Page 73 of 210 FirstFirst ... 2363717273747583123173 ... LastLast
Results 721 to 730 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #721
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளியிடும் திரைப்படங்களின் வெற்றி, வசூல், நாட்கள் யாவும் மீண்டும் மீண்டும் பல விநியோகஸ்தர்களையும்*
    பல திரையரங்குகள் வெளியீட்டை அதிகபடுத்தியுள்ளது.*

    "கலங்கரை விளக்கம்" திரைக்காவியம் மாபெரும் வெற்றியை படைத்த மூன்றாவது காவியமாகும்.* இத்திரைப்படம் அடுத்தடுத்து வெளியீட்டில்.....சாதனைகள்* சென்னையில் குறிப்பாக 1995 ஆம் ஆண்டு வரை பகல் காட்சியே இந்த திரைப்படம் திரையிட்ட சரித்திரம் கிடையாது. எப்பொழுதும்* 3 காட்சியில் தான் திரையிடப் பட்டுள்ளது என்பது இத்திரைப் படத்தின் சாதனையாகும்.*

    கலங்கரை விளக்கம் திரைக்காவியம் பலமுறை தொடர் வெளியீட்டில் சென்னையில் மட்டும் 100 நாட்களை இணைந்த நாட்களாக கடந்த 50 வருடங்களாக சாதித்துக் காட்டியிருக்கிறது.

    1990 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கில்* திரையிடப்பட்டு*
    14 காட்சிகள் அரங்கு நிறைந்து அப்பொழுது 77 ஆயிரத்தை வசூலாக கொடுத்த வெற்றி காவியமாக..... கருப்பு வெள்ளை திரைப்படமாக..... கலங்கரை விளக்கம் திகழ்கின்றது.

    இப்படி வெற்றிக்கு மேல் வெற்றியை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பல சாதித்துள்ளது.

    வரலாறு படைத்த கருப்பு வெள்ளை திரைப்படங்களின் சாதனைகள் மகத்தானது... ...
    குலேபகாவலி*
    சக்கரவர்த்தி திருமகள் , புதுமைப்பித்தன் மதுரைவீரன் தாய்க்குப்பின் தாரம் நாடோடி மன்னன் மன்னாதி மன்னன்
    பாக்தாத் திருடன் விக்கிரமாதித்தன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை கடந்த ஆண்டுகளில் பெற்றுள்ளது.
    எந்த நடிகரின் சரித்திரப் படங்களும் இப்படி தொடர் சாதனை புரிந்தது இல்லை.*

    1950 லிருந்து 60 காலகட்டம் வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் தென்னக திரை உலகில் பல வெளியீடுகளை சந்தித்து சரித்திரம் படைத்த உள்ளது. ஆனால் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள்* சாதனை செய்தது .
    ஆனால் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள்* சாதனை செய்தது என்பது நமக்கு எட்டிய தூரம் வரை எதுவும் தெரியவில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் புதிய சாதனையை படைத்துள்ளது. ஒவ்வொரு திரையரங்கிலும் விதவிதமான சாதனைகளையும் கணித்து வந்துள்ளது.*
    மக்கள் திலகம் திரைப்படங்களை வைத்தே பல திரையரங்குகள் வாழ்ந்த காலங்கள் பல...*

    1995 முதல் 2019 வரை ...சென்னை மகாலட்சுமி, மேகலா, அகஸ்தியா, சரவணா பாலாஜி காமதேனு, பிராட்வே, ஸ்டார் சீனிவாசா , பாட்சா, கிருஷ்ணவேணி என பல அரங்கில் பல திரைப்படங்கள் சாதனை ஆகும்.....* *

    மக்கள் திலகத்தின் திரைப்படங்களை நம்பியே கடந்த பல ஆண்டுகளாக திரையரங்குகள் வாழ்வு பெற்று வந்துள்ளது.

    1988 முதல் 2019 வரை....
    31 ஆண்டுகளில்.....*

    சென்னையில் மட்டும் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே
    1988 முதல் 1995 வரையிலான காலத்தில்....* ஆண்டு தோறும்*
    40 முதல் 50 திரையரங்கு வரை ...
    75 படம் முதல் 90 படம் வரை வந்ததுள்ளது....

    அடுத்து....
    1996 முதல் 2005 வரை..
    10 ஆண்டில் ....20 முதல் 30 திரையரங்கு வரை....
    60 முதல் 70 படம் வரை*
    திரையிடப்பட்டுள்ளது.

    அடுத்து....
    2006 முதல் 2018 வரை...
    15 திரையரங்கில் இருந்து 20 திரையரங்கு வரை .....
    50 திரைப்படம் முதல் 60 திரைப்படம் வரை திரையிடப்பட்டுள்ளது.

    2019.....
    அகஸ்தியா சரவணா பாலாஜி
    மாறி... மாறி திரையிட்ட படங்கள்...
    42 ஆகும்.
    அலிபாபா, குலேபகாவலி,
    தா.பின் தாரம், தா.சொ.தட்டாதே
    பா.திருடன், த.தலை.காக்கும் , பெ.இ.பெண், தனிப்பிறவி
    கா.காரன், வே.காரன், நீ.பின் பாசம்
    எ.வீ.பிள்ளை,* ப.படைத்தவன் தொழிலாளி, ப.குடும்பம் ஆ.ஒருவன்,* க. விளக்கம்,* முகராசி
    நான் ஆணையிட்டால், ப.பாவை
    அ.கட்டளை,* விவசாயி, கு.கோயில்
    ஒ.விளக்கு, தே.வ.மாப்பிள்ளை,
    அடிமைப்பெண் , ரி.காரன்,*
    நீ.நெருப்பும், ரா.தே.சீதை
    ச.முழங்கு,* ந.நேரம்,* இ.வீணை,
    நே.இ.நாளை, உ.குரல், சி.வா.வேண்டும்,* நி.முடிப்பவன்
    நா.நமதே, ப.வாழ்க,* நீ.த.வணங்கு
    உ.கரங்கள்,* ஊ.உழைப்பவன்
    இ.போ.எ.வாழ்க.....

    2020 ல் மார்ச் வரை
    14 படங்கள் ..... திரைக்கு வந்துள்ளது.
    தொடரும்.............

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #722
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் ஒரு கிங் மேக்கர்
    எம்ஜிஆர் எங்கோ அங்கே வெற்றி

    சுதந்திரம் காண காங்கிரஸ்வாதியாக எம்ஜிஆர் சதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் எம்ஜிஆர் அப்போது காங்கிரஸில்

    மேல்வர்க்கத்தின் கைபாவையாக காங்கிரஸ் பாமரன் கஷடத்தில் நாடு பஞ்சத்தில் எம்ஜிஆர் மனம் விடியலை காண ஏங்க
    அண்ணாவின் எழுத்து கொள்கை கவர்ந்ததால் எம்ஜிஆர் தி மு க கட்சியில் சேர வெற்றி தி மு க வை நாடியது அண்ணாவை முதல்வர் ஆக்கினார் எம்ஜிஆர்
    அண்ணாவுக்கு பின் கருணாநிதியை முதல்வர் ஆக்குகிறார் எம்ஜிஆர்
    ஊழலில் முங்கிய கட்சியை காக்க கணக்கு கேட்க வெளியேற்ற பட்டார் எம்ஜிஆர்
    அதிமுக உதயம் வெற்றி தேவதை எம்ஜிஆரை முதல்வர் ஆக்கியது
    பின் எம்ஜிஆர் புகழால் ஜெயலலிதா பன்னீர்செல்வம் எடப்பாடி என வெற்றி எம்ஜிஆரால் தொடர்கிறது

    எம்ஜிஆர் எங்கோ வெற்றி அங்கே

    காமராஜ் காங்கிரஸ் ஆட்சியை விட எம்ஜிஆர் ஆட்சி சிறப்பானது
    பாமரனுக்கு
    காமராஜ் ஆட்சியில் கம்புகழியும் பஞ்சமும் அரசி விலை வானளவு
    எம்ஜிஆர் ஆட்சியில் அரசி ரேஷனில் குறைந்த விலையில் தரமாக நிரந்தரமாக வழங்க பட்டது

    போக்குவரத்து பஸ் வசதி எல்லா கிராமத்துக்கும் கிடைக்க வைத்தார் எம்ஜிஆர்
    சத்துணவு ஒரு விழக்கு மேற்கல்வி எட்ட ு அரசுபல்கலைகழகங்கள்
    தொழில் பயிற்சி கூடங்கள்
    என பலதிட்டங்கள் எம்ஜிஆரால் தமிழகம் சிறப்படைந்தது

    எம்ஜிஆர் ஆட்சியில் தான் போராடாங்கள் அதிகம் நடந்தது அரசுக்கு பல இடையூறுகள் கொடுத்தார்கள் அதையும் வென்று பொற்க்கால ஆட்சி தந்தார் எம்ஜிஆர்

    எம்ஜிஆரை மற்றவர்களை விட சிறந்தவர்என கூற காரணம்
    தன் உழைப்பால் ஈட்டிய பணத்தை மக்களுக்கு அளவில்லாமல் அள்ளி கொடுத்த்தால்

    தனஷ்கோடி புயல் மக்கள் துயர் போக்க முதல் ஆளாக ஒரு லட்சம் ரூபா இன்றைய மதிப்பு பலகோடி கொடுத்தது எம்ஜிஆர்

    சைனா யுத்த நிதியாக முதல் ஆளாக எழபத்தி ஐந்தாயிரம் கொடுத்தது எம்ஜிஆர்

    இலங்கையில் தமிழ் படைக்கு பலகோடிகள் கொடுத்து போராட வைத்தது எம்ஜிஆர்

    தன் சொத்துக்கள் எல்லாம் மக்களுக்கு என வாழ்ந்த எம்ஜிஆர் எவரை விடவும் சிறந்தவர் நிகரற்ற தலைவர் எம்ஜிஆர்

    வாழ்க எம்ஜிஆர் புகழ்.........

  4. #723
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருமுறை இரண்டு நாட்கள் பயணம் ஆக மதுரை சென்ற தலைவர் பாண்டியன் ஹோட்டலில் தங்குகிறார்.

    ஹோட்டலை சுற்றி ஒரே பரபரப்பு..கூட்டம்.. அதே ஹோட்டலில் லிப்ட் பாய் ஆக வேலை செய்யும் ஒரு வாலிபருக்கு தலைவர் மீது மிகுந்த அன்பு பாசம் இருந்தது.

    அவன் தன்னுடன் வேலை செய்யும் சக நண்பர்களுடன் தலைவர் பற்றி பெருமையா பேசுவது வழக்கம்...அவரே தன் கண் முன்னே அந்த ஹோட்டலில் தங்கி இருப்பது அவருக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்க..

    அன்று இரவு வெளியில் சென்று வந்த தலைவர் ஹோட்டல் வந்து லிப்ட் வழியாக மேலே ஏற போகும் போது அந்த வாலிபன் தலைவர் அருகே ஓடி சென்று அண்ணா உங்களுடன் ஒரு போட்டோ எடுத்து கொள்ளவேண்டும் என்று சொல்ல சுற்றி இருந்தவர் தடுக்க தலைவர் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு பதில் ஏதும் சொல்லாமல் மேலே சென்றுவிட்டார்.

    விடுதி மேலாளர் என்னடா இது இப்படி செய்துவிட்டாய் என்று கோவம் கொள்ள உடன் வேலை செய்தவர்கள் என்னப்பா உன் எம்ஜிஆர் பதில் கூட சொல்லாமல் போய் விட்டாரே என்று கேலி செய்ய அன்று இரவு முழுவதும் கண்ணீரில் குளித்தான் அந்த ரசிகன்..

    மறுநாள் மதியம் சாப்பாடு வேளை முடிந்து தான் அங்கு இருந்து கிளம்பும் பயண ஏற்பாடுகளை தலைவர் செய்ய் மீண்டும் ஹோட்டல் பரபரப்பு கொண்டது.

    தன் அறை பெல்லை அடித்து கீழே இருந்த மேலாளராக இருந்தவரை வர சொல்லி உங்கள் ஹோட்டலில் பணி புரியும் அனைத்து லிப்ட் பாய்கள் மற்றும் அறை சர்விஸ் பணியாளர்களை உடனே என் அறைக்கு வர சொல்லுங்கள் என்றவுடன் ஆடி போன அவர் அதன் படி செய்ய.

    அனைவரும் மேலே வர நேற்று யார் என்னுடன் படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று உங்களில் கேட்டது என்று கேட்க தயங்கிய படி மேற்கண்ட வாலிபர் வர தலைவர் சிரித்து கொண்டே அவனை அருகில் அழைத்து அவன் தோள் மீது கையை போட்டு கொண்டு..... தயார் ஆக காத்து இருந்த புகைப்பட நிபுணரை அழைத்து தம்பி அவரை பார் சிரி அப்போதான் படம் நல்லா வரும் என்று சொல்ல அவனுக்கு எல்லை இல்லா மகிழ்வுடன் நான் எம்ஜிஆர் ரசிகன்டா என்ற திமிருடன் போஸ் கொடுத்து புகை படம் எடுத்து கொண்டான்.

    அதன் பின் அங்கு அறையில் இருந்த மற்ற பணியாளர்கள் அணைவருடன் தலைவர் நடுவில் நின்று கேமரா பளிச் பளிச் என்று தன் கண்களை வெட்ட துவங்கியது..

    அதோடு இல்லாமல் தன் ஜிப்பாவில் இருந்து ஒரு கட்டு பணம் எடுத்து அந்த வாலிபன் கையில் திணித்து அனைவரும் சமமாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லி நான் புறப்படுகிறேன் வரவா என்று கேட்டார் எம்ஜிஆர்..

    இவர் புகழ் பாடாமல் வேறு எவர் புகழை பாட நாம் போய் தேட.

    நன்றி... தொடரும்..
    உங்களில் ஒருவன் நெல்லை மணி...

    படத்தில் நீ தானே அந்த பையன் என்று கேட்பது போல தலைவர் நன்றி.........

  5. #724
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சிதலைவர் நடித்து ஒப்பந்தம் போட்டு நாம் காண கிடைக்காத படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா எம்ஜிஆர் நெஞ்சங்களே..

    57 தவிர. இன்னும் 6 படங்கள்...நம்ம முடியவில்லையா... ஆம்.

    இதோ.. இதுவரை வெளிவராத முழு பட்டியல்...

    1...சாயா..( தலைவர் கதாநாயகன் ஆக நடித்த முதல் படம்...பக்ஷிராஜா நிறுவனம்...கதாநாயகி குமுதினி)..

    2....அதி ரூப அமராவதி.
    (தலைவர்..பானுமதி)

    3....குமாரதேவன்...
    (ஜமுனா கதாநாயகி)

    4 ...பவானி....
    (பானுமதி...ஸ்வஸ்திக் வெளியீட்டில்..வசனம் கண்ண தாசன்..)

    5...வெள்ளிக்கிழமை.
    (தீயசக்திப்படம்)

    6....இணைந்த கைகள்.
    (எம்ஜிஆர் நிறுவனம்)

    7.....தபால்காரன் தங்கை...
    (தேவிகா உடன்)

    8....மாடி வீட்டு ஏழை.
    (சாவித்திரி. )

    9....கேரள கன்னி.
    ( பால சூரியா நிறுவனம்)

    10...கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.

    11...முசிறி அவர்களின் மக்கள் என் பக்கம்.

    12....தாமஸ் இயக்கத்தில். மர்ம பெண்களிடம்..c.i.d..

    13..... ராஜ சுலோச்சனா உடன்...மலை நாட்டு இளவரசன்..

    14 ....கங்கை முதல் க்ரமளின் வரை...1974 இல்...தலைவர் இயக்கத்தில்.

    15...பரமபிதா.

    16....தலைவர் தயாரிப்பில் நாடோடியின் மகன்..

    17...நானும் ஒரு தொழிலாளி...ஸ்ரீதர்..

    18...கண்ண தாசனின்
    ஊமையன் கோட்டை.

    19...பாகன் மகள்..

    20...தலைவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்..
    21 ....ரிகஷாரங்கன்.

    22....அஞ்சலிதேவி உடன்...சிலம்பு குகை.

    23....ஸ்ரீதர் இயக்கத்தில்... பானுமதி உடன்..சிரிக்கும் சிலை.

    24......தந்தையும் மகனும்...தேவர் பிலிம்ஸ்.

    25......தேனாற்றங்கரை..
    26...உடன்பிறப்பு.

    27...புரட்சி பித்தன்.

    28....வேலுத்தேவன்..

    29...ஏசுநாதர்..

    30....மண்ணில் தெரியுது வானம்.

    31...சமூகமே நான் உனக்கே சொந்தம்.

    32..உன்னை விட மாட்டேன்.

    33...எல்லை காவலன்.

    35...கேப்டன் ராஜு.

    36....தியாகத்தின் வெற்றி..

    37...இதுதான் பதில்.

    38.....வேலு தம்பி...

    39.. ஊரே என் உறவு.

    40..உதயம் நிறுவனம் .
    போட்டோகிராபர்..

    41..கே.பாலச்சந்தர் வசனம்...பெயர் மெழுகு வர்த்தி...

    43...இன்ப நிலா.

    44.. வாழ்வே வா..

    45...காணிக்கை.

    46....அண்ணா பிறந்தநாடு.

    47....அண்ணா நீ என் தெய்வம்..

    48...நல்லதை நாடு கேட்கும்..

    49....நம்மை பிரிக்க முடியாது.. அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன்.

    50....மரகத சிலை.

    51..லதா மஞ்சுளா தலைவர் இயக்கத்தில் வாழு.. வாழவிடு..

    52....ஆண்டவன் கட்டிய ஆலயம்..

    53...லதா மஞ்சுளா உடன்..கொடை வள்ளல்..

    54....உங்களுக்காக நான்...

    55...வீனஸ் நிறுவனம்.
    எங்கள் வாத்தியார்.

    56...எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் தயாரிப்பில்.
    ஆளப்பிறந்தவன்..

    57.....இமயத்தின் உச்சியிலே..

    வாழ்க எம்ஜிஆர் புகழ்.

    நன்றி..உங்களில் ஒருவன்.......தொடரும்.

    பின் குறிப்பு.

    வெளிவராத படங்களில் ஸ்டில்கள்... விரைவில் வெளியிடப்படும்............

  6. #725
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கஷ்டப்பட்டதை மறக்காதவர்!

    அரச அவையில் சில திட்டங்களை மன்னனாக இருந்து நாடோடி வீராங்கன் அறிவிக்கின்றான். அதில் தொலைநோக்கு பார்வை கொண்ட வசனம் :–

    “ஐந்து வயது ஆனவுடனே குழந்தைகளைக் கட்டாயமாகப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு, பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரையில் மாணவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.”

    எம்.ஜி.ஆர். மூன்றாவதுக்கு மேல் படிக்க முடியாத வறுமைச் சூழலில் இருப்பது போன்ற பிள்ளை செல்வங்கள் படித்து நாளைய உலகை உருவாக்கும் நல்லவர்களாக உயர்வதற்கான திட்டமிடல் இந்த வசனங்களில் புதைந்திருப்பதை அறியலாம்.

    ”தான் நடித்த காட்சி மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்காமல் படம் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.

    குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும்படியாக படம் எடுக்க வேண்டும், பொழுதுபோக்குப் படத்திலும் நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும்’ என்பார். இந்த கருத்து சின்னவருடைய மனதில் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சின்னவர் நடித்த ’வீரஜெகதீஷ்’ என்ற பழைய படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த படத்தில் ஒரு காட்சியில் புகை பிடிப்பவனுக்கு சின்னவர் அறிவுரை சொல்வதுபோல வசனம் இருக்கும். ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, ஏழ்மையை சந்தித்து வாழ்ந்தவர். காலில் செருப்பு கூட இல்லாமல் பல இடங்களுக்குச் சென்று பல கஷ்டங்களை அனுபவித்தவர், அந்த வறுமை தந்த பாடமே வாழ்க்கைத் தத்துவத்தை அவருக்கு உணர்த்தியது எனலாம். புகழும் பெருமையும் வந்த காலத்தில், இளைமையில் வறுமையில் தான் பட்ட கஷ்டங்களை மறந்து இருக்க முடியும். ஆனால், அவர் கடைசி வரையிலும் அதை மறக்கவில்லை. அது அவரது சிறப்பு” என்பது இயக்குநர் கே. சங்கரின் அனுபவம்.

    எம்.ஜி.ஆர். பாடல்கள் பேசப்படக் காரணம்?

    சின்னவரின் படங்களில் பாடல்கள் புகழ்பெற, வாழ்க்கையில் அவர் அனுபவித்து அறிந்ததை பாடல்களில் சொன்னதும் ஒரு காரணம்.

    பாடல் பதிவின் போது ஒரு பாடலை அவர் ஓ.கே. செய்தால் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் அப்பாடா மறு ஜென்மம் என்று சொல்வார்கள். (அந்த அளவுக்கு பாடலில் கவனம் செலுத்தி வேலை வாங்குவார்) சின்னவருக்காக ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் 25 டியூன்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.

    ’இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் வரும் ‘அன்புக்கு நான் அடிமை’ பாடல் காட்சியை இரவு ஒன்பது மணிக்கு ஷூட் பண்ண ஏற்பாடு, அதற்கு ஒரு வாரமாகவே முயற்சித்தும் பாடல் சரியாக அமையவில்லை.

    அந்தக் காட்சியை படமாக்க இரண்டு மணி நேரத்திற்கு முன் மாலை 7 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் எழுத பாடல் ஓ.கே. ஆனது” என்கிறார் இயக்குநர் கே. சங்கர்

    'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கவிஞர் மருதகாசியை ஒரு பாடல் எழுத வைத்தார்.

    “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற பாடலின் சரணத்தை
    “பொன் பொருளை கண்டவுடன்
    வந்த வழி மறந்துவிட்டு
    தன்வழியே போகிறவர் போகட்டுமே!”
    என்று கவிஞர் எழுதி காட்டினார்.

    “தன் வழியே என்று சொல்கிறீர்களே… அது ஏன் ஒரு நல்ல வழியாக இருக்கக்கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவன் ஏன் தன் வழியில் போகக்கூடாது? அதைத் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று புரட்சித்தலைவர் சொல்ல, ’தாங்கள் விரும்புவது என்ன? இந்த இடத்தில் எப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றீர்கள்?” என்று கவிஞர் கேட்கிறார்.

    “தீய வழி என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்கிறார் மக்கள் திலகம்.
    ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’
    என்ற வரிக்குப் பதிலாக
    ‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’
    என்று எழுதி கவிஞர் சொல்ல,

    “ஆகா… பொருத்தமான வரி! அற்புதம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் எம்.ஜி.ஆர். “ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர். கூர்ந்து கவனிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய அறிவாற்றல் மிக்கவர்களோடு பணிபுரிவது பெரும் பாக்கியம்” என்று தன்னிடம் கவிஞர் மருதகாசி மொழிந்ததை வழிமொழிகிறார் பத்திரிகையாளர் நாகை தருமன்.

    “எந்தக் காட்சியும் படமாக்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பு பெறும், எந்த விதத்தில் படமாக்கினால் நன்றாக அமையும் என்றெல்லாம் விவாதித்த பிறகுதான் ஒப்புக் கொள்வார். அவருககுத் தெரியாத எந்தப் பிரிவுமே இந்தத் துறையில் கிடையாது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேங்காய் சீனிவாசன்.

    நன்றி : திரு. விஜயபாஸ்கர் - தினமலர்..............

  7. #726
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம். ஜி .ஆர் .படங்கள் ஒளி பரப்பு விபரங்கள்... (11/09/2020)...
    _______________________

    ராஜ் டிஜிட்டல் பிளஸ் - காலை 9.30 மணி- "மாட்டுக்கார வேலன்"

    சன் லைஃப்- காலை 11 மணி- "இதயக்கனி"

    மெகா24- பிற்பகல் 2.30 மணி- "வேட்டைக்காரன்"

    ஜெயா மூவிஸ்- இரவு 10 மணி- "ஊருக்கு உழைப்பவன்".........

  8. #727
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சிதலைவர்
    #இதயதெய்வம்_டாக்டர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_என்_இனிய #புதன்கிழமை_காலை_வணக்கங்கள்..

    புரட்சி தலைவர் போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார்.
    நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை.

    படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார். பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது. விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடும்.

    டைரக்டர் ஸ்ரீதர் அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை வைத்து எடுக்க இருந்த படம் தான் அன்று சிந்திய ரத்தம்
    ஆனால் அந்த படம் தொடக்கத்திலேயே மநின்று விட்டது பிறகு அந்த படத்தை சிவந்த மண் என்று நடிகர் சிவாஜி கணேசனை வைத்து எடுத்தார் ஸ்ரீதர்..
    ஸ்ரீதருக்கும் தலைவருக்கும் அதன் பின் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போய்விட்டது... சில காலங்கள் கழிந்தது ஸ்ரீதர் அவர்கள் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போனதால் மிகவும் கடனில் சிக்கி கொண்டார் அவர் நிலை அறிந்து அவருக்கு உதவ வேண்டும் என்று ஆரம்பித்த படம் தான் ‘உரிமைக்குரல்’..

    படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. ‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது. படத்தின் நடன இயக்குனர் சலீம்.
    அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.

    பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார்.
    தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்.

    ‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார். பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்.

    ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார். விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் ஸ்ரீதரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் ஸ்ரீதருக்கு பயம் வந்து விட்டது.

    ‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது? அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே?’ என்று
    ஸ்ரீதர் கவலை அடைந்தார். பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

    போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர்.
    ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார். பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.

    இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் ஸ்ரீதர் ஜாடை காண்பித்தார். எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார். எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார். எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு ஸ்ரீதரை நெகிழ வைத்தது.
    போட்டி என்றால் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்...

    ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பெக்டர் ராமு, அப்துல் ரஹ்மான் என இரட்டை வேடங்கள். அப்துல் ரஹ்மானாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில் ‘ஒன்றே சொல்வான், நன்றே செய்வான், அவனே அப்துல் ரஹ்மானாம்…’ என்ற கருத்துள்ள பாடல் இடம்பெறும். அந்தப் பாடலில் வரும் வரிகள் இவை…

    ‘ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள்

    ஆனாலும் உழைத்தே வாழுங்கள்

    வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்

    இரண்டும் உலகில் தேவை

    ஆடும்போதும் நேர்மை வேண்டும்

    என்றோர் கொள்கை தேவை’

    ‘உரிமைக்குரல்’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் வண்டலூர் அருகே நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் படமாக்கப்பட்டன. வில்லனின் ஆட்கள் பயிர்களுக்கு நெருப்பு வைப்பதுபோல காட்சி.

    படத்துக்காக பயிர்களுக்கு நெருப்பு வைக்கப் போவதை அறிந்த எம்.ஜி.ஆர்., ‘‘மக்களுக்கு உணவாக பயன்படும் நெற்பயிரை கொளுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். பின்னர், வைக்கோல்களுக்கு தீ வைக்கப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது...

    அன்புடன்
    படப்பை rtb.,.........

  9. #728
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    42வது நினைவு நாள்:
    எம்.ஜி.ஆர். - ஜானகி திருமணத்தை நடத்திய சின்னப்பா தேவர்.........
    சண்டை கலைஞர், சிலம்ப கலைஞர், வாள் வீச்சு வீரர் என்று பெயர் பெற்ற சாண்டா சின்னப்பா தேவருக்கு படம் தயாரிக்கும் ஆசை வந்தது. படத் தயாரிப்புக்கான பணத்தை தயார் செய்து விட்டார் யாரை ஹீரோவாக போடுவது என்று யோசித்தவருக்கு உதித்தவர் எம்.ஜி.ஆர். அவர் மீது கொண்ட நட்பு காரணமாக அவரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித்தார். தேவர் பிலிம்ஸ் உருவானது. முதல் படம் தாய்க்குப்பின் தாரம். பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
    தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து அந்த காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். அதனால் தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், ஆண்டவனே..! என்றும், எம்.ஜி. ஆர், தேவரை, முதலாளி... என்றும் அழைத்துக் கொள்வார்கள். சில பிரச்சினைகளுக்கு இடையே நடந்த எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்தை நடத்தி வைத்து, சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் உயிர் நண்பருக்கு நேற்று 42வது நினைவு நாள்..........

  10. #729
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் இந்த சொக்கவைக்கும் போஸ் "கண்ணன் என் காதலன் "படத்தில். இந்தப் படத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அந்தக் காலத்திலேயே இப்போதைய இளைஞர்கள் அணிந்திருப்பதுபோல கழுத்தை ஒட்டிய மெல்லிய செயின். பூ டிசைன் போட்ட பிரிண்டட் சட்டை. அந்த சட்டை கையில் நுனியில் கத்தரித்து உள்ளது. அதன் மேலே சிறிய பட்டனும் இருக்கிறது. 52 ஆண்டுகளுக்கு முன் 1968லேயே இந்த பேஷன்களை எல்லாம் மக்கள் திலகம் அறிமுகப்படுத்தி விட்டார். அதனால்தான் இன்றும் இளைஞர்கள் இவரை விரும்புகிறார்கள். இந்த அழகும் ஸ்டைலும் கலரும் கவர்ச்சியான புன்னகையும் உலகத்திலேயே அவர் ஒருத்தருக்குத்தான் வரும்..........

  11. #730
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் அவர்களின் தோற்றத்தை கண்டேன் பரவசம் அடைந்தேன் மக்கள் திலகம் சிறந்த உடற்பயிற்சி வீரர் மிகச் சிறந்த கலைஞன் அரசியலுக்கு அப்பால் அவர் ஒரு மிகச் சிறந்த சிந்தனை வளம் கொண்ட கலை ஞானம் கொண்ட ஒரு படைப்பாளி ஒரு தெய்வீக பேரழகு ஒரு தெய்வீக கவர்ச்சி மக்களை காந்தம் போல் ஈர்க்கக்கூடிய ஒருவிதமான முக அமைப்பு செதுக்கி வைத்த சந்தனச் சிலை போல அழகிய தோற்றம் மக்கள் திலகத்திற்கு மட்டுமே உரியவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இவர் போன்ற ஒரு மனிதன் தோன்றுவது அரிது அவர் முகம் மட்டுமல்ல அவருடைய குணமும் அழகானதே ஈவு இரக்கம் உள்ள ஒரு மனிதர் சினிமா ஷூட்டிங் களிலும் மற்றும் அரசியல் பொது நிகழ்ச்சிகளிலும் யாரேனும் பசியுடன் இருந்தால் அவரால் தாங்கவே முடியாது அந்த நல்ல இதயத்திற்கு தான் அவர் இன்னமும் மக்களின் இதயத்தில் வாழ்கிறார் என் இதயத்திலும் கூட.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •