........ Thanks...

  10. #79
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எப்பேர்ப்பட்ட உதவி!!! மேனி புல்லரிக்குது நான் பாத்துக்குறேன் அந்த ஒத்த வார்த்தைக்கு எப்படிபட்ட பலம் என்பது நானறிவேன் இன்னொருவர் பிறக்கவில்லை தங்கதலைவனைப்போல் அள்ளித்தந்த வள்ளல் நினைவுகளே காலத்தை வெல்லும்
    அருமையான பதிவு...... Thanks...

  11. #80
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் சிவக்குமார் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் மற்றவர்க்குத் தெரிந்து கொடுத்தது கொஞ்சமே. தெரியாமல் கொடுத்தது அதிகம். உலக வள்ளல் என்று இதயக்கனி ஆசிரியர் சொன்னது 100 % உண்மை..... Thanks...

Page 8 of 210 FirstFirst ... 6789101858108 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •