Page 36 of 210 FirstFirst ... 2634353637384686136 ... LastLast
Results 351 to 360 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #351
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    1966 நவ 11 ல் வெளிவந்த மகத்தான வெற்றிப் படம் "பறக்கும் பாவை" r r பிக்சர்ஸின் முதல் வண்ணப்படம். அதேபோல் r r பிக்சர்ஸுடன் எம்ஜிஆர் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படமும் இதுதான் அழகான வண்ணக்காட்சிகளையும் அருமையான பாடல்களையும் அற்புதமான சண்டை காட்சிகளையும் வியத்தகு சர்க்கஸ் காட்சிகளையும் எதிர்பாராத சஸ்பென்ஸ் காட்சிகளையும் உள்ளடக்கிய "பறக்கும் பாவை" வெளியான காலச்சூழல் சரியில்லை என்று நினைக்கிறேன்.

    இப்போது பார்த்தாலும் படம் ஒரு காட்சி கூட தளர்வில்லாமல் விறுவிறுப்பாக செல்லும். சர்க்கஸில் மிருகங்களை தடை செய்தவுடன் மெல்ல மெல்ல சர்க்கஸ் அழிந்து போவதை நாம் கண்கூடாக காண்கிறோம். நல்லவேளை "பறக்கும் பாவை" அதற்கு முன்பே எடுக்கப் பட்டதால் சில அபூர்வமான சர்க்கஸ் காட்சிகளை நாம் காண முடிகிறது. .1966 தீபாவளிக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலர் படம்.
    "பறக்கும் பாவை"யோட "செல்வம்," "வல்லவன் ஒருவன்" போன்ற படங்கள் வந்தாலும் வசூலில் தூள் கிளப்பிய படம் "பறக்கும் பாவை"தான்.

    எம்ஜிஆர் படங்களை பொறுத்தவரை முதல் 4 வாரங்களுக்கு வசூலில் அதிக வித்தியாசம் இருக்காது. ஏனென்றால் முதல் 4 வாரங்கள் எல்லா எம்ஜிஆர் படங்களுமே ஹவுஸ்புல்லாகத்தான் செல்லும். 4 வாரங்களுக்கு பிறகு படம் சுமாரான வெற்றியடைந்தால் அப்போதுதான் சிறிது ஏற்றம், இறக்கம் காணப்படும்.
    "பறக்கும் பாவை"யை அடுத்து டிசம்பர் 9 ல் வெளியான "பெற்றால் தான் பிள்ளையா"? பெரிய வெற்றியை பெற்றதால் பிற்பகுதியில் வசூலில் சற்று தளர்வு ஏற்பட்டது உண்மைதான்.

    இருப்பினும் முதல் 4 வாரங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக சொல்லப்படும் கணேசனின் "திருவிளையாடல்" "சரஸ்வதி சபதம்" போன்ற படங்கள் திருவண்ணாமலையில்
    "பறக்கும் பாவை"யிடம்
    பட்ட பாட்டை பாருங்கள் .
    தீபாவளிக்கு "பறக்கும் பாவை"யுடன் வந்த "செல்வம்" முதல் வாரவசூலில் முக்கிய நகரங்களில் மிகவும் பின்தங்கியிருப்பதையும் பார்க்கலாம்.
    அங்கு மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இதுதான் கதை.

    அதையடுத்து 67 ஜன 13 ல் வெளியான தாய்க்குத் தலைமகன் .வரும் வரை சென்னையில் 63 நாட்கள் ஓடியது.
    மற்ற நகரங்களில் அதிகபட்சமாக
    77 நாட்கள் வரை ஓடியது. மறு வெளியீட்டிலும் தொடர் ஓட்டம் ஓடி
    வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

    "பறக்கும் பாவை" பட வெளியீட்டை ஒட்டி வேலூர் எம்ஜிஆர் மன்றத்தினர் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது கூடுதல் சிறப்பு. அதுவரை வெளியான எம்ஜிஆரின் சாதனை படங்களின்
    முழு விபரங்களை பதிவு செய்திருந்தார்கள். அந்த மலரின் முகப்பு தோற்றத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

    எம்ஜிஆரின் பழைய படங்களின் லாபத்தை வைத்தே. T r ராமண்ணா வேறு நடிகர்களை வைத்து பல புதிய படங்களை தயாரித்தார். அதில் முக்கியமான "நான்", வெள்ளிவிழா கண்ட படம். "தங்க சுரங்கத்தி"ல் தடுக்கி விழுந்த பின்னும் "மாட்டுக்கார வேலனை" இயக்கும் வாய்ப்பை மக்கள் திலகம்
    நட்புக்காக கொடுத்தாலும் அதை மறுத்ததால் ப.நீலகண்டனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அவர் எடுத்த படங்கள் எல்லாமே சறுக்கல்கள்தான்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #352
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    "அடிமைப்பெண்" பிரமாண்ட படத்தின் செலவு சுமார் 40 லட்சம் என்று படம் வெளியாகும் நேரத்தில் சொல்லப்பட்டது. இதில் எம்ஜிஆர் சம்பளம் சேர்க்கப்படவில்லை. கோடியை தாண்டி வசூல் செய்தாலுமே போட்ட முதலை எடுக்க சுமார் 6 மாத காலம் தேவைப்பட்டது "அடிமைப்பெண்ணு"க்கு. அதன்பின்பு வெளியான "சிவந்த மண்ணி"ன் தயாரிப்பு செலவு தமிழுக்கு மட்டுமே சுமார் 42 லட்சத்தை தாண்டியது.
    ஆனால் வசூல் அந்த அளவுக்கு எட்டிப்பிடிக்க முடியவில்லை. இரண்டு மொழிகளிலும் சேர்த்து சுமார் 50 லட்சத்திற்கும் மேல் கடனை பெற்றது ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனம்.

    இவ்வளவு நடந்த பின்னும் பெரியண்ணன் என்றொரு தயாரிப்பாளர் சிவாஜியை வைத்து பெரும் பொருட்செலவில் உருவாக்கிய படம்தான் "தர்மம் எங்கே?" சிவாஜியின் அருமை டைரக்டர் A C திருலோகச்சந்தர் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்த படம்தான் தர்மம் எங்கே? தயாரிப்பு செலவு 50 லட்சம் என்றும் பிரமாண்ட படம் என்றும் சொல்லப்பட்டது.

    சிவாஜியை பொருத்தவரை பிரமாண்ட படங்கள் எதுவும் ஓடியதாக என் நினைவில் இல்லை.
    புதிய பறவை, கர்ணன், சிவந்த மண், ராஜ ராஜ சோழன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் பெரிய ஊர்களில் கூட 5 வாரம் தாண்டவில்லை. படத்தை முதலில் பார்த்தவர்கள் மிகவும் நல்லவர்கள். "யாம் பெற்ற துன்பம் வையகம் பெறாமலிருக்க" தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் அலறியபடியே ஓடினார்கள். எங்கள் ஊரில் முதல் நாள் மாலை 6 மணிக்காட்சிக்கு படம் வாய் பிளந்து நிற்பதை பார்த்தோம்.

    இழுத்து பிடித்து ஓட்டினாலும் ஒரு வாரம் கூட ஓட்ட முடியாது என்று நினைத்த படத்தை 11 நாள் ஓட்டி 1972 ல் மிகப் பெரும் சாதனை புரிந்ததை அவர்கள் வாய் திறக்கவே இல்லை. மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம், திறமையான டைரக்டர் இருந்தும் படத்தை சிவாஜியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் அனைவரும் தோல்வியடைந்தனர். சிவாஜியின் மிகை நடிப்பைக்கண்டு. புலியின் பள்ளியறைக்குள் வந்த புள்ளிமானைப்போல் பதறி, சிதறி, பின் கதறி சென்ற மக்களை கண்டு நெஞ்சம் உதறல் எடுத்ததை மறவேன்.

    வாணிஸ்ரீயால் வாழ்ந்த வசந்த மண்டபத்தையும் ஜெயாவால் வாழ்க்கை பெற்ற மூக்கையா தேவரையும் மறந்து நீங்க பேசுவதில் தர்மம் எங்கே? என்று தேடினாலும் கிடைக்காது. 1972ல் நடந்த இத்தனை பெரும் தோல்வியை மறைத்து மற்ற நடிகர் நடிகைகளால் வெற்றி பெற்ற வேறு சில படங்களை சொல்லி பெருமை கொள்வதை என்னவென்று நினைப்பது. ஒரு நடிகரின் நட்சத்திர மதிப்பு என்பது அவர் நடித்த படுதோல்வி படங்களின் ஓட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தர்மம் எங்கே? மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன? நீங்களே சொல்லுங்கள்.

    போட்ட பணத்தில் 15 லட்சம் கூட திரும்பியிருக்க வாய்ப்பில்லை.
    மொத்தம் 35 லட்சத்துக்கு மேல் தயாரிப்பாளருக்கு நஷ்டம்.
    தயாரிப்பாளர் 'பெரியண்ணன்' படம் வெளிவந்த பின்பு 'சின்னத்தம்பி' ஆகியிருப்பார் என்றே நினைக்கிறேன். மிகை நடிப்பு என்று நான் சொல்லவில்லை அந்தப்படத்தின் விமர்சனத்தை எழுதிய அறந்தை நாறாயணன் அங்கலாய்ப்பதை பாருங்கள். அதேபோல் ராஜ ராஜ சோழன் மூலம் ஜி.உமாபதி, ஜீரோ உப்புமாபதி ஆனதையும் மறக்க முடியுமா?

    எம்ஜிஆரை வைத்து கோடி ரூபாய் செலவில் 70 mm படம் எடுக்க போட்டிருந்த திட்டமும் பணால் ஆகிவிட்டதை நாங்கள் மறவோம். அறந்தை நாறாயணனும் சாதாரணமாக அந்த படத்தை பார்த்துவிடவில்லை. அந்த படத்தை பார்ப்பதென்பது பாலைவனத்தில் தண்ணீரும் ஒட்டகமும் இல்லாமல் அலைவதற்கு ஒப்பானது என்பது
    அவர் எழுதிய விமர்சனத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    என்னை பொறுத்தவரை வழக்கமான சிவாஜி படங்களில் காணப்படும் மிகை நடிப்பு நட்சத்திர பட்டாளங்களின் அணிவகுப்பு, சிறந்த டைரக்டர், சிறந்த இசையமைப்பாளர், அருமையான வண்ணம், காஸ்ட்லி படப்பிடிப்பு இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும் படம் தோல்வியடைய காரணம் என்ன? உங்களுக்கு ஏதாவது தோணுகிறதா? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பார்கள். அது எது? சிவாஜியின் அளவு கடந்த அலறல் மற்றும் மிகைக்கும் மிகையான நடிப்பே?
    என்றால் அது மிகையாகாது.

  4. #353
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 12/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்திற்கு சமமாக பல மூன்றெழுத்துக்கள் உள்ளன கடமை எனும் மூன்றெழுத்தை உயிர் மூச்சாக கடைபிடித்தார் .கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு எனும் மூன்று கோட்பாடுகள்*அடங்கிய அவர் ஆரம்பத்தில் இருந்த கட்சியான* தி.மு.க. மற்றும் அதன் தலைவர் அண்ணா மூன்றெழுத்து அன்பு, பாசம்,,நேசம் ,, அறம், பண்பு, வீரம் ,, அழகு ,பொறுமை , வாய்மை,தலைமை ,கொடைமை* புதுமை, திறமை ,இளமை ,பணிவு , புகழ் ,**உதவி ,ஆகிய மூன்றெழுத்துக்களையும் வாழ்க்கையில் கடை பிடித்ததால் புகழின் சிகரத்தில் குடிகொண்டார் .* எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்துதான் பலருடைய இதயங்களில் இன்று வீற்றிருப்பதோடு ,பலருக்கு சுவாசக்காற்றாக நிறைந்திருக்கிறது ..*


    இதயவீணை படத்தில் வரும் திருநீறை செல்வி மங்கையற்கரசி என்ற பாடலும் ,நினைத்ததை முடிப்பவன் படத்தில் உள்ள பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த எனும் பாடலும்* எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் /பக்தர்கள் இல்ல திருமணங்களில் தவறாமல் இடம் பெறும்* பாடல்களாகும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி பாடுவதாக ரசிகர்களும், பக்தர்களும் கருதுவதே*இதற்கு*காரணம்*


    பொதுவாக எம்.ஜி.ஆர். ஒரு நுட்பமான கவனிப்பாளர் என்பதற்கு பல உதாரணங்களை சுட்டிக் காட்டலாம் .**.அவற்றில் ஒன்று . பெங்களூரில் இடை தேர்தல் ஒன்றில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டுராவ் போட்டியிடுகிறார் . குண்டுராவ் எம்.ஜி.ஆரின் பரம ரசிகர் .* எனவே குண்டுராவ்*எம்.ஜி.ஆரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , தாங்கள் அவசியம் எனக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் . அதன்படி எம்.ஜி.ஆர்.* தனது சக* அமைச்சர் எச். வி.ஹண்டேவை உடன் அழைத்து செல்கிறார் . குண்டுராவ்* குறிப்பிட்ட நேரத்தைவிட சுமார் 4 மணி நேரம்**தாமதமாக* எம்.ஜி.ஆர். சென்றடைகிறார் .* ஆனாலும் சுமார்*25000 பேர் அங்கு திரண்டு இருந்தனர் ..அந்த கூட்டத்தை பார்த்ததும் ,கண்டிப்பாக குண்டுராவ் ஜெயித்துவிடுவார் அன்று ஹண்டே*ஆருடம் சொன்னார் . குண்டுராவை எதிர்த்து போட்டியிடுபவர் ராமகிருஷ்ண ஹெக்டே*. எம்.ஜி.ஆர். அதை மறுத்து , இங்கு ஹெக்டேதான் ஜெயிப்பார் என்றவுடன் ஹண்டே*எதை வைத்து சொல்கிறீர்கள் . குண்டுராவுக்கு நல்ல கூட்டம் கூடியிருக்கிறதே என்றார்*எம்.ஜி.ஆர்.சொன்னது என்னவென்றால் அப்படி இல்லை , பொதுவாக நான் எங்கு பொது கூட்டத்திற்கு சென்றாலும் முதலில் ரசிகர்கள், கட்சி*தொண்டர்கள் எனக்கு வணக்கம் சொல்வது வழக்கம் . அதன்பின்தான் அவர்களுக்கு நான் வணக்கம் சொல்வேன்*. இங்கு நேர்மாறாக நடக்கிறது . நான் வணக்கம் சொன்னபிறகு தான் கூட்டத்தினர் எனக்கு*வணக்கம் தெரிவித்தார்கள்*என்று தன்* நுட்பமான ஆய்வை,*விஷயத்தை*வைத்து தேர்தல் முடிவின்*எதிர்பார்ப்பை**தெளிவாக சொன்னார் .*.



    எங்க வீட்டு*பிள்ளை திரைப்படத்தில்*எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்கள்*ஏற்று நடித்தார் .இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையேயான வித்தியாசத்தை, நடை, உடை, பாவனை, முகத்தில் உணர்ச்சி , சோகம், வீரம் ,கோழைத்தனம் ,மிரட்டல் ,பணிவு , துணிவு* என்று பலவிதங்களில் நடிப்பில்*மெருகேற்றி*நடித்திருந்தார் .1965ம் ஆண்டின் சிறந்த நடிகராக*சினிமா*ரசிகர்கள் சங்கம்*எம்.ஜி.ஆரை*தேர்ந்தெடுத்தது .குறிப்பாக*கோழை எம்.ஜி.ஆர். ஓட்டலில் இரண்டு இட்லி தட்டில் வைத்து சாப்பிடும்போது* அப்பாவித்தனத்தை காட்டி*ரசிகர்களை நெகிழவைப்பார் .* அதற்குமுன்பு வரும் வீரன் எம்.ஜி.ஆர். இட்லி ,4 மசாலா* தோசை 3, ஊத்தப்பம் 3, பொங்கல் 4 என்று கேட்டு வாங்கி சாப்பிடும்போது அசத்தலாக இருக்கும்*. சப்ளையர்* மீண்டும்**இவர் அளிக்கும்*ஆர்டரை*பார்த்து மலைத்து போய் , வடை கேட்கும்போது இல்லை என்று சொல்லிவிடுவான் .* அதற்கு*எம்.ஜி.ஆர்.திட்டியவாறு சிற்றுண்டியை வாயில் திணிக்கும்*காட்சி, நகைச்சுவையாகவும், ஆர்ப்பாட்டமாகவும் இருக்கும் .அந்த காட்சியில் அரங்கமே*அதிரும் .வீரன் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால்*மாமனார் வீட்டுக்கு சென்று*அங்கு பெரிய விருந்தே*சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ,விவரம் அறிந்து அங்கு வரும் வில்லன் நம்பியார்*எம்.ஜி.ஆர். சாப்பிடும் ,வேகம், லாவகம், வாயில் திணிக்கும்*பாங்கு.உணவை*அசை போடும் விதம் எல்லாவற்றையும் பார்த்து, அரண்டு , மிரண்டு ,மலைத்து போய்விடுவார் இந்த காட்சியிலும் எம்.ஜி.ஆரின்*நடிப்பை வரவேற்று ரசிகர்கள் அலப்பரையும் கைதட்டல்களும் , விசில் சத்தமும் அடங்க வெகுநேரமாகும்*.பொதுவாக எம்.ஜி.ஆர். சாப்பாட்டு**பிரியர்*. அசைவ*உணவுகளை விரும்பி சாப்பிடுவார் . அதிலும்*மற்றவர்களை உண்ணவைத்து ,அவர்களுக்கு வேண்டியதை*,விரும்பியதை தானே*பரிமாறி ,ரசித்து,,சாப்பிட வைத்து**பார்ப்பது*அவரது*குணாதிசயங்களில் ஒன்று . *



    கோடிக்கணக்கான மாலைகள்*தாங்கிய*வை* எம்.ஜி.ஆரின் தோள்கள்*என்று சொல்வார்கள் .* அவருக்கு*மாலைகள்*விழாத*நாட்களே*இல்லை எனலாம் .மாலைகள்*எப்போதும்*ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலோ , வீட்டிலோ, அரசு விழாக்களிலோ, கட்சி*கூட்டங்களிலோ* விழுந்தவாறு*இருக்கும் . எங்க வீட்டு*பிள்ளை படத்தில்*நான் ஆணையிட்டால் பாடல் துவங்கும்*முன்பு , எம்.ஜி.ஆரை*,பத்திரத்தை*படித்து கையெழுத்து*இடுவதற்கு அழைக்கும் காட்சி .பத்திரத்தை*படித்து முடித்து கையெழுத்து*போட விருப்பமில்லை என்றதும் சார்பதிவாளர் சென்றபின் நம்பியார்*எம்.ஜி.ஆர். கன்னத்தில் அறைவார்* . பின்பு எம்.ஜி.ஆர். நம்பியார் கன்னத்தில் அறைவார்*. அதை கண்ட*குடும்பத்தினர் ,சுற்றியுள்ள அனைவ்ரும்* வெலவெலத்து போய்விடுவார்கள் . நம்பியார்*சவுக்கால்*எம்.ஜி.ஆரை*அடிக்க முயல , எம்.ஜி.ஆர். அதை பிடுங்கி*சிலம்பத்தில் 5ம் வீடு என்பார்களே அதன்படி*ஸ்டெப்*வைத்து சவுக்கால் அடிக்க ஆரம்பிப்பார் . இந்தியில் திலீப் குமாரும் , தெலுங்கில்*என்.டி.ராமாராவும் நடித்ததைவிட இந்த காட்சியில் எம்.ஜி.ஆருக்கு*ரசிகர்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பும் , பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் குவிந்தன . ரசிகர்கள் இந்த காட்சியில் கொண்டாட்டம், கூத்தும்*கும்மாளமாக இருக்கையை*விட்டு குதித்து*ஆடிய*விதம் கண்கொள்ளாக்காட்சி . இந்த காட்சி மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு காரணம்*எம்.ஜி.ஆருக்கு சிலம்பம் தெரிந்ததுதான் . அதனால்*மிக எளிதாக, ஸ்டைலாக, அழகாக, மிடுக்காக , லாவகமாக சாட்டையை*சுழற்றி*ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டார் . தொடர்ந்து* அடுத்து* வந்த*பாடலான*நான் ஆணையிட்டால் பாடலில்*அசத்தியிருப்பார் . இந்தியிலும், தெலுங்கிலும்*மற்ற ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். அளவிற்கு*இந்த காட்சிகளில் சோபிக்கவில்லை என்பதே*ரசிகர்களின் விமர்சனம் .


    கோழை எம்.ஜி.ஆரை வில்லன்நம்பியார்* சவுக்கால் அடித்த*பின்பு ,எம்.ஜி.ஆருடன் பண்டரிபாய், பேபி ஷகீலா* ஆகியோர்* இப்படி துன்பப்படுவதைவிட மூவரும்*இறந்துவிடலாம் என்று முடிவெடுக்க, எங்களை* காப்பாற்ற யாருமே இல்லையா*என்ற கூக்குரலுக்கு வீரன் எம்.ஜி.ஆர். அறிமுக காட்சியில்*. உடனே அடுத்த காட்சியில் நான் இருக்கிறேன் என்று ஸ்டுடியோவில் படப்பிடிப்பில்*அனைவரையும் அடித்து வெளுத்து கட்டுவார்* இந்த காட்சியும் ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பை*பெற்றது .* ஒரு திரைப்படத்தில்*காட்சி*எப்படி அமைய வேண்டும் , எந்த காட்சி, முன்னரும் , எந்த காட்சி*பின்னரும்*இருக்க வேண்டும் , எந்த காட்சிக்கு*அதிக* முக்கியத்துவம் தரவேண்டும்*, வசனங்கள் எப்படி அமைய வேண்டும் , எந்த கோணங்களில் காமிராவை வைக்க வேண்டும் , படத்தொகுப்பில்*எந்தெந்த காட்சிகளை நீக்கவேண்டும்*, பாடல்கள் எப்படி அமையவேண்டும் , நடிகர் நடிகைகளை*தேர்ந்தெடுக்கும்*விதம் என்று தீர்மானிக்கும்* , ஒரு கதாசிரியராக, இயக்குனராக, புகைப்பட வல்லுனராக, தொழில்நுட்ப வல்லுனராக, இசை அமைப்பாளராக, வசனகர்த்தாவாக , பன்முக தன்மை கொண்ட சகலகலா வல்லவனாக*திகழ்ந்ததால்தான்* திரையுலகில் முடிசூடா*மன்னனாகவும், வசூல் சக்கரவர்தியாகவும் பல ஆண்டுகள்*முன்னணியில், முதலிடத்தில் இருந்தார் .*


    மேலும் தகவல்கள் அறிய*அடுத்த* அத்தியாயத்தில் சந்திப்போம்*

    நிகழ்ச்சியில் ஒலித்த* பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------------
    1.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் - நான் ஏன் பிறந்தேன்*

    2.உனது விழியில் எனது*பார்வை* - நான் ஏன் பிறந்தேன்*

    3.திருநீறை*செல்வி*மங்கையற்கரசி - இதய வீணை*

    4..பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த - நினைத்தை முடிப்பவன்*

    5.எம்.ஜி.ஆர். - டி.கே. பகவதி உரையாடல் - நம் நாடு*

    6.வீரன் - கோழை எம்.ஜி.ஆர். ஓட்டலில் சாப்பிடும் காட்சி-எங்க வீட்டு பிள்ளை*

    7.நகரசபை தலைவராக எம்.ஜி.ஆர். தேர்வு - நம் நாடு*

    8.ஆடி வா , ஆடி வா* ஆட பிறந்தவளே ஆடி வா -அரச கட்டளை*

    9.கோழை*எம்.ஜி.ஆர். - பண்டரிபாய் -உரையாடல்* - எங்க வீட்டு பிள்ளை*

    10.என்னை தெரியுமா*,நான் சிரித்து* பழகி - குடியிருந்த கோயில்*

  5. #354
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 14/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*----------------------------------------------------------------------------------------------------------------------------
    இடது சாரி இயக்கத்தில் மிகவும் பற்றுள்ளவர் திரு.கார்த்தி என்னும் பத்திரிகையாளர் .தொழிற்சங்கத்திலும் நல்ல ஈடுபாடு உள்ளவர் ..அவர் பல்வேறு இலக்கியத்துறையில் பணியாற்றியவர் .அவரை பற்றி அறிந்த எம்.ஜி.ஆர். அவருடன் தொடர்பு கொள்கிறார் . ஒரு சமயம் மக்கள் குரல் பத்திரிகையில் கார்த்தி பணியாற்றி வரும்போது அவருக்கும், நிர்வாகத்தினருக்கும்* சரியான புரிந்துணர்வு இல்லை . அதனால் மக்கள் குரல் நிறுவனத்திடம் இருந்து விலக* முடிவு எடுத்து எம்.ஜி.ஆரிடம் சொல்கிறார் . கொஞ்சம் பொறுங்கள் .விரைவில் உங்களுக்கு வேறு வேலை காத்திருக்கிறது .நானே அழைக்கிறேன் என்கிறார் . ஆனால் எம்.ஜி.ஆரிடம் சொல்லாமலேயே சில நாட்களுக்கு பிறகு மக்கள் குரல் பத்திரிகையில்* இருந்து விலகுகிறார் .,அந்த தகவலை எம்.ஜி.ஆர். அறிந்து கொள்கிறார் . அ .தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு பகுதியில் அவர் வீடு அமைந்துள்ளது .அவர்* அருகே உள்ள ஒரு விறகு கடையில் இருந்து எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொள்கிறார் .அப்போது எம்.ஜி.ஆர்.தலைமை அலுவலகத்தில் இல்லாததால் விறகு கடையின் தொலைபேசி எண்ணை குறித்து கொள்ளும்படியும், எம்.ஜி.ஆருக்கு தெரிவித்து விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார் அதன்பின் எம்.ஜி ஆர் 3 முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை . கார்த்தியும் சில நாட்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார் . ஒரு நாள் விறகுக்கடை உரிமையாளர் கார்த்தியிடம் எம்.ஜி.ஆர். மிக முக்கியமான மனிதர் அவர் பலமுறை தொடர்பு கொண்டு உங்களிடம் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . முடிந்தால் நேரில் வர சொல்லுங்கள் என்றார் .அவ்வளவு பெரிய தலைவர் , முக்கிய மனிதர் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ளும்போது எனக்கே மிகவும் கவலையாகவும், சங்கடமாகவும் உள்ளது .இதனால் எனக்கு ஏதாவது சிக்கல் வரலாம் .நான் வேண்டுமென்றே உங்களுக்கு தகவல் தரவில்லை என்று அவர் தவறாக நினைக்கலாம்*. நீங்கள் முதல் வேலையாக அவரை போய் பாருங்கள் என்றவுடன் எம்.ஜி.ஆரை நேரில் சென்று சந்திக்கிறார் . கொஞ்ச நாட்களாக உங்களோடு நான் தொடர்பில் இல்லை .மன்னிக்கவும் என்கிறார் விறகு கடை தொலைபேசி எண்ணில் இருந்து கார்த்தி . .* உடனே எம்.ஜி.ஆர். அதெல்லாம் பரவாயில்லை .இப்போதாவது உங்களுடைய தொடர்பு கிடைத்ததே அதுவரையில் மகிழ்ச்சி.,நீங்கள் ஒன்றும் யோசிக்காதீர்கள் .உடனே நேரில் வந்து பாருங்கள் என்றார் .நேரில் வந்ததும்*..நீங்களும் சோலை அவர்களும் சேர்ந்து நான் தொடங்கும் அண்ணா தினசரி பத்திரிகையை செவ்வனே நடத்த வேண்டும். இது என் அன்புக்கட்டளை .அதற்கான ஆயத்த வேலைகளை உடனே ஆரம்பியுங்கள்* என்று சொல்லி தனக்கு மிகவும் பிடித்தமான நண்பர்களான திரு.சோலை , திரு.கார்த்தி அவர்களுக்காகவே இந்த அண்ணா நாளிதழை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார் .கார்த்தி என்பவர் ஊடகத்துறையில் அப்பழுக்கற்றவர் . ஊடகத்துறை நல்ல* எழுச்சியுடன் வளர்ச்சி பெற முக்கியமான நபர்களில் ஒருவர் என்பதை எம்.ஜி.ஆர். நன்கு அறிந்து இருந்தார் .அண்ணா பத்திரிகையை இளைஞர்கள் அதிகம் படிக்கும் பத்திரிகையாக நிறைய சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் அதற்கு இளைஞர்களான உங்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக நான் இருப்பேன் என்று எம்.ஜி.ஆர். கார்த்தியிடம் சொல்லியிருந்தார் .


    பல்வேறு விஷயங்களில் எம்.ஜி.ஆருடன் கலந்து பேசி முடிவு எடுப்பார் கார்த்தி .ஒருமுறை கவிஞர் கண்ணதாசனிடம் இருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது என்று துணை ஆசிரியர் ராமன் என்பவர் தகவல் அளித்தார் . அப்போது கார்த்திக்கு திருமணம் ஆகியிருந்த நேரம் . சில நாட்களுக்கு பிறகு மனைவியை ஊரில் இருக்க சொல்லிவிட்டு ஊடகத்துறையில் பணியாற்றி வந்தார் . அப்போது கண்ணதாசன் அலுவலகத்தில் இரவில் தங்குவார் . அப்போதுதான் அவருக்கு குடிப்பழக்கம்* ,யார் மூலமோ*ஆரம்பம் ஆனது .சில நாட்களுக்கு பிறகு இவருடைய குடி பழக்கத்தை அறிந்து, கண்ணதாசனின் மனைவி ,கார்த்தியிடம்*ஏன் நீங்கள் குடித்துவிட்டு வருகிறீர்கள் . திருமணம் ஆன புதிதில் அவரைவிட்டு பிரிந்து ஏன் இங்கு வந்துள்ளீர்கள்* உங்கள் மனைவியை ஊரில் இருந்து அழைத்து வந்து ,சென்னையில் தயங்கியபடியே மனைவியுடன் சந்தோஷமாக இருக்கலாம் .ஓட்டலில் சாப்பிடாமல் வீட்டில்*சாப்பிட்டு உடல்நலத்தில் அக்கறை காட்டலாம் .மன்னிக்க வேண்டும் . ஊருக்கு போய் வருவதற்கு கையில் பணமில்லை . சென்னையில் மனைவியுடன் தங்குவதற்கு வீடு பார்க்கும் அளவிற்கு பணவசதியும் இல்லை. கவிஞரிடம் கேட்கலாம் .* ஆனால் கேட்பதற்கு கவலையாகவும் சங்கடமாகவும் உள்ளது என்றவுடன் ,கவிஞரின் மனைவி தன்* கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி கார்த்தியிடம் கொடுத்து , நீங்கள் இந்த சங்கிலியை அடகு வைத்து, நல்லபடியாக உங்கள் மனைவியை ஊரில் இருந்து அழைத்து வந்து சென்னையில் வீடு பார்த்து* ஆண்டவன் ஆசியுடன்**குடும்பம் நடத்துங்கள் .எனக்கு இதற்கான பணம் கிடைத்ததும் தரலாம் ஒன்றும் பிரச்னையில்லை ,அவசரமுமில்லை . ஆனால் இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியவும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் .


    ஒருமுறை எம்.ஜி.ஆரும், அண்ணா பத்திரிகையில் உதவியாளராகிய கார்த்தியும் கண்ணதாசன் வீட்டு திருமணத்திற்கு செல்கிறார்கள் . திருமணத்தில் மணமக்களை எம்.ஜி.ஆர். வாழ்த்தி பேசிவிட்டு புறப்பட்டு வெளியே வரும்போது*எம்.ஜி.ஆருடன் இருந்த கார்த்தி , திடீரென்று ஓடிப் போய் கண்ணதாசனின் மனைவி காலை தொட்டு கும்பிட்டுவிட்டு வந்துவிடுகிறார் . .இதை எம்.ஜி.ஆர். பார்த்துவிடுகிறார் . காரில் பயணிக்கும்போது எம்.ஜி.ஆர். கார்த்தியிடம் கவிஞரின் குடும்பத்துடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டா என்று கேட்கிறார் .உடனே கார்த்தி , நான் இன்று என் மனைவியுடன் குடும்பம் நடத்திக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் கண்ணதாசனின் மனைவிதான் . அவர்தான் எனக்கு அறிவுரைகள் சொல்லி ,சில உதவிகள் செய்தார் .அந்த நன்றிக்காகத்தான் அவர் காலை தொட்டு கும்பிட்டேன் என்றார் .ஒரு கணம் யோசித்த எம்.ஜி.ஆர். கார்த்தியை திரும்பி பார்த்து, கண் கலங்கி , தன் கண்ணாடியை கழற்றி ,கண்களை துடைத்துக் கொண்டார் .* அப்படி, ஈர மனதுக்கும், இரக்கத்தன்மைக்கும் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். .


    சென்னை தி.நகர் , ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் ஒருநாள் மாலை வேளையில் கட்சி பிரமுகர்களுடன் எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருந்த நேரம் .* அப்போது நாஞ்சில் மனோகரனின் குரல் சற்று கனத்தும்*வழக்கத்திற்கு மாறாகவும் இருந்தது .நேற்று நான் குளிர்ந்த நீரை கொஞ்சம் அதிகம் குடித்துவிட்டேன் . அதனால்தான் அவதிப்படுகிறேன் .பரவாயில்லை என்கிறார் மனோகரன் . இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, சுமார் 20 நிமிடங்களில் மூன்று மருத்துவர்கள் ,மயிலை,* கே.கே.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் இருந்து அந்த அறைக்கு வந்துவிடுகிறார்கள் .இதைக் கண்ட மனோகரன் , பதற்றத்துடன்* .*என்ன இது,ஏன் இத்தனை மருத்துவர்கள் .எனக்கு ஒன்றும் அவ்வளவு* பிரச்னை இல்லையே* என்கிறார் . உடனே எம்.ஜி.ஆர். நீங்கள் எனக்கு முக்கியமானவர் .உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும் .என்று கூறி அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க சொன்னார் .* அதாவது ,தன்னுடைய தொடர்பில் உள்ளவர்கள், நெருக்கமானவர்கள் ,நண்பர்கள் யாருக்காவது உடல்நலமில்லை என்றால் முதலுதவி செய்ய வேண்டும் என்பது எம்.ஜி.ஆர். உடம்பில் ஊறி போன விஷயம் .

    மியூசிக்* அகாடமி அரங்கில் ஒரு நாட்டிய* நிகழ்ச்சி**நடைபெறுகிறது .அந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கி பேச வேண்டும் .அதுபற்றி கார்த்தியிடம் பேசும்போது ,இந்த நாட்டியத்தை பற்றி நான் பேசுவதற்கு ஒரு உரை தயார் செய்து கொடுங்கள் . இதற்காக கவலை வேண்டாம். நமது வீட்டு நூலகத்தில் 2 வது அறையில் 18 வது சுவடில்* பதஞ்சலி நாட்டிய சாஸ்திரம் என்று இருக்கும் அந்த புத்தகத்தில் 64 வது பக்கத்தில் 2 வது* பாராவில் நாட்டிய சாஸ்திரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது அவ்வளவு ஞாபகமாக ,சரியான குறிப்புகளுடன் குறித்து சொன்னார் . ஏனென்றால் இன்றைக்கும் பலர் தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .அதாவது எம்.ஜி.ஆர். என்றால்,படிக்காத , பாமரர் , சினிமா நடிகர் நடிக்கத்தான் தெரியும் . பல்வேறு விஷயங்கள் அவருக்கு தெரியாது என்று .அவர் எழுத்து பத்திரிகைகளோடு தொடர்பு வைத்திருந்தார் .மணிப்பூரி எழுத்தாளர்கள் பற்றி அறிந்து வைத்திருந்தார் .பதஞ்சலி நாட்டிய சாஸ்திரம் பற்றி தெரிந்து வைத்திருந்தார் .***இன்னும் சொல்லப்போனால் நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம்ஆராய்ந்து* அவர்கள் குறிப்பிட்டு ,சிபாரிசு சொன்ன பல புத்தகங்களை தன்னுடைய நூலகத்தில் இடம் பெற செய்தார் .தமிழகத்திலே பல இடங்களில் தேடி பிடித்து , காண கிடைக்காத புத்தகங்களை எல்லாம் தன்னுடைய நூலகத்தில் இடம் பெற செய்ததோடு அவற்றை அவ்வப்போது படித்து தன் அறிவு பசியை போக்கிக் கொண்டார் இந்த நூலகத்தை எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் உள்ள தன் வீட்டில் கீழ் தளத்தில் பொக்கிஷம் போல தன் இறுதிக்காலம் வரை காத்து வந்தார் ..அதனால்தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் , எந்த துறை குறித்து என்றாலும் ,எந்த விஷயம் பற்றி பேசுவதாக இருந்தாலும் மணிக்கணக்கில் பேசும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு அறிவாற்றல் இருந்தது .பொது கூட்டங்களிலும், இதர நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களில் எம்.ஜி.ஆருக்கு அவ்வளவாக விஷயங்கள் பேச தெரியாது என்று சொல்லி பிதற்றி வந்தவர்கள் ,அவருடைய பேச்சுகளை கேட்டபின் வியந்தும், ஆச்சர்யமும் அடைந்தார்கள் .


    சகாப்தம் நிகழ்ச்சி பல இனங்கள், மொழிகள் , மதங்களுக்கான வழிகாட்டியாகவும், ஒளி விளக்காகவும் திகழ்கிறது என்பதனால் நாம் கூடுமான அளவிற்கு கூடுதல் தகவல்கள் அளித்துக் கொண்டிருக்கிறோம் .இந்த தொடரின் அத்தியாயங்கள் நீண்டுகொண்டு போவதற்கு இதுவும் ஒரு காரணம் . ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் பல நண்பர்களாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் தொடர்பில் உள்ளார்கள் . அவர்கள் எல்லாம் பல்வேறு கருத்துக்களை எம்.ஜி.ஆர். பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம் .அந்த வெற்றி பயணம் உங்களோடும் எம்.ஜி.ஆரும், நம்மோடும் மீண்டும் தொடரும் .*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------
    1.எம்.ஜி.ஆர். -பாரதி உரையாடல் - சந்திரோதயம்*

    2.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*

    3.தூவானம் இது தூவானம் - தாழம்பூ*

    4.கடவுள் இருக்கின்றார் அதுவுன் கண்ணுக்கு தெரிகின்றதா -ஆனந்தஜோதி*

    5.நீதி மன்ற காட்சியில் எம்.ஜி.ஆர்.- சங்கே முழங்கு*

    6.எம்.ஜி.ஆர்.- பாரதி உரையாடல் - சந்திரோதயம் .

    7.ஆடாத மனமும் உண்டோ - மன்னாதி மன்னன்*

    8.இதுவரை நீங்கள் பார்த்த பார்வை - பணக்கார குடும்பம்*






    .

  6. #355
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*15/07/20 அன்று சொன்ன*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இஸ்லாமிய வேடத்தில் நடித்த படங்களும், அந்த படங்களில் உள்ள சில பாடல்களும் எதிர்வரும் பக்ரீத் பண்டிகையை கருத்தில் கொண்டு* இன்று பார்ப்போம் .மத நல்லிணக்கம் என்பது பல படங்களில் படமாக்கப்பட்டுள்ளது . குறிப்பாக சொல்ல போனால்* எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ஒவ்வொரு* பாடல்களிழும்* இறைவன் இல்லையென்று மறுத்த பாடல்கள் வரிகளே இல்லை .* இறைவன் இருக்கின்றான் அவன் எப்படி, எந்த உருவில் இருக்கின்றான் .அவனுக்கு உருவம் கிடையாது என்று பல படங்களிலே பாடி நடித்துள்ளார் மலைக்கள்ளன் , அலிபாபாவும் 40 திருடர்களும்**.பாக்தாத் திருடன், ராஜா தேசிங்கு,சங்கே முழங்கு , சிரித்து வாழ வேண்டும்* போன்று அடுத்தடுத்து வந்த படங்களில் அவர் இஸ்லாமியர் வேடம் ஏற்று இஸ்லாமியர்களின் பண்பாடுகள், கலாச்சாரம் ,வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி கருத்துக்கள் சொல்லியிருப்பார் .அரேபிய இரவுக் கதைகளில் பெரும்பாலும் எம்.ஜி.ஆர்.தான் நடித்திருக்கிறார் என்பது* குறிப்பிடத்தக்கது .**


    சிரித்து வாழ வேண்டும் படத்தில் உள்ள* மேரா நாம் அப்துல் ரஹ்மான் என்கிற பாடல்* பல இஸ்லாமியர் வீடுகளிலும், இஸ்லாமியர் விழாக்கள், நிகழ்ச்சிகளில்*இடம் பெறக்கூடிய, அழகான , அருமையான* பாடல் .* இந்த படத்தில் எம்.ஜி.ஆர் உஸ்தாத் என்று சில காட்சிகளில் அழைக்கப்படுவார் . உஸ்தாத் என்றால் வாத்தியார் என்று அர்த்தம் .அந்த வாத்தியாராக வருகிற எம்.ஜி.ஆர். நடத்தி வரும் சூதாட்ட கிளப்பை மூடவைத்து, ,அவரை* திருத்தி ஒரு நல்ல வாத்தியாராக மாற்றும் இன்ஸ்பெக்டர் ராமு வேடத்தில் மற்றொரு எம்.ஜி.ஆர்.நடித்திருப்பார் .ராஜா தேசிங்கு படத்தில் வரும் ஆதி கடவுள் ஒன்றேதான் அதில் பேதம் கிடையாது* என்ற பாடலில் இறைவனை பற்றி மிக விளக்கமாக பாடி நடித்திருப்பார் .மலைக்கள்ளன் படத்தில் உருது பேசும் பாங்கு*கையில் பைப் பிடித்து புகைக்கும்* அந்த ஸ்டைலுக்கும் , சிரித்து வாழ வேண்டும் படத்தில் வரும் அப்துல் ரஹ்மான் வேடத்திற்கும் நல்ல வேறுபாடுகள், வித்தியாசங்கள் காட்டி நடித்திருப்பார் . மலைக்கள்ளன் படத்தில் பூங்கோதை பாத்திரத்தில் வரும் பானுமதியை காதலிக்கும் காட்சியிலும் , என்னை மணந்து கொள்ள தயாரா என்று கேட்கும் காட்சியில் நகைச்சுவையாகவும், அவருக்கே உரித்தான ஹீரோ அம்சங்கள் பொருந்திய பாணியில் கெத்தாகவும் நடித்து மிரள செய்வார் .


    எம்.ஜி.ஆருக்கு பல படங்களில் வசன ஆசிரியராகவும், உதவியாளராகவும் இருந்த ரவீந்தர் என்பவர் உண்மையில் ஒரு இஸ்லாமியர் . அவர் பெயரை மாற்றி வைத்தவர் எம்.ஜி.ஆர்தான் .. ரவீந்தர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள் பற்றி பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார் .* கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் எம்.ஜி.ஆருடையது என்ற புத்தகத்தையும்* எழுதியுள்ளார்* எம்.ஜி.ஆர். இஸ்லாமியர் வேடம் ஏற்று நடிக்கும் தருவாயில் உள்ள படங்களுக்கு நடிக்கும் முன்பு ரவீந்தரிடம் இஸ்லாமியர் பற்றிய* வாழ்வியல்கள் , பண்பாடுகள், கலாச்சாரம் , நடைமுறை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை படிக்க சொல்லி ,ஏன் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று* தெள்ள தெளிவாக கேட்டு அறிந்து கொள்வார் என்று ரவீந்தரே குறிப்பிட்டுள்ளார் .


    ரவீந்தருக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் பத்திரிகை தயார் செய்து எம்.ஜி.ஆரிடம் முறைப்படி வழங்கி ,ஆசி பெறுகிறார் .* எம்.ஜி.ஆரும் அவரை வாழ்த்தியபின் , உனக்கு என்ன வேண்டும் கேள் , நான் என்ன செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக சொல் என்றாராம் .எனக்கு ரூ.16/- மட்டும்* தாலி வாங்குவதற்கு**தந்தால் போதும் .என்றவுடன் எம்.ஜி.ஆர்.,பத்திரிகையை வாங்கி கொண்டு* அறைக்குள் சென்று தன் அண்ணன்* சக்கரபாணியிடம் பணம் கொடுத்து அனுப்புகிறார் .பணம்* வாங்கிய* ரவீந்தர் நான் வரட்டுமா என்று எம்.ஜி.ஆரை எதிர்பார்த்து காத்திருக்கும்போது சில நிமிடங்களில் எம்.ஜி.ஆர். வெளியே வருகிறார் .* ரவீந்தர் தலைவரே நான் புறப்படுகிறேன் .நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் ஒன்றை சொல்கிறேன் .நீங்களே அந்த பணத்தை கொடுத்திருக்கலாம் . உங்கள் அண்ணன் மூலம் கொடுத்தனுப்பியது எனக்கு* அவ்வளவு**திருப்தியாக இல்லை என்றார் .**பதிலுக்கு எம்.ஜி.ஆர். புரியாமல் பேசக்கூடாது . என் அண்ணன் குடும்பஸ்தர் .
    குழந்தைகளோடு வாழ்கிறார் .* அவருக்கு வாரிசுகள் உருவாகியுள்ளனர் .நீயும் அவரைப்போல் குடும்பஸ்தனாக ,குழந்தைகளோடு, வாரிசுகள் கண்டு*மகிழ்ச்சியுடன் சீரும் சிறப்பாக வாழவேண்டும் . நான் திருமணம் ஆனவன்தான்*ஆனால் குழந்தை பாக்கியமில்லை . மனைவிகள் பாக்கியமும் சரியாக அமையவில்லை .அதனால்தான் அண்ணன் மூலம் வழங்க சொல்லி , நீ நன்றாக வாழ வேண்டும் என்கிற நினைப்பில் செய்தேன் என்றார் . அது சரி, உனக்கு இந்த ரூ.16/- போதுமா என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு , இது தாலிக்கான செலவுதான் என்று ரவீந்தர் பதிலளிக்க , மேலும் ஆயிரக்கணக்கில் கல்யாண செலவுக்காக*எம்.ஜி.ஆர். பணம் கொடுத்ததாக ரவீந்தர் குறிப்பிட்டு எழுதியுள்ளார் .**


    மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1.ஒன்றே சொல்வான், நன்றே செய்வான் - சிரித்து வாழ வேண்டும்*

    2.ஆதி கடவுள் ஒன்றேதான் ,அதில் பேதம் கிடையாது - ராஜா தேசிங்கு*

    3.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது - அடிமைப்பெண்*

    4.எம்.ஜி.ஆர்.-சாரங்கபாணி உரையாடல் -அலிபாபாவும் 40 திருடர்களும்*

    5.அப்துல் ரஹ்மான் -இன்ஸ்பெக்டர் ராமு மோதல் -சிரித்து வாழ வேண்டும்*

    6.நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு*

    7.உன்னைவிட மாட்டேன் உண்மையில் நானே -அலிபாபாவும் 40 திருடர்களும்*

    8.எம்.ஜி.ஆர். - பானுமதி உரையாடல் - மலைக்கள்ளன்*

    9.ஏமாற்றாதே , ஏமாற்றாதே - அடிமைப்பெண்*

    10.மாசில்லா உண்மை காதலே - அலிபாபாவும்* 40* *திருடர்களும்*

  7. #356
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம்*
    -------------------------------------------------------------------------------------------------------------------------------
    26/07/20* *- சன் லைப்- காலை 11 மணி -* என் அண்ணன்*

    * * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - விக்கிரமாதித்தன்*

    * * * * * * * தமிழ் மீடியா டிவி - இரவு 8 மணி - என் கடமை*

    27/07/20 - சன் லைப் - காலை 11 மணி -* நம் நாடு*

    * * * * * * * * *மெகா 24 டிவி - இரவு 9 மணி - குடும்ப தலைவன்*

    28/07/20 - சன் லைப் - மாலை 4 மணி - பல்லாண்டு வாழ்க*

    * * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*

    29/07/20 - மெகா 24 டிவி - காலை 8.30 மணி - தாய்க்கு பின் தாரம்*

    * * * * * * * *வேந்தர் டிவி - காலை 10.30 மணி - தனிப்பிறவி*

    * * * * * * * சன் லைப் - காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*

    * * * * * * *மூன் டிவி* - இரவு 8 மணி* -நீதிக்கு பின் பாசம்*

    * * * * * * * வேந்தர் டிவி - இரவு 10.30 மணி - நீதிக்கு பின் பாசம்*

    * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - பணம் படைத்தவன்*

    30/07/20- சன் லைப்* - மாலை 4 மணி - நீரும் நெருப்பும்*

    * * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - நவரத்தினம்*

    * * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி -சக்கரவர்த்தி திருமகள்*

    31/07/20* சன் லைப் - காலை 11 மணி - நாளை நமதே*

    * * * * * * * * வேந்தர் டிவி - இரவு 8 மணி - அவசர போலீஸ் 100**

  8. #357
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 16/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    சகாப்தம் நிகழ்ச்சி தொடர்ந்து ஏகோபித்த ரசிகர்கள்,பக்தர்கள் ஆதரவால் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது . குறிப்பாக மும்பையில் தாராவி பகுதியில் இருந்து புலவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி ,தொடர்பில் இருக்கிறார்கள் . அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் .* அதே போல சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி* அவர்களும் அடிக்கடி தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை பற்றி அற்புதமாக பாராட்டி உற்சாகப்படுத்துகிறார் .நிகழ்ச்சியில் உள்ள சிறு குறைகளான .நாள், ஆண்டு ஆகியவற்றில் உள்ள மாறுபாடுகளை* திருத்தம் செய்யும்படி சில யோசனைகள் தெரிவித்தார் .*


    பாக்தாத் திருடன் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரே படத்தில் நடித்தார் வைஜயந்திமாலா . இருவரும் நடித்த பாடல் காட்சிகள், காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று அப்போது பேசப்பட்டது .இந்த படத்தில் அரபு கதை தொடர்பான காட்சிகள் , சம்பவங்கள் படமாக்கப்பட்டன . எம்.ஜி.ஆர். புல்புல்தாரா, மற்றும் பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதுபோன்று ஒரு முழு* ,இஸ்லாமியராக இந்த படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைத்தார் .


    1956ல் வெளியான அலிபாபாவும்* 40* திருடர்களும் தமிழில் வெளியான முதல் முழு நீள வண்ணப்படம் . கோவா கலரில் எடுக்கப்பட்ட* பிரம்மாண்ட வெற்றிப்படம் .கர்நாடகாவில்* மைசூர் அருகில் ஒரு மலைக்குகை அரங்கம்* அமைக்கப்பட்டது .குகையின் கதவு திறப்பதற்கு அண்டாக்கா கசம், அபுக்கா உஹும் ,திறந்திடு சீசேம் என்று குரல் எழுப்பவேண்டும் . உள்ளே சென்றதும்*அண்டாக்கா கசம், அபுக்கா உஹும் ,மூடிடு* சீசேம் என்றவுடன் கதவு மூடப்படும் .குகையின் உள்ளே, தங்கம் ,வெள்ளி, வைர நகைகள் குவியல் குவியலாக கஜானா போல காட்சியளிக்கும் . எம்.ஜி.ஆரும், சாரங்கபாணியும் இந்த மந்திர சொல்லை அறிந்து கொண்டு , உள்ளே சென்று இந்த நகை குவியல்களை மூட்டை ,மூட்டையாக அள்ளிக்கொண்டு வந்து,பின்னர் அலிபாபா வேடத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு இலவசமாக தானம் செய்வார் . இந்த விஷயங்களை அறிந்து எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி தந்திரமாக எம்.ஜி.ஆரை அழைத்து , விருந்து வைப்பது போல தகவல்களை கேட்டறிந்து*எம்.ஜி.ஆரை கைது செய்துவிடுவார் .* *பானுமதியின் தந்திர மூளையால் எம்.ஜி.ஆர். காப்பாற்றப்படுவார் .* *இடையில் சக்கரபாணி அந்த குகைக்கு உள்ளே சென்று நகை குவியல்களை மூட்டை ,மூட்டையாக கட்டிக்* கொண்டு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் வெளியே வர முற்படும்போது அந்த மந்திர சொல்லை சரியாக சொல்லாமல், மறந்துபோய் பிதற்றி , சொல்ல தெரியாமல், குகையில் அகப்பட்டுக் கொள்வார் . திருடர்கள் வரும் சமயம் ஒளிந்து கொள்வார் .ஆனால் நகைகள் ஆங்காங்கே சிதறியுள்ளதை கண்ட வில்லன் வீரப்பா , சக்கரபாணியை கண்டுபிடித்து கொன்று ,தலைகீழாக தொங்கவிட்டுவிடுவான் .இந்த காட்சியில் சக்கரபாணியின் நடிப்பு, நகைச்சுவையாகவும், திகிலுடன்,*பயங்கரம் நிறைந்ததாக இருக்கும் .


    தாங்கள்* திருடிக் கொண்டுவந்த நகைகளை கொண்டு சென்ற திருடனை கண்டுபிடிக்க ஒரு நடன விருந்தில் வில்லன் கலந்து கொண்டு விசாரிக்க ,இதற்கெல்லாம் காரணம் அலிபாபா என்று அறிந்து கொள்கிறான் .அலிபாபாவின் வீட்டில் பெருக்கல் குறி போடப்பட்டிருக்கும் இரவில் சென்றால்* பிரச்னை ஏற்படும் என்று பகலில் வந்து பார்த்தால், அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த குறி இருக்கும் .திருடர்கள் அலிபாபா வீட்டிற்கு முற்றுகையிட வர போவதை முன்னரே* அறிந்த பானுமதி செய்த உபாயம் இது .இப்படி ரசிகர்கள் வரவேற்க தகுந்த பல நுட்பமான காட்சிகள் பலவற்றை இந்த படத்தில் காணலாம் .கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் வீரப்பா , எம்.ஜி.ஆரை சிறை பிடிக்க 40 பீப்பாய்களில் வீரர்களை அடைத்து ,தான் எண்ணெய் வியாபாரி என்றும் ,பீப்பாய்களில் எண்ணெய்கள் உள்ளன என்றும் பொய் சொல்லுவான் .அவன் சொன்னதை பொய் என்று தந்திரமாக அறிந்து கொண்ட பானுமதி ,வில்லன் அபுஹூசேன் என்று தெரிந்து* எம்.ஜி.ஆரின் அனுமதி பெற்று ,ஆனால் அவர் விருப்பத்திற்கு மாறாக**நடனமாடி , சாரங்கபாணி ,எம்.என்.ராஜம் மூலம்*பீப்பாய்களை மாளிகையின் பின்புறம் ஆற்றில் தள்ளி விடுவார் .* இடையிலே பானுமதியின் நடனத்துடன் கூடிய*இந்த விறுவிறுப்பான* பாடல் இந்த காட்சிக்கு மெருகேற்றியது பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சிகளில் பானுமதியை குதிரையில் கடத்தி சென்று மலைக்குகையில் அடைத்து*வைக்க வீரப்பா*முயலுவதும்*தொடர்ந்து குதிரையில் எம்.ஜி.ஆர் விரட்டி பிடித்து வில்லனை வீழ்த்தி பானுமதியை காப்பாற்றுவதும் புதுமையாகவும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றன*...


    தேசிய நீரோட்டத்தில் ஈடுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்* மகாத்மா காந்தி மீது மிகவும் பற்று கொண்டவர் .* அதனால்தான் பூஜை அறையில் தன்* தாய் ,தந்தையர் படத்திற்கு அருகில் காந்தியின் படத்தையும் எம்.ஜி.ஆர். வைத்து வணங்கி வந்தார் .தேசியம் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம் சங்கே முழங்கு*இந்த படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு சீக்கியராகவும் ,இஸ்லாமியராகவும் வருவார் .எம்.ஜி.ஆரின் மாமனாராக வரும் டி.கே. பகவதி ஒரு பஞ்சாபியாகவும் ,அவரது வளர்ப்பு மகள் லட்சுமி வேற்று மொழியை சார்ந்தவராகவும் இருப்பார் .இப்படி பல்வேறு மொழிகள், பல்வேறு மாநிலங்களை ஒன்று சேர்க்கும் விதமாக கதை அமைப்பு இருக்கும் இந்த படத்தில் எம்.ஜி.ஆர். இஸ்லாமியராக தோன்றும் காட்சியில் நாலு பேருக்கு நன்றி என்ற விறுவிறுப்பான தத்துவ பாடல் அமைக்கப்பட்டிருக்கும் .


    எம்.ஜி.ஆருடைய* வீடு ஜப்தி செய்யப்படுகிற தகவல் அவருக்கு கிடைக்கிறதுஇந்த தகவலை எப்படியோ அறிந்த திண்டிவனத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தாயார் அவரது வீட்டு சொத்து பத்திரத்தை தன் மகனிடம் கொடுத்து ,இதை எம்.ஜி.ஆரிடம்* விரைவாக கொண்டுபோய் சேர்த்துவிடு என்கிறார் .* அனால் நல்லவேளையாக நீதிமன்ற தீர்ப்பு* எம்.ஜி.ஆருக்கு சாதகமாக**.வெளியானதால்*வீடு ஜப்தியாகவில்லை .உடனே எம்.ஜி.ஆர். திண்டிவனம் சென்று அந்த இஸ்லாமிய தாயாரை பார்த்து வணங்கி ,நீதிமன்ற தீர்ப்பு விவரம் சொல்லி வீடு ஜப்தியாகவில்லை . இருப்பினும் என்மீது அன்புகாட்டி உதவ முன்வந்ததற்கு* மிகவும் நன்றி என்றார் அவருக்கு பணம் கொடுக்க எம்.ஜி.ஆர். முன்வந்தபோது அந்த தாய் மறுத்துவிட்டார் . .அந்த இஸ்லாமிய தாய் அளித்த சூடான பாலை குடித்துவிட்டு வணக்கம் சொல்லிவிட்டு வந்தார் .*.இந்த இஸ்லாமியர் தொடர்பு என்பது அந்த இன மக்களின் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கை*உறுதிப்படுத்தியது .**


    எங்க வீட்டு பிள்ளை இந்தியில் ராம் அவுர் ஷ்யாம் என்ற பெயரில் எடுத்தபோது ஹீரோவாக நடித்தவர் திலீப்குமார் .* தமிழகத்தில் எங்க வீட்டு பிள்ளை வெளியாகி வரலாறு காணாத வசூல்மழை பொழிந்த விவரங்கள் அறிந்த திலீப்குமார் சென்னைக்கு விஜயம் செய்வதை அறிந்த எம்.ஜி.ஆர். தன்* வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் .* அப்போது திலீப்குமார் ,உங்களை போல வில்லனை சவுக்கால்* அடிக்கும் காட்சியில் அவ்வளவு தத்ரூபமாக* உண்மையில்**என்னால் நடிக்க முடியவில்லை நீங்கள் மிகவும் அபாரமாக சாட்டையை சுழற்றி விளையாடி விட்டீர்கள் . நான் ஆணையிட்டால் பாடல் காட்சியும் மிகவும் பிரமாதம் .உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்றார் .அதற்கு நன்றி சொன்ன எம்.ஜி.ஆர். சிலம்பம் செய்வது கற்றிருந்தால்* சாட்டையை சுழற்றுவது வெகு சுலபம் . அந்த சிலம்பத்தில் சில ஸ்டெப்புகள் உண்டு .அதை முறையாக பயின்றால் எல்லாமே நமக்கு கைவந்த கலையாகிவிடும் என்றார் .சங்கே முழங்கு படத்தில் ஒரு சண்டை காட்சியில் சாட்டையை சுழற்றும்போது ஒவ்வொரு சாட்டையடிக்கும்*,k,s,x,y.z* என்று* அடி**விழுவதுபோல படமாக்கி இருப்பார்கள் .அப்படி சுளிவு, நெளிவுகளை சாட்டை வீசுவதில் கற்றுக் கொண்ட ஜாம்பவான் எம்.ஜி.ஆர்.*


    ஒருமுறை ,பாரிமுனை, பூக்கடை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ,தேர்தல் நிதிக்காக வேனில் எம்.ஜி.ஆர். வருகிறார் . காய்கறி விற்பவர்கள், பூ வியாபாரம் செய்பவர்கள் ,என்று பல வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் ,போட்டி போட்டுக் கொண்டு நிதி ,காய்கறிகள் , பொருட்களை குவிக்கிறார்கள் .இவர்களுக்கு மத்தியில்தொப்பி விற்கும்* ஒரு இஸ்லாமியர் ஓடி வந்து ஒரு தொப்பியை எம்.ஜி.ஆருக்கு அணிவிக்கிறார் .இதை எப்போதும் நீங்கள் அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார் . அது போன்ற தொப்பிகளை எம்.ஜி.ஆர்.தன்*வாழ்நாள் முழுவதும் அணிந்து இருந்தார் . அவர் மறைந்தபோதும் அந்த புஷ் குல்லா தொப்பியுடன்தான் நல்லடக்கம் செய்யப்பட்டார் .* தொப்பி அளித்தவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்று ஆராயவில்லை . எம்மதமும் அவருக்கு சம்மதம் .ஜாதி,இன, மொழி, மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டவர் எம்.ஜி.ஆர்.*

    மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் நாம் அறிந்து கொள்வோம்*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1.ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் -குடியிருந்த கோயில்*

    2.மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர்.*

    3.பாக்தாத் திருடன் படத்தில் எம்.ஜி.ஆர்.*

    4.ராஜா தேசிங்கு படத்தில் எம்.ஜி.ஆர்.*

    5.எம்.ஜி.ஆர். -பானுமதி உரையாடல் -அலிபாபாவும்* 40 திருடர்களும்*

    6.மாசில்லா உண்மை காதலே - அலிபாபாவும்* 40 திருடர்களும்*

    7.எம்.ஜி.ஆர். -லட்சுமி -டி.கே.பகவதி உரையாடல் - சங்கே முழங்கு*

    8.எம்.ஜி.ஆர்.- பண்டரிபாய் உரையாடல் - எங்க வீட்டு பிள்ளை*

    9.முதல்வராக எம்.ஜி.ஆர்.-புகைப்படங்கள்*

  9. #358
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 17/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற மந்திர சொல் பல சாமானியர்களை மாமனிதர்களாக , பல்வேறு உயர் பதவிகளுக்கு உயர தூக்கி விட்ட ஒரு உந்து சக்தியாகும் .அந்த மந்திர சொல்லை அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி இன்றைக்கும் பலரும் அந்த சொல்லை வைத்து கொண்டாடி வருகிறார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் கூறலாம் .சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் கடந்த காலத்தில் *எம்.ஜி.ஆருடன் பழகிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார் .குறிப்பாக அ .தி.மு.க. கட்சி உதயமாவதற்கு முன்பு தாமரைக் கொடி எப்படி, எவ்விதம் உருவானது என்று ஒரு தொகுப்பாக அவர் வெளியிட்டுள்ளார் .எந்த லட்சியத்திற்காக தன்னுடைய எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் லோகோவிற்கு கருப்பு, சிவப்பு வடிவம் கொண்ட கொடி வைத்திருந்தாரோ , காரில் தி.மு.க. கொடியைப்பார்த்து ,அண்ணாவிடம் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டார்களோ ,அந்த தி.மு.க. கட்சியில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி ஏற்படுகிறது .

    1972ல் மு.க. முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை படம் வெளியாகிறது . அந்த* சமயத்தில் பெரும்பாலான எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்பட்டு மு.க. முத்து ரசிகர் மன்றங்களாக* தி.மு.க. மேலிடத்தின் உத்தரவால் மாற்றப்படுகின்றன*இதனால் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படுகிறது .01/10/1972ல்* சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யா திருமண மண்டபத்தில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது .கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள்* தலைமை தாங்குகிறார் .மேலும் திரு.*.ஆர்.எம்.வீரப்பன் ,திரு.சைதை துரைசாமி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர் .* திரு.சைதை துரைசாமி அவர்கள் அந்த காலத்திலேயே புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கலைக்குழு என்கிற அமைப்பை நடத்தி வந்தார் .நமக்கு ஒரு விடிவுகாலம் பிறந்துவிட்டது , தலைவர் எம..ஜி.ஆருக்கென்று* ஒரு அமைப்பு ,**தனிக்கட்சி, தனிக்கொடி, தனி சின்னம் உருவாக போகிறது என்ற ஆர்வத்தில் அனைவரும் பூரிப்பு அடைந்து இருந்தனர்*


    தலைவர் எம்.ஜி.ஆர். பேசும்போது , தாய் கட்சியில் இருந்து ஒருபோதும் பிரிந்து செல்ல மாட்டேன் . தாயிலிருந்து சேய் உருவாகலாம் . ஆனால் சேயிடம் இருந்து ஒருபோதும் தாய் உருவாக முடியாது என்கிறார் . கூட்டத்தினர் இனி தலைவர் அனுமதியுடன் தாமரைக்கொடி உருவாக்கலாம், ஏற்றலாம் என்று மனக்கோட்டை கட்டியவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது .அதே சமயத்தில் தலைவரின் அனுமதி இல்லாமலேயே, மதுரையில் ஜான்சி பூங்காவில் தாமரைக்கொடி ஏற்றப்பட்டுவிட்டது . ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி தாமரைக் கொடி ஏற்றினார் .* இப்படி*..தி.மு.க.மேலிடத்தின் உத்தரவால் எம்.ஜி.ஆர். மன்றங்களை கலைக்க சொன்னதற்கு நெருக்கடி காரணமாக* பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் தாமரைக்கொடிதான் நமது கொடி என்று தீர்மானித்து* ஆங்காங்கே ஏற்றிய வண்ணம் இருந்தனர் .அந்த நேரத்தில் நமக்கென்று* தனிக்கட்சியோ, தனிக்கொடியோ காண போவதில்லை என்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு ஒன்று வெளியிடுகிறார் .


    கூட்டத்தின் முடிவில் திரு.சைதை துரைசாமி, தலைவர் எம்.ஜி.ஆரை பார்த்து ,அண்ணே, ஒருவிதமாக எம்.ஜி.ஆர். மன்றங்களை நீங்களே மூட செய்துவிட்டீர்கள் என்றார் ,உடனே திரும்பி பார்த்து ,.என்ன சொல்கிறாய் என்று எம்.ஜி.ஆர். கேட்க ,நாங்களெல்லாம் ஒரு கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள் போய் கிளை கழக செயலாளர்கள் ,வட்ட செயலாளர்கள்* ஆகியோரை**அணுகி எம்.ஜி.ஆர்.மன்றங்கள் துவக்க வேண்டும் என்று கேட்டால் ,அதற்கு அனுமதியில்லை* அவற்றை கலைத்துவிடுங்கள் . .நீங்கள் மு.க.முத்து ரசிகர் மன்றங்கள் ஆரம்பியுங்கள் என்கிறார்கள் அதற்குத்தான் அனுமதி கிடைக்கும் என்று சொல்கிறார்கள் ,அவர்களின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்ய இயலாத நிலை உள்ளது .* இது யாருடைய உத்தரவு என்று ரசிகர்கள், தொண்டர்கள் கேட்டால் இது மேலிடத்து உத்தரவு என்கிறார்கள். எங்களுக்கு தெரிந்தவரையில் மேலிடம் என்பது நீங்கள்தான் .உங்களுக்கு மேலாக மேலிடம் எங்கு உள்ளது .இதற்கு நீங்கள்தான்* எங்களுக்கு சரியான விளக்கமும் வழிகாட்டுதலும் சொல்ல வேண்டும் என்று திரு.சைதை துரைசாமி கேட்டார் .இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட தலைவர் எம்.ஜி.ஆர். சரி, எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் . நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் . விரைவில் இதற்கெல்லாம் தகுந்த பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் .இந்த கூட்டத்தின் வாயிலாக திரு.சைதை துரைசாமி பற்ற வைத்த கனல் என்பது தலைவர் எம்.ஜி.ஆர். மனதில் நெருப்பாக எரிய ஆரம்பித்தது .


    சில நாட்கள் கழித்து ,திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும்போது கிளை கழக செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை* தங்கள் சொத்து என்ன, எப்படி வந்தது ,கட்சியில் சேருவதற்கு முன்பு எவ்வளவு சொத்து , பொறுப்புக்கு வருவதற்கு முன்பு* எவ்வளவு சொத்து உள்ளது . தற்போதைய சொத்தின் நிலவரம் என்ன என்பதைக் கணக்கு காட்ட வேண்டும் .* இந்த ராமச்சந்திரன் நடிப்பதற்கு முன்பு இருந்த சொத்து என்ன , நடித்து வாங்கிய சொத்துக்கள் விவரம் என்ன, என் மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்கள் என்ன என்று எல்லாவற்றையும் கணக்கு காட்ட நான் தயார் .* ஆனால் கட்சியில் உள்ள கிளை கழக செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரையில் பொறுப்பில் உள்ளவர்கள் சொத்து கணக்கு* விவரம் காட்டுவதற்கு தயாராக உள்ளார்களா என்று கேட்டார் . தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரின் கேள்விக்கணைகளை கேட்டறிந்த அன்றைய முதல்வர் கருணாநிதி பதறிப்போய் ,புதுவை மாநில முதல்வர் பரூக் மரைக்காயரிடம் பேசினார் . சொத்து கணக்கு விவரத்தை முதலில் அமைச்சர்கள், என்று ஆரம்பித்து,சட்டமன்ற உறுப்பினர்கள் ,கிளை கழக செயலாளர்கள் வரையில் அனைவரும் காட்ட வேண்டும் என்று சொல்கிறார் .கட்சி பொருளாளராக இருந்து கொண்டு ,இப்படியா வெளிப்படையாக பேசுவது , இவருடைய கேள்விகள் கட்சிக்கு ,பாதகமாகவும், பெரிய குந்தகத்தை விளைவிக்கும் போல் தெரிகிறது என்கிறார் .தயவு செய்து எம்.ஜி.ஆரிடம் நீங்கள் பேசுங்கள். அவர் என்ன சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ள தயார் . எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் கட்சியில் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிறாரோ அதையும் செய்ய தயார் . ஆனால் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்ளுங்கள் என்றார் . தலைவர் எம்.ஜி.ஆரிடம் பேசுவதற்கு பரூக் மரைக்காயர் தூது அனுப்பப்படுகிறார் .சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நீடிக்கிறது .நீங்கள் உருவாக்கிய முதல்வர் கருணாநிதி, நீங்கள் என்ன கட்டுப்பாடுகள் கொண்டுவரலாம் என்று நினைக்கிறீர்களோ அதற்கு அவர் சம்மதிக்க தயார்* நீங்கள் சொன்னபடி கட்சியை நடத்தலாம் என்கிறார் .இந்த சமாதான பேச்சுக்கள் விளைவுதான்* முன்கூட்டியே அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்* தனிக்கட்சி, தனிக்கொடி, தனி சின்னம் இப்போதைக்கு வேண்டாம்*என்ற நிலை*எடுத்திருந்தது பின்னால் தெரியவந்தது .


    எம்.ஜி.ஆர்.பிக்ச்சர்ஸ் லோகோவில் தி.மு.க. கட்சி கொடி , திரைப்படங்களில் உதயசூரியன், கதிரவன் என்ற பெயர்களில் கதாபாத்திரங்கள் , நெற்றியில் உதயசூரியன் , சட்டையில் உதயசூரியன் ,உடைகளில் கருப்பு, சிவப்பு வண்ணங்கள்* காட்சி அரங்கங்களில் உதயசூரியன்*வசனங்களில், பாடல்களில் உதயசூரியன் என்று நகரங்கள், கிராமங்கள், பட்டி தொட்டியெல்லாம் தி.மு.க கட்சியை, சின்னத்தை கொடியை* கொண்டு சென்றவர் தலைவர் எம்.ஜி.ஆர். அவரது உழைப்பையும், விளம்பரத்தையும் பயன்படுத்தி* நம்பி வளர்ந்த அதே தி.மு.க. கட்சியில் இருந்து,சொத்து கணக்கு கேட்டார் என்ற காரணத்திற்காக* 10/10/1972ல்* தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கம் செய்தார்கள் .பின்னர்* 17/10/1972அன்று அ.தி.மு.க. கட்சி உதயமானது .*அண்ணாவின் உருவம் பொருந்திய கொடி , இரட்டை இலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது .


    மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ------------------------------------------------------------------------------------
    1.நாளை நமதே நாளை நமதே* *- நாளை நமதே*

    2.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*

    3.எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசைமுகம்*

    4.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் - உரிமைக்குரல்*

    5.சித்திர சோலைகளே* உமை நன்கு திருத்த - நான் ஏன் பிறந்தேன்*

    6.நான் யார் நான் யார் நீ யார்* - குடியிருந்த கோயில்*

    7.எம்.ஜி.ஆர். எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*

    8. நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் -மீனவ நண்பன்*

    9. எம்.ஜி.ஆர். மன்னனாக திட்டங்கள் அறிவித்தல் -நாடோடி மன்னன்*

  10. #359
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மகத்தான சாதனை குக்கிராமங்களிலும் செல்வாக்கை வளர்த்து மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்ததுதான். 1960-80 காலகட்டத்தில்தான் டூரிங் சினிமா முழு வளர்ச்சியடைந்தது எனலாம். ஆயிரக்கணக்கான டூரிங் தியேட்டர்கள் பெருகி மக்களுக்கு முக்கியமான பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது இந்த காலகட்டத்தில்தான்.

    எல்லா குக்கிராமங்களிலும் டூரிங் தியேட்டர்கள் பெருகி ஒரு காலகட்டத்தில் டூரிங் தியேட்டரே இல்லாத ஊரே கிடையாது என்று சொல்லுமளவுக்கு பெருகியது.
    திரைப்பட விநியோகம் தழைத்தோங்கியது. அதற்கு முக்கியமான காரணகர்த்தா எம்ஜிஆர் எனலாம். எம்ஜிஆர் படங்களின் விநியோகஸ்தர்கள் தென் மாவட்டங்களில் சேது பிலிம்ஸ், சுப்பு, சுவாமி மற்றும் St அந்தோனி பிக்சர்ஸ் இவர்களே படங்களை அதிகம் விநியோகம் செய்தனர்.

    ஆனால் மற்ற படங்களுக்கு வெவ்வேறு விநியோகஸ்தர்கள் வருவார்கள் போவார்கள். 4 படங்களில் முதலீடு கரைந்ததும் விவசாயத்தை பார்க்க
    கிளம்பி விடுவார்கள். எம்ஜிஆர் படங்கள் நிலையான வருமானத்தை
    கொடுப்பதால் முக்கியமான 4 எம்ஜிஆர் படங்கள் மட்டுமே இருந்தால் போதும் எப்போதுமே வருமானத்தை
    கொடுத்து கொண்டேயிருக்கும்.
    சாதாரண தலைவன், காதல் வாகனம், தேர்த்திருவிழா போன்ற படங்கள் T K
    ஏரியாவுக்கு சுமார் 2 லட்சம் அளவுக்கு போகும்.

    அதேநேரம் நிறைகுடம் அஞ்சல் பெட்டி 520
    அன்பளிப்பு போன்ற படங்கள் 60-70
    ஆயிரம் ரேஞ்சுக்கும் சுமாரான ஜெய்சங்கர் படங்கள் சுமார் 40-50
    ஆயிரம் ரேஞ்சுக்கும் விற்பனையாகும். எம்ஜிஆரின் கலர் படங்கள் சுமார் 4 லட்சம் அளவுக்கு போகும். தமிழகத்தில் மொத்தம் 7 விநியோக மையங்கள் உண்டு. அவை சென்னை மதுரை கோவை திருச்சி சேலம் NSC மற்றும் T K . இவற்றில் NSC தான் மிகப்பெரிய ஏரியா. அதற்குத்தான் விலையும் அதிகம். இது போக கேரளா, கர்நாடகா, இந்தி மாநிலம் என்று இத்தனை ஏரியா உண்டு. NSC ஏரியா மட்டும் TK போல மூன்று மடங்குக்கும் அதிகம் போகும்.

    ஜெய்சங்கர் படம் தயாரிப்பு செலவு 3-4 லட்சத்தில் முடிந்து 5 லட்சத்தில் விநியோகம் நடக்கும். சிவாஜி படங்கள் 6-7 லட்சத்தில் தயாரிக்கப்பட்டு அதற்கு மேல் லாபம் கிடைத்தால் விற்று விடுவார்கள்.
    தயாரிப்பு செலவு கூடும் பட்சத்தில் கையை கடித்து விட வாய்ப்பிருக்கிறது. எம்ஜிஆர் படங்கள். ஏறக்குறைய15 லட்சத்தில் முடிவதால் விற்பனை 20 லட்சத்தில் நடைபெறும்.

    எம்ஜிஆரின் கலர் படங்கள் 1965 களில் சுமார் 25 லட்சமும் 70 களில் சுமார் 40 லட்சமும் 75 களில் சுமார் 60 லட்சமும் செலவு பிடிக்கும்.
    இதெல்லாம் விநியோகஸ்தர்களிடம் பழகியதால் எனக்கு கிடைத்த தகவல்கள். இதில் தவறு இருந்தால் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாம். எம்ஜிஆர் படத்துக்கு மட்டும் ஏன் இந்த விலை? என்று கேட்கலாம். அதற்கான பதிலைதான் இப்போது சொல்லப் போகிறேன். நகரங்களை ஒட்டி அமைந்திருக்கும் கிராமங்களில் ஒரளவு எல்லா நடிகர்களின் படங்களும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் அடிக்கடி டவுனுக்கு வந்து போவதால் இருக்கலாம்.

    ஆனால் குக்கிராமங்களில் தலைவரின் படங்கள்தான் பிரதானமாக இருக்கும். மற்ற நடிகர்களின் படங்கள் 1அல்லது 2 நாட்கள்தான் ஓடும். ஆனால் தலைவர் படமோ குறைந்தது 5 நாட்கள் ஓடும். அதுவும் 6 மாதத்திற்கு ஒருமுறை. 5 ஆண்டுகளில் விநியோகஸ்தர்கள் குறைந்த பட்சம் 10 முறை திரையிட்டு கிட்டத்தட்ட 50 நாட்கள் ஓட்டி விடுவார்கள். அப்படி ஒவ்வொரு கிராமத்திலும் படம் நிற்காமல் ஓடினால் வசூல் வந்து கொண்டே இருக்கும்.

    எம்ஜிஆரின்
    பழைய படங்கள் செய்கின்ற ஒரு சில சாதனைகளை இங்கு பதிவு செய்திருக்கிறேன். அதில் காதல் வாகனம் 1980 மே 9 ம்தேதி மகாலட்சுமியில் வெளியாகி 7 நாட்கள் நடைபெற்றது. அந்த 7 நாட்களிலும் நடைபெற்ற 21 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை ஏற்படுத்தியது ஒரு ஆச்சர்யமான நிகழ்வே. நாகர்கோவிலில் முதல் தடவை 1969 ல் வெளியான அடிமைப்பெண் 100 நாட்களில் பெற்ற வசூல் சுமார் 1,30,000 ரூ. அதன்பின் பலதடவை வெளியான பின் நாகர்கோவில் கார்த்திகையில் வெளியான போது 18 நாட்களில் சுமார் 1,00,000 ரூ வசூலாக பெற்று 20 நாட்களை கடந்து ஓடியது விந்தையிலும் விந்தை அல்லவா?

    இது போல ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற அபரிமிதமான சாதனைகள் தொடர்ந்து நடைபெறுவது உலகத்திலேயே MGR படத்துக்கு மட்டும்தான் என்பது ஒரு அற்புதமான செய்தி. இதெற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்பீர்கள். அதையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அன்று வந்த புது படங்கள் கூட இந்த வெற்றியை பெற்றதில்லை என்பது
    கூடுதல் தகவல்.

  11. #360
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த அகிலமே சொல்லும் நீ "ஆயிரத்தில் ஒருவனெ"ன்று. இது "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் மனேகர் சொல்லும் வசனம். ஆனால் உண்மையில் ஆயிரத்தில் ஒருவரை எம்ஜிஆரைபோல் பார்க்க முடியுமா?
    கோடியில் ஒருவரை கூட பார்க்க முடியாது. ஏன் கோடியில்? இந்த அகிலமெல்லாம் தேடினாலும் கிடைக்குமா, இந்த மாசற்ற மாணிக்கம் போல் வேறோருவரை?.

    அப்பேர்ப்பட்ட "ஆயிரத்தில் ஒருவனின்" வசூல் விபரங்கள் யாரும் அறியாவண்ணம் இருப்பதால் இந்த பதிவில் அதை பற்றி சற்று காண்போம். சென்னையில் மிட்லண்ட் கிருஷ்ணா மேகலா என்ற மூன்று திரையரங்குகளில் தலா 106
    நாட்கள் ஓடி
    மொத்தம் 318 நாட்களை
    பதிவு செய்து மொத்தம் ரூ8,69,711.15 வசூலானது.
    "எங்க வீட்டு பிள்ளை" 100 நாட்களில் காஸினோ பிராட்வே மேகலாவில் மொத்தம் ரூ 9,23,519.40 வசூல் செய்தது குறிப்பிட தக்கது.

    நெல்லையில் "ஆயிரத்தில் ஒருவன்" 50 நாட்களில் ரு 77,504.42 வசூலானது.
    கோவை கர்னாடிக்கில் 115 நாட்கள் ஓடி ரூ 221,246.37 வசூல் செய்தது. "எங்க வீட்டு பிள்ளை" கோவை ராயலில் ரூ. 2,64,847.83 வசூலானது.
    மதுரையில் "ஆயிரத்தில் ஒருவன்" 28 நாளில்
    ரூ1,12,232.53 ம் "திருவிளையாடல்" 28 நாளில் ரூ 1,07,452.37, 50 ம் வசூலாக பெற்று தோல்வியடைந்தது. 50 நாளில் "ஆயிரத்தில் ஒருவன்" பெற்ற வசூல் ரூ 174411.66 ம். அதே பந்துலுவின் பிரமாண்ட படமான "கர்ணனின்". 77 நாள். வசூல் ரூ 1,75,026.16 ஐ பெற்று தோல்வியை பரிசாக பெற்றது.

    அதுபோல் திருச்சியிலும் 50 நாட்களில் "எங்க வீட்டு பிள்ளை"க்கு அடுத்த படியாக "ஆயிரத்தில் ஒருவன்" தான் அதிக வசூல் பெற்ற படம். 50 நாட்களில்
    ரூ 1,35,287.00 வசூலானது.
    தூத்துக்குடியில்
    "மதுரை வீரனு"க்கு பிறகு அதிக வசூலை தந்த படம்
    "ஆயிரத்தில் ஒருவன்" தான்.
    10 நாட்கள் தொடர்ந்து 4 காட்சிகள் நடந்த ஒரே படம். நகரில் அதிக வசூல் பெற்ற படமும் "ஆயிரத்தில் ஒருவன்" தான்.

    சேலம் ஓரியண்டல் திரையரங்கில் 125 நாட்கள் ஓடி சாதனை செய்தது.
    திண்டுக்கல்லில் 4 வாரத்தில் "ஆயிரத்தில் ஒருவன்" பெற்ற வசூல் ரூ 54,699.87.
    "திருவிளையாடல்" 4 வாரத்தில் ரூ52,187.16 வசூலாக பெற்று "ஆயிரத்தில் ஒருவனி"ன் வானளாவிய வெற்றிக்கு முன் மண்டியிட்டது குறிப்பிடதக்கது.

    வேலுரில் தாஜ் திரையரங்கில் 46
    நாட்களில் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,50,000 பேர்.
    46 நாட்களில் பெற்ற சாதனை வசூல்
    ரூ 74,210.48. இதைப்போல் ஒவ்வொரு ஊரிலும் மகத்தான சாதனை புரிந்த படம்தான் பத்மினி பிக்சர்ஸின் "ஆயிரத்தில் ஒருவன்".

    திக்கெட்டும் உரைக்கும் "ஆயிரத்தில் ஒருவனின்" வெற்றி சேதியை,
    கண்டு மாற்றலர் மனம் வெந்து நொந்த வேதனை என்ன?
    வந்து சேர்ந்த சோதனை மேல் சோதனைதான் என்ன?
    போதுமடா சாமி யென்ற போதிலும்
    மெய்ப்பொருள் கண்டு மீளாதிருப்பதென்ன?

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •