Page 52 of 210 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #511
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாடோடி மன்னன் வரலாறு திருச்சி சில....

    11 வது வெளியீடு....
    1971 திருச்சி பத்மாமணி 21 நாள்
    1974 ஜூபிடர் 28 நாள் 1977 திருச்சி ராக்ஸி
    28 நாள்...
    1985 திருச்சி பேலஸ்
    21 நாள்
    1992 மாரிஸ்போர்ட்
    14 நாள்
    1996 முருகன் 14 நாள்.
    தகவல் திருச்சி கல்லுகுழீ செல்வராஜ்.

    நெல்லையில் நாடோடி மன்னன் வரலாறு....1975 சிவசக்தி 35 நாள்
    1978 பாப்புலர் 15 நாள்
    1986 சென்ட்ரல் 14 நாள்
    2005 லட்சுமி 30 நாள்
    2007 சென்ட்ரல் 15 நாள்
    2011 பூர்ணகலா 8 நாள்
    சென்னையில்...
    4 அரங்கில் வெளியிடப் பட்டு 4 அரங்கிலும் 4 வாரங்கள் ஒடியது.
    100 காட்சி அரங்கு நிறைந்தது.
    கெயீட்டி
    பாலாஜி
    பாண்டியன்
    ராம்
    மொத்தம் 112 நாள்...
    தொடர்ந்து பல அரங்கில் சாதனையாகும்.
    1988 பாரகன் 14 நாள்
    1988 நடராஜ் 14 நாள்
    2006 ஆல்பட் 21 நாள்
    2018 ஆல்பட் 35 நாள்.

    கிடைத்த தகவல்....
    தொடரும்.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #512
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    '' நினைத்ததை முடிப்பவன் '' - எம்ஜியார்

    மக்கள் திலகம் நடித்த படங்களின் பாடல்கள் - பெயர்கள் உண்மையிலே அவரது நிஜ வாழ்வில் சாதித்த அவரது திரை உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் பிரதிபலிக்கிறது .

    நாடோடி மன்னன் ;-1958

    காடு விளைஞ்சென்ன மச்சான் .... பாடலில் மக்கள் திலகம் பாடிய வரிகள் ...நானே போட போகிறேன் சட்டம் .
    .[ 1977 உண்மையானது]

    எங்க வீட்டு பிள்ளை ;- 1965 - நான் ஆணையிட்டால் ...........

    1977 - பாடல் வரிகள் நிஜமானது .

    தெய்வத்தாய் -1964

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......

    பாடல் வரிகள் .. சத்தியமான வைர வரிகள்

    அன்றும் - இன்றும் என்றும் பொருத்தமான பாடல் .

    பணக்கார குடும்பம் -1964.

    பாடல் - என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே

    2020 - இப்போதும நம் மன்னவரின் ஆட்சிதானே .

    அடிமைப்பெண் -1969.

    காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ ... வெற்றித்திருமகன் நீ ....

    நிதர்சனமான உண்மை .

    உலகம் சுற்றும்வாலிபன் -1973

    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் .....

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .

    மக்கள் திலகம் உண்மையிலே ஒரு தீர்க்கதர்சி .

    மக்கள் திலகம் ஒரு அதிசயமல்ல

    மக்கள் திலகம் ஒரு உலகம் போற்றும் உன்னத நாயகன் .

    உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் பெயர்களில்

    ஒன்று எம்ஜியார் என்ற மூன்றெழுத்து .

    இது ஒன்று போதுமே .-எம்

    மன்னவனின் புகழ்

    அகிலமெங்குமே

    முரசு கொட்டுமே.........

  4. #513
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "முகராசி" தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த 10 வது படம். இந்த படத்தில் எம்ஜிஆரோடு ஜெமினி கணேசன் இணைந்து நடித்தது கூடுதல் சிறப்பு. படம் மிக குறுகிய காலத்தில் அதாவது தயாரிப்பில் இருந்த காலம் 13 நாட்கள்தான். பேசும் படம் கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி்: முகராசி வெற்றி படமா?
    அதற்கு ஆசிரியர் சொன்ன பதில்
    முகராசி தயாரிப்பில் இருந்தது 13
    நாட்கள், ஆனால் திரையின் இருந்ததோ 100 நாட்கள். நீங்களே முடிவு சொல்லுங்கள் வெற்றிப்படமா என்று.

    இதே போல் சிவாஜியும் அமெரிக்க பயணத்திற்காக அவசர அவசரமாக 26 நாட்களில் ஒரு படத்தை முடித்துக் கொடுத்தார். அதுதான் 1962 ல் வெளியான "பலே பாண்டியா".
    ஆனால் அது திரையில் இருந்த காலம் மிக சொற்ப நாட்களே. இந்த மாதிரி செலவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம் 100 நாட்கள் ஓடுகிறதென்றால் அதற்கு காரணம் நிச்சயம் முகராசிதான், ஆம் எம்ஜிஆரின் முகராசிதான். முகத்தை காட்டி காட்டி 100 நாள் ஓட வைத்தது நியாயமா? ஒரு சிவாஜி ரசிகரின் ஆதங்கம் இது. 1966 பிப் 18 ல் வெளியான படம்.

    அந்த நேரத்தில் காஸினோவில் "அன்பே வா" மிட்லண்டில் "நான் ஆணையிட்டால்"
    கெயிட்டியில் "முகராசி". என்ற மூன்று எம்ஜிஆர் படங்களும் மவுண்ட் ரோட்டில் அருகருகே உள்ள திரையரங்குகளில் வெளியானது..
    சனி,ஞாயிறு நாட்களில் மவுண்ட் ரோடு ஸ்தம்பித்து போய் டிராபிக் ஜாம் உண்டாகி விடும். தலைவரோட ஒரு படம் வந்தாலே தாங்காது, அதிலும் 3 படங்கள் என்றால் அதை பார்ப்பதே கண்கொள்ளா காட்சியாக
    இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    அந்த சமயத்தில் போட்டோகிராபர் கிளுக்கிய காட்சியைதான் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். முகராசி கட்-அவுட்டுக்கு பின்னால் உயரத்தில் காஸினோவின் முகப்பு தெரிவதை பார்க்கலாம். அதுவும் "அன்பே வா"
    வுக்கு காஸினோவில் குதிரை போலீஸ் வைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.

    "முகராசி" படத்துக்கு 5வது வார காலத்தில் தியேட்டர் போட்டு வந்த விளம்பரத்தை பார்த்தால் படம் நிறைய ஊர்களில் 50 நாட்கள் ஓடியிருக்க வேண்டும். அந்த விளம்பரத்தில் மதுரை, திருச்சி, மற்றும் nsc ஏரியா தியேட் டர்கள் சேர்க்கப்படவில்லை. அவைகளையும் சேர்த்தால் இன்னும் அதிகமான தியேட்டர்களில் ஓடியிருக்க வேண்டும். தெரிந்தவர்கள் பதிவிடலாம்.

    திருநெல்வேலி பார்வதியில் 50 நாட்களை தாண்டி ஓடியது. தூத்துக்குடி சார்லஸில் 6 வாரம் ஓடியது. சென்னை கெயிட்டியில் 100
    நாட்களும்,பிரபாத்தில் 70 நாட்களும் சரஸ்வதியில் 56 நாட்களும் ஓடியது. மேலும் கணிசமான ஊர்களில் 50 நாட்களை தாண்டி ஓடியது. "முகராசி"
    தேவர் பிலிம்ஸிக்கு கடைசியாக 100
    நாட்கள் ஓடிய கருப்பு வெள்ளை படம்
    என்பது கூடுதல் தகவல்..........

  5. #514
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நினைத்ததை முடித்தவன் எம்ஜிஆர் .
    ஆச்சரியமாக உள்ளது இல்லயா ?
    ************************************************** **********
    எம்ஜிஆர் தன்னுடைய இளம் வயதில் ஆங்கில திரைப்படங்களை பார்த்ததின் விளைவுதான்
    நாடோடி மன்னன் படம் எடுக்க தூண்டியது . ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு
    1958ல் திரைக்கு வந்து நாடு முழுவதும் ரசிகர்களால் மக்களால் ஏராளமான பாராட்டுக்களை பெற்று
    சரித்திர சாதனை புரிந்தது .
    எம்ஜிஆர் வெற்றி பெற்று நினைத்ததை முடித்தார் .
    1967 தேர்தலில் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவின் தலைமயில் திமுக ஆட்சி அமைந்திட நினைத்தார் . அதற்க்காக உயிர் தியாகம் வரை சென்று உழைத்து தானும் வெற்றி பெற்று தன்னுடைய இயக்கத்தையும் வெற்றி பெற செய்து தன்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பதவி அமரவைத்த எம்ஜிஆர் நினைத்ததை முடித்தார் .
    1972ல் எம்ஜிஆரையே அழிக்க நினைத்த திமுகவின் கனவை 1973 திண்டுக்கல்தேர்தல் துவங்கி 1987 வரை அரசியல் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து வெற்றி மேல் வெற்றி பெற்று தான் நினைத்ததை முடித்தார்
    .
    சினிமாவில் எம்ஜிஆரின் சரித்திரம் முடிந்துவிட்டது என்று 1959, 1967, 1972 கால கட்டங்களில் நடந்த சோதனைகளை தவிடு பொடியாக்கி எம்ஜிஆர் உருவாக்கிய திரை உலக சாதனைகள் வெற்றிகள் குவித்ததின் மூலம் தான் நினைத்ததை முடித்தார் .

    1977 வரை எம்ஜிஆர் திரை உலகை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து திரை உலக வசூல் சக்ரவர்த்தி யாக திகழ்ந்தார் என்று திமுக தலைவர் திரு கருணாநிதி 1987 எம்ஜிஆர் மறைவு தினத்தன்று கூறியது நினைவிற்கு வருகிறது .

    நினைத்ததை முடிப்பவன் - 1975ல் வெளியானது , தலைப்பிற்கு ஏற்ப எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்திலும் நினைத்ததை முடிப்பவன்
    என்று சாதித்து காட்டினார்.
    மறைந்த பின்னரும் 32ஆண்டுகளாக அரசியலிலும் சினிமா மறு வெளியீடுகளில் , புது தொழில் நுட்ப
    மறு வெளியீடுகளிலும் எம்ஜிஆர் என்ற தனி
    மனிதரின் வெற்றிகள் சரித்திர சாதனையை நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் எப்பொழுதும் பெருமை கொள்கிறோம் ..........

  6. #515
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1964 இல் நம் இதயதெய்வம் நடித்த படகோட்டி இறுதி கட்ட காட்சிகள் கேரளாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்.

    13 நாட்கள் மொத்தம்.
    10 வது நாள் காலை நல்ல வெளிச்சத்தில் பட பிடிப்பு நடந்து கொண்டு இருந்து இடைவேளை நேரம்.

    தலைவருடன் இருந்த ஐயா கே.பி.ஆர். அவர்கள் தோளை தட்டி ஒருவர் அங்கே பாருங்கள் என்று சொல்ல....அங்கே ஒரு முதியவர் ஏதோ சைகை செய்ய அவர் அருகில் செல்கிறார் அவர்...

    அப்போது அந்த முதியவர் ஐயா நான் எம்ஜிஆர் அவர்களை சந்திக்க வேண்டும்.....
    நான் அவரின் தந்தை உடன் பணி புரிந்தவன்.

    பாலக்காடு என் சொந்த ஊர்....என்று தொடர நான் சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த தொகை என் மகள் திருமணம் வேண்டி....அவளின் திருமணம் முடிவாகி அடுத்த கட்டம் நோக்கி நான் நகர...

    நெடுங்காடு வங்கியில் இருந்து நான் சேமித்த வைத்து இருந்த பணம் ரூபாய் 20000 அதை எடுத்து கொண்டு வரும் வழியில் தலை சுற்றி நான் மயக்கம் அடைந்து சாலை ஓரம் வீழ்ந்து விட்டேன்....

    மயக்கம் தெளிந்து அடுத்தவர் உதவியில் நான் கண் திறக்கும் போது....பேரிடி எனக்கு என் பண பையை காணவில்லை...இடிந்து போய் என் வீடு போய் சேர்ந்தேன்...

    மொத்த குடும்பமும் செயல் இழந்து போக என் மகள் சொன்னாள்.

    அப்பா நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் உடன் பணி புரிந்தவர் தானே...அவர் கூட நீங்கள் இருந்த நினைவுகள் சொல்லி அவர் பெற்ற மகன் இப்போது நம் ஊருக்கு பக்கத்தில் வந்து இருக்கிறார்...

    நீங்கள் போய் நடந்ததை சொல்லி அவரிடம் உதவி கேளுங்கள்...அவரை பற்றி நான் நிறைய படித்து உள்ளேன் என்று மகள் விருப்பம் சொல்லி வந்த விவரம் சொல்ல...

    கே.பி.ஆர்...கண்களில் கண்ணீர் முட்ட ஐயா பொறுங்கள் என்று சொல்லி சற்று நேரத்தில் தலைவர் இடம் விவரங்கள் சொல்ல...துடித்து போன தலைவர் அவரை வர வைத்து...

    ஐயா உங்கள் விவரங்களை இவரிடம் சொல்லுங்க....ஒரு வாரம் கழித்து சென்னைக்கு வாருங்கள் என்று சொல்ல அதன் படி பெரியவர்...

    சென்னை வந்து இறங்கி ஐயா கே.பி.ஆர். அவர்களை அந்த பெரியவர் சந்திக்க...அவர் தலைவர் இல்லம் அந்த பெரியவரை அழைத்து போக....

    பெரியவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து அவரை சிறப்பிக்க நல்ல உணவு கொடுத்து வரவேற்று.

    ஒரு சிறப்பு உடை பணம் வைக்க ஒரு ஜிப் வைத்து உடனே தயார் ஆகி அதற்கு மேல் ஒரு பெல்ட் வாங்கி கொடுத்து அதில் மொத்த பணம் 20000 ரூபாயை பத்திரம் ஆக வைத்து தைத்து.. மீண்டும் பணத்தை அவர் தவற விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில்...

    கே.பி.ஆர்....அவர்களை சென்னை ரயில் நிலையம் வரை அந்த பெரியவருக்கு துணை ஆக அனுப்பி பாலக்காடு ரயிலில் அவரை பத்திரம் ஆக ஏற்றி விட்டு அவர் ஊர் சென்று பணத்துடன் பத்திரம் ஆக போய் சேர்ந்த விவரத்தை எனக்கு தெரிவியுங்கள் என்கிறார்..... கொடை வள்ளல் எம்ஜிஆர்..

    பெற்ற தாய் தந்தைக்கே சோறு போடாத இந்த பொல்லாத உலகத்தில் தன் தந்தைக்கு தெரிந்தவர் என்றவுடன் அவர் சொன்னவை உண்மையா என்று கூட ஆராயாமல் அள்ளி கொடுக்கும் வள்ளல் இவர் போல யார் உண்டு..

    பெரியவரை சுமந்து சென்ற அந்த விரைவு வண்டி பாலக்காடு போய் சேர்ந்து அவர் பணத்துடன் வீடு போய் நடந்தவை பற்றி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு பணத்தை இடுப்பில் இருந்து எடுத்து கொடுக்க..

    அவர் மகள் அப்பாடா திருமணம் இருக்கட்டும் நான் எம்ஜிஆர் மீது வைத்து இருந்த என் நம்பிக்கை வீண் போக வில்லை என்று மனதுக்குள் மகிழ.

    அவர்தான் தலைவர்.

    அன்னை சத்தியா அவர்களின் புதல்வர்.

    அன்று 20000 என்பது இன்றைய பணமதிப்பில் 20 லட்சம் பெறுமா. தாண்டுமா...இறைவா நன்றி.. நன்றி..

    தொடரும்...நன்றி...
    உங்களில் ஒருவன் ............

  7. #516
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்களை_பிளவுபடுத்தும் #மதவாதிகளை_அனுமதிக்க_மாட்டேன்
    - தமிழக சட்டப்பேரவையில் எச்சரித்த முதல்வர் #எம்ஜிஆர்*

    *"மதவாதிகள்-அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.*

    *மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை- இந்த அரசு அனுமதிக்காது என்பதை தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.*

    *இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்.*

    *இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்*.... *"இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது"*

    *குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வது போல் மற்ற மடாதிபதிகளும் நடந்து கொள்ள வேண்டுமே தவிர மற்ற வழிமுறைகளில் இறங்கக்கூடாது.*

    *நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.*

    *"அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே, அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது."*

    *குறிப்பாகச் சொல்கிறேன்;*

    *ஆர்.எஸ்.எஸ் தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும் *

    *ஏற்கனவே என்.சி.சி, சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்."*

    *ஆர் எஸ்.எஸ். சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை."* .
    *மக்கள் நலனை காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன*

    *மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள்*

    *எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள்*
    .
    *எனவே, மதவாதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.*

    *அரசு விதித்துள்ள*
    *144 தடையை மீறுவோம்* *என்கிறார்கள்*

    *தடையை அவர்கள் மீறிச் செயல்பட்டால் , அரசு அதைச்
    சமாளிக்கும்*
    *அரசு அதற்குத் தயாராக இருக்கிறது."*
    ----------------
    *29_03_1982 அன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியத்தின் மீதான* *விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து*

    (திருத்தப்பட்ட பதிவு)

    Ithayakkani S Vijayan.........

  8. #517
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் செங்கல்பட்டு (தற்போதைய திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்க|ளை உள்ளடக்கியது) மாவட்டத்தில் உள்ள 17 தொகுதிகளில் நமது தலைவர் உருவாக்கிய கழகம் மொத்தம் 12 தொகுதிகளில் வென்றது; அவைகள் விவரம் வருமாறு :
    கும்மிடிபூண்டி,
    பொன்னேரி
    திருவொற்றியூர்
    ஆலந்தூர்
    தாம்பரம்
    செங்கல்பட்டு
    அச்சரப்பாக்கம்
    உத்திரமேரூர்
    காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர்
    திருவள்ளூர்
    திருத்தணி

    sitting தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த திருவொற்றியூர் தொகுதி மா.வெ. நாராயணசாமியும், உத்திரமேரூர் தொகுதி கே.எம். ராசகோபால் ஆகியோர் தோல்வி அடைந்தனர். தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ஒரே sitting தி.மு.க. எம்.எல்.ஏ. மதுராந்தகம் ஆறுமுகம். மற்ற தொகுதிகளில் தி.மு.க. தொகுதியில் பிரபலமான வெற்றி பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியது. அப்படியும் மண்ணைக் கவ்வியது.
    இந்த மாவட்டத்தில், நான் சார்ந்திருந்த திருவொற்றியூர் தொகுதியில் நமது தலைவர் பெற்ற வெற்றி, மூன்று வகையில் குறிப்பிடத்தக்கது.
    1. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த மா.வெ. நாராயணசாமி தோற்கடிக்கப்பட்டார். அவர் மாநில தி.மு.க. தொழிலாளர் அணி செயலாளராக விளங்கி வந்தார்.
    இந்த திருவொற்றியூர் தொகுதியில்தான், பிரபலமான எண்ணூர் அனல் மின் நிலையம், அசோக் லேலேன்ட், என்பீல்ட் இந்தியா லிமிடெட், எண்ணூர் பவுண்டரிஸ், கே.சி.பி. நிறுவனம், எவரெடி நிறுவனம், கார்போரண்டம் யூனி வர்சல்ஸ், ஹாக்ப்ரிட்ஜ் ஹெவிட்டிக் ஈசன் குழுமம் மற்றும் எஸ்.வி.எஸ். ஆயில் நிறுவனம் போன்ற பிரபல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. .
    மறைந்த மதிப்புக்குரிய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யுடன் கூட்டணி வைத்து, தொழிற்சங்க தலைவர் உழைக்கும் மக்கள் மாமான்ற தலைவர் சி.கே.மாதவன் அவர்களை வேட்பாளராக நிறுத்தியது.
    2. திருவொற்றியூர் தொகுதியில் பெரும்பாலோர் என் போன்ற தெலுங்கு பேசும் இனத்தவர்கள் தான் வசிக்கிறார்கள். மற்ற மூன்று கட்சிகளும் (தி.மு.க., ஜனதா, மற்றும் காங்கிரஸ் கூட்டணி) தெலுங்கு இனத்தவரை, தங்கள் வேட்பாளராக நிறுத்திய போதிலும், நமது புரட்சித் தலைவர் அவர்கள் தெலுங்கு இனமல்லாத நாயக்கர் இனத்தை சார்ந்த மறைந்த சிகாமணி (இவர் இன்னிசை கச்சேரி நடத்தி வரும் திரு. லஷ்மண் சுருதி அவர்களின் மாமா) அவர்களை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.
    3. மேலும், மறைந்த சிகாமணி அவர்கள் திருவொற்றியூர் தொகுதிக்கு முற்றிலும் புதியவர்.

    இந்த தகவல்கள் மூலம் அறியப்படும் நீதி :
    ஜாதி, மத இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பினராலும் நேசிக்கப்பட்ட ஒரே தலைவன் பொற்கால ஆட்சி வழங்கிய பொன்மனச் செம்மல் மட்டுமே.

    பின்குறிப்பு : ஒவ்வொரு மாவட்டந்தோறும் இது போன்ற செய்திகள் அடங்கிய பதிவுகள் தொடரும்.

    நன்றி !

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் ! .........

  9. #518
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை மாநகருக்கு அடுத்தபடியாக மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் சாதனை படைத்த இடங்கள் ஊர்கள் பல இருக்கின்றன..... அவைகளில் மக்கள் திலகம் படைத்த திரைப்படங்களின் வெற்றிகளை திண்டுக்கல், விருதுநகர், பழனி, காரைக்குடி, ராமநாதபுரம், தேனீ ஆகிய ஊர்களிலிருந்து இப்பொழுது பார்ப்போம்....

    முதலில் திண்டுக்கல் நகரில் மக்கள் திலகத்தின் 6 திரைப் படங்கள் நூறு நாட்கள் ஓடி மகத்தான வெற்றியை படைத்துள்ளது.*
    மக்கள் திலகம் கதாநாயகனாக வலம் வந்த. 115 திரைக்காவியங்களில் 65 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து நகரில் தலைவரே இன்று வரை சாதனை ஆவார்.இதில்**
    20 திரைப்படங்கள் 70 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.**

    நகரில் 100 நாட்களை கடந்த முதல் காவியம் மதுரைவீரன்*
    அதன்பின்பு நாடோடி மன்னன் எங்க வீட்டுப் பிள்ளை, குடியிருந்த கோயில், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து வெற்றி பெற்றது.*

    அதன் பின்பு 12 வாரங்கள்*
    ஓடிய திரைப்படங்கள்....*
    மலைக்கள்ளன்*
    அலிபாபாவும் 40 திருடர்களும் சக்கரவர்த்தி திருமகள் குலேபகாவலி*
    மக்கள் திலகத்திற்கு மட்டுமே உகந்த சாதனையாகும்.

    திண்டுக்கல் நகரில் நடிகர் வி.சி கணேசனின் 100 நாள் ஓடிய திரைப்படம் பாகப்பிரிவினை மட்டுமே வேறு எந்த படமும் கிடையாது. அதே போல் 1965 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகளில் சிவாஜி கணேசனின் 7 படங்கள் மட்டுமே*
    50 நாட்களை கடந்து உள்ளது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள்
    சவாலே சமாளி சிவந்தமண்,*
    வசந்த மாளிகை, தங்கப்பதக்கம் ஆகிய படங்கள் மட்டுமே....
    தொடரும்.............

  10. #519
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திண்டுக்கல்லுக்கு அடுத்தபடியாக மகத்தான சாதனைகளை படைத்த நகர் விருதுநகர்....ஆகும்.
    புரட்சித்தலைவரின்*
    பொன் போன்ற வெற்றிகளை.....*
    1947ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை பற்பல சாதனைகளை படைத்துள்ளது.*
    நகரில் மக்கள் திலகத்தின் காவியங்களே அதிக அளவில்*
    50 நாட்களும், 75* நாட்களையும்* கடந்து சாதனையை பெற்றுள்ளது.

    நகரில் முதன் முறையாக 100 நாட்களை கடந்து 114 நாட்கள்*
    ஓடிய திரைக்காவியம்.*
    புரட்சி நடிகரின் மதுரைவீரன் ஆகும்.*

    அதன் பின்பு*
    சக்கரவர்த்தி திருமகள் 99 நாட்கள் ஓடி வெற்றி நடை போட்டது.*
    1965 ல் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் 100 நாட்களை கடந்து வெற்றி கொண்டது.

    மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன், குலேபகாவலி, அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை எழுபத்தைந்து நாட்களை கடந்து நகரில் வெற்றிநடை போட்டது.*

    50 நாட்களை கடந்த மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்*
    47 ஆகும். நகரில் இன்று வரை பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் ஒருவரே வசூல் சக்கர
    வர்த்தியாக திகழ்கிறார்..........

  11. #520
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அப்பாடா! ஆகஸ்ட் 22 தலைவரின் "நாடோடி மன்னன்", மற்றும் "இதயக்கனி" பிறந்த நாள் கொண்டாடி முடித்தவுடன் அடுத்து எதைப்பற்றி எழுதுவது என நான் சிந்திக்கையில் என் கண்ணில் பட்டது நெல்லையில் ஒரு திரைப்படத்தின் 100 நாட்கள் வசூல் என்னை திகைக்க வைத்தது.
    என் வாழ்நாளில் அதுவும் .a சென்ட்டரில் இப்படிப்பட்ட ஒரு வசூலை நான் பார்த்ததே இல்லை.

    அப்படியென்னப்பா! அந்த படத்தின் வசூல் சிறப்பு! என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நம்ம சன் டிவியில் தொண்டை கிழிய கத்துவார்களே அதை போல் கத்த வேண்டும் போல இருக்கிறது.
    உலக திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படம் இவ்வளவு குறைந்த வசூலுடன் 100 நாட்கள் ஓட்டப்பட்டது இதுவே முதல் முறை. இ்ந்த பெருமையை பெற்று முதல் பரிசை
    வென்ற "சொர்க்கம்" படத்தின் 100 நாட்கள் வசூல்தான் இது..
    நெல்லை பாப்புலரில் 100 நாட்களில் பெற்ற வசூல் ரூ 85,495.45 தான்.
    -----------------------------'-------------------------------
    நெல்லையில் தலைவர் படத்தின் வசூல் விபரம்
    -------------------------------------------------------------
    இப்படி ஒரு வசூலுக்கு 100 நாட்கள் ஓட்டப்பட்டால் எம்ஜிஆரின் அத்தனை படங்களுமே 100 நாட்கள் படம்தான்.
    ர.போ.115 நாட்கள்54 ரூ 89132.16
    கு.கோயில். 65. 97,929.75
    ஒளி விளக்கு. 59. 1,01,686.54
    காவல்காரன். 55. 84,855.52
    நம்நாடு. 76. 1,35,631.01
    என் அண்ணன். 71. 1,13,135.63
    எங்கள் தங்கம். 66. 1,01,802.77
    ப.பொன்னையா. 62. 1,02,000.00
    இதயவீணை. 63. 1,02,078.25
    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    தூத்துக்குடியில் கூட சிவந்த மண்ணை 100 நாட்கள் ஓட்டி சுமார் ரூ 1,06,200. வசூல் காண்பித்தார்கள். மதுரை தங்கத்தில் ஒரு "கர்ணன்" என்றால் நெல்லையில் ஒரு "சொர்க்கம்". இன்னும் பல ஊர்களில் இது மாதிரி சாதனை வைத்திருக்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை. தேடிப் பார்த்து கின்னஸுக்கு அனுப்ப வேண்டியதுதான் பாக்கி.

    இதைப்பார்க்கும் போது சிவாஜி ரசிகர்களின் ஆற்றலை நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு படத்தில் செந்திலிடம் கவுண்டமணி கேட்பாரே கப்பலில் என்ன வேலை? என்று.
    உடனே செந்தில் கடலில் கப்பல் நின்று விட்டால் நடுக்கடலில் இறங்கி கப்பலை தள்ளவேண்டும் என்பாரே.
    அதை நல்ல ஜோக்காகவே நினைத்திருந்த எனக்கு சிவாஜி ரசிகர்கள் அந்த கப்பலை தள்ளி கரை சேர்த்ததை பார்த்ததும். உண்மையிலேயே நான் திகைத்து விட்டேன்.

    சிவாஜி ரசிகர்கள் அவருக்கு செய்த இந்த அரும்பணியை கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமை. இதை கின்னஸில் பதிவு செய்ய மறந்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன். இந்த அரும் பணிக்கு பதில் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்திருந்தாலாவது போகிற வழிக்கு புண்ணியமாவது கிடைத்திருக்கும். என்ன புரிந்திருக்குமே! போலி சிவனடியார்களுக்கு.

    மீண்டும் அடுத்த பதிவில் மற்றொரு சாதனையை பார்ப்போம்.

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •