Page 33 of 210 FirstFirst ... 2331323334354383133 ... LastLast
Results 321 to 330 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #321
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியாரின் #உயரம்

    தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயரமாகத் தெரியும் பலர், அருகில் செல்லும்போது உயரம் குறைந்துவிடுவார்கள்...

    #அருகில் #சென்று #பழகியபோது #ஒருவரின் #உயரம் #என் #மனதில் #அதிகரித்தது #என்றால் #அது #எம்ஜிஆர் #தான்.

    அதற்குக் காரணம், கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே அவருக்கு இருந்தது. அவரோடு பழகியபோது இதை என்னால் உணரமுடிந்தது.

    எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒருநாள் மாலை 7.30 மணிக்கு பத்திரிகையாளர்களை ராமாவரம் தோட்டத்தில் சந்திக்கிறார் என திடீரென்று அழைப்பு வந்தது. அவசரம் அவசரமாக் போனோம்.

    ஹாலில் சோஃபாவில் எங்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். 8 மணி ஆனது. ’எல்லா பத்திரிகையில் இருந்தும் நிருபர்கள் வந்தாச்சு. பேட்டியை ஆரம்பிக்கலாமே’ என்றோம்.

    எம்ஜிஆர் உடனே ’பேட்டியெல்லாம் ஒண்ணுமில்லை. வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்றார்.

    ’பேட்டி இல்லையா?’ என்று கேட்டோம்.

    ‘செய்தி சொல்ல அழைக்கவில்லை. சும்மா சாப்பிடத்தான் உங்களையெல்லாம் அழைத்தேன்’ என்றார் எம்ஜிஆர்.

    ஆங்கிலப்பத்திரிகை நிருபர் ஒருவர் கொஞ்சம் கோபமாக, ‘சாப்பிடுறதுக்கா வந்தோம்?’ என்று கேட்டார்.

    எம்ஜிஆர் உடனே அருகில் சென்று, அவர் தோளில் கை போட்டு, ‘#ஒருநாள் #உங்களோடு #சாப்பிடணும்ன்னு #ஆசைப்பட்டு #வரச்சொன்னேன். #தப்பா? #வாங்க..#உங்களுக்கு #தனி #டேபிளில் #வெஜிடெரியன் #ஏற்பாடு #பண்ணியிருக்கேன்” எனறார். அவ்வளவுதான். நிருபர் கூல் ஆகிவிட்டார்.

    பெரிய டைனிங் டேபிள். சிக்கன், மட்டன், மீன் என ஒவ்வொன்றிலும் பல ஐட்டங்கள். 20 பேர் உட்கார்ந்து சாப்பிட்டோம். எம்ஜிஆரும் சாப்பிட்டுக் கொண்டே, யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று கவனித்து ’அவருக்கு சிக்கன் வை, இவருக்கு மீன் வை’ என்று சொல்லி உபசரித்தார். வியப்பாக இருந்தது. என்னா ஷார்ப். அவருடைய வெற்றியின் ரகசியம் புரிந்தது.

    ---இரா.குமார் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து............

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #322
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஈழ விடுதலைக்கு என் தலைவன் mgr எவ்வாறெல்லாம் உதவினார் என்பதைப்பற்றிய கட்டுரை இது. கட்டுமர கைக்கூலிகளே உங்களுக்கும் தெரியவேன்டும் என்பதலால்தான் இந்த பதிவு.

    ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

    • விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை - அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.

    • சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

    • ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

    • இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயே, “ஈழத் தமிழர்களோ, விடுதலைப் புலிகளோ, தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.

    • ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும், பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்து, ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் - எம்.ஜி.ஆர். தான்!

    • ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர்., தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹாட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தியே, ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது; பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டு, பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.

    • உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர்., ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டு, ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் - இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும், திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.

    • “திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு அய்ந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி, 12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட குடிக்காமல் 26.9.87 இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் - தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்” என்று தமிழக அரசின் ‘அஞ்சலி’யை திலீபனுக்கு காணிக்கையாக்கியவர் எம்.ஜி.ஆர்.

    • அது மட்டுமல்ல; புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 விடுதலைப் புலிகளை போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு ஒப்பந்தங்களுக்கு எதிராக, அவர்களைக் கைது செய்து, அவர்களை சிங்கள ராணுவம் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்துப் போனது; நியாயமாக, ஒப்பந்தத்துக்கு எதிரான இந்த செயலை ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்; வேண்டுமென்றே அதை செய்யவில்லை. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 புலிகள் இயக்கத்தின் மரபுக்கேற்ப, ராணுவத்திடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்று ‘சைனைடு’ அருந்தி பலியானார்கள். அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இந்த செய்தி அறிந்து துடித்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து - உயிரிழந்த மாவீரர்களுக்கு இரங்கல் செய்தியையும், இந்தியாவின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டியும் செய்தி அனுப்பினார். “தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும், இலங்கை கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்திருக்குமானால், அவர்களுள் 12 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்திருக்காது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில், வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது. இந்தக் கடினமான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகளைத் தொடர்ந்து முயற்சிப்பேன். தமிழக அரசு இது பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” (11.10.1987 நாளேடுகள்) - என்று அறிக்கை விட்டு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்மூடித்தனமான ஆதரவைக் காட்ட மாட்டேன் என்று வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

    • புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 போராளிகள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து பிரபாகரனைக் கைது செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டது. ‘பிரபாகரன் கைது’ என்று ஊடகங்கள் வழியாக செய்திகளைப் பரப்பினார்கள். இத்தகவல் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது. விடுதலைப்புலிகளுடன் இந்திய ராணுவம் மோதலுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் இந்திய ராணுவம் அப்படி ஒரு போரை நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில் அ.தி.மு.க. சார்பில், பிரதிநிதியைப் பங்கேற்கச் செய்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து செய்தி அனுப்பினார்.

    • விடுதலைப் புலிகளும் இந்திய ராணுவமும் மோதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்என்று தமிழ்நாட்டில் 17.10.1987 அன்று கடையடைப்பு, முழு வேலை நிறுத்தம் நடத்துவது என பழ.நெடுமாறன அவர்கள் முயற்சியால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் முடிவு செய்தது. அப்போது அமெரிக்காவிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். “சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது. இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்” (16.10.1987 நாளேடு செய்திகள்) என்று இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

    • 31.10.1987 இல் தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். அடுத்த நான்கு நாட்களிலேயே விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்திய ராணுவம் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கினார். பதறிப் போன இந்திய ஆட்சி, உடனே அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வராமல் தடுப்பதற்கு வெளிநாட்டுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி, எம்.ஜி.ஆரை சந்திக்க வைத்தது. எம்.ஜி.ஆர். தமது எதிர்ப்பு உணர்வுகளை நட்வர்சிங்கிடம் வெளிப்படுத்தினார்.

    • உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் - அவரை தழுவிக் கொண்டது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன்தனது இரங்கல் செய்தியில் கூறினார்:

    “ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே! தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும், ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” - என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

    ஒரு முதல்வராக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை - வெளிப்படுத்திய கொள்கை உறுதியை - அவர் கலைஞரைப் பட்டியல் போட்டுக் காட்டியதில்லை. ஆனால் நன்றியுள்ள தமிழினம் இதை வெளிப்படுத்த வேண்டும்.

    ஈழத் தமிழினம் கடும் நெருக்கடியை சந்தித்த காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் செயல்பட்டதையும், இழைத்த துரோகத்தையும் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆம்; அப்போதுதான் எம்.ஜி.ஆர். பெருமை - அருமை புரிகிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு பிரிக்க முடியாத பக்கங்களாகவே இருக்கும்.........

  4. #323
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!’ - எம்ஜிஆர் எனும் முதல் ஆக்*ஷன் ஹீரோ, முதல் ஆக்*ஷன் படம்; - ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள்.........




    தமிழில் முதல் ஆக்*ஷன் ஹீரோ யார் என்பது தெரியும்தானே? முதல் மாஸ் ஹீரோ யார் என்று அறிவீர்கள்தானே. தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஹீரோ யாராக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டிருக்கிறீர்களே..! இந்த மூன்றுக்குமான பதில் மூன்றெழுத்துதான். எம்.ஜி.ஆர்.



    பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்கும் ஹீரோவின் கதை என்றால் ‘அட ராபின்ஹூட் கதை’ என்று இன்றைக்குச் சொல்லுவோம். அப்படியொரு கதையில் எம்ஜிஆர் நடித்துத்தான் மாஸ் அந்தஸ்தைப் பெற்றார். பட்டிதொட்டியெங்கும், எம்ஜிஆரைக் கொண்டு சென்றது அந்தத் திரைப்படம். அதுதான் ‘மலைக்கள்ளன்’. திரையுலகிலும் ரசிகர்களிடமும் ‘மலைக்கள்ளன்’ ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணம். அதற்கு முன்பு ஆக்*ஷன் படங்கள் வந்திருந்தாலும் ‘மலைக்கள்ளன்’ மலைப்பை ஏற்படுத்திய அளவுக்கு அதுவரை எந்தப் படமும் ஏற்படுத்தவில்லை.

    Amp

    நாமக்கல் ராமலிங்கம் எழுதிய கதை. திரைக்கதை, வசனம் எழுதியவர் மு.கருணாநிதி. படத்தைத் தயாரித்தது பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் எனும் பிரமாண்டமான நிறுவனம். இந்தப் படத்தை இயக்கியவர் ஸ்ரீராமுலு நாயுடு. இவர்தான் படத்தைத் தயாரித்து இயக்கினார். இந்தப் படம் வருவதற்கு முன்பு ‘சந்திரலேகா’ பிரமாண்டப் படம் என்று பேரெடுத்தது. பின்னர், அந்தப் பட்டியலில் பிரமாண்டமாக இணைந்துகொண்டான் ‘மலைக்கள்ளன்’.

    இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உண்டு. முதல் பெருமை... தமிழில் முதன்முதலாக ஜனாதிபதி விருது பெற்ற முதல் படம் எனும் கெளரவத்தை ‘மலைக்கள்ளன்’ அடைந்தது. அந்த வருடத்தில், தமிழக அரசும் சிறந்த படமாக அங்கீகரித்து, விருது கொடுத்தது.


    மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். ஊர் செட் போட்டிருப்பார்கள். காடு செட் போட்டிருப்பார்கள். காட்டில் மலை செட் போட்டிருப்பார்கள். ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்குச் செல்ல ‘விஞ்ச்’ இருக்கும். அதில் சண்டையும் இருக்கும். ரசிகர்கள், வாய்பிளந்து சண்டைக்காட்சிகளை அதிர்ந்து பார்த்து வியந்தான். மலைத்துப்போனான். திரும்பத் திரும்பப் பார்த்தான்.

    எம்ஜிஆருக்கு இது மிக மிக மிக முக்கியமான படம். அதுவரை அரச கதைகளில் நடித்துக் கொண்டிருந்தவர், இந்தப் படத்தில் சமூகக் கதையில் முதன் முதலாக நடித்தார். அதேபோல், கருணாநிதி, அரசியல் அதிகமில்லாமல், சமூக அவலங்களையும் ஏற்றதாழ்வுகளையும் தோலுரிக்கிற வசனங்களை பொளேர் சுளீரென எழுதியிருந்தார். இவையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.


    இந்தப் படத்தின் வெற்றியையும் தாக்கத்தையும் தொடர்ந்து, இதில் இருந்து ஒவ்வொன்றாக உருவி, ஏராளமான கதைகள் இன்று வரைக்கும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. படம் தொடங்கும் போது ஹீரோ குடும்பத்தைவிட்டுப் பிரிந்து, பிறகு படம் முடியும்போது சேருவான் என்பது மாதிரியான முடிச்சுகள், ‘மலைக்கள்ளன்’ படத்திலிருந்துதான் ஆரம்பித்தன. ’ராபின்ஹூட்’ கதையைச் சொல்லவே வேண்டாம்.

    படத்தின் ஒளிப்பதிவு சைலன் போஸ். அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர். அதேபோல், எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இவருக்கு அடுத்து ஜி.ஆர்.ராமநாதன். பிறகு கே.வி.மகாதேவன். அடுத்து மெல்லிசை மன்னர்கள்... என்று பட்டியல் வரும். இதன் ஆரம்பகர்த்தாக்களில் முக்கியமானவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். எல்லாமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

    நாயகன் எம்ஜிஆர். நாயகி பானுமதி. எம்ஜிஆருக்கு இணையான கேரக்டர். நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார். பல பாடல்களை இவரே பாடியிருப்பார். அஷ்டாவதானி பானுமதியின் நடிப்பும் மிகப்பெரிய பலம். அதேபோல், எம்ஜி.சக்ரபாணி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இவரும் தன் பங்குக்கு சிறப்பாகவே நடித்திருந்தார். ரஞ்சன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.


    எம்ஜிஆர், அதற்கு முன்பு வரை இப்படியும் அப்படியுமாக நடித்துக்கொண்டிருந்தார். இந்தப் படம் வந்த பிறகும் கூட சென்டிமெண்ட், குடும்பக் கதைகளில் நடித்திருந்தார். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக, மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் எனும் பாதைக்குள் நுழைந்தார். அப்படிப் புதியபாதை வகுத்துக் கொடுத்தது ’மலைக்கள்ளன்’ என்றுதான் சொல்லவேண்டும்.

    இதைக் கொண்டுதான், எம்ஜிஆர் ஃபார்முலா எனும் விஷயத்தை உருவாக்கினார் எம்ஜிஆர். சமூகக் கதைதான் என்றாலும் எம்ஜிஆர் மட்டும் ராஜா காலத்து ஆடைகளை அணிந்திருந்தார் என்பது ஆச்சரியம்தான். அதேபோல, படத்தின் வசனங்களுக்காக தியேட்டர்களில் கைதட்டல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. ’மலைக்கள்ளன்’ குறித்து சொல்லும்போது ஒரு தகவல் சொல்லுவார்கள். ஒன்று... இந்தப் படத்தில் முதலில் சிவாஜிதான் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது இரண்டு படங்களில் நடிக்க ஒத்துக்கொண்டிருந்ததால், அவரால் நடிக்க முடியவில்லை. பிறகு எம்ஜிஆர்தான் நடித்தார். அப்படி ’எம்ஜிஆரைப் போடுங்களேன். நல்லாருக்கும்’ என்று சொன்னவர்... சிவாஜி கணேசன்.


    அதேபோல், கருணாநிதி, இந்தப் படத்துக்கு வசனம் எழுத சம்மதிக்கவில்லையாம். காரணம்... எம்ஜிஆர்தான். அப்போது அவர் காங்கிரஸ் அபிமானியாக இருந்தாராம். பிறகுதான் சம்மதித்தார் என்றொரு தகவல் சொல்லுவார்கள்.

    முதல் ஜனாதிபதி விருது பெற்ற இந்த ‘மலைக்கள்ளன்’ திரைப்படம், 1954ம் ஆண்டு வெளியானது. இதே ஆண்டில் வேறொரு வகையில், சிறந்த படங்கள் என்று இரண்டு விருதுகள் இரண்டு படங்களுக்குக் கிடைத்தன. ஒன்று... ‘எதிர்பாராதது’. இன்னொன்று... ‘அந்தநாள்’. இரண்டுமே சிவாஜி நடித்த படங்கள்.

    ‘மலைக்கள்ளன்’ திரைப்படம் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் வெளியான கையுடன், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் தயாரித்து இயக்கினார் ஸ்ரீராமுலு நாயுடு. ஆக, ஐந்து மொழிகளிலுமே வெற்றியைத் திருடிக் கொடுத்தான் ‘மலைக்கள்ளன்’.

    ’தமிழன் என்றொரு இனமுண்டு’ என்பது உள்ளிட்ட பல பாடல்கள் உள்ளன. முக்கியமாக, இத்தனை காலங்கள் கடந்தும் கூட, இன்றைக்கும் பொருந்துகிற பாடல்... மிகப்பெரிய ஹிட்டடித்த பாடல்... ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...’ பாடல்! படம் திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் 100 நாள், 140 நாள் என ஓடியது.


    1954ம் ஆண்டு, ஜூலை மாதம் 22ம் தேதி வெளியானது ‘மலைக்கள்ளன்’. வெளியாகி 66 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், இன்றைக்கும் மலைக்க வைத்துக் கொண்டிருக்கிறான் ‘மலைக்கள்ளன்’.

    முதல் ஆக்*ஷன் படம், முதல் ஆக்*ஷன் ஹீரோ, முதல் ஜனாதிபதி விருது... எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஜிஆர் எனும் முதல் ஆக்*ஷன் ஹீரோவின் முதல் ஆக்*ஷன் படமான ‘மலைக்கள்ளன்’ படத்தை, தமிழ் சினிமா என்றைக்குமே மறக்காது!...

  5. #324
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *
    ஈ.வெ.ரா. சிலை எதிர்த்த எம்ஜிஆர்
    *
    காஞ்சியில் சங்கரர் மடத்துக்கு அருகே ஈ.வெ.ரா. சிலையை வைக்க திராவிடர் கழகத்தினர் முயற்சித்தனர்.
    முதல்வராக இருந்த எம்ஜிஆர், அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.
    ‘அரசின் அனுமதியின்றி சிலையை வைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று சட்டப்பேரவையில் வினா எழுந்தபோது, ‘அந்த சிலை, அங்கிருந்து அகற்றப்படும்’ என்று உறுதி தோய்ந்த குரலில் பதிலளித்தார் எம்ஜிஆர். அவரது எதிர்ப்பு காரணமாக, காஞ்சி மடத்தருகே ஈ.வெ.ரா. சிலை வைப்பது தவிர்க்கப்பட்டது.
    - இது, ‘எம்ஜிஆரும் நானும்’ கட்டுரையில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. குறிப்பிட்டுள்ள தகவல்.
    (கட்டுரை இடம்பெற்றுள்ள நூல் : வரலாற்றில் எம்ஜிஆர்; தொகுப்பாசிரியர் வே.குமரவேல்; முல்லை பதிப்பகம் வெளியீடு: பக்கம் 442-443)....

  6. #325
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #என் #கடமை

    முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தலைமைச்செயலகம் செல்லும் வழியில் 'சென்னை பல்கலைக்கழக கட்டிடத்தில் உள்ள மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் தவறான நேரத்தைக் காட்டுவதைக் கண்டார். தொடர்ந்து இரு நாட்கள் அதைக் கவனித்தார். நேரம் சரிப்படுத்தப்படாமல் தவறான நேரத்தையே காண்பித்துக் கொண்டிருந்தது.

    மூன்றாம் நாள் முதல்வர் நேராக பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து காரருகே ஓடி வந்தனர்...

    அப்போது புரட்சித்தலைவர், 'மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் கடந்த சில நாட்களாக தவறான நேரம் காட்டுவதை சுட்டிக்காண்பித்தார்.

    மேலும், "வருங்கால சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் பல்கலைக்கழகத்திலேயே இப்படி தவறு நடந்தால் எப்படி? உடனே நேரத்தை சரிசெய்யுங்கள்..."

    தான் செல்லும் வழியில் காணும் சிறுதவறைக்கூட கண்டுபிடித்து கண்ணியமாகத் திருத்தும் கடமை உணர்வு எம்ஜிஆர் அவர்களுக்கு இருந்தது.

    இந்த விஷயத்தை தனது உதவியாளர் மூலம் போனில் சொல்லியிருக்கலாம்...!!!
    ஏன் செய்யவில்லை...???

    தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதையும் மறந்து தன்னை ஒரு சராசரி பிரஜையாகவும், காணும் தவறை சுட்டுவது ஒரு பிரஜையின் தலையாய கடமை என்றும் கருதியதன் நிகழ்வு தான் இச்சம்பவம்......

  7. #326
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ஆசைமுகம்" புரட்சி நடிகரின் வெற்றிப் படங்களில் ஒன்று. 1965
    டிச 10 ம்தேதி வெளியான ஆசைமுகம் மிகவும் வித்தியாசமான புதுமைப்படைப்பு. அருமையான பாடல்களும்,புதுமையான கதையமைப்பும் கொண்ட படம். எம்ஜிஆர் படத்துக்கு கதை tn பாலு இந்தப்படம் மட்டும் தான் என்று நினைக்கிறேன். படம் வெளியான நாள்தான் சரியில்லை.

    டிசம்பர் மாதம் வெளியான படங்கள் முழு வெற்றியை பெறுவது மிகவும் கடினம். ஏனென்றால் அடுத்து வரக்கூடிய பொங்கல் பண்டிகையில்
    வெளியாகக் கூடிய படங்களை எதிர்த்து 100 நாட்கள் ஓடுவது சற்று கடினமான காரியம்தான்.. மேலும் பொங்கலன்று
    வெளியான "அன்பேவா" ஒரு பிளாக் பஸ்டர் படம். சென்னை காஸினோவில் கூட்டத்தை கட்டுப்படுத்த குதிரை போலீஸ் வரவழைக்கப்பட்ட படம்
    "அன்பேவா".

    அதையும் தாண்டி "ஆசைமுகம்" வெற்றிநடை போட்டது.
    அதற்கடுத்து வந்த "நான் ஆணையிட்டால்" பிப் 4 ந் தேதி வெளியான போது நிறைய இடங்களில் படத்தை தூக்கி விட்டார்கள். சென்னை பாரகனில் 50 நாட்களும் பிரபாத்தில் 56 நாட்களும் சரஸ்வதி நூர்ஜகானில் 49 நாட்களும்.ஓடியது "ஆசைமுகம்". சேலம் சாந்தியில் 63 நாட்கள் வரை ஓடியது.

    மதுரை தங்கத்தில் வெளியாகி 56 நாட்கள் ஓடியது.
    56 நாட்களில் பெற்ற வசூல் சுமார்
    1,81,000 ரூபாய். பிரமாண்ட படமான கலர் "கர்ணன்" தங்கத்தில் 100 நாளில் பெற்ற வசூல் 1,86,000 ரூபாய். கர்ணன் 56 நாளில் பெற்ற வசூல் 160000 தான்.இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பிரமாண்ட கலர் கர்ணனை கால்பந்தாடிய "ஆசைமுக"த்தின் வெற்றியை கண்டு சிவாஜி ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    இவ்வளவுக்கும் "ஆசைமுகம்" சாதாரண வெள்ளிக்கிழமை வெளியீடு. கலர் "கர்ணனோ" பொங்கல் பண்டிகை வெளியீடு. சாதாரண நாட்களில் வெளியாகி இருந்தால் முதல் வார வசூலில். 20000 ரூ காணாமல் போயிருக்கும். ஏகப்பட்ட செலவு செய்து எடுத்த "கர்ணனை" எந்த செலவும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவான "ஆசைமுகம்" எளிதில் வென்றதால் தயாரிப்பாளர்கள் மத்தியில் எம்ஜிஆருக்கு பெரும்பெயரை பெற்று தந்தது.

    இரட்டை வேடத்தை எந்த கத்தல், கரைச்சல் இல்லாமல் அமைதியாக வெளிப்படுத்தியிருந்த லாவகம் வெகுஜன மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. படத்தில் டாக்டராக வருபவர் "துணிவே துணை"யில் மாட்டு வண்டிக்காரராக வந்து மிரட்டுவார். படத்தை முதல் தடவை சிறுவனாக இருந்த போது பார்த்தேன். அதில் எம்ஜிஆர் வாசிக்கும் மவுத் ஆர்கன் எனக்கு மிகவும் பிடித்து. போயிற்று. பொருட்காட்சியில் மவுத் ஆர்கனையும் எம்ஜிஆர் அணிந்திருந்த அந்த பெரிய, என் கைவிரல்களுக்கு பொருந்தாத மோதிரத்தையும் அடம் பிடித்து கேட்டு வாங்கி விட்டேன்.

    அப்புறம் என்ன சும்மா இருப்பேனா? தலைவர் வாசிப்பதை போல் வாசிப்பதாக நினைத்து கொண்டு பலருடைய தூக்கத்தை கெடுத்ததோடு சரி. சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது என்று தெரிந்தும். பலரை தூங்க விடவில்லை. அந்த மோதிரத்தை வைத்துக் கொண்டு சகோதரர்களிடம் சண்டை வேறு. நீயா? இல்லை நானா? பாடலுக்கு எம்ஜிஆர் பயன்படுத்தும் அந்த கை பிரம்பையும் அதே போல் செய்து வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் வம்பு வளர்த்து பின் கம்பு சண்டையாகி மகிழ்ந்த காலம்!.
    ஆகா அற்புதமான நினைவுகள்..........

  8. #327
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம் நிகழ்ச்சியில்*வின்*டிவியில்*திரு.துரை பாரதி*2/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
    --------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழுக்கு காரணம் ,அவர் ஒரு சினிமா நடிகர் என்பதாலா, கொடை தன்மை கொண்டவர் என்பதாலா, பத்தாண்டு காலம் முதல்வர்* என்பதாலா,ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதாலா ,என்று ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன .பலர் பலவாறு கருத்துக்கள் கூறிய வண்ணம் உள்ளனர் .ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மனிதநேயம் மிக்க மனிதாபிமானியாக இருந்தார் என்பதே தலையாய சிறப்பு எனலாம் .


    மனிதநேயம், மனிதாபிமானம் என்பதெல்லாம் இன்றைக்கு இருக்கிறதா என்றால் குறைந்து, மங்கி போய் கொண்டே இருக்கிறது .ஏனெனில் ,இன்றைக்கு ஏதாவது விபத்து நேர்ந்தால், அடிபட்டவரின் அல்லது இறந்தவரின் கைபேசி, கைக்கடிகாரம், மணிபர்ஸ் ஆகியன திருடப்படுகின்றன . இந்த கால கட்டத்தில்தான் நாம் மனிதாபிமானம், மனிதநேயம் ஆகியவை பற்றி அதிகம் பேச வேண்டி இருக்கிறது*


    பொதுவாக ஓடோடி சென்று உதவி செய்வது போல் நடித்தவர்கள்*, ஓடோடி சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் ,.வீடு வீடாக சென்று தேர்தல் காலத்தில் வாக்குகள் கேட்டு , பொய் வாக்குறுதிகள் அளித்தவர்கள்,பொது காரியங்களில் ஈடுபடுபவர்கள்* இவர்களுடைய மனிதாபிமானம் எல்லாம் சீசனுக்கு தகுந்தாற்போல் மாறும் ஒரு நாடகம் .இந்த நாடகங்களைத்தான் சினிமாவில் எம்.ஜி.ஆர். சாடி* இருக்கிறார் ,பாடல்களாக பாடியும் இருக்கிறார் .


    எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில், மனிதநேயம், மனிதாபிமானம் என்பது அவர்*உடன்பிறந்த ஒரு நற்குணம் .* உள்மனதில் ஆழமாக பதிந்த விஷயம் . அதுதான் அவரை ஒளிவிளக்காக இந்த காலம்வரையில்* ஒளிர செய்கிறது .அப்படி ஒளிரச்*செய்வதற்கான பல்வேறு விஷயங்களை இன்று நாம் அறிந்து கொள்வோம் .


    நான் ஏன் பிறந்தேன் படப்பிடிப்பின் உணவு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் அன்று மேஜர் சுந்தரராஜன் உணவருந்துகிறார் . 16 வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன . மேஜர், எம்.ஜி.ஆரை ,சாப்பிடும்போது கேட்கிறார். தாங்கள் தினசரி இப்படித்தான்* வழக்கமாக**சாப்பிடுவீர்களா என்று .பதிலுக்கு எம்.ஜி.ஆர்., எனக்கு இப்படியும் சாப்பிட தெரியும் . இரண்டு நாட்கள் சாப்பிடாமல் வயிற்றில் ஈரத்துணி போட்டுக் கொண்டு* பட்டினியாக**இருக்கவும் முடியும் என்றார் .நான் சினிமா வாய்ப்புக்காக ஒவ்வொரு ஸ்டுடியோவிற்கும் கால் கடக்க நடந்தே சென்றிருக்கிறேன் .அப்போதெல்லாம் இரண்டு அல்லது ஐந்து ருபாய் தான் கைவசம் இருக்கும் . அந்த நிலையிலும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்த சமயத்திலும் ,மனிதநேயத்துடன், மனிதாபிமானத்துடன் பலருக்கு உதவிகள் செய்துள்ளேன் .அந்த உதவிகளும்**என்னுடைய முன்னேற்றத்திற்கும், இந்த நிலையை அடைவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது .ஆனால் நான் எதையும், எதற்காகவும் திட்டமிட்டு செய்யவில்லை .பிறருக்கு உதவுதல் என்பது என் ஆழ்மனதில் உதித்த விஷயம்*


    ஒருமுறை ஸ்டூடியோ, ஸ்டுடியோவாக அலையும்போது மதிய நேரம், வயிற்றுப்பசி ஒருபக்கம் . கையில் இருப்பதோ பத்து ருபாய். அந்த சமயத்தில் ஒரு நாடக நடிகர் எதிரே வந்து, அண்ணே, மிகவும் பசியாக இருக்கிறது . ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க, தன்னிடம் இருந்த சாப்பாடை கொடுத்து,*அவரது செலவிற்கு மூன்று ருபாய் அளித்து அவரை பசியாற்றினார் . நாளைக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில்,போதுமான வருமானம் இல்லையென்றாலும் அடுத்தவருக்கு உதவுகின்ற மனப்பான்மை அவருக்கு இருந்தது .இந்த மனிதநேயமும், மனிதாபிமானமும்தான் அவரை இன்றும் மக்கள் மனதில் மறைந்தும் மறையாதவராக ஒளிர செய்துள்ளது .


    நடிகர் சங்கத்திற்கு ,தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்குவதில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பெரும் பங்குண்டு .நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்று மேஜர் சுந்தர்ராஜனும், சிவாஜி கணேசனும்* முற்பட்டபோது, தமிழக அரசு மூலம் ரூ.25 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்து, வங்கி கடன் உருவாக்கி உதவிகள் செய்தவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.* *இந்த நடிகர்*சங்கத்தால் ஒருபோதும்*ஒரு ரூபாய் அளவிற்கு கூட*தான் பிரயோஜனம் அடைந்ததில்லை . ஆனால் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார் .* ஆனால் ,இப்படி நடிகர் சங்கம் என்பதனால்தான் அள்ளி அள்ளி கொடுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டக்*கூடாது*என்பதற்காக , அதற்கான பிரச்னைகள் ஏற்பட்டால் சந்திக்கும் பொருட்டு , அரசு அதிகாரிகளை வைத்து,காரண*காரியங்களை ஆராய்ந்து , முறையாக ஆலோசனைகள் செய்து திட்டமிட்டு* உதவிகள் செய்தார் .இதுபற்றி*பின்னாளில்*நடிகர் சங்க நிர்வாகிகளாக* இருந்தவர்கள் விவரமாக தகவல்கள் அளித்துள்ளனர்


    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவில்* இருந்தபோது இறந்ததும்,அவர் உடலை*அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு*கொண்டு வர ஏற்பாடுகளை செய்தார் . அவரது உடல் நடிகர்*சங்கத்தில் வைத்து அனைத்து நடிகர் நடிகைகள்*இறுதி மரியாதை செய்வதற்கு வழி வகுத்தார் .* அவரது*உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இறுதி ஊர்வலமாக*எடுத்து செல்ல தயாராக இருந்த நிலையில்*முதல்வர் எம்.ஜி.ஆர். வருவாரா*மாட்டாரா*என்று தகவல் தெரியாதநிலை . கடைசி நிமிடத்தில் எம்.ஜி.ஆர். வந்துவிடுகிறார் . ஆனால் கவிஞரின் உடல் வைக்கப்பட்டிருந்த விதம் சரியில்லை என்று சொல்லி ,அதில்**சிறிய மாற்றங்கள் செய்ய உத்தரவிட்டார் ..நாம் வாழும் காலத்தில் கவிஞர் வாழ்வாங்கு வாழ்ந்தவர் .அவரின் முகம் அனைவருக்கும் எளிதில்*தெரியும்படி வைக்க வேண்டும் என்று சொல்லி* .அலங்காரங்கள் முற்றிலும் மாற்ற செய்து* பொதுமக்கள் அனைவருக்கும் அவர் முகம் தெரியும்படி வைக்க செய்தார். மேஜர்*சுந்தர்ராஜனை அழைத்து , தம்பி சிவாஜி கணேசன் எங்கே , அவரை*வர சொல்லுங்கள் என்றார் . ஆனால் மேஜர்*,சிவாஜி கணேசனுக்கு உடல்நலம் சரியில்லை என்கிறார் .உடனே எம்.ஜி.ஆர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு*கவிஞருக்கு இறுதி மரியாதை செய்ய அவசியம் வர வேண்டும் என்று வற்புறுத்தி சொல்லி ,வரவழைத்தார் . பின்னர் இருவரும் மயானத்திற்கு ஊர்வலமாக நடந்து சென்றனர் . பின்னர் வீடு திரும்பிய எம்.ஜி.ஆர். மேஜர் சுந்தர்ராஜனுக்கு போனில் தொடர்பு கொண்டு இறுதி ஊர்வலத்திற்கு என்ன செலவாயிற்று .என்று கேட்கிறார் .அப்போதெல்லாம் இந்த மாதிரி செலவுகளுக்கு நடிகர் சங்கத்தில் இருந்து செலவு செய்ய முடியாத நிலை என்பதை அறிந்திருந்த எம்.ஜி.ஆர். தன்*சொந்த பணத்தில் இருந்து ரூ.10,000/- காசோலையாக அனுப்பி வைத்தார் .*


    மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
    -------------------------------------------------------------------------------
    1.குமரி பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டு பிள்ளை*

    2.எம்.ஜி.ஆர். -எம்.என்.ராஜத்திடம் பேசும் காட்சி -நாடோடி மன்னன்*

    3.எம்.ஜி.ஆர். -நிர்மலா உரையாடல் - ஊருக்கு உழைப்பவன்*

    4.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து -நேற்று இன்று நாளை*

    5.எம்.ஜி.ஆர். சாப்பிடும் காட்சி - மாட்டுக்கார வேலன்*

    6.நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு - ஆசைமுகம்*

    7.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -ரிக்ஷாக்காரன்*

    8.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*

    9.மானல்லவோ கண்கள் தந்தது - நீதிக்கு பின் பாசம்*

    10.எம்.ஜி.ஆர்.-மேஜர் சுந்தரராஜன் உரையாடல் -நான் ஏன் பிறந்தேன்*



    .*

  9. Likes orodizli liked this post
  10. #328
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ��"தலைவன்" பொன்விழா ஆண்டு.........
    (24.07.1970-----24.07.2020)
    ��இதே தேதி இதே மாதம் 50ஆண்டுகளுக்கு முன் தலைவரின் "தலைவன்" படம் வெளியானது.இன்று தலைவனுக்கு பொன்விழா ஆண்டு.��

    ��எம்.ஜி.ஆர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த படம் தலைவன்.

    எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் துப்பறியும் கலையை படித்து விட்டு இந்தியா வரும் ஒரு டிடெக்டிவ் ஏஜண்ட். அவரிடம் அபாரமான யோகா சக்தி இருக்கும். அதாவது தரையில் இருந்து பல அடி உயரத்தில் அந்தரத்தில் யோகா செய்வார். பெரும் பணக்காரர்களை பெண்களை வைத்து மயக்கி பின்பு அவர்களை கடத்தி பணம் பறிக்கும் வில்லன் நம்பியாருக்கு எம்.ஜி.ஆரிடம் இருக்கும் இந்த சக்தியை வைத்து பணம் சம்பாதிக்க ஆசை. ஆனால் எம்.ஜி.ஆரோ நம்பியாரை உரிய ஆதாரத்துடன் கைது செய்ய வந்திருக்கிறவர். இந்த இருவருக்கும் இடையிலான பரபரப்பான மோதல்தான் படம்.����

    ��எம்.ஜி.ஆர் ஜேம்ஸ்பாண்ட் போன்றே படம் முழுக்க கோட்சூட், கருப்பு கண்ணாடி, கையில் ஒரு சூட்கேசுடன் வருவர். இந்த படத்தில் எம்.ஜி.ஆருடன் நம்பியார், அசோகன், நாகேஷ், வாணிஸ்ரீ, ஜோதிலட்சுமி, மனோரமா, சகுந்தலா நடித்திருந்தார்கள். பிரபல மலையாள இயக்குனர் பி.ஏ.தோமஸ் தயாரித்து இயக்கி இருந்தார். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார்��

    ��.இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தற்சமயம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் சித்த மருத்துவம் மூலம் நோயாளிகள் குணமாகும் நேரத்தில் தலைவர்50 ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவம் பற்றியும் யோகா பற்றியும் புகழ்ந்து கூறியிருப்பது ஆச்சரியம் தருகிறது. சித்த மருத்துவம் பற்றி பேசும் இதே காலத்தில் இந்த படத்தின் பொன்விழா ஆண்டு வருவதும் தலைவர் ஒரு தீர்க்கதரிசி மட்டும் அல்ல, சைதையார் அடிக்கடி சொல்லி வருவது போல தலைவரே ஒரு சித்தர் தான் என்பது புலப்படுகிறது.������.........

  11. #329
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    லண்டனில் நாடோடி மன்னன்!

    1966 ஆம் ஆண்டு நாவலர் நெடுஞ்செழியன் லண்டன் சென்றார். அப்போது லண்டன் தமிழ் சங்கத்தினர் புரட்சி நடிகரிடம் ஒப்படைக்க இரண்டு போர் வீரர்கள் சில்ககளை கொடுத்து அனுப்பினார். இதை ஒப்படைக்கும் லண்டன் தமிழர்கள் சொன்னது:

    தமிழ்ச் சங்கத்திற்கு என்று ஒரு கட்டிடம் இருந்தால் லண்டன் வரும் லாகின் பேராசிரியர்கள் தலைவர்கள் எல்லாம் தமிழனின் பெருமையை பற்றி அறிந்துகொள்வார்கள் என்ற நோக்கத்துடன் நிதி திரட்டினார்கள். அப்போது அங்கே உள்ள பெரிய நடிகர்களுக்கெல்லாம், "அகில இந்திய புகழ், அகில உலக புகழ்பெற்ற நடிகர்க்கெல்லாம் கடிதம் எழுதினோம். ஏதும் பதில் இல்லை!!!

    ஆனால் புரட்சித் நடிகர் எம்.ஜி.ஆர் மட்டும் தான் கடிதம் கிடைத்தவுண்டன் "நாடோடி மன்னன்" படத்தை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். அதன் மூலம் வந்த தொகையை கட்டிட நிதிக்கு கொடுத்தார் [ நீங்கள் நினைப்பது போல தினமும் காட்சி என்று அந்த காலத்தில் கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும், சொசைட்டி போன்ற இடங்களில் காண்பிக்க படும்].

    தனக்குப் பதிலாக " நாடோடி மன்னனை" அனுப்பி தமிழர்கள் மட்டுமின்றி ஆங்கிலேயர்களும் கண்டு மஃகிழும்படி செய்தார். அதன் மூலம் வசூலான பவுண்ட் [ இன்றைய மதிப்பு ரூ.1,536,660/=] அந்த சங்கத்துக்கு அளிக்கப்பட்டது.

    அந்த கொடைக்கு அவர்கள் செலுத்தும் அன்பின் காணிக்கையாக ஆவர் எப்படி திரையில் வாள் தூக்கிப் போராடுகிறாரோ ....எப்படி ஒரு படத்திலாவது அவர் நம்மை செய்யாமல் முடிவதில்லையோ..... அதைப்போல நாட்டில் அநியாயக்கார்கள், அக்கிரமக்காரர்களை வீழ்த்தி நேர்மையும் , நிதியையும் நிலைநாட்ட பாடுபடும் புரட்சி நடிகருக்கு எங்கள் அனுப்பின காணிக்கையாக 13ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வீரர்களின் சிலைகளை ஏற்க ஏற்றவர் புரட்சி நடிகர் தான் என்று கருதி அனுப்புகிறோம்.

    இந்த செய்தியை ஜூலை 1966 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த "தங்கவாள் கொடையளிப்பு விழாவில்" நாவலர் தங்கள்வாள் தெரிவித்தார்...

  12. #330
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் அசுர சாதனை பட்டியல்
    1970 ம் ஆண்டு வரை...
    அகில இந்தியாவில்
    வசூலில்...
    முதல் இடம் ...
    இந்தி படமான
    சங்கம்
    2 வது..
    பூலர் அவுர் பத்தர்
    3 வது
    எங்கவீட்டுப்பிள்ளை

    அடுத்து...
    இந்தியாவில்
    2 வார வசூலில்
    கோவையில் மட்டும்
    ரகசியபோலிஸ் 115
    சாதனை.
    டைமண்ட்
    கர்னாடிக்
    இரண்டு வார வசூவ்
    ரூ. 1,73,071,43
    பார்த்தவர்கள் : 1,61,234
    அரங்கில் 5 காட்சி
    4 காட்சி ஒடியுள்ளது.

    அடுத்து...
    மலேசியாவில்
    அதிக நாள் ஒடிய
    இந்திய படங்களில்...
    சங்கம் 58 நாள்
    நாடோடி மன்னன் 52
    எங்கவீட்டுப்பிள்ளை 48
    ஆங்கில படம்
    சவுண்ட் ஆப் மீயூசிக்
    40 நாள்.

    அடுத்து
    தஞ்சாவூரில்
    முதன் முதலில் 2 மிகப்பெரிய அரங்கில்
    வெளியிடப்பட்ட
    அடிமைப்பெண்
    யாகப்பா 12 நாள்
    ஞானம் 12 நாள்
    பார்த்த மக்கள் : 88,865
    வசூல் : 56,844.15

    அடுத்து
    கடலூர்
    அடிமைப்பெண்
    2 மிகப்பெரிய அரங்கில்
    வெளிவந்து...
    நீயுசினிமா 10 நாள்
    கமர் 10 நாள்
    கண்டு களித்தவர்கள்
    1,23,472 பேர்.
    4,5 காட்சிகள் ஒடியது.

    கேரளா
    பாலக்காடு
    கவுடர் அரங்கில்
    குடியிருந்த கோயில் 42
    அடிமப்பெண் 36
    ஒளிவிளக்கு 33
    நம்நாடு 32
    சி.மண் 21

    கேரளா
    திருவனந்தபுரம்
    நீயூ தியேட்டர்
    அடிமைப்பெண்
    50 நாள் ஒடியது.

    அடுத்து...
    பெங்களுரில்
    3 அரங்கில் 11 வாரம்
    நடைபெற்ற முதல் தமிழ்படம் அடிமைப்பெண்
    அபேரா 77. நாள்
    மெஜஸ்டிக் 77 நாள்
    சாரதா 77 நாள்

    முதன் முதலில்
    தமிழகத்தில்
    46 தியேட்டரில் மட்டும்
    ஒடி முடிய வசூலை அதிகம் கொடுத்த முதல் படம் : அடிமைப்பெண்
    ரூ. 66, 01,191.68. ஆகும்.
    (66 லட்சம்)

    தகவல் தொடரும்
    உரிமைக்குரல் ராஜு...........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •