Page 85 of 210 FirstFirst ... 3575838485868795135185 ... LastLast
Results 841 to 850 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #841
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய நாடோடி மன்னன் படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..
    ‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..
    வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடிமன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..
    படத்தில் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சுவந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..
    சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு கலைஞர் கருணாநிதி அவர்களை அறிமுகம் செய்து வைத்த கவி கா.மு.ஷெரீப் அவர்களைப்போல, காஜா மொய்தீனை எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் டணால் கே.தங்கவேலு அவர்கள்.
    1953-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு நடிகர் தங்கவேலு அவர்களுடைய சிபாரிஸின் பேரில் முதன் முதலாக எம்.ஜி.ஆரை சந்திக்கச் செல்கிறார் காஜா மொய்தீன்.
    எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது லாயிட்ஸ் சாலையில் (தற்போது ஒளவை சண்முகம் சாலை) 160-ஆம் எண் இல்லத்தில் குடியிருந்தார். கருப்பு நிற டாட்ஜ் காரை அனுப்பி ஓட்டுனர் கதிரேசனிடம் காஜா மொய்தீனை அழைத்து வரச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்.
    வீட்டு வாசல் முகப்பில் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி, சின்னவர் எம்.ஜி.ஆர். இருவருக்கும் இடையே காஜா மொய்தீனை பணிக்கும் அமர்த்தும் தேர்வில் நடுவில் வீற்றிருந்தவர் எம்.கே.முஸ்தபா எம்.ஜி.ஆரின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். குறிப்பாக பெரியவர் எம்.ஜி.சக்கரபாணியின் பாசத்திற்குரியவர்.
    “வாங்க.. வாங்க….” என்று அன்புடன் அழைத்து அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமரச் சொல்கிறார் எம்.ஜி,ஆர்.
    எம்.ஜிஆர் அவர்களின் உபசரிப்பை விவரிக்கையில் இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவது கலீபாவான உதுமான் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தனது பதிவொன்றில் நினைவு கூர்கிறார் இவர்.
    “உலகில் பெரிய பண்பு எது?” என்று கலீபா உதுமான் அவர்களிடம் கேட்கிறார் ஒருவர்.
    “நம்மைத் தேடி வருபவர்களை உட்கார வைத்து பேசுவது” என்று வருகிறது கலீபாவின் பதில்.
    இந்தச் சொல் என் நினைவுக்கு வந்தது என்று மனம் நெகிழ்ந்துப் போகிறார் பணித்தேர்வுக்குச் சென்ற காஜா மொய்தீன்.
    வேலை தேடி வந்த அவரிடம் எம்.ஜி.ஆர். தொடர்கிறார். “உங்க ஊர் பெயரை தங்கவேலு சொன்னார். முஸ்லீம் மதத்தில் பிறந்த உங்கள் எழுத்து, தமிழுக்கு ரொம்ப சிறப்பைத் தருவதாக இருக்குதுன்னு சொன்னாரு. இவங்களும் உங்க இனம்தான் எம்.கே.முஸ்தபா, எங்க குடுமப நண்பர்.” என்று அவரை அறிமுகப்படுத்தினார்கள்.
    காஜா மொய்தீனைப்பற்றி பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்த எம்.கே.முஸ்தபா மேலும்சில தகவல்களை பகிர்கிறார், “சுதந்திர நாடு தின இதழில் இவர் நிறைய எழுதி வருகிறார். அதுமட்டுமின்றி பூவிழி என்ற பத்திரிக்கையையும் நடத்தி வந்தவர்”
    “முஸ்தபா சொல்வதைப் பார்த்தால் நீங்க ஆறு வருஷத்துக்கு முன்னாலேயே நல்லா எழுதியிருக்கீங்க. இனிமேலும் பெரிய சந்தர்ப்பங்கள் வரலாம். உங்க சொந்த பெயரில் எழுதுவதைவிட ஒரு பொதுப் பெயரிலே எழுதினா நல்லாயிருக்கும். அதனால பெயரை மாத்தி வச்சுக்கிறீங்களா?”
    “உங்க இஷ்டம். மாத்தி வைங்க” என்கிறார் காஜா மொய்தீன்.
    “உங்களுக்கு எந்த ஆசிரியரைப் பிடிக்கும்?. பெரியவங்களா இருக்கணும்” – இது எம்.ஜி.ஆர்.
    “ரவீந்திரநாத் தாகூரை எனக்குப் பிடிக்கும். அவுங்க கதை கவிதைங்க நிறைய படித்திருக்கிறேன்”
    “சரி. அவர் ரவீந்திரநாத் தாகூர். நீங்க தாகூர்”
    “ஆகா.. நாகூரிலிருந்து வந்த தாகூர், நல்ல பெயர்ப் பொருத்தம்” என்று சிரித்தபடியே சொல்கிறார் முஸ்தபா.
    “நாத், வேண்டாம். உங்க பேரை ரவீந்தரன் என்று வச்சுக்குங்க” என்கிறார் பெரியவர் எம்.ஜி,சக்கரபாணி
    “சரி” என்று சம்மதித்து தலையாட்டுகிறார் இவர்.
    சிறிது நேரம் மெளனத்திற்குப் பிறகு ஏதோ மனக்கணக்கு போட்டவாறு “அதுகூட வேணாம். புனைப்பெயரா தெரியணும். அதனாலே “ரவீந்தர்” என்ற பெயர் சரியா இருக்கும். அப்படிப் பார்த்தா நியூமராலஜி 6 வரும். கலைக்கு நல்லது” என்கிறார் எம்.ஜி,ஆர்.
    ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடி சூட்டிக்கொண்ட நாளில் அவருக்கும் புதுப்பெயர் சூட்டப்படுகிறது. பெரியவர், சின்னவர், எம்.கே.முஸ்தபா மூவரும் அவருக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.
    “சரி. இனிமே உமக்கு எல்லாம் வரும். போய்ட்டு நாளைக்கு வாரும். கார் அனுப்பறோம்.” என்று வழியனுப்பி வைக்கிறார் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி.
    காஜா மொய்தீனாகச் சென்ற அவர் ரவீந்தராக வீடு திரும்புகிறார். ஒளிமயமான எதிர்காலம் அவர் உள்ளத்தில் தெரிகிறது
    இப்போது எம்.கே.முஸ்தபாவின் கலைத்துறை வாழ்க்கையை சற்று பார்ப்போம். ரவீந்தருடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்த எம்.கே.முஸ்தாபாவின் பெயரும் பெரிதாக வெளியில் தெரிய வரவில்லை. நிறைகுடம் தளும்பாது என்பார்கள். இயக்குனர் சமுத்திரகனியின் பாஷையில் சொல்ல வெண்டுமென்றால் “இந்த இருவருமே இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போய்விட்டார்கள்’.
    அதாவது நாடோடி மன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்சை சேர்ந்த ரவீந்தர்.தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர்.
    1942-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் சோமுவும் , மொகிதீனும் “ஜுபிடர் பிக்சர்ஸ்” பெயரில் தயாரித்து வெளியிட்ட “கண்ணகி” படத்திற்கு வீர வசனம் எழுதியது இளங்கோவன்தான். இந்தப் படத்தில், கண்ணகியாகவே மாறிவிட்டிருந்தார் கண்ணாம்பா. திரையரங்கில் ஒவ்வொரு வசன முடிவிலும் கரகோஷம் வானைப் பிளந்தது.

    1958-ல் வெளிவந்த “நாடோடி மன்னன்” திரைப்படம்தான் ரவீந்தர் பெயரை முதன்முதலாக வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது என்று பலரும் எழுதுகிறார்கள். அது உண்மையல்ல. அதற்கு ஓராண்டுக்கு முன்பே “ராஜ ராஜன்” (1957) படத்தில் ரவீந்தருடைய பெயர் பட டைட்டிலில் காட்டப்பட்டது.இளங்கோவனுக்கும் ரவீந்தருக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. திரையுலகில் சிறந்த வசனகர்த்தாக்களாக பெயர் பெற்றிருந்தும்கூட இருவரும் இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.
    இருவரும் தமிழ்த் திரையுலகிற்கு தங்கள் திறமையினால் அபார பங்களிப்பை வழங்கியவர்கள். இருவரும் தமிழக அரசின் “கலைமாமணி” பட்டம் பெற்றவர்கள்.
    இருவரும் திரையுலகம் மறந்துப்போன முன்னோடிகள். ஊடகங்களால் கண்டும் காணாமலும் நிராகரிக்கப்பட்டவர்கள்
    பிறமொழி நாவல்களை இறக்குமதி செய்து, தமிழ்மொழிக்கு ஏற்றவாறு வசனங்களை மாற்றியமைத்து இருவரும் திரையுலகிற்கு புதுமை சேர்த்தார்கள்.
    Victor Hugo எழுதிய “Les Mis’erables” என்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்ட படம் “ஏழை படும் பாடு” இளங்கோவனின் கைவண்ணத்தில் உருவான படம் இது.
    அதேபோன்று Antony Hope எழுதிய “The Prisoner of Zenda” மற்றும் Justin Huntly Mccarthy எழுதிய “If I were King” ஆங்கில நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “நாடோடி மன்னன்” ரவீந்தரின் வசனத்தில் உருவான படம்.
    இருவரும் திராவிடக் கட்சி எழுத்தாளர்களின் அரசியல் பின்புல ஆளுமையினால் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள்.
    ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.
    ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட் டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.
    பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.
    எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வர வில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.
    சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.
    ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங் கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரி யாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.
    எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டோர். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்..........SBB.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #842
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரவீந்தர் அவர்கள் நூல்கள்
    முழுநேர எழுத்தாளராக தன் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொண்ட ரவீந்தர் அவர்கள் நூல்கள் ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று வாசகர்கள் கேட்கலாம். அவர் எழுதிய நூல்கள் எண்ணிக்கையில் குறைவுதான். ஆரம்ப நாட்களில் `கன்னி`, `குற்றத்தின் பரிசு`, `பெண்ணே என் கண்ணே` ஆகிய மூன்று நாவல்களை எழுதியுள்ளார். “பொம்மை” பத்திரிக்கையில் எம்.ஜி.ஆரைப் பற்றி தொடர் கட்டுரை எழுதி வந்தார்.
    பிற்காலத்தில் தன் நல்வாழ்வுக்கு வழியமைத்து வழிகாட்டி, தன்னைக் கூடவே துணையாக வைத்திருந்த எம்.ஜி.ஆரின் நினைவாக இரண்டு நூல்கள் எழுதினார். ஒன்று “விழா நாயகன் எம்.ஜி.ஆர்”.. மற்றொன்று “பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்”.
    எம்.ஜி.ஆரைப் பற்றி எத்தனையோ பேர்கள் எத்தனையோ நூல்கள் எழுதியிருக்கின்றார்கள். எ.சங்கர் ராவ் எழுதிய “தரணி கண்ட தனிப்பிறவி”, நாகை தருமன் எழுதிய “மாமனிதர் எம்.ஜி.ஆர்.”, சபீதா ஜோசப் எழுதிய “மறக்க முடியாத மக்கள் திலகம்”, பா.தீனதயாளன் எழுதிய “எம்.ஜி.ஆர்.”, ரங்கவாசன் எழுதிய “மக்கள் ஆசான்”, ஆர்.முத்துக்குமார் எழுதிய “வாத்யார்”, மணவை பொன் மாணிக்கம் எழுதிய “எட்டாவது வள்ளல்”, எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பளராக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் எழுதிய “மனிதப் புனிதம்” மற்றும் “எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்” போன்ற எண்ணற்ற நூல்கள் பதிப்பாக வெளிவந்திருந்த போதிலும் கலைமாமணி நாகூர் கே.ரவீந்தர் எழுதிய இரண்டு நூல்களும் முக்கியப் பதிவாக எல்லோராலும் கருதப்படுகிறது.
    எம்.ஜி.ஆரின் கலைவாழ்வில் ஆரம்ப நாட்கள் முதற்கொண்டே அவரது உயர்வு தாழ்வுகளின் போதெல்லாம் உடனிருந்து, இன்ப துன்பங்களில் பங்கு கொண்ட ரவீந்தரைத் தவிர எம்.ஜி.ஆரின் குணநலன்களை வேறு யாராலும் அவ்வளவு துல்லியமாக பதிவு செய்ய இயலாது. எம்.ஜி.ஆரின் பாராட்டத்தக்க பழக்க வழக்கங்கள், அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சிகள், அவரது தாராள மனம், கொடைத்தன்மை, சந்தித்த நண்பர்கள் போன்ற விடயங்களை ஒன்று விடாமல் எழுதி வைத்திருப்பதால் ரவீந்தருடைய நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
    “முள்ளும் மலரும்” என்று தன் படத்திற்கு இயக்குனர் மகேந்திரன் பெயர் வைத்திருப்பார். அதன் பொருள் ஆங்கிலத்தில் ” Thorn and Flower” என்றுதான் நானும் நினைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது அந்த படத்தலைப்பின் பொருள் “Thorn also blossoms” என்று.
    அதே போன்று விஜயா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ரவீந்தர் எழுதிய நூலின் தலைப்பு “விழா நாயகன்” ” என்பதாகும். விழாவுக்கெல்லாம் நாயகன் என்ற அர்த்தத்தில் அத்தலைப்பு கொடுக்கப்படவில்லை. அதன் பொருள் “விழா(த) நாயகன்” என்பதாகும். வாழ்க்கையில் மூன்று முறை பேராபத்துக்களைச் சந்தித்து “முப்பிறவி கண்டவர்” என்று பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ பேர்கள் அவரை வீழ்த்த நினைத்தபோதும் “விழாத நாயகனாக” இறுதிவரை தன் வெற்றியை நிலைநாட்டிக் கொண்டவர். இருபொருள் கொண்ட இந்த நூலின் தலைப்பு எல்லோர் கவனத்தையும் ஈர்த்து ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுத் தந்தது.
    “விழா நாயகன்” நூலில் கீழ்க்கண்ட தலைப்பில் எம்.ஜி,ஆரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை கோர்வையாக சுவைபட தனக்கே உரிய எளிய நடையில் விவரித்திருப்பார் ரவீந்தர்.
    ராமச்சந்திரன்,
    செம்மலின் வாழ்க்கைக்கு,
    புரட்சி குமார்,
    நெஞ்சு குளிர்ந்த நிகழ்ச்சி,
    நீங்களே எங்கள் மன்னர்,
    கலைக்கு விலை,
    தசாவதாரம்,
    தமிழுக்குச் சிறப்பு எழுத்து,
    திரை ஏணி, காவியம் எது?,
    நாளை நடப்பதை அறிந்தவர்,
    தங்க நிழல்,
    உங்களில் ஒருவன்,
    பெண் சிரித்தால்,
    பூட்டு வந்த பின்தான்,
    என்னைப் போல் நீங்கள்,
    உலகம் உருண்டை ஏன்,
    ஜானு சொன்னது,
    படத்தின் தலைப்பு,
    நேற்று இன்று நாளை,
    மூன்றெழுத்து வேந்தன்,
    நல்ல நேரம்,
    இதோ.. இவர்கள்,
    டாக்டர் பட்டம் யாருக்கு?,
    தாய் சொல்லை தட்டவில்லை,
    அவருடைய எண்ணம்,
    ஆடவந்த தெய்வம்,
    நட்பு என்பது,
    இதய தெய்வம்,
    மக்களின் நினைவில்
    ரவீந்தரின் மற்றொரு படைப்பான “பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.” என்ற நூலில் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வில் இடம்பெற்ற அரிய பல நிகழ்ச்சிகளை அற்புதமான முறையில் விவரித்துள்ளார்.
    எம்.ஜி.ஆரின் மனித நேயத்தை வாசகர்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் பல சுவையான நிகழ்வுகளை ரவீந்தரின் நூல் நமக்கு விருந்து படைக்கின்றது. .........SBB...

  4. #843
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் குறித்து வெளிவந்த நூல்களின் மொத்தத் தொகுப்பு பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்...

    எம்ஜி ஆரைப் பற்றித் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன,தமிழ் நூல்கள்...
    முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
    புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
    மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
    அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
    வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
    காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
    எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))
    அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
    நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
    சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
    அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
    தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
    எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
    அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
    பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
    மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
    சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
    நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
    எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
    டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
    பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
    தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
    சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
    டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
    அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
    சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
    இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
    நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
    புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
    நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
    எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
    முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
    சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
    செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
    எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
    எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
    1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
    சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
    முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
    செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
    புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
    எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
    மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
    உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
    அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))
    சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
    புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
    வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
    எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
    ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
    புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
    தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
    வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
    நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
    திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
    எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
    தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
    எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
    மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))
    சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
    தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
    சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
    இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
    பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
    எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
    எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
    நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
    புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
    புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
    எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
    காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
    சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
    சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
    எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
    தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
    எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
    அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)
    வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
    அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
    தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
    காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))
    எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016
    எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007
    பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007
    நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009
    எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987
    எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011
    விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009
    காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004
    எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015
    பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 - ‎
    செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985
    8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 - ‎
    எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010
    எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 - ‎
    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011
    மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –
    எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013
    எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016
    எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008
    எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013
    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015
    பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016 -
    மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்
    நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 - ‎
    வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011 - ‎No preview - ‎
    எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000
    வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009
    எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, ‎Es Rajat - 2007 –
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆசிரியர்: மேகலா சித்ரவேல் சேகர் பதிப்பகம்
    ஆங்கில நூல்கள் (English Books)
    Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))
    All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))
    Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))
    Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))
    The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))
    M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))
    The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))
    On the life and achievements of Marudur Gopalan Ramachandran, 1917-1987, Tamil film actor and former chief minister of Tamil Nadu, India.
    Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.
    Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu... ......

  5. #844
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். எந்த அளவுக்கு மத நல்லிணக்கம் கொண்டிருந்தார் என்பதற்கு ரவீந்தர் எடுத்துரைக்கும் இந்த சம்பவம் நம்மை பரவசப்படுத்துகிறது. பிற மதத்தவரை சகோதர பாசத்தோடு அரவணைத்துச் செல்லும் அவரது உயர்ந்த பண்பில் நாம் கரைந்து போகிறோம். இதோ “விழா நாயகன்” நூலில் ரவீந்தர் வருணிப்பதை நாம் காண்போம்.

    ஒரு சமயம் காரில் செம்மலுடன் நானும் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவும் போய்க் கொண்டிருக்கிறோம். வட ஆற்காடு மாவட்டம் சேத்துப்பட்டு என்ற ஊரைக் கடந்து வேலூர் நோக்கிப் போகிறோம். காலை வேளை “பசிக்குது இங்கே எங்கேயாவது காரை நிறுத்தி டிக்கியில் இருக்கும் டிபனை சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்றதும் காரோட்டி கதிரேசன் அங்கு தென்பட்ட ஒரு மாதா கோயில் காம்பவுண்டுகுள்ளே காரை செலுத்தி நிறுத்தினார். அது பெரிய கோவில். சோலைக்குள் இருந்தது.

    செம்மலின் கார் நம்பர் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும். கூட்டம் கூடி விட்டது.

    கூட்டத்தைக் கண்ட ஒரு பாதிரியார் உள்ளிருந்து வந்தார். செம்மலைக் கண்டதும், “வாங்க, ஏன் இங்கேயே நின்று விட்டீங்க! உள்ளே வந்து சாப்பிடுங்க” என்று அழைத்துப் போனார். கோயில் பணியாட்களிடம் சொல்லி. காரில் இருந்து சிற்றுண்டிகளைக் கொண்டு வரச் சொன்னார்.

    உள்ளே அழைத்துப் போய் பேராயரை அறிமுகப் படுத்தினார்கள். அவர் ரோமிலிருந்து வந்திருந்த பெரியவர். கம்பீரத் தோற்றம். அறிவுக்களை அருள் நிறைந்த முகம். செம்மலை அழைத்துப் போய் தன் உணவறையில் அமரவைத்து, தனக்கென வந்த உணவுகளையும் பரிமாறினார். அவரும் எங்களுடன் உண்டார். செம்மல் அவரையே பார்த்துக் கொண்டு சிற்றுண்டியைப் புசித்தார். பேராயாருக்கு இருபுறமும் இரு பூனைகள் வந்து மேசை மேல் அமர்ந்தன. பொசு பொசு என்றும் வால் மொத்தமாக முடி நிறைந்தும் பார்க்க அழகாக இருந்தது. செம்மல் அதனை ரசித்து இப்பூனைகள் எங்குள்ளவை என்று கேட்க. ”ஜாவா நாட்டுப் பூனை. ஒரு பக்தர் கொண்டு வந்து கொடுத்தார்.” என்று பெரியவர் சொன்னார். யாரிடமும் எதையும் கேட்காத செம்மல் “இது குட்டி போட்டால் ஒன்று கொடுங்கள்” என்று கேட்டார். அவரும் “தாராளமாக” என்றார்.

    ஆலயத்தைச் சுற்றிக் காண்பித்தார்கள். செம்மல் மண்டியிட்டு முறைப்படி ஏசுவை வணங்கினார். கன்னிகா ஸ்திரீகள் வாழுமிடம், அனாதை குழந்தைகள் வசிக்குமிடம் அனைத்தையும் பார்த்த பின் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். “இங்கு செலவழித்த இரண்டு மணி நேரத்தில் கண்ட நிம்மதியை வேறு எங்கும் காணவில்லை” என்று சொன்னார் செம்மல்.

    காரில் போய்க் கொண்டிருக்கும் போது எங்களிடம் அப்பேராயரின் அன்பு, அடக்கம், அழகு, கம்பீரத்தைப் பற்றி பேசிக் கொண்டு வந்தார். ”மக்களுக்கு நேரிடையாக நின்று அருள்பணி புரிபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களை நிமிர்ந்து பார்த்தால் கை எடுத்துக் கும்பிடும் அளவுக்கு அவர்கள் முகம் இருக்க வேண்டும்” என்றவர், அத்துடன் ”இப்பெரியவரைப்பார்த்த பின் எனக்கும் பாதிரியாக நடிக்க வேண்டும் போலிருக்கிறது” என்றார். இதுதான் ‘பரமபிதா’ படத்துக்கு அடிப்படை.

    டிசூஸா என்ற கிருஸ்துவப் பெரியவர் லயோலா கல்லூரியின் முதல்வர். கறாரும் கண்டிப்பும் மிக்கவர். அவர் போப் ஆண்டவருக்கு கீழுள்ள பன்னிரண்டு கார்டினல்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு ரோமுக்கு போக இருக்கையில், டாக்டர் ரெக்ஸ் அவரை செம்மலிடம் அழைத்து வந்தார்.

    செம்மல் முறைப்படி வரவேற்று ”என்னைப் பார்க்க நீங்க வந்ததை விட உங்களைப் பார்க்க நான் வந்திருந்தால் அதுவே முறையாக இருந்திருக்கும்” என்றார்.

    அதற்கு அவர் “இல்லை, இல்லை, நான் ஒரு காம்பவுண்டுக்குப் பெரியவர், நீங்கள் இந்த நாட்டுக்குப் பெரியவர். உங்களைப் பற்றி என் அருமை நண்பர் ரெக்ஸ் சொன்னார். அதனால் பார்க்க வந்தேன்” என்றார்.

    அதற்கு செம்மல் ”மிக்க நன்றி” உங்களை விட நான் எந்த வகையில் பெரியவன் என்று எனக்கு தெரியலை” என்றார்.

    அதற்கு அப்பெரியவர் “இப்போது நான் வெளியே போனால் என்னை யார் என்று தெரியாது. ஆனால் நீங்கள் வெளியே தலைகாட்டினாலும் போதும், யார் என்று சொல்லிவிடுவார்கள். மக்களால் சூழப்படுபவன் எவனோ அவனே மகான்” என்றார். செம்மல் வழக்கம் போல் சிறு புன்னகை செய்து கொண்டார்.
    அங்கு பேச்சு வாக்கில் ‘பரமபிதா’ படத்தின் பேச்சும் நடந்தது. அதன் கதையமைப்பை டிசூஸா கேட்டார். ”பாதிரியார் மனதில் சலனங்கள் கூடாது. கதையின்படி நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான். அவன் அப்படியான சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கலாகாது. அப்படிப்பட்டவன் பாதிரியாக வர முடியாது. கதையின் அடிப்படையே தவறாக இருக்கிறது” எனச் சொன்னார் டிசூஸா.

    அதைக் கேட்டபின் இரண்டாயிரம் அடி எடுத்திருந்த ’பரமபிதா’ படத்தை கைவிட்டார் செம்மல். வெகு நாட்கள்வரை டிசூஸாவின் பேச்சு கம்பீரம், அறிவு, அழகுக் கலையைப் பற்றியே பேசிக் கொண்டே இருந்தார் செம்மல்.

    எம்.ஜி.ஆரை பண்புகளை அறிந்துக் கொள்ள விரும்புவர்களுக்கு ரவீந்தரின் நூல்கள் கலைக்களஞ்சியமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது............sbb...

  6. #845
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமாத் துறையில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, “செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ்” நிறுவனத்தின் மேலாளர்.
    எம்.ஜி.ஆர்.அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்க ஆயத்தமானபோது அவர் செய்த முதற் காரியம் என்ன தெரியுமா? அவருக்கு பழக்கமான நண்பர்களிடம் குறிப்பாக மிகநெருக்கமாக பழகிய முஸ்லீம் பிரமுகர்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டியதுதான். கட்சிக்கு நிதிதிரட்டும் பணியில் அவர்கள் தாராளமாக அள்ளித் தந்தார்கள்.
    “கல்வித் தந்தை” என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வீட்டிற்கு மக்கள் திலகம் வருகை தந்தபோது, சேனா அனா அவர்களின் துணைவியார் தமிழர் கலாச்சாரப்படி வெற்றிலை பாக்கு ஒரு தட்டையில் கொண்டுவந்து வந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.
    அப்போது இரு வெற்றிலை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதையே ஒரு நல்ல சகுனமாகக் கருதி எம்.ஜி.ஆர். தன் கட்சிக்கு சின்னமாக இரட்டை இலையை பயன்படுத்தினார் என்கிறார்கள்.
    ��
    சேனா ஆனா குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆர். – ஜானகி
    அதற்கு முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர் இவர்கள் வீட்டுக்கு வருகை தந்தபோது அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் அவருக்கு ஒரு தொப்பியை அணிவித்திருக்கிறார். இந்த கெட்-அப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போக இதையே தன் Celbrity Image-க்கு நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார்.
    எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கியது ஒரு சிலருக்கு மட்டும்தான். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும். கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா மற்றும் அவருக்கு ரோல் மாடலாக இருந்த ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். அதேபோன்று கையோடு கைசேர்த்து, தலைகுனிந்து பவ்யமுடன் ஆசிபெற்ற அன்பர்களில் குறிப்பிடத்தக்க இருவர். 1. இரண்டாம் முறை பதவியேற்றபோது நீதிபதி மு.மு.இஸ்மாயில், 2. எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.
    ��
    “சிரித்து வாழ வேண்டும் ” படத்தில் எம்.ஜி.ஆர்.
    “ஜன்ஜீர்” என்ற இந்திப்படம் தமிழில் “சிரித்து வாழ வேண்டும்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது அதில் பிரான் ஏற்று நடித்த முஸ்லீம் பாத்திரத்தில் மக்கள் திலகம் நடித்தார். தன் நண்பருக்கு விசுவாசம் காட்டும் விதத்தில் அந்த பாத்திரத்திற்கு அப்துல் ரஹ்மான் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.
    அத்தோடு நிற்கவில்லை. பாடலாசிரியர் புலமைப் பித்தனை அழைத்து தன் நண்பரின் பெயர் வருமாறு பாட்டை அமைக்க உத்தரவிட்டார்.
    மெல்லிசை மன்னர் இசையமைக்க, டி.எம்.எஸ். பாட ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற பாடலிது:
    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்அவனே அப்துல் ரஹ்மானாம்ஆண்டான் இல்லை அடிமை இல்லைஎனக்கு நானே எஜமானாம்
    உற்ற நண்பர் ஒருவருக்கு இதைவிட ஒரு அன்பான சமர்ப்பணம் வேறு என்ன செய்ய முடியும்..?
    அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வரிகள் மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இருவர்களுக்கும் இப்பவும் பொருந்தும்
    வந்தான் வாழ்ந்தான் போனான் என்றாஉலகம் நினைக்க வேண்டும் ?சொன்னான் செய்தான் ! என்றே நாளும்ஊரார் சொல்ல வேண்டும் !!!
    காலத்தால் அழியாத வரிகள் இவை. Hats-Off to புலமைப் பித்தன்.
    “இதயக்கனி” மற்றும் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு பொருளாதார உதவி செய்தது பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்கள்தான். கீழைநாடுகளில் அதற்கான தங்கும் வசதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி போன்றவைகள் பெற்றுத் தந்தது யாசீன் காக்கா அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் இவர்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர் “இதயம் பேசுகிறது” மணியன்.
    அதற்கு முன்பு, மணியன் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்து பயணத் தொடர்கதை எழுதுவதற்கு அந்தந்த நாடுகளில் பலவகைகளிலும் உதவி செய்தவர்கள் இந்த கீழக்கரை பிரமுகர்கள். ஆனால் அவரது பயணத் தொடரில் இவர்களைப் பற்றிய குறிப்பு எதையும் மணியன் எழுதி வைத்ததாக எனக்கு நினைவில்லை.
    1970-ஆம் ஆண்டில் “உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக “எங்கள் தங்கம்” படம் முடிந்த கையோடு புறப்பட வேண்டியிருந்தது. இங்கு அரசியல் சூழ்நிலையும் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று யாசீன் காக்கா உறுதியளித்த பின்புதான் எம்.ஜி.ஆருக்கு உற்சாகமே பிறந்தது.
    யாசீன் காக்கா, கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து. முரசொலி செல்வத்தை தயாரிப்பாளராக்கி, “அஞ்சுகம் பிக்சர்ஸ்” என்ற பெயரில் “பிள்ளையோ பிள்ளை” (1972) படத்தை தயாரித்தபோது அதற்கான செலவு மொத்தம் 15 லட்சம்.
    பிரபலமாகாத ஒரு புதுமுகத்தை வைத்து எடுக்கும் ஒரு படத்திற்கு யார்தான் தாமாகவே முன்வந்து பண முதலீடு செய்வார்கள்..?
    இப்படத்திற்கான செலவை முன்கூட்டியே வழங்கி விநியோக உரிமையை பெற்றது கிரசெண்ட் மூவீஸ், சேது பிலிம்ஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ், ராசி அண்ட் கோ இந்த மூன்றும்தான். இந்த மூன்று நிறுவனங்களிலும் யாசீன் காக்கா அவர்கள் பங்குதாரர்களாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
    2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தான சர்ச்சையில் துபாய் ETA நிறுவனத்தின் மேலாளர் சலாஹுத்தீன் அவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்ற புகார் எழுந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா “பிள்ளையோ பிள்ளை” படம் எடுக்கப்பட்ட அந்தக் கால கதையை மறுபடியும் நினைவுபடுத்தி, சூசகமாகச் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை 2010-ஆம் ஆண்டு கோவை பொதுக்கூட்டத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.

    சர்க்காரியா கமிஷன் விசாரணையின்போது, எத்தனையோ சாட்சிகளில் யாசீன் காக்காவும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். உண்மையே பேசி பழக்கப்பட்ட யாசீன் காக்கா சர்க்காரியா கமிஷன் முன்பு வழங்கிய வாக்குமூலம் இதுதான்.
    “சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன். எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”
    அவரது இந்த வாக்குமூலம் அரசியல் வானில் ஒரு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியது. இச்செய்தி 31.03.2011 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் மாலைமலர் நாளிதழ்கள் வெளியிட்டு மீண்டும் பெரும் பரபரப்பை உண்டு பண்ணின..........SBB.........

  7. #846
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*21/09/20 அன்று அளித்த*தகவல்கள் (122 வது தொடர் )
    ------------------------------------------------------------------------------------------------------
    சகாப்தம் நிகழ்ச்சி இன்றைக்கு தமிழகம் முழுவதும்* மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர்,பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளிலும் , இணையதளம் மூலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு* , ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ,நிர்வாகி திரு.லோகநாதன் ராமச்சந்திரன்*என்பவர் தகவல் அளித்துள்ளார் . குறிப்பாக கடந்த வாரம் மட்டும் சுமார் 1,00,000பேர் சகாப்தம் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறார்கள் என்பதை திரு.லோகநாதன் ராமச்சந்திரன் தனது வாட்ஸ் அப் தகவல் மூலமாக* தெரிவித்துள்ளார் .உண்மையிலேயே அவர் புகழை பரப்புவதற்காகவும் , அவருடைய புகழை காப்பாற்றுவதற்காகவும் இன்றைக்கும் இத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அந்த மாமனிதரின் ஆன்மா .பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்கிற மாதிரி அவரிடமிருந்த அந்த மகோன்னதமான* மனிதத்துவம், பிறரை நேசித்தல் ,பிறர் மீது அக்கறை காட்டுதல் ,பிறருடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுதல் ,என்பதை தனது திரைப்படங்கள் என்கிற சாதனங்கள்*மூலம் கருத்துக்களை சொல்லிக்கொண்டே வந்தார் .அதனால்தான் இன்றைக்கும் அவர் மறைந்தும் மறையாத மக்கள் தலைவராக மக்கள் மத்தியில் இடம் பெற்று இருக்கிறார் .


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தினசரி அதிகாலை 5 மணியளவில் எழுந்து ராமாவரம் இல்லத்தை சுற்றியுள்ள* தோட்டத்தில் நடைபயிற்சி* செய்துவிட்டு ,வீட்டுக்கு திரும்பியதும் சிறிது நேரம் உடற்பயிற்சி ,கிட்டத்தட்ட வியர்வை சிந்த*செய்தபின் குளித்துவிட்டு காலை 8 மணியளவில்* சிற்றுண்டி அருந்துவது வழக்கம் . அதன்பின் வீட்டை விட்டு புறப்பட்டு செல்பவர்எப்போது வீடு திரும்புவார் என்று தெரியாத நிலையில்* சுமார் 15 மணி நேரம் உழைத்த பின்தான் வீட்டுக்கு திரும்புவார் காரணம் அவருக்கு நேரம் என்பது அரிய வகை சொத்தாக இருந்தது .


    ஒருநாள் படப்பிடிப்பிற்கு நடிகர்* அசோகன் கொஞ்சம் தாமதமாக வருகிறார்*அசந்து சற்று தூங்கிவிட்டேன் என்று சொல்கிறார். உடனே எம்.ஜி.ஆர். பதில் அளிக்கிறார் .அசோகன் நீங்கள் கிறிஸ்துவராக இருக்கலாம் ஆனால் ஒரு விஷயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . நடராஜர் சிலையை பாருங்கள்*கலையின் வடிவமாக சொல்லப்படுகிற நடராஜர் ஒற்றை காலில் நிற்கிறார் .ஏனென்றால் ஒற்றை காலில் நின்றுகொண்டிருந்தால்* ஒருவர் தூங்கவே முடியாது . அப்படி உற்சாகமாக எப்போதும் உழைத்து கொண்டே இருக்க வேண்டும்*.என்பதை காட்டுவதற்காகத்தான்* இப்படி ஒரு கடவுள் சிலையை, சிற்பத்தை அமைத்திருக்கிறார்கள் . அதே போல விலங்குகளை பார்த்தால் பலத்திலே பெரியதாக சிங்கத்தை சொல்வார்கள் .உருவத்தில் பெரியதாக யானையை சொல்வார்கள் . ஆனால் வேகம் என்று பார்த்தால் குதிரையைத்தான் சொல்வார்கள் .இன்றைக்கு கூட குதிரை பவர் என்று சக்தியை அர்த்தமாக சொல்கிறார்கள் அந்த குதிரையானது ஒருபோதும்* படுத்து தூங்கியதில்லை . நின்று கொண்டேதான் தூங்கும் .நீங்கள் உழைப்பதற்கு என்று வந்துவிட்டீர்கள்*என்றால் கொஞ்சம் உறக்கத்தை குறைத்து கொள்ள வேண்டும் . அதாவது நீங்கள் கனத்தை தூக்க வேண்டும் என்றால் உங்கள் பலத்தை பெருக்கி கொள்ள வேண்டும்* பதவிக்கு வரவேண்டும் என்றால் தகுதியை பெருக்கி கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார் எம்.ஜி.ஆர். .


    பிரபல அரசியல் தலைவர் திரு.லியாகத் அலிகான் அளித்த பேட்டி விவரம்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    நம்பிக்கை நாற்றாக விதைக்கப்பட்டு இருக்கிற அந்த மன்னாதி மன்னன் , இதயத்தில் இடம் பெறுவது என்பது சுலபமான விஷயம் அல்ல .ஆனால் இளம் வயதிலேயே மாணவனாக இருந்த திரு.லியாகத் அலிகான் அவர்களை அரசியலுக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கையை பிடித்து இழுத்து வந்திருக்கிறார் . அவரது அனுபவங்களை நேரில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அதை தெரிந்து கொள்வோம்*


    எம்.ஜி.ஆர். அவர்கள் பிரபல சினிமா நடிகர் ,வசூல் சக்கரவர்த்தி, வள்ளல் தன்மை*கொண்டவர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு கட்சியின் பொருளாளராக இருந்தவர் ,அந்த கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்பதற்காக இவ்வளவு பேர்*தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தியது போல வேறு எவருக்காகவாவது நடத்தியது உண்டா ? அல்லது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டும்தான் நடந்ததா*அந்த சமயத்தில் கல்லூரி மாணவனாக இருந்த நீங்கள் எந்த ஈர்ப்பினால் இந்த மாதிரியான போராட்டங்களில் ஈடுபட்டீர்கள்*


    லியாகத் அலிகான் : எங்கள் தந்தையார் அடிப்படையில் எம்.ஜி.ஆர். ரசிகர் .நான் என் தந்தையுடன் பார்த்த முதல் படம் தாய்க்கு பின் தாரம் . அந்த படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் காளையுடன்* போராடி அதை அடக்கும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது .எனக்கு அப்போது சுமார் 8 வயது இருக்கும் . தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்கள் பார்க்கும் சூழ்நிலையால் ,அவரது படங்களின் தாக்கம் ,சாகசங்கள் அவரது இமேஜ் ,உருவம் ஆகியன என் மனதில் ஆழ பதிந்துவிட்டதுஒரு கட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100 வது* படமாகிய* ஒளிவிளக்கு*100 வது நாள் வெற்றிவிழா**.கொண்டாடி , நான்கைந்து பேர் சேர்ந்து பணம் முதலீடு செய்து ,ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர்.ஸ்டில்லை போட்டோ எடுத்து (,அப்போதெல்லாம் போட்டோ பிரிண்ட் போடுவதற்கு 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் .இப்போதெல்லாம் ஒரு நிமிடத்தில் பிரிண்ட் வந்துவிடும் .)சுமார் 100 நபர்களுக்கு ரூ.400/- செலவு செய்து கொடுத்தோம் அந்த காலத்தில் இது ஒரு பெரிய தொகை .இந்த விஷயங்கள் எல்லாம் மனதில் ஆழ பதிந்து எம்.ஜி.ஆர்.எங்களுக்குள் ஐக்கியம் ஆகிவிட்டார் . பின்னர் 1972ல் அவரை கட்சியில் இருந்து நீக்கியபோது எங்களுக்கு மன உளைச்சலை கொடுத்தது .நான் அப்போது தி.மு.க.வில் கோவை மாவட்ட மாணவர் அணியில் மாணவ* பிரதிநிதியாக இருந்தேன் . எனக்கு அப்போது மேடை பேச்சு அனுபவம் கொஞ்சம் இருந்தது . அதனால் தி.மு.க.கட்சியினரிடம் நான் எம்.ஜி.ஆர். கட்சி நீக்கம் பற்றி அடிக்கடி வாதம் செய்து வந்தது அவர்களுக்கு பிடிக்காததால் ,நீ வயதில் சிறியவன் ,மாணவன் உனக்கு ஒன்றும் தெரியாது ,மேலிடத்தில் நடக்கும் விஷயங்கள் உனக்கு தெரிய வாய்ப்பில்லை தங்க கத்தி என்றால் வயிற்றில் குத்திக்* கொள்ளவா முடியும் என்று அவர்கள் பேசவே எனக்குள் ஆவேசம் பொங்கி எழுந்தது .என்னால் ஜீரணிக்க முடியவில்லை . அப்போது நான் உடுமலை கலை கல்லூரியில் மாணவர் சங்க* தலைவராக இருந்தேன் .அப்போது எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக ஊர்வலம் போராட்டங்கள் நடத்த நாங்கள் முடிவு செய்தபோது தி.மு.க. வினர் என்னை பிடிக்க முயன்றனர் .இதை அறிந்த நானும் ஒருசில முக்கிய நண்பர்களும் கனகராஜ் என்பவரின் வட்டிக்கடை வீட்டில் யாருக்கும் தெரியாமல் சில நாட்கள் தங்கினோம் .நாங்கள் 15/10/1972 அன்று உடுமலையில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டோம் .அக்டொபர்* 10மத்தேதி எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்கிற செய்தி அறிந்து உடுமலையில் இஸ்மாயில் என்கிற எம்.ஜி.ஆர்.ரசிகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .இந்த செய்தி பத்திரிகையில் வெளிவராமல் தி.மு.க. வினர் தடுத்தனர் .உடுமலையில் உள்ள அச்சகங்களில் சென்று நோட்டீஸ் அச்சடிக்க முயன்றபோது ,தி.மு.க.வின் அராஜகம் காரணமாக ஒருவரும் முன்வரவில்லை. எல்லோரும் பயந்தனர் . அப்போது பாஷா என்பவர்*விடாமுயற்சியின் காரணமாக எம்.ஜி.ஆருக்காக இஸ்மாயில் என்பவர் உடுமலையில் விஷம் அருந்தி தற்கொலை என்று பத்திரிகையில்* செய்தி வெளிவரச்செய்தார் .இது குறித்து ஊர்வலம் நடத்த, நோட்டீஸ் அச்சடிக்க ஒருவரும் முன்வரவில்லை .அப்போது பாபு என்கிற எம்.ஜி.ஆர். பற்றாளர் அச்சகம் வைத்திருந்தார் . அவரும் நோட்டீஸ் அச்சடிக்க முன்வராமல் ஒரு பேப்பர் பண்டல் மட்டும் கொடுத்து உதவினார் .அதன்பின் நாங்கள் ஒரு ரகசிய இடத்தில கூடி , எங்கள் கைப்பட ,எம்.ஜி..ஆர்.அவர்களை தி.மு.க.வி.ல் இருந்து நீக்கியது தவறு .இது குறித்த கண்டன ஊர்வலம் உடுமலை கல்பனா அரங்கில் இருந்து காலை 9 மணிக்கு 15ந்தேதி புறப்படும் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருக என்று எழுதி எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பற்றாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அளித்தோம் . ஊர்வலத்திற்கு ஆரம்பத்தில் சுமார் 30 நபர்கள்தான் இருந்தனர் .ஆனால் முடியும் தருவாயில் பார்த்தால் 3000 பேர் திரண்டு இருந்தனர் .அந்த கூட்டத்தில் என்னை எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக தேர்ந்து எடுத்தனர் .* இந்த சம்பவம் அடுத்த நாள் 16ந்தேதி தினமலர் நாளிதழில் வெளியாகி இருந்தது .அப்போது இதை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் என் பெயரை பற்றி குறித்து வைத்திருந்தார் .அப்போது வழக்கறிஞர் குழந்தைவேலு அவர்கள் 20ந்தேதி சென்னைக்கு போக இருந்த சமயத்தில் நானும் சில நண்பர்களும் அவருடன் இணைந்து சென்றோம் அடுத்த நாள் 21ந்தேதி சென்னையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை நாங்கள் சந்திக்க முயன்றோம் முடியவில்லை .அப்போது கே.ஏ.கே. அவர்கள்தான் புரட்சி தலைவர் முன்னிலையில் எங்களை கட்சியில் சேர்த்தார் .அனகாபுத்தூர் ராமலிங்கம் மூலம்தான் அ.தி.மு.க. தோற்றுவிக்கப்படுகிறது என்று முறையாக அறிவிப்பு 17/10/72அன்று வந்திருந்தது .21ந்தேதி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் சுமார் 2 மணி நேரம் பேசும் அருமையான வாய்ப்பு கிடைத்தது . அப்போது அ,தி,மு.க. கட்சி கொடியை உருவாக்கி* பிரபல சினிமா கலை இயக்குனர் அங்கமுத்து தயார் செய்து கொண்டு வந்ததை முறைப்படி எம்.ஜி.ஆர். அறிவிக்கிறார் .இந்த கொடியை* வடிவமைத்தவர் நடிகர் பாண்டு என சொல்லப்படுகிறது .அவர் அந்த கூட்டத்தில் கீழே அமர்ந்து கொள்கிறார் .அந்த கொடியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்*ஆள் காட்டி விரலை வலது புறம் ,இடது புறம் காட்டும் வடிவத்திலும் ,அண்ணாவின் உருவம் நேராக இருப்பது போலும் உள்ள கொடிகளை எங்களிடம் காண்பித்து*,இதில் எது மிக நன்றாக இருக்கிறது என்று ஆலோசனை கேட்டார் .அதில் நான் முக்கிய பங்கு வகித்தேன் என்பது எனக்கு பெருமையான விஷயம்*என் வாழ்நாளில் எனக்கு இது மறக்கமுடியாத தருணம் .



    காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நான்கு படங்களின் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் .அங்குள்ள தமிழர்கள் ,பலரும் தங்கள் வீட்டிற்கு எம்.ஜி.ஆர். உணவருந்த வரவேண்டும்*என்று விரும்பி, வற்புறுத்தி அழைக்கிறார்கள் .எம்.ஜி.ஆரிடம் கார் டிரைவராக இருந்த*அப்துல்லா என்பவர் அங்கிருக்கிறார் .எம்.ஜி.ஆருடன் சென்ற* உதவியாளர்**.ரவீந்தரும்*உடனிருக்கிறார் .அப்துல்லாவிற்கு உருது கலந்த காஷ்மீரி மொழி* பேசக்கூடியவர் .அப்துல்லா என்பவர் ரவீந்தரிடம் எங்கள் வீட்டிற்கு இந்தி நடிகர் திலீப்குமார், ராஜ்கபூர் போன்றவர்கள் எல்லாம் வந்துள்ளார்கள் .அதே போல எம்.ஜி.ஆர். அவர்களும் என் வீட்டிற்குஉணவருந்த* விஜயம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் .இதை அறிந்த எம்.ஜி.ஆர். நாளை அவர் வீட்டிற்கு செல்லலாம் என்றார் மறுநாள் எம்.ஜி.ஆர். அப்துல்லா வீட்டிற்கு விஜயம் செய்கிறார் .வீட்டுக்குள் நுழைந்ததும் அப்துல்லாவின் தாத்தா காஷ்மீர் சால்வையில் பூ வடிவில்நேர்த்தியான* எம்ப்ராய்டரிமற்றும் ஜரிகை* வேலைகள் செய்து கொண்டிருக்கிறார் .அப்துல்லாவின் தந்தை வேறுவிதமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் .அங்குள்ள பெண்களோ காஷ்மீர் சேலைகளில் வடிவமைக்கும் வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் .அங்குள்ள குழந்தைகள் கூட அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் .இவற்றை எல்லாம் நேரில் பார்த்த எம்.ஜி.ஆர்.பூரித்து போகிறார் . ஒரு வீட்டில் அனைவரும் தங்களுக்கு உகந்த ஏதாவது ஒரு வேலையில்* ஈடுபட்டிருப்பதை கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்து புல்லரித்து போகிறார் .அந்த வீட்டில் விருந்து உண்டபின் ,அங்கிருந்த குழந்தைகளுக்கு தன் கை நிறைய பணத்தை அள்ளி கொடுக்கிறார் .எம்.ஜி.ஆர். புறப்படும்போது அவர் கால்களில் அணிவதற்கு ஒரு ஜோடி காஷ்மீர் செருப்பை தருகிறார்கள் .தலையில் அணிவதற்கு ஒரு தொப்பியை தருகிறார்கள் . அந்த தொப்பியை அப்துல்லாவின் தாத்தா எம்.ஜி.ஆருக்கு அணிவிக்கும்போது* உருது மொழியில் ஏதோ சொல்கிறார் .ரவீந்தருக்கு உருது,அரபி மொழிகள் நன்றாக தெரியும் .எனவே எம்.ஜி.ஆர். ரவீந்தரிடம் அவர் என்ன சொன்னார் என்று கேட்க ,நீங்கள் ஒரு பேரரசர்தான் ஆனால் இந்த ஏழையால்* உங்கள் தலைக்கு வைரக்கிரீடம் சூட்ட முடியவில்லை .அதனால் எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்து உணவருந்தியதற்காக இந்த ஏழையின் கைகளால் செய்த குல்லாவை உங்களுக்கு* அணிவிக்கிறேன் .உங்களோடு எப்போதும் அல்லா துணையிருப்பார் என்று வாழ்த்தியதாக ரவீந்தர் எம்.ஜி.ஆரிடம் கூறினார் .அப்படி வாழ்த்துக்களுடன் தலையில் அணிந்த குல்லாவுடன் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் வரை கழற்றவேயில்லை .* இவ்வளவு அன்போடும்,பரிவோடும்* வாழ்த்துக்களோடும் எனக்கு அணிவிக்கப்பட்ட இந்த காஷ்மீர் குல்லா இனி எம்.ஜி.ஆர். குல்லா என்று அழைக்கப்படுவதோடு என்னை விட்டு பிரியாது என்று சொன்னாராம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------
    1.சிரித்து வாழ வேண்டும்* - உலகம் சுற்றும் வாலிபன்*

    2.எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி உரையாடல் - அன்பே வா*

    3.தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்*

    4.திரு.லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*

    5..ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் -சிரித்து வாழ வேண்டும்*

  8. #847
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*பட்டியல் (17/09/20 முதல் 23/09/20 வரை )
    --------------------------------------------------------------------------------------------------------------------------------17/09/20* -மெகா டிவி - மதியம் 12 மணி -* ஆனந்த ஜோதி*

    * * * * * * * * *புதுயுகம்* * *-பிற்பகல் 1.30 மணி - நீரும் நெருப்பும்*

    * * * * * * * *மெகா 24* * * - பிற்பகல் 2.30 மணி -காதல் வாகனம்*

    * * * * * * * *சன் லைப்* * - மாலை 4 மணி* * * *- நீதிக்கு* பின் பாசம்*


    18/09/20 -சன்* லைப்* - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*

    19/09/20 -சன் லைப் -* காலை 11 மணி - பெற்றால்தான் பிள்ளையா*

    * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி** -இன்றுபோல் என்றும் வாழ்க*

    *20/09/20-மெகா டிவி* *-மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*

    * * * * * * * *மெகா 24* * * *-பிற்பகல்**2.30 மணி -தாயை காத்த தனயன்*

    21/09/20-சன் லைப்* *-காலை 11 மணி* * - நம் நாடு*

    * * * * * * * * முரசு* -மதியம் 12மணி /இரவு 7 மணி -தாய் சொல்லை தட்டாதே** **

    * * * * * * * * *புதுயுகம்* * * *- இரவு 7 மணி* -- காதல் வாகனம்* * * * * * * * **

    * * * * * * * * *மீனாட்சி டிவி - இரவு 9.30 மணி -விவசாயி* * * * * * * *

    * * * * * * * * *வேந்தர் டிவி -இரவு 10.30 மணி -தாயின் மடியில்*

    * * * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி - நீதிக்கு பின் பாசம்*

    22/09/20* *-சன் லைப் -* காலை 11 மணி - திருடாதே*

    * * * * * * * * * சித்திரம் டிவி -காலை 11மணி /மாலை* 6மணி**-அபிமன்யு*

    * * * * * * * * *வசந்த் டிவி -பிற்பகல் 1.30மணி -மருதநாட்டு இளவரசி*

    * * * * * * * * *மூன் டிவி* *-இரவு 7.30 மணி -* நீதிக்கு பின் பாசம்*

    23/09/20* * சன் லைப்* -காலை 11 மணி - நீதிக்கு தலைவணங்கு*

    * * * * * * * * * மெகா 24* *-பிற்பகல் 2.30 மணி - முகராசி*

    * * * * * * * * *மூன் டிவி* -இரவு 7.30 மணி -தாய்க்கு பின் தாரம்**

    * * * * * * * * *தமிழ் மீடியா டிவி -இரவு 8.30 மணி -ஆயிரத்தில் ஒருவன்*
    * * *

    * * * * * * * **

  9. #848
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ’இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ பாடல்; 52 ஆண்டுகளானாலும் சரித்திரமாகி மறையாத ‘ஒளிவிளக்கு’ பாடல்! - எம்ஜிஆரின் ‘ஒளிவிளக்கு’; வாலியின் பாட்டு செய்த பிரார்த்தனை

    எப்போதோ வந்த வடிவேலுவின் காமெடி, பல வருடங்களுக்குப் பிறகு டிரெண்டானது. இன்றைய கணினி யுகத்தில் இது சாத்தியமாகலாம். ஆனால் அப்போது ஒட்டுமொத்த தமிழகமெங்கும் ஒரு பாடல்... ஒலித்தது. ‘பாட்டு நல்லாருக்கு’ என்றோ ‘நல்ல வரிகள்’ என்றோ, ‘ரேடியோல பாட்டு போடுறாங்க, கேப்போம்’ என்றோ மட்டுமே பாட்டு ஒலிபரப்பவில்லை. அதற்காக மட்டுமே கேட்கப்படவில்லை. பிரார்த்தனைக்காக, வேண்டுதலுக்காக, உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக ஒலிபரப்பப்பட்டது. எல்லோரின் பிரார்த்தனையாகவும் இப்படி திரும்பத்திரும்ப ஒலித்த அந்தப் பாடல்... ‘இறைவான் உன் மாளிகையில்...’. அப்படி பாடலை ஒலிக்கவிட்டு, பிரார்த்தனை செய்தது... எம்.ஜி.ஆருக்காக!

    ஜெமினி பிரமாண்டமான செலவில் தயாரித்த வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சாணக்யாவின் இயக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, செளகார் ஜானகி முதலானோர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.வி. இசையமைக்க, வாலி பாடல்கள் எழுத எம்ஜிஆரின் நூறாவது படமாக வந்தது ‘ஒளிவிளக்கு’.கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நல்ல மனமும் அன்பு குணமும் கொண்ட கதாபாத்திரம் எம்ஜிஆருக்கு. இன்றைக்கு கரோனா போல், அன்றைக்கு ஊரில் ஒரு நோய் வந்துவிட, ஊரே காலியாகிவிடும். ஒரு பங்களாவில் திருட வரும் எம்ஜிஆர், அங்கே உடல்நலமின்றி இருக்கும் செளகார் ஜானகியைப் பார்ப்பார். மனமிரங்கி உதவுவார். பிறகு ஒருகட்டத்தில் செளகாரை அழைத்துக்கொண்டு அடைக்கலம் தந்து காப்பார். கொஞ்சம் கொஞ்சமாக திருட்டுத் தொழிலை விடுவார்.
    இதேகட்டத்தில், ஜெயலலிதாவை விரும்புவார். இவருடைய கொள்ளைக்கும்பல், குடிசைகளுக்கு தீவைத்துவிடும். எல்லோரையும் காப்பார். அப்படி ஒரு குழந்தையைக் காப்பாற்றும் போது, தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடுவார். செளகார் ஜானகி, எம்ஜிஆருக்காக, எம்ஜிஆர் குணமாக வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்து பாடுவார்.
    ”இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ என்று மனமுருகி, கதறி, கண்ணீர்விட்டுப் பாடுவார். எம்ஜிஆர் குணமாவார்.

    இந்திப் படத்தின் ரீமேக் இது. எம்ஜிஆரிஸம் கொண்ட கதை. தவிர, எம்ஜிஆருக்கு 100வது படமும் கூட. ‘தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?’ என்றொரு பாடல். அநேகமாக, எம்ஜிஆர் குடித்துவிட்டு நடித்த படமும் போதையில் பாடுகிற படமும் இதுவாகத்தான் இருக்கும். ‘ருக்குமணியே பறபற’ என்றொரு பாடலும் ஹிட்டானது. ’மாம்பழத் தோட்டம்’ என்றும் ‘நான் கண்ட கனவினில்’ என்றும் பாடல்கள் உண்டு. ஆனாலும் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ என்ற பாடல், இந்தப் படத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டுப்போய்ச் சேர்த்தது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாடலாக அமைந்தது1968 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி, வெளியானது ‘ஒளிவிளக்கு. இதன் பிறகு எம்ஜிஆர் எத்தனையோ படங்களில் நடித்தார். பிறகு கட்சி தொடங்கினார். 77ம் ஆண்டு ஆட்சியமைத்தார். பிறகு மீண்டும் தேர்தல் வந்தது. 80ம் ஆண்டு திரும்பவும் ஆட்சி அமைத்தார். அதன் பின்னர் 84ம் ஆண்டில் மீண்டும் தேர்தல் வரும் நேரத்தில், அவருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன. சென்னை மருத்துவமனை, அமெரிக்க மருத்துவமனை என சிகிச்சையில் இருந்தார்.
    அப்போது, எம்ஜிஆருக்கு என்னென்ன நோய்களெல்லாம் இருக்கின்றன என்று தமிழகத்துக்குத் தெரிந்தது. மக்கள் கலங்கினார்கள். துடித்தார்கள். கதறினார்கள். வெடித்துக் கண்ணீர்விட்டு அழுதார்கள்.

    எல்லோரும் ஒருமித்த மனதுடன் எம்ஜிஆர் குணமாகவேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் முக்கிய அம்சம்... ‘இறைவா உன் மாளிகையில்’ பாடல்தான். கவிஞர் வாலி எழுதிய பாடல் இது.
    இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு, தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு,
    ஆண்டவனே உன் பாதங்களை - நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்.. முருகையா...
    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும் உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்.
    மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும் வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல் உன்னுடனே வருகின்றேன் - என் உயிரைத் தருகின்றேன் மன்னன் உயிர் போகாமல்
    என்ற வரிகள் ஒவ்வொன்றும் எம்ஜிஆருக்காக, எம்ஜிஆரின் கேரக்டருக்காக, ‘ஒளிவிளக்கு’ படத்தின் கேரக்டருக்காக மட்டுமில்லாமல், எம்ஜிஆரின் இயல்பான குணத்தைக்கொண்டும் எழுதப்பட்டது. பி.சுசீலா, உருகி உருகிப் பாடியிருப்பார். அந்தப் பாடல் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, எம்ஜிஆரின் உடல் நலனுக்காக, பூரண குணம் அடைவதற்காக, தமிழகம் முழுவதும் ஒலித்தது. படம் வெளியான போது கூட அந்தளவுக்கு இந்தப் பாடல் முக்கியத்துவம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

    அப்போது தியேட்டர்களில், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி, மோகன் என யார் நடித்த படங்கள் ஓடினாலும், படம் தொடங்குவதற்கு முன்னதாக, ‘ஒளிவிளக்கு’ படத்தின் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடல் காட்சி, ஒளிபரப்பாகும். மொத்த தியேட்டரும் எம்ஜிஆரைப் பார்த்து கதறியது. கைகூப்பியது. சூடமேற்றப்பட்டு, வேண்டிக்கொண்டது.
    தமிழ் சினிமாவில், இப்படியொரு பாடல், ஒரு நடிகரின் திரையிலும் வாழ்விலும் மக்களுடனும் இரண்டறக் கலந்ததென்றால்... அநேகமாக இந்தப் பாடலாகத்தான் இருக்கும்.
    ‘ஒளிவிளக்கு’ படம் வெளியாகி, 52 ஆண்டுகளாகின்றன. எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழாவெல்லாம் கொண்டாடப்பட்டு விட்டது. எம்ஜிஆரின் 200வது ஆண்டுவிழா கொண்டாடுகிற போதும் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடலும் அங்கம்வகிக்கும்.

    https://www.hindutamil.in/news/cinem...-52-years.html
    நன்றி: இந்து தமிழ்.........VD.,.........

  10. #849
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமாத் துறையில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, “செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ்” நிறுவனத்தின் மேலாளர்.
    எம்.ஜி.ஆர்.அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்க ஆயத்தமானபோது அவர் செய்த முதற் காரியம் என்ன தெரியுமா? அவருக்கு பழக்கமான நண்பர்களிடம் குறிப்பாக மிகநெருக்கமாக பழகிய முஸ்லீம் பிரமுகர்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டியதுதான். கட்சிக்கு நிதிதிரட்டும் பணியில் அவர்கள் தாராளமாக அள்ளித் தந்தார்கள்.
    “கல்வித் தந்தை” என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வீட்டிற்கு மக்கள் திலகம் வருகை தந்தபோது, சேனா அனா அவர்களின் துணைவியார் தமிழர் கலாச்சாரப்படி வெற்றிலை பாக்கு ஒரு தட்டையில் கொண்டுவந்து வந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.
    அப்போது இரு வெற்றிலை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதையே ஒரு நல்ல சகுனமாகக் கருதி எம்.ஜி.ஆர். தன் கட்சிக்கு சின்னமாக இரட்டை இலையை பயன்படுத்தினார் என்கிறார்கள்.
    ��
    சேனா ஆனா குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆர். – ஜானகி
    அதற்கு முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர் இவர்கள் வீட்டுக்கு வருகை தந்தபோது அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் அவருக்கு ஒரு தொப்பியை அணிவித்திருக்கிறார். இந்த கெட்-அப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போக இதையே தன் Celbrity Image-க்கு நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார்.
    எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கியது ஒரு சிலருக்கு மட்டும்தான். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும். கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா மற்றும் அவருக்கு ரோல் மாடலாக இருந்த ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். அதேபோன்று கையோடு கைசேர்த்து, தலைகுனிந்து பவ்யமுடன் ஆசிபெற்ற அன்பர்களில் குறிப்பிடத்தக்க இருவர். 1. இரண்டாம் முறை பதவியேற்றபோது நீதிபதி மு.மு.இஸ்மாயில், 2. எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.
    ��
    “சிரித்து வாழ வேண்டும் ” படத்தில் எம்.ஜி.ஆர்.
    “ஜன்ஜீர்” என்ற இந்திப்படம் தமிழில் “சிரித்து வாழ வேண்டும்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது அதில் பிரான் ஏற்று நடித்த முஸ்லீம் பாத்திரத்தில் மக்கள் திலகம் நடித்தார். தன் நண்பருக்கு விசுவாசம் காட்டும் விதத்தில் அந்த பாத்திரத்திற்கு அப்துல் ரஹ்மான் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.
    அத்தோடு நிற்கவில்லை. பாடலாசிரியர் புலமைப் பித்தனை அழைத்து தன் நண்பரின் பெயர் வருமாறு பாட்டை அமைக்க உத்தரவிட்டார்.
    மெல்லிசை மன்னர் இசையமைக்க, டி.எம்.எஸ். பாட ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற பாடலிது:
    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்அவனே அப்துல் ரஹ்மானாம்ஆண்டான் இல்லை அடிமை இல்லைஎனக்கு நானே எஜமானாம்
    உற்ற நண்பர் ஒருவருக்கு இதைவிட ஒரு அன்பான சமர்ப்பணம் வேறு என்ன செய்ய முடியும்..?
    அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வரிகள் மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இருவர்களுக்கும் இப்பவும் பொருந்தும்
    வந்தான் வாழ்ந்தான் போனான் என்றாஉலகம் நினைக்க வேண்டும் ?சொன்னான் செய்தான் ! என்றே நாளும்ஊரார் சொல்ல வேண்டும் !!!
    காலத்தால் அழியாத வரிகள் இவை. Hats-Off to புலமைப் பித்தன்.
    “இதயக்கனி” மற்றும் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு பொருளாதார உதவி செய்தது பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்கள்தான். கீழைநாடுகளில் அதற்கான தங்கும் வசதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி போன்றவைகள் பெற்றுத் தந்தது யாசீன் காக்கா அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் இவர்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர் “இதயம் பேசுகிறது” மணியன்.
    அதற்கு முன்பு, மணியன் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்து பயணத் தொடர்கதை எழுதுவதற்கு அந்தந்த நாடுகளில் பலவகைகளிலும் உதவி செய்தவர்கள் இந்த கீழக்கரை பிரமுகர்கள். ஆனால் அவரது பயணத் தொடரில் இவர்களைப் பற்றிய குறிப்பு எதையும் மணியன் எழுதி வைத்ததாக எனக்கு நினைவில்லை.
    1970-ஆம் ஆண்டில் “உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக “எங்கள் தங்கம்” படம் முடிந்த கையோடு புறப்பட வேண்டியிருந்தது. இங்கு அரசியல் சூழ்நிலையும் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று யாசீன் காக்கா உறுதியளித்த பின்புதான் எம்.ஜி.ஆருக்கு உற்சாகமே பிறந்தது.
    யாசீன் காக்கா, கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து. முரசொலி செல்வத்தை தயாரிப்பாளராக்கி, “அஞ்சுகம் பிக்சர்ஸ்” என்ற பெயரில் “பிள்ளையோ பிள்ளை” (1972) படத்தை தயாரித்தபோது அதற்கான செலவு மொத்தம் 15 லட்சம்.
    பிரபலமாகாத ஒரு புதுமுகத்தை வைத்து எடுக்கும் ஒரு படத்திற்கு யார்தான் தாமாகவே முன்வந்து பண முதலீடு செய்வார்கள்..?
    இப்படத்திற்கான செலவை முன்கூட்டியே வழங்கி விநியோக உரிமையை பெற்றது கிரசெண்ட் மூவீஸ், சேது பிலிம்ஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ், ராசி அண்ட் கோ இந்த மூன்றும்தான். இந்த மூன்று நிறுவனங்களிலும் யாசீன் காக்கா அவர்கள் பங்குதாரர்களாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
    2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தான சர்ச்சையில் துபாய் ETA நிறுவனத்தின் மேலாளர் சலாஹுத்தீன் அவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்ற புகார் எழுந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா “பிள்ளையோ பிள்ளை” படம் எடுக்கப்பட்ட அந்தக் கால கதையை மறுபடியும் நினைவுபடுத்தி, சூசகமாகச் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை 2010-ஆம் ஆண்டு கோவை பொதுக்கூட்டத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.

    சர்க்காரியா கமிஷன் விசாரணையின்போது, எத்தனையோ சாட்சிகளில் யாசீன் காக்காவும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். உண்மையே பேசி பழக்கப்பட்ட யாசீன் காக்கா சர்க்காரியா கமிஷன் முன்பு வழங்கிய வாக்குமூலம் இதுதான்.
    “சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன். எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”
    அவரது இந்த வாக்குமூலம் அரசியல் வானில் ஒரு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியது. இச்செய்தி 31.03.2011 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் மாலைமலர் நாளிதழ்கள் வெளியிட்டு மீண்டும் பெரும் பரபரப்பை உண்டு பண்ணின..........SBB.........

  11. #850
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக திரை உலக சரித்திரத்தில் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் வசூல்பட பேரரசு எம்.ஜி.ஆர். அவர்களின் மிகப்பெரிய சாதனைகளின் தொகுப்புகள்....
    ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதனைகளை தமிழக திரைப்படத் துறையில் பதித்த ஒரே திரையுலக வேந்தன் பொன்மனச்செம்மல்*
    எம் .ஜி .ஆர் ஒருவர் மட்டுமே!

    போலிகெல்லாம் பல்லக்கில் வந்து சாதனையை படைத்தது என்று கொக்கரிக்கும் பொழுது.*
    மக்கள் திலகத்தின் வெற்றி காவியங்களின் சாதனையை வெளியீடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியாகும்.
    **************************************
    சென்னை நகர வரலாற்றில்
    மக்கள் திலகம் படைத்த முதன் முதல் சாதனையில் வெற்றிக் கொடி நாட்டிய. சரித்திரங்கள்....
    **************************************
    1) நகரில் நான்கு திரையரங்கில் 100 நாட்களை கடந்து முதன் முறையாக அதிக வசூலை படைத்த முன்னணி பெற்ற காவியம்*
    புரட்சி நடிகரின் மதுரை வீரன் ஆகும்.*
    திரையரங்குகள் : சித்ரா 105 நாள்,
    பிரபாத் 126 நாள்,சரஸ்வதி126 நாள் காமதேனு 105 நாள்

    2) சென்னை நகரில் ஆறு திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் காவியம் மக்கள் திலகத்தின் மகாதேவி ஆகும்.
    வெலிங்டன் 56 நாள்,*
    ஸ்ரீ கிருஷ்ணா 70 நாள்,
    உமா 56 நாள், சயானி 42 நாள்,
    ராஜகுமாரி 42 நாள், தங்கம் 35 நாள்11) சென்னை அண்ணாசாலையில் வெளியிடப்பட்ட நாடோடி மன்னன் திரைக்காவியம் ....
    பாரகன் திரையரங்கில் 133 நாட்கள் (19 வாரங்கள் ) ஒடியப்பின் தொடர்ந்து சன் திரையரங்கில் (11வாரங்கள் ) 77 நாட்கள் ஓடி தொடர்ந்து 30 வாரங்கள்*
    (210 நாட்கள்) ஓடி சாதனை பெற்ற திரைப்படமாக திகழ்ந்தது.

    12).நாடோடி மன்னன் காவியத்திற்கு பின் 1961ம்*
    ஆண்டு வெளியான திருடாதே,*
    தாய் சொல்லை தட்டாதே இரண்டு திரைப்படங்களும் பிளாசா திரையரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரே ஆண்டில் தொடர் சாதனையாகும்.

    13) சென்னை பிளாசா திரையரங்கில் தொடர்ந்து*வெளியான
    மக்கள் திலகத்தின் நான்கு திரைப்படங்கள் சாதனையின் வரிசையில்...*
    திருடாதே
    105 நாட்கள்.......
    சபாஷ் மாப்பிள்ளை
    47 நாட்கள்......
    நல்லவன் வாழ்வான்
    68 நாட்கள்.....
    தாய் சொல்லைத் தட்டாதே**
    105 நாட்கள்......
    இதில் திருடாதே,
    தாய் சொல்லை தட்டாதே 100 நாட்கள் ஓடி சாதனையாகும்.

    14) மக்கள் திலகம் பவனி வந்த அதாவது தேவர் பிலிம்ஸில் தொடர்ந்து வெளியான தாய்க்குப்பின் தாரம் தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன் சென்னை நகரில்
    100 நாட்களை கடந்து வெற்றியை பெற்றது.

    15 ) சென்னை நகரில் 1963 ஆம் ஆண்டு வெளியான பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களின் 9 திரைப்படங்கள் வெளிவந்து
    கிட்டத்தட்ட அதிகமான திரைஅரங்கில் வெளிவந்து அனைத்து திரைப்படங்களும்
    50 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
    பணத்தோட்டம்
    84 நாட்கள்
    கொடுத்து வைத்தவள்
    71 நாட்கள்
    தர்மம் தலைக்காக்கும்
    70 நாட்கள்
    கலையரசி
    50 நாட்கள்
    பெரிய இடத்துப்பெண்
    101 நாட்கள்
    ஆனந்த ஜோதி
    56 நாட்கள்
    நீதிக்குப்பின் பாசம்
    63 நாட்கள்
    காஞ்சித்தலைவன்
    56 நாட்கள்
    பரிசு
    77 நாட்கள்...

    மேலும் தொடரும்...
    உரிமைக்குரல் ராஜூ...
    3) நகரில் 3 திரையரங்குகளில் அதிக நாள் ஓடி 3 திரையரங்கு களிலும் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை ஏற்படுத்தி... மதுரை வீரன் வசூலை வென்று முதலிடம் பெற்ற காவியமாக நாடோடி மன்னன் திகழ்ந்தது.

    100 நாட்களுக்கு மேல் சாதனை புரிந்த திரையரங்குகள்*
    ஸ்ரீ கிருஷ்ணா 147 நாட்கள்,
    பாரகன் 133 நாட்கள்,*
    உமா 127 நாட்கள்.

    4)சென்னை நகரில் அதிக வசூலை பெற்ற நாடோடி மன்னன் திரைப்படத்தின் வசூலை ஏழு ஆண்டுகள் கழித்து எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் 1965 ல் வெளிவந்து முறியடித்து புதிய சாதனையை படைத்தது.

    5).சென்னை நகர மையப்பகுதியான அண்ணா சாலையில் உள்ள சித்ரா திரையரங்கில் மக்கள் திலகத்தின் நான்கு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு சாதனையாகும்.*

    அலிபாபாவும் 40 திருடர்களும்*
    92 நாட்கள்.....
    மதுரைவீரன் ...105 நாட்கள்
    தாய்க்குப்பின் தாரம்*
    119 நாட்கள்.....
    சக்கரவர்த்தி திருமகள்
    84 நாட்கள்.....
    *
    6) சென்னை காசினோ திரையரங்கில் முதன் முறையாக 100 நாள் கடந்த திரைப்படம்*
    புரட்சி நடிகரின் மலைக்கள்ளன் திரைப்படம் ஆகும்.

    7) சென்னை மிட்லண்ட் திரையரங்கில் முதன் முறையாக 100 நாள் ஓடிய காவியம்*
    மக்கள் திலகத்தின் புதுமைப்பித்தன் ஆகும்.

    8) சென்னை சத்யம் திரையரங்கில் முதல் 100 நாள் ஓடிய தமிழ் திரைப்படம் மக்கள் திலகத்தின் இதயக்கனி ஆகும்.

    9).சென்னை நகரில் நான்கு காட்சியில் நூறு நாள் ஓடிய முதல் காவியம் என்ற பெருமையை மக்கள் திலகத்தின்.....*
    நீதிக்குத்தலைவணங்கு பெற்றது.* அரங்கு : தேவிகலா 106 நாட்கள்
    அரங்கு நிறைந்த காட்சிகள் : 266*

    10) சென்னை காமதேனு திரையரங்கில் முதன் முறையாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படமாக மக்கள் திலகத்தின் மதுரை வீரன் சாதனையாகும்.......... Ur.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •