Page 93 of 210 FirstFirst ... 43839192939495103143193 ... LastLast
Results 921 to 930 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #921
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் மாநகரில்*...
    வசூலுக்கே இலக்கணம், இலக்கியம், இதிகாசம் படைத்த திரையுலக ஏக சக்கரவர்த்தியாம்...மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியங்கள் வசூலில் நிலைத்து நின்றவைகள் சில....

    1956 : மதுரை வீரன்
    ஒரியண்டல் : 161 நாள்
    வசூல் : 2,25,481.38

    1958 : நாடோடி மன்னன்
    நீயூ சினிமா* 147 நாள்
    சித்தேஸ்வரா 33 நாள்
    மொத்த வசூல் : 2,47,160.22

    1965 : எங்கவீட்டுப்பிள்ளை
    சாந்தி 113 நாள்
    பிரபாத் 50 நாள்
    சித்தேஸ்வரா 44 நாள்
    மொத்தம் 207 நாள்*
    வசூல் : 2,74,776.99

    1965 : ஆயிரத்தில் ஒருவன்
    ஒரியண்டல் 100 நாள் : 2,16,266.22

    1966 : அன்பே வா
    ராயல் 107 நாள் : 2,18,617.30
    1967 : காவல்காரன்
    ஒரியண்டல் 106 நாள் : 2,07,198.20
    1968 : ரகசியபோலிஸ் 115
    ஒரியண்டல் 105 நாள் : 2,01,486.50
    1968 : குடியிருந்த கோயில்
    சங்கம் 86 நாள் : 2,06,316.60
    1968 : ஒளிவிளக்கு*
    சங்கம் 91 நாள் : 2,03,181.30

    1969 ல் அடிமைப்பெண்
    நகரில் 3 லட்சத்தை பெற்ற முதல் படம் இது....
    சாந்தி 133 நாள் : 3,00,474.13
    1969 : நம்நாடு
    பேலஸ் 107 நாள் : 2,43,342.20

    1970 ல் மாட்டுக்கார வேலன்
    ஜெயா 156 நாள் : 3,61,307.90
    ஜங்ஷன்ராம் 40 நாள்* * * * * :* * * *வசூல்* :* 42,600.35
    தொடர்ந்து 196 நாள் ஒடி
    மொத்தம் வசூல் :* 4,03,908 .25
    நகரில் 4 லட்சத்தை ஒடி முடிய பெற்ற முதல் படம்....
    1970 : என் அண்ணன்
    அலங்கார் 110 நாள் :2,49,494.00
    1970 : தேடி வந்த மாப்பிள்ளை
    அலங்கார் : 71 நாள் : 1,85,414.25
    தொடர்ந்து பிரபாத் 35 நாள் ஒடிய
    மொத்த வசூல் : 2,19,370.40
    1970 : எங்கள் தங்கம்
    பேலஸ் 105 நாள் : 2,17,177.63

    1971 குமரிக்கோட்டம்
    பேலஸ் 108 நாள் : 2,29,396.96
    1971 : ரிக்க்ஷாக்காரன்
    அலங்கார் 118 நாள் : 3,81,692.80

    1972 : நல்லநேரம்
    ஒரியண்டல் 126 நாள் : 2,76,659.40
    மற்றும் பிரபாத் 42 நாள்...
    ஜங்ஷன் ராம் 35 நாள் ஒடியது.
    மொத்த வசூல் : 3,48,107.80 ஆகும்.

    1973 : உலகம் சுற்றும் வாலிபன்
    சங்கம் : 126 நாள் : 5,65,662.70
    (ரத்னா 41நாள்...நடராசா.. 40)
    மொத்தம் 207 நாள்*
    வசூல் : 6,46,320.17....
    நகரில் தனி அரங்கில் 5 லட்சத்தை
    கடந்தும் முதல் வெளியீட்டில் ஒடி முடிய 6 லட்சத்தை கடந்தும் சாதனை ஏற்படுத்திய காவியம்.

    1974 : உரிமைக்குரல்*
    சங்கம் 127 நாள் : 5,03,288.15
    நகரில் 2 வதாக 5 லட்சத்தை வசூலில் பெற்றக்காவியம்...

    1975 : நினைத்ததை முடிப்பவன்
    ஜெயா 84 நாள் : 4,12,716.17
    நகரில் 100 நாட்களை நெருங்காமலேயே 4 லட்சத்தை பெற்று..
    பட்டணம்மா படத்தின்*
    146 நாள் வசூல் உட்பட முறியடித்து அந் நடிகரின் அத்தனை படத்தையும் மண்ணோடு புதைத்த
    காவியம் .....

    1975. :* இதயக்கனி*
    அலங்கார் : 105 நாளில்
    5 லட்சத்தை கடந்த 3 வது காவியம்.
    வசூல் : 5,08,748. 20 ஆகும்...

    1975 : பல்லாண்டு வாழ்க
    அப்ஸரா 104 நாள் : 3,68,725.65

    1976 : நீதிக்குத்தலை வணங்கு
    சங்கம் 105 நாள் : 3,72,900.20

    1977 : மீனவ நண்பன்
    அப்ஸரா 103 நாள் : 3,03,642.70
    (தொடர்ந்து நடராசா 40 நாள்
    ஜங்ஷன் ராம் 35 நாள்....)
    வசூல் : 4,06,922.46 ஆகும்.
    +++++++++++++++++++++++++
    மேலும் பல திரைப்படங்கள் வசூலில் சாதனை செய்துள்ளது...
    ++++++++++++++++++++++++++++++
    தொடரும் கோவை மாநகர் சாதனையில் மக்கள்திலகத்தின் காவியங்கள்.......ur...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #922
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/09/20 அன்று அளித்த தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் 1974ல் அமெரிக்காவிற்கு ஒரு சிறப்பு அழைப்பின் பேரில் செல்கிறார் . அங்கு சென்னைவாசியான திரு.பழனி பெரியசாமி பால்ட்டிமோர் பல்கலை கழகத்தில் பொருளாதார துறை பேராசிரியராக* இருக்கிறார்* திரு.பழனி பெரியசாமி அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.மீது அவ்வளவாக ஈர்ப்பு எல்லாம் இல்லாத நேரம் ..எம்.ஜி.ஆர்.அங்கு வந்தபோது அவருக்கு துணையாக இருந்து சில உதவிகள் செய்கிறார் . எம்.ஜி.ஆர்.ஒருநாள் வழக்கம் போல அவரை அழைத்து கொண்டு** நான் இங்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் ..அங்கிருந்து ரயிலில் பயணம் மேற்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்று கூறி ,மேலும்4 பேர்களுடன் ரயிலுக்காக காத்திருக்கிறார் .ரயில் வந்துவிட்டது .ரயிலில் கூட வந்த 4 பேர்களும் ,பழனி பெரியசாமியும் ஏறிவிட்டார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். ரயிலில் ஏறாமல் தன் வலப்புறம் பார்த்து கொண்டு நிற்கிறார் .ரயிலில் ஏறிய அனைவரும் இறங்கிவிடுகிறார்கள் .இந்த ரயிலை விட்டால் அடுத்து அரைமணி நேரத்திற்கு பின்தான்* அடுத்த ரயில் வரும் என்று எம்.ஜி.ஆரிடம்* பழனி பெரியசாமி கூறுகிறார் .பரவாயில்லை வலப்புறம் பாருங்கள். ஒரு பெண் தன் 3 வயது குழந்தையுடன் வேகமாக ஓடிவந்து கொண்டிருக்கிறார் .அவரை பார்த்துதான் தான் நின்றுவிட்டதாக எம்.ஜி.ஆர். கூறுகிறார் .* அந்த பெண் அருகில் வந்ததும் நீங்கள் யார் ? ஏன் இப்படி குழந்தையுடன் ஓடிவர வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்க ,நான் சுமார் 150கி.மீ.தூரத்தில் இருந்து குழந்தையுடன் காரை சொந்தமாக ஒட்டி கொண்டுவந்தேன் . நீங்கள் இந்த ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில்* புறப்படுவதாக தகவல் அறிந்து வந்தேன் என்கிறார் .எம்.ஜி.ஆர். உடனே அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்தி , நீங்கள் எங்கு தங்கி இருக்கிறீர்கள் என்று விசாரித்து ,அவளுடைய குழந்தையை வாஞ்சையாக வாங்கி கொஞ்சி மகிழ்ந்து பின்னர் திருப்பி அனுப்பினார் .


    இந்த மாதிரி நாம் பயணத்திற்கு தாமதம் செய்தால் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாது .சில இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு அடுத்த நாளோ அல்லது வேறு ஒரு நாளோதான் செல்ல முடியும் என்கிறார் பழனி பெரியசாமி .இருக்கட்டும் பரவாயில்லை .நான் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இந்த நாட்டிற்கு வந்திருக்கிறேன் .என்னை காணவேண்டும் என்பதற்காக* ஒரு பெண் தன் குழந்தையுடன் ,தன்னந்தனியாக150 கி.மீ. அவர்* காரை வேகமாக ஒட்டிக்கொண்டு வந்து ,ரயில் நிலைய நடைமேடையில் நடையும் ஓட்டமுமாக வந்து கொண்டிருக்கிறார் .அவர் மட்டும் என்னை காண முடியாமல் போயிருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பார்.ஏமாற்றம் அடைந்திருப்பார் . .நானும் வேதனை அடைந்திருப்பேன் .அந்த பெண்ணின் எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றியதில்தான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்று தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினாராம்*


    தமிழ் திரைப்பட கதாநாயகர்களில் மிக சிறந்த வாள் வீரர் என எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் பேசப்பட்டார் .அவரது வாள் வீச்சின்போது நடனமும் ஒளிர வேண்டும் .அதனால்தான் நீரும் நெருப்பும் படத்தில் கடவுள் வாழ்த்து பாடும் என்ற பாடலில்*வாள்வீச்சு பயிற்சியை சிறுவர்களுக்கு கற்று கொடுக்கும்போது சில நடனமும்*ஆடி அதை நடனக்காட்சியுடன் கூடிய வாள்* வீச்சாக படமாக்கி இருப்பார்கள் .அப்படி அந்த வாள் வீச்சிற்கு அப்படி ஒரு சிறப்பான பெயர் புகழ் வர காரணம்*கேரளாவில் குலதெய்வ வழிபாட்டில் முக்கியமானது வெளிச்சப்பாடு என்பது .வெளிச்சப்பாடுஎன்பது தங்கள்* குலதெய்வ கோயிலில் உள்ள சாமியின் முன்னால் நீண்ட ஒரு கத்தியை வைத்திருப்பார்கள் .அந்த கத்தி என்பது ஒரு குடும்பத்தின் குலத்தைசேர்ந்த**வாரிசு . அந்த கத்தியை எடுக்க கூடிய குழந்தை எத்தனை வயதிற்குள் இருக்கவேண்டும் என்பதற்கு வரம்பு இல்லை .எம்.ஜி.ஆர். அந்த வாளை* எடுத்து கொண்டு வந்து பூஜை செய்கிற அருளாளி,சாமியார் கைகளில் தரவேண்டும் அப்படி அந்த வாளை எம்.ஜி.ஆர். கொண்டுவந்து தருவார் .அதன்பின் அந்த பூசாரி தன்* கைவிரலில் வாளால்* கீறி வரும் ரத்தத்தை எம்.ஜி.ஆர். நெற்றியில் திலகமாக இடவேண்டும் .இதுதான் வெளிச்சப்பாடு என்பது .அந்த வெளிச்சப்பாட்டிலே அந்த வாளை* தூக்கி வந்து பூசாரியின் கைவிரல் ரத்தத்தால்*,நெற்றியில் திலகம் இட்டுக்கொண்ட அந்த எம்.ஜி.ஆர்.தான் பிற்காலத்தில் வாள் வீச்சில் மாவீரனாக திகழ்ந்தார் .


    பல நடிகர்கள் சொந்த படம் எடுத்து எதற்கு கையை சுட்டு கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்தப்படம் எடுப்பதில்லை . ஆனால் ஒரு சில கருத்துக்களை சொல்வதற்காக ,[பரீட்சார்த்தமாக , தன் கையில் உள்ள அனைத்து சொத்து ,பணம் எல்லாவற்றையும் செலவழித்து சொந்த படம் தயாரிக்க எம்.ஜி.ஆர். அவர்கள் எடுத்த ரிஸ்க் இருக்கிறதே அதற்கு அசாத்தியமான மனதைரியம் ,துணிவு ,எதையும் தாங்கும் இதயம் இருக்க வேண்டும் .இவை எல்லாம் இருந்ததால் எம்.ஜி.ஆர். துணிந்து செயல்பட்டார் . அடிமைப்பெண் படம் வெளியானபின் அதை பார்த்த நடிகர் சிவாஜி கணேசன் ,எம்.ஜி.ஆர். அண்ணனின்**சொந்த பட தயாரிப்பில் உள்ள திறமை, துணிவு, தைரியம் ,சாமர்த்தியம்* வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. இது ஒரு தனி மனித சாகசம்* என்று கருத்து வெளியிட்டார் .


    திரு.கா.லியாகத் அலிகான்* : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் தயாரிக்கும் சொந்த படம் நல்லமுறையில் அமைய வேண்டும் ,காட்சிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் சொத்துக்கள் சிலவற்றை விற்று ,சிலவற்றை அடகு வைத்து ,கடன் வாங்கியும் படத்திற்காக செலவழித்திருக்கிறார் .எம்.ஜி.ஆரின் அண்ணன் கடன் வாங்கி சொந்த படம் தயாரிப்பது தவறில்லை .ஆனால் உடனடியாக ரூ.10,000/- கேட்கிறாயே .நான் என்ன செய்வது என்று கேட்கிறார் .ஆமாம் உடனடியாக தேவை. ஒரு காட்சிக்கு சரவிளக்கு மேலே* தொங்க விடுவதற்கு தேவை .ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். அந்த சரவிளக்கு சுமார் ரூ.7,000 மதிப்பில் வாங்கி தரப்பட்டு காட்சிக்காக பொருத்தப்பட்டது .எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் காட்சி படமாக்கியதும் அதை திருப்பி கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் வாங்கி வந்துள்ளார் .காட்சி முடியும் பட்சத்தில் அதை எம்.ஜி.ஆர். உடைக்க சொன்னார் .எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் இதை கண்டு ஏன் உடைக்கிறீர்கள் ,பணத்தை விரயம் ஆக்குகிறீர்கள் என்று கேட்க,காட்சியின்படி இதை உடைக்க வேண்டும் என்று* எம்.ஜி.ஆர். கூறினாராம் .பொருள் விரயம், நஷ்டம் பற்றி கவலைப்படாமல் காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்தாக இருந்தார் எம்.ஜி.ஆர் .


    திரு.துரை பாரதி : 1960களில் வெளியான* கிளியோபாட்ரா ஆங்கில படத்தில்*கதாநாயகி வருகைக்கான காட்சி மட்டும் மிகவும் நீண்டு சுமார் 8 நிமிடங்கள் இருக்குமாம்* *அதே சாயலில் எம்.ஜி.ஆர். அடிமை பெண் படத்தில் ராணி பவளவல்லி* வேடத்தில் ஜெயலலிதா தோன்றும்போது அந்த காட்சியை அமைத்திருப்பார் .தமிழ் திரையுலகிற்கு ,இது ஒரு புதுமையான ,பெருமையான விஷயமாக பேசப்பட்டது .


    திரு.கா. லியாகத் அலிகான் : எம்.ஜி.ஆர். அவர்களை ,அவர் திறமையை ,ஆற்றலை எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை .தன்னுடைய சிந்தனைகளை அனைத்தையும் தேக்கி வைத்து பயன்படுத்தினார் .பேரறிஞர் அண்ணா மறைந்திருந்த நேரம் . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை மறைமுகமாக* தி.மு.க. வில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன .அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை .1971 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு 184 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு ஆவதற்கான பணிகளில் இவருடையஉழைப்பின்* பங்கும் மிக பெரியது .அந்த தேர்தலில்* தி.மு.க.வினர் அந்த வெற்றியில் எம்.ஜி.ஆரின் பங்கை*ஒத்து கொள்ளவில்லை என்றாலும் தொண்டர்களுக்கு தெரியும்*எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கி எந்த அளவிற்கு*மதிப்புள்ளது ,பயன்பட்டது*என்று .ஏனென்றால் எம்.ஜி.ஆர்.அவர்களும் கடுமையாக உழைத்து பிரச்சாரம் செய்திருக்கிறார் .அந்த உழைப்பின் பலன்தான் 184 என்கிற மிருகபலம் கொண்ட*மெஜாரிட்டி தி.மு,க.விற்கு கிடைத்தது*

    திரு.துரை பாரதி*: எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அந்த சமயத்தில் அமைச்சர் பதவி தரவில்லை என்று ஒரு புகார் இருக்கிறது .அதற்காக அவருக்கும் மனவருத்தம் இருந்ததாக சொல்லப்பட்டதே .

    திரு.கா. லியாகத் அலிகான் :* எம்.ஜி.ஆர். அவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் .அப்போது அமைச்சர் பதவி கேட்டிருந்தாலும் சினிமாவை அவர் கைவிட வேண்டும் என்று சொன்னபோது ,சினிமாதான் எனக்கு வாழ்க்கையை கொடுத்தது .அதைவிட்டு* எப்படி வரமுடியும் .அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவில்தான் அவர் இருந்தார் .ஒருவேளை அவர் சினிமாவை புறக்கணித்து அமைச்சர் பதவியை*பெற்று இருக்கலாம் .ஆனால் சினிமா என்பது எத்தகைய*ஈர்ப்பு சக்தி கொண்டது .அதன் மூலம் தி.மு.க. கட்சி, சின்னம் , கொள்கைகள் ,திட்டங்கள் எல்லாம் மக்களிடம் பிரபலம் ஆகின .அதுமட்டுமல்லாமல் சினிமா மூலம் போதிய வருவாய் கிடைத்து*கணக்கில்லாமல் ,விளம்பரம் இல்லாமல் பலருக்கு*உதவிகள் செய்து வந்தார்*.அமைச்சர் பதவி கிடைத்தால் போலீஸ் சல்யூட், மரியாதைகள் கிடைக்குமே தவிர ,மற்றபடி சினிமா மூலம் ஒரு நடிகனுக்கு உள்ள* ஈர்ப்பு சக்தி*,அரசியலிலோ, அமைச்சர் பதவியிலோ*கிடைக்க*வாய்ப்பில்லை .இதை அப்போதே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உணர்ந்தே இருந்தார் .அவர்*அ .தி.மு.க. கட்சி , கொடியை*தேர்வு செய்யும்போது குறிப்பாக*எங்களை த்தான்* அழைத்து*கருத்து கேட்டார் .அப்போது நான், குழந்தைவேலு , கே.ஏ.கே. அண்ணன் ,அனகாபுத்தூர் ராமலிங்கம் போன்றோர்*அமைதியாகத்தான் இருந்தோம்.அண்ணே நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள் என்றோம் .*பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள்தான்*கொடியை*,கொடியில் அண்ணாவின் உருவத்தை தேர்வு செய்தார் .அப்போதே*அண்ணன் கே.ஏ.கே.முன்னிலையில் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் என்னை உடுமலை தொகுதிக்கு மாணவ அமைப்பாளராக நியமித்தார்கள் .இதுதான் எம்.ஜி.ஆர். அவர்கள் எனக்கு அளித்த*முதல் பதவி .* அதன் பிறகு உடுமலை*தொகுதியில் எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அங்கீகரித்தார் .அதன் பிறகு என்னுடைய செயல்பாட்டை கண்டு ,என்னை கலந்து ஆலோசிக்காமலேயே மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளராக எம்.ஜி.ஆர். அவர்கள்* நியமித்தார்கள் .எனது பணியின் வேகம், விவேகத்தை பார்த்து*.அப்படியே படிப்படியாக உயர்த்தி மாவட்ட மாணவ அமைப்பாளர்களில்* ஒருவராக நியமித்தார் .நானும், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய இருவரும் பணியாற்றி வந்தபோது ,என் செயல்பாட்டை கணித்து , அண்ணன் காளிமுத்துவை மாணவர் அணி செயலாளராகவும் ,என்னை துணை செயலாளராகவும் போட்டார்கள் .அப்போது இளைஞர் அணி செயலாளராக திருநாவுக்கரசையும் ,இளைஞர்* அணி துணை செயலாளராக ஜெ.சி .டி.பிரபாகரனையும் நியமித்தார்கள் .எங்களுடைய வேகமான பணிகள்,விமரிசையாக செய்வதை பார்த்துவிட்டு, ஏழெட்டு மாதங்களில்* என்னை மாணவர்* அணி செயலாளராகவும் , ஜெ.சி.டி.பிரபாகரனை இளைஞர்* அணி செயலாளராகவும் போட்டார்கள் .இப்படி படிப்படியாக என்னை உயர்த்திக்கொண்டே* வந்தார்கள்.எனக்கே ஆச்சர்யமாக இருந்தது . .அப்போது என்னை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் சேர்மனாக நியமித்தார்கள் .எனக்கே நேரடியாக* சென்று ஏதாவது பதவி கொடுங்கள் என்று நான் கேட்பதற்கு* கொஞ்சம் பயமாக இருந்தது*


    .ஆனால் உடுமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகிய அமைச்சர்* குழந்தைவேலு* என் உழைப்பை* பார்த்து நேரடியாக எம்.ஜி .ஆர். அவர்களிடம் அழைத்து சென்று*.இவருக்கு ஏதாவது பதவி வாங்கி கொடுத்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் சந்தித்தார் .நான் வெளியில் இருந்தேன் .எம்.ஜி.ஆர்.அவர்களும் அமைச்சர் குழந்தைவேலுவும் உள்ளே பேசி கொண்டிருந்தார்கள் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் என் வெற்றிக்காக தொகுதியில் கடுமையாக பிரச்சாரம் செய்து உழைத்தார் . ஆகவே இவருக்கு*ஏதாவது பதவி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சிபாரிசு*செய்துள்ளார் .அமைச்சர் குழந்தைவேலு .பின்னர் இருவரும்*வெளியே வந்தார்கள் .அப்போது தலைவர் என் தோளின்மீது கைபோட்டபடி*மாடிப்படிகளில் நடந்து வந்தார் .அப்போது கோட்டையில் லிப்ட்*கிடையாது .நீ அரசு பதவி எதுவும் கேட்க கூடாது .கட்சியில் பதவி தருகிறேன் .நான் அளிக்கும் பதவியை கொண்டு நன்றாக செயல்படு என்று 1980 ஜூலை*மாதம் 10ந்தேதி சொன்னார் .உங்கள் கரங்களால் எந்த பதவி கொடுத்தாலும் வேலை செய்ய தயார் என்று சொன்னதும்*காரில்*சென்று அமர்ந்தார் .சில வினாடிகள்*கழித்து கார் கதவை திறந்து வெளியே வந்து* சில படிகள்*ஏறி மேலே வந்து என் கைகளை பற்றி குலுக்கினார் .சில*வினாடிகள்*என் கைகளை குலுக்கிவிட்டு காரில் சென்று*அமர்ந்தார் .உடனே அனைவரும் என்னை சூழ்ந்து கொண்டு*தலைவர் உனக்கு ஏதோ*பெரியதாக தருவார் போலிருக்கிறது என்றனர் .அதன் பிறகு நான் பெங்களூரு சட்ட கல்லூரியில் படிப்பதற்காக* சென்றுவிட்டேன் .ஒரு நாள் கழித்து ,உன்னை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்பரேஷனுக்கு சேர்மன் பதவிக்கு நியமித்துள்ளேன்* என்று பெங்களூருக்கு தந்தி* வந்தது .உடனே புறப்படவும் என தகவல் .1980 ஜூலை மாதம் 17ம் தேதி நான் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன் .



    கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஒரு திரைப்படமாக சொந்தமாக தயாரிக்க ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர். அதற்காகவே இயக்குனர் மகேந்திரனை அவரது கல்லூரி நாட்களில் சந்தித்ததில்* இருந்து தொடர்பு கொண்டு, தன் வீட்டுக்கு வரவழைத்து வீட்டில் வைத்து திரைக்கதை**எழுதுவதற்காக மாத ஊதியம் கொடுத்து வந்தார் .அப்படி பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு* தாக்கம் என்பது பல்வேறு படங்களில் எதிரொலித்தது .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
    ----------------------------------------------------------------------------------
    1.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் -உரிமைக்குரல்*

    2.நான் அளவோடு ரசிப்பவன் - எங்கள் தங்கம்*

    3.சிரித்துவாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

    4.தம்பிக்கு ஒரு பாட்டு - நான் ஏன் பிறந்தேன்*

    5.பம்பை உடுக்கை கொட்டி - ரிக்ஷாக்காரன்*

    6.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

    7.பொன்னெழில் பூத்தது புதுவானில் - கலங்கரை விளக்கம்*

  4. #923
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'உத்தம புத்திரன்' 1940 ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் t r சுந்தரம் இயக்கத்தில் கலைமாமணி p.u.சின்னப்பாவின் இரட்டை வேட நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம். மாடர்ன் தியேட்டர்ஸிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த படம். நீண்ட நாள் திரைபில் இருந்து வெற்றி முத்திரை பதித்த படம்.

    இந்த படத்தை மீண்டும் தயாரிக்கலாம் என்று வீனஸ் பிக்சர்ஸ் முடிவு செய்து ஸ்ரீதரை கதை வசனம் எழுதச் சொல்ல ஸ்ரீதர் கதாநாயகனாக சிவாஜியை போடலாம் என்று முடிவு செய்து விளம்பரம் நாளிதழில் கொடுத்து விட்டார்கள். ஆனால் அதே தினத்தில் எம்ஜிஆர் நடிக்கும் 'உத்தம புத்திரன்' விளம்பரமும் அதே நாளிதழின் மற்றொரு பக்கத்தில் வெளியானது.

    அதைக்கண்ட வீனஸ் நிறுவனம் கலைவாணரை அணுகி எம்ஜிஆரை விட்டுத்தர சொல்லுங்கள் என்று கெஞ்ச கலைவாணரும் தூது சென்று எம்ஜிஆரை சந்தித்து பேசினார். உடனே எம்ஜிஆர் அதனாலென்ன இருவருமே தயாரிப்போம் எது சிறந்த படம்? என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். அன்றே நடிப்பு போட்டிக்கு தயாரானார் புரட்சி நடிகர். அந்த மனஉறுதி எதிர்தரப்பில் இல்லை என்ன செய்வது. சிவாஜி ஒரு பயந்த கோழை என்பதை நாடறியும்.

    இருவரும் தயாரித்தால் நிச்சயம் எம்ஜிஆர் வெல்வார் என்பதை உணர்ந்த சிவாஜி தரப்பு கலைவாணர் மூலம் எம்ஜிஆரிடம் கெஞ்சி வாபஸ் வாங்க வைத்தனர். நடிகப்பேரரசரிடம் நாம் தோற்றுப்போவோம் என்று உணர்ந்து இந்த சரணாகதி முடிவு எடுத்தனர். கலைவாணரும் ராமச்சந்திரா! சிவாஜி ஒரு சம்பளம் வாங்கும் ஒரு நடிகர். ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற படங்களை காப்பியடித்து நடிப்பது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

    மேலும் பல வெளிநாட்டு படங்களை பார்த்து நடை உடை நடனம்
    எல்லாம் செலக்ட் செய்து வைத்து விட்டான். பாவம் அவன் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட வேண்டாம் நீ நினைத்தால் வேறு கதையை உருவாக்கி எளிதில் வெற்றி பெற முடியும் உன் திறமையை நான் மட்டுமல்ல நாடறியும்! என்று எடுத்துச் சொல்லி தடுத்து விட்டார். எம்ஜிஆரும் தம்பியின் கையறு நிலையை கருத்தில் கொண்டு தன் தயாரிப்பை கைவிட்டார்.

    அதன்பின்பு எம்ஜிஆர் தயாரிப்பில் உருவான படம்தான் "நாடோடி மன்னன்". அதே மாதிரி இரட்டை வேடத்தை தேர்ந்தெடுத்து அவருடைய சொந்த மூளையை பயன்படுத்தி டைரக்ட் செய்து "உத்தம புத்திரன்" வெளியான அதே ஆண்டில் வெளியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றார். சிவாஜி நடித்த "உத்தம புத்திரன்" 2 தியேட்டர்களில் வடக்கயிறு போட்டு 100 நாட்கள் ஓட்டி அதற்கு விழாவும் எடுத்தார்கள். அந்த வெற்றிக்கும் நம்பியாரின் நயவஞ்சக நடிப்பே காரணம். எல்லாம் நடிகப் பேரரசரின் பாசறைமில் இருந்து வந்தவர் அல்லவா?. இவரை தவிர வேறு சிவாஜியின் ஆஸ்தான வில்லன் நடிகர்களை பயன்படுத்தினால் என்னவாகும் என்று தெரியுமா சிவாஜி கைபிள்ளைகளுக்கு.

    ஆனால் "நாடோடி மன்னன்" எழுப்பிய புழுதி இன்று வரை அடங்கவே இல்லை. நடிகப் பேரரசருடன் மோதும் போது சற்று ஒரிஜினல் நடிப்பை வெளிப்படுத்தாமல் காப்பி நடிப்பை வெளிப்படுத்தி தோற்றுப் போனார்கள். அந்த கம்பெனி வீனஸ் பிக்சர்ஸ் கூட பின்னாளில் வெற்றியின் நாயகன் எம்ஜிஆரை
    தஞ்சமடைந்து "என் அண்ணன்" "ஊருக்கு உழைப்பவன்" போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை எடுத்து தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டது நாடறிந்த விஷயம்தான்.

    இந்த கையாலாகத்தனம்தான் புரட்சி நடிகர் மீது அவரது கைபுள்ளைங்களுக்கு தீராத கோபத்தை வரவழைத்தது,. என்ன செய்வது ஒருவரின் திறமை, உழைப்பு இதன் அடிப்படையில்தான் வெற்றி கிடைக்கும் என்பதை அறியாதவர்கள்தான் இந்த கைபுள்ளைங்க. காப்பி அடித்து கூட வெற்றி பெற முடியாதவர்தான் நம் கணேசன். பழைய "உத்தம புத்திரன்" பெற்ற வெற்றியில் கால்வாசி கூட வெற்றி பெறவில்லை என்று சொன்னார்கள் சின்னப்பாவின் சீடர்கள்.

    இது மட்டுமா? இதே படத்தை சற்று உல்ட்டா பண்ணி "இம்சை அரசன் 23 ம் புலிகேசி" என்ற
    பெயரில் எடுத்து மாபெரும் வெற்றி கண்டவர் சிம்புதேவன். வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பில் படம் அடைந்த வெற்றியின் அளவை விவரிக்க முடியாது. இவ்வளவு ஏன்? "தில்லானா"வை உல்ட்டா பண்ணி ராமராஜன் கனகா ஜோடி "கரகாட்டக்காரனி"ல் அடைந்த வெற்றி கைபிள்ளைகளுக்கு நினைவிருக்கும்தானே. சிவாஜியை விட இயல்பான நடிப்பில் கொடிகட்டி பறந்தார் ராமராஜன். படத்தின் வெற்றி பிரமிக்க வைக்கும் வெற்றி.
    பாவம் "தில்லானா". இந்த வெற்றியும் ஒரு பெண்ணின் பரதநாட்டிய நடனம், முகபாவத்தை வைத்து கிடைத்த வெற்றி. இதையெல்லாம் வைத்து நமது பக்கத்தை பார்க்கும் கைபிள்ளைகளுக்கு சிவாஜியின் நிலையை எண்ணி சிப்பு சிப்பா வருதாம்.

    எம்ஜிஆர் படங்கள் இதே போல் மாற்று மொழியில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யும் போது பல மாறுதல்கள் செய்துதான் கதையை தயார் செய்வார்கள். ஆனால் சிவாஜி படங்களோ ஜெராக்ஸ் காப்பி மாதிரி அப்படியே எடுப்பார்கள்.ஏனென்றால் அப்படியே காப்பி படத்தில் நடிப்பது சிவாஜிக்கு எளிதான வேலை அல்லவா. அதற்கென்று ஒரு ஜெராக்ஸ் டைரக்டரை கைவசம் வைத்திருந்தார். அவர் பெயர் c v ராஜேந்திரன்.

    கொஞ்சநாள் ஸ்ரீதரின் பிரதி எடுக்கும் உதவியாளராக இருந்த அவரின் காப்பியடிக்கும் திறமையை அறிந்த சிவாஜி அவரை தன் அருகிலேய
    வைத்துக் கொண்டது ஒரு கொசுறு தகவல். ஈ அடித்தான் காப்பி என்பது இவருக்குத்தான் பொருந்தும். படம் காப்பி பண்ணும் போது அந்த காட்சியில் இடம் பெற்ற பொருட்களை கூட அதே இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்..........ks.,.........

  5. #924
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் பெயரில் மன்றம் கண்ட எங்களை போன்றவர்களின் அனுபவங்கள்..

    1971 தேர்தலில் தலைவர் முழுவேகத்துடன் பிரச்சாரம் செய்து அவரை முதல்வர் ஆக்கினார் மீண்டும்..

    தலைவருக்கு இருந்த அபார செல்வாக்கை கண்டு அஞ்சினார் நன்றி கெட்ட அவர்.

    எம்ஜிஆர் மன்றங்களை ஒடுக்க நினைத்து மன்றங்கள் கட்சி கிளை கழக நிர்வாகிகள் அனுமதியுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற உத்தரவை மாவாட்டும் செயலர்களுக்கு சொன்னார்.

    பிள்ளையோ பிள்ளை என்ற ஒரு நாடகத்தை தயாரித்து அதில் முத்துவை நடிக்க வைத்து அந்த நாடகத்தை தலைவர் தலைமையில் அரங்கேற்றி முத்துவுக்கு விளம்பரம் தேடினார்.

    பின்னர் அந்த நாடகத்தை தன் சொந்த செலவில் படம் ஆக எடுத்து படம் பெட்டிக்குள் முடங்க.

    கோவத்தில் 1972 மதுரையில் நடைபெற்ற ஆகஸ்ட் 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் எப்போதும் மாநாட்டில் கட்சி கொடியுடன் வலம் வரும் நம் தலைவரை புறக்கணித்து மு.க.முத்துவை முதல் நாள் ஊர்வலத்தில் யானை மீது கட்சி கொடி தாங்கி வர வைத்தார்.

    நிகழ்வை பார்த்த தலைவர் ரசிகர்கள் கோவம் கொப்பளிக்க வெறுப்புடன் ஊர்வலத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

    மறுநாள் அவருக்கு முன் தலைவர் மாநாட்டில் பேச அவர் பேசிய பின் ஒட்டு மொத்த மைதானமும் காலி ஆக மேடையில் மயக்கம் போட்டார் அந்த மனிதர்.

    ஆத்திரத்தில் அடுத்து அடுத்து அவர் எடுத்த நடவடிக்கைகள் அவருக்கே எதிராக திரும்பிய வரலாறு நாடு அறியும்..நாமும் அறிவோம்.

    படத்தில் எம்ஜிஆர் மன்ற கூட்டத்தில் பேசும் தலைவர்....

    ஆர்.எம். வீ...அவர்கள், ராயப்பேட்டை சிவராமன் , எழும்பூர் தெய்வசிகாமணி, சென்னை மாவட்ட எம்ஜியார் மன்ற மறைந்த கல்யாண சுந்தரம் மற்றும் இன்னொரு மைக் அருகில் வட்டத்தில் சைதையார் அவர்கள்.

    நெருப்பாற்றில் நீந்தி வந்து தலைவர் எண்ணத்துடன் இன்றும் வாழும் உண்மை தலைவர் எண்ணங்களே என்றும் பலிக்கும்...நிலைக்கும்.

    வாழ்க தலைவர் புகழ்.

    உங்களில் ஒருவன்...நன்றி...
    தொடரும்....

    பதிவிற்கு பின் படம் கலரில் தலைவர் நெஞ்சம் சரவணன் பெரியசாமி தர படம் புதிதாக இணைக்க பட்டு உள்ளது நன்றி சகோ..........Mn...

  6. #925
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்!

    சபாபதி படத்தில் வேலைக்காரன் சபாபதியின் நடிப்பை, இந்தத் தலைமுறை மக்கள் கூட இமை கொட்டாமல் ரசிக்கின்றனர். அந்த அளவுக்கு 1936 முதல் 1950 வரை தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த மூத்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் காளி என்.ரத்தினம்.

    சிறந்த நடிகர், பாடகர், சண்டை பயிற்சி வாத்தியார், நடிப்பு வாத்தியார், அரங்க நிர்வாகி, பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு ஆசான் என பல்வேறு சிறப்புக்களைக் கொண்டவர் அவர்.

    காளி என். ரத்தினத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள மலையப்பநல்லூர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.

    மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிகள் பலவற்றில் பணியாற்றிய இவர், கோவலன் என்ற ஒரு நாடகத்தில், முதன் முதலாக காளி வேடம் போட்டார். அதில் அவரது நடிப்பை பார்த்து பலரும் அசந்து போயினர். அன்று முதல் அவர் காளி என்.ரத்தினம் என்று அழைக்கப்படலானார்.

    அவர், காளி வேடம் கட்டி ஆடினால், அவர் ஆடும் உக்கிரமான ஆட்டத்தைப் பார்த்து பல பேர் சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுவார்கள்.

    பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ஆர் போன்றவர்களுக்கு உச்சரிப்பு, நுணுக்கமான நடிப்பு, உடல் மொழி, வாள் சண்டை, கத்தி சண்டை, சிலம்பப் பயிற்சி போன்றவற்றை எல்லாம் கற்றுக்கொடுத்தவர் காளி என். ரத்தினம்.

    தமிழ் சினிமாவில் வாத்தியார் என்றால் அது எம்.ஜி.ஆரை மட்டுமே குறிக்கும். ஆனால் எம்.ஜி.ஆரே, தமது வாத்தியார் காளி என். ரத்தினம் என்று, 1970-ம் ஆண்டு “நான் ஏன் பிறந்தேன்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டுள்ளார்

    1936-ல் வெளியான பதிபக்தி என்ற படமே காளி என். ரத்தினம் நடித்த முதல் படம். முதல் படத்திலேயே அவர் இரண்டு வேடங்களை ஏற்று அற்புதமாக நடித்திருந்தார்.

    அதைதொடர்ந்து, 1950 வரை சந்திரலேகா, பஞ்சாப் கேசரி, உத்தம புத்திரன், சபாபதி, திவான் பகதூர், ஸ்ரீ முருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆண்டாள் உள்பட 5௦ படங்களுக்கும் மேல் பாடி நடித்துள்ளார்.

    காளி என். ரத்தினம் போல ஒரே காட்சியில் எண்ணற்ற முக பாவனை காட்டக் கூடிய நடிகர் வேறு யாரும் இல்லை என்று மூத்த திரை விமர்சகர்கள் பலராலும் இன்றும் பாராட்டப் படுகிறார்.

    என்,எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் ஜோடியைபோல, அந்தக் காலத்தில், காளி என். ரத்தினம்- சி.டி.ராஜகாந்தம் ஜோடி மிகவும் பிரபலமான ஜோடியாகும்.

    காளி என். ரத்தினம் போடாத வேடமும் இல்லை, பாடாத பாடலும் இல்லை என்ற அளவுக்கு அசத்தி இருக்கிறார். கடைசியாக அவர் பொய்க்கால் குதிரை ஆட்டம் போடத் தயாரானபோதுதான், அவரை மரணம் தழுவிக்கொண்டது.

    தி இந்து நாளிதழ் கூட காளி என். ரத்தினம் பாணியைப் பற்றி பல நேரங்களில் சிறப்பாகப் பாராட்டி எழுதி உள்ளது. இளைய தலைமுறையினர் காளி என். ரத்தினம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    காளி என். ரத்தினம் முதல் வரிசை நகைச்சுவை நடிகராக வலம் வந்த 1940 களில், அன்றைய சினிமா பத்திரிகை ஒன்று காளி என். ரத்தினம் பற்றி வெளியிட்ட செய்தியை நட்சத்திர தேடல்கள் என்ற கட்டுரையில், மறைந்த முன்னணி எழுத்தாளர் அறந்தை நாராயணன் பதிவு செய்துள்ளார்.

    “ரத்தினம் பழங்கால கிராமிய பழக்க வழக்கங்களுக்கு நல்ல மெருகு கொடுத்து, சினிமா படங்களில் புகுத்தி, பட்டனப்புரங்களில் உள்ள புதுக்கால மனிதர்களும் அவற்றை தெரிந்து கொண்டு ரசிக்கும்படி செய்திருக்கிறார். கிராம மக்களோ தங்கள் சம்பந்தமான விஷயங்களை சினிமாவில் பார்க்கும்போது பிரமாதமான பூரிப்பு அடைகிறார்கள்.

    இந்தக் காரணங்களினாலே அவர்கள் ரத்தினம் நடிக்கும் படங்களைப் பல தடவை பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் நிறைய வசூலைப் பெற்று வந்ததற்கு ரத்தினத்தின் நடிப்பு ஒரு முக்கிய காரணமாகும்

    படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பாராட்டி மகிழும், மாபெரும் கலைஞன் காளி என். ரத்தினம், காலத்தால் மறைக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போனதை ஒரு சமூக அவலம் என்றே சொல்ல வேண்டும்........

  7. #926
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி கணேசன் ரசிகர்கள் பொய்க்கு அளவே இல்லாமல் போய்விட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தங்கப்பதக்கம் வசூலில் முந்தியதாம். இப்படி சொல்பவர்களை கவனித்து பார்த்தால் 40, 45 வயதுக்காரர்களாக இருப்பார்கள். விஷயம் தெரிந்த சிவாஜி கணேசன் ரசிகர்கள் இப்படி பேசமாட்டார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும். வாலிபன் வசூலுக்கு நம்மிடம் ஆதாரம் உள்ளது. ஆனால், நம்மிடம் ஆதாரம் கேட்பவர்கள் அவர்களது தங்கப்பதக்கம் வசூல் ஆதாரத்தை காட்டமாட்டார்கள். ‘தங்கப்ப............ தக்கம்’ என்று வடிவேல் காமெடி மாதிரி ஆகிவிட்டது.

    1980-களில் கமல்ஹாசன், பாக்யராஜ், ரஜினிகாந்த் படங்களை சிவாஜி கணேசன் படங்கள் வசூலில் முறியடிக்க முடியாமல் திணறிய கதை இப்போதைய இளைஞர்கள் கூட அறிந்ததுதான். அதாவது பரவாயில்லை. அதைவிடவும் சிவாஜி கணேசனுக்கு மோசமான நிலை ஏற்பட்டது. மார்க்கெட் இழந்து அதே ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், விஜய்காந்த் போன்றோர் கதாநாயகனாக நடித்த படங்களில் அப்பா, அண்ணன், மிலிட்டரிக்காரன், அஜய் என்ற பிரபலமாகாத புதுமுக நடிகருக்கு (அஜய் என்பவர் ஒரு படத்தில்தான் நடித்தார் என்று நினைவு) தாத்தா என்று சிறிய வேடங்களில் துணை நடிகராக சிவாஜி கணேசன் நடித்தது எல்லாம் காலக் கொடுமை. கேட்டால் அவை எல்லாம் முக்கியமான வேடம் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்வார்கள். யார் வேண்டுமானாலும் அந்த வேடத்தை செய்யலாம்.தபால்காரர் கொடுத்த தபாலால் கதையில் முக்கிய திருப்பம் ஏற்படுகிறது என்றால் படத்தில் அந்த தபால்காரர்தான் முக்கிய கதாபாத்திரம் என்று புரிந்து கொள்ளும் மனநிலையில்தான் சிவாஜி கணேசன் ரசிகர்கள் இப்போதும் உள்ளனர்.

    மக்கள் திலகமும் சிறிய வேடங்களில் நடித்து கதாநாயகரானார். ஆனால், ஒரு நிறுவனத்தின் பியூனாக வேலைக்கு சேர்ந்து உழைத்து அந்த நிறுவனத்துக்கு மேனேஜிங் டைரக்டர் ஆவது பெருமை. மக்கள் திலகம் அப்படித்தான் உயர்ந்தார். கடைசிவரை அவர் நிலை உயர்ந்து கொண்டே சென்றதே தவிர தாழவே இல்லை. சிவாஜி கணேசன் நிலைமை தலைகீழ். ஒரு நிறுவனத்தில் ஒருவர் மேனேஜிங் டைரக்டராக சேர்ந்து அதே நிறுவனத்தில் தனது தவறுகளால் பதவி இறக்கம் செய்யப்பட்டு பியூனாகியது போல, பராசக்தியில் கதாநாயகனாக அறிமுகமான சிவாஜி கணேசன், பணத்துக்காக கண்ட படங்களில் நடித்து தனது தவறுகளால் பதவி இறக்கம் செய்யப்பட்டு துணை நடிகராகி ஓய்ந்தார். அரசியலும் ‘திருவையாறு’ அவர்களை தூங்கவிடாமல் துரத்தும். இதை சிவாஜி கணேசன் ரசிகர்கள் புரிந்து கொண்டால் நல்லது.பின்குறிப்பு: சிவாஜி கணேசன் பிறந்த நாளுக்கு அவரது இளையமகன் பிரபுகூட சிலைக்கு மாலைபோட வரவில்லை. இதுதான் சிவாஜி கணேசனின் மரியாதை.......... Swamy...

  8. #927
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகப் பேரரசர் யாரது ராமச்சந்திரன் என்ற நபர் ? தரமில்லாமல் விமர்சிக்கிறார். சிவாஜி கணேசனின் ரசிகர்கள் நல்லவர்களாம். அன்பு, பண்பு உள்ளவர்களாம். அவர்களது உண்மையான முகம் என்ன என்பதற்கு இந்த ராமச்சந்திரன் ஒரு உதாரணம். ராமச்சந்திரன்.. உங்க பேரையாவது மாத்துங்க. எங்க தலைவர் பேரை வெச்சுக்கிட்டு இப்படி எழுதாதீங்க. நடிகப் பேரரசர், மாற்றுக்கருத்தை அனுமதிக்கலாம். நாகரிகம் இல்லாத கருத்துக்களை நீக்கலாமே.?...... Swamy...

  9. #928
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை மாநகரில்*
    கொள்கை தங்கம் பொன்மனச்செம்மல்*
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் காவியங்கள் படைத்த அற்புத சாதனைகளும்......*
    புரட்சி படைத்த வசூலில் முதலிடத்தை பெற்ற திரைக்காவியங்களின் வரலாறும்.....
    ++++++++++++++++++++++++++++++
    நகரில் அதிக அளவில்*
    100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைக்காவியங்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே இன்று வரை சாதனையில் முன்னணி படைக்கிறது....
    ++++++++++++++++++++++++++++++
    100 நாட்களை கடந்த காவியங்கள்
    ++++++++++++++++++++++++++++++
    ராஜகுமாரி, மோகினி, மந்திரிகுமாரி, மர்மயோகி,*
    என் தங்கை, மலைக்கள்ளன்
    குலேபகாவலி,*
    அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன்,*
    தாய்க்குப்பின் தாரம்,*
    சக்கரவர்த்தி திருமகள்,*
    நாடோடி மன்னன்,*
    திருடாதே,*
    தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன்*
    பணக்கார குடும்பம்,
    எங்க வீட்டுப் பிள்ளை,*
    ஆயிரத்தில் ஒருவன்*
    குடியிருந்த கோயில் அடிமைப்பெண்
    *நம்நாடு*
    மாட்டுக்காரவேலன்*
    ரிக்க்ஷாக்காரன்
    நல்லநேரம்*
    உலகம் சுற்றும் வாலிபன் உரிமைக்குரல்
    இதயக்கனி*
    +++++++++++++++++++++++
    ஆகிய திரைப்படங்கள்*
    ஒரே திரையரங்கில்*
    100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது....*

    * நகரில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு 100 நாட்களை கடந்து வெற்றி காவியங்கள் பல.....

    * நகரில் வெள்ளி விழாவை கடந்து* 190 நாட்கள் ஓடிய வெற்றிக் காவியம் : எங்க வீட்டுப் பிள்ளை
    1965 : ராயல் 190 நாட்கள்*

    * 2 திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்கள் ஒடிய திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்*
    1973 : ராஜா 152 நாட்கள்
    1973 :.சண்முகா 14 நாட்கள்
    மொத்தம் 164 நாட்கள்

    * உரிமைக்குரல் திரைக்காவியம் வசூலில் வெற்றி கண்டு*
    150 நாட்கள் ஓடி வெற்றி கண்டது
    1974 : கீதாலயா 150 நாட்கள்

    * மாட்டுக்கார வேலன் 144 நாட்கள் ஓடி வெற்றி சாதனை புரிந்தது.
    1970 : இருதயா 144 நாட்கள்

    * நகரில் அதிக வசூலை 1978ம் ஆண்டு வரை பெற்ற காவியங்கள் உரிமைகுரல்*
    உலகம் சுற்றும் வாலிபன்
    இதயக்கனி*
    நகரில் தொடர்ந்து வெளியான மூன்று வண்ணப்படங்கள் சாதனையில் எவர் படமும் கிடையாது....

    1969 அடிமைப்பெண்
    ராஜா 120, சண்முகா 28
    மொத்தநாள் : 148*
    1969 நம் நாடு
    ராஜா 105, ஜி.பி.21
    மொத்தம் நாள் : 126
    1970 மாட்டுக்கார வேலன்
    இருதயா 144, ஜி.பி 40
    மொத்த நாள் : 188*.........ur...

  10. #929
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை பெருநகரில்....
    கலையுலக சக்கரவர்த்தி
    எம்.ஜி.ஆர் அவர்களின்
    வெற்றிகளை பதித்த*
    வசூல் காவியங்கள்....
    ++++++++++++++++++++++
    1956 மதுரை வீரன்
    ராஜா 119 நாள் : 2,55 ,711.42

    1958 நாடோடி மன்னன்
    ராஜா 133 நாள் : 2,96,129.23

    1961 திருடாதே
    ராஜா 112 நாள் :* 2,40, 325.65

    1964 பணக்கார குடும்பம்
    சுவாமி 105 நாள் : 2,31, 943.35

    1965 எங்க வீட்டுப்பிள்ளை
    ராயல் 190 நாள் : 3,76,005.35
    நகரில் 3 லட்சத்தை கடந்த முதல் காவியம்.

    1965 ஆயிரத்தில் ஒருவன்
    கர்னாடிக் 115 நாள் : 2,67,640.07
    நகரில் ஒரே ஆண்டில் இரு வண்ணப்படங்கள் 100 நாளை கடந்து முதல் சாதனையாகும்.

    1968 குடியிருந்த கோயில்
    ராஜா 105 நாள் : 3,07,671.21

    1969 அடிமைப்பெண்
    ராஜா/சண்முகா 148 நாள்
    வசூல் : 3,75,425. 37
    1969 நம்நாடு
    ராஜா 105 நாள் : 3,06,721.60

    1970 மாட்டுக்கார வேலன்
    இருதயா 144 நாள் : 3,41,875.04
    1971 ரிக்க்ஷாக்காரன்*
    ராஜா 120 நாள் : 3,72,216.16

    1972 நல்லநேரம்
    ராயல் 86 நாள்
    சிவசக்தி* 40 நாள்
    மொத்த நாள் : 126 நாள்
    வசூல் : 3,86,192.60
    நகரில் 1972 ல் அதிக வசூல்...
    சரித்திரம் படைத்த வசூல் ஆகும்.

    1972 நான் ஏன் பிறந்தேன்
    தொடர் வெளியீடு...
    இருதயா 77, அருள் 22
    99 நாள் வசூல் : 2,88,930.43

    1972 இதயவீணை
    இருதயா 86, ஜி.பி. 30
    மொத்த நாள் : 116
    வசூல் : 3,15,942.50

    1973 உலகம் சுற்றும் வாலிபன்
    ராஜா /சண்முகா :164 நாள்
    வசூல் : 7,01,693. 51
    நகரில் 4,5,6,7 லட்சத்தை பெற்ற முதல்படம்.... தொடர்ந்து 172 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.

    1974 உரிமைக்குரல்
    கீதாலயா 150 நாள் : 8,69,560.00
    இவ்வசூலை 1978 வரை 4 ஆண்டுகள் எந்த படத்தாலும் வெல்ல முடியவில்லை..

    1975 இதயக்கனி
    சென்ட்ரல் 105 நாள் : 4,96,451.55

    1975 பல்லாண்டு வாழ்க
    சென்ட்ரல் /முருகன்* : 112 நாள்
    வசூல் : 4,05.907.21
    +++++++++++++++++++++
    கோவை மாநகாரில்*
    மக்கள் திலகமே எல்லா வகையிலும் முன்னனி ஆவார்...
    மேலும் சாதனைகள் பல.....

    Ur...

  11. #930
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை தேவி திரை அரங்கில் 1970ல் ''மெக்கனாஸ் கோல்ட் '' நான் முதல் முதலாக பார்த்த படம் .47ஆண்டுகளுக்கு பிறகு தேவி அரங்கில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் திரைப்படம் காணும் வாய்ப்பு கிடைத்தது.

    16.7.2017

    சென்னை - தேவி திரை அரங்கம் .... இரவு 7.15 மணி காட்சி
    மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் '' 2017 திரைப்படத்தை ரசிகர்களின் ஆரவாரத்துடன் அரங்கு நிறைந்த காட்சியில் நான் கண்டு களித்த அடிமைப்பெண் திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும்

    படம் துவக்கத்தில் தாய் குலத்திற்கு பெருமை சேர்த்த அன்னை தெரசா, விண்வெளி பயணித்த கல்பனா ஆகியோருக்கும் சேவை செய்து வரும் தாய் குலத்திற்கும் இப்படம் சமர்ப்பணம் என்ற வாசகத்தோடு படம் துவங்குகிறது .

    தேவி திரை அரங்கத்திற்கு மிக அருகில் இருக்கும் அறிஞர் அண்ணாவின் சிலை முன்பு மக்கள் திலகம் எம்ஜிஆர் 1977ல் பதவி ஏற்ற தினத்தன்று எடுக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில் எம்ஜிஆரின் நிழற்படத்துடன் அவருடைய ''ரத்தத்தின் ரத்தமான என் உடன் பிறப்புகளே '' எம்ஜிஆரின் குரல் அகன்ற திரையில் தோன்றியதும் திரை அரங்கில் ரசிகர்களின் ஆரவாரமும் கைதட்டலும் அரங்கத்தையே அதிர வைத்தது .
    அடிமைப்பெண் -2017 லோகோ மிக பிரமாண்டமாக கிராபிக்சில் திரையில் காட்டும் போது அரங்கமே விசில் சத்தத்தில் பிரமிக்க வைத்தது .அதற்கான நவீன தொழில் நுட்பத்தில் இசை அமைப்பும் 5.1 ஒலியில் மிரள வைத்தது .

    அடிமைப்பெண் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சிகள் வரை துல்லியமாக புத்தம்புதிய படமாக ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது . ஒவ்வொரு பிரேமிலும் எம்ஜிஆர் அவர்கள் மிக சிரத்தையுடன் எடுத்த காட்சிகள் நவீன தொழில் நுட்பத்தில் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது . அத்தனை காட்சிகளும் கண்ணுக்கு விருந்தது .
    அசோகனுடன் ஒத்தை காலில் எம்ஜிஆர் மோதும் சண்டை காட்சி
    சிறையிலிருந்து தப்பித்து வரும்போது எம்ஜிஆரின் குனிந்த நடை
    ஒகேனக்கல் நீர் அருவி காட்சிகள் - மிக பிரமாண்டம்
    அம்மா என்றால் அன்பு - ஜெயாவின் இனிய குரல் பாடலில் எம்ஜிஆரின் அழகு தோற்றம் .
    ஒகேனக்கல்லில் எம்ஜிஆர் சண்டை பயிலும் காட்சிகள்
    தன்னுடைய தாயை காண பாசத்தோடு அருவியில் குதிக்கும் காட்சிகள்
    தாயிடம் உரையாடும் உணர்ச்சிகரமான காட்சிகள்
    அடிமை விலங்கை உடைத்தெறியும் காட்சிகள்
    தாயில்லாமல் நானில்லை - எழுச்சியான பாடலில் எம்ஜிஆரின் நடிப்பு
    காலத்தை வென்றவன் - மனதை கொள்ளை கொண்ட பாடல்
    எம்ஜிஆர் - மனோகர் சந்திக்கும் காட்சியில் எம்ஜிஆரின் வசனங்கள்
    எம்ஜிஆர் - ஜெயலலிதா பிரிந்து விடும் ஊட்டி வெளிப்புற காட்சிகள்
    ராஜஸ்தான் பாலைவன காட்சிகள்-
    ஏமாற்றாதே - பாடல் காட்சியில் எம்ஜிஆரின் நடிப்பு - ஜெயாவின் அருமையான நடனம்
    ஜெய்ப்பூர் அரண்மனையில் எம்ஜிஆர் அவர்களின் வனப்பான தோற்றத்தில் கட்டு மஸ்தான உடல் வலிமையை காட்டும் காட்சி
    எம்ஜிஆரின் பேரழகில் ஜெயா மயங்கி பாடும் ஆயிரம் நிலவே வா -பாடல்
    மனோகரனுடன் மோதும் கத்தி சண்டை காட்சி
    உன்னை பார்த்து இந்த உலகம் பாடல் ....
    ஜஸ்டின் மோதும் ஆக்ரோஷமான கத்தி சண்டை கட்சி
    இறுதியில் சிங்கத்துடன் போராடும் வீரமான காட்சி என்று அடிமைப்பெண் படம் 3 மணி நேரம் விறுவிறுப்பாக சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

    தேவி திரை அரங்கின் அகன்ற திரையில் 5.1. ஒலியோடு புத்தம்புது படம் போல் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்தேன் . எந்த குறையும் இல்லை . இன்றைய தொழில் நுட்பத்திற்கு ஏற்றார் போல் இசையில் சிறிது மாற்றம் செய்துள்ளார்கள் . மிகவும் அருமையாக இருந்தது .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் அடிமைப்பெண் 2017
    எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் பரிசாகும் . இந்த பொன்னான வாய்ப்பை தந்த திரு திண்டுக்கல் நாகராஜனை மனமார பாராட்டுகிறோம் . வாழ்த்துகிறோம்......vds...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •