Page 68 of 210 FirstFirst ... 1858666768697078118168 ... LastLast
Results 671 to 680 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #671
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவரின் திரைப்பட சாதனைகளின் பதிவு.... நாம் உண்மையை தான் வெளியிடுகிறோம்.
    1965 முதல் 1977 வரை வெளியான எம்.ஜி.ஆர் மன்றங்கள் வெளியீட்ட என்னிடம் உள்ள 50 க்கும் மேற்பட்ட மலர்கள் மற்றும் பல ஊர்களில் 50,75,100,175, 200 சம்பந்தப்பட்ட வெற்றிகள் வசூல்கள்...
    திரையுலகம் இதழ்கள்,
    திரைச்செய்தி
    இன்னும் பல செய்திகளை திரட்டி கடந்த 1985 முதல் ....
    பல தலைவர் அபிமானிகளின் தொடர்ப்பு... அதன் மூலம் கிடைத்த தகவல்கள்...

    அன்று வந்த மலரை வைத்து போட்டுள்ளோம்...
    சரியான தகவலின் படி மாற்றியும் வந்துள்ளோம்...

    விரைவில் அடுத்த ஆண்டு நாம் வெளியீடும்
    தலைவரின் 115 திரைப்படங்கள்
    பற்றிய
    உண்மையாக
    எங்கு 100 நாள் 50,75,மற்றும்
    வசூல் விபரத்தை தொகுத்து...
    எல்லோர் கைகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்ய உள்ளோம்...
    மற்ற நடிகரின் கோல்மால் படங்கள், வசூல்கள் பற்றி நமது மலரில்
    ஒரு துளி கூட வராது....

    ஆகையால்.. பெரிய நகரங்களில் தலைவர் காவியங்கள் உண்மை தகவல்களோடு ஒடியதை பதிவிடவும்... அறியாதவர்களுக்கு தெரிவிக்கவும் நண்பர்களே.........

    50,100 அதற்கு மேல் உள்ள தலைவரின் திரைப்பட விளம்பரங்களுடன் வெளியிடப்படும்.

    அடுத்த வருடம் 2021 ஏப்ரல் மாதம் அல்லது பொது தேர்தல் முடிந்தவுடன்
    கொராணா காலம் முடிந்தப்பின்....

    மக்கள்திலகத்தின்
    "ரிக்க்ஷாக்காரன்"
    காவியத்தின் பொன்விழாவில்
    (1971 - 2021)
    இம்மலர் சிறப்புடன் வெளியிடப்படும்.
    நன்றி :
    உரிமைக்குரல் ராஜூ.& நண்பர்கள் குழுவினர்.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #672
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நமது மக்கள் திலகம் திரி 1,00,000 பதிவுகள்
    கடந்து சாதனை புரிய ஒத்துழைப்பு நல்கிய
    மையம் நிர்வாகிகள் - பதிவாளர்கள் - பார்வையாளர்கள்
    அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்
    கொள்கிறேன்.

    இப்படிக்கு

    எஸ் ரவிச்சந்திரன்

    குறிப்பு - எனது அலுவலக தொடர் பணி காரணமாக காலதாமதமாக இன்றுதான் திரிக்கு வந்தேன்

  4. #673
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்கள் ஒளிபரப்பான விவரம் (01/09/20 முதல்* 08/09/20 வரை)
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------01/09/20* * - முரசு டிவி* *- பிற்பகல் 3.30 மணி* - கொடுத்து வைத்தவள்*

    * * * * * * * * * * *சன் லைப்* - மாலை 4 மணி* *- நீரும் நெருப்பும்*

    * * * * * * * * * *புதுயுகம் டிவி -* இரவு* 7 மணி* - தேர் திருவிழா*

    02/09/20* * - சன் லைப் -* * காலை 11 மணி* - உழைக்கும் கரங்கள்*

    * * * * * * * * * முரசு டிவி - மதியம் 12 மணி / இரவு 7மணி -அலிபாபாவும் 40திருடர்களும்*

    * * * * * * * * * மூன் டிவி* - இரவு* 8 மணி* * *- நீதிக்குப்பின் பாசம்*

    * * * * * * * * *பாலிமர் டிவி -இரவு* 11 மணி* - தொழிலாளி*

    03/09/20 -* *சன் லைப்* *-* மாலை 4 மணி* - எங்கள் தங்கம்*

    * * * * * * * * * *புதுயுகம் டிவி* -இரவு 7 மணி - நவரத்தினம்*

    04/09/20 -சன் லைப் -* * காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*

    * * * * * * * *ராஜ் டிஜிட்டல்* *- இரவு 7 மணி* - குடியிருந்த கோயில்*

    05/09/20 -மெகா டிவி - மதியம் 12 மணி - சந்திரோதயம்*

    * * * * * * * மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - விவசாயி*

    * * * * * * * *மெகா 24 -* *பிற்பகல் 2.30 மணி - நீதிக்குப்பின் பாசம்*

    06/09/20-ஜீ திரை -காலை 5.30 மணி - பறக்கும் பாவை*

    * * * * * * * * *-சன் லைப்* - காலை 11 மணி - முகராசி*

    * * * * * * * *புதுயுகம் டிவி -பிற்பகல் 1.30 மணி -ராமன் தேடிய சீதை*

    * * * * * * * * பூட்டோ டிவி (உள்ளூர் கேபிள்)-இரவு 8 மணி -அன்பே வா*

    07/09/20 -சன்* லைப் - காலை 11 மணி* - குடியிருந்த கோயில்*

    * * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -நல்ல நேரம்*

    * * * * * * * பாலிமர்* டிவி -பிற்பகல் 2 மணி - ராமன் தேடிய சீதை*

    * * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி* *- பாசம்*

    * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி* - கன்னி தாய்*

    08/09/20 -சன்* லைப் -* மாலை 4 மணி - என் அண்ணன்*

    * * * * * * * புதுயுகம் டிவி -* இரவு* 7 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * எம்.எம்.டிவி (உள்ளூர் கேபிள்*) இரவு 8 மணி -குடியிருந்த கோயில்*

    * * * * * * ஜெயா மூவிஸ்* - இரவு 10 மணி - மீனவ நண்பன்** * * * * * *




    * * * * * * * * *

  5. #674
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை கலைவாணர் அரங்கில் ஒரு நிகழ்ச்சி...தலைவர் முதல்வர் அப்போது..
    இசை மேதை பால முரளி கிருஷ்ணா அவர்கள் தெலுங்கு மொழியில் அவர் பாடி இருந்த தியாகராஜர் கீர்த்தனைகளை தமிழ் மொழியில் அவர் பாடி அதை வெளியிடும் விழா...

    மொத்தம் 6 கீர்த்தனைகள் அதாவது பாடல்களை அவர் தமிழ் மொழியில் பாடி இருந்தார்...விழாவில் இசை மேதைகள் செம்மங்குடி ஸ்ரீனிவாசன் லால்குடி ஜெயராமன் மற்றும் தமிழ் புலவர்கள் உடன் பலர் கலந்து கொண்டனர்..நடிகர் கமலும் உண்டு விழாவில் ரொம்ப தாமதம் ஆக வந்தார் இவர்...

    பாடல்கள் வெளியிடப்பட்டு அனைவரும் பாலமுரளி அவர்களின் முயற்சியை பாராட்டி கொண்டு இருந்த நேரம் விழாவில்...

    தலைவர் கண் அசைவில் உதவியாளர் மாணிக்கம் தலைவர் சொன்ன படி அவர் காருக்குள் போய் பார்க்க ஒரு பெட்டி அதில் கட்டு கட்டாக பணம்...எல்லாம் 100 ரூபாய் கட்டுக்கள்.

    ஒரு பாடலுக்கு 10000 வீதம் 6 பாடலுக்கு தனி தனி கவரில் 60000 பணம் போட்டு எடுத்து வர சொல்லி அனுப்பினார் தலைவர்.

    உடன் பாடல்கள் காப்பி செய்யப்பட்ட தாள்கள் இருக்க அது ஒரு செட்டுக்கு பதில் 2 செட்டுகள் இருக்க 6 பாடல்கள் 12 பாடல்கள் என்று நினைத்து 12 கவர்களில் 120000 ரூபாய் பிரித்து போட பட்டு கொண்டு வர பட..

    நம் தங்க தலைவர் அவரை வாழ்த்தி பேசி பொன்னாடை அணிவித்து மகிழ்ந்து மொத்த கவர்களையும் அவர் கையில் கொடுக்கிறார்.. அந்த கவர்களில் பணம் இருக்கும் விவரம் ஐயா பாலமுரளி அவர்களுக்கும் தெரியாது...விழாவில் பங்கு கொண்ட யாருக்கும் தெரியாது.

    அதுதான் நமது தலைவர்...கொடுத்த பணம் பற்றி மூச்சு கூட விடவில்லை...புறப்பட்ட பாலமுரளி அவர்கள் மாலைகள் சால்வைகள் உடன் அந்த கவர்களையும் தான் வந்த பியட் காரின் பின் சீட்டில் தூக்கி போட கார் புறப்படும் முன் சொல்லப்பட்டது அவரிடம் கவர் உள் அனைத்தும் தலைவர் கொடுத்த பணம் என்று.

    பதறி போனார் பாலமுரளி...கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. 1986 களில் அந்த தொகை இன்றைய மதிப்பில் எவ்வளவு இருக்கும் என்பதை தலைவர் நெஞ்சங்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

    சரி இது ஒரு புறம் 6 பாடல்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய இடத்தில் 12 பாடல்களுக்கு பணம் கொடுத்து அது பாலமுரளியார் வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டது.

    தலைவர் மறுநாள் கணக்கு கேட்பார்..கணக்கு கேட்பதில் கில்லாடி அவர் தானே ...எல்லோருக்கும் பதட்டம்...அவ்வளவு தான் தொலைந்தோம் நாம் என்று..

    ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அதிகம் கொடுக்க பட்ட 60000 பணத்தை சரி செய்து விடுவோம் என்று தயங்கி தயங்கி தலைவரிடம் சொல்ல.

    அவரோ தமிழ் மீது நான் கொண்டு இருந்த பற்றுக்கு வந்த சோதனை போல இது உண்மையில் அந்த பணமே 120000 நான் கொடுத்து இருக்க வேண்டும் போல என்று சிரித்து கொண்டே அதை கடந்து சென்றார்.

    எப்படி பட்ட சிந்தனை உள்ள ஒரு மாமனிதர் அவர்...மற்றவர் என்றால் கூச்சல் போட்டு அலறி இருப்பார்கள்...

    அவர் தான் தலைவர்..
    அன்னை சத்தியாவின் புதல்வர்...

    வாழ்க அவர் புகழ்..நன்றி.... தொடரும்...உங்களில் ஒருவன்.............

  6. #675
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அர்த்தமுள்ள அறிமுகம்!!
    -------------------------------------------
    எம்.ஜி.ஆரின் ஆல விழுதுகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம்! ரசித்திருக்கிறோம்! ஆனால்--வியக்கும் விழுதுகள் பட்டியலில் இந்த விழுது சேர்கிறது!
    சுஜீத்குமார்!
    முக நூலில் இந்த இளைஞரை அறியாதவர் இருக்க முடியாது!
    இளையோர்க் கூட்டத்தைச் சேர்ந்த இந்த இளவல் பல விதங்களில் என்னைப் பாதித்திருக்கிறார்!
    ஜாலி மேனாக முக நூலில் உலா வரும் இந்த இளவலின் விஷய ஞானம் கண்டு நான் உள்ளுக்குள் பலமுறை ஆனந்தித்திருக்கிறேன்!
    எனது எந்தப் பதிவாயினும் சரி,,அதற்கேற்றாற் போல் ஒரு விஷயத்தைத் தேடி எடுத்து அதைப் பின்னோட்டமாக வடிப்பார்!
    ராமாவரம் தோட்டத்திற்குப் பின் பகுதியில் இருந்து படிப்பை முடித்த இவரது ஒரே தீராத வருத்தம்--
    அவ்வளவு அருகில் இருந்தும் ராமாவரக் கலைக் கோயிலை உரிய முறையில் தரிசிக்காமல் விட்டு விட்டோமே?
    பயங்கர எம்.ஜி.ஆர் பக்தனான,,. பி.ஈ.மெக்கானிக்கல் இஞ்சினீயரான நம் சுஜீத்குமார்,,தஞ்சையில் தம் தந்தை நிறுவிய மிகப் பெரிய மேனிலைப் பள்ளியை,,தம் அண்ணாவோடும்,,தந்தையோடும் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்!
    அந்த கால தொழிற்படிப்பை முடித்துள்ள இவர் தந்தை அடிப்படையில் ஒரு விவசாயி!
    தானத்தில் சிறந்த தானம் கல்வி தானம் தான் என்றக் கொள்கையுடையவர்,,இரண்டாம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளியை நிறுவி,,பின்னர் தமது அயராத உழைப்பினால் அதை மேனிலைப் பள்ளி ஆக்கியிருக்கிறார்!
    6500 மாணவர் படிக்கும்,,தஞ்சையிலேயே பெரிய பள்ளி இவர்களது max well hr Sec மேனிலைப் பள்ளி தான்!
    சுஜீத்தின் பாட்டனாரோ அந்த காலத்தில் பெரிய வேட்டைக்காரர். சரபோஜி மகாராஜாவின் நண்பர்!
    இன்றளவும்,,தஞ்சையில் நன்கொடை வசூலிக்காத ஒரே மேனிலைப் பள்ளி இவர்களோடது தானாம்!!
    300 மாணவர்களுக்கு வருடந்தோறும் ஃபீஸ் வாங்காமலும்--
    60 மாணவர்களுக்குத் தங்குமிடம்,,உணவு போன்ற எந்த செலவுமில்லாமல் முற்றிலும் இலவசமாகக் கல்வியை ஈந்து வருகிறது இவர்களது குடும்பம்!
    கொரோனா பாதிப்பாளர்கள் 5000 பேர்களுக்கு மேல் மூன்று வேளை உணவு வழங்கி பெருமை அடைந்துள்ளார்கள்!
    ஃபோர்ஸ் டெம்போ வண்டிக்கு,,கும்பகோணம்,,புதுக்கோட்டை,,மாயவரம் உள்ளிட்ட ஐந்து பகுதிகளுக்கு டீலராக இருக்கும் இவர்களது இன்னுமொரு செயற்கரிய சேவை--
    கொரோனா பாதிப்பின் போது ஆம்புலன்ஸ் 108 வண்டிகள் பழுது பார்த்தலையும்,,வண்டிகளுக்கான சர்வீஸ்களையும் இலவசமாகவே செய்து கொடுப்பது தான்!
    இவர்கள் குடும்பம் உட்பட,,இவர்களது ஒட்டு மொத்தப் பணியாளர்களுமே இரவு பகலாக இந்தச் சேவையை செய்து வருகிறார்கள்!!
    சுஜீத்தின் பாட்டனார்,,தொழில் மேதை ஜி.டி.நாயுடுவின் மாணவர்!
    மேலை நாட்டில் இறந்து,,கரை ஒதுங்கிய அறுபதடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்றைத் தம் சொந்தப் பொறுப்பில் பதப்படுத்தி தஞ்சை மியூசியத்துக்கு அளித்துள்ளார் சுஜீத்தின் தாத்தா!
    இன்றும் அவர் பெயர் பொறித்து அந்தத் திமிங்கலம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது!
    தன் குடும்பமும்,,தம் சகோதரர் குடும்பமும் ஒன்றாகத் தங்கள் தந்தையுடன் வசித்து வந்து,,கூட்டுக் குடும்பத்தின் மாண்பை மங்காது காத்து வருகிறார்கள்!
    ஒவ்வொரு மாதமும் இவர்கள் பள்ளியில் இவர்களது சொந்தப் பொறுப்பில்,, மது மற்றும் போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது!
    தன் மகன்களைப் படிக்க வைத்த இவரது தந்தை,,அவர்களை லட்சங்களில் மிதக்க விடாமல் லட்சியங்களில் குளிக்கச் செய்திருப்பது குறிப்பிட வேண்டிய--கும்பிட வேண்டிய ஒன்றே!!
    எம்.ஜி.ஆர் நம் உள்ளங்களில் நிறைந்திருக்கிறார்! ஆனால்--
    இவரது பாட்டனார் வடிவில் வேட்டைக்காரனாக--
    இவர் தந்தை வடிவில்==விவசாயியாக--
    அன்னமிடும் இவர்களது ஈகையில்--அன்னமிட்டக் கையாக--
    இலவசக் கல்வியில்--புதிய பூமியாக--
    கூட்டுக் குடும்ப ஒற்றுமையில்--பணக்கார குடும்பமாக-
    108 ஆம்புலன்ஸ் இலவச பழுது பார்த்தலில்--ஆனந்தஜோதியாக--
    இப்படிப் பல எம்.ஜி.ஆர்கள் இணைந்திருந்து நிறைந்திருப்பது இவர்கள் குடும்பம் ஒன்றில் தான்!!
    எம்.ஜி.ஆரை விரும்பும் நம் போன்றவர் மத்தியில்--
    எம்.ஜி.ஆரே விரும்பும் குடும்பமாக
    சுஜீத்குமார்,,மற்றும் அவரது குடும்பம் திகழ்கிறது என்பது உண்மை தானே உறவுகளே???.........

  7. #676
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சிதலைவர்
    #இதயதெய்வம்
    #பாரத_ரத்னா_டாக்டர்
    #பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்
    #ஆசியோடு_நண்பர்கள்
    #அனைவருக்கும்_அன்பான
    #இனிய_செவ்வாய்க்கிழமை
    #காலை_வணக்கம்...

    புரட்சி தலைவர் எம்ஜியார் மீது மக்கள் அன்பை பொழிந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைத்ததற்கு வெறும் சினிமாக் கவர்ச்சி மட்டுமே காரணமல்ல; அதையும் தாண்டிய அவரது மனிதநேய செயல்பாடுகள்தான் காரணம். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு அவற்றில் ஒன்றை இங்கு பதிவிடுகின்றேன்...

    எம்.ஜி.ஆர். நடித்த ‘பரிசு’ படம் 1963-ம் ஆண்டு வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிகை சாவித்திரி நடித்திருந்தார். படத்தின் கதையை எழுதிய கே.பி. கொட்டாரக்கரா, படத்தின் இயக்குநர் டி.யோகானந்த் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ‘பரிசு’ படத்தின் சில காட்சிகள் தேக்கடியில் படமாக்கப்பட்டன.

    தேக்கடியில் நடந்த படப்பிடிப்பின் போது ஒருநாள் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென வேகமாக வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார். அவரது இரு பெண் குழந்தைகளும் பரிதாபமாக அருகே நின்றன. அவரை எழுந்திருக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., ‘‘என்ன விஷயம்?” என்று விசாரித்தார்.

    அந்தப் பெண்ணின் பெயர் தேவகி. ‘‘என் கணவருக்கு குடிப் பழக்கம் உண்டு. வனத்துறையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சரியாக போவதில்லை. ஒரு நாள் குடித்துவிட்டு சென்ற என் கணவர் காட்டு யானை தாக்கி இறந்துவிட்டார். அரசு நிர்வாகம் நஷ்ட ஈடோ, கருணைத் தொகையோ தரவில்லை. எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் அழுதவாறே முறையிட்டார் தேவகி.

    அதோடு, ‘‘இரண்டு பெண் குழந்தை களை வைத்துக் கொண்டு தனியாக இருக்கும் என் குடிசைக்கு இரவு
    நேரங்களில் சிலர் தவறான நோக்கத்தோடு வந்து வாசலில் நின்று கலாட்டா செய்கிறார்கள்’’ என்று சொல்லிக் கதறினார். எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கிவிட்டன.

    தேவகியிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அழா தேம்மா. உன் கணவர் பணியாற்றிய வனத்துறையில் உனக்குத் தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான் கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா. உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து உனக்குத் தெரிந்த டீச்சரையும் கூட்டிக் கொண்டு வா’’ என்று சொல்லி அனுப்பினார்.

    அதேபோல, வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒரு வரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு தேவகி அழைத்து வந்தார். அவரது அதிர்ஷ்டமோ என்னவோ, அந்த வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்து மீளவே அவருக்கு வெகுநேரம் பிடித்தது. அவரிடம் எம்.ஜி.ஆர். விசாரித்தார்.

    ‘‘பலமுறை எச்சரித்தும் குடிப் பழக்கத்தால் தேவகியின் கணவர் சரியாக பணிக்கு வருவதில்லை. அவரது சாவுக்குக் கூட குடிதான் காரணம். தெளிவாக இருந்திருந்தால் யானையிடம் இருந்து தப்பித்து இருக்கலாம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் வனத்துறை அதிகாரி கூறினார்.

    அவரிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அது இருக்கட்டும். இப்போது இவர்கள் நிலை ரொம்ப பரிதாபமாக உள்ளது. உங்கள் அலுவலக விதிமுறைகள்படி இவர்களுக்கு அதிகபட்சமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகள் யாரிடமாவது பேச வேண்டும் என்றாலும் நானே பேசுகிறேன்’’ என்றார்.

    அந்த அதிகாரியும், ‘‘நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் முடிந்தவரை உதவுகிறேன்’’ என்றார்.

    மேலும், ‘‘இப்போது குடிசையில் இருக்கும் இவர்கள் கவுரவமாக தங்கும் வகையில் வாடகைக்கு சிறிய வீட்டை இவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா?’’ என்றும் வனத்துறை அதிகாரியிடம் கேட்ட எம்.ஜி.ஆர்., அதோடு நிற்கவில்லை. ‘‘தேவகிக்கு ஏதாவது வேலை வாங்கித்தர முடியுமா?’ என்றும் கேட்டார்.

    எம்.ஜி.ஆரே கேட்கும்போது அதுவும் அவரது ரசிகரான அதிகாரி மறுப்பாரா? இரண்டுக்கும் ஒப்புக் கொண்டார். வீடு ஏற்பாடு செய்து தருவதுடன் தனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் தேவகியை வீட்டு வேலை செய்ய சேர்த்து விடுவதாகவும் கூறினார்.

    தேவகியைப் பார்த்து, ‘‘என்னம்மா? வீட்டு வேலை செய்ய உனக்கு சம்மதமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தேவகியும் சம்மதித்தார்.

    பின்னர், அவரது பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் டீச்சரை அழைத்து, இரண்டு பிள்ளைகளும் படிப்பதற்கான செலவுகளை எம்.ஜி.ஆர். விசாரித்தார். தயாரிப்பாளர் கொட்டாரக்கராவிடம் தனியாகப் பேசி கணிசமான ஒரு தொகையை வாங்கினார். அதை தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, அந்தத் தொகையை அப்படியே தேவகியிடம் எம்.ஜி.ஆர். கொடுத்தார்.

    ஒருவாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அந்த வனத்துறை அதிகாரி வந்தார். உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம் தேவகிக்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்தப் பணம் கிடைத்துவிடும் எனவும் கூறினார். இதைக் கேட்டு எம்.ஜி.ஆர். மிகவும் மகிழ்ச்சி
    அடைந்தார். 1963-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் என்பது பெரிய தொகை.

    இப்போதும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழுதார் தேவகி. இந்த முறை அவரது கண்களில் இருந்து வந்தது, நன்றிப் பெருக்கால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்...!

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம்
    வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டார் நம் வள்ளல் பொன்மனச்செம்மல் ...

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு.........

  8. #677
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *MGR பற்றி இதுவரை வெளியான நூல்கள் பற்றிய தொகுப்பு இங்கே...*

    தமிழ் நூல்கள்:
    ****************
    1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977)

    2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980)

    3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் புலவர். கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980)

    4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978)

    5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985)

    6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983)

    7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979)

    8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978)

    9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)

    10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984)

    11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981)

    12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986)

    13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983)

    14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984)

    15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985)

    16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)

    17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987)

    18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975)

    19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984)

    20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983)

    21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986)

    22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986)

    23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985)

    24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985)

    25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985)

    26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)

    27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987)

    28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)

    29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985)

    30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984)

    31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)

    32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988)

    33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984)

    34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)

    35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988)

    36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985)

    37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)

    38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985)

    39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988)

    40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981)

    41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986)

    42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988)

    43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985)

    44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988)

    45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987)

    46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988)

    47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983)

    48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981)

    49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)

    50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985)

    51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)

    52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985)

    53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)

    54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987)

    55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988)

    56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985)

    57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985)

    58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987)

    59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987)

    60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984)

    61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961)

    62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987)

    63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989)

    64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985)

    65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)

    66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978)

    67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987)

    68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985)

    69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985)

    70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991)

    71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982)

    72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986)

    73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988)

    74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993)

    75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993)

    76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991)

    77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991)

    78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993)

    79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992)

    80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)

    81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978)

    82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985)

    83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)

    84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991)

    85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986)

    86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982)

    87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010)

    88.வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993)

    89.தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)

    90.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967)

    91.ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)

    92.இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967)

    93.தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)

    94.எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)

    95.அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)

    96.அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)

    97.அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)

    98.எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)

    99.எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?

    100.வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)

    101.வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)

    102.புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)

    103.யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)

    104.தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)

    105. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்

    106.எம்.ஜி.ஆர். பதில்களின் தொகுப்பு-கண்ணதாசன் பதிப்பகம்

    107.எம்.ஜி.ஆர். திரைப்படக்கருவூலம்-இதயக்கனி வெளியீடு

    108.எம்.ஜிஆரின் வசன முத்துக்கள்-இதயக்கனி வெளியீடு

    109.எம்.ஜி.ஆர்.ஒரு சகாப்தம்-தொகுப்பாசிரியர் ஆர்.பி.சங்கரன்

    110.கோட்டையும் கோடம்பாக்கமும்-ஆரூர் தாஸ்

    111.எம்.ஜி.ஆர். 100-சபீதா ஜோசப்

    112.வாத்யார்-ஆர்.முத்துக்குமார்

    113.எம்.ஜி.ஆர்-நடிகர் முதல்வரானது எப்படி--அருணன்

    114.நான் ஆணையிட்டால்--எஸ்.கிருபாகரன்.

    115.இருவரின் கதை-எஸ்.திருநாவுக்கரசு

    116.இதய ஒலி-பழனி ஜி.பெரியசாமி

    117.எம்.ஜி.ஆர் 100-காலத்தை வென்ற தலைவர்-இந்து வெளியீடு

    118.விழாநாயகன் எம்.ஜி.ஆர். -கே.ரவீந்தர்

    119.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

    120.அதிர்ந்தது பூமி -எம்.பி.உதயசூரியன்

    121.என் நினைவுத்திரையில்-பி.நாகிரெட்டி

    122.வள்ளல் எம்ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு-எம்.ஜி.ஆர்.முத்து

    123.எல்லாம் அறிந்த எம்.ஜி.ர்.-எஸ.விஜயன்

    124.மறக்க முடியாத மக்கள் திலகம்--என்.சங்கர்.

    125.மக்கள் திலகமும் மனித நேயமும்-எம்.ஜி.ஆர்.முத்து

    126.மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்-ரங்க வாசன்

    127.எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்-மணவை பொன்.மாணிக்கம்

    128.மறக்க முடியாத மாமனிதர்-மணவை பொன்.மாணிக்கம்

    129..சுட்டாச்சு சுட்டாச்சு-சுதாங்கன்

    130.எம்.ஜி.ஆர். பேட்டிகள்--எஸ்.கிருபாகரன்

    131.மனிதப் புனிதர்-எம்.ஜி.ஆர்-கே.பி.ராமகிருஷ்ணன்

    132.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

    133.சொக்கத்தங்கம் எம்.ஜி.ஆர்--பா.அங்கமுத்து

    134.தரணி கண்ட தனிப்பிறவி எ.

    135..மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்-இயக்குநர் மகேந்திரன்

    136.எனக்குள் எம்.ஜி.ஆர். -கவிஞர் வாலி

    ஆங்கில நூல்கள் (English Books)
    ***********************************
    1.Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984)

    2.All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984)

    3.Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984)

    4.Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990)

    5.The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978)

    6.M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992)

    7.The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (

    8.Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)

    9.C.M. Speech's

    *வாழ்க புரட்சி தலைவர்*.........

  9. #678
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு தோழர்களுக்கு இனிய வணக்கம்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு செய்கிறேன்.காரணம்...வேலை பணிகள்.
    அதுவும் பத்திரிக்கை செய்திகளை சேகரித்து அனுப்பி வருவதால் தளத்திற்கு வர முடிய வில்லை.

    நிற்க...என்னுடைய ஊனோடும் உணர்வோடும் கலந்து விட்ட நமது இதய தெய்வத்தின்...புரட்சி தலைவரின் மாபெரும் வெற்றிகாவியமான காவல் காரன் திரைக்காவியம் நேற்று அதாவது 07.09.1967 அன்று வெளி வந்து தமிழக மெங்கும் திரை அரங்குகளை ஒரு கலக்கு கலக்கிய நாள்.

    புரட்சி தலைவரின் சண்டைக்காட்சிகள் நா ன் கிலும் தனி.முத்திரை பதித்து இருப்பார்.பாடல் காட்சிகளில் அவரது வழக்கமான துள்ளல்..துடிப்பு...இளமை அனைத்து வெளிப்பட்டு இருக்கும்.

    6 திரை அரங்கில் 100 நாட்களை கடந்து அந்த ஆண்டின் அமோக வசூலை அள்ளி குவித்த காவியம் காவல் காரன்.படத்தின் முக்கிய அம்சம் அதன் விறு விறுப்பு.
    சஸ்பென்ஸ்..... திரைக்கதை..மற்றும் தலைவரின் அற்புதமான சண்டை காட்சிகள்.

    முதல் அறிமுக காட்சியிலேயே பாக்ஸிங் வீரராக வந்து திரை அரங்கில் கரவொலியை அதிர செய்து இருப்பார்.
    அடுத்து உச்ச கட்ட காட்சியில் ஒரு இடத்தில் அசோகனிடம்........ரோஷமிருந்தால் நாக்கை பிடுங்கி கொண்டு ........போயேன்.என்று மிக இயல்பாக அதே நேரத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்று பேசி நடித்து இருப்பார்.

    அருமையான காட்சி அது....
    நினைத்தேன் வந்தாய்...பாடலில் மாவீரன் அலெக்சாண்டரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.

    குண்டடி பட்ட பின்பும் அதற்கு முந்தைய காட்சிகளில் அவரது ஆண்மை கலந்த குரலும் தெளிவாக வெளிப்படும்.
    வாழ்க..புரட்சி தலைவர் புகழ். முகநூலில் A.Rajahவின் பதிவு............

  10. #679
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் #பதில்

    கேள்வி - நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் நாடோடி மன்னன் சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

    எம்.ஜி.ஆர். பதில் – நான் விரும்புவதை என் தொழிலில் செய்து கட்டவேண்டும் என்பது எனது நீங்காத ஆசையாகும். ஒரு வேளை என் விருப்பம் தவறாகவும் இருந்து விடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்ததில் படம் எடுக்க இதுதான் காரணம்.

    கேள்வி - பழைய உங்களது படம் ஒன்றை பார்த்தேன். அதில் கழுத்தில் ருத்திராட்சை மாலையுடன் இருக்கிறீர்கள். ஏதேனும் ஜெபம் செயது கொண்டிருந்தீர்களா?

    எம்.ஜி.ஆர். பதில் – நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொணடிருந்தேன. இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒரு சின்னத் திருத்தம் அது ருத்ராடசை மாலை அல்ல. தாமரை மணி மாலை. திருப்பதியில் நானே வாங்கிய மாலை அது.

    கேள்வி – பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?

    எம்.ஜி.ஆர். பதில் – பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

    ……… குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர், அறியாத்தனத்தால் அல்ல, தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடுவது வழக்கம்.

    சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும் அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கில படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்பட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. பெரிய கவிஞரை சம்பந்தப்படுத்திய கேள்வி என்பதானால் ஓரளவு விளக்கம் கூற முனைந்தேன். இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர் என்று நினைக்கிறேன்.

    கேள்வி – நடிப்பு கருவூலம் ராஜ்கபூர் நடித்த சங்கம் படம் போல் சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் சிறந்த பாடல்கள் அமைந்த ஒரு படத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அளிப்பீர்களா?

    எம்.ஜி.ஆர். பதில் – அவருடைய பெயர் ராஜ்கபூர், என்னுடைய பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். ஒருவரைப் போல் இன்னொருவர் ஆக முடியாது. கூடாது. ஒவ்வொருக்கும தனக்கென்று ஒரு பாணி, தனக்கென்று ஒரு பாதை இருந்தே

    கேள்வி – நீங்கள் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டீர்களா?

    எம்.ஜி.ஆர். பதில் – அது நான் விரும்பாத பதவி. நான் விரும்பி இருந்தால், அண்ணா காலத்திலேயே மந்திரி ஆகி இருப்பேன். மந்திரி பதவியை நான் ஏற்க மறுத்ததால்தான், மந்திரி பதவிக்குரிய அந்தஸ்து கொண்ட சிறுசேமிப்பு துணைத் தலைவர் பதவியை எனக்கு கொடுத்தார்.

    கேள்வி – உங்களுக்கு சேரும் கூட்டமெல்லாம் நீங்கள் பிரபல சினிமா நடிகர் என்பதால் இருக்கலாம அல்லவா?

    எம்.ஜி.ஆர். பதில் – நான் நடிகன், ஆனால் என்னைப்போல எத்தனையோ நடிகர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் என் போலவே இயக்கம் ஆரம்பித்தால் ஒவ்வொருவருக்கும் இப்படிக் கூட்டம் சேரும் என்று சொல்ல முடியுமா?

    கேள்வி – 12.1.1973 அன்று வேலுரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சிவாஜி கணேசன், அண்ணா தி.மு.க.வைச் சாக்கடை என்று ஏளனமாகப் பேசினார். அவருக்கு தாங்கள் கூறும் பதில் என்ன?

    எம்.ஜி.ஆர். பதில் – நான் படித்த ஏடுகளில் அப்படிப் பேசியதாக எந்தச் செய்தியும் தெரியவில்லை.

    கேள்வி – பிலிமாலயா பத்திரிகையில் சந்திரபாபு எழுதும் கதைக்குத் நீங்கள் ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை?

    எம்.ஜி.ஆர். பதில் – கதைக்குப் போய் யாராவது மறுப்பு தெரிவிப்பார்களா.

    கேள்வி – தங்களுக்கு அரசியல் தெரியாது என்று தமிழ்வாணனும் சிவாஜி கணேசனும் சொல்லி இருக்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

    எம்.ஜி.ஆர். பதில் – கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்னைப் பொறுத்தவரையில் இது பொருந்தும் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    கேள்வி – உங்களது கட்சி நாளிதழில் சிவாஜி கணேசனைப் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றனவே?

    எம்.ஜி.ஆர் பதில் – சிவாஜி கணேசன் எதிர்கட்சியிலிருந்து கொண்டு அண்ணாவின் தி.மு.கழகத்தை எதிர்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அமரர் அண்ணா அவர்கள் ஒரு நாள் சிவாஜி கணேசன் அவர்களின் நாடகத்திற்கு தலைமை தாங்கிப் பாராட்டியதை மறந்துவிட்டீர்களா?

    எங்கிருந்தாலும் வாழ்க என்று அண்ணா வாழ்த்தவில்லையா? அவருடைய தம்பிகளான நாங்கள் அவரைப் பின்பற்றி நமது கடமையை நாம் செய்வோம். (அண்ணா நாளிதழ் 10.11.1976)

    கேள்வி – புரட்சித் தலைவர் அவர்களே 1976-க்கு பிறகு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடுவீர்களா? அல்லது கலைத்துறையில் இருந்து பணியாற்றுவீர்களா?

    எம்.ஜி.ஆர். பதில் – உங்கள் தீர்ப்பும் சட்டத்தின் தீர்ப்பும் என்ன கட்டளை இடுகிறதோ அப்படி நடப்பேன். .........

  11. #680
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நெல்லையில் மக்கள் திலகத்தின் தொடர் வண்ணக்காவியங்கள் படைத்த எழில்மிகு சாதனைகள் சில.

    1972 இதயவீணை 62 நாட்கள்

    1973 உ. சு. வாலிபன் 119 நாட்கள்*
    1973 ப.பொன்னையா 62 நாட்கள்.

    1974 நேற்று இன்று நாளை 119
    1974 உரிமைக்குரல் 180 நாட்கள் 1974 சி.வா.வேண்டும் 62 நாட்கள்

    1975 நி. முடிப்பவன் 77 நாட்கள்*
    1975 நாளை நமதே 62 நாட்கள்*
    1975 இதயக்கனி 100 நாட்கள்*
    1975 ப . வாழ்க 100 நாட்கள்*

    1976 நீ.த.வணங்கு 79 நாட்கள்*
    1976 உ.கரங்கள் 62 நாட்கள்*
    1976 ஊ. உழைப்பவன் 50 நாட்கள்.

    1977 நவரத்தினம் 38 நாட்கள்*
    1977 இ.போ.எ.வாழ்க 77 நாட்கள் 1977 மீனவநண்பன் 77 நாட்கள்

    1978 மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் 62 நாட்கள்*

    இப்படி தொடர்ந்து வெளியான காவியங்களில் நவரத்தினம் திரைப்படத்தை தவிர்த்து அனைத்து திரைப்படங்களும்*
    50, 75, 100, 175 நாட்களை கடந்து அசுர சாதனையை படைத்த ஒரே திரையுலக சக்கரவர்த்தி*
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டுமே.
    இப்படி எந்த நடிகரும் நெல்லை மாநகரில் இதுவரை தொடர் காவியங்கள் மூலம் சாதனைகள் படைத்ததில்லை............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •