Page 99 of 210 FirstFirst ... 4989979899100101109149199 ... LastLast
Results 981 to 990 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #981
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...

    இன்று அக்டோபர் 10

    1972ஆம் ஆண்டு அக்டோப*ர் 10 ஆம் தேதியான இன்றுதான் மக்கள் திலகத்தை திமுக*விலிருந்து நீக்கினார் க*ருணாநிதி. திமுக அமைச்ச*ர்க*ளும், செய*ற்குழு, பொதுக்குழு உறுப்பின*ர்க*ளும் த*ங்க*ள*து சொத்து க*ணக்கை மக்களிட*ம் ப*கிர*ங்க*மாக* வெளியிட* வேண்டும் என்று கேட்ட*த*ற்காக* இந்த* ந*ட*வ*டிக்கை.

    ஆனால், உண்மையான கார*ணம் க*ட்சியை த*ன் முழுக்க*ட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், த*ன*து வாரிசுக*ளின் அர*சிய*ல் எதிர்கால*த்திற்கு எம்ஜிஆர் முட்டுக்க*ட்டையாக இருந்துவிட*க் கூடாது என்ற* க*ருணாநிதியின் சுய*ந*லமே ஆகும்......

    திமுகவிற்கு தலைவரின் கடைசி கும்பிடு....

    என்.வேலாயுதன்
    திருவனந்தபுரம்..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #982
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    48-ஆண்டுகளுக்கு முன்பு திரு.கருணாநிதி செய்த ஒரு வரலாற்று பிழை.. புரட்சித்தலைவரை திமுகவை விட்டு நீக்கியது..

    அந்த பொன்னான நாள் இன்றுதான்...

    ஆம்... அது 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி..

    திமுகவின் பொதுக்குழு கூடி நயவஞ்சகமாக நமது புரட்சித்தலைவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தது..

    சொடக்கு போட்டு முடிப்பதற்குள், எண்ணி 7-ஆவது நாள் #அதிமுக என்ற தனி இயக்கம் கருவாகி உருவானது...

    'இந்த நடிகனின் கூட்டம் நாடாளுமா?' என்று எகத்தாள பார்வை பார்த்த திரு.கருணாநிதிக்கு, அன்று தமிழகம் முழுவதும் எழுந்த எம்ஜியாருக்கான எழுச்சி பார்த்து பதட்டம் ஏற்பட்டது..

    இயக்கம் தொடங்கப்பட்ட 1972 அக்டோபர் 17-ஆம் தேதியிலிருந்து 215-ஆவது நாளில், அதாவது 1973 மே 20-ஆம் தேதி நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 'இரட்டை இலை' என்ற சுயோச்சை சின்னத்தில் நின்று, திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி முதல் வெற்றியை சுவைத்தது நமது இயக்கம்...

    அந்த வெற்றி திமுகவுக்குள் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. 'தப்பு செய்துவிட்டோமோ?' கலங்கிப்போனார் கருணாநிதி...

    அன்று தொடங்கிய திமுகவின் வீழ்ச்சி.. இன்று வரையிலும் தொடர்கிறது..*

    நம் இயக்கதை குறைத்து மதிபிட்டவிட்டதின் பலனை இன்றளவும் அவர்கள் அறுவடை செய்து கொண்டே இருக்கிறார்கள்..

    அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட #திமுக, இன்று #அஇஅதிமுக வின் அடிமட்ட தொண்டனின் ஒவ்வொறு அரசியல் அசைவையும் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது..

    2021-சட்டமன்ற தேர்தலிலும் அவர்களுக்கு தேல்வியை பரிசளித்து, வெற்றிக்கனியை பறித்து #புரட்சித்தலைவர் மற்றும் #அம்மா அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க களமாடுவோமாக..

    ஆயுத்தமாவோம்.... அணி திரள்வோம்... வெற்றி ஒன்றே நமது குறிக்கோள்........ Albert Paul...

  4. #983
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    8.10.1972 அன்று எம்.ஜி.ஆர் பேசிய அந்தப்பேச்சின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான் திராவிட இயக்கத்தில் அ.தி.மு.க என்ற புதிய கட்சி உதயமானது. அரசியலில் அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள் அரங்கேறின. தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்தப்பேச்சு இதுதான்....

    “திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ என்ன என்ன பேச வைத்தார்களோ அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்துவைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே, அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன்.

    ‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!

    உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்துக்கு உரியவர்கள்!

    முன்பொருமுறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும். தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்துக்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள்தான் தி.மு.க-வுக்கு வழிகாட்டி, காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது.

    அப்போதும் இதே மதுரை முத்து, தூக்கி எறிவோம் என்று சொன்னார். தூக்கி எறிந்தது பழக்கம்! ஆனால், யாரை என்றே தெரியவில்லை.
    கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன். அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக்கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாதவாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும்.

    கடைசியாக பணத்தோட்டம் என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்தபிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்துக்கு வந்தவன்.
    கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன்.

    ஒரு சமயம், கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரயில்கள் கவிழ்க்கப்பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ? என்னவோ? ஆனால், நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன். இந்தியத்துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம்தான் தீர்மானிக்கவேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன்.

    இப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்தபிறகு அண்ணாவின் கொள்கைதான் நாட்டுக்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்துக்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்துகொண்டபோது நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாள்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
    நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா?

    கழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?
    திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம், யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கல், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?

    ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு!

    இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.

    மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம்.

    நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம். 15-ம் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன்......... Samuel...

  5. #984
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு முழுமையாக நீக்கப்பட்ட நாள் அக்டோபர் 14 தான். தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடங்கிய நாள் அக்டோபர் 14. ஆம், 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதிதான் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். முழுமையாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். திமுக பொதுக்குழு அக்டோபர் 14 அன்று கூடி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கி தீர்மானம் போட்டது.

    எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானத்தை நாவலர் நெடுஞ்செழியன் கொண்டு வர, அதை முதலில் திமுக செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து திமுக பொதுக்குழு கூடி நிறைவேற்றியதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்ட நாள் இன்று.
    திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் தமிழகமே கொந்தளித்தது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், அவருடைய ஆதரவாளர்களாக இருந்த திமுகவினரும் பெருவாரியாக திரண்டு வந்து எம்.ஜி.ஆர். பின் நின்றனர். திமுக உடைந்தது.. அதிமுக பிறந்தது.
    எம்.ஜி.ஆர். விவகாரம் குறித்து மறைந்த கவியரசு கண்ணதாசன் தான் எழுதிய "நான் பார்த்த அரசியல்" என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். அதிலிருந்து...
    என்னய்யா செய்யலாம்?
    என்னய்யா செய்யலாம்?
    கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் (கருணாநிதி - எம்.ஜி.ஆர்) தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து , 'என்னய்யா செய்யலாம்' என்று கேட்டார்.
    கணக்குத்தானே கேட்கிறார்..
    கணக்குத்தானே கேட்கிறார்..
    'சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்து விடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்னசெய்வார் என்று பார்க்கலாம்,'என்று நான் சொன்னேன்

    ஒரேயடியாக ஒழித்து விட வேண்டியதுதான்
    ஒரேயடியாக ஒழித்து விட வேண்டியதுதான்
    செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, 'இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியது தான்' என்று சொன்னார். நான் சொன்னேன், 'சில மக்கள் பின்னணி இருக்குமே' என்று.
    பத்துப் பேர் கத்துவான்.. பார்த்துக்கலாம்
    பத்துப் பேர் கத்துவான்.. பார்த்துக்கலாம்
    'என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்' என்றார். மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ' அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார். 'தெரியுமா விஷயம்?' என்று கேட்டார். 'என்ன?' என்றார். 'தெரியாது' என்றேன். 'எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்' என்றார். 'இருக்காதே' என்றேன். 'இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது' என்றார். இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
    கேள்விப்பட்டாயா?
    கேள்விப்பட்டாயா?
    அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது. கருணாநிதி பேசினார்: 'முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்ப ட்டாயா?' என்றார். 'உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா' என்றேன். 'என்ன நினைக்கிறாய்?' என்றார். 'கொஞ்சம் கலகம் இருக்குமே' என்றேன். 'பார்த்துக் கொள்ளலாம்'என்றார் அவர். 'என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்' என்றார்.
    போட்ட கணக்கு தப்பாயிற்று
    போட்ட கணக்கு தப்பாயிற்று
    ஆனால் அவர் போட்ட கணக்கு தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன். 1971 பொதுத் தேர்தலே சான்று. அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
    தலைவரானார் எம்.ஜி.ஆர்.
    தலைவரானார் எம்.ஜி.ஆர்.
    1970 - 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போது மே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டுவிடக் கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டுவிடக்கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
    வலுக்கட்டாயமாக தலைவராக்கியவர் கருணாநிதி
    வலுக்கட்டாயமாக தலைவராக்கியவர் கருணாநிதி
    ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
    அற்புதமான திமுக தொண்டர்கள்
    அற்புதமான திமுக தொண்டர்கள்
    எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள். கட்டுப்பாடற்ற, முறையாக செயல்திட்டமற்ற தொண்டர்கள்தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம் .ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
    2வது முறையாக ஏற்பட்ட கொந்தளிப்பு
    2வது முறையாக ஏற்பட்ட கொந்தளிப்பு
    அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும் .இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற் பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி. ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
    பெரும் கிளர்ச்சி
    பெரும் கிளர்ச்சி
    இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள். சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள்வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கைவண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
    அதிமுகவைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம்
    அதிமுகவைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம்
    ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி. ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்து விட்டது.

    சாதாரண பிரியம் இல்லை
    சாதாரண பிரியம் இல்லை
    அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை' என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிரயாணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை. அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
    நிலைமையே வேறாக மாறியிருக்கும்
    நிலைமையே வேறாக மாறியிருக்கும்
    கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அது தான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
    ஓங்கி வளர்ந்த அதிமுக
    ஓங்கி வளர்ந்த அதிமுக
    அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன். மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
    கெட்டிக்கார தலைவர்
    கெட்டிக்கார தலைவர்
    விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
    பிரித்தலும் பேணிக் கொளலும்
    பிரித்தலும் பேணிக் கொளலும்
    'பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு'
    - என்றும் அவர் காட்டினார். அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழை ய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார் கண்ணதாசன்.
    அந்த பரபரப்புத் தீர்மானம்
    அந்த பரபரப்புத் தீர்மானம்
    திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்படுவது தொடர்பான திமுக தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. அது இதுதான்... 'தி.மு.க.,செயற்குழு. எவ்வளவோ வாய்ப்பளித்தும், எம்.ஜி.ஆர்.,அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. கழக பொதுச்செயலாளர் நாவலர் அவர்களால் எம்.ஜி.ஆர்.,மீது கழக சட்ட திட்ட விதியின்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்த செயற்குழு ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானத்தை பொதுக்குழுவிற்கு பரிந்துரை செய்கிறது என்பதே அந்த தீர்மானம்.
    ஒருமித்த முடிவு
    ஒருமித்த முடிவு
    எம்.ஜி.ஆரை நீக்குவது தொடர்பான தீர்மானம் திமுக பொதுக்குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் மொத்தம் உள்ள 310 பேரில் 277 பேர் கலந்து கொண்டனர். மற்றவர்கள் வராததற்குக் காரணம், அவர்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் என்பது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே நீக்கத்தை ஆதரித்துப் பேசினர், வாக்களித்தனர்.
    அக்டோபர் 14ல் நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.
    அக்டோபர் 14ல் நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.
    இதையடுத்து 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கூட்டப்பட்ட அந்த பொதுக்குழுவில், இன்று முதல் எம்.ஜி.ஆர்., திமு.கவை விட்டு முற்றிலும் நீக்கப்பட்டு விட்டார். இனி சமரசத்திற்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது தி.மு.க.,பொதுக்குழு. இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும், நான் தி.மு.கவிலிருந்து விலகிவிட்டேன். இரண்டொரு நாளில் புதிய அமைப்பு ஒன்றை துவங்குவேன் என்று அறிவித்தார்.
    தமிழக அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட மறக்க முடியாத நாள் அக்டோபர் 8,10 மற்றும் 14.......Sml ...

  6. #985
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் எம்ஜிஆரது வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி, எம்ஜிஆர் உட்கட்சி விவகாரங்களை பகிரங்கமாகப் பேசி விளக்கம் கேட்டார் என்ற காரணத்தை முன் வைத்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி எம்ஜிஆரை திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கினார். தொடர்ந்து வந்த நாட்களில் அதே ஆண்டு, அக்டோபர் 14 ஆம் நாள் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அந்த சமயத்தில் தான் எம்.ஜி.ஆர் நீக்கத்தை கண்டித்து கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்ய கோரி 2 பேருந்துக்களுக்கு சென்னையில் தீ வைக்கப்பட்டது. அதன் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், தீ வைக்கப்பட்ட இடம் வழியாக சென்ற நடிகை சௌக்கார் ஜானகியின் கார் மீது கல் வீசப்பட்டது. இச்செய்திகளை கேட்ட அரசு உடனே கைதானவர்களை எல்லாம் விடுவித்தது. 20.10.1972ம் ஆண்டு அண்ணா திமுகவை ‘ஒட்டு காங்கிரஸ்’ என்று விமர்சித்தார் திமுக தலைவர் கருணாநிதி. மத்திய மந்திரி வருகை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, இது மத்திய அரசின் தூண்டுதலின் பெயரில் நடந்துள்ளது என்றும், அண்ணா திமுக என்பது ஒட்டு காங்கிரஸ் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எம்.ஜி.ஆரோ, அண்ணா திமுக ஒட்டு காங்கிரஸ் இல்லை என்றும், அண்ணா திமுக என்பது தனித்து செயல்படும் கட்சி என்று விளக்கம் அளித்தார்.



    புதிய கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் ராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (M.L.C.) பதவியும் அளித்தார். இக்கட்சி பின்னர் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படித்தான் அக்டோபர் 17, 1972-இல் அதிமுகவுக்குத் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

    21.10.1972ம் ஆண்டு திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். அதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ துரைராஜ். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனான அவர் தொகுதி மக்களுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தியதற்கு பின்பு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள தயாரானார். இந்த சூழலில் திமுகவினர் கட்சி தாவுவதை எதிர்த்து திமுகவினரே பேருந்துக்களை கொளுத்தி, தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கோரிக்கை வைக்க, புலன் விசாரனை நடப்பதாக மத்திய அமைச்சர் ஒருவர் தமிழக அரசிடம் கேட்ட கேள்விக்கு ஐஜி அருள் பதில் அளித்தார்.

    அதன் பிறகு சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் அதிமுகவின் தொடக்கம் பற்றியும், அதிமுகவின் வருங்காலம் பற்றியும் எம்.ஜி.ஆர் பேசினார். ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இக்கூட்டத்தில் திமுகவில் இருந்து விலகி, காளிமுத்து, முனுஆதி, துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

    இது எல்லாம் நடந்துக்கொண்டிருக்க, மெல்ல மெல்ல அதிமுக வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருந்தது. 1973ம் ஆண்டு திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மரணமடைந்தார். அதன் பிறகு அத்தொகுதிக்கு மே 20ம் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியாக காத்திருந்தது. திமுகவுக்கு எதிராகக் களம் இறங்கியதால் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிட திமுக அரசு தடையாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதிமுக காணும் முதல் தேர்தல் அது தான். அதிமுக சார்பில், தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார். மே 11ம் தேதி, உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட எம்.ஜி.ஆர் முடிவு செய்து போஸ்டர்களை ஒட்ட உத்தரவிட்டார்.

    ஆனால் அப்போது அப்படத்திற்கு மட்டும் போஸ்டர்கள் மீதான வரியை சென்னை மாநகராட்சி மூலம் திமுக அரசு உயர்த்த, சென்னையை தவிர்த்து இதர நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. திண்டுக்கல் தேர்தலோ மே 20, படம் வெளியீடு மே 11. இரண்டுக்கும் 9 நாட்கள் தான் வித்தியாசம். பிரமாண்டமான செலவில் எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தை எம்.ஜி.ஆரே இயக்கியும், தயாரித்தும் வெளியிட்டார். மே 11ம் தேதி திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் அதிக அளவில் கூட்டம். எம்.ஜி.ஆரோ, தேவி தியேட்டரில் தன் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைக் கண்டுகளித்தார்.
    இது எல்லாம் ஒரு பக்கம் நடக்க ஜேப்பியார் அவர்கள், திண்டுக்கல் தொகுதி தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரிடம் 20 கோடி ரூபாயை அளித்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற அமைச்சர்கள் அனைவரும் களம் இறக்கப்பட்டனர். முதலமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தார். எம்.ஜி.ஆரோ அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்...........Sml...

  7. #986
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரலாற்றில் ஒரு திரைப்படம் காவியம் அரசியலுடன் பின்னி பிணைந்தது என்றால் "உலகம் சுற்றும் வாலிபன்" தான் அ.தி.மு.க. வைத் தொடங்கிய நேரத்தில், புரட்சித்தலைவர் தாமே நடித்து, இயக்கி, தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’படம் வெளியிடப்பட வேண்டிய நிலையில் இருந்தது. உடனே அந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டனர்.அதிகார வலிமை பெற்ற சிலர், அந்தப் படத்திற்கு விநியோக உரிமை பெற்றிருந்தனர் விநியோகஸ்தர்களையெல்லாம் சந்தித்து மிரட்டினார்கள். ”படம் வேண்டாம். கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என கேட்கும்படி விநியோகஸதர்களை வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் காலமாய்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். படங்களை வாங்கி விநியோகித்ததன் மூலமே பெரும் பணம் சம்பாதித்தவர்கள், அந்த விநியோகஸ்தர்கள்,அந்த உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து புரட்சித் தலைவரை நெருக்கடிக்குள்ளாக்கமறுத்துவிட்டனர்.பட விநியோகஸ்தர்களை மிரட்டிப் பணியவைக்க முடியவில்லை என்றதும் அவர்களது கவனம், திரையரங்குகளின் மேல் திரும்பியது. திரையரங்குளின் உரிமையாளர்களை அழைத்து, சட்டம், ஒழுங்கு மற்றும் திரையரங்குப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டிப் புரட்சித் தலைவரின் படத்தைத் திரையிட மறுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், லட்சம் லட்சமாய் வசூலை வாரித்தரும் எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிடாதிருக்க முடியாது எனத் திரையரங்க உரிமயாளர்கள் மறுத்துவிட்டனர். சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே அந்த வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தனர். அவர்களுள் பலர் அதிகாரத்திற்கு அஞ்சித் தாங்கள் செய்த காரியத்தைச்சொல்லி புரட்சித் தலைவரிடமும் மன்னிப்புக் கோரினார்கள்!
    பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் எம்.ஜி.ஆர். படத்தைப் புறக்கணிக்கச் சம்மதிக்கவில்லை என்றதும் அவர்களை வேறு வகையில் மிரட்டத் தொடங்கினார்கள்.”எம்.ஜி.ஆர் படம் திரையிடப்பட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம்! திரையைக் கிழிப்போம்! படச்சுருளைப் பஸ்பமாக்குவோம்!” என்றெல்லாம் மிரட்டினார்கள்; கடிதம் எழுதினார்கள்; சிலர் அறிக்கை விடும் அளவுக்குத் துணிந்தார்கள்!
    திரையரங்க உரிமையாளர்களுள் பலர் இந்த இரண்டாவது வகை மிரட்டலைக்கண்டு உண்மையிலேயே அஞ்சி நடுங்கினார்கள். பல லட்சம் ரூபாயைக் கடன் வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்குகள் கொளுத்தப்படும் என்னும் மிரட்டல் அவர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், முன்னணித் திரையரங்க உரிமையாளர் பலர் ஏற்கெனவே வாக்களித்தபடி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் திரையிடத் தயங்கினார்கள்., பின் வாங்கினார்கள்.ஆனால், புரட்சித் தலைவர் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கோ, திரையரங்க உரிமையாளர்களின் பின் வாங்கலுக்கோ சற்றும் அஞ்சவில்லை. துணிந்து தம்முடைய படத்தை வெளியிட்டார்.தமிழகம் முழுதும் போஸ்டர்கள் ஓட்ட தடைவிதித்தார் கருணாநிதி அனாலும் தலைவர் சளைக்காமல் தினமும் வெளியாகும் நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரமாக தினமும் விளம்பர படுத்தினார் தமிழகம் முழுவதிலும் ஒரே நாளில் வெளியிட்டார். அந்தப் படம் திரையிடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் வெற்றிகரமாய் ஓடியது! எந்த விதமான பெரிய விளம்பரமும் இல்லாமலே தாய்மார்களின் கூட்டம் படத்தைக் காண அலைமோதியது; இளைஞர்கள் கூட்டமோ மீண்டும் மீண்டும் அதே படத்தைப் பல முறை கண்டுகளித்தது. எனவே பல்வேறு திரையரங்குகளில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது! மேலும் சில திரையரங்குகளில் 31 வாரம் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது!!......இப்பொழுதும் வசூல் புரட்சி நடத்திக்கொண்டேயிருக்கிறது... Sml...

  8. #987
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது சிவாஜி ரசிகர்கள் நிறைய பேர் அதென்ன ஸ்டெச்சர், வடக்கயிறு என்றெல்லாம் கேட்கிறார்கள்.
    அதனால் அதைப்பற்றி சற்று விளக்கமாக சொல்கிறேன். சிவாஜி ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
    ஆனால் மற்றவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா. உதாரணமாக சிவாஜி நடித்த "கர்ணன்" படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் "கர்ணனு"க்குத்தான் ஓடி முடிய வார வசூலை அவர்களே கொடுத்திருக்கிறார்கள்.

    அதை பார்க்கும் போது எந்த வாரத்திலிருந்து வடக்கயிறை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அந்த சார்ட்டை பார்த்தால் நமக்கே புரியும். ஒரு வெற்றிப் படமென்றால்
    குறைந்த பட்சம் 4 வாரங்களுக்கு வசூலில் எந்த மாற்றமும் இருக்காது.
    மதுரையை போன்ற ஊரில் நல்ல வெற்றிப் படமென்றால் 100 காட்சிகள் தொடர்ந்து hf ஆகியிருக்கும். அதனால் 5 வாரம் வரை வசூல் ஒரே மாதிரி இருக்க வாய்ப்புண்டு.

    ஆனால் "கர்ணன்" முதல் வார வசூல் ரூ46000. என்று வரும் போது 2 வது வாரத்தில் குறைந்த பட்சம் ரூ 40000 மாவது வரவேண்டும். ஆனால் வந்ததோ ரூ31000. இரண்டாவது வாரத்திலேயே படம் விழுந்து விட்டது.
    மூன்றாவது வாரத்தில் பாருங்கள் ரூ
    19000 வசூல். முதல் வாரத்துக்கும் மூன்றாவது வாரத்துக்கும் ரூ 27000 வசூல் வித்தியாசம்.
    மிகக் குறைந்த வசூல். தங்கம் தியேட்டரில் முதல் வாரம் பொங்கல் வாரம். எக்ஸ்டிரா காட்சிகள் நிறைய நடந்திருக்கும் பட்சத்தில் வசூல் ரூ 50000 தாண்டி வந்திருக்க வேண்டும்.

    ஆனால் "கர்ணன்"
    முதல் வாரத்திலேயே வாயை பிளந்து விட்டார். மூன்றாவது வாரத்தில் கும்பகர்ண தூக்கத்துக்குபோய்விட்டார். அதனால் 50 நாட்கள் வரை தாஜா பண்ணி நடத்தியே சென்றிருக்கிறார்கள். 50 நாட்கள் தாண்டியவுடன் இது ஒப்பேறாது என்று தெரிந்தவுடன் தேரில் வடக்கயிறு கட்டி இழுத்த மாதிரி சிவாஜி ரசிகர்கள் தங்களது ஜீ பூம்பா வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

    தங்கத்தை பொறுத்தவரை வாரத்துக்கு ரூ7500 மினிமம் வந்தாக வேண்டும். இல்லையென்றால் படத்தை தூக்கி விடுவார்கள். "கர்ணன்", கும்பகர்ணனின் பெயரில் பாதி அல்லவா. நல்லா குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தவுடன் அவசரமாக ஸ்டெச்சரை வரவழைத்து "கர்ணனை" தூக்கி மீதி 50 நாட்களுக்கு மேல் சுமந்தார்கள். வர வர வெயிட் தாங்க முடியாததால் வடக்கயிறு கொண்டு வந்து இழுத்து கரை சேர்த்தார்கள்.

    சுமார் 7 வாரங்கள் மினிமம் வாடகையை தியேட்டருக்கு செலுத்தி. விட்டு வருகின்ற வசூலுடன் மேலும் டிக்கட் கிழித்து ஓட்டின்ர்கள். அதுதான் ரூ 3000 திலிருந்து 5000 வரை காண்பிக்க முடிந்தது. ஒருபடம் ஒருவாரத்தில் மினிமம் வசூலை எட்டிவிட்டால் அடுத்தவாரமே பணால் ஆகிவிடும்.
    ஆனால் "கர்ணனோ" 50 நாட்கள் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டே சென்றிருக்கிருக்கிறான்.. இப்போது வெகுஜன ரசிகர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது மதுரை தங்கத்தில்.

    சென்னை சாந்தி பிரபாத் சயானியில் 100 நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பெரிய வடக்கயிறு கொண்டு வந்து 100 நாட்கள் ஓட்டினார்கள். சாந்தியில் மிகக்குறைந்த வசூலாக 100 நாட்களில் 2,10,000 தான் வசூலாகியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் சாந்தி தியேட்டர் வசூலை முன்னிலை படுத்துபவர்கள் "கர்ணன்" விஷயத்தில் கன்ளத்தனமாக மறைத்து விட்டார்கள். மூன்று திரையரங்கும் சேர்த்து மொத்தம் 5 லட்சம்தான் வசூல். அதுவும் கடைசி 2வாரங்களில் ஒரு காட்சிக்கு 100 ரூ கூட வசூல் ஆகவில்லை என்பதிலிருந்து சாந்தி தியேட்டரின் இழுவை சக்தி மற்ற தியேட்டரை விட பல மடங்கு அதிகம் என்று புரிகிறதா.
    "சந்திரமுகி"யை 800 நாட்கள் ஆளே இல்லாமல் ஓட்டி சாந்தியை பலான தியேட்டர் ஆக்கிய கதை அனைவரும் அறிந்ததே.

    "கர்ணன்" மறு வெளியீடு 2012 ல் வெளியான போது ஸ்கூல் பிள்ளைகளை இம்சை படுத்தி தினசரி ஒரு ஸ்கூல் வீதம் அழைத்து சென்று டிக்கெட்டை இவர்களே எடுத்து கொடுமை படுத்தியதை அனைவரும் அறிவர். அந்த பிளைைகள் சிவாஜியின் கத்தலை பார்த்து பயந்து போய் சிறிது காலம் கழித்துதான் நார்மலுக்கு வந்ததாக தாய்மார்கள் கூறியதை நாம் புறந்தள்ள முடியாது. 50 நாட்கள் கூட ஓட தகுதியற்ற படத்தை 150 நாட்கள் சிறுவர்களிடம் பிச்சை எடுத்து ஓட்டியது சமூக வரம்பு மீறிய செயலாகும்.

    இது போல அந்த காலத்தில் "கட்டபொம்மனை"யும் "க.ஓ.தமிழனை"யும் இம்சை படுத்தி குழந்தைகளை வற்புறுத்தி வாங்கிய பணத்தை வசூல் கணக்கில் சேர்த்தும் படத்திற்கு லாபம் வராதது சோகமே. என்னையும் ஏமாற்றி படம் பார்க்க வைத்து பணம் பெற்று வசூல் கணக்கில் சேர்த்தார்கள். ஆனால் "வேட்டைக்காரன்" தொட்டதோ சுமார் 8 லட்சம் .. "கர்ணன்" 50 நாட்கள் ஓட்டியது 15 திரையரங்குகள்தான். அதற்கு காரணம் 1964 பிப் 27 அன்று வெளிவந்த "காதலிக்க நேரமில்லை" என்ற மெகா ஹிட் படம்தான். இவர்கள் வடக்கயிறு போட்டு இழுத்த சுமார் 15 திரையரங்குகளை கபளீகரம் செய்து விட்டது. ஐயனின் கைபிள்ளை ஒன்று "கர்ணன்" தயாரிப்பு செலவு 18 லட்சம் என்றும் வசூல் 58.5 லட்சம் என்றும் லாபம் 12 லட்சம் என்றும் ஆதாரமில்லாமல் மோசடியாக கதறி நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டது.

    ஏற்கனவே ஆரம்பகால வசூலை "வேட்டைக்காரன்" வேட்டையாடி விட்டான். ஆக 40 லட்சத்துக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட பந்துலுவின் "கர்ணன்" (ஆதாரங்கள் இணைக்கப் பட்டுள்ளது) மொத்த வசூல் 20 லட்சத்துக்குள் முடங்கி சுவற்றில் அடித்த பந்து போல திரும்பி பந்துலுவின் கைகளில் தஞ்சமடைந்து விட்டான். இதுதான் "கர்ணனி"ன் உண்மைக் கதை. "கர்ணனா"ல் பந்துலுவின் கடன் சுமார் 30 லட்சம் வரை உயர்ந்தது. அது இன்றைய மதிப்புக்கு சுமார் 90 கோடி. இந்த மதிப்பும் நம் கணிப்பு அல்ல. ஐயக்குஞ்சு ஒன்று "சிவந்த மண்" காலத்தை ஒட்டி கணித்தது. அதுவும் 69 ல் வெளியான "சிவந்த மண்ணு"க்கு இப்போது செய்தி போட்டார்களாம். இதுதான் ஐயனின் கைபிள்ளை ஒன்று ஆடிய கபட நாடகக் .கதை. இது "கர்ணன்" காலம். அதே ஐயனின் கைபிள்ளையிடம் மதிப்பை கேட்டு தெரிந்து கொள்ளலாம்..
    "கப்பலோட்டிய தமிழனி"ல் 7 லட்சம் கடன் ஆனதை அவரே ஒத்துக்கொண்டு பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம்.

    இது "கர்ணனு"க்கு மட்டும் நடந்த கதையல்ல. எங்கெல்லாம் சிவாஜி படங்கள் ஒரு தியேட்டர் 2 தியேட்டரில் 100 நாட்கள் ஓடியிருக்கிறதோ அங்கெல்லாம் சிவாஜி ரசிகர்களின் கை சிவந்து இருக்கும். "கர்ணனை" போல் கொடுத்து சிவந்த கரமல்ல. வடக்கயிறு போட்டு இழுத்து சிவந்த கரங்கள்.
    "ராஜபார்ட் ரங்கதுரை" நாகர்கோவிலில் மறுவெளியீடு திரையிட்டு 60 நாட்கள் வரை 1 காட்சி ஓட்டினார்கள். அதையும் பல நாள் படம் பார்க்க ஒரு ஆள் கூட வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

    ஆனாலும் தொடர்ந்து ஓடியமாதிரி வால்போஸ்டர் ஒட்டி ஆனந்தப்படுகின்றனர். எம்ஜிஆர் மீதுள்ள துவேஷம் அவர்களை மனநோயாளி ஆக்கிவிட்டது என்றே நினைக்கிறேன். படத்திற்கு 1 லட்சம் வாங்கும் சில்லரை நடிகர் சிவாஜி 10 லட்சத்துக்கும் அதிகம் வாங்கும் செல்வாக்கு உள்ள தலைவரை எப்படி வசூலில் மிஞ்ச முடியும். A v m செட்டியார் "உயர்ந்த மனிதனு"க்காக கொடுத்த 1 லட்சத்துக்கு மேல் கேட்ட ரூ25000 கூட தர மறுத்து அவர் மார்க்கெட் என்னவென்று எங்களுக்கு தெரியும், இதற்கு மேல் காசு தர முடியாது என்று கறாராக சொல்லி விரட்டியது கணேசன் ரசிகர்கள் அறிந்ததுதானே.

    மார்க்கெட் வேல்யூ என்று இருக்கிறதல்லவா?. அது கணேசன் ரசிகர்களுக்கு புரியவில்லையா?. இதே "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை கவனித்துப் பாருங்கள். கடைசி வரை ஸ்டெடியாக பயணப்பட்டிருக்கும். .31வது வாரம் கூட ரூ 12000 வசூலாகி இருக்கிறது. "கர்ணன்" மட்டுமல்ல "மோ சு பிள்ளை" "ரா எ ராமனடி"
    "என் மகன்" இது போன்ற. பல சிவாஜி படங்கள் அத்தனையும் இந்த கேஸ்தான்.

    100 நாட்கள் மதுரையில் ஓடினால் குறைந்த பட்சம் ரூ 2 லட்சம் வசூலாக வேண்டும். இல்லையென்றால்
    அது தோல்விப்படம்தான் என்பதை சிவாஜி ரசிகர்களே உணருங்கள். மீண்டும் மக்கள் திலகத்துடன் மோத வேண்டாம். சிறு நடிகனுடன் கம்பேர் பண்ண எங்களுக்கு கேவலமாக இருக்கிறது. அதனால் தேங்காய் சீனிவாசன்,நாகேஷ்,சுருளி, இதுபோன்ற உங்களுக்கு இணையான நடிகனுடன் மோதிக் கொள்ளுங்கள்..........ksr.........

  9. #988
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*06/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு திரைப்படத்தில் அழுது நடித்தார் என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தகுந்த வசூல் இன்றி அழுவார் என்று அர்த்தம் . சில படங்கள் விதிவிலக்கு .ஏனென்றால் அவர் அழுது நடிக்கும் காட்சிகளை பெரும்பாலும் அவரது ரசிகர்கள் ,பொதுமக்கள் விரும்புவதில்லை .சிரித்து நடிப்பது ,வீர சாகசங்கள் செய்வது போன்ற காட்சிகளைத்தான் ரசித்து பார்த்தனர் .ஒவ்வொரு படங்களிலும் எப்படி ஒவ்வொரு பக்தரும் தாங்கள் விருப்பப்பட்ட கடவுளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்து பார்க்க ஆசைப்படுவார்களோ , அப்படிதான் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் ஒரு தயாரிப்பாளர் என்பவர் தங்கள் அபிமான கடவுளாக பார்க்கப்படும் நடிகரை பல்வேறு ஆடை, அணிகலன்கள் மூலமாக அலங்கரித்து நடிக்க வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள் .அதன்படியே பிறகு வந்த படங்களான ராமன் தேடிய சீதை, நேற்று இன்று நாளை , நினைத்ததை முடிப்பவன் , இதயக்கனி ,உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களில் அவரது ஆடைகள், அணிகலன்கள் ,கழுத்தில் கட்டும் ஸ்கார்ப் ,தலையில் அணியும் விதவிதமான தொப்பிகள் , கை மணிக்கட்டுகளில் கட்டும்* துணி போன்றவை மிக பிரபலமாக அந்த காலத்தில் பேசப்பட்டது .ஏனென்றால் வட நாட்டில், அந்தக்கால கட்டத்தில் இந்தி நடிகர்கள் தேவ் ஆனந்த் ,தர்மேந்திரா போன்ற நடிகர்களின் படங்களை விட எம்.ஜி.ஆர். படங்கள்தான் ஷோ ரூம்களில் அதிகம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது வரலாற்று சாதனை .


    ரஷ்யாவில் புரட்சி காலத்தில் ,பிரபல அரசியல்* தலைவர் லெனின் மரத்தின் மீது*அமர்ந்து ஒளிந்து இருக்கிறார் . ராணுவம் அவரை தேடி கொண்டிருக்கிறது .அந்த சமயம் லெனின் என்ன திட்டமிட்டார் தெரியுமா* நாம் ஆட்சி அமைத்தால் இந்த ராணுவத்தை எப்படி நடத்துவது .மக்களுக்கு நன்மை செய்யும்படி திட்டங்கள் வகுக்க வேண்டும் .என்று யோசித்தாராம் . அப்படி ஒவ்வொரு நொடியும் எதையாவது இந்த மக்களுக்கு செய்ய வேண்டும் என்று யோசித்தவர் எம்.ஜி.ஆர்.*உதாரணமாக யானை கவுனி பகுதியில் அந்த காலத்தில் வாடகை வீட்டில் வசித்தவர் வால் டாக்ஸ் சாலையில் சில சமயம் நடந்திருக்கிறார் .வால் டாக்ஸ் சாலை என்றால்* சுவருக்கு வரி விதிப்பது .என்று புரிந்து கொண்டு இப்படியும் ஒரு வரி விதித்தார்களா என்று யோசித்து ,அதை நாடோடி மன்னன் படத்திலே வரி கொடுமைகளை பற்றி விமர்சிப்பது போல வசனங்கள் ,காட்சிகள் அமைத்தார் .எனவே தான் பார்க்கின்ற விஷயங்களை எல்லாம் மனதில் பதித்து ,ஒரு சிந்தனை சிற்பியாக திகழ்ந்தார் .அதனால்தான் இந்த தமிழ்நாட்டின் முதல்வராக மலர்ந்தார் .சாதாரணமாக வந்துவிடவில்லை . அவருடைய வறுமையிலும் அவருடைய சிந்தனை திறன் என்பது இங்குள்ள மற்ற பெரிய பட்டதாரிகள், பெரிய படிப்பாளிகள் ,பெரிய அறிவாளிகள், பெரிய மெத்த படித்தவர்களுக்கு எல்லாம் இல்லாத சிந்தனை மக்களை நேசிப்பது , மக்களுடன் வாழ்வது ,மக்களுக்கு உதவுவது , மக்களுக்காக சிந்திப்பது ,என்று தன்னுடைய வாழ்க்கையின் துணையோடு*.செயல்பட்டதால் ,அவருடைய வாழ்க்கை என்பது ஒரு வரலாறு, ஒரு பாடம், ஒரு பல்கலை கழகமாக இருக்கிறது .*


    திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி :1954ல் கூண்டுக்கிளி என்கிற படம்* எம்.ஜி.ஆர்.அவர்களும் ,சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம் . அந்த படத்தின் இயக்குனர் ராமண்ணா எம்.ஜி.ஆர். அவர்களிடம் ஒரு காட்சியில் நீங்கள் புகைபிடிப்பது போல் நடிக்க வேண்டியிருக்கும் என்கிறார் .அப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்புகள் வந்து* கொண்டிருந்த நேரம் .என்னால் நேரடியாக முடியாது என்று மறுக்க முடியாத ஒரு சூழ்நிலை .எனக்குத்தான் புகை பிடித்து பழக்கமில்லை . பிடிக்கவும் தெரியாது .நீங்கள் இப்படி சொல்கிறீர்களே என்றார்* எம்.ஜி.ஆர். பதிலுக்கு இயக்குனர் புகை பிடிக்க தெரியவில்லை என்றால் என்ன, சிகரெட்டை பற்ற வைத்து ஒரு தடவை பிடித்து இழுத்து புகை விட்டால் போகிறது .அது ஒரு பெரிய விஷயமில்லை .என்கிறார் . விவரம் தெரியாமல் அந்த செயலை செய்யும்போது உடல் ரீதியாக ஏதாவது பாதிப்பு வந்தால் என்ன செய்வது என்றுவேண்டுமென்றே* அதை தவிர்ப்பதற்காக,மறுப்பதற்காக* எம்.ஜி.ஆர். சொல்கிறார் .*இந்த செயலை நான் செய்வதால் ,திரையில் இந்த காட்சியை பார்ப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரே புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு என்ன ,நாமும் புகை பிடித்தால் என்ன என்று இளைஞர்கள்**யோசித்து ,புகை பிடிக்க ஆரம்பித்தால்* இளைய சமுதாயம் கேட்டு சீரழிவதற்கு நாமே வழிகாட்டுவது போலாகும் .இந்த தவறான உணர்வுகள் வருவதற்கு நாமே காரணமாக இருந்துவிட கூடாது .என்ன செய்வது .வேறு மாற்றுவழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். அப்போது இயக்குனர் சிகரெட்டை பற்ற வைத்த* பின்னர் வாயருகே கொண்டுபோகும் போது* *அந்த காட்சி ரத்தாகும் .பின்னர் மீண்டும் கையில் வைத்திருப்பது , புகை மட்டும் சில நொடிகள் வந்துகொண்டிருக்கும் அப்போது மனசோர்வு ஏற்படும் காட்சியில் அதை தூக்கி எறிந்துவிடுவது .இந்த காட்சியில்தான் கூண்டுக்கிளியில் எம்.ஜி.ஆர். சிகரெட்டை வேண்டாவெறுப்பாக பயன்படுத்திய காட்சியை படமாக்கினார்கள் .



    குடியிருந்த கோயில் படத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். சிகரெட் பிடிப்பது போல* காட்சி அமைக்க இயக்குனர் திட்டமிட்டார் .* எம்.ஜி.ஆர். திட்டவட்டமாக மறுத்துவிட்டார் . அந்த காட்சியை குற்றவாளி எம்.ஜி.ஆர். சென்னையில் பல இடங்களில் போலீசாரிடம் இருந்து தப்பித்து காரில் செல்வது போல கையில் சிகரெட் வைத்திருந்து பயணிப்பது போல மாற்றி அமைத்தார்கள் . பிற்காலங்களில் அந்த மாதிரி காட்சிகள் அமைப்பதையும் தவிர்த்துவிட்டார் ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்னது போல இயக்குனர் ஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆர்.சொன்ன அந்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது .மற்றவர்கள் எல்லாம் பொழுது போக்கிற்க்காக சினிமாவில் நடிப்பார்கள்.* இந்த எம்.ஜி.ராமச்சந்திரன் பொழுதுபோக்கிற்காக நடிக்காமல் மற்றவர்களுக்கு* பாடமாக இருப்பதற்காக பொறுப்புணர்வோடு நடிக்கிறேன்**ஆகவே உங்கள் படத்தில் இப்படிப்பட்ட காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வந்தவர்தான் எம்.ஜி.ஆர். அவரிடத்தில் ,பொது மக்கள், இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது .**


    திரு.துரை பாரதி*: தக்க சமயத்தில் அவர் ஒரு குருவாக, துணையாக*,ஒரு வழி காட்டியாக கூடவே இருந்தார் .திடீரென*நம்மை*விட்டு பிரிந்து சென்றது ,மறைந்தது*அனைவருக்குமே மிகவும் துரதிர்ஷ்டம் .அவர் மட்டும் நம்மிடையே இருந்திருந்தால் என்று பல நேரங்களில் நினைத்திருப்போம் அல்லவா ,அது பற்றிய உங்கள் கருத்து* என்ன .

    திரு.லியாகத் அலிகான்*: எம்.ஜி.ஆர். அவர்கள் இல்லாமல் இருக்கிறார் .அவர் நம்மிடையே இல்லை என்ற வார்த்தைகளை*கிராமத்து*மக்கள் இன்னும் நம்ப தயாராக* இல்லை .இன்னும் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்தை வைத்து கொண்டு*அண்ணனாகவோ,தம்பியாகவோ, மகனாகவோ , நினைக்க கூடிய*மூத்த மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் , சில இளைஞர்கள் இருக்கிறார்கள்*ஒரு விஷயம் என்னவென்றால்,நானே என்னை*பற்றி பெருமையாக பேசி கொள்ள கூடாது .நான் கதாநாயகனாக* ஏரிக்கரை*பூங்காற்றே* என்ற படத்தில்*நடிக்கிறபோது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்தையும், என் தந்தையார் படத்தையும் வைத்துதான்*பூஜை போட்டேன் .பிற்காலத்தில் கூட*எப்போதும்*எம்.ஜி.ஆர் அவர்களின்*படத்தை*வைத்துக்கொண்டு இருப்பேன்*குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திருப்பூர்*மணிமாறன் அவர்கள் சென்னையில் வசித்தபோது கடவுள்*படங்கள் நிறைய வைத்திருப்பார் .அந்த தெய்வங்களுக்கு நடுவில் எம்.ஜி.ஆர். படத்தையும் வைத்திருந்தார் .என்னை*அழைத்து* சென்று*அதையும் காட்டினார் .அவர் மறைந்துவிட்டதாகவே நினைக்கவில்லை . இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று நம்பக்கூடிய ,வணங்கக்கூடிய லட்சக்கணக்கான மக்கள், குடும்பத்தினர் இன்றைக்கும்* இருக்கிறார்கள் . எல்லோருக்கும் ஒரு உந்துசக்தியாக அவர் இருக்கிறார் .நீங்கள் பல நேரங்களில் எம்.ஜி.ஆர். நினைவிடம்*சென்று*பார்த்தீர்களேயானால்*ஆயிரக்கண க்கான மக்கள் தேங்காய் உடைத்து, சூடம் காட்டி ,மாலையிட்டு அவரை*வணங்கி, வழிபடுபவர்கள்* இருக்கிறார்கள் .நான் ரஷ்யாவிற்கு சென்றபோது ,லெனின்கிரேடு* என்கிற*இடத்தில*லெனின்*அவர்களின் உடலை*அப்படியே பாடம் செய்து* வைத்திருப்பார்கள் .அவர் உடலை*பார்க்கும்போது அவர் தூங்குவது போலத்தான்* நான் உணர்ந்தேன் . அவர் இறந்து பல வருடங்கள் ஆகிய காரணத்தால் அவர் கைகளின் தோற்றத்திற்கும் , உயிரோடு இருப்பவர்களின் கைகளுக்கும் வித்தியாசம் இருப்பதை* காண முடிந்தது .அந்த நினைவிடத்தில் மணமாகிய*நூற்றுக்கணக்கான ஜோடிகள்*வந்து அவரிடம்*ஆசிர்வாதம் பெற்று கொள்வது போல நடந்து கொள்வதை கண்டேன் .அதே போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான ஜோடிகள்*,திருமணம் செய்து கொண்டு வந்து ஆசிர்வாதம் பெற்று கொள்ளும் காட்சியையும் நான்* பலமுறை*பார்த்திருக்கிறேன் . லெனின் படத்தை போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படம் வருவது போல ஒரு காலண்டர் தயார் செய்து* முன்னாள் அமைச்சர் திரு.வி.வி.சாமிநாதன்* எம்.ஜி.ஆர். அவர்களிடமே அதை காண்பித்தபோது புரட்சி தலைவர்* மெய்சிலிர்த்து போனார் என்று சொல்வார்கள்அந்த அளவிற்கு*அவரது*கொள்கைகள் பொதுவுடைமை கொள்கைகளாக இருந்தன*.


    நீங்கள் நாடோடிமன்னன், சக்கரவர்த்தி திருமகள், மதுரை வீரன் ,மலைக்கள்ளன்,* அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற படங்களில் அவர் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதித்தார் .* liberty, equality, fraternity*என்று சொல்வார்கள் .சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொல்லுகிறபோதுதான் அதை அவர் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தவர் .யாரையும் அவர் உதாசீனப்படுத்தியதில்லை . எந்த மதத்தை சார்ந்தவரையும்* வித்தியாசமாக பார்த்ததில்லை .* இஸ்லாமியரை போல அவர் தோற்றம் கொண்டதுண்டு . இந்துக்களை போல வாழ்ந்ததுண்டு .* கிறிஸ்துவர்களை போல ,ஏன் ஏசுபிரான்*போல வேடம் ஏற்று நடிக்கவும்* தயாராக இருந்த*தலைவர்தான் .* சமத்துவ சிந்தனை* உடைய எம்.ஜி.ஆர். அவர்கள்*அண்ணாயிசம் என்ற கொள்கையை அறிமுகம்* செய்தார் .* அண்ணாயிசம் என்றால் என்ன என்று கருணாநிதி கேட்டார் .சோஷலிசம், கேபிடலிசம் ,கம்யூனிசம் எல்லாம் சேர்ந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கம் கொடுத்தார் . உடனே தி.மு.க. வினர் கிண்டல் செய்தார்கள் .இந்த தத்துவத்தை புரிந்துகொள்ள மிகவும் சிரமபட வேண்டும் என்று சொல்கின்ற நேரத்திலே ,நான் மேடையிலே*எம்.ஜி.ஆர்.அவர்களை வைத்துக்கொண்டே சொன்னேன்*,அதாவது உடுமலைப்பேட்டை அருகே ஒரு இடத்தில*சிவசுப்பிரமணிய கவுண்டர் , கோவிந்தசாமி கவுண்டர் ஆகியோரின்* தலைமையில்,முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது*அண்ணாயிசத்தை பற்றி கிண்டல் செய்து பேசுகிறார்கள் .ஆனால் கேபிடலிசம், சோஷலிசம், கம்யூனிசம் ,மூன்றும் சேர்ந்த*முதலாளித்துவம், சமத்துவம் ,கம்யூனிசம் ,பொதுவுடைமை, சமத்துவம் சேர்ந்ததுதான் அண்ணாயிசம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் .இதை தத்துவ குழப்பம் என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள் .இன்றைக்கு இந்திய நாடு செல்லுகின்ற வழியே* உங்களுக்கு இந்த தத்துவத்தை*வழிநடத்துகிறது .ரஷ்யாவில் உள்ள பொது உடைமை, அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவம், உலக நாடுகளில் உள்ள சமத்துவம் எடுத்து கொள்வதுதான் இந்திய நாட்டின் கொள்கையாக இருக்கிறது .இதற்கு*மத்திய அரசு தருகின்ற வார்த்தை என்னவென்றால் தங்க வழி . அந்த வழியில்தான் மத்திய அரசு நடை போடுகிறது .என்பதை அறியாமல், புரியாமல் தி.மு.க.வினர் அண்ணன் எம்.ஜி.ஆரை கிண்டல் செய்கிறார்கள் .கேலி*பேசுகிறார்கள் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிராக்ட்டிகளாக வாழக்கூடிய ஒரு மாபெரும் தலைவர் .அந்த தலைவரின் வெற்றிக்காக பொதுமக்களே நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசியபோது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே ,எழுந்து*வந்து என் தோளை* தட்டி பாராட்டிய*நிகழ்வுகள் எல்லாம் இப்போது என் நினைவுக்கு வருகிறது .இவ்வாறு, திரு.லியாகத் அலிகான்* பேட்டி அளித்தார் .


    அந்த காலத்தில் மிக பெரிய அறிஞர்கள், மகோன்னதமான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் .ஆனால் வலம்புரி ஜான் அவர்கள் சொல்வது போல மக்கள் தொகையை கணக்கெடுக்க வேண்டும் என்றால்* மலை போல இலை வேண்டும்*ஆனால் மனிதர்களை கணக்கெடுக்க வேண்டும் என்றால் மந்தார*இலை போதும்* என்று .அந்த மந்தார இலையில்*எழுதக்கூடிய ஒரு 10, 15 பேர்களில் நிச்சயமாக*எம்.ஜி.ஆர். என்கிற பெயர் இடம் பெறும்*. அவர் ஒரு சரித்திரம் .அந்த சரித்திர சாதனை*தொடர* அவர் வகுத்த பாடங்களை, படிப்பினைகளை பயில்வோம்*அடுத்த அத்தியாயத்தில் .


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

    2.நெஞ்சம் உண்டு ,நேர்மை உண்டு , ஓடு ராஜா -என் அண்ணன்*

    3.பாடும்போது*நான் தென்றல் காற்று*- நேற்று இன்று நாளை*

    4.நாடோடி மன்னன் படத்தில் வசனம் பேசும் எம்.ஜி.ஆர்.*

    5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

    6.சுந்தரம் - ரஞ்சித் வேடங்களில் எம்.ஜி.ஆர். -நினைத்ததை* முடிப்பவன்*

  10. Likes orodizli liked this post
  11. #989
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்களின் சிந்தனையாளர் எம்.ஜி.ஆர் :

    நடிகர் அசோகன் நம்முடைய புரட்சித் தலைவரை பற்றி கூறியது :

    திரைப்படங்களிலே நடிப்பவர்கள் சாதாரணமாக நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே காணப்படுவார்கள். அவர்கள் விரும்புவதெல்லாம் அதிகப் படங்களில் நடித்து நிறைய பணமாக்க வேண்டும். தேவைக்கு மேல் பணம் சேர்ந்து இருந்த போதிலும் இன்னும் அதிகமாகவே சேர்க்க தமது கவனத்தை செலுத்துவார்கள். எனவே நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ அவர்களால் சிந்திக்க முடியாது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்று இருந்தாலும் அவரது சிந்தனை எல்லாம் பாமர மக்களின் நல்வாழ்வு நம் நாட்டின் முன்னேற்றம் போன்றவையாகும். குறிப்பாக தமிழகத்தில் வாழும் பாமர மக்களின் வாழ்வில் ஏதாவது தீங்குகள் நேரிட்டாலும், பயங்கர புயல் வீசுமேயானாலும் அம்மக்களை காப்பதில் மிகத் தீவிரமாகப் பங்குகொண்டு லட்சோப லட்சம் பணத்தை வாரி வழங்கி காக்கப்பட்ட கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் ! எனவேதான் அவருக்கு மக்களே மக்கள் திலகம் என்ற உயர்ந்த புகழை சூட்டியுள்ளனர்.

    கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........vr...

  12. #990
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகன்

    பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.

    எம்ஜிஆர் ரசிகன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை.
    எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

    தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

    இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
    செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
    பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
    என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

    திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

    விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
    தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

    என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

    அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

    இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

    எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.
    Courtesy Net....VND...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •