-
4th May 2020, 04:23 PM
#221
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர். நூல் வரிசை : 002
“எம்.ஜி.ஆர் கதை”,
(எம்.ஜி.ஆர். வாழ்ந்த இடங்களுக்கு சென்று சேகரித்தது)
நூல் ஆசிரியர் – இதயக்கனி எஸ் விஜயன்.,
குறிப்பு : எம்.ஜி.ஆர். அவர்களின் கேரளா தொடர்ப்புகளிருந்து சுவாரசியமாக ஆரம்பிக்கும் அருமையான நூல்.
நூல் விலை : Rs.200.00 (நான் வாங்கிய காலத்தின் விலை இது. தற்போதைய புதிய பதிப்புகளில் விலை மாறுபடலாம்)
பதிப்பகம் : இதயக்கனி பிரசுரம், 12/32, வீரபாண்டி நகர் 2 வது குறுக்கு தெரு, சூளைமேடு, சென்னை – 94.
தொலைபேசி – 9344554777.
தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நான் எம்.ஜி.ஆர். நூல்களை தேடித்தேடி சேகரித்து படிப்பவன். அவரை பற்றிய நூல்கள் 500க்கும் மேல் வெளியாகியுள்ள நிலையில், என்னிடம் 120 நூல்கள் மட்டுமே உள்ளது. என்னிடம் இருக்கும் நூல்களின் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விபரங்களையும் முடிந்தளவு தினம் ஒன்றாக வெளியிட முயற்சிக்கின்றேன். என்னை போன்ற எம்.ஜி.ஆர். நூல் சேகரிப்பாளர்களுக்கு இந்த நூல்களை வாங்க விரும்பினால் அவர்களுக்கு இந்த முயற்ச்சி பெரும் உதவியாக இருக்கும் என்ற நோக்கிலே. எம்.ஜி.ஆர். நூல்களை பற்றிய எனது இரண்டாவது பதிவாகும் இது.
நீங்களும் உங்கள் சேகரிப்பில் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்களின் முன்புறத் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விவரங்களையும் Commend பகுதியில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தயவு செய்து Inboxல் இட வேண்டாம். எல்லோரும் பார்க்கும் வகையில் Commend பகுதியிலியே வெளியிடுங்கள். இது நாம் எல்லோரும் நமக்குள் பரஸ்பரம் உதவி செய்வது போன்ற ஒரு நல்ல ஏற்பாடுதான். இன்றிலிருந்து நூல் வரிசை 120 வரும்வரை (அதாவது என்னிடம் இருக்கும் நூல் வரை) வேறு எந்த பதிவுகளும் இந்த முகநூலில் வராது.
மேலும், நீங்கள் Commend பகுதியில் வெளியிடும் உங்கள் வசம் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்கள் எனது சேகரிப்பில் இல்லை என்றால்.. அதையும் இதே போலவே வெளியிடுகிறேன் விபரங்கள் தந்த உங்கள் பெயருடனேயே. அதற்க்கு முன்புறத் அட்டைப்படம், நூல் பற்றிய விவரங்கள் அச்சிடபட்ட பகுதிகள் போட்டோ எடுத்து அனுப்புங்கள். ஆசிரியர் பெயர், விலை, பதிப்பக விலாசம், தொலைபேசி எண் எல்லாம் உள்அடங்கியதாக இருந்தால் மிகவும் நலம். இப்போது நான் வெளியிட்டது போலவே.
முடிந்தளவு இந்த பதிவை SHARE செய்யுங்கள். அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களிடமும் சென்று சேர வசதியாகும்.
நன்றி ஒரு எம்.ஜி.ஆர். பக்தனாக........
-
4th May 2020 04:23 PM
# ADS
Circuit advertisement
-
4th May 2020, 04:25 PM
#222
Junior Member
Diamond Hubber
#எம்ஜிஆர் #மதித்த #தாய்குலம்
பெண்களை மிகவும் மதித்தவர் எம்.ஜி.ஆர்.அவர் அனைத்துப் பெண்களையும் தாயாக பாவித்தார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தார்.இடைவேளையில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் வந்து எம்.ஜி.ஆர் காலில் விழுந்து கண்ணீர் விட்டார்.
கணவரை இழந்த அந்த பெண் உணவுக்கே கஷ்டப்படுவதாக கூறினார்.உடனடியாக எம்.ஜி.ஆர் அவரது உதவியாளரை அழைத்து அந்த பெண்ணை அவரது அலுவலகத்தில் உட்கார செய்யுமாறு உத்தரவிட்டார்.அதன்படி உதவியாளரும் செய்தார்.
சிறிது நேரம் சென்றபின் எம்.ஜி.ஆர். வரும் நேரம்.உதவியாளர் உள்ளே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். தனது தாயார் சத்தியாவின் முழு உருவப் படத்தை வைத்து, அதன் முன்பு அவருடைய ஆசனத்தை வைத்திருப்பார்.தினமும் அம்மாவை வணங்கிவிட்டு அந்த இருக்கையில் உட்காருவது வழக்கம்.அவரைத்தவிர வேறு யாரும் அதில் உட்காருவது இல்லை.
ஆனால் அறையில் உட்கார வைக்கப்பட்ட பெண், அதில் உட்கார்ந்து வியர்வை வழிய அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த உதவியாளர் அதிர்ச்சியில் நின்றார்.
அதே நேரம் எம்.ஜி.ஆரும் உள்ளே வந்தார்.அவர் அந்த பெண் அசந்து தூங்குவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே, மின் விசிறியைப் போட்டு விட்டார்.பின்னர் அங்கு விளையாடிக்கொண்டியிருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சிக்கொண்டு இருந்தார்.
அந்த பெண் கண் விழித்தபோது, அஞ்சிய பெண்ணைப் பார்த்து, "உன் வீட்டுக்கு அனைத்து உதவிகளும் வரும். நீ செல் அம்மா" என்று எம்.ஜி.ஆர் கூறி வழியனுப்பி வைத்தார்.
இதுதான் எம்.ஜி.ஆரின் பண்பு.எல்லா பெண்களையும் தாயாக நேசித்தவர். இந்த சம்பவம் இலக்கியத்தில், முரசுக்கட்டிலில் அமர்ந்த பிசிராந்தையாருக்கு சேர அரசன் வெண்சாமரம் வீசிய நிகழ்ச்சியை ஒத்துள்ளது அல்லவா!!
எம்.ஜி.ஆர் வெள்ளை மனம் கொண்டவர்.எவராலும் வெல்ல முடியாத 'வெல்ல' மனம் கொண்டவர்.திரைப்படத்தில் அவரை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போனார்கள்.அதைப் போலவே நிஜத்திலும் அவரை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.அவர் வெற்றி பெற்ற போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமாக தமக்கு ஆதரவளித்த மக்களையே கூறினார். எனவேதான் அவர் மக்களாட்சியைக் கொடுத்தார்...........
.
-
4th May 2020, 04:27 PM
#223
Junior Member
Diamond Hubber
[என்ன பெயர் வைப்பது
அந்தப் பல்கலைக் கழகத்துக்கு..?
ரொம்பவே யோசித்தார் எம்.ஜி.ஆர்.
அது 1984.
கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க , அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு .
எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.
.
தமிழ் பெண் புலவர்களின் பெயர்கள்..?
ஔவையார் பெயர் வைக்கலாமே என சிலர் சொல்ல ..
சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் சொல்ல...
இன்னும் சிலர் எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.
எல்லாவற்றையும் மறுத்த எம்.ஜி.ஆர். தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்த பெயர் –
அன்னை தெரசா !
ஆம்... அப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.
Mother Teresa Women's University !
விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்..!
அருகில் இருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.
பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். ,
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட ,
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...
ஆஹா..!!!
# இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது :
“நான் கைலி கட்டாத முஸ்லிம்,
சிலுவை அணியாத கிறிஸ்துவன்,
திருநீறு அணியாத இந்து...”
அண்ணா சொன்ன இந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
எந்தப் பல்கலைக்கழகம் சொல்லிக் கொடுத்தது
எம்.ஜி.ஆருக்கு இந்தப் பக்குவம் எனும் பாடத்தை...?]..........
-
4th May 2020, 04:28 PM
#224
Junior Member
Diamond Hubber
அள்ளிக்கொடுத்த வள்ளல்...
எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த ‘நாளை நமதே’ படத்தின் சில காட்சிகள் பெங்களூர் விமான நிலையத் துக்கு உள்ளேயும் வெளியேயும் படமாக் கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம். எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் எம்.ஜி.ஆர். ஒரு கண் வைத்திருப்பார். திடீரென, கேமரா இருந்த இடத்தைத் தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர். மேலே பார்த்தபடி, ‘‘இறங்கு… இறங்கு’’ என்று சத்தம் போட்டார். எல்லோரும் மேலே பார்த்தால், அங்கே ஒரு ரசிகர் மின்சாரக் கம்பத்தில் ஏறிக்கொண்டிருந்தார்.
உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறக்கி அழைத்துவரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரிடம் விசாரித் தார். குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்பவர் அவர். கூட்டம் சூழ்ந்திருந்த தால் அதைத் தாண்டி வரமுடியவில்லை. எம்.ஜி.ஆரை பார்க்க வேண் டும் என்ற ஆவலில் ஆபத்தை உணராமல் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.
அந்த ரசிகரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., படப் பிடிப்பு நடக்கும் இடத் திலேயே ஒரு நாற் காலி போடச் சொல்லி அவரை உட்காரச் சொன் னார். படப்பிடிப்பு குழு வினருக்கு அளிக்கப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவ தும் நாற்காலியில் அமர்ந்தபடி படப்பிடிப்பைக் கண்டு ரசித்தார் அந்த ரசிகர். படப்பிடிப்பு முடிந்ததும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., 500 ரூபாயையும் அன்பளிப் பாகக் கொடுத்தார். நடப்பது கனவா? நனவா? என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைபெற்றார் அந்த ரசிகர். படப்பிடிப்பை காண வந்த ஏராளமான ரசிகர்களோடும் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நடிகரும் பத்திரிகையாளருமான சோ ஒருமுறை கூறினார்… ‘‘எல்லா நடிகர் களுக்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு!’’
எம்.ஜி.ஆர். புகழேணி யில் ஏறிக் கொண்டிருந்த போது, 1950-ம் ஆண்டிலேயே மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆர். பெயரில் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டன. 1960-களில் இவற்றை ஆர்.எம்.வீரப்பன் ஒருங்கிணைத்து ‘எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றங்கள்’ என்று பெயர் சூட்டினார். பிறகு, திமுக தலைமையின் அங்கீ காரத்தோடு, ‘அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்’ உருவானது......
-
4th May 2020, 04:29 PM
#225
Junior Member
Diamond Hubber
#என் #காலில் #விழாதீங்க
ராமாவரம் தோட்டத்துக்கு ஒருமுறை திருக்குறள் முனுசாமி தன் மகனுடன் வந்திருந்தார்.
"நீங்கள் செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்" என்று கண்ணீர் மல்க பொன்மனச்செம்மலின் பொற்கரங்களைப் பிடித்தவாறு கண்ணீர் மல்கினார்...
அந்த சமயம் ஒரு முதியவர் தனது மகளுக்கு வேலைக்கு சிபாரிசு செய்ததற்காக நன்றி கூறியதோடு மட்டுமல்லாமல், தடாலென்று எம்ஜிஆரின் காலில் விழப்போனார்...
#அதிர்ச்சியுற்ற #எம்ஜிஆர் அந்த முதியவரைத் தடுத்து நிறுத்தி, "#பெற்றோர்களின் #காலில் பிள்ளைகள் வணங்கலாம். உலக நன்மைக்காகப் பாடுபடும் #மகான்கள் #கால்களில் பக்தர்கள் விழுந்து வணங்குவது போற்றுதலுக்குரியது. பெரியவரே, உங்களுக்குத் தெரியாததில்லை...
மேலும், பொதுவாக மற்றவர்கள் நம் காலில் விழுவதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. #விழுபவரின் #பாவங்களை #சுட்டெரிக்கும் ஆற்றல் நம்மிடத்தில் இல்லை. நாம் செய்த பாவங்களுக்கே நம்மால் பரிகாரம் காணமுடியாத போது #மற்றவர்களின் #பாவங்களைக் கரைக்கும் சக்தி நமக்கேது...? "
என்றார் பொன்மனச்செம்மல்...........
-
4th May 2020, 04:30 PM
#226
Junior Member
Diamond Hubber
#தலைவரின்_சிரித்துவாழவேண்டும்
[ 30 - 11 - 1974 ]
சென்னை பிளாசா, கிருஷ்ணா, மகாலெட்சுமி, கிருஷ்ணவேணி தியேட்டர் முதல் நாகர்கோவில் தங்கம் திரையரங்கம் வரை வெளியான தலைவரின் வெற்றிக் காவியம்...
தலைவர் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படத்தில் தலைவரின் அப்துல் ரஹ்மான் கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது...
தலைவரின் இந்தக் கதாபாத்திரம்தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது...
இதே மாதத்தின் முதல் வாரத்தில் தலைவரின் உரிமைக்குரல் வெளியாகி மெகா ஹிட் ஆனது.
இருப்பினும் இந்த திரைப்படமும் தலைவரின் வெற்றிப்பட வரிசையில் இடம் பிடித்தது...
தற்போது நோன்பு காலம்...
அனைவரும் மீண்டும் ஒரு முறை தலைவரின் இந்தப் பாடலை பார்ப்போம்.
வளர்க புரட்சித்தலைவர் புகழ்
#இதயதெய்வம்.........
-
4th May 2020, 06:13 PM
#227
Junior Member
Diamond Hubber
ஒன்று மட்டும் சொல்ல ஆசைப் படுகிறேன்!
பல நாட்கள், அவர் படப்பிடிப்புக்கு நாட்களைக் கொடுத்து விட்டு. பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் அதை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் வீணடித்து விட்டதை நான் அறிந்திருக்கிறேன். சரியான திட்டமின்றி வரும் இவர்கள் என்னை வீணே குறை கூறுகிறார்களே' என்று, இம் மாதிரியான சந்தர்ப்பங்களில் மனம் குமுறியிருக்கிறார் அவர். "பழி ஓரிடம் 'பாவம் ஓரிடம்' என்ற பழ மொழி யின் உண்மையை இம்மாதியான சந்தர்ப்பங்களில் தான் நான் அறிந்தேன்.
எனக்கு மட்டுமில்லை, நல்ல திட்டத்தோடு நாணயத்தோடு, யார் வந்தாலும் எம்.ஜி.ஆர். படத்தை நிச்சயம் முடித்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். இதிலே சின்னவர்கள், பெரியவர்கள், பழகியவர்கள், பழகாதவர்கள் என்றெல்லாம் வித்தியாசமே அவர் பாராட்டுவதில்லை. தொழில் வேறு நட்பு வேறு என்று சொல்லி வரும் அவர், நான் இரண்டையுமே ஏமாற்ற விரும்புவதில்லை ' என்று அடித்துச் சொல்வார். "எம்.ஜி.ஆர். கதை அமைப்பில் குறுக்கிடுவார்; படப்பிடிப்பில் வந்து வசனத்தை மாற்றச் சொல்லுவார். காட்சியைத் திருத்துவார்' என்றெல்லாம் ஒரு புகார் இருந்து வருகிறது. என்னைப் பொறுத்த அளவில், அவர் இம் மாதிரி எந்தச் சந்தர்ப்பத்திலும் நடந்தது கிடையாது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை ! கதையை அவர் ஆரம்பத்தில் படிக்கிறார். தனக்கேற்றதாக இல்லை யென்று பட்டால், திருத்தி அமைக்கும்படிச் சொல்கிறார். அப்படிச் செய்ய இயலாவிட்டால் அந்தக் கதையில் நடிப்பதையே ஒதுக்கி விடுவார் அவர்.
கஷ்டம் என்று யார் வந்து அவரிடம் முறையிட்டாலும் உடனே அவர் அந்த ஆளை வேலும் கீழுமாகப் பார்ப்பார். அவர் சொல்வது. உண்மை என. தனக்குப்பட்டால் யார் தடுத்தும் உதவி செய்வதை அவர் நிறுத்த மாட்டார்!
எம். ஜி. ஆர். நாஸ்திகரல்ல என்று தான் நான் நினைத்து வருகிறேன். மருதமலையில் நான் வேண்டிக் கொண்டபடி போட்ட மின் விளக்கை ஏற்றி வைத்து விட்டுப் பேசிய எம். ஜி. ஆர். தன் கொள்கை பற்றி விளக்கம் கொடுத்தார்.
தெய்வம் இல்லை என்று நாங்கள் சொன்னதில்லை. அதேபோல் கோயிலுக்குப் போகாதீர்கள் என்று நாங்கள் யாரையும் தடுத்ததுமில்லை. கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களையே கண்டிக்கிறோம். நம்மை எல்லாம் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்றும், அதுவே கடவுள் என்றும் நாங்கள் கருதுகிறோம் '' என்றார்.
சமீபத்தில், சென்னையில் தியாகராய நகரில் நான் புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்தேன்.
கிரகப்பிரவேசத்தன்று காலை பூஜை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல், பானையில் பொங்கிக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். திடுதிடுப்பென்று உள்ளே வந்து நின்றார்.
'வாங்க வாங்க! பால் பொங்குது. நல்ல நேரத்திலே தான் உங்க காலை வச்சிருக்கீங்க' என்று என் தாயார், வாய் நிரம்ப அழைத்தார். எம்.ஜி.ஆர். அங்கேயே தரையில் உட்கார்ந்து கொண்டார். பொங்கலைச் சாப்பிட்டு விட்டுப் போய் விட்டார்.
நான் அழைக்காமலேயே, விஷயத்தைத் தெரிந்து. என் வீட்டிற்கும் வந்து, என்னை வாழ்த்தி விட்டுப் போன அந்த மனித தெய்வத்தின் தன்மையை நான் என்னென்பது? அதனால் தான் முருகனுக்கு அடுத்தபடியாக நான் எம்.ஜி. ஆரைப் போற்றி வருகிறேன்!.......சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்...
- பேசும் படம் 1963.........
-
4th May 2020, 06:19 PM
#228
Junior Member
Diamond Hubber
22.05.1973
புதிய வரலாற்றை உருவாக்கிய திண்டுக்கல் இடைத்தேர்தல் ......
எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அஇஅதிமுக இயக்கம் முதல் முறையாக கட்சி துவங்கிய 215 வது நாளில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் இந்தியாவின் மிகப்பெரிய கட்சியும் ஆளுங்கட்சியுமான காங்கிரஸ் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி , தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக முதல்வர் கருணாநிதி ஸ்தாபன காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் காமராஜரின் சீடர்களான நடிகர் சிவாஜிகணேசன் , அவரின் ஆதரவு நடிகர்கள் அவருடைய ரசிகர்கள் பத்திரிகை ஆசிரியர் சோ மற்றும் அனைத்து பத்திரிகைகள் எம்ஜிஆர் என்ற தனி மனிதரை எதிர்த்து அரசியல் பிரச்சாரம் செய்தார்கள் .
எம்ஜிஆர் தன்னுடைய உயிரான ரசிகர்களையும் , பொதுமக்களையும் நட்பு கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியையும் மட்டுமே நம்பி இரவு பகலாக உழைத்து வெற்றி கனியை பறித்து அரசியல் உலக வரலாற்றில் '' அண்ணா திமுக - இரட்டை இலை ''- எம்ஜிஆர்'' என்ற பிம்பத்தை உருவாக்கிய தினம் இன்று 22.05.1973. எம்ஜிஆர் 103 வது ஆண்டில் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் 46வது ஆண்டில் வெற்றி நடை போடுகிறது .
எம்ஜிஆர் ரசிகர்கள் பல தலைமுறைகள் கடந்தும் இன்னும் துடிப்புடன் செயலில் இயங்கி கொண்டிருப்பது உலக வரலாற்றில் எந்த ஒரு நடிகருக்கும் தலைவருக்கும் கிடைக்காத பெருமை ......
சினிமாவில் எம்ஜிஆர் ஒரு சரித்திரம் ...
அரசியலில் எம்ஜிஆர் ஒரு சகாப்தம் ...
மக்கள் உள்ளங்களில் எம்.ஜி.ஆர்., ஒரு மனித நேய தலைவர் ............
-
4th May 2020, 07:35 PM
#229
Junior Member
Diamond Hubber
விஜயாவாகினி தலைவர் வைஜெயந்திமாலா நடித்து கொண்டிருந்த பாக்தாத்திருடன் பட பிடிப்பு...
பாக்தாத் வாரிசான குழந்தை எம்ஜியார் அவர்களை எதிரிகள் கொலை செய்ய திட்டமிடும் காட்சி...சூது அறிந்த தலைவரின் அம்மா எஸ்.என்.லட்சுமி பால எம்ஜியாரை ஒரு பசு மாட்டின் மடியில் கட்டி விரட்டி தப்பிக்க விடும் காட்சி.
அப்போது மாடு ஓடிய பின் ஒரு புலி வந்து தலைவரின் அம்மாவை துரத்தி கொன்றுவிடும்......புலியுடன் என்.என்.லட்சுமி மோதி புரளும் காட்சியில் டூப் நடிகை நடிக்க.
காட்சி எடுக்கப்பட்டு வரும் போது அந்த புலி டூப் நடிகை மார்பில் பாய்ந்து கடித்து குதறி விட ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைகிறார் அந்த டூப் நடிகை.
செய்தி அறிந்த செம்மல் பறந்தோடி வந்து அந்த நடிகையை அள்ளி கொண்டு ஓடி அரசு மருத்துவமனையில் சேர்கிறார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட 3 மாத காலம் நீடித்த சிகிச்சையில் தலைவர் ஒரு ஆள் போட்டு தாய் தகப்பன் கணவர் இல்லாத அந்த நடிகையின் உடல்நிலை முன்னேறும் வரை இதர செலவுகளை பராமரிக்கிறார்.
3 மாதங்கள் கழித்து டிஸ்சார்ஜ் ஆகி தலைவர் அனுப்பிய காரில் வீடு திரும்பி கொண்டு இருந்த அந்த துணை நடிகை வீட்டில் கொண்டு விட போகிறார்கள்....வீட்டு வாடகை 3 மாத பாக்கி, தொடர்ந்து நடிக்க நாட்கள் ஆகும் என்பதால் வயிற்று கவலைகளை சுமந்த படி கார் செல்ல.
கார் கோடம்பாக்கம் தாண்டி வலதுபுறம் ட்ரஸ்ட் புரம் நோக்கி செல்ல....அந்த நடிகை என் வீடு இங்கே இல்லை எங்கே போகிறீர்கள் என்று கேட்க...
அம்மா டிரஸ்ட் புரம் 4 வது தெருவில் உங்களுக்கு இனி சொந்த வீடு சாவி என்னிடம் இருக்கு மற்ற செலவுகள் நீங்கள் செய்ய பணமும் இருக்கு என்று சொல்ல அந்த நடிகையின் நெஞ்சில் கடவுளாக தோன்றுகிறார் நம் தலைவர்.
தலைவர் நம்மை விட்டு பிரிந்த போது சென்னை எம்ஜியார் நகரில் இருந்து திருச்சி சென்று ஒரு மகள் தன் தகப்பனுக்கு செய்வது போல ஓர் ஐயர் கொண்டு காவிரி கரையில் ஈமகிரியை செய்கிறார் அந்த தங்கப்பன் என்ற நடன மாஸ்டரின் உதவியாளர் ஆன அந்த டூப் நடிகை சூரியகுமாரி..
வாழும் போதே வரலாறாக மாறி போன புரட்சிதலைவர் புகழ் காப்போம்.........
நன்றி...தொடரும்..........
-
4th May 2020, 07:49 PM
#230
Junior Member
Diamond Hubber
"கலங்கரை விளக்கம்" பட ரிலீஸ்… பரபரப்பில் இருந்தபோதிலும் வேலுமணி, ஓர் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் செல்கிறார் அப்பொழுது எம்.ஜி.ஆர். முண்டா பனியனுக்கு மேலே, மார்பு வரை கட்டிய லுங்கியுடன் தோட்டத்தைச்சுற்றி வாங்கிங் செயது கொண்டிருக்கிறார்.
வேலுமணியைப் பார்த்தவுடன், “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?” என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
அதற்கு வேலுமணி, “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….” என்கிறார்.
“சொல்லுங்க!”
“பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”
“அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”
“இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழையாம்! அது மட்டும்மல்லாம: பொண்ணு, அம்மா-அப்பா இல்லாத அநாதையாம்! இப்பக்கூட அவுங்க அத்தை வீட்ல தங்கித்தான் படிக்குதாம். அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..” என்று வேலுமணி தயங்கிச தயங்கிச்சொல்லி முடிக்கிறார்.
எல்லாவற்றையும் பொறுமையாக்க்கேட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் “என்ன முதலாளி பெரிய ஸ்டேட்டா இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…”
என்று கொஞ்சம் மிரட்டும் தோரணையில் சொல்லி அனுப்புகிறார்.
மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். போன வேகத்தில், 7.03.1966ஆம் தேதியில் சென்னை ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தன்மகனுக்கு அந்த ஏழைப் பெண்ணுக்கும் திருமணம் என்றுநாள் குறித்து, முதல்பத்திரிக்கையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கிறார்.
திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் மூன்றாம் தேதி அன்று கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார்.
“ஏழாம் தேதி திருமணம். மூன்றாம்தேதி இப்படியா?’ என்று எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் நடந்திருக்கிறது என்றும்; திருமணத்திற்கு முன்பே இப்படியென்றால், திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெண்ணின் ராசி என்ன பாடுபடுத்துமோ என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள். தன் குடம்பத்தினர் எடுத்த இந்த் தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க தங்களின்குடும்பத்தலைவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ராமாவரம் வீட்டில் சந்தித்து, விஷயத்தைச் சொல்கிறார் வேலுமணி.
கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி; உங்க மகளுக்கே இந்த மாதிரி நிலைமை வந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க…. எதுக்கும் உங்க விட்டுல திரும்பவும் எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லி அனுப்பிவிட்டுக்காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நாங்க எல்லோமு சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறத்தணும்னு முடிவெடுத் திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா த்த்து எடுத்துக்கிறேன்…” என்ற பொன்மனச்செம்மலின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.........
Bookmarks