Page 78 of 210 FirstFirst ... 2868767778798088128178 ... LastLast
Results 771 to 780 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #771
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முந்தைய வசூல் சில...
    ***************************
    1984 பாரகன் 14 நாள்
    வசூல் : 1,01,789.04
    1985 நாகேஷ் 14 நாள்
    வசூல் : 93, 250.00
    1988 பிளாசா 14 நாள்
    வசூல் :1,03,325.00
    1988 நாகேஷ் 21 நாள்
    வசூல் : 1,58,847.35
    1988 நடராஜ் 21 நாள்
    வசூல் : 1,50,792.40
    1988 ஜெயராஜ் 14 நாள்
    வசூல் : 65,690.45
    1990 எம்.எம் தியேட்டர்
    7 நாள் : 94,382.00
    16 காட்சி House Full
    1991 கமலா 7 நாள்
    வசூல் : 97,509.50
    15 காட்சி House Full*
    1991 பிருந்தா 7 நாள்
    வசூல் : 91,224.65
    11காட்சி House Full*
    இன்னும் ஏராளமான அரங்கில்
    1984 முதல் 1993 வரை சென்னையில் இடைவிடாது சாதனையில்..மக்கள் திலகத்தின்
    100 வது காவியம் ...
    கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது....

    மேலும் பல புள்ளி விவரங்கள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.........

    UR.
    *

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #772
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் நூறாவது திரைப்படமான" ஒளி விளக்கு " திரைக்காவியம் பற்றி சில புள்ளி விபரங்கள்....
    சென்னை நகரில் 1984 ஆம் ஆண்டு பாரகன் திரையரங்கில் திரையிடப்பட்ட ஒளிவிளக்கு காவியம் முதல் வாரத்தில் நடைபெற்ற 28 காட்சிகளும் அரங்கு நிறைந்து.... கொட்டும் மழையில்* இரண்டாவது வாரமாக 18
    காட்சிகள் அரங்கு நிறைந்து மொத்தம் 46 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை படைத்த ஒரே காவியம் ஒளிவிளக்கு....

    நாகேஷ் திரையரங்கில் திரையிடப்பட்ட ஒளிவிளக்கு 1985ல் 14 நாட்கள் நடைபெற்றது.*
    இதில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.

    1988 ஆம் ஆண்டு நடராஜ், நாகேஷ் திரையரங்குகளில் 21 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை வசூலைக் கொடுத்து... 40க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.

    சென்னை பிளாசா, ஜெயராஜ் திரையரங்குகளில் 14 நாட்கள் ஓடி இரண்டு அரங்கிலும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.

    கோவை மாநகரில் (07.08.1992 ) ஒளிவிளக்கு திரைக்காவியம்*
    ஒரே வாரத்தில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. கங்கா மற்றும் ராஜா திரையரங்குகளில் திரையிடப்பட்டு மாபெரும் வெற்றியை படைத்து சாதனை.
    ஒரே நாளில் 8 காட்சி ஒடியது....
    ஒரே வாரத்தில் ஒடிய.
    56 காட்சி வசூல் : 2,45,860.80

    2013 ஆம் ஆண்டு சென்னையில் ஒரே நேரத்தில் ஒளிவிளக்கு திரைக்காவியம் அண்ணா, மகாலட்சுமி இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு அண்ணா திரையரங்கில் ஒரு வாரத்தில் ஒரு லட்சத்து*
    26 ஆயிரத்து வசூலை கொடுத்தது.
    அதேபோல மகாலட்சுமி திரையரங்கில் 4 வாரங்கள் ஓடி*
    3 லட்சத்திற்கு மேல் வசூலை வாரிக் கொடுத்து 12 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்-
    மீண்டும் அதே மகாலட்சுமி திரையரங்கில் 2017 ஆம் ஆண்டு இரண்டு வாரங்கள் நடைபெற்ற திரைக்காவியம் ஒளி விளக்கு ஆகும்......இத்தகைய சாதனை படைத்த மற்ற யாருடைய படங்களேனும் உண்டா?!.........

  4. #773
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதயக்கனி திரைப்படத்துக்கு சென்னையில் மட்டும் 3 நாட்களுக்குள் ரிசர்வேஷன் வசூலே 90 ஆயிரத்தை தாண்டி புதிய சாதனை செய்தது. இந்த சாதனையைப் பார்த்து மிரண்டு போனது அப்போதைய திமுக ஆட்சி. உண்மையிலேயே அவ்வளவு வசூல் ஆகியிருக்கிறதா என வணிகவரித்துறை அதிகாரிகள் தியேட்டர்களில் சோதனை செய்தனர். சோதனை என்ற பெயரில் மக்கள் கூட்டம் வருவதை தடுக்கும் வகையில் கெடுபிடிகள் செய்தனர். ஆனால், மக்களின் துணையோடு இதையெல்லாம் புரட்சித் தலைவர் எதிர்கொண்டு வெற்றிபெற்றார். சென்னை சத்யம் தியேட்டரில் முதன் முதலாக 100 நாள் ஓடியபடம் இதயக்கனி. ரஷ்யா சர்வதேச பட விழாவிலும் இதயக்கனி படம் கலந்து கொண்டு சாதனை செய்தது.

    புரட்சித் தலைவருக்கு வந்த சோதனைகள் வேறு எந்த நடிகருக்கு வந்தாலும் தாக்குப் பிடித்திருக்கமாட்டார். விஸ்வரூபம் 2 படத்துக்கு சோதனை வந்தபோது கமல்ஹாசன், ‘நாட்டைவிட்டே போய்விடுவேன்‘ என்றார். இப்பவும் சமீபத்தில் ‘கட்சியைக் கலைத்துவிடுவேன்’ என்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இதோ.. அதோ... என்கிறாரே தவிர, அரசியலுக்கு வர இன்னும் தயக்கம் காட்டுகிறார். சிவாஜி கணேசன் எதிர்ப்புகளை சந்தித்தது இல்லை. பிரச்சினை இல்லாமல் இருப்பதற்கு ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி போனாலும், கருணாநிதிக்கு நண்பராகவே இருந்தார். காமராஜர் மறைந்ததும் அவருக்கு துரோகம் செய்து நெருக்கடி காலத்தில் இந்திரா காந்திக்கு பயந்து மத்தியில் ஆளும் இந்திரா காங்கிரஸில் சேர்ந்தார். அங்கு மரியாதை இல்லை என்றதும் ஜானகி அம்மாளுக்கு ஆதரவு என்ற பெயரில் தனிக்கட்சி. அந்த அணி ஆட்சிக்கு வரும் என்ற தப்பு கணக்கு போட்டார். இல்லாவிட்டால் சேர்ந்திருக்க மாட்டார். என்னை சுற்றியிருந்தவர்கள் சுயநலத்துக்காக என்னை கட்சி ஆரம்பிக்கும்படி தூண்டினர் என்று சுயசரிதையில் அவரே சொல்லி இருக்கிறார். அவராக விரும்பி கட்சி ஆரம்பிக்கவில்லை. சுற்றியிருப்பவர்கள் பேச்சைக் கேட்டு லாபம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறார். அது போனியாகாமல் தேர்தலில் திருவையாறில் தோற்றதால் கட்சியைக் கலைத்துவிட்டு மத்தியில் ஆளும் கட்சியான ஜனதா தளத்தில் சேர்ந்தார். வி.பி. சிங்கை காலியாக்கி அவருக்கு பிரதமர் பதவி போய்விட்டது, தனக்கும் மார்க்கெட் இல்லை என்ற பிறகு இனிமேல் வண்டி ஓட்ட முடியாது என்று தெரிந்து அரசியலை விட்டே ஒதுங்கினார். சினிமாவிலும் அரசியலிலும் எதிர்ப்புகளை எதிர்த்து நின்று துணிச்சலாக சமாளித்து உலகத்திலேயே வெற்றி கொண்ட ஒரே நடிகர் மக்கள் திலகம்தான்..........ஸ்வாமி...

  5. #774
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் நிருத்திய* சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*பட்டியல் ( 09/09/20 முதல் 16/09/20வரை )
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    09/09/20* - சன் லைப்* -காலை 11 மணி - நாளை நமதே*

    * * * * * * * * *ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*

    10/09/20* *சன் லைப் - மாலை* *4 *மணி -- புதிய பூமி*

    * * * * * * * *புதுயுகம் டிவி -இரவு 7மணி -* தனிப்பிறவி*
    * * ** * * * * * * * *ஜெயா மூவிஸ் -இரவு* 10 மணி - இதய வீணை*

    11/09/20-ராஜ் டிஜிட்டல் -காலை 9.30 மணி - மாட்டுக்கார வேலன்*

    * * * * * * * *சன்* லைப் - காலை 11 மணி - - இதயக்கனி*

    * * * * * * * *மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 10 மணி - ஊருக்கு உழைப்பவன்*

    12/09/20-* மீனாட்சி டிவி* - இரவு 9.30 மணி - நல்ல நேரம்*

    14/09/20 - சன் லைப் -* காலை 11 மணி - அன்பே வா*

    * * * * * * * *விஷ்ணு டிவி -காலை 11 மணி -மாட்டுக்கார வேலன்*

    * * * * * * * மெகா 24 -* பிற்பகல் 2.30 மணி - தாயின் மடியில்*

    * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி- தாயை காத்த தனயன்*

    * * * * * * * மூன் டிவி* - இரவு 8 மணி* * - நல்ல நேரம்*

    15/09/20-முரசு டிவி -மதியம் 12மணி/இரவு 7மணி-தாயின் மடியில்*

    * * * * * * * சன் லைப் -* மாலை 4 மணி - ஆசைமுகம்*

    * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி -சங்கே முழங்கு*

    16/09/20 -சன் லைப் - காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

    * * * * * * * மூன் டிவி* - இரவு 8 மணி* - முகராசி*

    * * * * * * *பாலிமர்*டிவி*- இரவு 11 மணி - நல்ல நேரம்* *

    *


    * * * * * * * *

  6. Thanks orodizli thanked for this post
  7. #775
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #ஒரு #பைசாக்கூட #தராத #எம்ஜிஆர்

    மகாகவி காளிதாஸ் படப்பிடிப்பு ... சிவாஜி, காளிதேவி சிலையின் முன் அமர்ந்து பாடுவதாகக் காட்சி...பிரம்மாண்ட செட் போடப்பட்டிருந்தது...

    மும்மரமாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத மின் கசிவினால் "செட்" தீப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. குழுவினர் அனைவரும் போராடி தீயை அணைத்தனர். ஆனால் பரிதாபமாக, அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த ஐந்து டெக்னீஷியன்கள் தீக்கு பலியாயினர்.

    இறந்தவர்களின் உறவினர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது... அவர்களது மனைவிமார்களும், முக்கிய உறவினர்களும் ஸ்பாட்டுக்கு வந்திருந்தனர்..குடும்பத்திற்காக கஷ்டப்படுபவர் போயிட்டாரேன்னு கதறினர்...சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்...புள்ள குட்டிங்களை எப்படி கரைசேர்ப்போம்னு புலம்பினர். இதைப் பார்த்து வருத்தமுற்ற உடனிருந்த டெக்னீஷியன்களும், குழுவினரும் தங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து உதவினர்...

    இந்த ஸ்பாட்டுக்கு சிறிது தூரத்தில் எம்ஜிஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர் உடனே பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நடந்ததை விசாரித்தார். எல்லோருக்கும் இந்த துக்கத்திலும் சிறிது மகிழ்ச்சி...ஏனெனில் எம்ஜிஆர் வந்துட்டார்...கண்டிப்பாகணிசமான தொகையைக் கொடுத்து உதவுவாரென்று. ஆனால் #எம்ஜிஆர் #ஒரு #பைசா #கூடத்தராமல் கிளம்புகிறார். அனைவருக்கும் அதிர்ச்சி... 'கேட்காமலே உதவி செய்யற வள்ளலாச்சே...' மனிதநேயமிக்க எம்ஜிஆரா இப்படி...
    ஏன் இப்படி நடந்துகொண்டார்..."
    என்று அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த வருத்தம்...

    மறுநாள் காலை, பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து அவர்களின் மனைவிமார்களுக்கும், முக்கிய உறவினர்களுக்கும் ராமாவரம் தோட்டத்திலிருந்து அழைப்புவிடுக்கப்பட்டு...
    என்ன ஏதென்றறியாமல் அங்கு செல்கின்றனர்...

    எம்ஜிஆர் அவர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் சிறுதொழில் தொடங்குவதற்காக கருவிகளையும், அதற்கான இடத்தையும், மூலதனத்தையும் அளிக்கிறார்...

    வந்திருந்தவர்கள் உறைந்துபோய், 'அண்ணே! நீங்க நேத்து பணம் தராததுனால உங்கள தப்பா நெனச்சுட்டோம். எங்கள மன்னிச்சுடு சாமி' ன்னு கதறினர்... 'நீங்க நல்லா இருக்கணும் மவராசா' ன்னு வாழ்த்தினர்...

    அப்ப கூட எம்ஜிஆர் வாயைத் திறக்கவில்லை...வழக்கம் போல தன் (பொ)புன்சிரிப்பையே பதிலாக அளித்தார்...

    #நம் #இறைவன் #இதயதெய்வத்துக்குத் #தெரியாதான்ன! யாருக்கு என்ன செய்யணும்னு............

  8. #776
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------

    சகாப்தம் நிகழ்ச்சி பல்வேறு தரப்புகளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு காரணம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை முறை , அவர் வாழ்ந்த விதம் , அவர் திரைப்படங்களின் மூலம் வாத்தியாராக இருந்து மக்களுக்கு போதிப்பது என்கிற லட்சியம்தான் .ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு நாம் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவழிக்கிறோம் . அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல விஷயங்கள், சமூக கருத்துக்கள் பயன்படக்கூடிய வகையில் தெரிவிக்க வேண்டும் என்பதில் முனைப்பாகவும், மிகவும் கவனமாகவும் இருந்துள்ளார் எம்.ஜி.ஆர்.*


    இன்றைக்கு வாழ்க்கையில் நம்பிக்கை* ஊட்டக்கூடியதாக, உத்வேகம் தர கூடியதாக பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது . இன்றைக்கு தமிழத்தில் பல்வேறு நகரங்கள், ஊர்கள், கிராமங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் தன்னுடைய சொந்த மண்ணோடும், சிநேகத்தோடும் ஒட்டுறவோடும் இருக்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறதென்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்களினால்தான்*


    ஒரு முறை ஆவடியில் இருந்து விமான நிலையம் வரை புதிய சாலை அமைக்கும் பணி துவக்கப்படுகிறது* .அது மிக நீண்டதூரத்திற்கான* பெரிய சாலை .அந்த சாலை செல்லும் வழியில் கே.கே.நகர் அருகில் கொட்டபாளையம் என்கிற இடத்தில* ஒரு அம்மன் கோவில் உள்ளது .அந்த அம்மன் சிலையுடன் கூடிய அந்த கோவிலை சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ளதால்*அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது பொதுப்பணி துறை அதிகாரிகளின் வேண்டுகோள் .அதை அகற்றினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், போராட்டம் நடத்த முன்வருவார்கள். சட்ட பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் உள்ள பொதுப்பணி துறை அதிகாரிகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்கிறார்கள் .உடனே*முதல்வர் எம்.ஜி.ஆர். காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியாரை சந்தித்து இது குறித்து*ஆலோசனை செய்கிறார் . நீங்கள் மாற்று இடம் தேர்ந்தெடுங்கள் .இந்த மாதிரியான இடம் முடிவு செய்யுங்கள். அங்கு இந்த அம்மன் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்யுங்கள்* அதன் பிறகு அங்கு முறைப்படி கோவிலை கட்டி ,பொதுமக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்று காஞ்சி பெரியவர் கூறினார் .இதே போல பல்வேறு தரப்பில் உள்ள பண்டிதர்களை எல்லாம் அழைத்து இந்த விஷயம் குறித்து கருத்துக்கள் கேட்டறிந்தார் . அதன் பிறகு*பொதுமக்கள் சிலரை அழைத்து இவர்கள் எல்லாம் இப்படி,கருத்துக்கள், யோசனைகள் தெரிவிக்கின்றனர் உங்களுக்கு சம்மதம்தானே ,ஏதாவது ஆட்ஷேபம் உள்ளதா என்று அவர்களின் கருத்தையும் இறுதியாக கேட்டறிந்து அதே பகுதியில் ,அனைவருக்கும் உகந்த*,மாற்று இடத்தில முறைப்படி கோவில் கட்டமைக்கப்பட்டது . இன்றைக்கும் பொதுமக்கள் வழிபடும் முக்கியத்தலமாக*அந்த கோவில் அமைந்துள்ளது .ஆகவே, மத விஷயங்களிலும் சரி, மக்களின்* மனம் குறித்த* விஷயங்களிலும் சரி ஒரு முடிவு எடுப்பதாக இருந்தால் அவர் தன்னை முதல்வர் என்று கருதாமல் மக்களில் ஒருவனாக, சாமானிய மனிதராக*முக்கியஸ்தர்கள் பலரிடம் கருத்துக்களை கேட்டறிந்து ,அதை முறைப்படி நிறைவேற்றுவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவரேதான் .


    1970களில் சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடக்கும்போதெல்லாம்*நிறைய பேர் கையில் ட்ரான்ஸிஸ்டர் ,அல்லது பாக்கெட் ரேடியோ வைத்து*கிரிக்கெட் வர்ணனை கேட்டு கொண்டிருப்பார்கள் . 1974ல் ஒரு முறை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியை காண எம்.ஜி.ஆர். தன் உதவியாளர்கள், நெருங்கிய நண்பர்கள் சிலருடன் பார்ப்பதற்காக*முதல் வகுப்பு டிக்கட் வாங்கிவிட்டு ஸ்டேடியம் செல்கிறார் . அந்த காலரிக்கு எம்.ஜி.ஆர். செல்லும்போது பார்த்தால் , முன் வரிசையில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் இருக்கையில் ஆக்கிரமித்து அமர்ந்துள்ளனர் . ஆனால் எம்.ஜி.ஆர். தன்னுடன் வந்தவர்களுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட பின்வரிசை இருக்கைகளில்*அமருகிறார் . போட்டியை*பார்க்க எம்.ஜி.ஆர். வருகை*தந்த*விஷயம் அறிந்த*பார்வையாளர்கள் கூட்டத்தின் பெரும்பான்மை பகுதியினர் எம்.ஜி.ஆர். இருந்த காலரியை*நோக்கி படையெடுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டது . இனிமேல் இந்த மாதிரி போட்டிகளை*நாமும் ரசிக்க முடியாது . பார்வையாளர்களும் ஒழுங்காக*பார்க்க மாட்டார்கள் .இதனால் போட்டி* தொடர்ந்து நடைபெறுவதில்*பிரச்னைகள்* ஏற்படலாம் என்று கருதி*உடனே,அங்கிருந்து தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு*,அந்த மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி*காரில்*புறப்பட்டு நேராக தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகம் சென்றடைந்தார் .பின்னர் தன் உதவியாளர்கள் மூலம் உடனடியாக ஒரு கருப்பு*வெள்ளை டிவி*வாங்கி வர செய்து, அதற்கு முறையான இணைப்புகள்*செய்ய வைத்தபின்*அன்று போட்டியை முழுமையாக ரசித்து பார்த்தாராம் .


    எம்.ஜி.ஆர். தன் ராமாவரம் தோட்டத்து*வீட்டில்*கீழ் தளத்தில் உள்ள மிக பெரிய நூலகத்தில்*இல்லாத நூல்களே இல்லை எனலாம் .நாடகம், நாட்டியம், இசை, இலக்கியம் இலக்கணம் குறித்த*நூல்களும் இதில்*அடங்கும் . ஏறக்குறைய*600க்கு மேற்பட்ட நூல்கள் ஆங்கிலத்திலும் , இதர 3400 நூல்கள்*தமிழிலும்*அந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . அதே*போல அமேரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே*ஜப்பான் போன்ற நாடுகளின்*நாணயங்களை சேகரிப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார் .ஏனென்றால் அவை அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பிரதிபலிப்பு என்பதை அவர் உணர்ந்திருந்தார் .மற்ற தகவல்கள்*அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------
    1.நான் பாடும்*பாடல் நலமாக வேண்டும் - நான் ஏன் பிறந்தேன்*

    2.ஓடி*ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*

    3. என்னை தெரியுமா*- குடியிருந்த* கோயில்*

    4.எம்.ஜி.ஆர். -எம்.ஆர்.ராதா உரையாடல் --பெரிய இடத்து பெண்*

    5.பறக்கும் பந்து பறக்கும் - பணக்கார குடும்பம்*

    6.எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி -டி.ஆர்.ராமச்சந்திரன் -அன்பே*வா*

    7.ஏய் நாடோடி போகவேண்டும் ஓடோடி*- அன்பே வா*

  9. #777
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    லண்டனில் மக்கள் திலகத்திற்கோர் மாபெரும் வரவேற்பு விழா.
    அன்று [30.07.1973] மகாத்மா காந்தி மண்டபத்தில் மக்கள் திலகம் எம்.ஜி . ஆருக்கு ஒரு மாபெரும் வரவேற்பு விழா [இந்தியன் ஒய்.எம். சி.ஏ.] அங்கு கண்ட காட்சி, அப்பப்பா ...கூட்டம் அலை மோதியது. லண்டன் தமிழர்களின் வரலாற்றிலேயே இது வரை இப்படிப்பட்ட கூட்டம் கூடியதில்லை. அனைவரும் ஆவலுடன் காத்திருக்க சிறிது நேரத்திலேயே மக்கள் திலகம்,லதா, ப.நீலகண்டன், சித்ரா கிருவடிணசாமி ஆகியோர் வந்து சேர்ந்தனர். விழாவை ஏற்பாடு செய்த தமிழ் திரைப்பட சமூகக் கழகத்தினரின் அறிவிப்பாளர் திரு ஜெயம் குமாரநாயகம் அனைவருக்கும் வரவேற்பு கூறி ஒவ்வொருவராக மேடைக்கழைத்தார். கழகத்தின் செயலாளர் திரு. லத்திப் ஷா அவர்களின் வரவேற்பு உரையில் திரு .சித்ரா கிருஷ்ணசாமியும் திரு.ப . நீலகண்டனும் சிறு சொற்பொழிவாற்றினர். "உலகம் சுற்றும் வாலிபன் " படத்தை ரஷ்யாவின் மாஸ்கோவில் திரையிட வந்தவர்கள் அப்படியே லண்டன் வந்ததாகவும் கூறி மாஸ்கோவில் தமிழ் மக்கள் தங்களிடம் காட்டிய அன்பையும் வரவேற்பையும் அங்கு நடந்த சில சுவையான சம்பவங்களையும் இவர்கள் விபரித்தவர். லதா தானும் அ.தி.மு.க.வில் ஒரு அங்கத்தினர் என்று பெருமையாக கூறியதோடு தனது ஒரு நிமிட உரையை அழகாக முடித்து விட்டார்.
    மக்கள் திலகத்தைப் பேச அழைத்தனர். "கையொலி வானைப் பிளந்தது". சாதாரன தொனியில் பேச்சை ஆரம்பித்த மக்கள் திலகம் இடி முழக்கத்துடன் அதை நிறைவு செய்தார். அவரது பேச்சில் இருந்த ஆழமும் கருத்துச் செறிவும் அங்கிருந்தோர் என்பவரையும் மெய் மறக்கச் செய்துவிட்டது. மக்கள் தன்னைப் போன்றவர்களுக்குக் காட்டும் இந்த அன்பும் ஆதரவும் எத்தனை காலத்திற்கு நிலைக்கும்?!. உயிர் உடலை விட்டுப் போனபின்னும் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் எத்தனை பேர்?!. கலைவாணரின் கதி என்னவாயிற்று? என்று அழகாகக் கூறிய எம்.ஜி.ஆர் இன்று மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்திருப்பதைப் போல என்றும் இருக்கவேண்டும் என்பதுதான் தனக்குள்ள பேராசை என்று கூறிய பொழுது எழுந்த கையொலி நீங்கள் அதைக் கூறியிருக்கவே வேண்டாம் என்று அவரிடம் கூறுவது போல இருந்தது.
    நீண்ட நேரம் பேசாமல் சுருக்கமாகத் தன் பேச்சை முடித்த எம் .ஜி. ஆரை ரசிகர்கள் சும்மா விட்டு வைக்கவில்லை. மேடை ஏறிச் சென்று பல கேள்விக்கணைகளை தொடுத்தனர் ,. ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியும் , தமிழ் நாட்டிற்கு லண்டனிலிருந்து பணம் அனுப்புவதிலும் பிரமாண பத்திரம், பாஸ்போர்ட் புதிப்பித்தலிலும் உள்ள தொல்லைகளையும் பற்றிக்கட கேள்விகள் கேட்கப்பட்டன. அ.தி.மு.க.தேவையா ? என்ற கட ஓர் அன்பர் கேட்டார் . இன்னொருவர் சில புள்ளி விபரங்களின் மூலம் எம்.ஜி.ஆரை .மடக்கி விடப்பார்த்தார். அனைவரின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அழகான ஆழமான முத்துப் போன்ற பதில்களை எம்.ஜி.ஆர். அளித்தார். மடக்க முயன்றவர்கள் அடங்கிப் போயினர். நேரமோ 10 ஆகி விட்டது. யாருமே அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் அவைத்தலைவர் குறுக்கிட்டு எம்.ஜி.ஆருக்கும் ஓய்வு கொடுத்து அன்பர்களின் ஆவலுக்கும் அணை போட்டார். மேடையில் திரை விழுந்தது. மக்கள் திலகமும் மற்றவர்களும் கிழே இறங்கி வந்து ரசிகர்கள் மத்தியில் அமர்ந்தனர் . இதன் பின் சிற்றுன்டிகள் வழங்கப்பட்டன. அறிவிப்பாளர் தன்னால் இயன்ற மட்டும் கத்தியும் யாரும் தத்தம் இடங்கலிள் அமர்ந்து பின் நடந்த நிகழ்ச்சிகளை ரசிக்க முயலவில்லை. தேனுண்ட வண்டுகள் மறுபடியும் மலரைச் சுற்றி மொய்ப்பது போலவே அனைவரும் எம்.ஜி.ஆரை மொய்த்தனர். அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள, அவரின் கையெழுத்தை வாங்க, அவரோடு ஏதாவது பேச இப்படியாக அவரைச் சுற்றி பலர் துடித்துக் கொண்டு நின்றனர். எம்.ஜி.ஆர். பொறுமையோடு அனைவரையும் திருப்திப்படுத்தினார்.
    மேடையில் நிகழ்ச்சிகள் நடந்தபடி இருந்தன . “ வார்டன் ஸ்டேஜ் கிரியேஷன்சார் " அளித்த ஒரு நவீன பாடல் கச்சேரி இடம் பெற்றது. திரு. செந்திவேலின் பாடல்களுக்கு திரு.இளம்பூரணன் மிருதங்கம் இசைக்க திருவாளர்கள் குரூப், தேவராஜ் ராஜ்புட் ஆகியோர் பக்க இசை அளித்தனர் . இதன்பின் திருமதி ராஜ்குமார் அவர்களின் மாணவிகளது மோகினி ஆட்டமும், செல்வி தேவராணி தம்பிராஜாவின் நடனமும் இனிக்கத்தான் செய்தன. இந்நிகழ்ச்சிகளை ரசனையோடு அனுபவித்தவர்கள் சிலரே எனினும் கலைஞர்கள் தளராது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது... இறுதியில் அறிவிப்பாளர் நன்றியுரை சுறி விழாவை முடித்த போது மணி 11 க்கு மேலாகி விட்டது .
    இவைகளையெல்லாம் பார்த்துவிட்டு மனதில் ஒரு உண்மை பளிச்சிட்டது. அரசியல்வாதி என்றோ, திரைப்பட நடிகர் என்றோ எம்.ஜி.ஆரை யாரும் நினைக்கவில்லை . தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறார்கள். அதனால்தான் இத்தனை பாசமும் நேசமும். மக்கள் திலகம் உண்மையிலேயே மக்களுக்குத் திலகம் தான்..........

  10. #778
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ரிக்ஷாக்காரன்" போட்டியில். படு தோல்வியடைந்த "ராஜா" வுக்கு ஆதரவா கைபுள்ளைங்க ஆத்திரத்தில் ஏதேதோ உளறுகிறார்கள். தோல்வி நமக்கு சகஜம்தானே பாஸ். எம்ஜிஆரிடத்தில் புதுசாவா நாம தோற்கிறோம் என்று நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள்.. "ராஜா"வுக்கு அதிகமாக 11 காட்சிகள் திரையிட்டார்களாம். அதுதான் வசூலில் முன்னணி பெற்றதற்கு காரணமாம். அய்ய்--- அக்கா கால்ல ஆறுவிரல் என்று "அடிமைப்பெண்ணி"ல் வரும் ராணி என்ற குழந்தை சொன்னவுடன் சந்திரபாபு சும்மா இரும்மா! ஐந்து விரல்ல அள்ளி சாப்பிடவே சோத்தைக்காணோம் இதிலே ஆறாவது விரல் வேறயா? என்பார்.

    அதே மாதிரி 3 காட்சிகளை hf ஆக்கவே மூச்சு வாங்கும் போது எக்ஸ்டிரா 11 காட்சிகள் போட்டா டங்குவார் அறுந்து போகாது. எக்ஸ்டிரா காட்சியை போட்டா சாயம் வெளுத்து விடும் என்று பயந்து காட்சி ஓடாமலே hf
    ஆக்கியிருப்பாங்க போல தெரியுது.
    அதனால்தான் இன்னெரு சிவாஜி ரசிகர் 35 நாளில் மொத்தம் 107 காட்சிகள்தான் ஓடியது என்று முந்தைய சிவாஜி ரசிகரை இவர் காட்டி கொடுத்து விட்டார்.

    பொய் சொன்னால் எல்லா சிவாஜி ரசிகர்களும் ஒரே மாதிரி பொய்யை சொல்ல வேண்டாமா?.
    ஒருவர் 2 காட்சிதான் எக்ஸ்டிரா என்கிறார். இன்னொருவர் 11 காட்சிகள் எக்ஸ்டிரா என்கிறார்.
    முதலாமவர் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 107 என்கிறார்.
    இரண்டாமவர் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 146 என்கிறார்.
    எப்படியோ "ரிக்ஷாக்காரன்" வசூலை முறியடிக்க நினைத்து போட்ட திட்டம் முடியாமல் குறைந்த பட்சம் தேவி பாரடைஸிலாவது முறியடிப்போம் என்று செயல்பட்டிருக்கிறார்கள்.

    ஆனால் 50 நாட்கள் வரை உயிரை கையில் பிடித்து ஓடிய "ராஜா" 50 நாட்கள் தாண்டியதும் ரத்த வாந்தி எடுத்து ஸ்டெச்சரில் படுத்து விட்டார் . பின்பு ஸ்டெச்சரோடு ராஜா வை இழுத்து சென்ற அவல காட்சியைத்தான் நாங்க பார்த்தோமே!. சிவாஜி அடிக்கடி படங்களில் வாஷ்பேசின் அருகே சென்று இருமி கைகுட்டையால் துடைக்கும் போது குங்குமத்தை கரைத்து கர்சீப்பில் ரத்தவாந்தி எடுத்ததை போல காண்பிப்பார்கள். "ராஜா" வுக்குப் அதே நிலைதான்.

    அதற்கு காரணம் போட்டி என்பது தனது உடல்தகுதிக்கு தகுந்தவரோடு போட வேண்டும். இதுதான் "ராஜா" "ரிக்ஷாக்காரனோ"டு நடந்த காமெடி போரில் புறமுதுகு காட்டி ஓடி படுதோல்வி அடைந்த சம்பவம் . இப்போது "வெள்ளை ரோஜா" என்று லாலி பாடும் சிவாஜி ரசிகர்களின் மானத்தை அதோடு கூட வந்த "தூங்காதே தம்பி தூங்காதே" "தங்கைக்கோர் கீதம்" படத்தின் வசூல் விபரங்களை வெளியிட்டால் தெரிந்து விடும். அந்த நிலைக்கு போக விடாதீர்கள் சிறுவர்களிடம் தோற்று உங்கள் மானம் கப்பலேறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

    "ராஜா" தோற்ற விஷயம் தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இனி என்ன பயன்? உண்மையை ஒத்துக்கொண்டு போவதை தவிர வேறு வழியில்லை. மேலும் ரிக்ஷாக்காரன் 75 நாளிலேயே 12 லட்சத்தை தாண்டி முன்னேறினான். ஆனால் ராஜா 100 நாட்களில் ஓட முடியாமல் மெல்ல நடந்துதான் 12 லட்சத்தை கடந்தது பரிதாபத்தை உண்டு பண்ணி விட்டது. முன்பாவது பரவாயில்லை எப்படியாவது கஷ்டப்பட்டு பணத்தை செலவு செய்து ஓட்டி வசூலை காண்பித்தார்கள். இப்போது அந்தக் கவலையில்லை. நேராக தொழில் பேட்டை சென்று இவர்கள் சொல்லுகின்ற வசூலை போட்டுத்தர அதுவும் வரி,விநியோகஸ்தர் பங்கு வரைக்கும் பிரித்து தர ஆட்கள் தயாராக இருக்கும் போது சிவாஜி ரசிகர்களுக்கென்ன கவலை. சும்மா தாறுமாறாக வசூலை போட்டு தந்து விடுகிறார்கள்.

    இந்த வசூல் உண்மையிலேயே வந்திருந்தால் அன்றே பேப்பரில் போட்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்திருப்பார்களே கணேசன் ரசிகர்கள். .இப்போது fb ல்
    போட்டு யாரை ஏமாற்றுகிறார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த சிவாஜி ரசிகர்கள் அப்பாவி எம்ஜிஆர் ரசிகர்களை ஏமாற்றுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நாம் எம்ஜிஆரின் 4,5 படங்களின் வசூலைத்தான் போடுகிறோமாம். மீதமுள்ள படங்கள் பெரிதாக ஒன்றும் வசூலாகவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.
    எங்களுடைய 4,5 படங்களுக்கே
    உங்களுக்கு நாக்கு தள்ளுவதை பார்க்கிறோம். மீதமுள்ள படங்களின் வசூலையும் நாங்கள் தெரிவித்தால்
    நீங்கள் அடையப்போகும் கதியை நினைத்து பயந்துதான் சற்று ஒதுங்கி இருக்கிறோம்.

    இது உண்மையான வசூல் என்றால் சிவாஜி படத்தயாரிப்பாளர்கள் ஏனய்யா கையில் திருவோடு ஏந்தப் போகிறார்கள்.?
    இதில் "புனர் ஜன்மம்" என்ற படம் எடுத்த தயாரிப்பாளர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுப்பதாக பிரபல நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வந்த செய்தியை நினைத்து பாருங்கள். அந்த தயாரிப்பாளரின் வயித்தெரிச்சலை வாங்காதீர்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    "ராஜா" வை மிகவும் கஷ்டப்பட்டு தேவிபாரடைஸ் மற்றும் ராக்ஸியில் மட்டும் 100 நாட்கள்
    ஓட்டியதோடு தற்போது அகஸ்தியரவையும் சேர்த்துக் கொண்டார்கள். மய்யத்தில் மையம் கொண்ட சிவாஜி ரசிகர்களே மையத்தில் நின்றால் வெற்றி கிடைக்காது. சுற்றி ஓடினால்தான் வெற்றி என்பதை புரிந்து கொண்டு இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும்?, யதார்த்த நிலைக்கு வாருங்கள் என்று அழைக்கிறோம்..........

  11. #779
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சிதலைவர்
    #கலைவேந்தர்
    #பொன்மனச்செம்மல்
    மன்னாதி மன்னbன் எம்.ஜி.ஆர்
    #அவர்களின்_ஆசியோடு_இனிய
    #காலை_வணக்கம்...

    புரட்சி தலைவர் எம்ஜியார் ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

    தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

    அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!

    கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.

    ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.

    அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

    எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.

    1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.

    இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

    எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையமைப்பாளர் வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் என்றுதான் முதலில் விளம்பரம் வெளியானது. ஆனால், பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 1977-ம் ஆண்டு மார்ச் 5-ல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த ‘நவரத்தினம்’ படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். அவர் இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர். படம் "நவரத்தினம்".........

  12. #780
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "குடும்பத் தலைவன்" .
    ______________________
    3 வருடங்களுக்கு முன் மதுரை நண்பன் மதுரை பஸ்டான்டிலிருந்து பஸ் ஏறி படம் படம் பார்க்க அழைத்துச் சென்றான் .

    ஏதோ அருகில் என்று பார்த்தால் இரண்டு மணி நேரபயணம் .

    ஜெயந்திபுரம் அரவிந்த் தியேட்டர் படம் குடும்பத் தலைவன் .

    தமிழர்கள் இரத்தத்தில் ஊறியது காதல், வீரம்.

    இவ்விரண்டும் இப்படத்தில் சற்று தூக்கல் .

    கபடி ,ரேக்ளா ரேஸ் இது போன்ற போட்டிகள் நிறைய . கபடி போட்டியில் மக்கள் திலகத்தின் லாவகம் அலாதியானது .

    எம் ஜி ஆர் : இத பார் அம்மா அது சொன்னாங்க அப்பா இது சொன்னாங்க ன்னு வீட்டை விட்டு போனே !
    தேவி : என்ன செய்விஙகளாம் ?
    எம் ஜி ஆர்: ம்.... உயிரே விட்டுடுவே !

    இயற்கையான இலக்கணத்தை வகுத்த காதல் .

    இடையில் ஒரு பாடல் .
    மழை பொழிந்துக் கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்

    மனம் நிறைந்து நிறைந்து
    எண்ணம் வழிந்து வழிந்து
    உயிர் மிதந்து கொண்டே இருக்கும் .

    பல முறை படம் பார்திருந்தாலும் ஏனோ இப்பாடல் என்னை முதன் முறையாக ஈர்த்தது .

    இசையில் சொக்கி போனேன் செல்போனில் கேட்பதைவிட திரையரங்கில் நூறு சதவீதம் இனிமை கூடல் .

    எனக்கு இசை ஞானம் அறவே கிடையாது இருப்பினும் தொடர்ந்த அந்த பேங்குஸ் சத்தம் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது .

    அப்பொழது stereo system கிடையாது
    Mono system தான் இருப்பினும் திரையில் இந்தப் பாடல் இனிமை என்னை பிரமிக்க வைத்தது .

    பொறுமை தாளாமல் என் நண்பன்
    ஶ்ரீ குமாரை அனுகினேன் அவன் மிகுந்த இசை ஞானம் உடையவன் அவன் தாயார் முறைப்படி
    கர்நாடக இசையை பயின்றவர்.

    அவனிடம் கேட்டேன் இதில் வாசித்துள்ள இசைக் கருவிகள் என்னென்ன என்று.

    Vibro phone, guitar ,
    violins , Hawaiian guitar ,
    maybe xylophone ?
    Rhythm bango , tabla etc .

    என்று என் சந்தேகத்தை
    தெளிய வைத்தான் ..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •