-
17th August 2020, 06:31 PM
#431
Junior Member
Diamond Hubber
#கொள்கையைத் #திணிக்காத #மக்கள்திலகம்
செஞ்சி நகரச் செயலாளராக இருந்த கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.
முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென அறிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். உடனே இடைமறித்து,
"பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.
""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்...என்றவர் மேலும்...
எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.
#என்னைப்போலவே #என் #தம்பி #கண்ணனும் #ராகுகாலத்தில்
#நம்பிக்கையில்லாதவர்தான். #ஆனால், #அவருக்கு #பெண் #கொடுக்கும் #பெற்றோர்களும்
#எங்களைப்போலவே #இருக்கவேண்டும் #என்று #நாங்கள் #எப்படி #எதிர்பார்க்கமுடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் #மனம் #சஞ்சலமடைய #நானோ, #என் #தம்பி #கண்ணனோ #காரணமாக
#இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.
#தன்னுடைய #கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை..........
-
17th August 2020 06:31 PM
# ADS
Circuit advertisement
-
17th August 2020, 06:32 PM
#432
Junior Member
Diamond Hubber
#கொள்கையைத் #திணிக்காத #மக்கள்திலகம்
செஞ்சி நகரச் செயலாளராக இருந்த கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.
முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென அறிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். உடனே இடைமறித்து,
"பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.
""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்...என்றவர் மேலும்...
எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.
#என்னைப்போலவே #என் #தம்பி #கண்ணனும் #ராகுகாலத்தில்
#நம்பிக்கையில்லாதவர்தான். #ஆனால், #அவருக்கு #பெண் #கொடுக்கும் #பெற்றோர்களும்
#எங்களைப்போலவே #இருக்கவேண்டும் #என்று #நாங்கள் #எப்படி #எதிர்பார்க்கமுடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் #மனம் #சஞ்சலமடைய #நானோ, #என் #தம்பி #கண்ணனோ #காரணமாக
#இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.
#தன்னுடைய #கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை..........
-
17th August 2020, 06:34 PM
#433
Junior Member
Diamond Hubber
1976ம் ஆண்டு சென்னையின் மிகப் பெரிய அழகான ஸ்ரீகிருஷ்ணா அரங்கில்" உழைக்கும் கரங்கள்" திரைப்படம் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து வசூலில் மாபெரும் சாதனை. மதுரை சினிப்ரியா
மினிப்பிரியா 2 அரங்கிலும் வெளியிடப்பட்டு 85 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும் சேலத்தில் அலங்கார் திரையரங்கில் 96 நாட்களில்*
125 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.
1977ஆம் ஆண்டு வெளியான இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் திருச்சி பேலஸ் திரையரங்கில் 100 காட்சிகளும் மதுரை சேலத்தில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றிநடை போட்டது.
மீண்டும் அதே ஆண்டில் வெளியான மீனவ நண்பன் திரைக்காவியம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 150 காட்சிகள் அரங்கு நிறைந்து சேலத்திலும் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து.... மகத்தான சாதனையை புரிந்தது.*
வசூலில் மாபெரும்*
வெற்றியை தந்தது.
புரட்சித்தலைவரின் புரட்சிகரமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படம் 1978-ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்காவியம் தமிழகத்தில் பட்டுக்கோட்டை நகரில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.*
உலகம் சுற்றும் வாலிபன் உரிமைக்குரல்*
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைக்காவியங்கள்*
நகரில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.
1974 ல் உரிமைக்குரல் திரைப்படம் கோவை சேலம் ஈரோடு பட்டுக்கோட்டை கும்பகோணம் நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து*
100 நாட்களை கடந்து வசூலில் மகத்தான புரட்சியை ஏற்படுத்தியது..........
-
17th August 2020, 06:34 PM
#434
Junior Member
Diamond Hubber
1974 ஆம் ஆண்டு வெளியான மூன்று திரைப்படங்களும் மதுரை மாநகரில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து.*
உரிமைகுரல் காவியம் சினிப்பிரியா அரங்கில்*
200 காட்சிகளும்*
நேற்று இன்று நாளை திரைக்காவியம் சிந்தாமணி திரையரங்கில் 140 காட்சிகளும் சிரித்து வாழவேண்டும் திரைக்காவியம் நியூ சினிமா அரங்கில் 125 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை.
1975 ல் மக்கள் திலகத்தின் இதயக்கனி திரைப்படம் மதுரை சிந்தாமணி அரங்கில் 201 காட்சிகள் அரங்கு நிறைந்தது. சென்னை சத்யம் மகாராணி அரங்கில் நூறு காட்சிகளுக்கு மேல் வெற்றி நடை போட்டது.*
திருச்சி சேலம் கோவை நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்தது இதயக்கனி திரைக்காவியம்.
1975 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் நினைத்ததை முடிப்பவன் திரைப்படம் சென்னை தேவி பாரடைஸ் உமா திரையரங்கில் 105 காட்சிகள் அரங்கு நிறைந்து மதுரை மீனாட்சி அரங்கில் 130 காட்சிகள் அரங்கு நிறைந்து மேலும் சேலம் ஜெயா திரையரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றி சாதனையாகும்.
1976ம் ஆண்டு வெளியான நீதிக்கு தலைவணங்கு திரைக்காவியம் சென்னை தேவிகலா திரையரங்கில் 266 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 126 காட்சிகள் அரங்கு நிறைந்து வசூலுடன் மகத்தான சாதனையாகும்.
1976ம் ஆண்டு சென்னையின் மிகப் பெரிய அழகான ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் உழைக்கும் கரங்கள் திரைப்படம் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து வசூலில் மாபெரும் சாதனை. மதுரை சினிப்ரியா
மினிப்பிரியா 2 அரங்கிலும் வெளியிடப்பட்டு 85 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும் சேலத்தில் அலங்கார் திரையரங்கில் 96 நாட்களில்*
125 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்..........
-
17th August 2020, 06:35 PM
#435
Junior Member
Diamond Hubber
சென்னை உமா திரையரங்கில் 127 காட்சிகளும் காஞ்சிபுரத்தில் நூறு காட்சிகளுக்கு மேலும் பல்லாவரத்தில் 100 காட்சிகளும் வில்லிவாக்கம் ராயல் திரையரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றி சாதனையாகும்.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மேலும் கடலூர் வேலூர் சேலம் ஈரோடு திண்டுக்கல் விழுப்புரம் திருப்பூர் பாண்டிச்சேரி பொள்ளாச்சி போன்ற நகரங்களில் எல்லாம் நூறு காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து வெற்றிநடை போட்டது. மேலும் தஞ்சை குடந்தை கரூர் பட்டுக்கோட்டை மாயூரம் நகரங்களிலும் சாதனை.
தமிழ் திரைப்பட வரலாற்றில் 25 திரையரங்குகளுக்கு மேல் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து 33 திரையரங்கில் 75 நாட்களை கடந்து 23 திரையரங்கில் 100 நாட்களை வெற்றிகொண்ட காவியம் தென்னக திரையுலக வானில் மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் ஆகும்.
தமிழகத்தில் முதல் வெளியீட்டில் 44 திரையரங்கில் 50 நாட்களும் பெங்களூர் நகரத்தில் 3 திரையரங்கில் 100 நாட்களை கடந்து 5 திரையரங்கில் 50 நாட்களை வெற்றி கொண்டது மற்றும் கேரளாவிலும் ஆந்திராவிலும் சாதனை படைத்த இக்காவியம் இலங்கையிலும் கேப்பிட்டல் திரையரங்கில் 203 நாட்கள் ஒடி வெற்றி நடை போட்டது.
இலங்கை மாநகரில் மகத்தான சாதனையை படைத்த காவியம் உலகம் சுற்றும் வாலிபன்*
ஆறு திரையரங்கில் திரையிடப்பட்டு மூன்று ஏரியாக்களில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த முதல் காவியம் 200 நாட்களில் பத்து லட்சத்தை நெருங்கிய முதல் காவியம் உலகம் சுற்றும் வாலிபன்.*
இலங்கை நாட்டில் 40க்கும் மேற்பட்ட அரங்கில் ஏ பி சி சென்டர்களில் திரையிடப்பட்டு சாதனையை ஏற்படுத்திய முதல் காவியம்" உலகம் சுற்றும் வாலிபன்".........
-
17th August 2020, 06:36 PM
#436
Junior Member
Diamond Hubber
சென்னையில் ரிக்க்ஷாக்காரன் ஏற்படுத்திய சாதனைகள்... கிருஷ்ணா திரையரங்கிலும்*
100 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றிக் கொடி நாட்டியது.*
மதுரை நியூ சினிமா*
சேலம் திருச்சி நகரங்களிலும் ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்தது.
1972 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் வெற்றி காவியமான தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான நல்ல நேரம் காவியம் சென்னையில் 4 திரையரங்கில் திரையிடப்பட்டு சென்னை மகாராணி சித்ரா திரையரங்குகளில்*
தொடர்ந்து 116 காட்சிகள்அரங்கு நிறைந்து சாதனை.*
மேகலா திரையரங்கில்*
90 காட்சிகளும் ராம் திரையரங்கில் 82 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை மற்றும் திருச்சி சேலம் நகரங்களில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்தது.
1972* இதயவீணை திரைக்காவியம் சென்னை குளோப் திரையரங்கில் 100 காட்சிகளும் மதுரை தேவி அரங்கில் 116 காட்சிகளும் அரங்கு நிறைந்து அவ்ஆண்டில் சாதனையாக திகழ்ந்தது.
1973 ஆம் ஆண்டு புரட்சித்தலைவரின் மூன்றாவது வெற்றி படைப்பான எம்ஜிஆர் பிக்சர்ஸின் பிரமாண்டமான தயாரிப்பில் வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்ட வெற்றிக் காவியம் உலகம் சுற்றும் வாலிபன்.
தென்னக திரைவானில் எந்த ஒரு* போஸ்டர் பேப்பர் விளம்பரங்கள் இன்றி மாபெரும் வெற்றியை அதிகமான திரையரங்குகளில் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து வெற்றிக் கொடியை நாட்டிய தென்னிந்திய திரைவானில் முதல் காவியம் .
25 ஊர்களில் நூறு காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் தொடர்ந்து 227 காட்சிகள் அரங்கு நிறைந்து மதுரை மீனாட்சியில் 258 காட்சிகள் அரங்கு நிறைந்து தொடர் சாதனையாகும்.
கோவை மாநகரில் 178 காட்சிகளும் சென்னை அகஸ்தியாவில் 156 காட்சிகளும் திருச்சி பேலஸில் 155 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனையோ சாதனை.........
-
18th August 2020, 09:39 AM
#437
Junior Member
Diamond Hubber
சென்னை நகரில் 1951 ஆம் ஆண்டு வெளியான மர்மயோகி திரைப்படம் முதன்முறையாக மகத்தான வசூலை உருவாக்கியது அதன்பிறகு 1954 ஆம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் வசூலை வென்று முதலிடத்தை தக்க வைத்தது.
மலைக்கள்ளன் திரைப்படத்தின் வசூலை வென்று மதுரைவீரன் புதிய வசூலை ஏற்படுத்தி சினிமா உலகில் முதல் வெற்றியைப் படைத்தது.
புரட்சி நடிகரின் தயாரிப்பான நாடோடி மன்னன் காவியத்தின் வசூல் மகத்தானது. சென்னை நகரில் மதுரைவீரன் பெற்ற வசூலை நாடோடிமன்னன் வெளிவந்து வெற்றி கண்டது.
தலைநகர் சென்னையில் நாடோடிமன்னன் பெற்ற வசூலை 1965 ஆம் ஆண்டு வெளியான*
எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் வென்று புதிய சாதனையை படைத்தது.*
முதன் முறையாக ஒரே நிறுவனத்தில் மக்கள்திலகம் பவனி வந்த திரைக்காவியங்கள் வெற்றி படைத்தது.*
சென்னை நகரில்*
தாய்க்குப்பின் தாரம்*
தாய் சொல்லைத் தட்டாதே தாயைக் காத்த தனயன் வேட்டைக்காரன் திரைப்படங்கள்* 100 நாட்களை கடந்து வெற்றி கண்டது.
மேலும் சாதனைகள் தொடரும்..........
*
-
18th August 2020, 09:40 AM
#438
Junior Member
Diamond Hubber
சென்னை நகரில் 1954 ஆம் ஆண்டிலிருந்து 1958 ஆம் ஆண்டு வரை வெளியான மக்கள் திலகத்தின் நூறு நாள் கடந்த காவியங்கள்....*
மலைக்கள்ளன் மதுரைவீரன் சக்கரவர்த்தி திருமகள் குலேபகாவலி தாய்க்குப்பின் தாரம் புதுமைப்பித்தன்*
நாடோடி மன்னன்
வேறு எந்த நடிகர்களுக்கும் இது போன்ற தொடர் சாதனைகள் சென்னை நகரில் ஆரம்ப காலகட்டத்தில் கிடையாது. என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தனிப்பெரும் கதாநாயகனாக நடித்து வெளிவந்த காவியங்களே அதிகமாக 100 நாட்களை கடந்து வெற்றி முரசு கொட்டி உள்ளது.
சென்னை நகரில் 6 திரைப்பட அரங்கில் முதன் முறையாக வெளியான காவியம்*
மகாதேவி ஆகும்.
1961 ஆம் ஆண்டு வெளியான புரட்சி நடிகரின் 2 சமூகப் படங்களான திருடாதே**
தாய் சொல்லைத் தட்டாதே இரண்டு காவியங்களும் சென்னை நகரில் மூன்று திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சாதனை.* தனிப்பெரும் நாயகனின் வெற்றியாகும்.
தமிழ் திரை உலகில் மற்றுமொரு சாதனையில் மக்கள் திலகம்..........
-
18th August 2020, 09:40 AM
#439
Junior Member
Diamond Hubber
சென்னை மாநகரில் மக்கள் திலகத்தின் வெற்றிப்பட சாதனைகளில் சிலவற்றை முன்
வைக்கின்றேன்.
சென்னை நகரில் நான்கு திரைப்பட அரங்கில் 100 நாட்களை கடந்த முதல் காவியம்*
1956 ல் வெளியான*
மக்கள் திலகத்தின்*
மதுரைவீரன் ஆகும்.*
ஒடிய திரையரங்குகள்*
பிரபாத் ௪ித்ரா* சரஸ்வதி காமதேனு நான்கு அரங்கில் முதன் முறையாக* 100 நாட்களை*
கடந்து சாதனையை படைத்தது.
சென்னை காமதேனு திரையரங்கில்100 நாளை வெற்றி கொண்ட முதல் காவியம்*
மதுரை வீரன் ஆகும்.
1957 ல் சென்னை மிட்லண்ட் திரையரங்கில் முதன்முறையாக 100 நாட்களை கடந்த திரைப்படம் புரட்சி நடிகரின்*
புதுமைப்பித்தன் ஆகும்.
சென்னை காசினோ திரையரங்கில் 1954 ஆம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் திரைப்படம் முதன்முறையாக 100 நாட்களை கடந்து சாதனையாகும்.
சென்னை நகரில் மூன்று திரையரங்கில் திரையிடப்பட்டு கிருஷ்ணாவில் 21 வாரங்களும், பாரகனில் 19 வாரங்களும், உமா திரையரங்கில் 17வாரங்களும் ஓடி சாதனை பெற்ற காவியம்*
நாடோடி மன்னன்.
1958 வரை தமிழ் சினிமாவில் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே*
சாதனையில்.....
நான்கு திரையரங்கில்
மதுரைவீரன் திரைப்படம்
100 நாட்களும்....
மூன்று திரையரங்குகளில்*
100 நாட்களை கடந்த
நாடோடி மன்னன் திரைப்படமும் சாதனை ஆகும்.
சென்னை நகரில் முதன் முறையாக 100 காட்சிகள் அரங்கு நிறைந்த திரைப்படம் நடிகப்பேரரசின் நாடோடி மன்னன் திரைப்படம் ஆகும்.*
*பாரகன் கிருஷ்ணா உமா திரையரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
சென்னை நகரில் தொடர்ந்து வெளியான நான்கு கருப்பு-வெள்ளை படங்கள் 100 நாட்களை வெற்றிகொண்டு சாதனையாகும். மதுரை வீரன் தாய்க்குப்பின் தாரம் சக்கரவர்த்தி திருமகள் புதுமைப்பித்தன் ஆகிய திரைப்படங்கள் நூறு நாட்கள் கடந்து ஓடி சாதனை ஆகும்..........
-
18th August 2020, 10:38 AM
#440
Junior Member
Diamond Hubber
பொன்மனம் கொண்ட புரட்சித் தலைவர் மனித பண்பாளர். அவர் திரையில் பாடியது போல் 'மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ?,
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ? அந்த முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ'? என்ற
பாடலின் கருத்துபடி வாழ்ந்தவர்.
எதிரி கூட தனக்கு சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
திரையில் ஒவ்வொரு படத்திலும் எம்ஜிஆரை தாக்கி பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் சிவாஜி. அவரது கிண்டலுக்கும் கேலிக்கும் எம்ஜிஆர் பதில் சொல்லுவது கிடையாது. எம்ஜிஆரிடம் நடித்து விட்டு சிவாஜியிடம் சென்ற நடிகர்களாகட்டும், இல்லை, சிவாஜியின் ஆஸ்தான நடிகர்களாகட்டும், அவர்களை வைத்து எம்ஜிஆரை தாக்குவதற்கு பயன்படுத்திக் கொள்வார்.
அதிலும் முரட்டுத்தனமாக தாக்குபவர்களை
தனது பக்கத்திலேயே வைத்து கொள்வது அவர் வழக்கம். Mrr வாசு, சசிகுமார், சந்திரபாபு, ஜெயலலிதா, 'சோ" மேலும் பலர் இதில் அடங்குவர். அதிலும் 'சோ'வை வைத்து தன்னுடைய சொந்தப்படமான "தங்கப்பதக்க"த்தில் சிவாஜி செய்த காமெடி யாராலும் மறக்க முடியுமா?
அதிமுகவை கிண்டல் செய்து 'அண்ணாயிஸ'த்தை 'அப்பாயிஸ'ம் என ஏளனம் செய்துவிட்டு பின்னாளில் அந்தக் கட்சியுடனே கூட்டணி வைத்தால் ஐயனின் பிள்ளைகள் கூட ஓட்டுப் போடாமல் சிவாஜியின் முதல்வர் கனவையும், அவர் இளவல் சண்முகத்தின், உள்துறை கனவையும் தகர்த்து விட்டார்களே! என் சொல்வது!. ஆனாலும் அவர்கள் செய்த கிண்டலைப்பற்றி எள்முனையளவு கூட எம்ஜிஆர் கவலைப்படவில்லை. அவர்களுக்கு பதில் சொல்லவும் மாட்டார்.
நாங்கள் திரையில் பார்த்து விட்டு கொதித்து போய் சிவாஜியை திட்டி நோட்டீஸ் போடுவதோடு சரி. பின்னர் அடுத்த படத்திலும் இதே வேலையை செய்வார். எம்ஜிஆரின் வெற்றியை தாங்க முடியாமல் எம்ஜிஆர் வெளிமாநிலத்தவர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் நான் பச்சைத் தமிழன் என்று மார் தட்டுவார். பிறகு ஜாதியின் பேரை சொல்லி மீசையை முறுக்குவார். என்ன செய்து என்ன பலன்? புரட்சி நடிகரின் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்குக்கு மேல் யாரும் தருவதாக இல்லை.
சரி, நடிப்பிலாவது சிறந்து விளங்கலாம் என்று நினைத்து 'மிகை நடிப்பை' கையில் எடுத்ததால் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் மனதை விட்டு நீங்க ஆரம்பித்தார். அவர் நினைத்தால் கொடையிலாவது எம்ஜிஆரை முந்தியிருக்கலாம். ஆனால் என்ன செய்வது கஞ்சத்தனம், சுயநலம் அவரை தடுத்தது. ஆனாலும் பாடலில் 'விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரம் ஆகாது' என்று காழ்ப்புணர்ச்சியை காட்ட தவறவில்லை.
எம்ஜிஆர் அதிக சம்பளம் வாங்குவதை குறி வைத்து 'கொள்ளையடிப்பவன் வள்ளலைப்போல ஊரை ஏய்ப்பவன் உத்தமன்போல' என்று வயிற்றெரிச்சலை கொட்டி பாடி காட்டினார். அவர் அந்த பாடல் வரிகளை உச்சரிக்கும் போது அவரது முகபாவம் அவரது பொறாமை உணர்வை வலுப்படுத்துவது போல இருக்கும். இயற்கையான நடிப்பிலும்,
கொடைத்தன்மையிலும், வாங்கும் சம்பளத்திலும், செல்வாக்கிலும் தனக்கு நிகரானவர் சிவாஜி இல்லை என்பதால் அவரது சாடல்களை ஏதோ வயித்தெரிச்சல் கலைஞனின் உள்ளக்கொதிப்பாக நினைத்து அதற்கு பதிலுரைக்காமல்
சென்று விடுவார் புரட்சி நடிகர்.
அதன்பிறகு எம்ஜிஆர் முதல்வர் ஆனபின்பு அவரிடம் நெருங்கி வந்து அவரின் தீர்க்க முடியாத குடும்பப் பிரச்சனைகளுக்கும், வியாபார பிரச்னைகளுக்கும் தீர்வு கண்ட விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 'சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் வாத்தியார் கால் பிடிப்பார்' என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தால் அவர்கள் ஞாபகசக்தி அபாரமானது என்றே கூறலாம்.
அகில இந்தியாவிலும் அதிக சம்பளம் பெரும் நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். அது மட்டுமல்ல அவரை வைத்து ஒரு படமெடுத்தால் போதும் வாழ்நாள் முழுவதும் குடும்பமே நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையை பெற்றிருந்தார்.
ஹிந்தி நடிகர்கள் கூட ஸ்ரீதர் படத்தயாரிப்பில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய நீங்கள் எம்ஜிஆரை வைத்து படமெடுப்பது ஒன்றுதான் சரியான வழி என்று அவருக்கு தீர்வு சொன்னார்கள்.
ஏனென்றால் ஹிந்தி படம் கூட அவர்களை மீட்க முடியாது என்பதை உணர்ந்து இவ்வாறு சொன்னார்கள்.
எம்ஜிஆர் யாரையுமே தன்னுடைய எதிரியாக பார்க்கவில்லை. அரசியலில் மட்டும் தீயசக்தியை தீவிரமாக எதிர்த்தார். அதனால்தான் தலைவர் புகழ் இன்று இமயம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் உயர்ந்த விருதான 'பாரத ரத்னா' விருதும் அவரை நாடி வந்தது எனலாம்..........
Bookmarks