Page 58 of 210 FirstFirst ... 848565758596068108158 ... LastLast
Results 571 to 580 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #571
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சில திமுகவினர் கூறுவதுண்டு தலைவர் திரைப்படத் துறையில் வளர்ச்சியடைய கருணாநிதிதான் காரணம் என்று ஆனால் உண்மை அதுவல்ல திரைப்படத்துறையில் கருணாநிதியை அறிமுகப் படுத்தியதும் தலைவர்தான் தலைவர் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் அப்போது மிகவும் பிரபலமான கதாசிரியராக இருந்த திரு இளங்கோவன் அவர்கள் அந்தப் படத்திற்கு கதைவசனம் எழுத ஒப்பந்தம் ஆகியிருந்தார் ஆனால் இயக்குநரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவர் படத்திலிருந்து விலகினார் அதனால் இயக்குநர் இளங்கோவனைப்போல் எழுதக்கூடியவர் இந்தப் படத்திற்கு தேவை என்று கூறினார் உடனே தலைவர் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரது எழுத்து இளங்கோவனைப்போல் இருக்கும் என்று கூறவே சரி நான் சொல்லும் காட்சிக்கு வசனம் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார் கருணாநிதியும் அந்தக் காட்சிக்கு வசனத்தை கடிதம் மூலமாக எழுதி அனுப்பினார் அது இயக்குநருக்கு பிடித்துப் போகவே கருநாநிதியை அந்தப்படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள் கருணாநிதிக்கு அதுவே முதல் திரைப்படம் ஆனால் தலைவரோ அதற்கு முன்பே திரைப்படத்தில் நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்தார் இதே படத்திற்கு சாண்டோ சின்னப்பத் தேவரை ஸ்டன்ட் மாஸ்டராக சிபாரிசு செய்து அவருடைய வாழ்வில் வளம் சேர்த்தவரும் நம் தலைவர்தான்..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #572
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பதவிதேவையில்லை

    ******** ��பேரறிஞர் அண்ணா ஆட்சியை பிடித்ததும் அமைச்சர் பட்டியல் தயார் செய்தார். அதில் எம்ஜிஆர் பெயரும் இடம் பெற்று இருந்தது இதை அறிந்த எம்ஜிஆர் எனக்கு பதவி தேவையில்லை என்றார் காரணம் நான் ஒரு நடிகன் என்னை நம்பி ஒரு சினிமா உலகம் காத்திருக்கு தியேட்டரில் முறுக்கு விற்பவர் முதல் போஸ்ட் ஒட்டும் அந்த தொழிலாளர்கள் வரை அவர்களின் நன்மைக்காக* சினிமாவை துறக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் அப்படி பட்ட பதவி தேவையில்லை மக்களிடம் நல்ல பழக்கத்தை சொல்லி கொடுக்க சினிமா சிறந்த ஏடு என் ரசிகர்களை ஏமாற்ற நான் ஒரு போதும் விரும்ப வில்லை என்று தன் விருப்பத்தை முன் வைத்தார் எம்ஜிஆர்*

    ********* ��கட்சிக்காக பாடுபட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்க எனக்கு பதவி வேண்டாம் என்பது அண்ணாவை உதாசினப்படுத்து போல் என்று பலர் முனுமுனுத்தாலும் அவர் மனநிலையை உணர்ந்த அண்ணா பதவி கிடைக்கவில்லை என்றதும் கட்சி தாவும் உலகில் தம்பி இராமசந்திரன் நம் கட்சிக்கு கிடைத்த வரம்

    ******* ❤பதவிக்காக பகையை தேடுபவர்களும் உண்டு தம்பி இராமசந்திரன் தன் உழைப்பு அனைவருக்கும் பதவி அவரால் கிடைத்தது அதை மறந்து விடக்கூடாது நாம் ஆயிரம் மேடை போட்டு சொல்வதை தம்பி ஒரு காட்சியில் காண்பித்து விட்டு சென்று விடுவார்

    ******** ��தம்பி உழைப்பை கூட கட்சிக்காக காணிக்கை ஆக்கிய உத்தமர் அவருக்கு அனைவரும் நன்றி கடன் பற்றிருக்கிறோம் அவர் திரை உலக சக்கரவர்த்தி அவரையும் ரசிகர்களையும் பிரிப்பது பாவம் அவர் இஷ்டபடியே உழைப்பையும் தர்மம் செய்யலாம் என்று உணர்த்திய என் அன்பு தம்பிக்கு என் இதயத்தில் பதவி தந்திருக்கிறேன் அவருக்கு மக்கள் தந்த இதய சிம்மாசனத்தை எவரும் பறித்து விட முடியாத உயரத்தில் இருப்பவர்

    ******** ��எம்ஜிஆர் வீட்டு சாப்பாடு என்றால் அண்ணாவுக்கு அலாதி பிரியம் இருவரும் ஒன்றாக சாப்பிடும் போது அண்ணா சொன்னார் தம்பி உன்னை பற்றி சிலர் அவதூர் பேசுகின்றனர் நீ சரியாக கட்சி மீட்டிங் பின்பு சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை எப்பவும் சினிமா தான் என்று இருக்கிறதாக சொன்னார்கள் நீ அந்த துறையில் மன்னாதி மன்னனாக இருப்பதால் தான் நான் நாட்டுக்கு மன்னன் ஆகி உள்ளேன் யார் என்ன? சொன்னாலும் உனது இலட்சியம் தொடரட்டும் நீ ஒரு வானத்து சந்திரன் அனைவருக்கும் ஒளி கொடுப்பவன் மற்றவர்கள் கைவிளக்கு போல் ஒளி தருவர்கள் என்று வாழ்த்தி மகிழ்ந்தார் அண்ணா*
    எம்ஜிஆர் பிறந்த நாளில்

    ******* ��அண்ணாவுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் நல்ல புரிதல் இருந்த தால் தான் எம்ஜிஆர் அண்ணாவை ஒரு வினாடி கூட மறந்ததில்லை*.........

  4. #573
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பாச சகோதரர் திரு லோகநாதன் அவர்கள் தெரிவித்த அகஸ்தியா திரையரங்க செய்தி மிகுந்த மன கவலைப்பட வைத்துள்ளது...எல்லாம் காலம், நேரத்தின் கைகளில்... வேறொன்றும் சொல்வதற்கில்லை...

  5. #574
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "தலைவன்". புரட்சி நடிகரின் வித்தியாசமான திரைப்படம். தயாரிப்பில் நெடுநாள் இருந்த படம்.
    படத்துக்கு ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டு இறுதியில் 1970 ஜீன் 24 அன்று வெளியாகி முதல் சுற்றில் சுமாரான வெற்றியை பதிவு செய்தாலும் b & c யில் வெற்றிக்கொடியை பறக்க விட்ட படம். மாற்று அணியினர் எந்தவிதத்திலும் "தலைவன்" தோல்விப் படம் என்று சொல்லியே வந்தனர்.

    அதிலும் படம் பார்த்த மாற்று அணி ரசிகர்கள் எம்ஜிஆர் ஜோதிலட்சுமியை மடியில் வைத்துக் கொண்டு பறப்பதை கிண்டல் செய்து பேசினார்கள். இப்படி செய்வார்கள் என்று தெரிந்துதான் எம்ஜிஆர் முதல் காட்சி ஆரம்பத்திலேயே யோகா கலைகளின் பெருமைகளையும்
    அந்த கலைகள் மூலமாக பல சக்திகளை பெற்று சாதித்து காட்டியவர்களின் கூற்றுகளையும்
    க்ளிப்பிங்ஸாக காட்டுவார். அதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காலகட்டம் அல்ல அது.

    அந்தக் காலகட்டத்தில்தான் விட்டலாச்சார்யாவின் டப்பிங் மாயாஜாலப் படங்கள் சக்கை போடு போட்டன. டைட்டிலில் வந்த எலும்புக்கூடுகளை பார்த்ததும் டப்பிங் படம் பார்ப்பது போல் ஒரு எண்ணம் எல்லோருக்கும் வந்தது
    தவிர்க்க முடியாதது. பாடல்கள் எஸ்எம்.எஸ். "ஆசைமுக"த்துக்கு பின்னர் அவர் இசையமைத்த படம்.
    வித்தியாசமான வேகமான மெட்டுக்களுடன் பாடல்களும் டப்பிங் பட மனநிலைக்கு கொண்டு சென்றதை மறக்க முடியாது.

    ஆயினும் பாடல்கள் அருமையான மெட்டுக்கள். திரும்ப திரும்ப கேட்கத் தூண்டும். படத்தை பற்றிய விமர்சனம் சுமார் ரகத்தை சேர்ந்தாலும் படத்தின் வெற்றி ஒரு
    ஆச்சர்யமானது. எம்ஜிஆர் நடிக்காமல் வேறு யாராவது நடித்திருந்தால் படம் ஒரு வாரம் கூட ஓடியிருக்காது என்பதே உண்மை. தூத்துக்குடி ஜோஸப்பில் வெளியாகி படம் 21 நாட்களை அனாயசமாக கடந்தது. ஜோஸப்பில் வெளியான நிறைகுடம் 18 நாட்களும் சிவாஜி ரஜினியுடன் நடித்த கலர் படமான ஜஸ்டிஸ் கோபிநாத் 18 நாட்களும்தான் ஓடியது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் சேலத்தில் அதிகபட்சமாக 63 நாட்களும் திருச்சியில் 50 நாட்களும்
    ஆத்தூரில் 42 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது. "தலைவன்" வெளியாகி 35 நாட்களுக்குப் பின் ஆக 29 ல் வெளியான "தேடி வந்த மாப்பிள்ளை" தலைவனின் ஓட்டத்தை கட்டுப்படுத்தியது எனலாம். ஆனாலும் "தலைவன்" எம்ஜிஆர் படத்திற்குக்குரிய வெற்றியை பெற தவறவில்லை. படத்தின் ஒரு சில இடங்களின் வசூலை நாம் பார்க்கலாம்.

    கும்பகோணம்
    ------------------------
    தலைவன். 35 நாள் 57,481.80
    எ.வந்தாள். 50. " 50605.61
    தே.வ.மாப். 50. " 82353.69
    சொர்க்கம். 50. 72281.23

    ஆத்தூர்
    --------------
    தலைவன் 40 நாள். 45314.87
    சொர்க்கம் 26. " 36147.09
    எ.வந்தாள் 21. " 32980.80
    வியட். வீடு 27 " 35900.04

    தலைவரின். B சென்டர் வசூலை பார்த்தால் தெரிகிறதா? ஒரு தலைவனை கூட மிஞ்ச முடியவில்லை சிவாஜியின் 100 நாட்கள் வெற்றிப் படங்கள். அதேபோல் a சென்டரான மதுரையில் தங்கத்தில் வெளியாகி சிவாஜியின் "எதிரொலி" படத்தின் மொத்த வசூலையும் 10 நாட்களில் தூக்கியெறிந்தது குறிப்பிடத்தக்கது..........

  6. #575
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மையான பதிவு. நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸில் இல்லாமல் திமுகவில் நீடித்திருந்தால் அவருக்கு அகில இந்திய பெருமைகள் கிடைத்திருக்காது. அவர் திமுக ஆதரவு நிலையில் இருந்து வெளியேறிய பிறகு (அவர் திமுகவில் உறுப்பினராக இருந்ததே இல்லை) காங்கிரஸ் ஆதரவாளர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் அவரை தூக்கிவிட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தமிழகத்தில் வெளியாகும் முன்பே லண்டனில் பிரதமர் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டுக்கு போட்டு காட்டி ஆதரவு திரட்டினார்கள். நாடோடி மன்னன் படத்தை சர்வதேச விழாவுக்கு முதலில் கேட்டு புரட்சித் தலைவர் அதை எடிட் செய்து சுருக்கி கொடுத்த பிறகு படவிழாவுக்கு போக விடாமல் தடுத்தார்கள். இதை பாரத் விருதுக்காக சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்த பாராட்டு விழாவில் தலைவரே தெரிவித்தார்.
    பட முதலாளிகள் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பாலும் அதிகாரிகள் மேல்தட்டு காங்கிரஸ் ஆதரவாளர்கள். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்களது பெயர்களை சினிமாவில் காட்டலாம், சொல்லலாம். ஆனால், திமுக, உதய சூரியன், அண்ணா ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது என்று சென்சார் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டனர். சிவாஜி கணேசனுக்கு இருந்ததைப் போல சென்னையில் சாந்தி தியேட்டர், கிரவுன், புவனேஸ்வரி குத்தகை தியேட்டர், திருச்சியில் பிரபாத் பினாமி தியேட்டர் போன்று சொந்த தியேட்டர்கள் புரட்சித் தலைவருக்கு இல்லை. மன்னவன் வந்தானடி போன்ற மொக்கை படங்களை சொந்த தியேட்டரில் ஓட்டிக் கொண்டார்கள். சொந்த தியேட்டரில் ஓட்டப்பட்ட 100 நாள் படங்களை கழித்தால் அவரது 100 நாள் படங்கள் இன்னும் குறையும். தியேட்டர்காரர்களும் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள். பத்திரிகைகளும் காங்கிரஸ்காரர்கள், மேல்தட்டினர் கையில் இருந்ததால் புரட்சித் தலைவருக்கும் திமுகவுக்கும் எதிராகவே எழுதி சிவாஜி கணேசனை தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். இத்தனை இருட்டடிப்புகளையும் மீறி புரட்சித் தலைவர் இமயமாக உயர்ந்து சினிமாவிலும் அரசியலிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இதில் இன்னொரு பொய் வேறு சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்வார்கள். தமிழக காங்கிரசுக்கு சிவாஜி கணேசன்தான் ஆணிவேராக இருந்தார். அவரால்தான் காங்கிரசுக்கு ஓட்டு விழுந்தது என்று பொய் அள்ளிவிடுவார்கள். காங்கிரசில் இருந்து சிவாஜி கணேசன் பிரிந்ததால் காங்கிரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. 1989 சட்டசபை தேர்தலில் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் 26 இடங்களில் வெற்றிபெற்றது. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட சிவாஜி கணேசன் தோற்றுப்போனார் என்பது வரலாறு. கோபுரத்தை பொம்மை தாங்கியதாம்..........

  7. #576
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*12/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------------, குலேபகாவலி ,மர்மயோகி, மந்திரிகுமாரி ,நாடோடிமன்னன் ,புதுமை பித்தன், மகாதேவி,என்று ஆரம்பித்து ஆயிரத்தில் ஒருவன் வரையில் ஆளுகின்ற அரசின் எதேச்சார போக்கு, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்த்து இறுதியில்*
    போராடி வெற்றி பெறுபவராக நடித்தார்.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறிப்பாக சொல்ல போனால், தன்னுடைய வாழ்க்கையின் லட்சியம் , வாழ்க்கையின் நோக்கம் ஆகியவற்றை*இலக்கண இலக்கியங்களோடு சொன்ன படம் நாடோடி மன்னன் .இந்த படத்தில்தான் பல்வேறு திட்டங்களை தான் மன்னனாக முடிசூட்டியதும் அறிவிக்கிறார் . முதியோருக்கான பென்சன், விவசாயிகளுக்கான பென்சன் ஆதரவற்றவர்களுக்கான திட்டங்கள், ஜாதிகள் ஒழிப்பு பற்றிய சட்டங்கள் ,ஒடுக்கப்பட்டவர்களை கோயிலில் அனுமதிப்பது, ஒடுக்கப்பட்டவர்களை தொட்டால் தீட்டு என்பதில் இருந்து விலக்கு ,பெண்களை கற்பழிப்பவருக்கு முன்* ஜாமீன் இல்லாத தூக்கு தண்டனை போன்ற சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை நாடோடி மன்னனில் தான் ஆட்சிக்கு வருவதற்கு 20 ஆண்டுகள் முன்பே அறிவித்துவிட்ட ஒரு முன்னோடி ஆவார் .நாட்டிலே சட்டதிட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விஞ்ஞான வளர்ச்சி, தொழில் புரட்சி, தொழில்நுட்பம் ஆகியன இல்லாத காலத்தில் படத்தில் அறிவித்தார் .அவற்றை ஒரு பாடலாகவே பாடியிருப்பார்* அவர் .பட்ட துயர் இனி மாறும் , ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்* .**நானே போட போறேன் சட்டம். பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்,நாடு நலம் பெறும் திட்டம்* .என்கிற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாயிலாக அந்த பாடல் இடம் பெற்றாலும் ஒவ்வொரு பிரேமிலும்,ஒவ்வொரு கருத்திலும்,நடிப்பிலும் பாடலிலும்* எம்.ஜி.ஆர்.தான் நிற்கிறார் .* அதே சமயம் ஒருபோதும் திரைப்படங்களில், புகை பிடிக்காதவராக, மது அருந்தாதவராக ,. , பெண்களுக்கு தீங்கு இழைக்காதவராக ,நடிப்பில் வில்லத்தனம் இல்லாதவராக தான் நடிப்பது என்ற கொள்கையில் இருந்து மாறாதவராக இறுதிவரையில் கடைபிடித்தார் .*சாதித்தும் காட்டினார் .


    அ.தி.மு,க கட்சிக்காக ஒரு பத்திரிகையை ஆரம்பிப்பது, தனக்கு தெரிந்த பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பது* என்று முடிவெடுத்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார் . அப்போது எல்லோரும் புரட்சி வணக்கம், புரட்சி காலை, புரட்சி மலர், புரட்சி நடிகர் என்றெல்லாம் யோசனை தெரிவிக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். அதற்கு மறுப்பு தெரிவித்து, என்னை பொறுத்தவரையில் கட்சியின் பெயரில் அண்ணா, பத்திரிகையின் பெயரும் அண்ணாதான் .அண்ணா பெயரில் தொழிற்சங்கம் என்று எங்கும், எதிலும் அண்ணா என்று உறுதியாக இருந்தார் .அவர் எடுத்த முடிவின்படி தோன்றியதுதான் அண்ணா பத்திரிகை .என்ற நாளிதழ் .

    அதே சமயத்தில் ஒரு செய்தியை* எப்படி கிராஸ் செக் செய்வது என்பதற்கு*பல்வேறு பத்திரிகைகளில் ஒரு குழு அமைத்து அதற்கு குரூப் லீடர் ஒருவர் இருப்பார் .ஆனால் எம்.ஜி.ஆர். என்ன செய்வாரென்றால்** காலையில் எல்லா பத்திரிகைகளை காரில் வைத்து ,அதை பத்திரிகையாளர் சோலை என்பவரை படிக்க வைத்து ,ஒவ்வொரு செய்திக்கும்/தலைப்புக்கும்* என்ன கருத்து,எப்படி சொன்னீர்கள்* இதை ஏன் இப்படி பார்க்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு கோட்டைக்கு சென்றுவிடுவார் .மதியம் தி.நகர் அலுவலகத்திற்கோ,அல்லது வீட்டிற்கோ திரும்பும்போது அதே பத்திரிகைகளை காரில் வைத்து , அண்ணா பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கார்த்தியை உடன் அழைத்து சென்று, பத்திரிகைகளில் உள்ள தலைப்புகளில் ,செய்திகள் பற்றி ,ஏன் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று கூறி* அவருடைய கருத்தை/விமர்சனத்தை***கேட்பது வழக்கம் .இப்படி இருவேறு கோணங்களில் இருவேறு* ஆட்கள் மூலமாக, ஒரே விஷயத்தை இரண்டு பார்வைகளில்**அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்வாராம் .*


    எம்.ஜி.ஆர்.அவர்கள்* மக்களில் ஒருவனாக**வாழ்க்கையின் ஒவ்வொரு படிக்கட்டுகளையும் கடந்து வந்தவர் .* அதனுடைய அவமானங்கள், பிரச்னைகள், கஷ்டநஷ்டங்கள், தோல்விகள் ஆகியவற்றை சந்தித்து ,சந்தித்து ,அவற்றை படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டவர் என்பதற்கு திரைப்படங்களிலே வருகின்ற வசனமாகட்டும் , பாடல்களாகட்டும், காட்சிகளாகட்டும் ஏதாவது ஒன்றை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள், அதன்மூலம் சிலர் விவரமறிநது* வாழ்க்கையில் முன்னேற் அது வாய்ப்பாக அமையட்டும் என்று குறிக்கோளுடன்*திரைப்படங்களில் நடித்தார் எம்.ஜி.ஆர்.*


    மிக பெரிய ஜாம்பவான்களாக இருந்த எந்த பெரிய திரைப்பட நிறுவனங்களுக்கும் அவர்களது* திரைப்படங்களில் நடிப்பதற்கு உடனடியாக* பரிபூரண* சம்மதம் தெரிவிக்கவில்லை.தனக்கேற்ற சிறு தயாரிப்பாளர்கள், பட நிறுவனங்களை*நிறைய அளவில் ஊக்குவித்தார் ,உருவாக்கினார் என்பதுதான் அவரது திரைப்பட சரித்திரம் .* அதே போல சாமானியர்கள், அரசியலில் இருந்து மிக பெரிய ஜாம்பவான்களாக பேச்சாற்றல், எழுத்தாற்றல் இல்லாதவர்களை, சாதாரண சைக்கிள் கடைக்காரர்* ,தேநீர் கடைக்காரர்கள்* போன்றோரை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்.*


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்கள் எப்போதும் உற்சாகம் நிறைந்தது .உலகம் பிறந்தது எனக்காக , உன்னை அறிந்தால், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ,புதிய வானம் புதிய பூமி, நான் உங்கள் வீட்டு பிள்ளை, நான் ஆணையிட்டால் போன்ற பாடல்களில் அவர் ஓடி வருகின்ற அந்த துள்ளலும் ,நடன அசைவுகளும் ,உணர்ச்சிகரமான முகபாவங்களும் ,பாவனைகளும் ,அனைவருக்கும் உற்சாகத்தையும்,புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது .அதே போல சண்டை காட்சிகளில் விறுவிறுப்பு, சுறுசுறுப்பு, வேகம், விவேகம், லாவகம் ,ஸ்டெப்புகள், பன்ச்கள் அனைத்திலும் கரை கண்டவர்*கத்தி சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, சிலம்பம், கம்பு சண்டை, ஜூடோ,வில்வித்தை, மல்யுத்தம் ,அனைத்திலும் தேர்ச்சி பெற்ற* ஒரே நடிகர் இந்திய அளவில் எம்.ஜி.ஆர். ஒருவரே .* சண்டை காட்சிகளில் படத்திற்கு படம் புதுமை,*வித்தியாசம் நுட்பம் ஆகியன புகுத்தினார் .* எதிரிகளை பந்தாடும்போது சிரித்துக் கொண்டே அவர்களை வீழ்த்துவதில் வல்லவர் . ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கூட ஒரு சண்டை காட்சியில் ஜெயலலிதா தடுக்கும்போது, இரு பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன் என்று உற்சாகமாக புறப்படுவார் .


    நடனத்தை பற்றி அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை .எவ்வளவோ சொல்வார்கள் .தொல்காப்பியம், நடனம் ,அந்த காலத்தில் இலக்கியத்தில் கொடி கட்டி பறந்த மணிக்கொடி* எழுத்தாளர்களுடன் எம்.ஜி.ஆர். தொடர்பு வைத்திருந்தார் .எழுத்தாளர் திரு.பி.எஸ்.ராமையாவுடன் நட்பில் இருந்தார் .இப்படி எல்லா இலக்கியவாதிகளை பற்றி அறிந்து வைத்திருந்தார் . தொல்காப்பியத்தில் சிலர் நவரசம் உண்டு என்பார்கள். நவரசம் இல்லை . எட்டு ரசம்தான் உண்டு என்பதையும் எம்.ஜி.ஆர். அறிந்து இருந்தார் .எம்.ஜி.ஆர். தன*வீட்டில் அமைத்திருந்த ஒரு பெரிய அரிய நூலகம்* போல**வேறு எங்கும் பார்த்ததில்லை என்று பலரும் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன் .**


    தாயன்பு, சகோதர பாசம், பெண்களை மதிப்பது ,ஒடுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பது, அநியாயத்தை தட்டி கேட்பது ,அடிமைகளை வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து மீட்பது* என்று பல விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, நடித்து மக்கள் மனதில் பதிந்து*ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன் முழு பரிமாணத்தை காட்டினார் .அவர் ஒரு கேள்வி எழுப்பினார் . சிறைச்சாலைகளுக்கு சென்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு இப்போதெல்லாம் அவ்வளவாக கூட்டம் கூடுவதில்லை ஏன் .அவர்களுடைய தியாகங்கள் மக்கள் கண்களில் இருந்து மறைந்துவிட கூடாது .ஒருமுறை கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவுக்கு சிலை வைக்க ஏற்பாடுகள் நடந்தன .நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது ,எம்.ஜி.ஆரை சந்திக்க ஒரு யோசனை இருந்தது .ஆனால் பாலதண்டாயுதம் என்பவர் மேடைக்கு மேடை, எம்.ஜி.ஆர் பற்றி மிக கடுமையாக விமர்சித்தவர் . ஒரு சினிமா நடிகரிடம் போய் நின்று அவரிடம் நிதி கேட்பதற்கு அவருக்கு முகமில்லை தயக்கமும் .சங்கடமும் கூட .ஆனால் திரு.தா பாண்டியன் அவர்கள் பால தண்டாயுதத்தை வலிய அழைத்து ,எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதுவும் பேசவேண்டாம் .சும்மா வாருங்கள் என்று அழைத்து சென்றார் .பாலா தண்டாயுதத்தின் விமர்சன பேச்சுக்களை அறிந்த எம்.ஜி.ஆர். அதை பற்றி பேசுவதை தவிர்த்து , நேரடியாக தா. பாண்டியனிடம் கேட்கிறார். சிலை அமைக்க எவ்வளவு செலவாகும் .நீங்கள் எல்லாம் வழக்கத்தையும்,பழக்கத்தையும் மறந்துவிட்டீர்கள் . இவற்றையெல்லாம் மறந்துவிட்டால் தலைவர்களின் தியாகங்கள் மக்கி போய் மண்ணோடு மண்ணாகிவிடும் .தலைவர் ஜீவாவுக்கு சிலை அமைக்க நான் பொறுப்பு ஏற்று* கொள்கிறேன் .* அந்த சிலை வைக்கும் செலவிற்கான முழு தொகையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பரந்த மனப்பான்மையுடன் சொன்னதும் பால தண்டாயுதம் ஒரு கணம் ஆடி போய்விட்டார் . இதை அவர் எதிர்பார்க்கவில்லைஎம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு போக்குவரத்து கழகங்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டபோது ஜீவா பெயரில் போக்குவரத்து கழகம் ஒன்றை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது . எம்.ஜி.ஆர். பிரிவினை வாதத்தை ஆதரித்தவரில்லை தேசியத்திற்கு எதிராக பேசியவரில்லை .* ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனி உடைமைக்கு எதிராக அவர் குரல் கொடுத்திருக்கிறார் .* பொது உடைமையை நேசித்து, ரசித்து பேசியும் இருக்கிறார் . அவர் கண்ட தத்துவம்தான் அண்ணாயிசம் .அதாவது வாழுகின்ற மக்களுக்கு*.எல்லாம் அவர்கள் வாழ வழி செய்வது .அவர்களின் பசிக்கு உணவிட வேண்டும் .என்கிற தத்துவதைத்தான் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்து நடைமுறை படுத்திகிற உலகத்திற்கே சொன்ன திட்டமாக சத்துணவு திட்டத்தை ,இளமையில் கல்வி* என்பது எவ்வளவு முக்கியமோ , அதே போலஇளமையில்* வறுமை* பசி கொடுமை* கொடியது* என்பதை உணர்ந்துதான் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார் .இப்படி பல சரித்திர சாதனைகள் செய்வதற்கு தன்* வாழ்க்கையை பாடமாக்கி கொண்டார் .மற்ற தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம் ...


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.வாங்கய்யா வாத்தியாரய்யா - நம் நாடு*

    2.நாடோடி மன்னன் படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.*

    3.மன்னனாக முடி சூட்டியதும் அறிவிக்கும் திட்டங்கள் -நாடோடி மன்னன்*

    4.எம்.ஜி.ஆர். -கண்ணாம்பா -எஸ்.வி.ரங்காராவ்-நீதிக்கு பின் பாசம்*

    5.கேளம்மா சின்ன பொண்ணு கேளு - கன்னித்தாய்*

    6.எம்.ஜி.ஆர்.-வி.கோபாலகிருஷ்ணன்* உரையாடல் -கலங்கரை விளக்கம்*



    *.**

  8. #577
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் டிவிக்களில் நடிக பேரரசர்*எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்கள்*ஒளிபரப்பா கிய பட்டியல் (24/08/20 முதல் 31/08/20 வரை )
    ------------------------------------------------------------------------------------------------------------
    24/08/20- சன் லைப் - காலை 11 மணி -ரிக்ஷாக்காரன்*

    * * * * * * * *முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7மணி - விவசாயி*

    * * * * * * * வேந்தர் டிவி -இரவு 11 மணி - தாயை காத்த தனயன்*

    * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி - நவரத்தினம்*

    25/08/20- மூன் டிவி -பிற்பகல் 12.30 மணி - விவசாயி*

    * * * * * * * * *சன் லைப் - மாலை* 4 மணி - கண்ணன் என் காதலன்*

    * * * * * * *புது யுகம் டிவி -இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*

    26/08/20- சன் லைப் - காலை 11 மணி - உரிமைக்குரல்*

    * * * * * * * *மெகா டிவி* - மதியம் 12 மணி - திருடாதே*

    27/08/20 -சன் லைப் - மாலை 4 மணி - தெய்வத்தாய்*

    * * * * * * * *புது யுகம் டிவி - இரவு 7 மணி - கன்னித்தாய்*

    28/08/20 - சன் லைப்* - காலை 11மணி -பல்லாண்டு வாழ்க*

    29/08/20 - மெகா டிவி -மதியம் 12 மாய் - பணத்தோட்டம்*

    * * * * * * * *மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - முகராசி*

    * * * * * * *வெளிச்சம் டிவி _ பிற்பகல் 2 மணி - கலங்கரை விளக்கம*

    * * * * * * * மெகா 24 -* பிற்பகல் 2.30 மணி - கன்னித்தாய்*

    * * * * * * * மீனாட்சி டிவி - இரவு* 9.30 மணி - வேட்டைக்காரன்*

    30/08/20-மெகா டிவி - மதியம் 12 மணி - படகோட்டி*

    * * * * * * *முரசு டிவி -மதியம் 12 மணி/இரவு 7 மணி -தாயை காத்த தனயன்*

    31/08/20 -சன் லைப் - காலை 11 மணி - ராமன் தேடிய சீதை*

    * * * * * * * * மீனாட்சி டிவி - இரவு 9.30 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * *
    Last edited by puratchi nadigar mgr; 31st August 2020 at 11:38 PM.

  9. Thanks orodizli thanked for this post
  10. #578
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1965 ல் "எங்க வீட்டு பிள்ளை" "பணம் படைத்தவன்" "ஆயிரத்தில் ஒருவனை" தொடர்ந்து வெளியான படம்தான் "கலங்கரை விளக்கம்". இதனையடுத்து வெளியான "கன்னித்தாய்" படத்தின் வெற்றியையும் கடந்து தொடர்ந்து வெற்றி நடை போட்ட படம். இயக்குநர் k.சங்கர் புரட்சி நடிகருடன் இணைந்த இரண்டாவது படம். அருமையான சஸ்பென்ஸ் "த்ரில்லர்" நிறைந்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக செல்லும் படம். எம்ஜிஆரின் நடிப்பு பிரமிப்பாக இருக்கும்.

    ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையான நடிப்பில் கலக்குவார்..நாகேஷ் வீரப்பன் காமெடி நிறைவோடு இருக்கும். சரோஜாதேவி
    இரண்டு வேடங்களில் நடித்து
    பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியளித்திருப்பார். பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டுக்கள். முதல்தடவை
    தூத்துக்குடி காரனேஷனில் பார்க்கும் போது மிகவும் த்ரில் ஆக இருந்தது.

    M.s.விஸ்வநாதன்,
    ராமமூர்த்தியிடமிருந்து பிரிந்து தனியாக இசையமைத்த
    முதல் படம் என்று நினைக்கிறேன்.
    பாடல்களில் அத்தனை இனிமை.
    "பொன்னெழில் பூத்தது" பாடலை பஞ்சு அருணாசலம் எழுதியிருப்பார். அந்தப்பாடலில் சிவகாமியின் நடனம் மட்டும் சற்று அதிர்ச்சியை கொடுத்தாலும் பாடல் காட்சி ரசிக்கும்படி இருக்கும்.
    கண்ணதாசனை மிஞ்சியிருப்பார் பஞ்சு.

    "காற்று வாங்கப் போனேன்" பாடல் ரொம்ப ரொம்ப பாப்புலர் ஆன பாடல். அந்த காலத்தில் இந்த பாடலை பாடாத வாயே இருந்திருக்க
    முடியாது என்று சொல்லலாம். சென்னையில் வெலிங்டன் ஸ்ரீமுருகன் ராக்ஸி சீனிவாசாவில் வெளியாகி சென்னையில் 83 நாட்களும் மற்ற ஊர்களிலும் அதிகபட்சமாக 83 நாட்களும் ஓடியது.

    அடுத்து வந்த "குழந்தையும் தெய்வமும்" நவ 19 ல் அதே திரையரங்குகளில் சீனிவாசாவை தவிர மற்ற. திரையரங்குகளில்
    வெளியாகும்வரை ஓடியது. தூத்துக்குடி காரனேஷனில் 35 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. 35 நாட்கள் என்பதை சாதாரணமாக எண்ண வேண்டாம்.

    தூத்துக்குடியில் "ராஜா" 21 நாட்களும் "ஞானஒளி" 18 நாட்களும் "தியாகம்" 21 நாட்களும் இதே திரையரங்கில் வெளியான "மனிதனும் தெய்வமாகலாம்" 13 நாட்களும் "அஞ்சல் பெட்டி 520", 13 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது. மற்ற படங்கள் ஓடியதை பார்த்தால் "கலங்கரை விளக்கத்தி"ன் வெற்றியின் வீரியத்தை புரிந்து கொள்ளலாம். அந்த காலத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட வித்தியாசமான படம்தான் "கலங்கரை விளக்கம்"..........

  11. #579
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயம்!!
    Mgr முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த அமைச்சரின் வாரிசு திருமணம் வடபழனியில் உள்ள பிரபல மண்டப்பத்தில் நடக்கிறது,அது காலை நிகழ்ச்சி.அதே சமயம் காலையில் கோட்டைக்கு சென்றிருந்த mgr, தலைவர்(mgr) கையசைக்க உடனே அவரின் கார் வடபழனி நோக்கி பறக்கிறது.
    மண்டபத்தில் இருந்தவர் மத்தியில் mgr வருகிறார் என்ற பரபரப்பு ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலம் கிட்டே வந்தவுடன் பாலத்தில் செல்லாமல் உஸ்மான் ரோடு திரும்பி தி நகர் வழியாக தலைவரின் கார் பயணிக்கிறது.சைதாப்பேட்டை பாலத்தில் சென்று வலது புறமாக சலவைத் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு செல்கிறது mgr கார்.ஏற்கனவே பலத்த மழை பெய்ததில் அந்தப் பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது.இருப்பினும் தலைவரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரை நிறுத்தச் சொல்லி வேட்டியை மடித்துக்கொண்டு வேகமாகச் சென்றார், அங்கே நடந்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளியின் வீட்டு திருமணத்தில் கலந்துக் கொண்டார்.அந்த தொழிலாளியோ சிலையாய் நின்று பின்னே நாற்காலி ஒன்றை தேடி ஏற்பாடுச் செய்து பொன்மன செம்மலை உட்கார வைக்கிறார்.தலைவர் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு வழக்கம்போல பெருந் தொகையை அன்பளிப்பாக கொடுக்கிறார்.முக்கியமான விசயம் இந்த தொழிலாளி தலைவரின் துணிகளை சலவை செய்பவர்.மேலும் சின்ன பிளாஸ்பேக்! அந்த சலவை தொழிலாளி தன் வீட்டு திருமண பத்திரிக்கையை ஜானகி அம்மையாரிடம் கொடுக்கிறார்,அம்மையாரும் அதை வாங்கிக் கொண்டு அப்போதே ஒரு தொகையை கல்யாண சீதனமாக கொடுக்கிறார்.முடிந்தால் மட்டுமே தலைவர் வருவார் எனக் கூறுகிறார்.அந்த தொழிலாளி அம்மையாரிடம் தலைவர் முதலமைச்சர்,வேலை பளு காரணமாக வருவது அரிது!தாங்கள் தலைவரிடம் பத்திரிக்கை காண்பித்தால் போதுமானது என்றார்,அம்மையாரும் காண்பிப்பதாக உறுதி கூறி அனுப்பி வைக்கின்றார்.அம்மையார் தலைவரின் டைரியில் அந்த தேதியின் பக்கத்தில் பத்திரிக்கையை வைத்துவிடுகிறார்.அவராக அதைப் பார்த்துதான் கல்யாணத்திற்கு போயிருக்கிறார்.
    தலைவரின் புகழ் ஓங்குக!!!.........

  12. #580
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்.

    தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா.

    தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:

    அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
    முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.

    எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

    ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.

    வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

    "தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

    திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

    இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

    அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை
    அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.

    ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

    எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

    விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

    சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

    சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.

    எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

    எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

    எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

    எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •