Page 50 of 210 FirstFirst ... 40484950515260100150 ... LastLast
Results 491 to 500 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #491
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று "நாடோடி மன்னனி"ன் பிறந்த நாள். படம் வெளியான நாள் 1958 ஆக 22 . இன்றுடன் 62 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அதன்பிறகு இன்று வரை அதற்கு இணையான தரத்தில் படங்கள் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். "நாடோடி மன்னன்" எம்ஜிஆர் பிக்சர்ஸாரின் சொந்த படம். ஆங்கில படத்துக்கு நிகராக எடுக்கப்பட்ட தமிழ் படம். க்ளைமாக்ஸ் காட்சியில் போடப்பட்ட செட் தமிழ்பட உலகுக்கு புதிதானது. எம்ஜிஆரை ஒரு மிகச்சிறந்த இயக்குநராக தமிழ் பட உலகுக்கு அறிமுக படுத்திய ஒப்பற்ற திரைக்காவியம்.

    திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கோலம்தான். "மதுரை வீரனு"க்கு பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட வெற்றியை எம்ஜிஆருக்கு கொடுத்த படம். "முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு உதாரணமாக விளங்கிய படம். நாடோடி மன்னன் வெற்றி விழாவை நம்மில் பலர் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    1957 சட்டமன்ற தேர்தல் தான் திமுகவின் முதல் தேர்தல். அதற்கும் எம்ஜிஆரின் "தாய்க்குப்பின்தாரம்" படத்தின் காளை சண்டையை பிரதானப்படுத்தி கட்சியை பிரபலப்படுத்தினார்கள். அதன் பின்பு 1958 ல் வெளியான "நாடோடி மன்னன்" மூலமாக கட்சியை வேகமாக வளர்த்தார்கள். "மனேகரா","கட்டபொம்மன்", "பராசக்தி" போன்ற நாடக சினிமாக்கள் வெளிவந்த நேரத்தில் ஆங்கில படங்களுக்கு இணையான ஒரு தமிழ் சினிமாவை கண்டு உள்ளம் மகழ்ந்தார்கள்.

    "நாடோடி மன்னன்" வெற்றி விழாவை ஊர்ஊருக்கு பிரமாண்ட விழாவாக்கி திமுக வை வளர்த்தார்கள். 10 திமுக மகாநாடு நடத்தி கட்சியை வளர்ப்பதை காட்டிலும் ஒரு "நாடோடி மன்னன்" வெற்றி விழா கட்சிக்கு பேரும் புகழும் தேடித்தந்தது. தமிழ் நாடெங்கும் "நாடோடி மன்னன்" விழாவை பற்றிதான் பேச்சு. வெகு எளிதில் திமுக வளர்வதற்கு "நாடோடி மன்னனி"ன் வெற்றி கை கொடுத்தது.

    பத்திரிக்கைகளிலும் "நாடோடி மன்னன்" விழாவை முன்னிலை படுத்தினார்கள். அப்படி விழா கொண்டாடிய ஊர்களில் கோவை பிரதானமானது. தியேட்டரை அலங்கரித்து மிகப்பெரிய அளவில் விழாவை நடத்தி பரிசு வழங்கும் காட்சியை பார்க்க முடியாதவர்கள் இப்போது காணுங்கள் இந்த அரிய படத் தொகுப்பை.

    மேலும் "நாடோடி மன்னன்" படத்தின் வெற்றி விழா படக்காட்சிகள் இரண்டாம் தொகுப்பு உங்கள் பார்வைக்கு..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #492
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவரின் மாபெரும் சாதனை படங்களில் "நாடோடி மன்னன் "ஒன்றாகும்... அந்தப் படம் மிகப் பிரமாண்டமான அளவில் புரட்சித் தலைவர் தனது தகுதிக்கு மீறி படம் எடுத்தார் இடையிடையே நொந்து கண்ணீர் விட்டார் இந்தப்படம் எவ்வாறு வெளியிட போகிறேனோ தெரியவில்லை இது வெற்றி பெற்றாள் நான் மன்னன் இது தோல்வி அடைந்தால் நான் நாடோடி என்று அவர் கூறினார் கடவுளாகிய பரம்பொருளாகிய இறைவன் அவரை கைவிடவில்லை அவரை படைத்ததே தமிழக மக்களின் இதயத்தை ஆட்சி செய்வதற்காக தானே எப்படி இறைவன் கைவிடுவார் படம் வெளியாகி சக்கைபோடு போட்டது பிரம்மாண்டமான காட்சிகள் கொண்ட கொண்ட அந்தப்படம் ஒரு காலத்தில் மாட்டு வண்டிகளில் கட்டை வண்டி என்று கூறுவார்கள் மரத்தால் செய்யப்பட்ட சக்கரங்களைக் கொண்ட அந்த மாட்டு வண்டிகளில் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக திருவிழாவிற்கு செல்வதுபோல சென்று அந்த படத்தை பார்த்து மகிழ்ந்தார்கள் கிராமங்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் இதே பேச்சு அந்த படத்தின் காட்சிகள் மிக மிகப் பிரமாண்டமானவை நான் என் இளவயதில் அந்த படத்தை பல முறை பார்த்திருக்கிறேன் டிக்கெட் எடுப்பதற்காக நடந்த போட்டியில் என் சட்டை எல்லாம் கிழிந்து போனது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது வாழ்க புரட்சித் தலைவர் புரட்சித்தலைவர் உயிரற்ற உடலாக மண்ணுக்குள் மறையவில்லை மக்களின் மனதில் அவர் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டே இருக்கிறார் அவருடைய நினைவுகள் பசுமையானவை.........

  4. #493
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "இதயக்கனி" ஆமாம், நம் "இதயக்கனி" நடித்த "இதயக்கனி"க்கு இன்று 45 வது பிறந்த நாள். 1975 ஆக 22 ம் தேதி வெளிவந்து வியத்தகு சாதனைகள் செய்த புரட்சித் தலைவரின் மாபெரும் வெற்றிப் படம். அந்த ஆண்டு வெளியான படங்களில் 10 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம்.

    100 நாட்கள் வசூலில் "உலகம் சுற்றும் வாலிபனை" தாண்டிய படம். ஆண்டுக்கு ஆண்டு அவர் சாதனைகளை அவரே தாண்டி உச்சபட்ச சாதனையை உருவாக்கிய படம். இதன்பிறகு வந்த படங்களை காட்டிலும் அதிக வசூலை பெற்று
    இதுதான் இமாலய வெற்றி என்று உலகுக்கு பறை சாற்றிய
    செம்மலின் இதயக்கனி பிறந்த நாளை வரவேற்போம். மேலும் வசூல் விபரங்களை மற்றொரு பதிவில் பார்ப்போம்..........

  5. #494
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாகை சூடு!!
    ------------------
    எம்.ஜி.ஆரை விட பாராட்டத் தக்கவர் யாரெனில்-
    எம்.ஜி.ஆர் ரசிகன்!
    நீ போதித்தக் கொள்கைகளையும் குணாதிசயங்களையும் உனக்கேக் கற்றுத் தரும் அளவுக்குக் கொண்டுள்ளேன் என்று உலகில் ஒரு ரசிகன் முழங்குவார் ஆயின்-
    அவர் எம்.ஜி.ஆர் ரசிகனாக மட்டும் தான் இருக்க முடியும்!
    எம்.ஜி.ஆர் ரசிகருக்கென்று தனிப்பட்ட பழக்கம் ஒன்று உண்டு
    எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு மட்டுமே தாம் எம்.ஜி.ஆர் ரசிகராக இருக்க நேர்வதில் ஒரு கர்வமே உண்டு!
    ஒருவருக்கு ரசிகராக இருக்க தகுதி ஏதும் தேவையில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் ரசிகனாக இருக்கக் கண்டிப்பாக சில தகுதிகள் தேவை என்று புதிய இலக்கணம் வகுத்து,,அதில் பொருதியும் இருப்பவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமே!!
    அந்த வகையில்-- அந்த விதத்தில்-
    எம்.ஜி.ஆர் ரசிகர்களின் திலகமாக மிளிர்பவர் எனக்குத் தெரிந்து ஹயாத் பாஷா என்னும் ஹயாத்!
    இவரது எம்.ஜி.ஆர் பக்திக்கான அங்கீகாரம் இவரைத் தேடி வந்திருக்கிறது என்பதே இன்றையப் பதிவின் சாரம்!
    சிரஞ்சீவி அனீஸ்!
    எம்.ஜி.ஆரை இதயத்தில் வைத்துள்ள இளவல்களில் ஒருவர். பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்!
    முக நூலில் எம்.ஜி.ஆர் புகழ் பாடுபவர்!
    இவர் எம்.ஜி.ஆருக்கு என்று தமிழ் மலர் என்னும், யூ டியூப் சேனலைத் தொடங்கியுள்ளார்!
    இரவு பகல் எப்பொழுதும்
    எம்.ஜி.ஆர் அஞ்சல் சேர்ந்திடும்!!
    அந்த வகையில் 24 மணி நேர எம்.ஜி.ஆர் சேனலே சிரஞ்சீவி அனீஸின் தமிழ் மலர் சேனல்!
    எம்.ஜி.ஆரின் சிறப்புக்களைப் பகிர்ந்தால் மட்டும் போதுமா?? சிறப்பாகப் பகிர வேண்டாமா என்ற சித்தாந்தம் கொண்ட ஹயாத்தின் எம்.ஜி.ஆர்ப் பற்றிய பதிவுகள் தமிழ் மலர் யூ டியூப்பில் இடம் பெறத் துவங்கியுள்ளன!
    ஹயாத் என்னும் விளக்கின், திறமை என்னும் திரியை ,,இழுத்துவிட்டு -அவரது எம்.ஜி.ஆர்ப் பதிவு -என்னும் வெளிச்சத்தைத் தம் சேனலில் எரியச் செய்திருக்கிறது சிரஞ்சீவி அனீஸின் ஊக்கம் என்னும் கரம்!
    இயல்பிலேயே கவிஞரான ஹயாத்தின் பதிவு நேர்த்தி நம்மைப் பிரமிப்படையச் செய்யும் ஒன்றாக இருந்தாலும்-
    உலகிலேயே சிறந்த நடிகர் எம்.ஜி.ஆர் என்னும் இவரது வர்ணனைப் பதிவு நம்மை வாய் பிளக்க வைக்கிறது!
    சிரித்து வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் திரைப்படத்தைக் குறித்தும்,,அந்தக் காலக் கட்டத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பின் பின்னணியில் இருந்த சூழல்கள் குறித்தும் இவர் விளக்கியிருப்பதை ஒவ்வொரு எம்.ஜி.ஆர் ரசிகரும் உள் வாங்க வேண்டிய உளவியல் நூலாகவே நமக்குப் படுகிறது!
    வான் மழை போல் பிரச்சனைகள்--
    ராணுவத்தையே சந்திப்பேன் என்று சொல்லிக் கொண்ட கருணா நிதியின் களங்கமுள்ள தாக்குதல்கள்--
    உயிரைக் குறி பார்த்து கருணா ஏவி விட்டக் கொலை முயற்சிகள்--
    புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தல்--இப்படி அன்று எம்.ஜி.ஆர் சந்தித்தப் பிரச்சனைகள் ஒன்றா இரண்டா?? இவை எல்லாவற்றையும் அடவி அவர் ஒருமுகமாக நடித்தப் பாங்கை இதில் சகோதரர் ஹயாத் மிக நுணுக்கமாகவும்,,மிக எளிமை எனும் அணுக்கமாகவும் ஆராதித்திருக்கிறார்!
    சிரஞ்சீவி அனீஸின் இந்தப் பணி மிகவும் போற்றத் தகுந்தது!
    தமிழ் மலர் யூ டியூப் சேனலுக்கு நாம் தராத ஊக்கத்தை வேறு எவரால் தர இயலும் என்ற வகையில் நம் ஒத்துழைப்பை நல்க வேண்டியக் கடமையை உணர்த்தும் அதே நேரத்தில்--
    ஹயாத் என்னும்--
    நம்மில் ஒருவருக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்புக்காக அவருக்கு வாழ்த்து மழைப் பெய்வோமே!
    ஹயாத்--
    வா! கைக் கொடு!
    வாகை சூடு!!!.........

  6. #495
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கேள்வி : ஊழலற்ற அரசாங்கத்தை எப்படி நீங்கள் நிறுவ முடியும் ? உங்கள் திட்டம் என்ன ?

    #புரட்சித்தலைவரின் #பதில் : எந்தப் பதவிக்கு யாரை நியமிக்கும் முன்னும் அவர்களது விவகாரங்களை ஆராய ஒரு பாரபட்சமற்ற கமிஷனை நிறுவுவோம். அது ஒரு நீதிபதியின் தலைமையில் இயங்கும். அவர்கள் மீது எந்த குற்றங்களும் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின் அவர்கள் பதவியல் நியமிக்கப்படுவார்கள். குற்றவாளி என சந்தேகம் இருக்குமானால் வழக்கு நீதிமன்றம் செல்லும். குறிப்பிட்ட மனிதர் குற்றவாளியானால் பதவியேற்புக்கு பதில் , சிறை செல்ல நேரும். அதேபோல் அமைச்சரோ, மற்ற தேர்ந்தெடுத்த உறுப்பினர்களோ தங்கள் வேலையை சரியாக செய்யாதபோது மக்களுக்கு அவர்களை நீக்கும் உரிமை இருக்க வேண்டும் என திட்டம் வகுத்திருக்கிறோம். மக்கள் வரிப்பணத்தை பொதுப் பணத்தை சூறையாடும் கொடுமை இனியும் நடக்க அனுமதிக்க முடியாது. இது நிறுத்தப்பட வேண்டும் உடனடியாக நாட்டில் நல்ல அரசு உருவாக வேண்டும்.

    - அண்ணா நாளிதழ் 5 - 12 - 1976

    கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க .........

  7. #496
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புர*ட்சித்த*லைவ*ரைப்ப*ற்றி அவ*ர் வாழ்ந்த* கால*த்திலும் அத*ற்குப்பின்னும் அவ*ரைப்ப*ற்றி ஆயிர*க்க*ண*க்கான
    புத்த*க*ங்க*ள் வெளிவ*ந்துள்ளன. இன்ன*மும் வ*ந்துகொண்டிருக்கின்ற*ன*..அவ*ற்றின் ஒரு சிறு தொகுப்பே இது..விடுப*ட்ட* அல்ல*து இதில் குறிப்பிட*ப்ப*டாத* நூல்க*ளை க*மெண்ட்டுக*ளில் தெரிவியுங்க*ள்.. இது ஒரு ப*கிர*ப்ப*ட்ட ப*திவு..

    புர*ட்சித்த*லைவ*ர் பார*த*ர*த்னா டாக்ட*ர் எம்.ஜி.ஆர் அவ*ர்க*ள் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. எம்ஜிஆர் ரசிகர்கள் பலருக்கு அவரைப் பற்றி வெளியான அரிய நூல்களின் ப*ட்டிய*ல்க*ளில் சில் இதோ..

    எம்.ஜி. ஆரைப் பற்றித் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன,

    முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))

    புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))

    மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))

    அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))

    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))

    வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))

    காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))

    எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))

    அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))

    நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))

    சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))

    அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))

    தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))

    எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))

    அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))

    பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))

    மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))

    சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))

    நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))

    எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))

    டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))

    பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))

    தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))

    சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))

    டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

    அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))

    சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))

    இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))

    நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))

    புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))

    நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))

    எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))

    முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))

    சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))

    செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))

    எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))

    எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))

    1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))

    சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))

    முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))

    செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))

    புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))

    எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))

    மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))

    உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))

    அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))

    சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))

    புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))

    வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

    எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))

    ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))

    புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))

    தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))

    வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))

    நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))

    திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))

    எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))

    தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))

    எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))

    மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))

    சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

    தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))

    சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))

    இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))

    பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))

    எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))

    எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))

    நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))

    புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))

    புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))

    எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))

    காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))

    சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))

    சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))

    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))

    எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)

    தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))

    எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))

    அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)

    வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))

    அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))

    தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))

    காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

    எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016

    எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007

    பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007

    நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009

    எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987

    எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011

    விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009

    காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004

    எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015

    பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 - ‎

    செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985

    8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 - ‎

    எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010

    எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 - ‎

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011

    மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –

    எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013

    எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016

    எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008

    எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015

    பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016 -

    மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்

    நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 - ‎

    வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011 - ‎No preview - ‎

    எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000

    வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009

    எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, ‎Es Rajat - 2007 –

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆசிரியர்: மேகலா சித்ரவேல் சேகர் பதிப்பகம்

    ஆங்கில நூல்கள் (English Books)

    Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))

    All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))

    Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))

    Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))

    The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))

    M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))

    The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))

    On the life and achievements of Marudur Gopalan Ramachandran, 1917-1987, Tamil film actor and former chief minister of Tamil Nadu, India.

    Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.

    Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.

    முழு விபரங்கள் கிடைக்கப் பெறாத நூல்கள்

    வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993))

    தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)

    குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967))

    ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)

    இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967))

    தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)

    எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)

    அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)

    அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)

    அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)

    எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)

    எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?

    வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)

    வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)

    புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)

    யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)

    தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)

    இதயதெய்வம் எம்.ஜி.ஆர் in Indian News Papers(Author- Dr. Mohanrajan)

    சி.எம். Speech's
    தொகுப்பு - மல்லிகா பிரபாகரன்.........

  8. #497
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்காகப் பாடி வெளிவந்த பாடல் ஆயிரம் நிலவே வா என தொடங்கும் பாடல். பதிவு அன்று spb அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக ஒலிப்பதிவு ரத்தாகிவிட்டது. வேறு யாரையாவது பாட வைக்கலாம் என்று சொன்னபோது mgr மறுத்துவிட்டாராம்.

    "புதுப் பையன் mgr படத்தில் பாடப் போகிறேன் என்று எல்லோரிடமும் பெருமையாக சொல்லி இருப்பார். இப்போது பாட முடியாமல் போய்விட்டால் மிகுந்த ஏமாற்றம் ஆகிவிடும். பிறகு ராசி இல்லாதவன் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அவர் குணமாகி வந்து பாடட்டும்." என்று கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.
    பின்னர் உடல்நிலை சரியான பின் பாடினார் எஸ்.பி.பி.

    அடுத்தவரின் வாழ்க்கை வரலாற்றிலும் முக்கிய கதாபாத்திரமாக இருப்பதுதான் எம்.ஜி.ஆரின் பெருமை....
    🌟🌟🌟🌟🌟🌟.........

  9. #498
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    டி.எஸ்.பாலையா....
    �� தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

    �� இவர் இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால், பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங்களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

    �� இவர் துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.

    �� கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா 1972ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி மறைந்தார்....

    ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த 'மோகினி' படத்தில் எம்.ஜி.ஆரும், டி.எஸ்.பாலையாவும் இரண்டு நாயகர்களாக இணைந்து நடித்தார்கள். இதில்முதல் நாயகன் அதாவது படத்தின் கதாநாயகன் யார்? என்ற பிரச்சனை வந்தபோது டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர். கதாநாயகனாக இருக்கட்டும் நான்துணை நாயகனாக இருக்கிறேன் என்று விட்டுக் கொடுத்தார்.
    அந்த நன்றிக்காக எம்.ஜி.ஆர். ஒரு படத்தையே விட்டுக் கொடுத்தார். 'கற்பகம்' படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எம்ஜிஆரிடம் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர், கதையில் வரும் மாமனார் வேடத்தில் டி.எஸ்.பாலையா நடிப்பதாயிருந்தால் நான் நடித்து தருகிறேன் என்றார். ஆனால் கதைக்கு எஸ்.வி.ரங்காராவ்தான் பொருத்தமாக இருப்பார் என்றார் டைரக்டர். கே.எஸ்.ஜி. அப்படியானால் வேறு யாரையாவது நடிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். அதன்பிறகுதான் ஜெமினி நடித்தார்.
    எம்.ஜி.ஆர்.நடித்த 'ராஜகுமாரி', 'மதுரைவீரன்', 'அந்தமான் கைதி', 'தாய்க்குப்பின் தாரம்', 'புதுமைப்பித்தன்', 'பாக்தாத் திருடன்', 'ராஜா தேசிங்கு', 'பணம் படைத்தவன்', 'பெற்றால்தான் பிள்ளையா' போனற் படங்களில் சிறப்பாக நடித்தார் பாலையா..........

  10. #499
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1958 ஆம் ஆண்டு வெளியான புரட்சி நடிகர் எம். ஜி. ஆர்., அவர்களின் தயாரிப்பில் இயக்கத்தில் இரு வேட பவனியில் உருவாகி தென்னக மெங்கும் மட்டுமல்லாது.... உலகமெங்கும் திரையிடப்பட்ட முதல் வெற்றி காவியமாக திகழ்ந்தது...*
    "நாடோடி மன்னன்" திரை(பட)க்காவியம்.

    22 .08 .1958 ல் இத்திரைக்காவியம் வெளியாகி இன்றுடன் 62 ஆண்டுகள் (22.08.2020) நிறைவு பெறுகிறது, வெற்றிகரமாக 63 ம் வருடம் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 62 ஆண்டு காலத்தில் ஒரு திரைப்படம் இன்றும் ஒரு மகத்தான வசூலை படைத்துக் கொண்டிருக்கிறது வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறது என்றால்.....
    பெரும் சாதனையாகும்.
    *
    1931 ஆம் ஆண்டில் இருந்து இன்று (2020 ஆம் ஆண்டு) மார்ச் வரை வெளியான திரைப்படங்களிலேயே அதிகப்படியான வெளியீடுகளில் அதிகப்படியான நாட்கள் வாரங்களைக் கடந்து பல கோடிக்கணக்கான வசூலை பெற்றுத் தந்த காவியம்*
    நாடோடி மன்னன் மட்டுமே.

    நாடோடி மன்னன் திரைக்காவியத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் 2009 ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது. கிட்டத்தட்ட அதிகப்படியான நட்சத்திரங்கள் கலைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    16 .08 .2009 ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை ஹாலில் அனைத்து புரட்சித்தலைவரின் அமைப்புகள் எல்லாம் ஒன்று கூடி மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பான முறையில் நடைபெற்ற நாடோடி மன்னன் திரைப்படத்தில் 50 வது பொன்விழா ஆண்டு மட்டுமல்லாது..... அதே சமயம் 1947 ஆம் ஆண்டு முதல1960* ஆண்டு வெளியான திரைப்படங்கள் அனைத்திற்கும் பொன்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.*
    சிறப்பு திரைப்பட கண்காட்சி நடைபெற்றது. காலையில் கிட்டத்தட்ட ஒரு 300 எம்ஜிஆர் பக்தர்கள் ஒன்று கூடி நடத்திய ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது..........

  11. #500
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவரின் 50 ஆண்டுகால திரைப்படங்களை போற்றும் பொன்விழா மலர் வெளியிடப்பட்டது.

    விழாவில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தலைமை தாங்க*
    நாகை தருமன் அய்யா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவ்விழாவில் கலந்து கொண்ட திரைப்பட கலைஞர்கள்**
    பி.எஸ். சரோஜா அவர்கள், ராஜசுலோச்சனா அவர்கள், வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள், ராஜஸ்ரீ அவர்கள்,
    சச்சு அவர்கள, கவிஞர்கள் முத்துலிங்கம் அவர்கள்,.பூவை செங்குட்டுவன் அவர்கள், மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கவிஞர் பிறைசூடன் அவர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் இயக்குனர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அருமையான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.*
    இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் தலைநகர் சென்னையில் நடத்திய பெருமை நமது ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழை சாரும்.

    இதற்கு நாடோடி மன்னன் திரைக்காவியம் 2006ம் ஆண்டு சென்னையில் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பாரத் திரையரங்கில் ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு லட்சத்து 85 ஆயிரத்தை வசூலாக கொடுத்து.... தொடர்ந்து சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் மூன்று வாரங்கள் ஓடி அங்கும் நாடோடி மன்னன் திரைப்படத்தி 48வது ஆண்டு விழா அரங்கேறியது.

    2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நாடோடி மன்னன் திரைக்காவியத்தின் அறுபதாவது ஆண்டு வைர விழா சீரும் சிறப்புமாக ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் சார்பாக காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கலைஞர்கள் பங்கு கொண்ட இந்நிகழ்ச்சி ஒரு வெற்றித் திருவிழாவாக திகழ்ந்தது.

    அதே 2018 ஆம் ஆண்டு சென்னை ஆல்பட் திரையரங்கில் 35 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் படைத்தது நாடோடி மன்னன் திரைக்காவியம். அத்திரைப்படத்தின் 25-வது நாள் விழா பல அமைப்புகள் சார்பில்* நடந்தது..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •