Page 53 of 210 FirstFirst ... 343515253545563103153 ... LastLast
Results 521 to 530 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #521
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மலேசியா*நாட்டில்*பல அரங்குகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ஆயிரத்தில் ஒருவன் 27/08/20 முதல் தினசரி ஒரு காட்சியில் வெளியீடு .
    ----------------------------------------------------------------------------------------------------------------

    2014ல் சென்னையில் டிஜிட்டல் வடிவில் வெளியாகி ஆல்பட் காப்ளக்சில் 190 நாட்களும் சத்யம் காம்ப்ளக்சில் 161 நாட்களும் ஓடி மகத்தான சாதனை புரிந்த*மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன்* வெற்றி பயணம்**தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தாக்கம் தீவிரம் அடையும் வரை தொடர்ந்தது .


    தற்போது மலேசியா நாட்டில் இதுவரை வெளிவராத அளவில் பழைய படங்களின் மறு வெளியீட்டில்மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க* *lfs* திரையரங்குகளில்* டிஜிட்டல் வடிவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் கீழ்கண்ட 11 அரங்குகளில் வரும் வியாழன் முதல் (27/08/20)தினசரி இரவு காட்சியில் மட்டும் (இரவு 8.30 மணி காட்சி )வெற்றி பயணத்தை தொடர உள்ளது .


    Theater* * * * * - city---------------* * * * * *------
    lfs state cinemaa* - pj*
    lfs coliseum - kl*
    lfs seri intan - kilang
    lfs capitol* *- selayaang
    lfs plaza metro - kajang*
    lfs tasek central* -* jb
    lfs skudai parade* * -jb*
    lfs seri kinta -* * * *ipoh
    lfs butterworth*
    lfs sitiawan*
    lfs sun rawang*

    விளம்பரம் செய்தி : மக்கள் ஓசை,மலேசியா* தினசரி -25/08/20

    தகவல் உதவி ;: திரு.மேகநாதன்,,*மலேசியா -செல் :+6018-397 3720

    இந்த செய்தியை வெளியிட்ட திரு.மேகநாதன்,மலேசியா* அவர்களுக்கு*தமிழ்நாட்டின்* அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு*சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்*
    Last edited by puratchi nadigar mgr; 25th August 2020 at 01:04 PM.

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #522
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1964 ஆம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை நடிகர் வீ. சி கணேசன் நடித்த திரைப்படங்களில் 7 படம் மட்டுமே நகரில் 50 நாள் ஓடியுள்ளது.
    கை கொடுத்த தெய்வம் திருவிளையாடல் , சரஸ்வதி சபதம் தில்லானா மோகனாம்பாள் சிவந்தமண், வசந்தமாளிகை தங்கப்பதக்கம் ஆகியவையாகும்.*

    அடுத்து திண்டுக்கல் விருதுநகருக்கு பிறகு பழனி நகரில் மக்கள் திலகத்தின் சாதனை காவியங்கள் இன்றுவரை முன்னணி வகிக்கிறது....

    நகரில் 100 நாட்களை கடந்து ஓடிய ஒரே திரைப்படமாக மதுரை வீரன்* திகழ்ந்துக்கொண்டு வருகிறது.* எங்க வீட்டுப் பிள்ளை 83 நாட்களும், நாடோடி மன்னன் 80 நாட்களும், மலைக்கள்ளன், குலோபகாவலி அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படங்கள்* 75 நாட்களும் ஓடியுள்ளது.*

    நகரில் மக்கள் திலகத்தின் 48 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து 2020 ஆம் ஆண்டு வரை மக்கள் திலகத்தின் காவியமே சாதனையில் முன்னணியாக திகழ்கின்றது.

    நடிகர் வீ.சி கணேசனின் சில படங்கள் மட்டுமே 50 நாட்கள் ஓடியுள்ளது. அதில் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் தில்லான மோகனம்பாள் சிவந்தமண், வசந்தமாளிகை தங்கப் பதக்கம் ஆகியவை ஆகும்.

    அடுத்து மதுரை ஏரியாவில்* முக்கிய நகரான காரைக்குடி நகரில் மக்கள் திலகத்தின் காவியங்கள்.... அதிகமாக*
    50 நாட்களும், எழுபத்தி ஐந்து நாட்களும் ஒடி மகத்தான வரலாற்றை படைத்துள்ளது. நகரில் அதிக நாள் ஓடிய திரைப்படங்கள் மதுரைவீரன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் 75 நாட்களை கடந்து இன்று வரை சாதனையாகும். மக்கள் திலகத்தின்*
    38 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து வெற்றி பெற்றுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் சில படங்கள் மட்டுமே 50 நாட்கள் திருவிளையாடல், வசந்த மாளிகை 2 படம் மட்டுமே 50 நாட்கள்..........

  5. #523
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ராம்நாட் என்று சொல்லக்கூடிய இந்நகரில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களை தவிர மற்ற நடிகர்களின் சாதனைகளை ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.* அடிமைப்பெண் சண்முகா திரையரங்கில் 84 நாட்கள் ஓடி ஒரு அசுர சாதனையை படைத்தது. அதேபோல் நாடோடி மன்னன் மதுரை வீரன் 75 நாட்கள் ஓடியது இத்திரைப்படம் மகத்தான வெற்றியாகும்....
    நகரில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் கிட்டத்தட்ட 22 திரைப்படங்கள் 50 நாட்கள் கடந்து ஒடி உள்ளது.*
    ஆனால் நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1977 வரை எந்த படமும் 50 நாள் கிடையாது.

    தேனி நகரில் மக்கள் திலகமே சாதனையில் முன்னணி.*
    நாடோடி மன்னன்*
    மதுரைவீரன் திரைப்படங்கள்*
    70 நாட்களும்.... அதன் பின்பு 12 ஆண்டுகள் கழித்து வெளிவந்த மாட்டுக்கார வேலன் திரைக்காவியம் லட்சுமி டூரிங் தியேட்டரில் 70 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. மற்றும் மக்கள் திலகத்தின் 12 திரைப்படங்கள் தேனி மாநகரில் 50 நாட்களைக் கடந்து ஓடி உள்ளது. வேறு எந்த நடிகரின் படமும் 1977 வரை 50 நாட்கள் ஒரு படம் கூட கிடையாது..

    ராஜபாளையம் நகரில் மக்கள் திலகத்தின் திரைப்பட வரிசையில் 18 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்து ஓடிய உள்ளது.*
    அலிபாபா, நாடோடி மன்னன், மதுரைவீரன் மலைக்கள்ளன் திருடாதே, எங்க வீட்டுப் பிள்ளை, மாட்டுக்கார வேலன், குடியிருந்த கோயில், என் அண்ணன், நம் நாடு, நல்ல நேரம், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள் 50 நாட்களை கடந்துள்ளது.
    வேறு எந்த நடிகரின் திரைப்படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை. நடிகர் சிவாஜி கணேசனின் சவாலே சமாளி படம் மட்டும் 44 நாட்கள் ஒட்டப்பட்டது மிகப் பெரிய போராட்டத்திற்கு இடையில்.............

  6. #524
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கம்பம் நகரில் மக்கள் திலகத்தின் மதுரை வீரன் திரை காவியம் தான் முதன் முறையாக 100 நாட்கள் ஓடியது. நகரில் மக்கள் திலகத்தின் 7 திரைப்படங்கள் 50 நாட்களை கடந்துள்ளது.வேறு எந்த நடிகருக்கும் சாதனை என்ற பேச்சுக்கு இடமில்லை.

    பரமக்குடி நகரில் புரட்சி நடிகரின் மகத்தான காவியமான மதுரைவீரன் 105 நாட்கள் ஓடி முதன் முறையாக 100 நாட்கள் ஒடிய சாதனையாகும்.*
    நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன்* மாட்டுக்கார வேலன், உரிமைகுரல் 50 நாட்கள் ஒடியுள்ளது.

    சிவகாசி நகரில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன்*
    75 நாட்களும், மதுரைவீரன் 63 நாட்களும் ஓடி உள்ளது. அதன் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 50 நாட்களை கடந்து வீறுநடை போட்டு உள்ளது.*
    உரிமை குரல் திரைப்படம் 43 நாட்கள் ஓடி நகரில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாகும்.

    போடி நகரில் பொன்மனச் செம்மலின் மதுரை வீரன் திரை காவியம் 100 நாள் ஓடிய ஒரே சாதனை காவியமாக இன்று வரை திகழ்கிறது.*
    நாடோடி மன்னன்,அலிபாபா எங்கவிட்டுபிள்ளை,*
    ஒளிவிளக்கு, நம் நாடு, நல்ல நேரம், திரைப்படங்கள் 50 நாட்கள் ஓடி சாதனையை பெற்றுள்ளது.*

    அருப்புக்கோட்டை மாநகரில் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் அலிபாபா திரைப்படங்கள் அதிக நாள் அதாவது 70 நாட்கள் ஓடி சாதனை ஆகும். 7 திரைப்படங்கள் இங்கு 50 நாட்கள் ஓடியுள்ளது. எங்க வீட்டுப் பிள்ளை,*
    ஆயிரத்தில் ஒருவன், மதுரைவீரன் குலேபகாவலி, உலகம் சுற்றும் வாலிபன், மாட்டுக்கார வேலன் ஆகியவையாகும். வேறு எந்த நடிகருக்கும் 50 நாள் கிடையாது.*

    சிவகங்கை நகரில் நாடோடி மன்னன், மதுரைவீரன் திரைப்படத்திற்குப் பின் 12 ஆண்டுகள் கழித்து 50 நாள் ஓடிய ஒரே திரைப்படம் நம் நாடு ஆகும் அதன் பிறகு நல்லநேரம் திரைப்படம் 44 நாட்கள் ஓடியது.* வேறு எந்த நடிகரின் படமும் எங்கு இரண்டு வாரம் தாக்குப் பிடிப்பதே ரொம்பவும் கஷ்டமாகும்..........

  7. #525
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் 50 நாள்* ஒடிய திரைப்படம் நாடோடி மன்னன் மட்டுமே.... அதன் பின்பு அடிமைப்பெண், நம் நாடு, உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்கள்*
    5 வாரங்களை கடந்து வெற்றி நடைபோட்டு உள்ளது. வேறு எந்த நடிகரின் படமும் பத்து நாட்கள் ஓடுவது இங்கு கஷ்ட காலம் ஆகும்.

    வத்தலகுண்டு நகரில் மக்கள் திலகத்தின் காவியங்களில் பல சாதனைகள் புரிந்து உள்ளது
    நாடோடி மன்னன் திரைக்காவியம் 50 நாட்களும், மதுரை வீரன் திரைப்படம் 50 நாட்களும் அதன் பின்பு எங்க வீட்டு பிள்ளை, உரிமைக்குரல்* திரைப்படங்கள்**
    40 நாட்களும் ஒடி நகரில் வேறு எந்த படமும் ஒரு வாரம் இரண்டு வாரம் கூட தாக்குப்பிடிக்காது.*

    பெரியகுளம் ரஹீம் அரங்கில்
    மதுரைவீரன் நாடோடி மன்னன் எங்கவீட்டுப்பிள்ளை* 50 நாட்கள் ஒடி சாதனையாகும்.

    மதுரை ஏரியா இன்னும் பல ஊர்களை கொண்டது....
    அங்கெல்லாம் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே சாதனையாகும்.

    மதுரையை தவிர சி.கணேசனின் படங்களின் நிலவரம் உட்பட ஏனைய நடிகர்கள் நடித்து வெளியான படங்களின் வசூல், ஓட்டம் மட்டமானதாகும்..... நீயூ சினிமாவை வைத்து டிக்கட் கிழித்து தன் படங்களை மட்டமாக ஒட்டியது கேவலமாக இன்று வரை உள்ளது....

    தொடரும் பதிவுகள்..............

  8. #526
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கதாநாயகனாக
    மக்கள் திலகம் வலம் வந்த 115 திரைப்படங்களில்
    முதல் வெற்றியை அனைத்து ஏரியாவிலும் பெற்றக்காவியங்கள்.....
    ராஜகுமாரி
    மந்திரி குமாரி
    மர்மயோகி
    சர்வாதிகாரி
    மலைக்கள்ளன்
    குலேபகாவலி
    அலிபாபாவும் 40 திருடர்களூம்
    மதுரை வீரன்
    தாய்க்குப்பின் தாரம்
    சக்கரவர்த்தி திருமகள்
    புதுமைப்பித்தன்
    நாடோடி மன்னன்
    திருடாதே
    தாய்சொல்லைத் தட்டாதே
    தாயைக்காத்த தனயன்
    பெரிய இடத்துப்பெண்
    பணக்கார குடும்பம்
    எங்கவீட்டுப்பிள்ளை
    ஆயிரத்தில் ஒருவன்
    அன்பேவா
    காவல்காரன்
    குடியிருந்த கோயில்
    ஒளிவிளக்கு
    அடிமைப்பெண்
    நம்நாடு
    மாட்டுக்கார வேலன்
    என்அண்ணன்
    ரிக்க்ஷாக்காரன்
    நல்லநேரம்
    உலகம் சுற்றும் வாலிபன்
    நேற்று இன்று நாளை
    உரிமைக்குரல்
    இதயக்கனி
    பல்லாண்டு வாழ்க
    நீதிக்குத்தலைவணங்கு
    மீனவ நண்பன்.
    இப்படங்கள் முதல் வெளியீட்டில்
    40 அரங்குகளுக்கு மேல் தமிழகத்தில் திரையிடப்பட்டுள்ளது.
    இதில் பெரும்பாலான திரைப்படங்கள்
    35 முதல் 40 திரையரங்குகளில்
    முதல் சுற்றில்
    50 நாட்களை கடந்து சாதனையாகும்.

    குறிப்பாக...
    மலைக்கள்ளன்
    குலேபகாவலி
    அலிபாபா
    மதுரைவீரன்
    தாய்குப்பின் தாரம்
    சக்கரவர்த்தி திருமகள்
    புதுமைப்பித்தன்
    நாடோடி மன்னன்
    திருடாதே
    எங்க வீட்டுப்பிள்ளை
    ஆயிரத்தில் ஒருவன்
    அடிமைப்பெண்
    நம்நாடு
    மாட்டுக்கார வேலன்
    என் அண்ணன்
    ரிக்ஷாக்காரன்
    நல்லநேரம்
    உலகம் சு.வாலிபன்
    உரிமைக்குரல்
    இதயக்கனி
    மீனவ நண்பன்

    தமிழகத்தில் திரையிட்ட 38,40,42,44 திரையரங்குகளில்
    50 நாட்களை கடந்து சாதனையாகும்.
    இதுப்போல் ஒரு சாதனைகள்....
    எந்த நடிகருக்கும்
    கிடையாது.....

    நடிகர் சி.கணேசனுக்கு
    மனோகரா
    கட்டபொம்மன்
    பாகபிரிவினை மட்டுமே....

    நடிகர் ஜெமினி
    வஞ்சிக். வாலிபன்
    கணவனே கண் கண்ட தெய்வம்
    கல்யாணபரிசு

    2020 வரை மக்கள் திலகத்திற்கே அதிக திரைப்படங்களின் வெற்றியாகும்.... இச்சாதனையாகும்....
    அடுத்த இரண்டாவது ரவுண்டிலும் மக்கள் திலகமே முன்னனி ஆவார்..........

  9. #527
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*03/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    மறைந்தும் மறையாத மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் எத்தனையோ படங்களில், நகரங்களில், ஊர்களில் ,விழாக்களில், வெற்றி கண்ட நாயகனின்*சாதனை தொடர் சகாப்தம் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது .* நாம் ஒவ்வொரு நாளும் ஒரு படிப்பினையை, பாடத்தை வாழ்க்கையில்* தெரிந்து வைத்து வருகிறோம்*


    நான் சென்னையில் சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றி வரும் சமயம்*அ .தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தான் முதன்முதலாக எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்தேன் .அன்று மாலையே அரசு பொது மருத்துவமனையில் வெள்ளை உடை அணிந்த செவிலியர்* இருபுறமும்**ரோஜாபூக்களை தூவி வர ,நடுவில் தலை குனிந்தவாறு, இருகரம் கூப்பி வணங்கியபடியே ,தங்கநிறம் கொண்ட திரையுலகின் தலைமகன் அழகாக நடந்துவந்த காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது .


    அன்பே வா திரைப்படத்தில் அறிமுக காட்சியில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து புத்துணர்ச்சியுடன், அழகுற இறங்கி வருவார் . முக்கிய விருந்தினர்கள்,நண்பர்கள்,பத்திரிக்கை நிருபர்கள், பொதுமக்கள் மாலைகள், பூச்செண்டுகளுடன் விமான நிலையத்தில் குவிந்து இருப்பார்கள் . கோடி மாலைகள் தாங்கியவை* எம்.ஜி.ஆரின் தோள்கள்* இந்த காட்சியிலும் ஏராளமான மாலைகள் சூட, அவற்றை ஒவ்வொன்றாக கழற்றியவாறே ,நிருபர்களுக்கு பேட்டியும் அளித்து வருவார் . அதில் களைப்போ, அசதியோ , சோர்வோ தெரியாத வகையில் மிகவும் சுறுசுறுப்பாக அந்த காட்சியில் நடித்திருப்பார் . பொதுவாக 24 மணி நேரத்தில் சுமார் 12 மணி நேரம் படப்பிடிப்பில், வீட்டில், பொது நிகழ்ச்சிகளில், கட்சி பொது கூட்டங்களில் அவருக்கு மாலைகள் விழுந்து கொண்டே இருக்கும் .அதனால்தான் கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் என்று*குறிப்பிடப்படுகிறார் . இப்போது எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தால் எப்படி பேட்டி அளித்திருப்பார் என்பதற்கு கற்பனையாக திரு.துரை பாரதி நிருபரை போல* சில கேள்விகள்**கேட்க* அதற்கு எம்.ஜி.ஆர். பதில் அளித்த விதம் பின்வருமாறு*
    கேள்வி ;தமிழ்நாட்டில் தற்பொது பெருகியுள்ள கல்லூரிகளின்* கல்வி தந்தையரை பற்றி என்ன சொல்கிறீர்கள் ?* * *பதில் : முழுக்க முழுக்க வியாபாரம்*
    கேள்வி : தமிழகத்தின் அடுத்த பொது தேர்தலில் இ .பி.எஸ்./ ஓ.பி.எஸ். அணியினர் இடையே முதல்வர் பதவி குறித்து போட்டி நிலவுகிறதே அது பற்றி*பதில்: அது என்னை கேட்க வேண்டிய கேள்வி அல்ல ,அங்கே என்று வானில்*ஆண்டவனிடம்கேள்வி :அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் தேர்வு பெற வாய்ப்புண்டா ?பதில்:* .தர்மசங்கடமான கேள்வி. இப்படியெல்லாம் கேட்கக்கூடாது .
    இப்படியான வாழ்க்கையில் வரும்* பல கேள்விகளுக்கு தன் திரைப்படங்களில் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் மூலம் தகுந்த பதில் அளித்திருக்கிறார் .**குறிப்பாக இன்றைக்கு நீங்கள் கேட்டால்கூட நெகிழ்ந்து போகிற ஒரு கேள்வி , நீங்கள் யார், எதற்காக வருத்தப்படுகிறீர்கள் ,எதற்க்காக மகிழ்ச்சி அடைகிறீர்கள்*என்று* அடுக்கு அடுக்காக*கேட்டால்கூட தகுந்த பதில் அளித்திருப்பார்***

    ஒவ்வொரு படத்திலும்* கருத்துக்களாக பதிந்து வைத்துள்ளார் .இன்றைக்கும்*அந்த பாடல்கள், படங்கள்*ஏழை மக்களின்*நம்பிக்கை நட்சத்திரமாக*ஏன் பலருக்கு*வாழ்க்கையின் ஒளிவிளக்காகவே தெரிந்து கொண்டிருக்கிறது .சத்யபாமா அம்மையாருக்கு ஐந்தாவது குழந்தையாக எம்.ஜி.ஆர். அவர்கள்* பிறந்ததற்கு பின்னால் ,சந்தர்ப்ப சூழ்நிலை*,தந்தையாரின் மறைவு ,பொருளாதார*பிரச்னை*ஆகிய காரணங்களால் குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடியதோடு*,வீழ்ச்சியை*நோக்கி சென்றது .அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த எம்.ஜி.ஆர். அவர்கள் இப்படிப்பட்ட இந்த தமிழகத்தையே ஆளுகின்ற மன்னனாக*திகழ்ந்தார் என்றால் அவருக்கு*நேர்ந்த*எத்தனை அவமானங்கள் , தோல்விகள் ,தடைகள் ,பிரச்னைகள் ,சிக்கல்கள் எப்படியெல்லாம் வந்திருக்கும் ..இவற்றையெல்லாம் கடந்து* அவர் வெற்றி எனும்*சிகரத்தை அடைந்தார்***என்பது*ஒரு படிப்பினை ,பாடம் அல்லவா*அவர்தானே*நமக்கு முன்னோடியாக திகழும் ஒரு பல்கலை*கழகம் .ஒவ்வொரு நாளும்*அவர் வாழ்வதற்கான அர்த்தமிழந்த நாட்களாக*கழிந்து*கொண்டேயிருந்தது .தனது*இளமை பருவத்தில் அழகு, திறமை எல்லாம் இருந்தும்கூட பட வாய்ப்புகளுக்காக ஒவ்வொரு ஸ்டுடியோவிற்கும் அலைந்து*இளமை பருவத்தின்*பெரும்பகுதியை கழிக்க வேண்டியதாயிற்று .முதல் படத்தில்*போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம், மற்ற படங்களில் துணை தளபதி போன்ற சிறு*வேடங்களில் நடித்தும்*கூட*சுமார்*11 ஆண்டுகள்*கதாநாயகன் வேடத்திற்கு காக்க*வேண்டியதாயிற்று .அவருடைய முகம் எந்த சுவரொட்டியிலாவது இடம் பெறாதா, டைட்டிலில் முன்வரிசையில் தன் பெயர் இடம் பெறுவது*எப்போது என்று அவர் துடித்த*துடிப்பானது*ஏழு வயதில்*இருந்தே*ஆரம்பித்தது .* படிப்பதற்கு வசதியில்லை .,நல்ல பள்ளியில்*சேர்ந்து*படிக்க பணம் செலவழிக்க வழியில்லை . பட்டினியை*வெல்வதற்கும் முடியவில்லை*இப்படியொரு வாழ்க்கை நிலையில்*இருந்துதான்*நாடக*உலகத்தில் நடிக்க தள்ளப்படுகிறார் .*


    தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றுவது எப்படி என்று* நீங்கள் நூலகத்தில்*பெரிய புத்தகங்களை படிக்க தேவையில்லை . எம்.ஜி.ஆர். எனும்*வாழ்க்கை சரித்திரத்தை புரட்டினாலே போதும் .ஏனென்றால் அப்படி அவர் வாழ்ந்து காட்டியுள்ளார் .படிப்பதற்கு வழியில்லை. பட்டினியில்*இருந்து மீள முடியவில்லை . தந்தையை*இழந்து*தாய் நிர்கதியாக*குடும்ப வருமானத்தை எதிர்பார்த்து*காத்து*கொண்டிருக்கும் சமயம்*,ஏதாவது வீட்டு வேலைக்கு சென்றால் தான் குழந்தைகளுக்கு உணவளிக்கவாவது முடியும் .இப்படிப்பட்ட மிகவும் கஷ்டமான குடும்ப சூழ்நிலையில் நடிப்புஎன்பது அவர் தானாக* விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்தது*அல்ல. இயற்கையாகவே திணிக்கப்பட்டது .ஒருவருக்கு*எதை*நீங்கள் பாரமாக*தலையில்*சுமத்துகிறீர்களோ, அதையே*வாழ்க்கையில்*வெற்றிபடிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு சிறந்த உதாரணம் .நாடக மேடையில்*பாடவேண்டும், நடிக்க வேண்டும் ஆட*வேண்டும் .என்று* நிர்பந்திக்கப்பட்டபோது ,பசியையும், வறுமையையும் வெல்வதற்காக* அவர்* பல படிப்பினைகளை கற்று கொண்டார்*அதுவே*அவருக்கு*நாட்டை ஆளக்கூடிய*சிம்மாசனத்தை தந்தது என்றால்*ஒருபோதும், பிரச்னைகள், கஷ்டங்களுக்காக வாழ்க்கையில்*பயந்துவிடாமல்*எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்ள*முயலவேண்டும்*என்பதற்கு எம்.ஜி.ஆர். ஒரு சிறந்த*உதாரணம் .*மற்றவை*அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*



    நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். பேசும் காட்சி*- சங்கே முழங்கு*

    2.வெற்றிமீது வெற்றி வந்து* என்னை சேரும்*- தேடிவந்த மாப்பிள்ளை*

    3.சின்னப்பயலே,சின்னப்பயலே- அரசிளங்குமரி*

    4.எங்கே, என் இன்பம் எங்கே ,என் இதயம் எங்கே -நாடோடி மன்னன்*

    5.கண்ணை*நம்பாதே உன்னை ஏமாற்றும்*-நினைத்ததை முடிப்பவன்*

    6.உன்னை அறிந்தால்*-வேட்டைக்காரன்*

    7.நினைத்ததை நடத்தியே முடிப்பவன்*- நம் நாடு*



    1.

  10. #528
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*05/08/20 அன்று சொன்ன*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த அதிசயங்கள் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் மலைக்குகையில் கிடைக்கும் புதையல் போல ,ஜீபூம்பா விளக்கை தேய்த்தால் தோன்றும் அற்புதங்கள் போல , எம்.ஜி.ஆர் என்கிற ரகசிய புதையல், அற்புத புதையல், மானிட குலம் எப்படி வாழ வேண்டும் . எப்படி வாழ்ந்தால் எப்படி ஜெயிக்கலாம் என்பதற்கு தன்னம்பிக்கை விதை எம்.ஜி.ஆர். என்கிற வரலாறு*


    அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் நடித்திருந்தார் . ஒரு காட்சியில் அவர் கோழிக்கறி சாப்பிடுவது போல இருந்தது .ஆனால் அவர் சுத்த சைவம் . கோழிக்கறி கொண்டுவந்து வைத்தாகிவிட்டது. ஆனால் அதை தொடவோ ,பார்க்கவோ அவருக்கு பிடிக்காது என்பதால் ,மசாலா கோழியை போல தோற்றமுள்ள சைவ கேக்கை எம்.ஜி.ஆரின் வேண்டுகோளின்படி ஏ.வி.எம்.நிறுவனத்தினர் தயார் செய்தனர் . .அதற்காக ஒருநாள் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது .இதுகுறித்து எம்.ஜி.ஆர். பேசியதாவது, ஒரு காலத்தில் அவர் கதாநாயகனாக நடித்தபோது அவர் பெயருக்கு முன்னால்* என் பெயரை சொல்லவே தயங்கியவர் .அப்படி ஒரு இக்கட்டான நிலைமை .குறிப்பாக ஒரு மனிதனின் குணம், தாய்,மொழி,மதம் ,தெய்வம் போன்றவற்றில் யாரும்* கருத்து சொல்வதோ, அல்லது மாற்று கருத்தை திணிப்பதோ கூடவே கூடாது என்கிற மிக உன்னதமான கொள்கையை எம்.ஜி.ஆர். கொண்டிருந்தார் என்பதற்கு உதாரணம் கோழியின் தோற்றத்தை போலவே சைவ கேக் ,நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனுக்கு செய்துதர உதவினார் என்பதுதான் .


    ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் முகத்தை பார்த்து, அலங்கரிக்கப்பட்ட உலோகம் ,குதிரை முகம் ,ராசியில்லாதவர், முதல் படமான சாயாவில் கதாநாயகனாக நடித்து வெளிவரவில்லை என்பது போல கிண்டல்களும்* கேலிகளும்* அந்த கால இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் போன்ற சிலர்*பரிகாசாம் செய்தனர் .* ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வராகி கோட்டையில் இருந்தபோது அதே பழைய இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன்* ஊட்டியில் தனக்கு இருந்த ஒரு சொத்து பிரச்னைக்காக அவரை சந்தித்து முறையிட்டார் . எம்.ஜி.ஆர். பழைய நிகழ்ச்சிகள் , தன்னை பரிகாசம், கிண்டல், கேலி செய்தது எதை பற்றியும் ஆலோசிக்காமல் அவருடைய பிரச்னையை உடனடியாக தீர்த்து வைத்தார் என்பது வரலாறு .அதற்கு இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் கண்ணீர்* பெருக்குடன் நன்றி தெரிவித்துக்கொண்டார் ..அதுதான் எம்.ஜி.ஆரின் சிறந்த குணம் .எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் சேர்ந்து , கட்சி கொள்கைகளை திரைப்படங்களில் பரப்புவதையும்,அதை மக்கள் அளித்த வரவேற்பையும் அறிந்த, உணர்ந்த பேரறிஞர் அண்ணா உன் முகத்தை காட்டு ,கட்சிக்காக லட்சக்கணக்கில் ஒட்டு விழும் ,என்று பேசினார் என்றால் அவரை பார்ப்பதற்காக, அவர் குரலை கேட்பதற்காக லட்சோப லட்சம் மக்கள் விடிய விடிய காத்திருந்தார்கள் என்று* சொல்வார்களே அப்படியான முகம்தான் ஆரம்ப காலங்களில் பரிகாசம் செய்யப்பட்டது .திரையிலே காட்டுவதற்கு கூட யோசித்தார்கள் .கதாநாயகன் ஆனபின்பு கூட மந்திரி குமாரி படத்தில் தாடையில் குழி உள்ளதை சரிசெய்ய சிறிய தாடி ஒன்று* இயக்குனர் எல்லீ ஸ் ஆர். டங்கனால்* ஒட்டப்பட்டது . ஆனால் பிற்காலத்தில் அந்த தாடையில் உள்ள குழிதான் அவர் முகத்திற்கு அழகு சேர்த்தது .இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவர் வெகு சுலபமாக வெற்றி எனும் சிகரத்தை அடைந்துவிடவில்லை .படிப்படியாக வெற்றிக்கான படிகளை அமைத்து முன்னேறினார் . தனக்கு எதிர்ப்பட்ட தோல்விகள், அவமானங்கள் ,பரிகாசங்கள் ஆகியவற்றை துச்சமாக எண்ணி, எதிர்நீச்சல் போட்டு,கூடுதல் அக்கறையுடன் கவனமாக செயல்பட்டு சிகரத்தை அடைந்து வாழ்ந்து காட்டிதன்னை எதிர்த்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார் எம்.ஜி.ஆர்.*


    உலகின் தலைசிறந்த நடிகர்களாக மார்லன் பிராண்டோ, ஏரால்* பிளைன்*போன்றவர்கள் இருந்தார்கள் .தமிழ் திரையுலகில் கூட சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள் என்று எம்.ஜி.ஆர். பேசியுள்ளார் .ஆனால் உலகத்திலேயே தான் இட்ட கட்டளையை தயாரிப்பாளர்கள் திரையுலகில் செயல்படுத்த வேண்டும் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்தான் . மார்லன் பிராண்டோவுக்கு அவரது படங்களுக்கு* முதல் தயாரிப்பாளர் எம்.ஜி.எம். நிறுவனம் என்றால் இரண்டாவது தயாரிப்பாளர் அவரே என்று அந்த காலத்தில்* ஒப்பந்தம் போடுவார்களாம்*அதாவது இதுதான் பட்ஜெட், நடிகர், நடிகர்களுக்கான சம்பளம் , இத்தனை நாட்களுக்குள் முடிக்கவேண்டும்* ஆனால் எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில்*நிரந்தர கதாநாயகன் ஆன பிறகு அவர்தான் முதல் தயாரிப்பாளர் . பட நிறுவனத்தார் இரண்டாவது தயாரிப்பாளர் .அது மட்டுமல்ல. ஒவ்வொரு படத்தின் ஒப்பந்த பத்திரத்தின் பின்னால் , இந்த படத்தின் கதையில், வசனங்களில், காட்சிகளில், பாடல்களில் ஏதேனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் அதை மாற்றக்கூடிய உரிமை எனக்குள்ளது என்ற நிபந்தனையுடன்*கையெழுத்திடுவாராம் .எந்த திரையுலகத்தில் சிலரால் பரிகாசம் செய்யப்பட்டாரோ ,அதே திரையுலகின் லகானை லாவகமாக பிடித்து தன்* கைவசம் வைத்து சவாரி செய்து வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர்*


    பல துறைகளில் வெற்றி பெற்றவர்கள் ஊடக துறையில் தோல்வி அடைந்துள்ளார்கள்* பல ஊடக துறை ஜாம்பவான்கள் கூட திரைத்துறையில் ,அரசியல் துறையில்*தோல்வி அடைந்துள்ளனர் .ஆக யார் எப்படி எந்த துறையில் வெற்றி பெறுவார்கள், தோல்வியுறுவார்கள் என்று கணிக்கமுடியாத பட்சத்தில்தான் தொட்ட ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்றதோடு, உச்சத்தை அடைந்தவர்தான் எம்.ஜி.ஆர். என்பதற்கு ஒரு வாழ்ந்து மறைந்த சாட்சி, நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிற சாட்சி, அவருடைய* அந்த சாட்சியை நமது வாழ்க்கை* துணையாக வைத்து**வழி நடப்போம், வென்று காட்டுவோம் .மற்றவை அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .......

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------
    1.ஏன் என்ற கேள்வி, கேட்காமல் வாழ்க்கை இல்லை -ஆயிரத்தில் ஒருவன்*

    2.முகத்தை பார்த்ததில்லை - அரச கட்டளை*

    3.கட்டான கட்டழகு கண்ணா - குடும்ப தலைவன்*

    4.மந்திரி குமாரி படத்தில் வசனம் பேசும் எம்.ஜி.ஆர்.

    5.தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*

    6.அச்சம் என்பது மடமையடா* - மன்னாதி மன்னன்*

  11. Likes orodizli liked this post
  12. #529
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு திரை விமர்சகர்கள் கட்டுரையாளர்கள் , நடு நிலையாளர்கள் , ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் என்று அவரவர்களின் தரத்துக்கு ஏற்ப பதிவுகள் செய்தார்கள் .
    மக்களும் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் வந்தார்கள் .
    எம்ஜியாருக்கு நடிக்க தெரியாது
    எம்ஜியாருக்கு அழ தெரியாது
    எம்ஜியாருக்கு சோக காட்சியில் நடிக்க தெரியாது ... என்று ஒரு பக்கம் .....
    1950 முதல் 1960 வரை வந்த படங்களில்
    மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மருதநாட்டு இளவரசி - என்தங்கை - பணக்காரி - மலைக்கள்ளன் -குலேபகாவலி - அலிபாபவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் - தாய்க்கு பின் தாரம் - மகாதேவி - புதுமைபித்தன் - ராஜராஜன் - சக்ரவர்த்தி திருமகள் - நாடோடிமன்னன் - மன்னாதி மன்னன் படங்களில்
    எம்ஜியாரை ஒரு
    சரித்திர நாயகனாக
    வீரத்தின் திருமகனாக
    சாகச நாயகனாக
    கொள்கை வேந்தனாக
    நடிக பேரசராக
    கட்டழகு வேந்தனாக
    மக்கள் திலகத்தை
    தமிழ் சினிமாவும் - ரசிகர்களும் - பொது மக்களும் -பத்திரிகை உலகமும் ஏற்று கொண்டு அவரை
    புரட்சி நடிகர்
    வசூல் சக்கரவர்த்தி
    பாரத் எம்ஜியார்
    என்று பின்னாளில் 1961-1977 வரை அவர் உண்டாகிய
    திரையுலக சாதனைகள் மூலம் உலகளவு புகழ் நடிகரானார் .
    இது வரலாறு .
    ஒரு நடிகரின் சாதனையோ - நடிப்பையோ ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் - பெருந்தன்மை பலரிடம் இல்லை .
    மிகவும் படித்தவர்கள் - உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் - ஒரு சிலர் இன்றும் எம்ஜியாரின் வெற்றியினை ஜீரணிக்க முடியாத நிலையில் அவரை இன்னும் தரமற்ற முறையிலும் , கவிதையிலும் மறைமுகமாக தாக்கினாலும் எங்கள் எம்ஜியார் உங்களை மன்னித்து விடுவார் .
    இனைய தளத்திலும் ஒரு சிலர்'' எதிர் முகம் '' - ''அரிதாரம் ''-- கொடுமை - என்று மறைமுக பதிவுகள் மூலம் அவர்களது தராதாரத்தை வெளிப்படுத்தி வருவது வியப்பல்ல .
    மக்கள் திலகத்தின் மீது அன்புள்ளம் கொண்ட பல நடிகர்திலக நண்பர்கள் மிகவும் பெருந்தன்மையாக - நட்பு ரீதியாக - இங்கு பதிவிடுவது வரவேற்க தக்கது .
    என்னதான் மேலைநாட்டு நடிகர்களோடு ஒப்பிட்டாலும் -ஓராயிரம் வரிகளில் புகழ்ந்தாலும்
    சிலவரிகளில் ......
    மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகம்
    உலகமெங்கும் வாழும் -வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களின் இதயக்கனி .
    சூரியன் - சந்திரன் - எம்ஜியார்.........

  13. #530
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்.
    பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

    அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

    ‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.

    இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

    எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

    படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.

    தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

    அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

    தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.

    கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

    எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.

    ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

    துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

    தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.

    ‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

    தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

    திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

    எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...
    .........
    courtesy -கோவி.லெனின்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •