Page 76 of 210 FirstFirst ... 2666747576777886126176 ... LastLast
Results 751 to 760 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #751
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    டாக்டர் எம்.ஜி.ஆர் அறக் கட்டளை -1

    டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி கலை அறக்கட்டளைத் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் 7.09.1984 அன்று காலை நாதசுர இசையுடன் தொடங்கியது.

    சங்கர்-கணேஷ் இசை அமைக்கவும், அரசவைக் கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், எம்.எல்.சி., ஆகியோர் மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைக் குறித்து எழுதிய "புரட்சித்தலைவர் புகழ்மாலைப் பாடல்களை" திரு. மலேசியா வாசுதேவன், திருமதி வாணிஜெயராம் ஆகியோர் பாடினார்கள்.

    மாண்புமிகு சட்டமன்றப்பேரவைத் தலைவர் திரு க.இராசாராம் அவர்கள் வரவேற்றுப் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் இந்த அறக் கட்டளை சார்பில்,கல்வி,கலை, விஞ்ஞானம் பற்றிய சொற்பொழிவுகள் தாயகத்திலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தேர்வு செய்யபட்ட அறிஞர்களால் நடத்தப்படும், பட்ட மேற்படிப்பில் முதல் இடம் பெறும் மாணவ மாணவிகளுக்கு இதிலிருந்து நான்கு பேருக்குப் பரிசுகள் வழங் கப்படும் , எம்.ஜி.ஆரின் கொள்கைகளைப் பரப்புவது இந்த கட்டளையின் நோக்கமாகும். தமிழகத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர் . ஆட்சியில் தான் கல்வி மறு மலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    "ரூபாய் 35 ஆயிரத்தில் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட் டுள்ளது” என்று கூறினார் . மேதகு ஆளுநர் திரு.எஸ்.எல்.குரானா அவர்கள் தலைமை தாங்கிப் பேசுகையில் கூறியதாவது:

    "தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் சிறுவயதிலேயே கலைத் துறைக்கு வந்தவர் . ஏழை எளியவர்கட்கு உதவி செய்துக்கூடிய பாத்திரங்களை ஏற்று நடித்தவர் . பசி என்றால் என்ன என்பது அவருக்குத் தெரியும். அவர் முதல்வரானதும் பசிப்பிணி தீர்க்க, சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

    "தேசிய ஒருமைப்பாட்டிற்கு முதல்வர் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் மகத்தானவை. சீனப் போரின்போது அண்ணா எந்த நிலையை ஏற்றுக் கொண்டாரோ அந்த நிலையை எம்.ஜி.ஆர் . பின் பற்றுகிறார் . இந்த அறக்கட்டளை அவரது நோக்கங்களைப் பூர்த்தி செய்யும்"

    தொடரும் ...............

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #752
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணா மாவட்டம் - வெற்றிநடை போட வாழ்த்துகிறேன்

    மக்களுக்கும், அரசுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு அமைவதைப் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும். அதற்கு முதல்படியாக நிர்வாக நிலையங்கள் மக்களுக்கு எளிதில் எட்டக்கூடியதாக இருக் திடுவது தேவை. அதைக் கருத்தில் கொண்டே பெரிய மாவட்டங்களைச் சீரமைத்து, புதிய மாவட்டங்களை உருவாக்கிடவும். உருவாக்குகிற புதிய மாவட்டங்களுக்கு தமிழகச் சான்றோர் பெயர் சூட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அவ்வகையில் - திண்டுக்கல்லைத் தலைாகராகக் கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருப்பெயரைத் தாங்கிய வண்ணம் அண்ணா மாவட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி[15/9/1985] அன்று உருவாகிறது.

    திண்டுக்கல் பகுதி 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 1884 வரை நூறாண்டுக் காலத் திற்குத் தனி மாவட்டமாகவே இருந்து வந்தது. 1885 ஆம் ஆண்டு முதல் கொண்டுதான் மதுரையும், திண்டுக்கல் பகுதியும் ஒன்றாக இணைக்கப்பட்டன.

    சரியாக 100 ஆண்டுகள் கழித்து 1985 ல் மீண்டும் திண்டுக்கல் பகுதி தனி நிர்வாக மாவட்டமாக அமைவது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சியாகும்.

    பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் செயல்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு பணியாற்றி வரும் எங்களுக்கு, மக்கள் தங்கள் மகத்தான ஆதரவை உறுதி செய்து போறிஞர் அண்ணாவின் வழியில் உண்மையாக நடை போடுகிறவர்கள் அங்கீகரித்து உலகறியச் செய்த பெருலம திண்டுக்கல் பகுதிக்கு உண்டு என்பதால் திண்டுக்கல்லைத் தலைநகராகக் கொண்டு அண்ணா மாவட்டம் அமைவதில் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

    அண்ணாவின் பெயரால் அமைந்திடும் இந்தப் புதிய மாவட்டம் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்து முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போட என் இனிய நல்வாழ்த் துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

    மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவர்

    [அன்று தமிழகத்தின் 19-வது மாவட்டம் "அண்ணா மாவட்டம்"].........

  4. #753
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.

    ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.

    அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.

    1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
    1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
    1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
    1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
    1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (m.l..c.) ஆனார்.
    1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
    1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
    1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
    1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
    1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
    1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
    1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
    1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
    1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
    1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
    1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
    1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
    1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.


    எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்



    எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432
    எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777
    எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415
    எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959
    எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016

    24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்..........

  5. #754
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி ரசிகர்களின் புலனாய்வுக்கு. நமது தீர்க்கமான பதில்
    -------------------------------------------------------------

    எம்ஜிஆர் படங்களை போல சிவாஜி படங்களும் வசூல் செய்ய சிவாஜி ரசிகர்கள் பேராசை
    பட்டால் போதுமா? அதற்கான முயற்சியை சிவாஜி செய்ய வேண்டாமா?
    எம்ஜிஆரை பொறுத்த வரை சிறு
    வயதிலிருந்தே சினிமாவுக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டார். குதிரை ஏற்றம், சிலம்பாட்டம், வாள் பயிற்சி, உடல் கட்டமைப்பு அது போக திரைத்துரை சம்பந்தப்பட்ட அத்தனை நுணுக்கங்களையும், கலைகளையும் தன் வாழ்நாளில் பெரும்பகுதி செலவு செய்து கற்றுக் கொண்டார்.

    ஹாலிவுட் படங்களுக்கு கதாநாயகனாக நடிக்க உள்ள அனைத்து தகுதிகளையும் பெற்றதோடு ஹாலிவுட் கலைஞர்களைப் போல இயல்பான நடிப்பிலும் சிறந்து விளங்கினார். உதாரணம் "சர்வாதிகாரி".
    இவற்றில் எந்த தகுதியும் இல்லாமல் இவர் காட்டும் அஷ்ட கோணல் நடிப்புக்கு உள்ளூரிலே கூட படம் பார்க்க ஆளில்லாமல் முதல் நாளே வாய்பிளந்து நின்ற காட்சிகள் அநேகம்.

    யானையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டால் தானும் ஒரு யானையாக இருக்க வேண்டும். சிறு பூனையாய் இருந்து கொண்டு யானையை திருமணம் செய்ய முடியாது என்ற அடிப்படை உண்மை கூட புரியவில்லையா?அந்த மிகை நடிப்பை மட்டும் வைத்துக் கொண்டு நடிகப் பேரரசரிடம் மோத முடியுமா? சிவாஜிபோல் நடிப்பதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
    ஆனால் எம்ஜிஆர் போல் நடிப்பதற்கோ நடனம் ஆடுவதற்கோ அவரைப்போல் சண்டை காட்சிகளில் வேகமான மூவ்மென்ட் கொடுப்பதற்கோ யாராலும் முடியாது.

    சிவாஜியை விட சிறப்பாக இயல்பாக நடித்த நடிகை சாவித்திரிக்கு நடிகையர் திலகம் என்ற பட்டம் கொடுத்து அழகு பார்த்தோம்.
    ஆனால் இன்று வரை அவருக்கு மாற்று கிடையாது. ஆனால் சிவாஜியின் மிகை நடிப்பை ஒரு சிறு பெண் நடிகை ஜோதிகா நடித்ததால்
    அவருக்கு "பொம்பள சிவாஜி" என்று பெயர் வைத்து சிவாஜியை அசிங்கப் படுத்தினார்கள் இந்தக்கால ரசிகர்கள்.

    ஒருவர் அளவுக்கு அதிகமாக மிகையாக நடித்து விட்டால் டேய்! இவன் சிவாஜி மாதிரி
    நடிக்கிறாண்டா? என்று சிவாஜி நடிப்பை இழிவு படுத்துவதை கண்டிருக்கிறோம். எம்ஜிஆர் மாதிரி குதிரை ஏறத் தெரியாது. அப்படி ஏற்றி விட்டாலும் லாவகமாக அமர தெரியாமல் சற்று நேரத்திலேயே குதிரை வலி தாங்காமல் நெளிவதை "திருமால் பெருமை", "ராஜ ராஜ சோழன்", "சித்ரா பெளர்ணமி." போன்ற படங்களில் கண்டோம்.

    நடிகர் 'விவேக்' ஒவ்வொரு படங்களிலும் கோபால்! கோபால்! என்று சரோஜாதேவியின் பேச்சை கிண்டல் செய்வதாக நினைத்து
    சிவாஜியின் நடிப்பை கிண்டல் செய்வாரே! பார்க்கவில்லை. ஆரம்ப காலங்களில் நடிக்க வந்த புதுமுகங்களிடம் "பராசக்தி" வசனத்தை கொடுத்து பேசச் சொல்லுவது அவர்கள் திக்கு வாயா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளத்தான்.

    சிவாஜி சிலம்பம் சுற்றினால் பருவப் பெண்கள் கோலாட்டம் போடுவதை நினைவு படுத்துவது போல இருக்கும். சிவாஜி வாளை பிடித்துக் கொண்டு சண்டை போடுவது ஒரு பெண் நடன அசைவு கொடுப்பதை போல உணரலாம். பாட்டும் பரதத்தில் அவருடைய நாட்டியத்தை சகிக்காமல் படம் தோற்றதோடு நில்லாமல் அதை தயாரித்த கம்பெனியையும இழுத்து மூடி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டதை நாடறியும். அதிலும் ஒரு சிவாஜி ரசிகர் சிவாஜி 1966 வரை குண்டாக இருந்தும் அவரது நடிப்புக்காக மக்கள் பார்த்தார்களாம். ஆனாலும் சிவாஜி ரசிகர்களுக்கு இந்த காமெடி ஆகாதுப்பா. அவருடைய வெற்றி படங்களில் நடித்த ஜெமினி கணேசன் "காதல் மன்னன்" என்று பெயரெடுத்தவர். அவருக்காகவே பெண்கள் கூட்டம் அலைமோதும்.

    மூவேந்தர்களில் ஒருவரான ஜெமினி மற்றும் ssr இவர்களை காண வந்த கூட்டத்தை சிவாஜிக்கு வந்த கூட்டமாக நினைத்தால் இந்த காமெடியை என்னவென்று நினைப்பது. அவ்வளவு மூடர்களா? சிவாஜி ரசிகர்கள். ஜெமினி தனியாக நடித்த பல படங்கள் வெள்ளிவிழா ஓடியதும் சிவாஜியோடு நடித்த படங்கள் வெற்றி பெற்றதும் அவரால்தான் என்று ஜெமினி ரசிகர்கள் கூறுகிறார்கள்.

    அதே நேரத்தில் சிவாஜி தனியாக நடித்த பல படங்கள் படுதோல்வி அடைந்தததையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஜெமினி தனியாக நடித்த வெள்ளி விழா படங்கள் 'கல்யாண பரிசு' 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' 'கணவனே கண் கண்ட தெய்வம்' 'பணமா பாசமா' என்று சொல்லிக்கொண்டே போகலாம். சிவாஜியுடன் நடித்து ஓரளவு ஓடிய படங்கள் 'பாச மலர்'
    'பாவ மன்னிப்பு' 'பார்த்தால் பசி தீரும்' 'திருவிளையாடல்' 'சரஸ்வதி சபதம்' இது போன்ற சில படங்களை சொல்லலாம்.

    ஆனால் சிவாஜி தனியாக நடித்து தோற்ற படங்கள் நூற்றுக்கணக்கில்
    உண்டு. பாலாடை, வளர்பிறை, பாதுகாப்பு, புனர் ஜன்மம் , இரு துருவம் சாரங்க தாரா, சித்தூர் ராணி பத்மினி, அவள் யார், மனிதனும் மிருகமும். இது
    போன்ற எண்ணற்ற படங்களை சொல்லிக்கொண்டே போனால் இந்த பதிவு பத்தாது. ஆனால் பாவம் யாரையோ பார்க்க வந்தவர்களை
    சிவாஜிக்குத்தான் என்று யாரை ஏமாற்றுகிறார்கள் சிவாஜி ரசிகர்கள். அடுத்தபடியாக சிவாஜி ரசிகர்கள் குறிப்பட்டது "தங்கப்பதக்கத்தி"ன் வசூல். அரளி விதையில் உள்ள விஷத்தை விட சிவாஜி ரசிகன் -ரளி -------- டம் அதிக
    விஷமிருக்கும் என்று நினைக்கிறேன்.

    அவர்களின் காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. இதே பதிவில் "தங்கப்பதக்கத்தி"ன் வசூலுடன் தலைவர் படத்தின் வசூலையும் பதிவு செய்கிறேன், பார்த்துக் கொள்ளுங்கள். தூத்துக்குடியில் சிவந்த மண்ணை 101 நாட்கள் வடக்கயிறை போட்டு இழுத்தவர்களால் தங்கப்பதக்கத்தை
    41 நாளிலே வடக்கயிறு அறுந்து படம் படுத்து விட்டது. "தங்கப்பதக்க"த்தை ஓட்டியதே 41 நாட்கள்தான்.

    "தங்கப்பதக்கம்" 51 நாட்கள் விளம்பரத்தில் பாருங்கள் தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர் பெயர் இருக்காது. இப்பேர்ப்பட்ட சுமாரான படத்தை வைத்துக் கொண்டு 104 நாட்கள் ஓடிய "வாலிபனிடம்" மோதலாமா? அதுவும் 50 நாட்கள் ஓட்டியே தீர வேண்டும் என்று வெறியில் இருந்தவர்களுடன் தியேட்டர் கேன்டீன் மற்றும் சைக்கிள் ஸ்டாண்டு வைத்து நடத்தியவர்கள்
    தியேட்டரில் கூட்டமே இல்லாத காரணத்தால் குத்தகை பணத்தை திருப்பி கேட்டதால். வேறு வழியில்லாமல் 41 நாட்களோடு நிறுத்தினார்கள்.

    50 நாட்கள் கூட ஓட்ட முடியாத "தங்கப்பதக்கம்" எங்கே? 100 நாட்களை தாண்டி ஓடிய "உலகம் சுற்றும் வாலிபன்" எங்கே? ஆனாலும் ஓவர் குசும்பு இந்த சிவாஜி ரசிகர்களுக்கு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நான் பதம் பார்க்க அவர்களுக்கு சோற்றுப் பானையையே வைத்து விட்டேன். இனிமேலும் இது போன்ற காமெடி காட்சிகள் வேண்டாம். தெரியாமலா சிவாஜிக்கு 1 லட்சமும் எம்ஜிஆருக்கு 8 மடங்கு அதிகமாக 8 லட்சமும் அந்த நேரத்தில் கொடுத்தார்கள் பட அதிபர்கள்.

    சரக்கு முறுக்காக இருந்தால் விலையும் ரொம்ப அதிகம்தான். நடிக்கும் காலத்திலேயே மக்களால் வெறுக்கப்பட்டு மூலையில் முக்காடுடன் அமர்ந்த நடிகருக்கு கொடி பிடிக்கும் கொடியவர்களே, சிவாஜி ரசிகர்கள். அரசியலில் புறமுதுகு காட்டி ஓடி பதுங்கு குழியில் பதுங்கியிருந்தவரை மீட்ட அவரது குடும்பத்தினர் வீட்டில் அவரை தனி அறையில் அடைத்து வைத்ததை மறந்து கணேசனின் புறமுதுகு புண்ணுக்கு ஒத்தடம் கொடுப்பதாக நினைத்து 'மன்னாதி மன்னனை' மீண்டும் சீண்ட வேண்டாம் என உபதேசம் செய்கிறேன். (கோழைகளுக்கு எச்சரிக்கை தேவையில்லை)

    ஆசிய, ஆப்பிரிக்கா விருது அமெரிக்க நல்லெண்ண தூதர் பயணம், ஒரு நாள் மேயர் பதவி இது போன்ற அரசியல் காரணங்களுக்காக மேற்கொண்ட பயணங்களுக்கு நடிப்பு முத்திரை பூசும் நயவஞ்சகர்கள் நம் நாட்டையே முட்டாளாக்கும் திறன் படைத்தவர்கள். அன்று இந்தியா சார்பில் "லூஸ் மோகனை" அனுப்பியிருந்தால் கூட அவருக்கும் இத்தனை கவுரமும் கிடைத்திருக்கும்.
    அது நாட்டுக்காக கொடுத்த மரியாதை. அதை கூட தனக்கு என்று திருட நினைக்கும் "திருடன்" ரசிகர்களை 'ஐயோ பாவம்' பைத்தியம் முற்றி விட்டது என்று நினைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?..........

  6. #755
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*27/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ================================================== =====================
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு ,லட்சோப*லட்சம் குழந்தைகள் பசி தீர வேண்டும் , அவர்கள் படிக்கிற*காலத்தில் பசி கொடுமை*, இளமையில் வறுமை எவ்வளவு கொடியது என்பதை*உணர்ந்தே*குழந்தைகள் சத்துணவு திட்டத்தை அமுல்படுத்தினார் .**


    முந்தைய ஆட்சியில் யார் யாரோ ,பேரனுக்கு, பேத்திக்கு,மகளுக்கு, மகனுக்கு ,எல்லாம் பதவிக்காக*டெல்லியில் தங்கி இருந்து வீடு வீடாக* அலைந்து*திரிந்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். டெல்லியில் தங்கவுமில்லை. யாருக்காகவும் பதவி கேட்டு அலையவுமில்லை .அனால்*தமிழகத்தில் சத்துணவு திட்டம் அமுல்படுத்த வேண்டி, டெல்லிக்கு சென்று*முறைப்படி,பிரதம மந்திரியை*சந்திப்பதற்கு முன் ,அவரது*உதவியாளர் யார் இருக்கிறார் ,அவருக்கு செயலாளர் யார், அவரை*சந்திக்க வேண்டும் என்று ,அப்போது சென்னையை*சேர்ந்த*திரு.பி.எஸ்.ராகவன்(தற்போது ,94 வயது )*அடையாறில்*வாழ்ந்து வந்தவரை போய் சந்தித்து*பேசினார் .அதாவது தமிழகத்தில் உள்ள* பள்ளி**குழந்தைகளுக்கு தினசரி ஒரு வேளை* சாப்பாடாவது போடும்*திட்டம் உள்ளது . அதற்கு*தேவையான அரிசி மத்திய தொகுப்பில்*இருந்து பெற்று தருவதற்கு தாங்கள் உதவ*வேண்டும் .நீங்கள் தமிழகத்தை சார்ந்தவர் என்பதால் உங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன் என்றார் .இதை கேட்ட*அந்த செயலாளர் வியந்து போனார் . காரணம்*பொதுவாக இந்த மாதிரி விஷயங்களில் ஒரு முதல்வர் நேரடியாக*பிரதமரை*அணுகி,அதன்பின் அவர் தன் உதவியாளரிடம் செய்தியை*பகிர்ந்து அதன்*பின்னர்தான்*செயலாளருக்கு தகவல்கள்*கிடைக்கும் .ஆனால் எம்.ஜி.ஆர். முறைப்படி* மத்திய உணவு துறையின்*ஆணிவேராக*உள்ள செயலாளரை முதலில் அணுகி*கோரிக்கையை வைத்தார்*. செயலாளரின் ஆலோசனைப்படி எம்.ஜி.ஆர். விவரங்கள் அறிந்து*பிரதமரின்*உதவியாளரை*தொடர்பு கொண்டு*பேசி ,அதன்பின் நேரடியாக*பிரதமரிடம் தனது*கோரிக்கை*மனுவை சமர்ப்பித்தார் .* பிரதமரின் அலுவலகம் எம்.ஜி.ஆரின் கோரிக்கையை*ஏற்று* போதிய அளவில் அரிசி வழங்க சம்மதித்தது .* அதன்பின் ஒவ்வொரு முறை எம்.ஜி.ஆர். டெல்லிக்கு*செல்லும்போதெல்லாம்* தன் ஜிப்பா பாக்கெட்டில் சில*அரிசி பொட்டலங்கள் வைத்திருப்பாராம் .அவற்றை*உணவுத்துறை செயலாளரிடம் காண்பித்து*இந்த மாதிரியான அரிசியை*அனுப்பினால் எங்கள் குழந்தைகள்*வளர்ச்சிக்கும், கல்வி அறிவை*பெருக்குவதற்கும் உதவியாக இருக்கும் என்று ஒரு அரிசி வியாபாரி போல நடந்து கொள்வாராம் .அந்த அளவிற்கு*குழந்தைகள் வளர்ச்சியில், அறிவு திறமை, கல்வி அறிவு போன்றவற்றில் அக்கறை கொண்டவராக எம்.ஜி.ஆர். திகழ்ந்துள்ளார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் .


    1980ல் மக்களால்* எம்.ஜி.ஆரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை கலைக்கப்படுகிறது .பின்னர் சட்டமன்ற பொது தேர்தல் பற்றி அறிவிப்பு வந்ததும்*தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய*பின் ஒருநாள்*அ .தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர். வருகிறார் .அப்போது செய்தியாளர்கள் கூட்டம்*நடைபெறுகிறது . அதில்*பிரபல*செய்தியாளர்* திரு.நூருல்லா*கலந்து கொள்கிறார் .* நிருபர்களுக்கு அளித்த*பேட்டியில்*எம்.ஜி.ஆர். பேசும்போது* இந்த முறை நாங்கள் வெற்றிபெறுவோம் என்பதை*சரியாக*கணிக்க முடியாது*என்பது*போல சற்று*நம்பிக்கையற்றவராக பேசினார் .* நான் நாள் முழுக்க மக்களை*சந்தித்து*பேசி வருகிறேன். நியாயம் கேட்கிறேன். அண்ணாவின் ஆட்சி, மக்களுக்கான ஆட்சி, நீதி, நேர்மை,நியாயம்* மிகுந்த ஆட்சி, என்கிற*கேள்விகளை மக்கள்முன்*வைத்துள்ளேன் . மக்களிடம்*என் உடம்பில்*உள்ள ரத்தம் சொட்ட*சொட்ட* ஆட்சியின் செயல்பாடுகள், மக்கள் பணி ஆற்றியது குறித்து விவரமாக தெரிவித்துள்ளேன் .இதற்கு*மக்களாகிய நீங்கள்தான் முறையான நீதியை*வரும் பொது தேர்தலில்*வாக்களித்து வழங்க வேண்டும் என்று பேசியுள்ளேன் .என்றவாறு சட்டையை*மடித்து கைகளில் உள்ள கீரல்கள் , ரத்த கறைகள்*செய்தியாளர்களுக்கு காண்பித்தாராம் . அவர்கள் இது எப்படி நடந்தது என*கேட்டபோது ,என்னை*பார்க்க, சந்திக்க*ஓடி வரும், முண்டியடித்து வரும்,ரசிகர்கள் கூட்டத்தை என்னால்*சில சமயங்களில் கட்டு படுத்த முடியவில்லை. அவர்களின் அன்பு தொல்லையில் இருந்து விடுபட முடிவதில்லை* .சிலர் என் கைகளை*பிடித்து கொள்கிறார்கள். தடவுகிறார்கள். கொஞ்சம்*அழுத்தமாக தொட்டு பார்க்கிறார்கள் .அதனால்*ஏற்பட்ட*கீறல்கள், ரத்த கறைகள் ,சிறு*காயங்கள் எனசிவந்த, புண்பட்டுப்போன**இரு கைகளையும் நிருபர்களிடம் காண்பித்தாராம் .என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளிடம் நான் ரத்தம் சிந்தி*வாக்குகள்*கேட்டுள்ளேன் .எங்களுக்கு வெற்றி கிடைக்குமா*இல்லையா*என்பதை அவர்கள்தான்*தீர்மானிக்க வேண்டும் என்றார் .ஆனால் செய்தியாளர்கள்,கவலைப்படாதீர்கள். உங்கள் அணிக்கு, கூட்டணிக்கு இந்தமுறை*வெற்றி நிச்சயம் என்று அவரை*ஊக்கப்படுத்தி,உற்சாகப்படுத்தி* அடித்து சொன்னார்களாம் .அதாவது தன்னை ஒரு தொண்டனாக*நிலைநிறுத்தி*மக்களிடம் தனது ஆட்சியின் நிறைகளை*தெரிவித்து, தான்**சொல்ல வேண்டியதை*வேண்டிய அளவில் மக்களுக்கு**எடுத்துரைத்து.*மீன்டும்*அண்ணாவின் ஆட்சி மலர மக்களாகிய நீங்கள் தான் நல்லமுடிவெடுத்து எங்களை*தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முறைப்படி*வேண்டுகோள் வைத்தார் ..


    அ.தி.மு.க. துவங்கிய*பின்னர்* சத்யா ஸ்டுடியோவில்**சில*காலத்திற்கு வெளியூரில்*இருந்து வரும் பக்தர்கள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு**மதிய*உணவு ஒரு திருமண வீட்டில்*நடைபெறுவது*போல தடபுடலாக* ஏற்பாடு செய்து வழங்கப்பட்டு வந்தது*அதை கண்காணித்து , முறைப்படி*நடைபெறுவதை*பார்த்து கொள்வதற்கு சில*வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பணிகள்*நடைபெற்று வந்தன .ஒருநாள்*மதிய உணவு வழங்கப்படும்நேரத்தில் எம்.ஜி.ஆர். விஜயம் செய்து ,உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா, அனைவருக்கும் சரிசமமாக*பரிமாறப்படுகிறதா என்று விசாரித்த வண்ணம் இருக்க ,மதுரையில் இருந்து சுமார்*100 நபர்கள் உணவருந்த வந்திருந்தனர் .அவர்களில் ஒருவர் முன்னாள் மதுரை மேயர்*முத்துவை*பற்றி தர குறைவாக*பேசியபடி இருந்தார் .அதை கவனித்த எம்.ஜி.ஆர். அப்படியெல்லாம் பேச கூடாது என்று அந்த தொண்டரிடம்*கூறினார் .என்னை*பொறுத்தவரை*அவர் தி.மு.க. வில் இருந்தாலும் எனக்கு*முத்தண்ணன் தான் .என்றார் . அதாவது தன்னுடன் சேராதவர்கள் ,எதிரிகள்,மாற்று கட்சியில் உள்ளவர்களையும் மதிக்கும்*மாண்பை,மரியாதையாக நடத்தும் அரசியல்*, பண்பை*தொண்டர்கள் மத்தியில் விதைத்தவர் எம்.ஜி.ஆர்.*.


    ராமாவரம் தோட்டத்தில் தினசரி எம்.ஜி.ஆரை சந்திக்க வெளியூரில்*இருந்து ரசிகர்கள், பக்தர்கள்*வருவது வழக்கம் . ஒருநாள்*லுங்கி, பனியனுடன், ஒரு நபர் கரை*வேட்டி கட்டிய பக்தர்கள் நடுவில் வந்து நிற்கிறார் .எம்.ஜி.ஆர். அவரை*மட்டும் தனியே அழைத்து, என்ன விஷயமாக*சந்திக்க வந்தீர்கள் என்று கேட்க .ஒன்றுமில்லை,உங்களை*பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தது*. அதனால் வந்தேன் என்றுஎம்.ஜி.ஆர். கையில்*ஒரு எலுமிச்சை பழத்தை*கொடுத்தவாறு* முகமலர*பலமாக சிரித்தார் .அதுசரி,எனக்காக என்ன கொண்டு வந்தீர்கள் என்று கேட்க, லுங்கியை*மடித்து , அரை ட்ரவுசரில் , பாக்கெட்டில் உள்ள இரண்டு கடலை மிட்டாயை*எம்.ஜி.ஆரிடம் தருகிறார் .,அதைக்கண்ட அனைவரும் பதற்றமாய் இருக்க*அனைவரின்*முன்னிலையில் அதை ருசி பார்த்த எம்.ஜி.ஆர். தன் உதவியாளரிடம் அவர் பெயர், ஊர், என்னவாக இருக்கிறார் .என்ன தொழில் செய்கிறார்,குடும்ப நிலை என்ன* என்ற விவரங்கள் குறிப்பு*எடுக்க சொல்கிறார் .அதன் பின்னர் தன்சொந்த செலவில்*அவருக்கு*ஒரு சைக்கிள்*ரிக்ஷா வாங்கி*பரிசளித்தார் . அதாவது ஒருவர் தனக்கு*உதவி செய்ய வேண்டும் என்று கேட்காமலேயே உதவும் வள்ளல் தன்மை படைத்தவர் எம்.ஜி.ஆர். என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று .


    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று ஒரு பாடல் இருக்கிறது .அதை உறுதி படுத்துவது*போல இன்றைக்கும்*கள்ளக்குறிச்சியில் ஒய்வு* பெற்ற தலைமை ஆசிரியர்கள் படித்தவர்கள், அவரை நினைத்து கொண்டாடுகிறார்கள் . திருச்சி*மிளகுபாறையில்* உள்ள மஜீத் என்பவர்* நமது சகாப்தம் நிகழ்ச்சியின்*100 வது*தொடருக்கு*எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மகிழ்ச்சி அடைகிறார் . என்றால் இன்றைக்கும் பலரை வழி நடத்துகிற பல்கலை*கழகமாக எம்.ஜி.ஆர். திகழ்கிறார் .அந்த பல்கலை கழகத்தின் வரலாறை அடுத்த அத்தியாயத்தில் தொடர்ந்து பார்ப்போம் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ------------------------------------------------------------------------------------
    1.காலத்தை வென்றவன் நீ* - அடிமைப்பெண்*

    2. பெற்றால்தான் பிள்ளையா படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.

    3.இந்த பச்சைக்கிளிக்கு*ஒரு செவ்வந்தி பூவில்*-நீதிக்கு தலைவணங்கு*

    4.தேர் திருவிழா படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.

    5.எம்.ஜி.ஆர்.-பத்மினி உரையாடல் -ரிக்ஷாக்காரன்*

    6.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*

    7.ஒன்றே குலம் என்று பாடுவோம்*- பல்லாண்டு வாழ்க .

  7. #756
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Mgr தன்னுடய தலைவர் *பேரறிஞர் அண்ணா-வை* போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை.

    01. தன் தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .

    02. ''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .

    03. 'அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்' இதய வீணை

    04. 'அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம்' மீனவ நண்பன்

    05. 'உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்' நவரத்தினம்

    06. 'இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்' பல்லாண்டு வாழ்க

    07. 'அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' இதயக்கனி

    09. 'என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது' நினைத்தை முடிப்பவன் .

    10. 'அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்' உரிமைக்குரல்

    11. 'நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்' நேற்று இன்று நாளை

    12 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா' எங்கள் தங்கம்

    13. 'சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்' கண்ணன் என் காதலன்

    14. 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' பெற்றால்தான் பிள்ளையா

    15. 'நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' புதிய பூமி

    16. 'தம்பி! நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று' நேற்று இன்று நாளை

    17. 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்' எங்கள் தங்கம்

    18. '....கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்து ஆளு..' எங்கள் தங்கம்.........

  8. #757
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனத்திலகத்தின் "ஒளிவிளக்கு "திரைக்காவியம் பல திரையரங்குகளில் இரண்டு மூன்று நான்கு வாரங்கள் கடந்து வெற்றிக் கொடியை பறக்க விட்டுள்ளது.. குறிப்பாக பெரிய திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்த காவியத்தின் உச்சமாக ஒளிவிளக்கு திகழ்கிறது.

    சென்னையில்....
    1988....
    நாகேஷ் 21 நாள்
    நடராஜ் 21 நாள்
    பிளாசா 14 நாள்
    ஜெயராஜ் 14 நாள்
    2013 மகாலட்சுமி
    ஒளி விளக்கு 28 நாள்
    2015....ல் 14 நாள்
    சாதனைக்கு மேல் சாதனையை விதைத்த காவியம்...
    கமலா
    எம்.எம்.தியேட்டர்
    பிருந்தா
    கணபதிராம்
    வாணி
    கோபிகிருஷ்ணா
    முரளிகிருஷ்ணா
    ராதா
    கிராண்ட்
    ஸ்டார்
    அண்ணா
    புவனேஸ்வரி
    சைதை ராஜ்
    கணபதிராம்
    இப்படி பல குளிர் சாதன அரங்குகளில் சாதனை..
    6 மாத இடைவெளியில் பல அரங்கில் திரையிடப்பட்டுள்ளது.
    மகாலட்சுமியில் மட்டும்
    12 வருடத்தில்
    9 முறை திரையீட்டு...
    15 வாரங்கள் ஒடியுள்ளது...
    50 க்கும் மேற்பட்ட அரங்கில் சாதனை..
    கோடிகளை வார வெளியீட்டில் பெற்று... லட்சங்களை விநியோகஸ்தர் களுக்கும்...திரையரங்கு உரிமையாளர்களுக்கும்
    தந்த ஒரே 100 வது காவியம்..இந்திய சினிமா உலகில் மக்கள்திலகத்தின்
    ஒளி விளக்கு மட்டுமே! வெல்க திரையுலக வசூல் சக்கரவர்த்தி...புரட்சி நடிகர்...

    அழியாத வெள்ளித்திரையின் திலகமே...
    நம் மக்கள் திலகமாவார்...

    மேலே சாதனையை எந்த படமாவது தாண்டியதுண்டா...
    முடிந்தால்....
    துணிந்தால்...
    திரையிட்டால்...
    பதிவிட முடியுமா!

    தொடரும் ....
    வள்ளல் திலகத்தின்
    காவிய வரலாற்று சிறப்புகள்.........

  9. #758
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    2012 ல் உட்லண்ட்ஸ்*...
    ஒரு வார வசூல் :*
    1,45 ஆயிரம் ஆகும்.

    1995 எம்.எம்.தியேட்டர்
    ஒரு வார வசூல்
    ரூ. 95, 160.00 ஆகும்.

    2019 அகஸ்தியா 70mm.,
    ஒரு வார வசூல் ( 2 காட்சி)
    ரூ. 1லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

    காலம் கடந்தும் வசூலை அள்ளி தரும் திரையுலகின் அட்சயதிலகம்
    மக்கள் திலகமே... திரையுலகை வாழ வைத்த அன்பு திலகமாவார்.

    அடுத்து... ஒளிவிளக்கு திரைப்படம்...


    குறிப்பு...
    **********
    தில்லானா,என் தம்பி,
    க.கல்யாணம், உ.மனிதன்,
    எ.ஊர்.ராஜா, தி.பெருமை
    ல.கல்யாணம், அரிசந்திரா..
    இதில் எந்த படம் எத்தனை திரையில் வெளிவந்தது....
    தெரிந்தால் சொல்லவும்
    பதிவிடவும்.............

  10. #759
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மதுரைவீரன்
    திரைக்காவியம்....
    திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கரூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர் ஆகிய*
    9 நகரங்களில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த ஒரே திரைப்படமாக இன்று வரை திகழ்கிறது.

    வண்ணப்பட வரிசையில்*
    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கரூர்* உட்பட*
    6 நகரங்களில் 100 நாட்களை கடந்து சாதனை ஆகும்.

    மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் அதிக அளவில் திருச்சி தஞ்சை மாவட்டங்களில் திரையிடப்பட்டு*
    6, 7, 8 திரையரங்குகளில்*
    50 நாட்களை, 75 நாட்களை கடந்த சாதனையில்...* 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்* ஒடியுள்ளது கடந்துள்ளது.

    திருச்சியிலும், தஞ்சாவூரிலும்*
    வெள்ளிவிழாக் கண்ட திரை காவியமாக எங்கவீட்டுப்பிள்ளை திகழ்கின்றது.

    திருச்சி தஞ்சை மாவட்டங்களில்
    ஏ பி சி சென்டர் என சொல்லப்படும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ஊர்களில் மக்கள் திலகத்தின் காவியங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது.இதுப்போன்ற சாதனையை இதுவரை எந்த நடிகர் படமும் பெற்றதில்லை..........*

  11. #760
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதையெல்லாம் விட ரிக்க்ஷாக்காரன் வீசிய வசூல் அணுகுண்டு, உலகம் சுற்றும் வாலிபன் வரும் வரை எல்லா படங்களையும் தகர்த்தெறிந்தது. 51 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 50 லட்சம் வசூல் செய்து, அரசுக்கு வரியாக மட்டும் 20 லட்சம் கொடுத்துள்ளார் ரிக்க்ஷாக்காரன். விநியோகஸ்தர் தரப்பு அதிகாரபூர்வ விளம்பர ஆதாரம் இணைத்துள்ளேன். தமிழ்நாட்டில் 50 நாட்களில் ராஜா திரைப்படம் பெற்ற மொத்த வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ விளம்பரத்துடன் சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்வார்களா? 50 நாளிலேயே தமிழகம் முழுவதும் 50 லட்சம் வசூல் என்றால் நூறாவது நாளில் ரிக்க்ஷாக்காரன் பெற்ற வசூல் பற்றி சொல்ல வேண்டுமா? ரிக்க்ஷாக்காரன் வசூல் சாதனையை உலகம் சுற்றும் வாலிபன்தான் முறியடித்தார். இதை நாம் சொல்லவில்லை. தேவி பாரடைஸ் தியேட்டர் முதலாளி வரதராஜன் ஆனந்த விகடன் இதழுக்கு சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் சொன்னார். அப்போது வாலிபன் படத்துக்கு பத்திரிகையாளர் காட்சியின்போது கரண்ட் கட் ஏற்படக்கூடாது என்பதற்காக ஜெனரேட்டர் வைத்து ஓட்டினோம் என்றும் அந்தப் பேட்டியில் சொல்லி இருந்தார். அந்தப் பேட்டியின் பகுதியையும் இணைக்கிறேன். இறுதியாக ஒன்று.. தமிழ்நாட்டில் ரிக்க்ஷாக்காரன் 12 தியேட்டர்களில் 100 நாள் ஓடியது. இதற்கும் விநியோகஸ்தர் விளம்பர ஆதாரம் இணைக்கிறேன். வாலிபன் வரும்வரை ரிக்க்ஷாக்காரனை எந்த ராஜா-வும் அசைக்க முடியவில்லை. ஏனென்றால் மக்கள் திலகம் ராஜா என்ன... சக்ரவர்த்திகளுக்கெல்லாம் சக்ரவர்த்தி என்பது தெரிந்ததுதானே!.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •