Page 18 of 210 FirstFirst ... 816171819202868118 ... LastLast
Results 171 to 180 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #171
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் அன்றே ஆராச்சியில் உலகத்தை அளிக்கும் ஒரு மருத்துவ வெப்பனை கண்ட றிந்து அதை பயர் செய்தால் உலகமே எரிவது போன்று காட்டினார்.
    அன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றது போன்றும்
    அதன் ரகசியத்தை பாதுகாப்பார்.

    அதே போன்று இன்று அந்த விஷப் பொருள் காற்றில் பரவி ஏரியும்.
    இன்று அதே போன்று ஒரு விஷப் பொருள் பரவி உலக மனித உயிர் செத்து மடிகிறார்கள்.
    இது இன்று உண்மை ஆகி விட்டது.
    எம்ஜிஆர் ஒரு தனிப்பிறவி,தெய்வபிறவி, அபூர்வப்பிறவி, அதிசயபிறவி, மறுபிறவி.
    இவண்.
    ரோட்டரியன். ஆசிரியன்
    மோகன் ராஜ் என்ற
    மோகன் குருசாமி............ Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #172
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கறுப்பு வெள்ளையில் கடைசியாக சூப்பர் ஹிட்டான படம் காவல்காரன். அலிபாபா,மற்றும் நாடோடி மன்னன் பகுதி கலர் படத்துக்கு பிறகு வெளிவந்த கலர் படம்தான்"படகோட்டி". அதன்பின் தொடர்ச்சியாக எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா இது போன்ற காவிய படங்கள் வெளியான பிறகு ரசிகர்களுக்கு கலர் படம் என்றால் ஒரு மயக்கம் என்றே சொல்லலாம்.

    அதன்பிறகு எம்ஜிஆரை வைத்து படம் எடுப்பவர்கள் அனைவரும் கலர் படத்தையே எடுக்க விரும்பினார்கள்.
    தேவர் மற்றும் ஓரிரு பழைய தயாரிப்பாளர்கள் எடுத்த கறுப்பு வெள்ளை படங்களை தவிர புதிய படங்கள் அனைத்தும் கலர் படங்களாகவே தயாரிக்க ஆரம்பித்தார்கள். எம்ஜிஆரை கலர் பட கதாநாயகன் என்றே அழைத்தார்கள். குண்டடி பட்ட பின் வெளியான முதல் படம் "அரச கட்டளை". மே 19 , 1967 அன்று வெளியானது. எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணி டைரக்ட் செய்த ஒரே படம்.

    கூடவே சிவாஜியின் "தங்கை" படமும் வெளியானது. பாலாஜி தயாரிப்பான இந்த படத்தில் சிவாஜி தனது பாணியை மாற்றி எம்ஜிஆர் பட பாணியில் எடுத்த படம். பக்திபட வரிசையும் குடும்ப கதை வரிசையும் இனி வேலைக்காகாது என்று எம்ஜிஆர் பார்முலாவுக்கு மாறி எடுத்த படம். எம்ஜிஆருக்கு சமூக படம் சரியாக வராது என்று கூறியவர் இன்று எம்ஜிஆரின் பாணிக்கு மாறி எடுத்த படம்தான் தங்கை. படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் பாலாஜிக்கு போட்ட காசு கைக்கு வந்து விட்டது.

    அரசகட்டளையில் டச்அப் ஒர்க் மட்டுமே பாக்கி இருந்ததால் படம் முதல் படமாக வெளிவந்தது. படத்தின் எடிட்டிங் ஒர்க்கில் எம்ஜிஆர் பணியாற்றவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

    "அரசகட்டளை" கவர்ச்சிகரமான வால் போஸ்டருடன் வெளிவந்தாலும் படத்தின் நீளம் மிக அதிகம். அதுவும் தலைவர் வரும் காட்சிகள் என்றால் அனைவரும் கண்டு .ரசிப்பார்கள். ஆனால் நாகேஷின் பொருந்தாத நீளமான காமெடி படத்தை சலிப்படைய வைத்தது. ரசிகர்கள் தியேட்டரில் நாகேஷ் வரும் காட்சியில் எல்லாம் விசிலடித்து கத்தி தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.

    ஆரம்ப காட்சி பார்த்து விட்டு வந்தவுடனே ரசிகர்கள் நாகேஷ் காமெடியை குறைத்து படத்தின் நீளத்தை குறைத்தால் படம் விறுவிறுப்பாக அமையும் என்ற வலியுறுத்திய பிறகு காமெடி காட்சிகளை குறைத்து மீண்டும் இடைவேளை காட்சியை மாற்றி அமைத்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்ய தவறியது.

    சென்னையில் 42 நாட்கள் மட்டுமே ஓடியது. மற்ற ஊர்களில் அதிக பட்சமாக 63 நாட்கள் ஓடியது.அடுத்தடுத்த வெளியீடுகளில் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டியது.முதல் வெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட படங்கள் அடுத்த வெளியீடுகளே காணாத நிலையில் எத்தனை தடவை வந்தாலும் வெற்றி பெறும் "அரச கட்டளை" என்பது ஆண்டவன் இட்ட கட்டளை.

    குண்டடி பட்டபின் வந்த முதல் படம் என்பதால் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமானதால் அடுத்த படமான காவல்காரனை வெகுவாக நம்பியிருந்தார்கள்.

    அடுத்த பதிவு விரைவில்......SK.,....... Thanks...

  4. #173
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் மனிதநேயத்திற்கு எல்லையுண்டா ?

    அந்த பத்திரிகையாளர் முதல்வர்
    எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து
    எழுதியவர். எப்போதும் எதிர் விமர்சனம்தான்.
    செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.

    அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார்.

    ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிருந்து புறப்பட்ட #எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

    "ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள்" என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.

    "அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள்" என்கிறார்.

    அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

    உடனிருந்தவர்களுக்கு ஒரு அச்சம். 'அவ்வளவுதான், இன்னைக்கு அந்த ஆளுக்கு #ராமாவரம் தோட்டத்தில் பூஜைதான்' என்ற நினைப்புக்கு வர, எம்ஜிஆரோ, "பத்திரிகையாளரின் வீடு எங்க இருக்கு? அங்க வண்டிய ஓட்டு" என்கிறார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக உடனிருந்த ஒரு உதவியாளருக்கு அவர் குடியிருக்கும் வீடு தெரிந்திருந்தது.

    அதன்படி வாகனம் தியாகராயர் நகர் பகுதி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம். கும்பல் கூடிவிட்டது. செய்தியாளரின் வீட்டம்மாவிடம், ‘ஏன் இப்படி இருக்கின்றார். இப்படியே ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்?’ என அக்கறையோடு விசாரிக்கின்றார்.

    அவர்களோ, ‘கல்லீரல் முழுதும் கெட்டுப்போய்விட்டது. இதற்குமேலும் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்" என்ற கதையைச் சொல்லி, நாங்களும் முடிந்த மட்டும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டாலும், இப்படி வெளியேறி விடுகின்றார்" எனக்கூறி வருந்தினார்கள்.

    நிலையை புரிந்துகொண்ட #எம்ஜிஆர், வாகனத்தை #கல்யாணி #மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் #மருத்துவர்களை அழைத்து, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

    அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் #மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார். எல்லாமும் எம்ஜிஆர் சொன்னதின் பேரில் நடந்து கொண்டிருந்தது-
    எம்.ஜி.ஆரும் இடையில் ஓரிரு முறை நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு போயிருக்கிறார்.

    ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் #உடல்நிலை நன்றாக தேறி, மீண்டும் #நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.

    #கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக்கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார் எம்ஜிஆர் . பத்திரிகையாளரும் சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த #சமரசமும் இருக்காது.

    தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை. பேச்சிலும், செயலிலும் ஒரு நிதானம் மிக்கவராக இருந்தார்.

    காலம் ஓடியது.

    ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.

    ‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.

    எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த ‘#தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார். நானும்தான்.

    மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?

    ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்.

    அந்த பத்திரிகையாளருக்கு, இப்படியாக செய்தேன் என்று எம்ஜிஆரும் சொல்லிக் கொண்டதில்லை. அதைச் சொல்லிக்காட்டி, ‘என்னை இப்படியெல்லாம் விமர்சிக்கின்றாயா”? என்று கேட்டதுகூட இல்லை. மருத்துவமனையில் சேர்த்ததோடு அந்த சம்பவத்தை மறந்து போனார் எம்ஜிஆர். சிலருக்கு மட்டுமே அது தெரிந்திருந்தது. அவ்வளவுதான்! (Edited version)
    ----------------------------------------------------------
    இப்படி 'குமுதம்' இதழில் எழுதியதாக
    திரு பா.ஏகலைவன் தன் முகநூலில்
    பதிவு செய்துள்ளார். அந்த நான்கெழுத்து பத்திரிகையாளரை பற்றி 'தினமலர்'
    திரு நூருல்லா எழுதி 'இதயக்கனி' இதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளேன். அந்த பத்திரிகையாளர் 'அண்ணா' நாளிதழில்
    எம்.ஜி.ஆரின் விருப்பத்தின் பேரில்
    பணி செய்ததுமுண்டு....... Thanks...

  5. #174
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இந்தக்காலத்தில் #இப்படியுமா!

    யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக் கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், #இதிகாசத்தலைவன் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆருக்கும் பொருந்தும்.

    இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் கொடிகட்டித் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த தில்லையாடி சிவராமன் என்பவர். எம்.கே. தியாகராஜ பாகவதரின் பாசத்திற்குரியவர். கம்பீரமான அவரது குரல் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவரை வரவேற்பறையில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே போகிறார் எம்ஜிஆர்.

    அப்போது அங்கு வேலை பார்க்கும் பசுபதி என்பவர் தில்லையாடி சிவராமனை தனியே அழைத்து “இப்பொழுது எம்ஜிஆர் நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். வறுமையில் வாடுபவர் அவர். ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பன். இந்த வருமானத்தைக் கொண்டுதான் அவர் குடும்பம் நடத்துகிறார். அவருடைய பிழைப்பில் ஏன் நீங்கள் மண்ணை அள்ளிப்போடுகிறீர்கள்?” என்று புலம்ப, மனம் நெகிழ்கிறார் அவர்.

    அப்படியே சந்தடியின்றி வந்த வழியே மெதுவாக திரும்பிப் போய்விடுகிறார். எம்ஜிஆர் திரும்பி வந்து அவருக்கு அட்வான்ஸாக பணம் கொடுக்க நினைத்தபோது அவர் அங்கு இல்லை.

    நடந்ததை பிற்பாடு தெரிந்துக்கொண்ட எம்ஜிஆருடைய மனதில் தில்லையாடி சிவராமனின் #மனிதநேயம் கல்வெட்டாய் பதிந்து விடுகிறது.

    ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று ஆச்சரியப்பட்டு போகிறார். அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று மனதில் ஆவல் கொள்கிறார். அந்த தருணம் ஒருநாள் வந்தது.

    இந்த சம்பவம் நடைபெற்று காலம் கடந்து விடுகிறது. தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் எம்ஜிஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது. நாடகக் குழுவிற்கு மேலாளராக இராம.வீரப்பன் நியமிக்கப்பட்டிருந்தார். “இன்பக்கனவு” நாடகத்தை திருவாரூரில் நடத்த தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன்.

    எம்ஜிஆரைச் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். இதற்கு முன் ஏற்பட்ட சந்திப்பில் தில்லையாடி சிவராமனுடன் ஏற்பட்ட அனுபவம் எம்ஜிஆரின் நினைவில் வர, போக்குவரத்து செலவு மாத்திரம் கொடுத்தால் போதும் #நாடகத்தை #இலவசமாக நடத்தித் தருகிறேன் என்று வாக்களிக்கிறார்.

    தில்லையாடி சிவராமன் பூரித்துப் போகிறார். "#இந்தகாலத்தில் #இப்படியும் #ஒரு #மனிதரா...?" மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவசர அவசரமாக ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ. யிடம் கொடுத்துவிட்டு நடையைக் கட்டுகிறார்.

    நாடகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் வரை தொகை வசூலிக்கும் எம்ஜிஆர் எப்படி #இலவசமாக நடத்திதர ஒப்புக்கொண்டார் என்று விளங்காமல் வீரப்பன் குழம்பிப் போகிறார்...

    வீரப்பா...!
    "தில்லையாடி சிவராமனின் தியாக மனப்பான்மைக்காக என்றாவது ஒரு நாள் பரிகாரமாக உதவி புரியவேண்டும்... என்று நான் நினைத்திருந்தேன். இன்று அதை செய்தும்விட்டேன். என் மனதில் இருந்த மிகப்பெரிய #குறை #நீங்கியது. இப்ப தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு..." என்று கண்ணீர் மல்கினார்.

    நமக்கு இதையெல்லாம் பார்க்கும்போது வாத்தியார் தெய்வத்திற்கும் மேலாகத் தான் தெரிகிறார்...BSM.... Thanks...

  6. #175
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சத்தணவு திட்டம் பற்றிய ........
    புரட்சி தலைவரின் ....

    கண்ணீர் வரவழைக்கும் ......
    பேட்டி .......

    அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

    பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?

    (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள்.

    அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.

    வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.

    எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.

    சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்)

    குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க.

    பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.

    ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.

    வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.

    ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம்.

    நல்ல பசி.
    இலை போட்டாச்சு.
    காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க.

    சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்

    நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.

    வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு

    கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.

    கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?

    ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது.

    'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,

    கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?

    எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன்,

    எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன்.

    இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது

    எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது.

    அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க

    ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம்.

    எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."

    இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.

    புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால்

    விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம்....... Thanks...

  7. #176
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்"

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன்.

    அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

    – தகவல் : சு .திருநாவுக்கரசர் ( புதிய தலைமுறை

    2 May 2020 7;16 PM..... Thanks...

  8. #177
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்னுடன் மோதத் தயாரா?" குத்து சண்டை வீரர் தாரசிங்கிற்கு ஆவேசமாக சவால் விட்ட புரட்சித்தலைவர்...

    1965-ம் ஆண்டு காலகட்டத்தில் திருச்சியில் "மல்யுத்த "போட்டி நடைபெற்றது, அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார் வட இந்தியாவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் தாராசிங்.

    வெற்றி களிப்பில் அவர்..

    "தமிழ்நாட்டில் என்னை வெல்வதற்கு எவருமில்லையா "என்றார்.

    இதனை கேள்வியுற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்..

    "மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற சகோதரர் தாராசிங்கிற்கு வாழ்த்துக்கள், அவர் வெற்றி பெற்றதோடு போயிருந்தால் நான் பேட்டி கொடுக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது,

    ஆனால் தமிழ்நாட்டில் என்னுடன் மோத எவருமில்லையா? என்று கேட்டிருக்கிறார், அதனால் நான் சொல்கிறேன் எனக்கு மல்யுத்தம் தெரியும் அவர் விருப்பபட்டால் என்னுடன் மோதட்டும் தயாரா?"

    என்று ஆவேசமாக பேட்டியளித்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர்......

  9. #178
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே....
    வணக்கம்.. வணக்கம்.. வணக்கம்...!!!

    தமிழ்நாட்டில்.! ஏழைகள் அதி எண்ணிக்கையில் கல்வி அறிவு பெற்றதற்கு காரணம் என்னவென்று ஐ.நா. சபை ஆய்வு செய்தது.

    அந்த ஆய்வில் அவர்களுக்கு கிடைத்த தகவலை உலகத்திற்கு தெரிவித்தார்கள்.

    அது யாதெனில் ....
    தமிழ்நாட்டில்.! எழைகள் அதிக அளவில் கல்வி அறிவு பெற்றதற்கு மிக முக்கிய காரணம்.

    "#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர்_அவர்கள்."

    கொண்டுவந்த "#சத்துணவுத்_திட்டமே " மிக முக்கிய காரணமாக விளங்கியது என்றும்... ஆய்வில் தெரியவந்தது என்றும்.... ஐ.நா.சபை கூறியது.

    இந்த தகவலை நான் கூறவில்லை.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் ) மாநில செயலாளராக உள்ள, கே. பாலகிருஷ்ணன் அவர்கள்.. கூறினார்கள்.

    இன்றும்.. Cpm... மாநில செயலாளராக,
    கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தான் உள்ளார்.

    உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    வாழிய வாழிய வாழியவே....!!!
    புரட்சித்தலைவர் நாமம் வாழியவே ...!!

    ������������������������������.........

  10. #179
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    குண்டுமணி – பழம்பெரும் தமிழ்த் திரைப்பட வில்லன் நடிகர். சபாஷ் தம்பி, தாயின் மேல் ஆணை, நாடோடி மன்னன் போன்ற ஏராளமான படங்களில் வில்லனாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் ஒவ்வொன்றிலும் இவரைக் காணலாம்.

    குண்டுமணியை திரையில் பார்த்த மாத்திரத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிவிடும். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவரோடு எம்.ஜி.ஆர் மோதும்போது திரையரங்கில் ரசிகர்களின் விசில் சப்தம் காதுகளைப் பிளக்கும். ......

  11. #180
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"
    நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கை பயணம்..!
    🍁 அத்தியாயம் : 1🍁

    சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.

    “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்... 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது. ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்! அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன். ரத்தின சுருக்கமாக எம்.ஜி ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.

    இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.

    அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.

    கோபாலன் நேர்மையான மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.

    அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
    5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.

    ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன். இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம். குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது. பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார். காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம். ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.

    மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர். “பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க...அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.

    குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது. ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்... அப்பா இனி பிழைக்கவழியில்லை. நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி 'நாராயணா, நாராயணா' என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.

    வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம். உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி. அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா. பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின. வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.

    பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத பாரும்மா... நானும் உன்னைப்போல ஒருகாலத்துல வசதியாக மாட மாளிகையில வசித்தவதான். என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல என்னை நடத்தலை. எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட உங்கிட்ட வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.

    உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு. குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார். கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.

    அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள். குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார். கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர். கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு... அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார். குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்... அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு... தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.

    மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.

    அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.

    (தொடரும்).....




    "வண்ணத்திரை"
    யாழ் இணையம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •