-
1st September 2020, 11:26 AM
#581
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனை பட்டியலில் 1977ம் ஆண்டு வெளியான "மீனவ நண்பன்", " இன்று போல் என்றும் வாழ்க", "நவரத்தினம்" திரைப்படங்கள், காவியங்கள் மாபெரும் தொடர் சாதனைகள் புரிந்துள்ள வரலாறு சில...........
சென்னை நகரில் மீனவ நண்பன் திரைப்படம் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு தேவி பாரடைஸ் திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. தொடர்ந்து அகஸ்தியா 88 நாட்களும், உமாவில் 88 நாட்களும் கமலா அரங்கில் 40 நாட்களும் ஒடி 18 லட்ச ரூபாயை நெருங்கியது வசூலில் மீனவ நண்பன்...
சென்னை நகரில் அடுத்த இரண்டாவது வெளியீடாக கிட்டத்தட்ட 15 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்ட மீனவ நண்பன் குறிப்பாக முருகன், சீனிவாசா,கபாலி, ராம், நேஷனல், லஷ்மி, வீனஸ் திரையரங்குகளில் மூன்று வாரங்களை கடந்து அவ்வாண்டில் மிகப்பெரிய வசூலை ஏற்படுத்தி 23 லட்ச ரூபாயை ஆறு மாத காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்த காவியம் மீனவ நண்பன் ஆகும்.
மதுரை சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 140 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து 117 நாட்கள் ஓடி 4 லட்சத்து 46 ஆயிரத்து வசூலில் கொடுத்த வெற்றிகரமான காவியம் மீனவ நண்பன் ஆகும்.
மற்றும் கணேசா சிடி சினிமா வெள்ளை கண்ணு திரையரங்குகளில் இரண்டு மூன்று வாரங்கள் திரையிடப்பட்டு அங்கும் வசூலை ஏற்படுத்திக் கொடுத்த காவியம் மீனவ நண்பன் திரைப்படம் ஆகும்..........
-
1st September 2020 11:26 AM
# ADS
Circuit advertisement
-
1st September 2020, 11:28 AM
#582
Junior Member
Diamond Hubber
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தர்மபுரி, நாமக்கல், குமாரபாளையம் ,கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் திரையிடப்பட்ட திரைக்காவியம் மீனவ நண்பன் ஆகும். மீனவ நண்பன் திரைக்காவியம் 50 நாட்களில் மிகப்பெரிய சாதனையை இவ்வரங்கில் நிகழ்த்திக் காட்டி சரித்திரம் படைத்தது.*
உலகம் சுற்றும் வாலிபன் உரிமைக்குரல் , இதயக்கனி திரைப்படத்திற்குப் பின் மீனவ நண்பன் திரைக்காவியம்*
6 திரையரங்கிலும் 6 ஊர்களிலும் 50 நாட்களை கடந்து வெற்றி கொண்டு சாதனையாகும்.
கோவை மாநகரில் ராயல் திரையரங்கில் 68 நாட்களில்*
3 லட்சத்து 65 ஆயிரத்து வசூலாக கொடுத்து தொடர்ந்து சண்முகா திரையரங்கில் 4 வாரங்கள் ஓடி 4லட்சத்து 40 ஆயிரத்தை வசூலாக பெற்று மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்திய காவியம் மீனவ நண்பன் ஆகும் .
அதே போல இன்று போல் என்றும் வாழ்க திரைக்காவியம் ராஜா, முருகன் இரண்டு திரையில்*
திரையிடப்பட்டு 102 நாட்கள்*
ஓடி 4 லட்சத்து 15 ஆயிரத்தை வசூலித்து சாதனை ஏற்படுத்தியது..*
ஈரோடு மாநகரில் மீனவ நண்பன் திரைப்படம் 78 நாட்கள் ஓடி*
3 லட்சத்து 15 ஆயிரத்தை வசூலாக கொடுத்து சாதனையை ஏற்படுத்தியது. மக்கள் திலகத்தின் இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 68 நாட்கள் ஓடி*
2 லட்சத்து 95 ஆயிரத்து வசூலைக் கொடுத்து மிகப்பெரிய சாதனையை தக்க வைத்து, தங்கப்பதக்கம் உட்பட மற்ற அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்து முன்னணி... நவரத்தினம் 42 நாட்களில் 1,,85,304.00 வசூலை பெற்றது..........சேலம் நவரத்தினம்.....
47 நாள் பெற்ற வசூல் மட்டும்.
2,17,850.81ஆகும்.
ஒடி முடிய அல்ல....
6 காட்சி... 5 காட்சி திரையிடப்பட்டது.
இது தான் சரியான வசூல்..............
Last edited by suharaam63783; 1st September 2020 at 11:35 AM.
-
1st September 2020, 11:30 AM
#583
Junior Member
Diamond Hubber
மதுரையில் "மீனவ நண்பன்"*
"இன்று போல் என்றும் வாழ்க*"
100 நாட்களை கடந்து வெற்றி கொண்டது.
மீனவ நண்பன் திரைப்படம் முதல்வெளியீட்டில் ஒரு கோடியே 15 லட்சத்து 5 மாத காலத்தில் வசூலாக கொடுத்தது.*
முதல் வெளியீட்டில் 44 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 36 திரையரங்குகளில்*
50 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டது, அதேபோல இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 42 திரையரங்குகளில் வெளிவந்து*
26 திரையரங்குகளில் 50 நாளை கடந்து சரித்திரம் படைத்தது.*
ஆனால் தீபம் திரைப்படம் 12 தியேட்டர்களிலும், அண்ணன் ஒரு கோயில் திரைப்படம் 15 தியேட்டர்களில் மட்டுமே 50 நாட்களை கடந்தது.*
அண்ணன் ஒரு கோயில் திரைப்படம் மீனவ நண்பன் திரைப்படம் பெற்ற வசூலில் பாதி கூட பெறாமல் 9 தியேட்டரில் ஓட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1977ல் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் 3 வெளிவந்தது. முதலில் நவரத்தினம் அடுத்து இன்று போல் என்றும் வாழ்க அதன்பின் மீனவ நண்பன் 14 .8.1977 ல் வெளியான மீனவ நண்பன் திரைப்படத்திற்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்* முதல்வராக பதவியேற்ற பின் புதிய திரைப்படங்கள் அவ்வாண்டில் வெளிவரவில்லை தீபாவளிக்கு வெளிவந்த அண்ணன் ஒரு கோயில் திரைப்படத்தை சாந்தி கிரௌன் புவனேஸ்வரி மற்றும் சில ஊர்களில் நூறு நாட்களை குறைவான வசூலில் ஒட்ட செய்த அதிசயங்கள் அரங்கேறியது.
தொடரும் சாதனைகள் வசூல்கள்.............
-
1st September 2020, 11:33 AM
#584
Junior Member
Diamond Hubber
கோவை மாவட்டத்தில் கோவை ,ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, உடுமலை ,தாராபுரம், நகரங்களில் 50 நாட்கள் கடந்து சாதனை ஏற்படுத்தியது மீனவநண்பன் திரைக்காவியம் ஆகும். கோவை ஈரோடு மட்டுமே அ.ஒ.கோவில்
50 நாள் ஆகும்.
வட ஆற்காடு ,தென்னாற்காடு மாவட்டங்களில் இன்று போல் என்றும் வாழ்க மீனவ நண்பன் மாபெரும் புரட்சியை, எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவதாக நவரத்தினம் திரைப்படமும் பல இடங்களில் 5 வாரம் ஆறு வாரங்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை படைத்துள்ளது.*
மீனவ நண்பன் திரைக்காவியம்*
13 திரையரங்குகளில் திரையிடப்பட்டு* சாதனையை ஏற்படுத்தியது.*
ஆம்பூர் மாநகரமே கண்டிராத வகையில் 50 நாட்களை கடந்து வெற்றி படைத்தது.
வசூல் : 1,10,457.61 ஆகும்.
வேலூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருப்பத்தூர், ஆம்பூர், விழுப்புரம், விருத்தாச்சலம்,
குடியாத்தம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தின்டிவனம் , தாம்பரம், ஆகிய நகரங்களில் இக்காவியம் வெற்றியை தந்தது.
மதுரை மாவட்டத்தில் மக்கள் திலகத்தின் மீனவ நண்பன்*
இன்று போல் என்றும் வாழ்க, நவரத்தினம் திரைப்படங்கள் சரித்திர சாதனைகள் படைத்துள்ளது.**
மீனவ நண்பன் திண்டுக்கல், விருதுநகர், பழனி, காரைக்குடி, ராம்நாட் , ராஜபாளையம், தேனி* பகுதிகளில் 50 நாட்களை கடந்து சாதனை.**
இன்று போல் என்றும் வாழ்க*
50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்துள்ளது. திண்டுக்கல், விருதுநகர் ,பழனி, காரைக்குடி, ஆகும்..........
-
1st September 2020, 01:46 PM
#585
Junior Member
Platinum Hubber
குமுதம் வார இதழ் -09/09/20
-----------------------------------------------
மகனே, மனோகரா -
சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆருக்கு 40 வயது .தமிழ் சினிமா என்ற பத்திரிகையின் ஆசிரியர் கரீம் என்பவர் ,தன பத்திரிகையில்*எம்.ஜி.ஆரை கிழட்டு நடிகர் என்று குறிப்பிட்டார் .
அதை படித்த எம்.ஜி.ஆர். கோபப்படவில்லை .* மாறாக, கரீம் எழுதியதில் உண்மை உள்ளது .* மனோகரா நாடகத்தில் பம்மல் சம்பந்த முதலியார் நடிப்பார் .அந்த நாடகத்தில் நானும் சிறிய வேடத்தில் நடிப்பேன் .* ஒரு* காட்சியில் அம்மா .... இந்த* 16 வயது பாலகனைப் போருக்கு அனுப்புங்கள். வென்று வருகிறேன் என்பார் .* அப்போது அவருக்கு வயது* *40. துணிந்து பொய் சொல்கிறாரே என்று நினைப்பேன் .* அதை மக்கள் ஏற்றுக் கொண்டனர் .* அதுவேதான் என் விஷயத்திலும் . அதனால் கரீம் கவலைப்பட வேண்டாம் என்றார் .
எஸ்.எம்.உமர் எழுதிய கலை உலக சக்கரவர்த்திகள் நூலில் இருந்து*
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd September 2020, 11:34 AM
#586
Junior Member
Diamond Hubber
ஸ்ரீதர் ஒரு மிகச்சிறந்த இயக்குநர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
"யானைக்கும் அடி சறுக்கும்" என்பதை போல சிவாஜியிடம் சிக்கி சின்னாபின்னமாக ஆகி விட்டார்.
ஸ்ரீதர் ஒரு யதார்த்த இயக்குநர்.
அவருடைய படத்துக்கு ஒரு இயல்பான நடிகர்தான் அவருடைய எண்ணத்தை போல நடிப்பை வெளிப்படுத்த முடியும். சிவாஜி ஒரு மிகை நடிகர். அவர் எப்படி ஸ்ரீதர் படத்துக்கு பொருந்த முடியும்.
அதேபோல் பாலசந்தரும் சிவாஜியை வைத்து தோல்வி கண்டவர்தான். எவ்வளவு பெரிய இமயத்தையும் சாய்த்து விடும் ஆற்றல் பெற்றவர் சிவாஜி. "சந்திரலேகா" "ஒளவையார்"
"வஞ்சிக்கோட்டை வாலிபன்" "வாழ்க்கைப் படகு" & "ஒளிவிளக்கு" போன்ற பிரமாண்ட படங்களை தயாரித்த ஜெமினி பட நிறுவனமே "விளையாட்டு பிள்ளை" என்ற கலர் படத்தை தயாரித்து நிலை குலைந்து போனார்கள். அவர்கள் மட்டுமா? கோமதிசங்கர் பிக்சர்ஸ், ஜேயார் மூவிஸ், v k ராமசாமி, தேங்காய் சீனிவாசன் இது போன்ற எத்தனையோ கம்பெனிகள் முடிவில்
ஒன்றும் இல்லாமல் போய் விட்டதே?
ஒரு காலத்தில் தமிழ்ப்படவுலகின் ஜாம்பவான்கள் என்றழைக்கப்பட்ட பீம்சிங், பந்துலு, a p நாகராஜன், ஸ்ரீதர், p.மாதவன், k.விஜயன் அத்தனை பேரையும் நிர்மூலம் ஆக்கிய பெருமை சிவாஜியையே சாரும். "முடி சூடிய மன்னரும் முடிவில் பிடிசாம்பலாவார்"
என்று "அரிச்சந்திரா"வில் பேசிய வசனம் சிவாஜிக்கு கனகச்சிதமாக
பொருந்தி வரும். அனைவரையும் முடித்து விட்டு தன்னை படமெடுக்க ஆள் இல்லாததால் அவரும் ஓய்ந்து போனார்.
லாபமில்லாமலா இத்தனை படம் அவரை வைத்து எடுத்தார்கள் என்று ஒருவர் கேட்டிருந்தார். பத்மினி பிக்சர்ஸ் 15 படங் களுக்கு மேலே சிவாஜியை வைத்து எடுத்து முடிவில் கடனாளி ஆனார்களே? இது போல்தான் எத்தனை படங்கள் எடுத்தாலும் முடிவு நம்மவர் கையில்தான் என்பதை காலம் கடந்து உணர்ந்து என்ன பயன்?.
எம்ஜிஆரை வைத்து படமெடுத்தவர்கள் இறுதிவரை மீண்டும் மீண்டும் படம் எடுக்க துடித்தார்கள். எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகும் போது 10 க்கும் மேற்பட்ட படங்கள் அவர் கை வசம் இருந்தது. ஆனால் இங்கோ பிரபுவை புக் பண்ண வந்தவர்கள்கூட எங்கே சிவாஜி தன்னையும் போட சொல்லி வற்புறுத்துவாரோ என்ற பயத்தில் இருந்ததாக பல தயாரிப்பாளர்கள்
சொன்னது பல பத்திரிகைகளில் வந்த விஷயம்தான்.
மீண்டும் ஸ்ரீதரை கவனிப்போம். "நெஞ்சிருக்கும் வரை" மேக்கப் இல்லாமல் என்ற புதுமையுடன் சிவாஜியை வைத்து எடுத்த படம்.
இருவரும் இணைந்ததால் மாபெரும் வெற்றி என்று நம்பியிருந்த ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த படம். அதோடு விட்டிருந்தால் கூட ஸ்ரீதர் பிழைத்திருப்பார். "காதலிக்க நேரமில்லை" யில் நடித்த பெரும்பாலான நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த "ஊட்டி வரை உறவு". காமெடியால் ஓரளவு ஓடினாலும் தயாரிப்பாளரின் கையை கடித்த கதையை சிவாஜியே கூறியிருக்கிறார்.
அது தயாரிப்பு 'கோவை செழியன்'. அதனாலும் ஸ்ரீதருக்கு எந்த வித பாதிப்புமில்லை.
அடுத்து அவர் எடுத்த "சிவந்த மண்" அவர் தலையில் பேரிடியை இறக்கிய படம். கண்மண் தெரியாமல் கணேசனை நம்பி கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த படத்தை கண்டு சினிமா உலகமே அதிர்ச்சி அடைந்தாலும் ஸ்ரீதர் எந்த கணக்கும் பார்க்காமலே தாராளமாக செலவு செய்தார். தன்மீது அவ்வளவு நம்பிக்கை வைத்த போதிலும் அங்கேயும் விளையாடி விட்டார் சிவாஜி
சிவாஜி ரசிகர்கள் அப்போது பெருமையாக "சிவந்த மண்ணு"க்கு இப்போதே 1 1/2 கோடி செலவு என்று பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆனால் படம் படுதோல்வி அடைந்த பின்பு இந்தி படத்துக்குத்தான் அதிக செலவு, "சிவந்த மண்" தோல்வியில்லை என்று
சப்பை கட்டு கட்டுகின்றனர். சரி அதை விடுவோம். எம்ஜிஆருக்கு 'பாரத்' பட்டம் கிடைத்ததை பாராட்டும் போது ஸ்ரீதர் அளித்த பேட்டியை பாருங்கள்.
எம்ஜிஆரை வைத்து 'உரிமைக்குரல்' தயாரிக்கும் முன்பே
எம்ஜிஆர் தான் அகில இந்தியாவிலும் சிறந்த நடிகர் என்றும் உலக பெரும் விருதுக்கும் தகுதியானவர் என்றும் உண்மையை ஒப்புக்கொண்டு அவரை பாராட்டியிருக்கிறார். எம்ஜிஆரின் படங்கள் உலகம் முழுவதும் பெரிய அளவில் வெற்றி பெற்று ஓடுவதே அதற்கு சாட்சி என்றும் எடுத்துரைக்கின்றார்.
'சிவந்த மண்ணி'ல் சிக்காமல் 'அன்று சிந்திய ரத்தத்தை' எடுத்திருந்தால் அலைகடலின் சிறிய தோணி பெரிய கப்பலாக மாற இருந்த வாய்ப்பை இழந்ததோடு இருக்கிற சிறிய தோணியும் நடுக்கடலில் தத்தளிக்க
விட்டு விட்டார்.
எம்ஜிஆருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை "அன்று சிந்திய ரத்தத்தி"ன் படப்பிடிப்பு தளத்திலே தான் உணர்ந்து கொண்டதாக அவர் கூறியிருந்தார். எம்ஜிஆரிடம் மனம் திறந்து பேசி படத்தை கலரில் எடுத்திருந்தால் அந்தப்படம் நல்ல முறையில் வளர்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எம்ஜிஆர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தும் படம் மேற்கொண்டு வளராமல் போனது ஸ்ரீதரின் துரதிர்ஷ்டமே..........
-
2nd September 2020, 03:29 PM
#587
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*13/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் நேர்ந்த துன்பங்கள், பிரச்னைகள்,சிக்கல்கள் ஆகியவற்றை களைந்து ,வாழும் காலத்தில் வெற்றி படிக்கட்டுகளை தானே* வடிவமைத்த சிற்பியாக திகழ்ந்தவர் .என்பதற்கு வேறு எங்கும் உதாரணத்தை தேடவேண்டாம் . இந்த உலகத்திலே தேடினாலும் கிடைக்காத அற்புதமான* ஒரு அரிய பொக்கிஷமாக எம்.ஜி.ஆர். எனும் தனி நபர் வாழ்க்கை உள்ளது .அந்த வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்வதற்கான பாடங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன**
எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் குன்றியபோது ,ஜப்பானில் இருந்து வந்த டாக்டர் கானு* என்பவர் தகுந்த சிகிச்சை அளித்து ,அவர் குணமடைய பல யோசனைகள், கருத்துக்கள் தெரிவித்து இருந்தார் .எம்.ஜி.ஆர். பரிபூரண குணமடைய டாக்டர் கானுவின் சிகிச்சை முறைகள் பெரிதும் பலனளித்தன.அதற்கு நன்றி செலுத்தும் வகையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது .அப்போது தங்கத்தில் யானை பொம்மை பரிசு அளிக்க எம்.ஜி.ஆர். விரும்பினார் .அதை வடிவமைத்த பிறகு எம்.ஜி.ஆரின் பார்வைக்கு வந்தபோது , யானையின் துதிக்கையும்,வாயும் அளவில் ஒரே வடிவத்தில் உள்ளது .அதை மாற்றி அமைக்க சொல்லி உத்தரவிட்டார் .பரிசு பொருளாக இருந்தாலும் அதன் வேலைப்பாடில் உள்ள குறைகளை வெகு நுட்பமாக கண்டுபிடித்து அதை சரிசெய்ய சொன்னார் .அதன்பின் அந்த தங்கயானையை* டாக்டர் கானுவுக்கு பரிசளித்தார் . எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவற்றை நுட்பமாக கவனிப்பது, அற்புதமாக கண்காணிப்பது என்று எம்.ஜி.ஆருக்கு சிந்தனை இருந்ததன் காரணமாக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் வெற்றிக்கான பாதையை கண்டறிய முடிந்தது என்பதற்க்கு சிறந்த ஒரு சான்றுதான் இந்த தங்கையானை பரிசளிப்பு சம்பவம் .
1974ல் லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு வந்தது .அப்போது நடிகை லதாவை அழைத்து* நீ கான்வென்டில் ஆங்கிலத்தில் படித்ததனால், நான் தமிழில் பேசும்போது மொழிபெயர்த்து சொல்லவேண்டும்*என்று கூறி லண்டனுக்கு உடன் அழைத்து சென்றார்* அங்கு ஒரு கூட்டத்தில் பேசும்போது, அன்புள்ள தாய்மார்களே, பெரியோர்களே, என் ரத்தத்தின் ரத்தமே என்று பேசும்போது* ஆங்கிலத்தில் நடிகை லதா ரத்தத்தின் ரத்தங்களே என்பதற்கு சகோதர,சகோதரிகளே என்று மொழி பெயர்த்தார்.அதை கவனித்த* எம்.ஜி.ஆர்.* .உடனே . குறுக்கிட்டு,அது பொருத்தமான மொழி பெயர்ப்பு அல்ல ஒரு கணம் யோசித்து பொருத்தமாக மொழி பெயர்க்கசொன்னதற்கு பிறகு நடிகை லதா தவறை உணர்ந்து சரியாக பேசினார் .அதாவது எம்.ஜி.ஆர். ஆங்கிலம் முறையாக பயிலாவிட்டாலும் .ஓரளவு எளிமையாக ஆங்கிலம் பேசும் அளவிற்கு ஆசிரியர் வைத்து கற்று கொண்டதோடு ,மற்றவர்கள் தவறாக பேசினால் அதை திருத்தும் அளவிற்கு ஆங்கிலத்தில் அவருக்கு புலமை இருந்தது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம் .
1956ல் ஒரிசாவில் புயல் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன .அந்த நேரத்தில் சென்னையில் படித்து கொண்டிருந்த ஒரிசா மாணவர்கள் ஒரு இந்தி திரைப்படத்தை வெளியிட்டு ,அத்துடன் ஒரு நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர். தலைமையில் நடத்தினால் நல்ல வசூல் கிடைக்கும்*அந்த நிதியை ஒரிசாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம் என்று கருதினர் . அதன்படி சென்னை அசோக் (சிவசக்தி ) தியேட்டரில் சிறப்பு காலை காட்சி எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற முடிவு செய்து சம்மதம் பெறபட்டது ,அந்த கால கட்டத்தில் தமிழ் நடிகை வைஜயந்தி மாலாவும் நடிகர்*திலீப்குமாரும் நடித்து நியூ டெல்லி என்கிற இந்தி படம் சில தியேட்டர்களில் வெளியாகி இருந்தது .அதில் ஒரு காட்சியில் தமிழன் தலையில் செருப்பு வைத்தபடி கதாநாயகன் ஆடுவது, அருகில் கதாநாயகி இருப்பது போல் ஒரு காட்சி இருந்தது .இந்த காட்சி பற்றி பரபரப்பாக அப்போது பேசப்பட்டது .விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். தர்மசங்கடத்திற்கு உள்ளானார் . தி.மு.க. இந்தி எதிர்ப்பு பற்றி முழங்கி வந்த நேரம் .ஆனால் எம்.ஜி.ஆர். இந்தி மொழிக்கு எதிரானவரல்ல .இந்தி மொழியை திணிப்பதைத்தான் எதிர்த்தார் அந்த குறிப்பிட்ட காட்சி பற்றி விவரம் அறிந்த*. மாணவர்களுக்கு மனதில் குழப்பம் ஏற்பட்டது .எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிக்கு வருவது சந்தேகம் என்று நினைத்தனர் .*ஆனால் எம்.ஜி.ஆர்.கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்திற்கு நடுவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . இடைவேளையின்போது எம்.ஜி.ஆர். பேசியதாவது ,தமிழ்நாட்டில் ஒரு இந்தி படம் திரையிடப்பட்டுள்ளது .அதில் தமிழன் ஒருவர் தலையில் செருப்பு வைத்து கதாநாயகன் ஆடும் காட்சி கண்டு நான் மிகவும் வேதனைப்பட்டேன். மனம் வருந்தினேன் .இதுபற்றி மாணவர்கள் ஏன் முன்கூட்டி எனக்கு தகவல் அளிக்கவில்லை .மாணவர்களின் பரந்த மனப்பான்மை, மக்களுக்கு* *உதவும் திட்டம் என்று கருதிதான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் .இருப்பினும் என்னுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். மாணவர்கள் என்னை நாளை வீட்டில் வந்து சந்தியுங்கள் என்று கூறி புறப்பட்டார் .* மறுநாள் மாணவர்கள் சென்றதும் அவர்களை வரவேற்ற எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் வெளியிடும்போது அதன் கருத்துக்கள், காட்சிகள் மக்களால் வரவேற்கப்பட வேண்டுமே தவிர , அவர்கள் மனம் புண்படும்படியோ, வேதனைப்படும் படியோ இருக்க கூடாது .அந்த காட்சி எனது மனதை மிகவும் பாதித்தது .நான் சார்ந்த தி மு.க. கட்சியில் கூட என்னை பற்றி தவறாக நினைக்கும் வாய்ப்பு உள்ளது .இந்த நிகழ்ச்சியை நான் தவிர்த்து இருக்கலாம் என்றுகூட அவர்கள் நினைத்திருக்கலாம் . ஆனால் நான் வந்ததற்கு காரணம் ஒரிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் உதவ ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அதற்கு என்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் .நான் ஒருவேளை வராமலிருந்தால் பகிரங்கமாக என் எதிர்ப்பை தெரிவிக்க முடியாமல் போயிருக்கும் . அந்த எதிர்ப்பின் வலிமையை மற்றவர்களும் உணராமல் போயிருப்பார்கள் . அதுமட்டுமல்ல அங்கு நிதி அளிக்க முன்வராததற்கு இதுவும் ஒரு* காரணம் .மேலும் நான் நிதி அங்கு அளித்து இருந்தால் ,கணிசமாக நிதி சேர்ந்துவிட்டது என்று எண்ணி நிதி தரக்கூடியவர்கள் தராமல் போக வாய்ப்புள்ளது . எனவேதான் என் எதிர்ப்பையும், கருத்தையும் தனிப்பட்ட முறையில் உங்களிடம் தெரிவிப்பதோடு ,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரிசா மாநில மக்களுக்கு உதவ நீங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு என்னால் முடிந்த அளவில் உதவுகிறேன் என்று கூறி 1956ல் ரூ.10,000/- நிதி அளித்து மாணவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் .பின்பு அவர்களை நன்கு உபசரித்து அனுப்பினார் .
எம்.ஜி.ஆர். அவர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர் அல்ல.இந்தி மொழி திணிப்பைத்தான் எதிர்த்தார் என்பதற்கு உதாரணம் . நவரத்தினம் படத்தில்*ஆரம்பத்தில் வரும் ஒரு இந்தி பாடலுக்கு நடிகை ஜரினா* வகாப்புடன் நடித்திருப்பார் .அந்த காலத்தில் ஒரு கட்டத்தில் கச்சா பிலிம் ரோல் தட்டுப்பாடு ஏற்படுகிறது . பிலிம்ரோல் வாங்கும் இடத்தில உள்ள ஒரு அதிகாரி, நல்ல உடற்கட்டு, முகவெட்டு உள்ளவர் .அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை.*எம்.ஜி.ஆரின் பட தயாரிப்பாளர் ஒருவருடன் இவருக்கு தொடர்பு ஏற்படுகிறது .தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரிடம் அவரை பற்றி சொல்லி ,இவரை நாம் பயன்படுத்தி கொண்டால் கச்சா பிலிம் ரோல் கொஞ்சம் தாராளமாக கிடைக்கும் என்று சொல்கிறார் .எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ஏனென்றால் இந்த திரைப்பட தொழிலையே நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாடம் உழைத்து* பிழைத்து* வருகிறார்கள் . ஆனால் அவருக்கோ நிலைமை அப்படியில்லை.*சர்க்கார் சம்பளம் வாங்குகிறார் . 60 வயதுக்கு பின்பும் அவருக்கு ஒய்வு ஊதியம் கிடைக்கும் .திரைப்பட தொழிலாளர்கள் நிலை அப்படியில்லை. எனவே அப்படிப்பட்ட நிரந்தர வருவாய் பெற்று வரும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தாதீர்கள்.அத்துடன் இங்குள்ள தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பது போல் ஆகிவிடும் அந்த எண்ணத்தை அடியோடு விட்டுவிடுங்கள் என்று அறிவுரை கூறினார் .
மாற்றாருடைய பசி உணர்வும், மாற்றார் கேட்காமலேயே உதவும் மனப்பான்மை*கொண்ட மாண்புடையவர் எம்.ஜி.ஆர். அந்த மாண்புதான் மறைந்தும் மறையாத நிலையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது .* அந்த மகானுடைய*வாழ்க்கை பாடங்கள், படிப்பினைகள் நமக்கு வழிகாட்டி கொண்டிருக்கும் .அதை தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*
நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பான காட்சிகள்/பாடல்கள் விவரம்*
------------------------------------------------------------------------------------------
1.மஞ்சள் முகமே வருக* - வேட்டைக்காரன்*
2.நேரம் நல்ல நேரம் - தனிப்பிறவி*
3.ஆகட்டுண்டா தம்பி ராஜா ,நடராஜா - நல்ல நேரம்*
4.பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ -சிரித்து வாழ வேண்டும்*
5.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க .
6.தமிழில் அது ஒரு இனிய கலை - சங்கே முழங்கு*
7.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல்- நேற்று இன்று நாளை*
8.லடுக்கேசீ மிலி லடுக்கி-இந்தி பாடல் -நவரத்தினம்*
9.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல் - ரிக்ஷாக் காரன்*
10.ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*
-
3rd September 2020, 07:51 AM
#588
Junior Member
Diamond Hubber
1963 ஆம் ஆண்டு மக்கள் திலகம் திரையில் வலம் வந்த திரைப்படங்கள் ஒன்பது ஆகும்.அவ்வாண்டில் அதிக வசூலை படைத்து தமிழகமெங்கும் பெரிய நகரம் முதல் சிறிய கிராமங்கள் வரை மிகப்பெரிய வெற்றியை உருவாக்கிய முதல் திரைக்காவியம் அதிக வசூலை படைத்த வெற்றிக் காவியம் பெரிய இடத்துப் பெண் திரைப்படமாகும்.
பெரிய இடத்துப் பெண் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்திக் கொடுத்து அவ்வாண்டில் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் கொடுத்தது.
1963 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் 9 திரைப்படங்களும் மாபெரும் வரலாற்றைப் படைத்தது.
பெரிய இடத்துப் பெண்,
கொடுத்து வைத்தவள், நீதிக்குபின் பாசம், பரிசு, தர்மம் தலைகாக்கும், பணத்தோட்டம், ஆனந்த ஜோதி, காஞ்சித்தலைவன், கலையரசி திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்தது.
பெரிய இடத்துப் பெண் திரைப்படம் சென்னையில் சித்ரா,கிரவுன் திரையரங்கில் 100 நாட்களும் மதுரை திருச்சி சேலம் கோவை யில் 92 நாட்களும் ஓடியது.
33 திரையரங்குகளில் 50 நாளை வெற்றி கொண்ட ஒரே திரைப்படமாக
பெரிய இடத்துப்பெண் திகழ்ந்தது.1963 ல் அதிக வசூலை ஏற்படுத்திய ஒரேபடமாகும்.
வித்தியாசமான கதையமைப்பில் இரு வேடங்கள் தாங்கிய கதாபாத்திரத்தில் முருகப்பன் அழகப்பன் என்ற மகத்தான தோற்றத்தில்.... பாடல்கள், சிறப்பான கதை அமைப்புடன் கூடிய காவியமாக வெளிவந்தது.
கிராமத்திலும் நகரத்திலும் வெற்றியை பதித்த திரைக்காவியம் பெரிய இடத்துப் பெண்.
சென்ற ஆண்டு வரை இக்காவியம் ஓய்வில்லாது திரையில் வெற்றிக் கொடியை நாட்டி வந்துள்ளது சுமார் 57 ஆண்டுகள் கழித்தும் இத்திரைப்படம் இன்றும் வெள்ளித்திரையில் உலா வருவது சிறப்பாகும்.
தொடரும்.............
-
3rd September 2020, 07:51 AM
#589
Junior Member
Diamond Hubber
சிவாஜி கணேசன் ஸ்ரீதரை வைத்து சிவந்த மண் படம் எடுத்து தர்த்தி இந்திப் படத்தையும் சேர்த்து எடுத்து தயாரிப்பு செலவுக்கு ஏற்ற பணம் வசூலாகவில்லை. அவளுக்கென்று ஒரு மனம் படமும் தோல்வி. சிவாஜி கணேசனை வைத்து ஹீரோ 72 என்று ஆரம்பித்தார். சிவாஜி கணேசன் ரசிகர்கள் 1972 என்றால் துள்ளுவார்கள். அத்திப்பூத்தாற்போல அந்த ஒரு ஆண்டுதான் அவர்களுக்கு அதிக படங்கள் வெற்றி. ஆனாலும், பாரத் விருது, திமுகவில் இருந்து நீக்கம், அதிமுக உதயம், தமிழகம் முழுவதும் ஆதரவு அலை, புரட்சி நடிகர் புரட்சித் தலைவர் ஆனது என்று அந்த ஆண்டு உண்மையான ஹீரோ 72 ஆக மக்கள் திலகம்தான் வெற்றிபெற்றார். சிவாஜி கணேசன் நடித்த ஹீரோ 72 படமும் பணப் பிரச்சினையால் பாதியில் நின்றது. அதை முடித்துக் கொடுக்க
ஸ்ரீதருக்கு சிவாஜி கணேசன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேலும் ஸ்ரீதர் கால்ஷீட் கேட்டதற்கு சிவாஜி கணேசன் தம்பி பிடிகொடுக்காமல் இழுத்தடித்து, (சிவாஜி கணேசனின் கால்ஷீட்களை கவனித்து வந்த அவரது தம்பி சண்முகம் அண்ணனை விட கஞ்சன். பணம் வந்தால்தான் சிவாஜியை நடிக்க போகலாம் என்று சொல்வார்) சிவாஜி கணேசனும் சிங்கப்பூர் சென்று விட்டார். இதை ஸ்ரீதரே சொல்லி இருக்கிறார். அந்த நிலையில்தான் சிவாஜி கணேசனால் கைவிடப்பட்டு கடனில் இருந்த ஸ்ரீதருக்கு உரிமைக்குரல் படம் மூலம் மக்கள் திலகம் மறுவாழ்வு கொடுத்தார். ஸ்ரீதர் படங்களிலேயே அதிக வசூல் அள்ளிக் கொடுத்த படம் உரிமைக்குரல்.
உரிமைக்குரல் அடைந்த பிரம்மாண்ட வெற்றியால் சிவாஜி கணேசன் பொறாமைப்பட்டு ஸ்ரீதருக்கு ஹீரோ 72 படத்தை ஏனோதானோ என்று முடித்துக் கொடுத்தார். அதுதான் வைரநெஞ்சம் என்று வெளியானது. எந்த அளவுக்கு சிவாஜி கணேசன் ஒத்துழைப்பு இல்லை என்றால் ஒரு இடத்தில் சிவாஜி கணேசன் டப்பிங் பேசவே இல்லை. அந்தப்படத்தில் பாலாஜியின் பிறந்தநாள் அன்று ஷோபா ராமநாதனாக வரும் சிஐடி சகுந்தலாவுடன் சிவாஜி கணேசன் கைகோர்த்து ஆடியபடி பேசுவார். அப்போது சிவாஜி கணேசன் குரலுக்கு பதிலாக ரேடியோ விளம்பரங்களில் பேசியவர் (அவர் பெயர் சுந்தர் என்று நினைவு) பேசுவார். ஒரு தமிழ் படத்தில் சிவாஜி கணேசனுக்கு தமிழ் வசனத்தில் டப்பிங் குரல் கொடுக்கப்பட்ட ஒரே படம் வைரநெஞ்சம். இதை விவரம் தெரிந்த எந்த சிவாஜி கணேசன் ரசிகரும் மறுக்கமாட்டார்கள். அந்த அளவு பொறாமையால் சிவாஜி கணேசன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சிவாஜி கணேசன் டப்பிங் கொடுக்கும் முன்பே ஸ்ரீதர் அவசரப்பட்டு வெளியிட்டார் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் சப்பைகட்டு கட்டி பொய்சொல்வார்கள். 72ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 75ல் வெளியானது. இதுதான் அவசரமா? கடைசியில் வைரநெஞ்சம் படமும் டாக்டர் சிவா படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டும் டப்பாவுக்குள் போய் நஷ்டம் ஏற்படுத்தியது தனிக்கதை. இதுவும் ஒரே நாளில் 2 படம் வெளியாகி சிவாஜி கணேசன் ஏற்படுத்திய சாதனை..........
-
3rd September 2020, 07:52 AM
#590
Junior Member
Diamond Hubber
புரட்சித் தலைவரை வைத்து அன்று சிந்திய ரத்தம் படம் கறுப்பு வெள்ளையில் ஸ்ரீதர் எடுத்தார். அதேநேரம் ரவிசந்திரன் என்ற புதுமுகம் நட்சத்திர அந்தஸ்து இல்லாத முத்துராமனை வைத்து காதலிக்க நேரமில்லை படத்தை கலரில் எடுத்தார். இது சம்பந்தமாக விளம்பரமும் வந்தது. இதுபற்றி ஸ்ரீதர் சொன்னது இதுதான்: மக்கள் திலகத்திடம் யாரோ தவறாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. அவருக்கு அவரே விளம்பரம் என்று நினைத்தேன். அதனால் அவர் படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்தேன். ஒரு சில காட்சிகள் எடுத்த பிறகு மீண்டும் படப்பிடிப்புக்காக அவரை பார்க்கப் போனேன். ஆனால், அவர் அப்போது என்னிடம் ஒரு பெரிய பட்டியலை காண்பித்து இவ்வளவு படக்கம்பெனிகளுக்கு நடித்து தர வேண்டியிருக்கிறது என்றார். ஆமாம், இவ்வளவு கம்பெனிகள் இருக்கும்போது எனக்கு நீங்கள் நடிப்பது கஷ்டம்தான் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவரை வைத்து கறுப்பு வெள்ளையில் எடுப்பதை அவரிடம் விளக்கமாக சொல்லியிருந்தால் அவரும் புரிந்து கொண்டிருப்பார். அவரிடம் விளக்காததை நினைத்து வருந்தினேன்’..
என்று ஸ்ரீதர் தனது அனுபவத்தை சொல்லியிருந்தார். பிறகும் ஸ்ரீதர் கடனில் சிக்கியபோது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மக்கள் திலகம் அவருக்கு உரிமைக் குரல் படத்தை செய்து கொடுத்து மறுவாழ்வு அளித்தார். அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக ஸ்ரீதரிடம் அட்வான்ஸாக வாங்கிய 25 ஆயிரம் ரூபாயை உரிமைக்குரல் பட சம்பளத்தில் மக்கள் திலகம் பெருந்தன்மையைாக கழித்துக் கொண்டார் என்றும் ஸ்ரீதர் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் ஸ்ரீதருக்கு ஒத்துழைக்காதது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். ...........
Bookmarks