Page 88 of 210 FirstFirst ... 3878868788899098138188 ... LastLast
Results 871 to 880 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #871
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ராஜா" வை "ரிக்ஷாக்காரனு"க்கு போட்டியாக நினைத்து சிவாஜி ரசிகர்கள் மண்ணை கவ்வியதும் சும்மா இருக்கவில்லை. உடனே பாலாஜியின் அடுத்த படமான "நீதி"
    "துஷ்மன்" என்ற பெரும் வெற்றி பெற்ற இந்தி படத்தை, தமிழில் சிவாஜியை வைத்து மொழிமாற்றம் செய்தார். அங்கு சில்வர் ஜீபிலி கொண்டாடிய படம், இங்கு ஒரே தியேட்டர் தேவி பாரடைஸில் ஸ்டெச்சர் உதவியுடன் போராடி 100
    நாட்கள் ஓட்ட முனைந்தனர்.

    என்ன செய்ய, ஸ்டெச்சரில் இருந்த பாடி 99 வது நாளில் கீழே குதித்து உயிரை மாய்த்து கொண்டது. அதையும் அவர்கள் விடவில்லை. "நீதி" 99 வது நாள் விளம்பரத்தை முழு பக்கம் கொடுத்து
    மனதை தேற்றிக் கொண்டனர்.
    A சென்ட்டரில் மட்டுமே இந்த ஜகஜால வித்தைகள்.மற்ற ஊர்களை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

    அங்கெல்லாம் இரண்டே வாரங்களில் படத்தை தூக்கி விட்டு வந்த நஷ்டத்தை சமாளிக்க பழைய எம்ஜிஆர் படத்தை போட்டு ஓட்டி இழந்த காசை மீண்டும் எடுப்பார்கள்.
    அதனால்தான் அநேக சிவாஜி படங்கள் தமிழகத்தில் 30 பிரிண்ட்கள்தான் போடுவார்கள். நிறைய ஊர்களில் 2 வது வெளியீடாகத்தான் வரும்.

    இது தெரிந்தும் சிவாஜி ரசிகர்கள் உதார் விடுவது நகைப்புக்கிடமாக உள்ளது. எம்ஜிஆர் படங்கள் குறைந்தது 40 பிரிண்ட் முதல்
    60 பிரிண்ட் வரை
    திரையிடுவார்கள். அந்தக் காலத்தில் வெளியான எம்ஜிஆரின் சாதாரண திரைப்படமான "ராஜாதேசிங்கு" கிட்டத்தட்ட 40 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

    ஆனால் மிகவும் எதிர்பார்த்த 1960 தீபாவளிக்கு வந்த சிவாஜி நடித்த "பாவைவிளக்கு" சுமார் 30 திரையரங்குகளில் தான் வெளியானது. சிவாஜி நடித்த "இல்லறஜோதி" மொத்தம் 21 திரையரங்குகளில்தான் வெளியானது.மொத்தமே இவ்வளவு திரையரங்குகளில் வெளியானால் எப்படி வசூலில் சாதனை செய்ய முடியும்?. ஏனென்றால் மறுவெளியீடு சிவாஜி படத்துக்கு அதிகம் கிடையாது. அதனால் அதிக பிரிண்ட் சிவாஜி படத்துக்கு தேவைப்படாது. தேவையில்லாத சரக்கை யார் வாங்குவார்கள்.

    அதனால்தான் எம்ஜிஆருக்கு இங்கு "வசூல் சக்கரவர்த்தி" என்றும் இலங்கையில் "நிர்த்திய சக்கரவர்த்தி" என்ற பெயரையும் விநியோகஸ்தர்கள் கொடுத்தார்கள். "ஒளிவிளக்கு" கிட்டத்தட்ட 60 க்கும் அதிகமான பிரிண்ட்கள் போடப்பட்டன. முதன்முதலாக 1957 லேயே சென்னையில் 5 திரையரங்கில் வெளியான படம் "மகாதேவி". அதன்பிறகு "தாயின் மடியில்" "ரகசிய போலீஸ் 115" "ஒளிவிளக்கு" "நீதிக்கு தலை வணங்கு" முதலான படங்கள் 5 திரையரங்குகளில் வெளியான படங்கள்.

    எம்ஜிஆரின் அநேக படங்கள் 4 திரையரங்குகளில் வெளியாகின. ஆனால் சிவாஜிக்கு ஒரு சில படங்கள்தான் 4 திரையரங்குகளில் வெளியாகின. மற்ற படங்கள் எல்லாம் அநேகமாக சாந்தி கிரவுன் புவனேஸ்வரி இல்லை யென்றால் சித்ராவுடன் ஜோடி சேரும் தியேட்டர்களில்தான் வெளிவரும். சென்னையில் மூன்று தியேட்டர்களில்தான் வெளிவரும் ஒரு சில படங்களை தவிர. குறைவான தியேட்டர்களில் வெளியிட்டு ஒரு தியேட்டரிலாவது 100 நாட்கள் ஓட்டி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்கள்.

    "புதிய பறவை" "திருவிளையாடல்" "சரஸ்வதி சபதம்" "தங்கப் பதக்கம்" "வசந்த மாளிகை" போன்ற பிரமாண்ட படங்களை மூன்று தியேட்டருக்கு மேல் வெளியிட மாட்டார்கள். ஆனால் தலைவருக்கு "அடிமைப்பெண்" "மா.வேலன்" "உரிமைக்குரல்" "நம்நாடு"
    போன்ற பிரமாண்ட படங்களை 4 திரையரங்கில் வெளியிட்டு குறைந்த காலத்தில் நிறைந்த வசூலை தயாரிப்பாளர்கள் பார்த்து விடுவார்கள்.

    தலைவர் படங்களுக்கு வசூல் மட்டும் தான் குறிக்கோள். ஆனால் மாற்று நடிகரின் படங்கள் வசூல் அதிகமானால் அது தயாரிப்பாளருக்கு அல்லவா போகும். அதைப் பற்றியெல்லாம் அதிகம் கவலை கொள்ள மாட்டார்கள். 100 நாட்கள் சாதனை தனக்கல்லவா வரும் என்பதை நன்கறிவார்கள்.
    சாந்தி தியேட்டரே தன் சாதனையை
    காட்டுவதற்காக வாங்கப்பட்டதுதான்.

    சாந்தி தியேட்டர்தான்
    "சந்திரமுகி"யை 5 அல்லது. 6 பேர்களை கொண்டே
    800 நாட்கள் ஓட்டிய அதிசய திரையரங்கம் அல்லவா?
    இப்பவே அப்படியென்றால் அப்போது நினைத்து பாருங்கள்.
    சிவாஜி படங்கள் எல்லாம் அப்படி ஓட்டியதுதான். சாதனை என்பது தானாக நிகழ வேண்டும். நாமாக நிகழ்த்தக் கூடாது. பாகவதரின் "ஹரிதாஸ்" வெற்றி உண்மையான வெற்றி. ஆனால் "சந்திரமுகி"யின் வெற்றி உருவாக்கப்பட்ட வெற்றி.

    அதுபோல் சிவாஜியின் சாந்தி தியேட்டர் சாதனையை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சாந்தியின் முதல் சிவாஜி படமான "பாவ மன்னிப்பு" ஓட்டுவதற்கு பாடல் பரிசு போட்டி என பலவிதமான ஆசை வார்த்தைகளை காட்டியும் ஓட்ட முடியவில்லை என்பதை உணர்ந்து
    பலூனை பறக்க விட்டார்கள். தியேட்டர் சைக்கிள் ஸ்டாண்டு மற்றும் ஸ்டால் நடத்தும் அனைவரின் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் 175 நாட்கள் ஓட்டி. தங்களது முதல். இழுவை சாதனையை
    அரங்கேற்றியதை
    அனைவரும் அறிவார்கள்.

    "பாவமன்னிப்பை" 175 நாட்கள் ஓட்டுவதற்காக சொந்த படமான "பாசமலரை" கூட சித்ராவில் ரிலீஸ் செய்து விட்டு "பாவமன்னிப்பை" வெள்ளி விழா ஓட்டி. விட்டு வெள்ளி விழா கணக்கில் சேர்த்துக் கொண்டார்கள். 1961 ம் ஆண்டு 2 படங்களையும் வெள்ளிவிழா ஓட்டி இழுவையில் ஒரு புதிய சாதனையை தொடங்கி வைத்தார்கள். ஆனால் அந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் வெற்றி அந்த 2 படமும் கிடையாது. வெள்ளிவிழா ஓடாத "திருடாதே" மற்றும் "தாய் சொல்லை தட்டாதே" படங்கள்தான்.

    இதுபோல ஒவ்வொரு படத்தையும் அவர்கள் இஷ்டத்திற்கு 100 நாட்கள் ஓட்டுவதும் வெள்ளிவிழா ஓட்டுவதும் அவர்கள் கையில்தான். வசூல் தேவையான அளவுக்கு கூட்டி காண்பிக்கவும் அவர்களால் முடியும்.
    அதனால் சாந்தி தியேட்டர் சாதனையை பொதுவாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. அது இயல்பான சாதனை கிடையாது. அவர்களது சொந்த இழுவை சாதனையாக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்..........ks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #872
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ம*றைந்த* மாபெரும் இசைக்க*லைஞ*ர் எஸ்.பி.பால*சுப்பிர*ம*ணிய*ம் அவ*ர்க*ள் ந*ம் புர*ட்சித்த*லைவ*ருக்காக பாடிய* பாட*ல்க*ளின் அணிவ*குப்பு ..

    1. ஆயிர*ம் நில*வே வா..அடிமைப்பெண்

    2. நீராழி ம*ண்ட*ப*த்தில்..த*லைவ*ன்

    3. வெற்றி மீது வெற்றி வ*ந்து...தேடிவ*ந்த* மாப்பிள்ளை

    4. பாடும்போது நான் தென்ற*ல்காற்று..நேற்று இன்று நாளை

    5. அங்கே வ*ருவ*து யாரோ..நேற்று இன்று நாளை

    6. அவ*ள் ஒரு ந*வ*ர*ச* நாட*க*ம்..
    உல*க*ம் சுற்றும் வாலிப*ன்

    7. நாட் சோ ஈஸி டு ப்ரூவ்..
    ஊருக்கு உழைப்ப*வ*ன்

    8. இத*ழே இத*ழே தேன் வேண்டும்..இத*ய*க்க*னி

    9. அன்பு ம*ல*ர்க*ளே ந*ம்பியிருங்க*ளே..நாளை ந*ம*தே

    10. நான் ஒரு மேடைப்பாட*க*ன்..நாளை ந*ம*தே

    11. லவ்விங் ஈஸ் ய கேம்..நாளை ந*ம*தே

    12. இர*வுக*ளே பார்த்த*தில்லை..ப*ட்டிக்காட்டு பொன்னையா

    13. நேர*ம் ப*வுர்ண*மி நேர*ம்..
    மீன*வ* ந*ண்ப*ன்..

    14. உங்க*ளில் ந*ம் அண்ணாவை பார்க்கிறேன்..ந*வ*ர*த்தின*ம்

    15. மாலை நேர* தென்ற*ல் வ*ந்து பாடுதோ..நீரும் நெருப்பும்

    16. உன் யோக*ஜாத*க*ம் நீ என்னை சேர்ந்த*து..இன்றுபோல் என்றும் வாழ்க*.

    17. இர*ண்டு க*ண்க*ள் பேசும் மொழியில்..ச*ங்கே முழ*ங்கு

    #வெளிவ*ராத* ப*ட*ங்க*ளின் பாட*ல்க*ள்..

    1. என்னை தேடிவ*ந்தாள் த*மிழ் ம*க*ராணி..அண்ணா நீ என் தெய்வ*ம்

    2. அன்ப*ர்க*ளே என் அருமை ந*ண்ப*ர்க*ளே..இதோ என் ப*தில்

    3. வ*ண்ண*ப்பூஞ்சோலை..
    இதோ என் ப*தில்

    4. வீர*த்திலேக*வியெழுதி...
    .........அடிமைப்பண் (ப*ட*த்தின் நீள*ம் க*ருதி ப*ட*மாக்க*வில்லை)

    5. தாயில்லாம*ல் நான் இல்லை..அடிமைப்பெண் (ப*ட*த்தில் டி.எம்.எஸ். பாடிய*து ம*ட்டுமே இட*ம்பெறும்).........Rj, Ero

  4. #873
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கிளம்பு!! ஆபத்து??
    --------------------------
    எம்.ஜி.ஆர் கண்ணில் பூ விழுந்தாலும் புழுவாகத் துடிப்பார்கள் மதுரை ரசிகர்கள் என்பார் நம் முக நூல் ஹயாத்!!
    அப்படி ஒரு சம்பவத்தை இன்று காணலாம்!
    நெல்லை கண்ணன்!
    ஒட்டு மொத்தமாக அத்தனை பேரும் இவரைக் கட்சிக் கண்ணோட்டத்தில் தூற்றினாலும்--
    எனக்கு மிகவும் பிடித்த மனிதர்! அதாவது இவரது மேடைப் பேச்சு,,கேட்பவரைக் கட்டிப் போடும்!
    எம்.ஜி.ஆரைப் பற்றி இவர் பேசி நாம் கேட்க வேண்டும்! நகைச்சுவையும் நடிப்பும் கலந்து இவர் பேசும் பாணியில் எம்.ஜி.ஆரைப் பற்றி இவர் பேசுவது வெகு நிச்சயம் நம்மையே மறக்கச் செய்யும்!
    தூத்துக்குடி துறைமுகம்!!
    வரலாற்றில் ஒரு மைல் கல்லான இந்தத் துறைமுகம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடை பெறுகிறது!!
    கேபினட் அமைச்சர் ஆர் வெங்கடராமன் அவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தைத் திறந்து வைக்கிறார்!
    முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலை!
    எம்.ஜி.ஆர் பேசும்போது குறிப்பிடுகிறார்--
    ஒரு முதல்வர் என்ற முறையில் உரிய முறையில் எனக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்! என்ன காரணத்தாலோ,,எவருடைய நிர்ப்பந்த்தினாலோ அதைச் செய்யாமல் விட்டு விட்டாரகள்.
    என் தமிழ் நாட்டுக்கு இப்படியொரு துறைமுகம் அமைகிறதே என்ற மகிழ்ச்சியினாலேயே இந்த விழாவுக்கு நான் வந்திருக்கிறேன்??
    எம்.ஜி.ஆர்,,இப்படிப் பேசியது தான் தாமதம்--
    நெல்லைக் கண்ணன்,,அருகில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி.கோசல்ராம் காதில் கிசுகிசுக்கிறார்--
    நாமக் கிளம்பிடுவோம்? இனி ஒருக் கணம் இங்கிருந்தாலும் நமக்கு ஆபத்து?
    குறிப்பாக மீனவக் குப்பத் தலைவர் பெர்னாண்டோவின் முகம் மாறுகிறதை கவனியுங்கள்!
    கோசல்ராம் கேட்கிறார்--
    அப்படி என்ன திடீர் ஆபத்து?
    என்ன ஆபத்தா?? எம்.ஜி.ஆர் குறிப்பிட்டதைக் கவனீச்சீங்க இல்லே?
    என் தலைவனை உரிய முறையில் கூப்பிடாமல் எங்கப் பகுதியில் நீங்க எப்படி விழா நடத்தலாம் என்று ஜனங்கப் பொங்க ஆரம்பிச்சுடுவாங்க!
    அதிலும் இந்தக் குப்பத் தலைவர் பெர்னாண்டோ இருக்காரே--
    கையை ஊனாமலேயேக் கர்ணம் அடிக்கறவர்??
    கோசல்ராம் கவலையுடன் கேட்கிறார்--
    அப்ப நம்ம மினிஸ்டர் ஆர்.வியோட கதி?
    அவர் புத்திசாலித்தனமா எம்.ஜி.ஆர் கார்லேயே ஒட்டிக் கொண்டு போயிடுவார். நமக்குத் தான் ஒரு வண்டியும் கிடைக்காது??
    இங்கே நிலவரம் இப்படியிருக்க--
    மேடையில் பேசி முடித்த எம்.ஜி.ஆர்,,தன் கட்சியினரிடம் சொல்கிறார்--
    ஆர்.வி.யை பத்திரமா காரில் அனுப்பிடுங்க. நான் இன்னிக்கு நைட் இங்கே தங்கிட்டு,,,காலையில் புறப்படுகிறேன்!!
    அதாவது தாம் பேசும்போதே கூட்டத்தினரின் நாடித் துடிப்பை அளந்துவிட்ட முதல்வர்!!!
    அன்று இரவு அங்கேத் தங்குகிறார் எம்.ஜி.ஆர்!
    தூத்துக்குடி பிழைத்துக் கொள்கிறது!!!
    கோட்டையில் ஒரு அரசாங்கம் நடத்திக் கொண்டே--மக்களின்--
    இதயத்தில் ஒரு ஆட்சி செய்தவர் எம்.ஜி.ஆர் ஒருவர் தான் என்பதில் மறுப்பு உண்டா தோழமைகளே???.........

  5. #874
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/09/20 அன்று அளித்த தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    புரட்சி தலைவர், பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆசி பெற்ற ரசிகர்கள் ,அவரது அன்புக்குரியவர்கள்*கூட்டம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது .குறிப்பாக சொல்ல போனால் திரு.லோகநாதன் ராமச்சந்திரன் என்பவர் (ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு,சென்னை ) எனக்கு ஒரு இ மெயில் அனுப்பி உள்ளார் .அந்த செய்தியில் கிட்டத்தட்ட* ஒரு நாளைக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளம் மூலமாக ,குறிப்பாக சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் திரு.முருகு பத்மநாபன், பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா உள்பட சுமார் 100 பேர்களுக்கு அனுப்புவதாக சொல்லியிருக்கிறார் .* கடந்த வாரம் மட்டும் அந்த இணைய தளத்தில் ஒரு லட்சம் பேர்கள் பார்த்திருக்கிறார்கள் .இது இந்த இணையதளத்தின் சாதனை என்று சொல்லி இருப்பதோடு, சில தவறுகளை சுட்டி காட்டியிருக்கிறார் .*நீங்கள் நேற்று இன்று நாளை படம் வெளியானது தேர்தலுக்கு முன்பாக என்று அறிவித்தீர்கள் .அது கட்சி தேர்தலுக்கு முன்பாக இல்லை என்று* பல்வேறு குற்றச்சாட்டுக்களை சொல்லி இருக்கிறார் .உண்மையிலேயே திரு.லோகநாதன் ராமச்சந்திரன் அவர்களுக்கு அந்த தவறுகளை சுட்டி காட்டியதற்கு வரவேற்று நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் .சகாப்தம் நிகழ்ச்சி என்பது ஒரு வரலாற்று பதிவு அல்ல .இது வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற ஒரு தொடர் .**


    எம்.ஜி.ஆர். என்கிற சாதாரண ,சாமான்ய மனிதர் வடசென்னை வால்டாக்ஸ் சாலை அருகில் மாதம் ரூ.15/- வாடகைக்கு தன் தாய், அண்ணன் , அண்ணி ,ஆகியோருடன் குடியிருந்தவர் ,தமிழகத்தை சுமார் 11 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது எப்படி என்பதை 10வது வகுப்பு, 12 வது* வகுப்பு மாணவ சமுதாயம் தேர்வில் தோற்றதும் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறதே ,அந்த சமூகம் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் . அவர் படிப்படியாக தன்னை வறுமையில் இருந்தும் ,இல்லாமையில் இருந்தும் ,படிப்பறிவும் இல்லாமல் எப்படி தன்னை வளர்த்துக் கொண்டார் அந்த ஆளுமை நமக்கு சொல்லித் தருகின்ற* பாடங்கள் என்ன என்பதைத்தான் நாம் தொடர்ந்து பார்க்க உள்ளோம் .


    ஆண்டிபட்டியில் இருந்து திருமதி வசந்தி என்கிற சகோதரி பேசுகிறார் .* அவர் சொன்ன விஷயம் என்னவென்றால், நாங்கள் இன்றைக்கு இந்த கொரோனா பயத்திற்கு ,அச்சமின்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்* நீங்கள் தந்து கொண்டிருக்கிற சகாப்தம் தொடரில்அவர் குறித்து* அளிக்கிற தகவல்கள்தான் .நாங்கள் இரு சகோதரிகள் .எங்களுக்கு தாய், தந்தை இல்லை. ஆனாலும் கூட நாங்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத்தான் மூத்த சகோதரராக பாவித்து வாழ்ந்து வருகிறோம் .அவர் 1967 ஜனவரி 12ந்தேதி நடிகர் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார் . அன்றைக்கு நாங்கள் அழுத கண்ணீர் ஆறாக பெருகியது .அன்றைய தினம் முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 12ந்தேதி நாங்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட* நாள் முழுக்க**அருந்தாமல் உண்ணாவிரதத்தை கடைபிடித்து வருகிறோம் . அந்த மகானை போற்றி அவர் நினைவாகவே வாழ்ந்து வருகிறோம் இப்படிப்பட்ட ஒரு ஆன்மா, ஒரு படிப்பினை ,ஒரு பாடம் வேறு யாருக்காவது* இந்திய வரலாற்றில் இருந்திருக்குமா என்றால் சந்தேகமே .


    திரு.கா .லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*
    --------------------------------------------------------------------------
    அந்த காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட குணங்களா, அல்லது திரைப்பட வெற்றியின் குணங்களா ,எந்த குணங்களால் கல்லூரியில் இருந்து நீங்கள் எம்.ஜி.ஆர்.அவர்களால் ஈர்க்கப்பட்டீர்கள் .
    கா.லியாகத் அலிகான் :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதுமே ஆழ்மன ஆராய்ச்சி என்று ஒன்றை செய்வார் .ஒரு மனிதனை பார்த்த உடனேயே ,இவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதில் வல்லவர் அவர் .வந்திருப்பவரின் குறையை,தேவைகளை கண்டுபிடித்து, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய ஒரு மிக பெரிய எக்ஸ்ரே கருவிதான் அவர் .ஸ்கேனிங் மைண்டட் பர்சனாலிட்டிதான் எம்.ஜி.ஆர். அவர்கள் .எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவரை சாதாரணமாக* யாரும் எளிதில் எடை போட முடியாது .அவர் பிறப்பிலேயே, தன வாழ்நாளில் மூன்று நாட்கள்* பட்டினி கிடந்து*உணவிற்காக திண்டாடிய நினைவுகளை**தான் முதல்வரான பின்பு*தைரியமாக நான் சிறு வயதில் பட்டினி கிடந்தது உணவிற்காக வருந்தியவன் ,இன்று நாட்டை ஆளக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று கூறி சத்துணவு திட்டத்தை அமுலாக்கியவர் .இவற்றை சொல்வதற்கு கூச்சப்படுவதில்லை வெட்கப்படுவதில்லை .தன்னை நினைத்து பார்க்கக்கூடிய தனிப்பட்ட தகுதியுடையவர் .* இன்றைக்கு எப்படி பரதன் நாட்டை ஆளும் வாய்ப்பு வரும்போது ராமனின் பாதஅணிகளை,வைத்து** வணங்கி ஆட்சியை செய்தாரோ, அதுபோல அண்ணாவை மனதில் நிலைநிறுத்தி, எதற்கெடுத்தாலும் அண்ணா, அண்ணா என்று அண்ணாவின் உருவத்தை கொடியில் பதித்தார் .அண்ணா அளித்த ஸ்பேனர் என்ற கருவியை**வைத்து அண்ணா* தொழிற்சங்கம் உருவாக்கினார் .தி.மு.க. வில் இருந்து நீக்கியதும் அண்ணாவின் பெயரால் அண்ணா தி.மு.க. என்ற கட்சியை தொடங்கினார் .எதற்கும் அவர் பயப்படவில்லை காரணம் மக்கள், தொண்டர்கள் ,ரசிகர்களின் செல்வாக்கு .நீங்கள் சொன்னது போல காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது திரைப்படத்தில் தான் காளையை அடக்குவது போல நடித்து ,காங்கிரசின் சின்னமான காளையை நான் அடக்க கூடியவன் என்பதை மறைமுகமாக சுட்டி காட்டியதோடு அல்லாமல் ,காங்கிரஸ் கட்சியை, ஆட்சியை விமர்சித்து தி.மு.க.வின் சின்னம்*,உதயசூரியன் என்ற பெயரை பிரபலம் அடைய செய்தார் . 1962 தேர்தலுக்கு பின்னர் ஓரளவு காங்கிரஸ் விழித்து கொண்டபோது ,1966ல் வெளியான அன்பே வா படத்தில் உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே என்ற பாடல் வரிகளுக்கு நடித்தார் அப்போதைய தணிக்கைக்குழு அதை ஏற்காததால், பாடல் வரிகளில் மாற்றம் செய்து புதிய சூரியனின் பார்வையிலே என்று பாடலை வடிவமைத்தார் .இப்படி விடாமல் போராடி உதய சூரியன் சின்னத்தை பிரபல படுத்த திரைப்படங்களில் தனிப்பட்ட முயற்சி எடுத்து கொண்ட எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு இருந்ததை போல மனோதைரியம் வேறு எவருக்கும் இருந்ததில்லை என்று இருக்கும்போது அவர் மற்றவர்க்கு பயப்படுவார் ,பயந்து கொண்டு நடப்பார் என்று எப்படி இவர்களால் கருத்து சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை .*


    ஆண்டிபட்டி சகோதரி வசந்தி அவர்களுக்கு வாழ்க்கையில் மிக பெரிய துயரம் .சமூகத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டார் .உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டார் .வருத்தம் ,சோகம், வாழ்க்கையில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்கிற நெருக்கடி .அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களின் பாடல்கள்தான் மனதைரியம் கொடுத்தது ,என்னை காப்பாற்றியது என்று அவர் சொல்கிறார் .* வேட்டைக்காரன் படத்தில்வெள்ளிநிலா முற்றத்திலே**பாடலிலே அவர் பாடிய வரிகள் நான்கு பேர்கள் போற்றவும் , நாடு உன்னை வாழ்த்தவும் ,மானத்தோடு வாழ்வதுதான் சுயமரியாதை, நல்ல மனமுடையோர்* காண்பதுதான் தனிமரியாதை .அரச கட்டளை படத்தில் ,வேட்டையாடு ,விளையாடு *பாடலில் நேர்மை உள்ளத்திலே ,நீந்தும் எண்ணத்திலே, தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை .உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிரித்து வாழ வேண்டும் ,பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் ,பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே* என்று பல பாடல்கள் எனக்கு படிப்பினையாகவும், படங்களாகவும் இருந்தன . இந்த பாடல்களை யார் யார் எழுதினார்களோ,அவற்றை எனக்காகவே எழுதியது போல நான் நினைத்து என் மனதில் வைத்து நான் வாழ்ந்து காட்டினேன் என்று உறுதியாக ,அவரது பாடல் வரிகளுக்கு வரலாற்று சாட்சியாக ஆண்டிபட்டி சகோதரி வசந்தி இருந்து கொண்டிருக்கிறார் .


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒவ்வொரு பாடல் வரிகளிலும் ,காட்சிகள் அமைப்பிலும் ஏன் அவ்வளவு ஆழமாக ,ஒரு அர்ப்பணிப்போடு கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதற்கு காரணம் இது ஒன்றும் வெறும்* பொழுதுபோக்கு அல்ல .மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது பொழுதுபோக்கு சாதனமாக இருக்கலாம் .ஆனால் எனக்கு இது மக்களுக்கான ஒரு உறவுப்பாலம் .அதனால்தான் யார் எந்த படத்தில் நடித்தாலும் ,இது எம்.ஜி.ஆர். படம். எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பு .யார் தயாரித்தாலும் எம்.ஜி.ஆர். நடிக்கும்போது சில நிபந்தனைகள் போடுவார் .இந்த படத்தில் இடம் பெறும் பாடலோ, பேசுகின்ற வசனமோ ,சொல்லப்படுகின்ற கருத்துக்களோ,எல்லா விஷயங்களும் என்னுடைய அனுமதியின் பேரில்தான் இடம் பெறும்,என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் . உலக புகழ் நடிகர் மார்லன் பிராண்டோ கூட* இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதில்லை .இப்படி ஒப்பந்தம் செய்த முதல் நடிகர் உலகத்திலேயே எம்.ஜி.ஆர். ஒருவர்தான் .இதை அவரே பல பேட்டிகளில்* சொல்லி இருக்கிறார் . மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------
    1.அன்பு மலர்களே, நம்பி இருங்களேன் - நாளை நமதே*

    2.ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன்* -தனிப்பிறவி*

    3.ஒரு கொடியில் இரு மலர்கள் - காஞ்சி தலைவன்*

    4.திரு.கா .லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*

    5.வெள்ளிநிலா முற்றத்திலே -வேட்டைக்காரன்*

    6.நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன் - நான் ஆணையிட்டால்*

  6. #875
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    “ ‘அடிமைப்பெண்’ வெற்றியடைந்தது எப்படி?” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-2

    புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.
    திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
    எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.

    ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
    எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.
    எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.

    அன்று அடிமைப்பெண்
    `அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.

    `அடிமைப்பெண்'ணின் சாதனை
    தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.
    இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.

    அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’
    ‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.
    பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'
    `அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை

    வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவி நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
    ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.
    புஷ் குல்லா
    `அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.

    1936-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.
    பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.
    எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்
    ``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.
    கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!
    எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.
    நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு
    சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.
    ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா
    கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.
    தாயின் வைராக்கியம்
    வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.
    சூரக்காடு ஏன்?
    எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.
    ஜீவா – காதலின் கௌரவம்
    எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர் நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.
    குழந்தைகள், ரசிகரான கதை
    எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.
    `அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.
    இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.
    எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?
    எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.

    கட்சிக் கொள்கை
    எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார். `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...' போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.
    `அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார். பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை.........MGR., Fans International Associations Groups.........

  7. #876
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "நான் கடவுள் பக்தி உள்ளவன்" கோயிலில் விளக்கேற்றிய எம்.ஜி. ஆர். பேச்சு

    "நான் மிகுந்த கடவுள் பக்தியுள்ளவன். கடவுளிடம் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. கடவுளை வணங்காதே கோயிலுக்குப் போகாதே என்று ஒருபோதும் நான் யாரிடமும் கூறியது கிடையாது" இவ்வாறு கோயம்புத்தூர் மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பொருத்தப்பட்ட மின்சார ஒளி விளக்குகளை ஏற்றி வைத்து புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். பேசினார்.

    எம்.ஜி.ஆர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக் தயாரிப்பாளரான சாண்டோ சின்னப்பா தேவர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் மின்சார ஒளி விளக்குகளைப் ஏற்றிவைக்கும் விழாவுக்கு புரட்சி நடிகரையும் அழைத்திருந்தார். எம்.ஜி.ஆர். தொடர்ந்து பேசுகையில் கோவில்களுக் செல்லுபவர்களால் எல்லோரும் பக்திமான் ஆகிவிடப்போவதில்லல். கடவுள் இல்லை என்றோ கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் நான் என்றோ ஒருபோதும் சொல்வவில் கடவுள் மேல் பக்தி செலுத்துபவன் நான். ஆனால் கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றி பிழைப்பவர்களையும், அதற்கேற்ப சட்டதிட்டங்கள் வகுத்து வைப்பவர்களையும் தான நான் எதிர்கிறேன் என்று கூறினார். ...sb...

  8. #877
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தாயகம் திரும்பினார் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் - 3

    *18 மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றபோது மக்களுக்கு அனித்த வாக்குறுதியில் நாங்கள் சொன்னதைச் செய்ய முடியாமல் போகும்போது எங்கள் ' பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களோடு மக்களாக வந்து நிற்போம் என்பதை இங்கே மீண்டும் உறுதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    "இளைஞர்கள் எதிர்காலத் தில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொறுப்புகளைப் பெற்றாக வேண்டும். அதற்கான வாய்ப் ஏற்படுத்தித் தரும் மாபெரும் பொறுப்பு நமக்கு உண்டு.

    "உழைப்பவர்களே உயர்ந்தவர்கள் என்ற தத்துவத்தைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்டுவோம் என்று உறுதி கூறுகிறேன்.

    " நான் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது போராட்டங்கள், கலவரங்கள் இல்லாமல் தமிழகத்தில் அமைதி நிலவ வழி வகுத்த அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றிபினைத் தெரிவித்துக் கொள்கிறேன், தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    "கடமையைச் செய்வதில் கண்ணியத்தோடும், பொறுப்போடும் கட்டுப்பாட்டோடும், பொறுப் புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும் . எதிர்காலத்தில் உழைத்துத்தான் பிழைக்க வேண்டிய மக்களாக வேண்டும்.

    " நான் சென்ற மேலை நாடுகளில் வேலைக்கு ஆள் இல்லை என்கிறார்கள். இங்கே ஆளுக்கு வேலை இல்லை. இந்த நிலையை மாற்றிக் காட்டுவோம். அதற்காகப் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுவது எதிர்காலக்கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம் . "அந்த வகையில் நாங்கள் செய்யும் முயற்சிகளுக்கு உங்களுடைய ஒத்துழைப்பைத் தர வேண்டும் .

    பிறகு, முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அவரை வரவேற்றார்கள், பிறகு தலைமைச் செயலாளர் திரு.வி.கார்த்திகேயன் அவர்கள் அவரை வரவேற்றார்.

    முதல்வர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டதாவது " என்னுடைய பயணம் பயன் உள்ள பயணமாகும். தமிழ் நாட்டுத் தொழில் வளர்ச்சிக்காக, தொழில் வளர்வதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்களுக்குத் தொழில் வாய்ப்புப் பெருக, என்னால் ஆன அனைத்தும் செய்யக் கூடிய வகையில் பல புதிய விவரங்களையும் தொடர்புகளையும் பெற நல்ல வாய்ப்புப் பெற்றேன்.

    "அமெரிக்க அரசு நன்றி கூறிப் பாராட்டும் அளவுக்குத் தங்கள் அதிகாரிகள் மூலமாக, பல்வேறு தனியார் துறையைச் சேர்த்த தொழில் அதிபர்கள் போன்றவர்களைச் சந்திக்கவும், மருத்துவத் துறை, கல்வித்துறை காவல்துறை போன்றவைகளில் அவர்கள் செயலாற்றும் விதத்தை ஓர் அரசு எந்த அளவுக்கு வெளிப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு முழு வாய்ப்பை அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள் எனக் கூறும்போது என் உள்ளத்தில் நன்றி உணர்ச்சி ஏற்படுகிறது என்பதை மனநிறைவோடு கூறிக் கொள்கிறேன்.

    " நான் சென்ற நாடுகளில் எல்வாம் , குறிப்பாக அமெரிக்க நாட்டில் எங்கெங்கு சென்றேனோ அங்குள்ள இந்தியப் பேரரசின் தூதரக அதிகாரிகளைக் கொண்டு எணக்கம் என்னோடு வந்த என்னுடைய அந்தரங்கச் செயலாளர் லட்சுமிநாராயணனுக்கும் முழு ஒத்துழைப்பையும் தந்ததோடு, அந்தந்த நாட்டு அரசு அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நாங்கள் பாரைச் சந்திக்க விரும்புகிறோமோ அவர் களைச் சந்திப்பதற்கான வாய்ப்புக்களை நிறைவேற்றித்தரவும், அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும், செயலாற்றும் முறையையும் பெரிதும் பாராட்டக்கட கடமைப்பட்டுள்ளேன்.

    "என் பயணம், நான் மேலே சொன்ள பல பிரச்சினைகளைப் பற்றி இருந்தது என்றாலும் அத்தோடு கடல் அரிப்பினால் ஏற்படுகிற அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும், அண்மைக் காலங்களில் கடல் கொண்ட இடங்களைத் திருத்தி அமைத்து நிலமாக்கவும் வேண்டிய களையும் பெற்றதோடு மட்டும் அன்றி, சிங்கப்பூர் நாட்டில் அந்த ஆட்சியினர் இது விஷயத்தில் எடுத்துக்கொண்ட தடைமுறைச் செயல்களின் விளைவாக என்ன பலன் ஏற்பட்டுள்ளது என்பதை நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும் என்னால் முடிந்தது என்பதைக் குறிப்பிட்டுக் விரும்புகிறேன்.

    "தாயகம் திரும்பிய தமிழக முதல்வரைக் காண்பதற்கு தமிழகத்து மக்களே, சென்னை நகரில் திரண்டருந்தனர் என்றால் அது மிகையாகாது. .........sb...

  9. #878
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சி_தலைவர்
    #இதயதெய்வம்
    மன்னாதி மன்னன்
    #பாரத_ரத்னா_டாக்டர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு
    #என்_முகநூல்_சொந்தங்கள்
    #மற்றும்_நண்பர்கள்_அனைவருக்கும்
    #இனிய_ஞாயிற்றுக்கிழமை
    #காலை_வணக்கம்...

    #திரு_எஸ்_பி_பாலசுப்பிரமணியம் #அவர்களின்_மறைவால்_இரண்டு
    #நாட்களாக_தலைவர்_பற்றிய_பதிவுகள்
    #பதிவிட_இயலவில்லை
    #மன்னிக்கவும்...

    புரட்சி தலைவர் எம்ஜியார்
    முறைப்படி பள்ளி, கல்லூரிகளில் பெரிய படிப்பு படித்தவர் அல்ல. என்றாலும் கல்லூரிகளில் படித்தவர்களைவிட அதிக விஷயங்களை படித்தவர். தமிழிலே ஆழமான புலமை மிக்கவர்.

    சினிமா, அரசியல் என்று இரு துறை களிலும் முதல் இடத்தில் இருந் தவர் எம்.ஜி.ஆர்.! அதற்காக அவர் உழைத்த உழைப்புக்கே நேரம் போதாது எனும்போது, மற்ற துறைகளிலும் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு எங் கிருந்து அவருக்கு நேரம் கிடைத்திருக் கும் என்று யோசித்தால் பிரமிப்புடன் கூடிய வியப்பு ஏற்படுவது நிச்சயம்.

    பல துறைகளிலும் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த பரந்த, ஆழமான அறிவுக்கு அவர் அதிக அளவில் பல விஷயங் களைப் படித்ததே காரணம். தனது ராமாவரம் தோட்டத்து வீட்டில் நிலவறை கட்டி அதில் ஏராளமான நூல்களை வைத்திருந்தார். கிடைக்கும் நேரத்தில் நூல்களைப் படித்து ஆழமான பொது அறிவையும் தமிழறிவையும் பெற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நூல்களின் ஒரு பகுதி நினைவு இல் லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    ‘இணைந்த கைகள்’ என்ற படத்தை எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பூஜை போடப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் பல்வேறு காரணங்களால் படம் நின்றுபோனது. அந்தப் படத்துக்காக நாயகனை எண்ணி நாயகி பாடுவதுபோல, கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலின் பல்லவி இது:

    ‘உன் கைக்கிளையில் நானமரும் கிளியாக மாட்டாமல்

    கைக்கிளையில் வாடுகிறேன் கண்ணீரில் ஆடுகிறேன்’’

    பல்லவியைக் கேட்டு எம்.ஜி.ஆர்., ‘‘பிரமாதம், பிரமாதம்’’ என்று வாலியைப் பாராட்டினார். அப்படி அவர் பாராட்டுகிறார் என்றால், ‘கைக்கிளை’ என்ற சொல்லை சிலேடையாக வாலி பயன்படுத்தியதை அவர் வெகுவாக ரசித்திருப்பதன் வெளிப்பாடு அது. தமிழ் அறிந்தவர்களுக்கே அந்த சிலேடை புரியும். முதலில் வரும் ‘கைக்கிளை’க்கு, ‘உன் கையாகிய கிளையில்’ என்று பொருள். இரண்டாவதாக வரும் ‘கைக்கிளை’க்கு ‘ஒருதலைக் காதலில் வாடுகிறேன்’ என்று அர்த்தம். அதன் பொருளை எம்.ஜி.ஆர். புரிந்து ரசித்திருப்பதன் மூலம் அவரது தமிழறிவை புரிந்து கொள்ள முடியும்.

    ‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் ஆரம்பத் தில் ‘இது நாட்டைக் காக்கும் கை…’ என்ற பாடல் இடம் பெறும். பாடலின்போது ஒரு இடத்தில், மாணவர் களுக்கு ஆசிரியர் திருக் குறளை கரும்பலகை யில் எழுதி பாடம் நடத் துவதுபோல காட்சி. ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அத னால் உழந்தும் உழவே தலை’ என்ற குறள் கரும்பலகையில் எழுதப்பட்டிருக் கும். காட்சி படமாக்கப்படுவதற்குமுன், கரும் பலகையில் எழுதப் பட்டிருந்த அந்தக் குறளில் பிழை இருப்பதை எம்.ஜி.ஆர். கவ னித்து திருத்தினார். அந்த அளவுக்கு தமிழறிவு மிக்கவர்.

    நீதியரசர் மு.மு.இஸ்மா யிலை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். நீதியின் மறு வடிவமாக விளங்கிய நடுநிலை தவ றாதவர். கம்பனில் தோய்ந்து கரை கண்ட இலக்கியவாதி. கம்பன் கழகத்தின் தலை வராகவும் பணியாற்றியவர்.

    ஒருமுறை, கம்பன் கழகம் சார்பில் சென்னையில் நடந்த கம்பன் விழாவை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உட்பட தமிழறிஞர்களே வியக்கும் அளவுக்கு கம்ப ராமாயணத்தில் கம்பனுடைய கவிதைகளில் இருந்து இலக்கிய நுணுக்கமும் பொருட்செறிவும் நிறைந்த சில கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் எடுத்துக் காட்டிப் பேசினார். தமிழறிஞர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

    எம்.ஜி.ஆர். பேசி முடித்து இருக்கை யில் அமர்ந்ததும் அருகே அமர்ந்திருந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவரை பாராட்டிவிட்டு, ‘‘உங்களுக்கு கம் பனைப் படிக்கும் வாய்ப்பு எப்படி ஏற்பட் டது?’’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் சிறுவனாக இருக் கும்போது ‘சம்பூர்ண ராமாயணம்’ நாடகத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது கம்ப ராமாயணத்தைப் படித்திருக்கிறேன். அதனால்தான், அந்தப் பாடல்களைப் பற்றி இப்போது என்னால் பேச முடிந்தது’’ என்றார். எம்.ஜி.ஆரின் தமிழறிவை மட்டுமின்றி, நினைவாற்றலையும் கண்டு வியந்து போனார் நீதியரசர் இஸ்மாயில்.

    இதேபோல, மற்றொரு முறையும் கம்பன் கழகம் நடத்திய விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது, பரிசு பெற்ற சில இளைஞர்கள் பேசினர். தமிழ் இலக்கணத்தில் மெய்ப்பாடு என்று ஒன்று உண்டு. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திலே மெய்ப்பாட்டு இயல் என்று ஒரு இயலே உண்டு. அந்த இயலின்படி, நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்பது தொல்காப்பியரின் கூற்று.

    விழாவில் பேசிய ஒரு இளைஞர், இந்த எட்டையும் குறிப்பிட்டுவிட்டு ‘சம நிலை’ என்பதையும் சேர்த்து மெய்ப்பாடு கள் ஒன்பது என்று பேசினார்.

    பின்னால் பேசிய எம்.ஜி.ஆர். அந்த இளைஞர் பேசியதை சுட்டிக்காட்டி, ‘‘தமிழ் இலக்கண மரபுப்படி மெய்ப்பாடு கள் எட்டுதான். சமநிலை என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து வந்து பின்னால் சேர்ந்தது’’ என்று கூறினார். எம்.ஜி.ஆரின் தமிழறிவைக் கண்டு இஸ்மாயில் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர். எம்.ஜி.ஆரிடம், ‘‘இது எப்படி உங் களுக்குத் தெரியும்’’ என்று இஸ்மாயில் கேட்டார். அமைதியாக எம்.ஜி.ஆர். பதிலளித்தார்… ‘‘தொல்காப்பியம் படித்திருக்கிறேன்.’’ அசந்துபோனார் நீதியரசர் இஸ்மாயில்!

    எவ்வளவோ விஷயங்கள் படித்திருந் தாலும் தனக்கு எல்லாம் தெரிந்தது போல எம்.ஜி.ஆர். காட்டிக் கொள்ள மாட்டார். ‘இதய வீணை’ படத்தில், ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...’ பாட லின் நடுவே, எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை மஞ்சுளா, ‘‘ஆமா, நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ’’ என்று கேட்பார்.

    அதற்கு, தான் படித்த உலகின் உயர் வான புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகம் தந்த தாக்கத்தால் அறிந்த தத்துவம் பற்றியும் பாடலின் மூலமே அடக்கத் துடன் எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்...

    ‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா;

    சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா!’

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தமிழறிஞர் களின் கோரிக்கையை ஏற்று, தஞ்சையில் தமிழுக்கு என்றே தனியாக தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். மற்ற பல்கலைக்கழகங்களைவிட பெரிதாகவும் எல்லா வசதிகளையும் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 1,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்!

    அன்புடன்
    படப்பை பாபு...

  10. #879
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 24/09/20* அன்று அளித்த*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------
    ஒரு புன்னகை என்பது தொற்றிக்கொள்கிற* ஒரு நல்* உபாயம் என்பதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்க்கையில் கற்று கொடுத்திருந்தார் . இந்தி நடிகர் திலீப் குமார் எம்.ஜி.ஆர். அவர்களின் புன்னகை பல கோடி பெறும் என்று சொல்லி இருக்கிறார் . அந்த புன்னகை எல்லோருக்கும் வரவேண்டும் என்று விரும்பியவர் .தன்னுடைய திரைப்படங்களில் கூட அதிகபட்சமாக சோகரச காட்சிகள் இடம் பெறுவதை தவிர்த்து ,தன்னுடைய படங்களை பார்ப்பவர்கள்எல்லோரும்எந்த காரணத்தினாலும்** மன அழுத்தம்,துக்கம், துயரம் ஆகியவற்றுடன் வீடு திரும்ப கூடாது என்பதற்காக திரைக்கதைகள் அமைப்பதில்ஒவ்வொரு நொடியும்* மிகவும் கவனமாக இருந்தார் அதனால்தான் அவரது படங்களில் சோகம் என்பதை அவ்வளவாக காணமுடியாது . அதே நேரத்தில் ஆழமாக உழைத்தால் முன்னேறலாம் . நீங்கள் நல்லவராக இருந்தால் வெற்றி பெறலாம் .* நீங்கள் ஊருக்கு நன்மை செய்தால் உயர்வு பெறலாம் என்கிற படிப்பினைகள் பாடங்களை மட்டுமே தன்னுடைய படங்களில் வைத்திருந்தார் .


    ஏதோ சில காரணங்களால் வீடு ஜப்தி செய்ய நேரிட்டால் நீதிமன்ற உத்தரவின்படி அமீனா வந்து அந்த வீட்டை ஜப்தி செய்வார் .* ஒருகால கட்டத்தில் எம்.ஜி.ஆரின் வீடு ஜப்தி ஆகும் நிலையிருந்தது .மாலையில் வந்த நீதிமன்ற உத்தரவால் அது தடுக்கப்பட்டது .அப்போது நெல்லையில் இருந்து ஆமினா என்ற இஸ்லாமிய தாயார் தன்னுடைய இரு மகன்களோடு வந்து எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருக்கிறார் .இதை அறிந்த எம்.ஜி.ஆரின் கதை இலாகாவை சேர்ந்த ரவீந்தர் அவர்களிடம் நீங்கள் என்ன விஷயமாக வந்தீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார் .இல்லை நான் எம்.ஜி.ஆர்.அவர்களை பார்க்க வந்துள்ளேன் .அவரிடம்தான் சில விஷயங்கள் பேசவும் ,சொல்லவும் வேண்டும் என்றார் .இதை ரவீந்தர் எம்.ஜி.ஆரிடம் சொன்னதும் .இந்த விதவை தாயார்* என்ன விஷயமாக* வந்திருப்பார்கள் என்று ஒரு கணம் யோசித்து ,ரவீந்தரிடம் சரி இவர்களை எதற்கும் சத்யா ஸ்டுடியோவிற்கு அழைத்து வாருங்கள் .நேரமாகிவிட்டது .அங்கு பேசலாம் என்றார் .


    ராமாவரத்தில் இருந்து கார் மூலம் ரவீந்தர் அவர்களை அழைத்து கொண்டு சத்யா ஸ்டூடியோ* செல்கிறார் .* படப்பிடிப்பின் இடைவேளையின்போது அவர்களை எம்.ஜி.ஆர். அழைத்து என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்கிறார் .ஆமினா என்கிற அந்த இஸ்லாமிய தாயார் தன்* கையில் உள்ள வீட்டு பத்திரத்தை எம்.ஜி.ஆரிடம் தருகிறார் . எங்களுக்கு நெல்லையில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை எல்லாம் இருக்கிறது .இவர்கள் என்னுடைய மகன்கள் .இவர்களின் முன்னிலையில் எங்கள் வீட்டு பத்திரத்தை உங்களுக்கு அளிக்கிறேன் இது என் பிள்ளைகளின் சொத்துதான் .அந்த மகன்களுக்கு சுமார் 18, 20 வயது இருக்கும் . எம்.ஜி.ஆர்.இதை எல்லாம் கேட்ட பிறகு அவருக்கு ஒன்றும் சரியாக புரியவில்லை . இந்த வீட்டு பத்திரத்தை வைத்து உங்களுக்கு பணம் தர வேண்டுமா* அல்லது வேறு வகையில் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என்று கேட்கிறார் .இல்லை ஐயா ,உங்கள் வீடு ஜப்தியாவதாக பத்திரிகைகளில் செய்திகள் படித்தேன் .நீங்கள் இந்த பத்திரத்தை வைத்து வீட்டை தற்சமயம் மீட்டு எடுத்து கொள்ளுங்கள் . உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது பத்திரத்தை திருப்பி கொடுத்தால் போதும் ஏனென்றால் எங்களது வாழ்க்கை உங்களால்தான் மலர்ந்தது என்கிறார் . எம்.ஜி.ஆருக்கு அப்போதும் புரியவில்லை .நான் எப்படி உங்களுக்கு உதவிகரமாக இருந்திருக்கிறேன் நான் எப்போதாவது உங்களுக்கு* பண உதவியோ அல்லது வேறு ஏதாவது உதவியோ செய்திருக்கிறேனா என்று கேட்கிறார் .* இல்லை .தந்தையை இழந்த என்* பிள்ளைகள் தாறுமாறாக வளர்ந்து கொண்டிருந்தபோது எங்களது வாழ்க்கை முறையில் திரைப்படங்கள் பார்ப்பதே தவறு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது நான் திரைப்படங்கள் பார்த்தது இல்லை .ஆனால் என் மகன்கள் உங்கள் படங்களை பார்த்து பார்த்து என்னையும் பெரியவர்களையும் மதிக்க கற்றுக்கொண்டார்கள் .என்னை போற்றி புகழ்கிறார்கள். அவர்கள் மனம் திருந்தி நல்ல வழியில் வாழ்க்கை நடத்துவதற்கு உங்களின் படங்கள் அவர்களுக்கு பாடங்களாக அமைந்தன .ஆதலால்தான் இந்த சொத்தை உங்களுக்கு நெருக்கடியான* நேரத்தில் கொடுத்து உதவ முன் வந்தேன் என்றார் .எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து,அந்த தாயாரை வணங்கி ,தனக்கு உதவ முன் வந்ததற்கு நன்றி தெரிவித்தார் .அத்துடன் என்னுடைய வீடு ஜப்தி ஆகவில்லை .நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்துள்ளது . ஆகவே தங்களின் உதவும் பண்பிற்கு* நன்றி என்று சொல்லி அந்த தாயாரிடம் பத்திரத்தை திரும்ப கொடுத்ததோடு ஒரு சிறிய தொகை கொடுத்து நல்லபடியாக வீடு திரும்புங்கள் என்று சொல்லி அனுப்பியதாக இந்த சம்பவத்தை ரவீந்தர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் .

    திரு.கா .லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*
    ----------------------------------------------------------------------------
    ஆவேசம் எடுத்து ஒருஇளைஞர் பட்டாளமே திரண்டு வந்ததற்கு காரணம் திரைப்படங்களில் அவர் சொல்லிய படிப்பினைகள் பாடங்களா,அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றின் ஈர்ப்பா என்று திரு.துரை பாரதி கேட்க அதற்கு திரு.லியாகத் அலிகான் அளித்த பேட்டியின் விவரம்*

    தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால்* ஓரளவு தான் மக்கள் மனதில் சென்றடையும் .அவர் திரைப்படங்களில் தான் நடித்தபடி, சொன்னபடி நடந்தார் என்பதால்தான் மக்களுக்கு ,இளைஞர்களுக்கு,குறிப்பாக மாணவர்களுக்கு எல்லாம் ஒருவித ஈர்ப்பு உண்டானது .அவர் திரைப்படங்களில் புகைபிடிப்பது போல நடித்ததில்லை .நிஜ வாழ்க்கையில் புகை பிடிப்பதில்லை .படங்களில் மது அருந்துவது போல நடித்ததில்லை .அதே போல நிஜத்திலும் மது அருந்தியவரில்லை .இந்த கால நடிகர்கள் பார்த்தீர்களேயானால் வாருங்கள் இன்று மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்று மது அருந்துவதில் நேரத்தை செலவழிக்கிறார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒளிவிளக்கு படத்தில் மது அருந்துவது தவறு .தீமையை தர கூடியது என்ற வகையில் ஒரு எம்.ஜி.ஆர். மது அருந்துவது போல நடிப்பார் .இன்னொரு எம்.ஜி.ஆர். வந்து அவருக்கு அறிவுரை கூறியபடி தைரியமாக சொல் நீ மனிதன்தானா, நீ தான் ஒரு மிருகம் என்று பாடுவார் .அதன்படிதான் நடந்து காட்டினார் என்பதால் தான் மக்களுக்கு ,இளைஞர்களுக்கு,மாணவர்களுக்கு எல்லாம் அவர்மீது ஒரு மிக பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது .

    தி.மு.க. வளர்ச்சியுற்ற காலத்திலும் சரி , எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன் காலத்திலும் சரி, அந்த ரவிவர்மா பெயின்டிங் போல சிறு நரைகூட தெரியாதது போலமுடியே தெரியாத அளவிற்கு** சேவிங் செய்யப்பட்டு , வண்ணங்கள் தீட்டப்பட்ட ஓவியமாக இருந்தார் .என்று திரு.துரை பாரதி சொன்னதற்கு*திரு.லியாகத் அலிகான் அளித்த பதில் :நீங்கள் முதலில் சொன்ன வார்த்தை ரவிவர்மா ஓவியம் போல ஒரு சிறு* கருப்பு முடி கூட தெரியாமல் இருக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன் போன்றவர்கள் எல்லாம் இருந்தார்கள் என்று சொல்கிறீர்கள் அல்லவா ,எம்.ஜி.ஆர். அவர்களின் எண்ணம் என்னவென்றால் உணவு நமக்காக உண்ணுகிறோம் . வீட்டில் தனியாக உண்கிறோம். அல்லது குடும்பத்தினருடன் உண்ணுகிறோம் .நாம் என்ன உணவு அருந்துகிறோம் என்பதில் வெளியில் தெரிய வாய்ப்பில்லை .* ஆனால் உடை அணிவதை பிறருக்காக செய்கிறோம் பிறர் நம்மை கவனிக்கிறார்கள், பார்க்கிறார்கள்.பிறருடைய பார்வையில் நமது உடையும் ,தோற்ற பொலிவும் அவர்களை ஈர்ப்பது போல இருந்தால்தான் நம் மீது பிறருக்கு மரியாதை வரும் என்பது புரட்சி தலைவரின் சிந்தனை .அதனால்தான் அவர் வெளியே வரும்போதோ,தோன்றும்போதோ,லுங்கி அணிந்து வருவதோ கிழிசலான சட்டை மற்றும் உடைகள் அணிந்து வருவதையோ அவர் விரும்புவதில்லை .யாரும் அப்படி ஒரு தோற்றத்தில் பார்த்திருக்க முடியாது திரைப்படங்களில் தவிர .ஆனால்* பேரறிஞர் அண்ணா உடை விஷயங்களில் தனி கவனம் செலுத்துவதோ, அதை பற்றி கவலைப்படுபவரோ இல்லை .அது வேறு விஷயம் .எம்.ஜி.ஆர்.அவர்கள் நடிகராக இருந்ததால் மக்கள் அதையெல்லாம் எதிர்பார்த்தார்கள் . பேரறிஞர் அண்ணா,பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்கள் எல்லாம் சாதாரணமாக எளிய முறையில் உடை அணிந்து பழகியவர்கள் .அவர்களிடம் வேறு மாதிரி எதையும் எதிர்பார்க்க முடியாது*


    எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை வைத்து இயக்குனர் ஸ்ரீதர் சிவந்த மண் என்ற படத்தை துவக்க இருந்தார் .அந்த படத்தில் வசனங்கள் காட்சிகள் எம்.ஜி.ஆர். அவர்களின் கருத்துக்கள், எண்ணங்களுக்கு மாறுபட்டு இருக்கும்போது நடிக்க மறுத்துவிட்டார் . உடனே ,இயக்குனர் ஸ்ரீதர் ,நீங்கள் சித்ராலயா நிறுவனத்தின் படத்தில் நடிக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்கிறார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். படப்பிடிப்பை ரத்து* செய்துவிட்டு புறப்பட தயாராகும்போது நான் பொழுது போக்கிற்காகவோ, பணத்திற்காகவோ உங்கள் படத்தில் நடிக்கவில்லை . பொறுப்பான நடிகர் என்ற முறையில் மக்களுக்கு உகந்த,மனித* சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்ல முற்படவே உங்கள் படத்தில் நடிக்க முடிவெடுத்தேன் . இனி நடிப்பதில்லை என்று மறுத்துவிட்டார் .பிறகு சில ஆண்டுகள் கழித்து சிவாஜி கணேசனை வைத்து சில வெளிநாடுகளுக்கு சென்று படம் எடுத்தார் . அப்படி எடுத்த படம்*வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெறவில்லை .இயக்குனர் ஸ்ரீதர் அதன் பின்னர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டார் . அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அவதிப்படும்* நிலையில் நேரடியாக எம்.ஜி.ஆர். அவர்களிடம் செல்லாமல் தயாரிப்பாளர் தேவர் அவர்களிடம் சொல்லி தனது இக்கட்டான சூழ்நிலையை சொல்லி மனம் வருந்தினார் . நான் மீண்டு வந்து திரையுலகில் எழுச்சி பெற ஏதாவது ஒரு நல்ல வழியை சொல்லுங்கள் என்றார் .உடனே தேவர் .கவலைப்படாதீர்கள் .ஆபத்து பாண்டவன், அநாதை ரட்சகன் முருகன்* இருக்கும்போது வீணாக மனதை அலட்டி கொள்ளாமல் எம்.ஜி.ஆரை போய் சந்தியுங்கள் என்றார் .ஆனால் ஸ்ரீதர் ஏற்கனவே அவரை வைத்து நான் ஒரு படம் எடுக்க இருந்தபோது நான் சரியாக நடந்து கொள்ள வில்லை என்று என்மீது அவருக்கு கோபம் இருக்கும் . நான் எப்படி அவரை நேரில் சந்திப்பது என்றார் .ஆனால் தேவர் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்றார் ..எம்.ஜி.ஆர்.தன் வீட்டில் இருவருடனும்*உணவு அருந்தும்போது எதை பற்றியும் பேசவில்லை .உணவருந்திய பின் தேவர்*எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்து தாருங்கள் என்றார் .உடனே எம்.ஜி.ஆர். அதை ஸ்ரீதர் என்னிடமே நேரடியாக கேட்கலாமே .நீங்கள் ஏன் சிபாரிசு செய்ய வேண்டும் .அவர்மீது எனக்கு கோபமில்லை என்றார் .ஸ்ரீதருக்கு உடனே முகத்தில் ஒருவித மலர்ச்சி ஏற்பட்டது .பின்னர் சகஜமாக பேசும்போது*ஒரு பேப்பரில் சித்ராலயா நிறுவனத்தின் தயாரிப்பில் ,ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும் உரிமைக்குரல் என்று படத்தின் பெயரை குறிப்பிட்டு எழுதி கொடுத்தார் . அத்துடன் நீங்கள் எனக்கு அளித்த பழைய அட்வான்ஸ் தொகையே போதும் .முதலில் படத்தை எடுத்து முடியுங்கள் உடனடியாக கால்ஷீட்டுகள் தருகிறேன் .குறித்த காலத்தில் எடுத்து முடிப்போம் என்றார் .ஸ்ரீதர் இந்த தலைப்பு மிக அற்புதம் ,என்று சொன்னதோடு, எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையை வியந்து பாராட்டினார் .எம்.ஜி.ஆரின் குணாதிசயங்கள், பொறுமையின் சின்னத்தை ,ஆழ்ந்த மன உளைச்சலில் இருந்த ஒரு மனிதனை எப்படி,எவ்வளவு* சந்தோஷப்படுத்துவது என்கிற உணர்வை எண்ணி இயக்குனர் ஸ்ரீதர் மிக பெரிய ஒரு மலைப்பாக எம்.ஜி.ஆரை பற்றி பேசிய காலம் உண்டு என்று லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


    அள்ள அள்ள* குறையாத பெருமைகள்,தீராத வியாதிபோல நீண்டுகொண்டே இருக்கிறது .அப்படிப்பட்ட மக்கள் திலகத்தின்* நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற மக்கள் திலகத்தை தங்கள் நெஞ்சங்களில் வைத்து போற்றுகின்ற ஆண்டிபட்டி வசந்தி, சென்னை லோகநாதன் ராமச்சந்திரன், மும்பை புலவர் ராமச்சந்திரன் ,திருச்சி மிளகுபாறை மஜீத் போன்றவர்கள் எல்லாம் நமக்கு மிகவும் தெரிந்த பெயர்கள் .இன்னும் தெரியாத லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர் .எங்கே அவரை பற்றி தவறாக கருத்துக்கள் சொல்லிவிடுவோமோ என்றுவருத்தப்பட்டு* கண்ணீர் விட தயாராக உள்ள சகோதரிகளும் இருக்கிறார்கள் .


    ஒரு மகா பெரிய புத்தகம் ,பொக்கிஷம் போல* ,ஒரு பல்கலை கழகமாக, பலருக்கு நம்பிக்கை நாற்றாக, ஊற்றாக இன்றைக்கும் இருந்து* இருக்கிறார் எம்.ஜி.ஆர்.* அந்த அற்புத நாயகன் என்பவரின்**சாதனைகள்* பற்றி சொல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .தொடர்ந்து மற்ற தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .




    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------------
    1.சிரித்தாலும் போதுமே,செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*

    2.நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*

    3.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - பெற்றால்தான் பிள்ளையா*

    4.திரு.கா.லியாகத் அலிகான் அவர்களின்* பேட்டி*

    5.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். - காவல்காரன்*

    6.காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ -அடிமைப்பெண்*
    Last edited by puratchi nadigar mgr; 27th September 2020 at 06:10 PM.

  11. Likes orodizli liked this post
  12. #880
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம் ஜி ஆரால் ...
    மேல் ஆதிக்க காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது எம் ஜி ஆரால்

    அண்ணா ,கருணாநிதி முதல் திராவிட ஆட்சி இன்று வரை நிலைத்திருப்பது எம் ஜி ஆரால்

    தமிழக மக்கள் ஒரு பொற்கால ஆட்சி கண்டது எம் ஜி ஆரால்

    சத்துணவு முதல் செருப்பு வரை காணாத மக்களை இவை பயன்பட்டது எம் ஜி ஆரால்

    ப்ளஸ் டூ அண்ணா பல்கலைகழகம் உட்பட எட்டு பல்கலைகழகம் தொழிற்க்கல்வி அமைந்தது எம் ஜி ஆரால்

    குடிசைகளும் ஒளி வீசியது எம் ஜி ஆரால்

    கிராமங்களும் தன்னிறைவு திட்டத்தால் நகரம் ஆனது எம் ஜி ஆரால்

    மக்கள் தாகம் தீர கிருஷ்ணா நதி வந்தது எம் ஜி ஆரால்

    தமிழ் வளமானது எம் ஜி ஆரால்
    தமிழகம் மேற்க்கல்வியில் உலகம் போற்ற சிறந்தது எம் ஜி ஆரால்

    பொன்மன செம்மல் தந்தது பொற்கால ஆட்சி
    எடுத்து பார்த்த மக்களை கொடுத்து பார்க்கும் முதல்வரை காண வைத்தது எம் ஜி ஆர்

    ஆட்சியில் தன் வைத்திய செலவையையே திருப்பி அரசுக்கே கொடுத்த ஒரே இந்திய முதல்வர் எம் ஜி ஆர் ... உலக தலைவரும் எம்.ஜி.ஆர்., தான்...

    போற்றுவோம் உலகம் உள்ளவரை பொன்மன செம்மல் எம் ஜி ஆர் புகழை

    வளர்க...வாழ்க ...எம். ஜி .ஆர் .,புகழ்.........Amg...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •