Page 47 of 210 FirstFirst ... 3745464748495797147 ... LastLast
Results 461 to 470 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #461
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *தலைவர் ஒரு தனிப்பிறவி*

    0
    ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்றே எழுதிவந்தார். இந்தப் பெயர் வட இந்தியர் பெயரைப் போல் இருக்கிறது எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொள்ளுங்கள் என நடிப்பிசைத் திலகம் கே.ஆர்.ராமசாமி யோசனை கூறியிருக்கிறார் , அதன் பிறகே எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார்.
    0
    சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை
    எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.
    வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
    காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
    காதோரம் நரைச்ச முடி
    கதை முடிவைக் காட்டுது
    0
    "வசதியும் புகழும் உள்ள பொழுது வராதவர்களெல்லாம் வருவார்கள் நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம் ராமச்சந்திரனிடம் இருக்கிறது " - என்.எஸ்.கிருஷ்ணன்
    0
    ஊருக்கு உழைப்பவன் படத்தில் நாகேஷ் நடிப்பதாகத் தான் இருந்தது . ஆனால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை , உடனே எம்.ஜி.ஆர் தேங்காய் சீன்வாசனை நடிக்க வைத்தார் . அந்தப் படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
    பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
    0
    எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர். அந்நேரம் பாலாஜியிடம் "ஏம்பா பணத்தை இங்க வாங்கி அங்க(சிவாஜியிடம்) கொடுக்குற" என்று தமாஷாகப் பேசுவாராம் எம்.ஜி.ஆர்
    0
    எம்.ஜி.ஆர். வாலியிடம் நீங்கள் எழுதிக்கொடுத்த வரிகள் எல்லாம் என் வாழ்வில் பலித்து விட்டது. ஆனால் இந்த ஒரு வரிமட்டும் பலிக்கவில்லை என்று வருத்தமாகச் சொல்வாராம்.
    எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
    0
    தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு படக் கதையை எம்.ஜி.ஆருக்காக எழுதினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு திரும்பி விட்டமையால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.சிறிது காலம் கழித்து இநதக் கதை படமாகும் பொழுது ரஜினிக்கு அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படம் தான் ராணுவ வீரன்.
    0
    சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் படக்காட்சி ஒன்றை இலங்கை கண்டி நகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் படமெடுத்திருக்கிறார்கள். பைலட் பிரேம்நாத் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கண்டியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார்.
    தான் பிறந்த மண்ணைக் கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயிலும் சிறிது அள்ளிப் போட்டுக்கொண்டாராம்

    உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனைத் தான் முதலில் இசையமைப்பளராக புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். உடனே எம்.ஜி.ஆரின் நண்பர்கள் " பாரின் போய் படம் எடுக்கப் போறேங்குற , பக்திப் படத்துக்கு இசையமைக்குறவறப் போயி ... " என்று கிலியூட்டியிருக்கிறார்கள் . அதன்பிறகு தான் எம்.எஸ்.வியைப் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்துப் பாடல்கள் சிறப்பாக வரவேண்டுமென பல மெட்டுக்கள் போட வைத்து எம்.எஸ்.வியை ரொம்ப வறுத்தெடுத்திருக்கிறார் எம்.ஜி.யார். 9 பாடல்கள் ..அனைத்தும் ஹிட். கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி எம்.எஸ்.விக்கு வாரியிறைத்திருக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இழந்த குன்னக்குடிக்கு பின்னாளில் நவரத்னம் என்றொரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர்.
    0
    கே.வி.மகாதேவன் அடிமைப் பெண் படத்திற்காக ஒரு பாடலுக்கு 52 விதமான மெட்டுகள் போட்டும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லையாம் , இறுதியாக அமைந்த 53 வது மெட்டு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அது ஆலங்குடி-சோமு எழுதிய தாயில்லாமல் நானில்லை என்ற பாடலாம்
    0
    நீரும் நெருப்பும் பட சண்டைக் காட்சியின் சூட்டிங்கை நேரில் கண்டு ரசித்து விட்டு , பின்னர் எம்.ஜி,ஆர் பயன்படுத்திய வாளை தொட்டுப் பார்த்த இந்தி நடிகர் தர்மேந்திராவிற்கு ஆச்சர்யம் ! எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது உண்மையான வாள் !
    0
    சின்னப்பா தேவரின் படங்களில் நடிக்கும் பொழுது அசோகன் சூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுவாராம். எம்.ஜி.ஆர் தாமதாமாக வந்தால் , எம்.ஜி.ஆரைத் திட்டாமல் அசோகனைத் திட்டுவது போல் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரைத் திட்டுவாராம் தேவர். அந்தத் திட்டு தனக்கு இல்லை எம்.ஜி.ஆருக்குத் தான் என அறிந்தும் எம்.ஜி.ஆருக்காக பொறுத்துக் கொள்வாராம் அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர் அசோகன்.
    0
    சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி), தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம் , தேரோட்டம் , பிள்ளையார் ,மகிழம்பூ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் திறமையைக்கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை
    0
    மிருதங்க சக்கரவர்த்தி படத்தைக் கண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி நடிப்பில் பிரமித்துப் போய் இருக்கையிலேயே சில நேரம் உறைந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் கே.சங்கரிடம் " நடிகன்னு சொன்னா சிவாஜி ஒருத்தர்தான்யா" என உணர்ச்சி மேலிடக் கூறினாராம்.
    0
    சின்னப்பா தேவர் தயாரித்த ஒரு படத்திற்கு அதிசய ஆடு என்று பெயர் வைத்தார்கள் , இந்தப் பெயர் ஏனோ தேவருக்குப் பிடிக்க வில்லை. அந்நேரம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தும் அதிசய ஆடு என்ற தலைப்பை நீக்கிவிட்டு ஆட்டுக்கார அலமேலு என்று வைத்தார். தொடர் தோல்வியை சந்தித்து வந்த தேவர் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடி தந்த படம் "ஆட்டுக்கார அலமேலு " .
    0
    மாட்டுக்கார வேலன் படத்தில் வி.கே ராமசாமி எம்.ஜி.ஆருக்கு மாமானாராக நடித்திருப்பார், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் வி.கே ராமசாமியின் காலில் விழுவதைப் போல் நடிக்க வேண்டும் , எம்.ஜி.ஆர் என் காலில் விழுவதா ? ஊகூம் .. மாட்டேன்.. என்று அடம் பிடித்திருக்கிறார் வி.கே ராமசாமி .
    எம்.ஜி.ஆரோ " கதைப்படி எனக்கு மாமனார் தானே சும்மா நடியுங்கள் " எனக் கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆர் , வி.கே ராமசாமியின் காலில் விழும் காட்சியின் சூட்டிங் நடந்த பொழுது வி.கே ராமசாமி சற்று தயக்கத்துடன் சாய்ந்தபடியே தான் நின்றாராம் !
    0
    புதிய பூமி படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் , பூவை செங்குட்டுவனை மிகவும் பாராட்டினார்.
    0
    மீனவ நண்பன் படக்காட்சிகள் முடிந்து விட்ட தருவாயில் முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டிருக்கிறார்.உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.அதற்கு ஸ்ரீதரோ " எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? " எனக் கேட்டிருக்கிறார். : உங்களுக்குத் தெரியாதா ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க " என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் தான் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #462
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சித்தலைவரின் திரைப்படங்களில் தலைமை யேற்று நடத்திய விழாக்கள்*
    பட்டியல்....

    1965 ஆம் ஆண்டு புரட்சி நடிகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் பவனி வந்த மகத்தான வெள்ளிவிழா சித்திரம்*
    சென்னை மாநகரில் முதன் முறையாக மூன்று திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி வெற்றி கண்ட எங்க விட்டுப்பிள்ளை திரைப்படத்தின் 25 வது வார வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

    எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி எம்.ஜி.யார் பிச்சர்ஸ் சார்பாக சென்னையில்*
    கேஸினோ, பிராட்வே, மேகலா திரையரங்குகளில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி.... திரைப் படத்தில் பங்குகொண்ட கலைஞர்களுக்கு கேடயங்கள் பரிசாக வழங்கி எங்க விட்டுப்
    பிள்ளை திரைப் படத்தின் கதாநாயகரான மக்கள் திலகத்திற்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.

    1967 ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரான பிறகு முதன் முறையாக நடந்த நூறாவது வெற்றி விழா. மக்கள் திலகத்தின் ஒப்பற்ற இயற்கை நடிப்பின் மூலம் வெளியான பெற்றால் தான் பிள்ளையா திரைக்காவியத்தின் நூறாவது நாள் நிகழ்ச்சி ஆகும்.* சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பெற்றால் தான் பிள்ளையா திரைப்படத்தின் 100 வது நாள் விழாவுக்கு* தலைமை ஏற்று திரைப்பட கலைஞர்களுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் கேடயங்களை வழங்கினார்கள்.

    1967 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காவல்காரன் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் குளோப் திரையரங்கில் சிறப்பாக செந்தில் பிக்சர்ஸ் சார்பாக நடைபெற்றது.* இவ்விழாவிற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையேற்று திரைப்படத்தில் பங்கு கொண்ட மக்கள் திலகத்திற்கும் மற்ற பிற கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.
    பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை ஏற்ற திரைப்பட விழாக்கள்.*

    1958 ல் நாடோடி மன்னன்*
    100 வது வெற்றி விழா.*

    1965 ல் எங்க விட்டுப்பிள்ளை திரைப்படத்தின் வெள்ளிவிழா !*

    1967ம் ஆண்டு நடைபெற்ற பெற்றால் தான் பிள்ளையா*
    100 வது நாள் திரைப்பட விழா.*

    1967 ல் காவல்காரன் திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழா!*

    ஆகிய திரைப்பட விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டார்கள்.........

  4. #463
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள் சில....

    நகரில் 2 திரையரங்கில் திரையிடப்பட்டு வெற்றிக்கொடி நாட்டிய காவியம் தாய்க்குப்பின் தாரம் சந்திரா திரையரங்கில் 98 நாட்களும், மீனாட்சி அரங்கில்*
    66 நாட்களும் ஓடிய முதல் காவியம் தாய்க்குப்பின் தாரம் ஆகும்.

    நகரில் மக்கள் திலகத்தின் முதல் வெள்ளி விழா திரைப்படமாக மதுரைவீரன் திகழ்ந்தது. இக்காவியம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 180 நாட்கள் ஓடியது. திரையரங்கிற்கு...... மதுரைவீரன்* வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு மக்கள் திலகம் வருகை புரிந்தார்.*

    நகரில் சிந்தாமணி திரையரங்கில் புரட்சித் தலைவர் அவர்கள் கதாநாயகனாக பவனி வந்த வெற்றி திரைப்படமான ராஜகுமாரி 112 நாட்கள் ஓடியது.

    மதுரை மாநகரில் ஆசியாவின் மிகப்பெரிய அரங்குகளில் ஒன்றான தங்கம் திரையரங்கில் நாடோடி மன்னன் திரைக்காவியம் 19 வாரங்கள் ஓடி 3 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை பெற்று மதுரை வீரன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மதுரையில் வெற்றிவாகை சூடிய காவியம் ஆகும்-

    மதுரை மாநகரில் 1947 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை வெளியான மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பல.......
    நூறு நாட்களை கடந்து வெற்றி சாதனை புரிந்துள்ளது..........

  5. #464
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜகுமாரி*
    மந்திரிகுமாரி*
    மர்மயோகி*
    சர்வாதிகாரி*
    மலைக்கள்ளன்*
    குலேபகாவலி*
    அலிபாபாவும் 40 திருடர்களும் மதுரைவீரன்*
    தாய்க்குப்பின் தாரம்*
    சக்கரவர்த்தி திருமகள்*
    நாடோடி மன்னன்*
    பாக்தாத் திருடன்*

    ஆகிய திரைப்படங்கள்*
    100 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டு..... அதிகப்படியான காவியங்கள்* குறிப்பிட்ட ஆண்டுகளில் ஓடியது மக்கள் திலகத்திற்கு மட்டுமே!

    மதுரை மாநகரில் தொடர்ந்து வெளியான மக்கள் திலகத்தின் திரைப் படங்கள் 100 நாட்களை கடந்து சாதனை புரிந்தது போல் வேறு எந்த நடிகருக்கும் சாதனை கிடையாது.*

    தொடர்ந்து வெளியான மலைக்கள்ளன்*
    குலேபகாவலி*
    அலிபாபாவும் 40 திருடர்களும் மதுரைவீரன்*
    தாய்க்குப்பின் தாரம்*
    சக்கரவர்த்தி திருமகள்.

    மக்கள்ததிலகத்தின்*
    6 திரைப் படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை ஆகும்.
    மதுரை மாநகரில் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர்*
    எம் ஜி ஆர் ஒருவருக்கு மட்டுமே உகந்த சாதனையாகும்.

    1961 ஆம் ஆண்டு வெளியான மக்கள் திலகத்தின் 5 திரைப்படங்களில்*
    திருடாதே,*
    தாய் சொல்லை தட்டாதே திரைக்காவியங்கள் 100 நாட்களை கடந்தும்.... நல்லவன் வாழ்வான் அரசிளங்குமரி திரைப்படங்கள்*
    84 நாட்கள் ஓடியது.*
    சபாஷ் மாப்பிள்ளை*
    திரைப்படம் 60 நாட்கள் ஓடி சாதனை பெற்றது..............

  6. #465
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1962 ல் மதுரை மாநகரில் ஒரே திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடிய மகத்தான காவியம் தாயை காத்த தனயன் மட்டுமே ஆகும்.

    மதுரை சிந்தாமணி திரையரங்கில் குடும்பத் தலைவன்*
    திரைப்படம் 86 நாட்கள் ஓடியது.

    1963 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் நூறு நாட்கள் ஓடிய மக்கள் திலகத்தின் காவியமே சாதனையாகும்.*
    நியூ சினிமா திரையரங்கில் நீதிக்கு பின் பாசம்*
    திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

    1964 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் வெற்றி காவியமான பணக்கார குடும்பம் திரைப்படம் 126 நாட்கள் ஓடி முரசு கொட்டி முதலிடம் கண்டது.

    1965 ஆம் ஆண்டு வெளியான நடிகப் பேரரசு எம்ஜிஆர் அவர்கள் பவனி வந்த மாபெரும் காவியம்*
    எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் மதுரை வீரன் திரைப்படத்திற்கு பின்* சென்ட்ரல் சினிமா திரையரங்கில் வெள்ளி விழாவை கொண்டாடி 2 வது திரைப்படமாக சிறப்பு செய்தது.

    சென்ட்ரல் சினிமா அரங்கில்*
    எங்க வீட்டு பிள்ளை திரைப்படம்*
    25 வாரம் ஓடி பின் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் காவியம் திரையிடப்பட்டு 85 நாட்கள் திரையரங்கில் ஓடி மகத்தான வசூலை படைத்தது..........

  7. #466
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1966 ஆம் ஆண்டு மதுரை சிந்தாமணி திரையரங்கில்*
    புரட்சி நடிகரின் வண்ணக் காவியமான அன்பே வா திரைப்படம் 21 வாரங்கள்,*
    147 நாட்கள் ஒடி வெற்றி முரசு கொட்டி அதிக வசூலை உருவாக்கித் தந்தது.

    1967 ஆம் ஆண்டு பொன்மனச்செம்மல் எம் ஜி ஆரின் மறுபிறவி திரைக்காவியமான காவல்காரன் திரைப்படம்* சிந்தாமணி திரையரங்கில்*
    126 நாட்கள் ஓடி மூன்று லட்சத்தை கடந்து...... அதிக வசூலை தந்து மிகப்பெரிய வெற்றியை பதித்தது.

    1968 ஆம் ஆண்டு மக்கள் திலகத்திற்கு புகழ் குவித்த*
    மதுரை மாநகரில்**
    ஒளிவிளக்கு திரைப்படம் முதன் முறையாக 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
    மதுரை மீனாட்சி அரங்கில்*
    147 நாட்கள் ஓடி புதிய சாதனையை படைத்த நூறாவது வெற்றிக் காவியம் ஒளிவிளக்கு ஆகும்.

    குடியிருந்த கோயில் திரைக்காவியம் நியூ சினிமா திரையரங்கில் 133 நாட்கள் ஓடி மகத்தான வசூலை தந்து வெற்றி நடை போட்டது.

    மதுரை சிந்தாமணி திரையரங்கில் ரகசியபோலிஸ்115 காவியம்*
    92 நாட்கள் ஓடி இரண்டு லட்சத்தி*
    50 ஆயிரத்திற்கு மேல் வசூலை குவித்தது. தொடர்ந்து கருப்பு வெள்ளை திரைப்படமான கண்ணன் என் காதலன் திரைப்படமும் சிந்தாமணி திரையரங்கில் 93 நாட்கள் ஓடி வெற்றிக்காண வசூலை தந்தது..........

  8. #467
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1969 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் இரண்டு வண்ண காவியங்கள் படைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த வெற்றியாகும்.*

    எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த அடிமைப்பெண் திரைக்காவியம் சிந்தாமணி திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி 100 காட்சிகள் அரங்கு நிறைந்து அதிகமான வசூலை 4 லட்சத்திற்கு மேல் கொடுத்த முதல் காவியமாக* திகழ்ந்தது.

    1969ஆம் ஆண்டு புரட்சித்தலைவரின் நம்நாடு திரைக்காவியம் நூறு காட்சி
    களுக்கு மேல் மீனாட்சி அரங்கில் அரங்கு நிறைந்து 133 நாட்கள்
    *ஓடி மகத்தான வசூலை தந்தது.

    1970 ஆம் ஆண்டு வெளியான மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி படைப்பு மாட்டுக்கார வேலன் திரைப்படம் ஆகும். இக்காவியம் சிந்தாமணி திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி அதிகபட்சமான வசூலை ஈட்டி தந்தது.*

    அரங்கில் 1969 ல் அடிமைப்பெண் 1970 ல் மாட்டுக்கார வேலன் தொடர்ந்து இரண்டு காவியங்கள் வெள்ளிவிழாவை கடந்து சாதனை ஆகும்.

    1954 ல் இருந்து 1957 வரை மக்கள் திலகத்தின் காவியங்கள் எப்படி ஆரம்பத்தில் சாதனை புரிந்ததோ....அதே போல தொடர்ந்து வெளியான பல காவியங்கள் மதுரை*
    மாநகரில் 100 நாட்களை கடந்து வெள்ளிவிழாவை கடந்து சாதனையை அரங்கேற்றியது.

    அடிமைப்பெண், நம்நாடு மாட்டுக்காரவேலன், என் அண்ணன் ஆகிய நான்கு திரைப்படங்களும் தொடர்ந்து மதுரை மாநகரில் ஓடிய சாதனையில் முதலிடம் பெறுகிறது மகத்தான வசூலையும் ஓடிய நாட்களையும் வெற்றி கொள்கிறது..........

  9. #468
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1970 ல் மாட்டுக்கார வேலன் சிந்தாமணி அரங்கில் வெள்ளிவிழா....**

    என் அண்ணன் சென்ட்ரல் திரையரங்கில் வெற்றி விழா.....*

    சிந்தாமணி திரையரங்கில் எங்கள்தங்கம் நூறாவது நாள்* சாதனை......

    இப்படி தனிப்பெரும் நாயகனின் வெற்றியை பதித்த ஆண்டு*
    1970 ஆம் ஆண்டு ஆகும்.

    1971ம் ஆண்டில் மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்களான குமரிக்கோட்டம் திரைப்படம் சிந்தாமணி திரையரங்கில் 100 நாட்களை கடந்து வெற்றி கண்டது.*

    அதன்பின் மதுரை நியூ சினிமா திரையரங்கில் புரட்சித் தலைவரின் வெற்றி திரை காவியமான ரிக்க்ஷாக்காரன்*
    163 நாட்கள் ஓடி வெள்ளி விழா நாட்களை நெருங்கியது.*
    4 லட்சத்திற்கு மேல் வசூலை* கொடுத்த முதல் காவியமாக ரிக்க்ஷாக்காரன் திகழ்ந்தது..

    அதே ஆண்டில் புரட்சி நடிகரின் இரு வேட நடிப்பில் வெளியான நீரும் நெருப்பும் திரைக்காவியம் சென்ட்ரல் சினிமா திரையரங்கில் 12 வாரங்கள் ஓடி அதிகபட்சமான வசூலை திரையரங்கில் தந்தது.

    1972 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் புரட்சித்தலைவரின் காவியங்கள் படைத்த வெற்றி மிகு சாதனைகள்*..........

  10. #469
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நகரில் இரண்டு திரையரங்கில் திரையிடப்பட்டு 100 நாட்களை கடந்த காவியம் நல்ல நேரம் ஆகும் அலங்கார் ..... மூவிலேண்ட்* திரையரங்குகளில் மொத்தம் 142 நாட்கள் ஓடி நாலு லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிக் கொடுத்தது.*
    அதன்பின் இதயவீணை திரைப்படம் தேவி திரையரங்கில் 110 நாட்கள் ஓடி மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை தந்தது.

    சங்கே முழங்கு திரைப்படம் மீனாட்சி திரையரங்கிலும்
    ராமன் தேடிய சீதை திரைப்படம் சிந்தாமணி திரையரங்கில்*
    12 வாரங்களும், அன்னமிட்டகை திரைப்படம் 9 வாரங்கள் ஓடி வெற்றியை தந்தது*

    நான் ஏன் பிறந்தேன் திரைக்காவியம் தங்கம் திரையரங்கில் 10 வாரங்களைக் கடந்து இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி தந்த காவியமாக திகழ்கின்றது.

    மேலும் மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் சாதனைகள் 1973-ஆம் ஆண்டில் இருந்து 1978 ஆம் ஆண்டு வரை மீண்டும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்...

  11. #470
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் புனிதமான ஆட்சியை அமைக்க வேண்டும்.... அவரது திருப்பெயரை மாநிலம் முழுவதும் சொல்ல வேண்டும்.....*

    புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த பின் தலைவரின் பெயரில் பல திட்டங்கள் உருவாகவேண்டும்* என்றெல்லாம் நாம் ஆரம்ப காலத்தில் நினைத்தோம்.* ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.

    1972 ஆம் ஆண்டு இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்கள் தொடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது.*

    புரட்சித் தலைவர்* நம்மிடம் இருந்த* (1987ம் ஆண்டு) வரை அந்த கழகம் எப்படியெல்லாம் புரட்சித் தலைவரால் வளர்க்கப்பட்டது. ஆட்சியில் மக்களுக்காக பல திட்டங்களை செயல் வடிவம் தந்தார் என்பதை நாம்* தலைவர்* வாழ்ந்த காலத்தில் பார்த்தோம். அந்த மாபெரும் தலைவரின்* புகழ் பாடி மகிழ்ந்தோம்.பொற்கால ஆட்சியில் சிறப்புடன் வாழ்ந்தோம்.
    *
    புரட்சித் தலைவர் மறைந்த பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிலரின் கையில் போனது. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார்கள்.*
    மீண்டும் கழகம் ஒன்றிணைந்தது
    1991 ல் புரட்சித்தலைவரின் ஆட்சி என்று சொல்லி அனைத்து புரட்சித்தலைவரின் அன்பு உள்ளங்களும் வாக்களித்தார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை.....
    1991 ,2001 ,2011 ,2016,
    ஆகிய ஆண்டுகளில் பார்த்ததோம்.*
    ஆனால் இன்று ஒரு அரசு விளம்பரத்தில் கூட. அண்ணாவும் புரட்சித்தலைவரின் திருவுருவ படங்களை கண்பதில்லை.*
    தலைவரின்* ஆட்சி என்று ஆட்சியாளர்கள் சொல்லுவதும் கிடையாது.*
    எங்கும் வேறு புராணம் பாடுகிறார்கள்.*
    ஜெ....ஆட்சி என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

    திராவிட முன்னேற்றக் கழகம் கருணாநிதியை எதிர்ப்பதற்காக அவர் வரக்கூடாது என்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கடந்த காலதேர்தலில் வாக்களித்தோம். ஆதரித்தோம்.*

    ஆனால் புரட்சித்தலைவரின் புகழ் கடந்த காலத்தில் மறைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு 4 முறை வந்தும் புரட்சித் தலைவரின் பெயரை சொல்லாது அவர் பெயரை இருட்டடிப்பு செய்த நிகழ்ச்சிகள் நாம் கண் கூடாக பார்த்ததோம்.

    புரட்சித்தலைவரின் ஆட்சியை புனிதமான ஆட்சியை இனிமேல் யார் கொண்டு வருவார் என்பது தான் நமக்கு கவலையாக இருக்கிறது.

    கட்சி மேடையிலும், அரசியல் கூட்டங்களிலும்,* தமிழக அரசு சார்பாக நடைபெறும் விழாக்களிலும் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்தை மேடையில் வைப்பதே கிடையாது.*
    அதற்கு பதிலாக*
    ஜெ.... போட்டோவை தான் வைத்துக் கொண்டு.....*
    ஜெ.... ஆட்சி என்று சொல்லி
    கொண்டு.....
    ஜெ..... என்ற பெயரிலேயே பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.*

    நமது புரட்சித்தலைவரின் பக்தர்கள் எதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்கிறார்கள்.....

    திமுக வை எதிர்ப்பதற்காக சிலர் வாக்களிக்கிறார்கள்.*

    சிலர் புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சி இருக்க வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள்.*

    சிலர்* கட்சியின் மூலம் ஏதாவது பலன் கிடைக்குமா என்று வாக்களிக்கிறார்கள்.*

    இன்னும் சிலர் கட்சி எப்படி இருந்தால் என்ன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை இருக்கிறது அது மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள்.

    லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் தொண்டர்கள்.... பக்தர்கள்* இருக்கின்ற இந்த தமிழகத்திலேயே நம்மை வைத்து பகடைக்காய் ஆடிய வருடங்கள் பல.......*

    மேலும் நம்மைப் போன்ற உண்மையான புரட்சித்தலைவர் மேல் பற்றுக் கொண்ட. நாம் ..... தலைவரை* தெய்வமாக நினைக்கின்ற.....
    கோடிக்கணக்கான புரட்சித்தலைவரின் பக்தர்கள்**...
    ஒன்று கூடி தலைவரின் ......* நல்ல முடிவை எடுத்து புரட்சித் தலைவருக்கு எதிர்காலத்தில் வரும் தலைமுறைகளில் அவரது பெயரும் புகழும் காப்பாற்றப்பட வேண்டும்.*

    இன்றைய அரசிடம் அனைத்து எம்.ஜி.ஆர் பக்தர்கள் சார்பாக தலைவரின் புகழை பாட*
    அறிக்கை ஒன்றை தயார் செய்து* கொடுத்தால் தான் நல்லது என்று நினைக்கின்றேன்.*
    இன்றைய அரசு செய்கிறார்களோ இல்லையோ அது நமக்கு தெரியாது..... ஆனால் புரட்சித் தலைவரின் பெயரை நம்மைப் போன்றவர்கள் எதிர்காலத்தில் புகழ் பாட வேண்டும்....... வரும் தலைமுறைக்கு கொண்டு*
    செல்ல...... எம்.ஜி.ஆர். பக்தர்கள் வலுவாக ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் இருந்தால் தான்* எதையும் சாதித்து காண்பிக்க முடியும்... தலைவரின் புனித புகழை பாடமுடியும்.*

    புரட்சித் தலைவரை உண்மையாக நேசிப்பவர்கள் மட்டுமே..... புரட்சித்தலைவரின் புகழைப் பாட முடியும்....

    புரட்சித்தலைவர் புகழையும் அவரது பெருமைகளையும் அவரது சாதனைகளையும் அவரது மனிதநேயத்தையும் பரப்ப உண்மையான புரட்சித் தலைவரின் பக்தர்கள் தமிழகமெங்கும் தென்னக மெங்கும் உலகமெங்கும் ஒன்று கூடினால் தான் இனி வருங்காலத்தில் புரட்சித்தலைவரின் புனித பெயர் தமிழகத்திலும் தமிழக மக்களின் உள்ளத்திலும் வாழும் என்பதை இந்த நேரம் திட்டவட்டமாக சொல்லிக் கொள்ள கடமைபட்டுள்ளேன். சமுதாயத்தில் எம்.ஜி.ஆர். பக்தருக்கும்*
    சம உரிமை கிடைக்க பாடுபட...
    ஒத்துழைப்பு நிலைக்க...
    ஒன்றிணைந்தால்* நன்று என நினைக்கும்...........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •