Page 91 of 210 FirstFirst ... 41818990919293101141191 ... LastLast
Results 901 to 910 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #901
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி நகரில் மக்கள் திலகம் படைத்த 2 வது சாதனை பட்டியல்....

    1970 .....ல்
    மாட்டுக்கார வேலன்
    பேலஸ் 150 நாள் : 3,00,503.50
    என் அண்ணன்
    வெலிங்டன் 110 நாள் : 2,59,412.65
    தேடி வந்த மாப்பிள்ளை
    ராக்ஸி 84 நாள் : 2,17,995.55
    தொடர்ந்து மத்மாமணி அரங்கில்*
    18 நாட்கள் ஒடி...இணைந்து 100 நாளை கண்டது.....
    எங்கள் தங்கம்
    பேலஸ் 105 நாள் : 2,41,520.60
    தலைவன்
    ராக்ஸி 56 நாள் : 1,77,550.75
    ++++++++++++++++++++++++++
    1971......ல்
    குமரிக்கோட்டம்
    பேலஸ் 86 நாள் :.2,19,503.30
    ரிக்க்ஷாக்காரன்
    பேலஸ் 142 நாள் : 3,37,402.55
    நீரும் நெருப்பும்
    ஜூபிடர் 78 நாள் : 2,23,467.45
    +++++++++++++++++++++++++++
    1972 ....ல்
    நல்லநேரம்*
    ஜூபிடர் 126 நாள் : 3,29,260.73
    தொடர்ந்து ராமகிருஷ்ணாவில் வெளியாகி 28 நாள் ஒடியது.
    இதய வீணை*
    பேலஸ் : 112 நாள் : 3,11,900.42
    +++++++++++++++++++++++++++
    1973 ....ல்
    உலகம் சுற்றும் வாலிபன்
    பேலஸ் 203 நாள் : 5,14,729.73

    நகரில் அதிக காட்சி (167) அரங்கு நிறைந்து முதன் முதலில்*
    5 லட்சத்தை பெற்றக்காவியம் .
    +++++++++++++++++++++++++++++
    மேலும் சாதனைகள் தொடரும்.........

    நன்றி ...
    திருச்சி மாவட்ட எவர்கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர் மன்ற மலர்..........ur...






    *

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #902
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*24/09/20 முதல் 30/09/20 வரை வெளியான*பட்டியல் விவரம்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    24/09/20* - சன் லைப் - காலை 11 மணி - நவரத்தினம்*

    * * * * * * * * * மெகா டிவி -மதியம் 12 மணி -கலங்கரை விளக்கம்*

    * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - சங்கே முழங்கு*

    * * * * * * * * *பாலிமர்* டிவி -இரவு 11 மணி - விவசாயி*


    25/09/20* *-சன் லைப் - காலை 11 மணி - எங்க வீட்டு பிள்ளை*

    26/09/20 -* ஜெயா டிவி -மாலை 5.30 மணி -ஆயிரத்தில் ஒருவன்*

    * * * * * * * *தமிழ் மீடியா* -இரவு* 8 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*

    27/09/20 - மெகா டிவி* - அதிகாலை 1 மணி - குடியிருந்த கோயில்*

    * * * * * * * *ராஜ் டிஜிட்டல் -காலை* 9.30 மணி - ரகசிய போலீஸ்* 115

    * * * * * * * மெகா 24* * -பிற்பகல் 2.30 மணி -* தாய்க்கு தலைமகன்*

    * * * * * * * *ராஜ் டிஜிட்டல் -இரவு 8.30மணி - தேடிவந்த மாப்பிள்ளை*

    28/09/20 - சன் லைப் - காலை 11 மணி* - நல்ல நேரம்*

    * * * * * * * * முரசு* -மதியம் 12மணி/ இரவு 7 மணி -பெற்றால்தான் பிள்ளையா*

    * * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*

    29/09/20-* சன் லைப் - காலை 11 மணி* - காவல்காரன்*

    * * * * * * * * மீனாட்சி டிவி -இரவு 9.30மணி - நல்ல நேரம்*

    * * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி -நவரத்தினம்*

    30/09/20 - சன் ;லைப் - காலை 11 மணி -நான் ஏன் பிறந்தேன்*

    * * * * * * * * மூன் டிவி* - பிற்பகல் 12.30மணி -காதல் வாகனம்*

    * * * * * * * *மெகா* 24 - பிற்பகல் 2.30மணி -தர்மம் தலைகாக்கும்*

    * * * * * * * *மீனாட்சி*டிவி*-இரவு 9.30 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * எம்.எம்.டிவி - இரவு 10 மணி - கணவன்*

  4. #903
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர் வாலி புரட்சித் தலைவரைப் பாராட்டி இப்படிச் சொன்னார்..

    ‘‘மனிதர்களில் எவ்வளவோ நடிகர்கள் உண்டு. நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீதான்’’

    அவர் சொன்னதுபோல சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லாம் வெறும் நடிகர்கள். அவ்வளவுதான். கூலிக்கு மாரடித்து பணம் சம்பாதிப்பவர்கள். நடிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்காது. கர்ணனாக நடிப்பவன் கஞ்சனாக இருப்பான். கடவுளாக நடிப்பவன் குடிகாரனாக இருப்பான். மனிதர்களிலேயும் நடிப்பவர்கள் உண்டு. ஆனால், நடிகராக இருந்தும் பணம் மட்டுமே வந்தால் போதும் என்று கண்ட படங்களில் நடிக்காமல், ஒரு கொள்கையோடு நடித்து, தனது நடிப்பால், உழைப்பால் கிடைத்த பணத்தையும் மக்களுக்காகவே அள்ளிக் கொடுத்தவர் புரட்சித் தலைவர்.

    புகைப்படத்தை பாருங்கள். எந்த ஒரு நடிகரையோ, எந்த ஒரு தலைவரையோ ஒரு ஏழைக் கிழவி தனது சோகத்தைப் போக்க இப்படி கட்டி அணைத்தபடி ஆறுதல் தேட முடியுமா? புரட்சித் தலைவரும் வேறுபாடு பார்க்காமல், அருவெறுப்பு இல்லாமல் அந்த ஏழைக் கிழவியை எப்படி பாசத்தோடு ஆறுதலாக அணைத்திருக்கிறார் பாருங்கள்.

    மக்கள் திலகம் வெறும் நடிகர் அல்ல. அதற்கு அப்பாற்பட்ட தலைவர் மட்டுமே அல்ல. அதற்கும் மேலாக நல்ல மனிதர் மட்டுமே அல்ல. அதை எல்லாம் தாண்டி ஏழைகளின் கண்கண்ட கடவுள்.
    மகான் " எம்ஜிஆர் "......... Swamy.........

  5. #904
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சபாஷ் மாப்பிள்ளை ரசிக்கத்தக்க படம். தனக்கு ஆக்*ஷன் நடிப்பு மட்டுமின்றி, காமெடி நடிப்பும் இயற்கையாக வரும் என்று மக்கள் திலகம் நிரூபித்த படம். திருட்டு கொடுத்த பணத்தை கம்பெனியில் கட்டுவதற்காக மக்கள் திலகம் மும்பை சென்று கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து வந்து அதையும் திருட்டு கொடுப்பதும் ஜெயிலுக்கு போவதும் எதிர்பாராத ட்விஸ்ட். படம் வெளியான 49 வது நாளில் நல்லவன் வாழ்வான் படம் வெளியானதும் மாப்பிள்ளையின் ஓட்டம் தடைபட்டதற்கு காரணம். சபாஷ் மாப்பிள்ளை படத்தை பார்த்துவிட்டு 'சபாஷ் எம்ஜிஆர்' என்று அண்ணா பாராட்டி அது செய்தியாகவும் வந்தது. இதைவிட வேறு என்ன சிறப்பு வேண்டும்?.........Sy...

  6. #905
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*29/09/20 அன்று அளித்த தகவல்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்கிற மகோன்னதமான கலைஞன், மகோன்னதமான மனிதரின் மகோன்னதமான மகத்தான* பண்பு என்பது எந்த அளவிற்கு மக்களை சென்றடைந்துள்ளது என்பது விந்தையிலும் விந்தை .இன்றைக்கும் ஒரு பல்கலை கழகம் போல அவரது படங்களின் பாடங்கள், படிப்பினைகள் எவ்வளவு பேர்களின் வாழ்க்கைக்கு ஊக்கமும் , நம்பிக்கையும் தருவதாக இருக்கின்றது என்பதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம் .


    மும்பை தாராவியில் இருந்து புலவர் ராமச்சந்திரன் குறிப்பிட்டு சொல்கிறார் .நீங்கள் கண்டிப்பாக வத்தலகுண்டு ஆறுமுகம் பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும் .ஏனென்றால் அவர் எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசி .உண்மையில் எம்.ஜி.ஆரின் குணம் என்னவென்றால் தனக்காக பாடுபட்டவர்கள், காயப்பட்டவர்கள்,அவதிப்பட்டவர்கள், உயிர் நீத்தவர்கள் இல்லத்திற்கு சென்று ஆறுதல் சொல்வது மட்டுமின்றி ,அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அளவு நிதி உதவி, அளித்திருக்கிறார் .தொடர்ந்தும் அதை செய்திருக்கிறார். நன்றி மறவாத நல்ல மனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவரே ஒரு படத்தில் இதை பாடியிருப்பார் .அதுவே என் மூலதனம் ஆகும் என்று .எம்.ஜி.ஆரிடம் என்றைக்கோ உதவி பெற்றவர்கள், கடிதம் பெற்றவர்கள் கூட ,அவர் முதல்வரான பின்பு, கோட்டைக்கு சென்று ,நீங்கள் எனக்கு இப்படி ஒரு கடிதம் எழுதி இருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா என்று காட்டி ,பேசி ,சில உதவிகள் பெற்றிருக்கிறார்கள் .மக்களோடு* நேரடியாக ,மக்களுக்காக மக்களிடமிருந்து கற்று கொண்டு ,மக்களை போலவே செய்து ,மக்களுக்காகவே இருந்தவர், வாழ்ந்தவர்* என்பதற்கு பல்வேறு சான்றிதழ்களை அவரது வாழ்க்கையில் குறிப்பிட்டு சொல்லலாம் .


    தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கு இடையே காவிரி நீர் பிரச்னைபல காலமாக இருந்து வந்தது .இந்த பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைப்பதற்கு எம்.ஜி.ஆர் திடீரென புறப்பட்டு பெங்களூரு செல்கிறார் .உள்ளூர் அமைச்சர் ரகுபதியை காண செல்கிறார் .அங்கு சென்றதும் ,ரகுபதியின் தாயார் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என தெரிந்து அவரை சென்று பார்க்கிறார் .அந்த தாயார் எம்.ஜி.ஆரிடம் பரிவுடன் ,நீங்கள் எங்கள் இல்லத்திற்கு சென்று உணவருந்தி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் .நான் எப்படி உங்கள் வீட்டில் சாப்பிடுவது .உங்கள் மகன்தான் எங்களுக்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுகிறார் என்றார் .உடனே அவர் ரகுபதியின் கையை பிடித்து அவர் கேட்டபடி உடனே தண்ணீர் கொடு என்று கேட்டு கொள்ள ,ரகுபதி உடனே,மருத்துவமனையில் இருந்தபடியே*, கர்நாடக முதல்வர்,மற்றும் தேவகவுடா போன்றவர்களிடம் பேசி உடனடியாக குறிப்பிட்ட அளவு தண்ணீர் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விட ஏற்பாடு செய்தார் .இதுதான் எம்.ஜி.ஆரின் சாமர்த்தியம் ,உத்தி .,தந்திரம்,அன்பு வேண்டுகோள்* என்றுஅந்த காலத்தில் சொல்வார்கள் .


    மலைக்கள்ளன் படப்பிடிப்பு நடந்து வந்த சமயம் .அன்றைக்கு படப்பிடிப்பு முடிந்ததும் இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் எங்கள் உறவினர் இல்லம் அருகில்தான் உள்ளது .வாருங்கள் போய்விட்டு வரலாம் என்று காரில் செல்கிறார் .அப்போது நள்ளிரவு நேரம் .அது ஒரு குடிசைவீடு .அந்த வீட்டில் எம்.ஜி.ஆரின் உறவினரான குஞ்சப்பனின்* உறவினர் தங்கியுள்ளார் .அந்த நள்ளிரவில் சாப்பிட என்ன உள்ளது என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார் .ஐயா ,மோர் குழம்பு சாதமும், வறுத்த மீன் உள்ளது என்கிறார்கள் .எம்.ஜி.ஆர். பரவாயில்லை இந்த உணவாவது கிடைத்ததே என்றார்.பிற்காலத்தில்* .பல கோடி குழந்தைகளின் வயிற்று பசியை போக்க* சத்துணவு திட்டம் அமுல்படுத்தியவர்*அன்றைக்கு தன்* நண்பருடன் எந்தவித சங்கோஜமும் இல்லாமல் அந்த எளிய உணவை அருந்தினார் .அதுமட்டுமல்ல அந்த வீட்டில் உள்ளவரிடம் நள்ளிரவு நேரத்தில் மோர் சாதம் அருந்துவதைவிட ,கொஞ்சம் ரசம் வைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டு விரும்பி சாப்பிட்டாராம் .பசித்த வயிற்றுக்கு உணவிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்களுக்கெல்லாம் என்பது போல அவர் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதர்களை எல்லாம் வந்து, மனிதர்களின் மிக பெரிய பிரச்னை என்பது பசிதான் ,அந்த பசி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மிக பெரிய பிரச்னைகள்,மிக பெரிய புரட்சிக்கான அடிப்படை காரணங்களே இல்லாமல் போயிருக்கும் .அப்படியான பசியை போக்குவது ,மற்றவர்களை உண்ணவைத்து பார்த்து ரசிப்பது என்பதில் சந்தோசம் அடைவது போன்ற பண்புகள் இருந்ததால்தான் அவர் மகோன்னதமான மனிதராக இன்றைக்கும் கருதப்படுகிறார் .*


    நாடோடி மன்னன் படத்தில்*முதியோர் பென்ஷன் திட்டம், தொழில் கல்வி, குடிசை மாற்று வாரியம் ,விவசாயிகள் நல திட்டம் , பெண்கள் பாதுகாப்பு* திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் கடந்த காலத்தில் மட்டுமல்ல வரும் காலத்திலும் உள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய விஷயங்களை எல்லாம் அப்போதே அவர் சிந்திப்பதற்கான அல்லது கட்சியின் திட்டத்தை இவரது திட்டமாக அறிவித்தாரா ,அல்லது கட்சிக்கு இந்த திட்டங்களை முன்வைத்தாரா என்று திரு.துரை பாரதி கேட்டதற்கு*


    திரு.கா. லியாகத் அலிகான் அளித்த பதில் : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக்கு நீங்கள் குறிப்பிட்ட படி இந்த திட்டங்களை முன்வைத்தார் .மக்களுக்காக இந்த திட்டங்களை அமுல்படுத்தவேண்டும் என்று அப்போதே அவர் யோசித்திருக்கிறார் .1957ல்* நாடோடி மன்னன் படம் ஆரம்பிக்கப்பட்டது .1958ல் ஆகஸ்ட் 22ந்தேதி படம் வெளியானது .அவர் எவ்வள்வு பெரிய ஞானி என்பதை சில செய்திகள் அவரது திரையுலக வாழ்க்கையில் நடந்ததை வைத்து அறிந்து கொள்ளலாம் .அசோக்குமார் என்கிற படத்தில் ஒரு காட்சி .அதில் தீயால் சுட்ட ஒரு இரும்பு கம்பியால் கதாநாயகனாக நடித்த தியாகராஜ பாகவதர்*கண்களில் குத்தி குருடாக்க வேண்டும் என்பது மன்னரின் கட்டளை .தவறினால்*இந்த தண்டனையை நிறைவேற்றாத குற்றத்திற்காக அவரது தலை வெட்டப்படும்.ஆனாலும் அந்த கொடுமையான காட்சியில் நடிக்க மறுத்துவிடுகிறார் .கண்ணீர் விட்டு கதறுகிறார் . இது வெறும் நடிப்புதான் ராமச்சந்திரா .அதுவும் கண்களை குத்துவதுபோல்* நிஜமாக படமாக்க போவதில்லை .வெறும் பாவனைதான் .நான் கண்ணிழந்தவன் போல் கத்தி கதறவேண்டும்* நடித்து சமாளித்துவிடுவேன் என்று கூறியும்.உங்கள் கண்களை பறிக்கும்* இந்த காட்சிக்கு என்னால் நடிக்க முடியாது என்று*.தீர்மானமாக மறுக்கவே ,வேறு வகையில் படமாக்கப்பட்டது .தான் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயராத* நிலையில் ,சிறு வேடங்கள், துணை வேடங்கள் நடித்து வந்த காலத்தில்*இப்படி அசாத்திய மனதைரியம் ,துணிவு, தெம்புடன் நான் இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்த தலைவன் அப்போதே உதயமாகிவிட்டான் .அதாவது ,இயக்குனர்,தயாரிப்பாளர் என்ன நினைப்பார்களோ என்று கூட யோசிக்காமல் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதே அரிதான காலத்தில்,தனக்கு அப்படிப்பட்ட காட்சியும் வாய்ப்பும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று ஒதுங்கி கொண்டு**இப்படி ஒரு துணிச்சலான முடிவு எடுப்பதற்கு யாருக்கு மனமிருக்கும் .


    திரு.துரை பாரதி : அடிப்படையிலேயே தனக்கொரு பாணி, பாதை, ஒரு பயணம் ,கொள்கை ,எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ,அதாவது வாழ்க்கையின் இளமை பருவத்தில் ,தான் முன்னுக்கு வராத காலத்தில் அடிப்படையிலேயே வறுமை, வேலை வாய்ப்பின்மை இருந்தபோது ,எதிர்காலத்தில் பிரகாசமான ஒரு நம்பிக்கை ஒளி யுடன் , தனக்கென்று சில கொள்கைகள் வைத்திருந்தார் .அந்த கொள்கைகளின் அடிப்படையில் நடைபோட்டதன் வெளிப்பாடுதான்* நாடோடி மன்னன் படத்தயாரிப்பு* பாவப்பட்ட ஏழை மக்களின் ஒரே நம்பிக்கை மனம்தான் .அதிலே நாம் கைவைக்க கூடாது .அதுவும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்ள கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார் .


    திரு.கா. லியாகத் அலிகான் : ஒரு கவிஞன் சொன்னது போல இயற்கையை நேசிக்கிறபோது எல்லா மனிதர்களுக்கும் இரண்டு யோசனைகள் வருமாம்*பணிகளை கவனித்து வரும்போது அவரது உள்ளத்திலே சில கடமைகள் பற்றி*யோசனை வருமாம் .தான் என்ன செய்ய வேண்டும் ,என் கடமை என்ன .தனக்குள்ள பிரச்னைகள் என்ன என்று . அதாவது இயற்கையை நேசிக்கும் போது*எப்படிப்பட்ட மனிதனுக்கும் இயற்கையையோ, அழகையோ ரசிச்சாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் நினைவுக்கு வரத்தான் செய்யும் . ஆனாலும் அதை சரிசமமாக பங்கிட்டு அந்த இயற்கையை அனுபவித்தே ஆகவேண்டும் எம்.ஜி.ஆருக்கு*.* தான் இந்த காட்சியில் நடிக்கவில்லை .ஒருவரின் கண்களை பறிக்கும் காட்சியில் நடிக்க மனம் இடம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அதை தவிர்த்துவிட்டோம் என்கிற மனநிறைவு*கிடைத்தது என்று நினைத்தாரே தவிர ,வேறொன்றும் நினைக்கவில்லை .


    திரு.துரை பாரதி :எம்.ஜி.ஆர். அந்த காலகட்டத்தில் குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும் ,பாக்தாத் திருடன் போன்ற அரேபிய கதைகளில்* இஸ்லாமிய*வேடத்தில் நடித்து வெற்றி படங்களை அளித்துள்ளார் .அதற்கு முன்பு மலைக்கள்ளன் படத்திலும் , சில காலம் கழித்து வெளிவந்த சிரித்து வாழ வேண்டும் படத்திலும் இஸ்லாமியர் வேடத்தில் நடித்துள்ளார் .


    திரு.கா.லியாகத் அலிகான் :புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு காலத்தில் இயேசு பிரானாக நடிக்க பரமபிதா என்கிற படத்திற்கு* ஒப்பந்தம் செய்யப்பட்டார்*ஆனால் சில பாதிரியார்கள் அந்த படத்தின் கதையை கேட்டறிந்து* கிறிஸ்துவ மத கோட்பாட்டுக்கு ஒவ்வாத சில காட்சிகள் இடம் பெறுவதாக கருதுவதால் இந்த படத்தில் நடிப்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டதால் மேற்கொண்டு படத்தில் அவர் நடிக்காமல் கைவிடப்பட்டது .இன்றைக்கும் எம்.ஜி.ஆர். ஏசுபிரானாக வேடம் தரித்த புகைப்படங்களை காணலாம் .நாம் மனதில் கற்பனை செய்யும் ஏசுபிரானை போலவே எம்.ஜி.ஆரின் தோற்றம் தத்ரூபமாக* இருக்கும் .அந்த வேடம் அவருக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தியது* மேலும் அந்த ஏசுபிரான் வேடம் தரித்த*எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் வைத்து சிலர்*பூஜைகள்,ஆராதனைகள் செய்து வணங்கி வந்ததாக*செய்திகள் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு கிடைத்தது .அதை நினைத்து* மிகவும் மனம் வருந்தினார் .யாரும் அப்படி செய்ய கூடாது,எனக்கு*அதில் உடன்பாடு இல்லை**என்று அறிக்கை வெளியிட்டார்*. ஏசுபிரானாக எம்.ஜி.ஆர். நடிக்காமல்*போனதற்கு*இதுவும் ஒரு காரணம் என்று பேசப்பட்டது .நாடோடி மன்னன் படத்தில் வசனம் பேசியிருப்பார் .அதாவது அமைச்சரே, எனக்கு*வாள் பிடித்து களத்தில்**சண்டை செய்யவும் தெரியும்* கலப்பையை பிடித்துநிலத்தில்* ஏர் உழவும் தெரியும்*இருக்கின்ற 2000 உடைகளில்*எதை அணிவது*என்கிற*திண்டாட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் .ஏதாவது ஒரு உடை இருந்தால் போதும் மானத்தை மறைக்கலாமே என்று மக்கள் இருக்கிறார்கள் .அப்படிப்பட்ட மக்களுக்காக*வாதாடத்தான் நான் இருக்கிறேன் .சட்டம் இயற்றும் அதிகாரம் முழுவதும் என் கையில் இருந்தால்தான் நான் மன்னன் ஆவதற்கு சம்மதிப்பேன் .என்று வசனம் பேசி அந்த காலத்திலேயே தான் யாருக்கும் அடிபணிய*மாட்டேன் .என் எண்ணங்கள், கொள்கைகள் ,திட்டங்கள் அனைத்தும் ஏழை எளியவர்களுக்கு செய்து முடிக்கும்*வரை நான் ஓயமாட்டேன் ,உறங்கமாட்டேன் என்பதில்*திட்டவட்டமாக இருந்தார் .நாடோடி மன்னன் படத்தை அவர் மிகவும் சிரமப்பட்டு ,கடன் வாங்கி ,சொத்துக்களை அடகு வைத்து ,தயாரித்தார் .அதனால்*அவருக்கு வேண்டாதவர்கள் அவர் நிச்சயம் நாடோடியாக போய்விடுவார் என்று கருத்து*சொன்னார்கள் . இந்த படம் தோல்வி அடைந்தால் நான் நாடோடி, வெற்றி பெற்றால்*மன்னன் என்று அவர்களுக்கு பதில் அளித்தார் .படத்தின் முடிவு எப்படி இருந்தாலும் என் எண்ணங்கள், கொள்கைகள் ,திட்டங்கள்*ஆகியவற்றை**ஏழை எளிய மக்களுக்கான நல்வாழ்வுக்காக என்பதை பறைசாற்றுவேன் என்று தெரிவித்தார் .ஆனால் எதிரிகள்*படம் வெளியாகி வெற்றி பெற்றதும் துவண்டு ,திக்கு திசை தெரியாமல் போய்விட்டார்கள் .படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது .எம்.ஜி.ஆர்.அவர்கள் சிறந்த நடிகர்,சிறந்த இயக்குனர் ,சிறந்த தயாரிப்பாளர் என்று பத்திரிகைகளும் ,பாராட்டின .மக்களின்*ஏகோபித்த ஆதரவு இந்த படத்திற்கு*கிடைத்தது .என்று திரு.லியாகத்*அலிகான் பேசினார் .


    எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி பிரெஞ்சு புரட்சி ,ரஷ்ய நாவல்கள் ,ஆங்கில புத்தகங்கள் பலவற்றை*படித்திருந்தார் .அவர் ஒருமுறை தன் தம்பியிடம்*ராமச்சந்திரா ,இந்திய*சுதந்திரத்திற்குமுன்னால் இருந்த நல்ல பழக்கம் என்னவென்றால் எந்த ஆங்கிலேயன் எந்த ஒரு கட்டளை*இடுவதாக இருந்தாலும் மக்களுடைய சேவகனாகத்தான் இருந்தார்கள் .ஆனால் இன்றைக்கு நமது மக்கள் அதை மறந்துவிட்டார்கள் .இன்றைக்கு ,ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்களின் பதவி,அதிகாரத்தைத்தான் பெரிதாக நம்புகிறார்கள் .அவர்கள் மக்களின்*சேவகன் என்ற வாசகத்தை பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தார்*


    பொதுவாக ஆட்சிக்கு வந்த சில காலத்திற்கு பின்னர் ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை .நல்லவர்களாக இருப்பவர்கள் ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதில்லை இப்படிப்பட்ட கருத்துக்கள், ஆலோசனைகள் பலவற்றை*எம்.ஜி..சக்கரபாணி அவர்கள் தன் தம்பி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவ்வப்போது அறிவுரையாக கூறியுள்ளார் .ஆனாலும் கூட*தன் குடும்பத்தில் இருந்து எவரையும்*ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொள்ளவோ ,தலையிடவோ*எம்.ஜி.ஆர். அனுமதிக்கவில்லை .அப்படி யாராவது*நடந்து கொண்டால்*அதற்கு அவர்களே*சொந்த பொறுப்பு .என்னை கட்டுப்படுத்தாது என்று பகிரங்க அறிக்கை வெளியிட்டார் .தன்* குடும்பத்தில் இருந்து அரசியல் வாரிசாக*யாரையும் எம்.ஜி.ஆர். அறிவிக்கவில்லை* நாடோடி மன்னன் படத்தில் அறிவித்தது போல குடும்ப வாரிசு, பரம்பரை வாரிசு ஆகியவற்றை அடியோடு*புறக்கணித்தார் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
    ------------------------------------------------------------------------------------
    1.வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ -தெய்வத்தாய்*

    2.எம்.ஜி.ஆர். மனோகர்*உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*

    3.நான் உங்கள் வீட்டு*பிள்ளை* - புதிய பூமி*

    4.எம்.ஜி.ஆர்.-திருப்பதிசாமி உரையாடல் - விக்கிரமாதித்தன்*

    5.சம்மதமா ,நான் உங்கள் கூட வர சம்மதமா -நாடோடி மன்னன்*

    6.எம்.ஜி.ஆர்.உணவருந்தும் காட்சி*- மாட்டுக்கார வேலன்*

    7.திரு.கா.லியாகத் அலிகான்*அவர்களின்*பேட்டி*

    8.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் - நம் நாடு*

    9.மன்னனாக*திட்டங்கள் அறிவுக்கும் எம்.ஜி.ஆர்.-நாடோடி மன்னன்*


    *

  7. #906
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #முயற்சியே #வெற்றி

    எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும், அது தமக்குப் புதியதாகவே இருப்பினும், அவ்விஷயத்தைத் துளியும் கௌரவம் பார்க்காமல் கற்றுணர்ந்து, தமது மிகையான தன்னம்பிக்கையாலும், புத்திக் கூர்மையினாலும் அதில் தேர்ச்சி பெற்று உச்சத்தை அடைவதென்பது வெறும் சாதாரணவிஷயமல்ல... ������

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற புரட்சித்தலைவரின் தாரகமந்திரத்தை தனது லட்சியமாகக் கடைபிடிக்கும்
    புரட்சித்தலைவரின் தீவிர ரசிகை சாரதா கண்ணனுக்கு இது பெரிய விஷயமுமல்ல...������

    தனது தன்னடக்கத்தினால் மேன்மேலும் உயர்வுபெறும் இவரின் கவிதைகள் பல பத்திரிகைகளிலும், தனியார் வானொலிகளிலும், யூ டியூப்பிலும் வெளிவந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று... ������

    அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல... சமீபத்தில், பிரான்சில் வெளியான சிறந்த இலக்கிய இதழான "தமிழ் நெஞ்சம்"' என்னும் பத்திரிக்கையில் சாரதா கண்ணனின் 'முகப்புப்படமும், அவரைப்பற்றிய குறிப்புகளும், கவிதை வரிகளும்' இடம் பெற்றுள்ளன என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்... ������

    கடல் கடந்து சாரதா கண்ணன் ஆற்றும் தமிழ்ப்பணி, இவ்வையகம் முழுவதும் பரவும் நாள் வெகுதொலைவில் இல்லை... ������

    பொன்மனச்செம்மலின் அருளாசியுடன் சாரதாகண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்...������

    கீழ்க்கண்ட link ல் Download. செய்து படிக்கவும்...

    http://tamilnenjam.com/?p=5051.........MT...

  8. #907
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Chuck Norris
    இவர்
    World karate champion
    இவர் Return of the dragon ல் நடித்தவர்
    இவரின் Roundhouse kick மிகப் பயங்கரம்
    எதிராளி கவனம் சிதறினால் மரணம் நிச்சயம் .
    Van Damme: Bruce LeeJackie CJim Kelly
    Tony : Jet Ll
    இவர்கள் அனைவரும்
    Martial arts super stars
    இவர்களை இங்கே குறிப்பிட காரணம் நான் எம் ஜி ஆர் படங்களை மட்டும் பார்க்கவில்லை இந்த Hollywood ஜாம்பவான்களை வெகுவாக ரசித்தவன் ரசித்துக் கொண்டிருப்பவன் ஆனால் இவர்கள் மக்கள் திலகத்தை போல் மற்ற துறைகளில்
    ஈடுபடாதவர்கள்
    Kung fu வில் மட்டுமே கவனம் செலுத்து பவர்கள்.

    குடியிருந்த கோவில் இந்த சண்டைகாட்சியை பாருங்கள்
    Hand rotating punch
    Neck Lock
    Horse kick
    ஒரே நேரத்தில்
    Front kick
    Back kick
    என்ன லாவகமாக செய்கிறார் பாருங்கள்.

    Hand rotating punch
    மிக மிக கடினம் ஸ்பேரிங் செய்பவருக்குத்தான் அந்த வலி புரியும் .

    மக்கள் திலகம் இந்த சண்டைகாட்சியில் நடித்து பத்தாண்டு கழித்து தான் கராத்தே வந்தது அப்போழுதே என்ன வேகம் பாருங்கள்.

    அக்கால கட்டத்தில் உலக திரைப்பட சண்டைகாட்சிகளில்
    எம் ஜி ஆர் தான் முதல்வர் என்றால் அது மிகையாகாது

    ஹயாத் .
    குறிப்பு : இந்த ஹாலிவுட் நடிகர்கள் தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியபின் வந்தவர்கள் எம் ஜி ஆர் காலத்தில் ஒரு குருவியை படமெடுக்க மூன்று நாட்கள் காத்திருந்தனர் ........Hd...

  9. #908
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம்ம கணேசனின் கைபுள்ளைங்க தொல்லை தாங்க முடியலைப்பா. சுத்தி சுத்தி மூட்டைப்பூச்சி கடிக்கிற மாதிரி கடிச்சுக்கிட்டே இருக்காங்க. அவங்க வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தியாச்சு! அதனால தாங்கமுடியாம சும்மா புலம்புவதுடன் பொய் வசூல் தயார் பண்ணும் பேக்டரி உருவாக்கி வாய்க்கு வந்தது வராதது என்று சகட்டுமேனிக்கு கூவிட்டு வராங்க.

    நாம என்ன செய்ய! சும்மா மரண அடி கொடுக்கிறாப்பல வசூல் விபரங்களை கொடுத்தவுடன் தலைவர் சினிமாவில் மன்னனாக இருந்தவரைக்கும் 1977 வரைக்கும் பதுங்கி இருந்தவனெல்லாம் இப்போ
    ஏதாவது ஒரு மொக்கை சிவாஜி படத்தை தூசு தட்டி அதுக்கு பேக்டரிலே போய் புது வசூல் போட்டு கொண்டு வராங்க.

    அதுவும் பழைய படங்கள் எல்லாம் வசூல் விபரங்களை ஏற்கனவே பதிவிட்டமையால் புதிதாக இதுவரை வசூல் விபரங்கள் வெளியிடாத படுதோல்விப் படங்களை தூக்கிட்டு போய் புதுசா வசூல் போட்டு நல்லா டெக்கரேஷன் பண்ணி போட ஆரம்பிச்சுட்டாங்க. "16 வயதினிலே" சப்பாணி மாதிரி 'சந்தைக்குப் போணும் ஆத்தா வையும் காசைக்கொடு' ன்னு அழ ஆரம்பிச்ச மாதிரி ஒரே அழுகை. தாங்க முடியலப்பா.!

    சரி எம்ஜிஆர் சினிமாவை விட்டு அரசியலில் இறங்கி அங்கும் முடி சூடிய மன்னனான பிறகு பொறாமையில்
    அல்லக்கைகள் அலற ஆரம்பித்தன.
    தற்போது எம்ஜிஆர் சினிமாவில் இருக்கும் வரை தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று புரிந்து கொண்ட கைபுள்ளைங்க தற்போது கையில "வெள்ளை ரோஜா" வை எடுத்து சமாதானத்துக்கு வராமல் சண்டைக்கு வருகிறார்கள்..

    சரி நம்மவர் தான் முதல்வர் ஆகிவிட்டாரே இனியென்ன நமக்கு என்று நாம் சும்மா இருந்தாலும் இருக்க விட மாட்டார்கள் போலும்!.
    அதனால் நம்ம சிவாஜியின் 1983 தீபாவளிக்கு வெளியான "வெள்ளை ரோஜா" சினிமா ஜீனியர்களின் கையால் மரண அடி வாங்கி சீரழிந்த கதையை சொன்னால்தான் அடங்குவார்கள் என்று நினைக்கிறேன். அதனால் நம்ம தலைவர் ரசிகர்கள் கொஞ்சம் வேடிக்கை பாருங்கள் சின்ன நடிகர்களிடம் சிவாஜி படம் புறமுதுகு காட்டி ஓடுவதைக் கண்டு கை கொட்டி சிரிக்கலாம். ஏனென்றால் புறமுதுகு காட்டுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல.

    இப்போது சொல்லுங்கள் "வெள்ளை ரோஜா" வின் வசூலை. சென்னையில்
    தேவி. 104. 722685.00
    சபையர். 76. 815663.00
    புவனேஸ் 104. 516565.50
    கிரவுன். 104. 472690.60
    உதயம். 104. 314695.00
    அபிராமி. 104. 246618.50
    -------------------
    மொத்தம். 30,88,917.60
    --------------------
    இதுதான் "வெள்ளை ரோஜா" வின் மொத்த சென்னை நகர வசூல் என்று சொல்லியிருக்கிறார்கள். நாமும் சோதனை செய்யாமல் அப்படியே அதை எடுத்துக் கொள்வோம். தலைவர் நடித்துக் கொண்டிருந்தால். இந்த வசூலெல்லாம் வெளிச்சத்துக்கே வந்திருக்காது. என்ன செய்வது நம்ம கணேசனுக்கு களத்தில் எதிரி இருந்தாலே அரசியலில் நடுங்கிய மாதிரி கைகால் எல்லாம் உதறல் எடுத்து விடும். ஆளே இல்லாத களத்தில்தான் கொஞ்சம் தைரியமாக வெளியே வருவார்.

    சரி, விஷயத்துக்கு வருவோம்.
    1982 ல் வெளியான "சகலகலா வல்லவன்" சுமார் 4 அரங்கில் வெளியாகி 48 லட்ச ரூபாய் வசூலாக பெற்றதை முறியடித்தீர்களா?
    இல்லையே. 1984 ல் வெளியான "காக்கிசட்டை"யின் 42 லட்ச ரூபாய் வசூலை முறியடித்தீர்களா? 3வதாக வசூலில் முன்னணியில் நிற்கும் படம் "முந்தானை முடிச்சு" அதுவும் சுமார் 42 லட்சங்களை வசூலாக பெற்ற படம். அதன்பின் வருவது "மைதிலி என்னை காதலி" அதுவும் 42 லட்சங்களை கடந்த படம்தான்.

    "வெள்ளை ரோஜா" கூட வெளியான "தூங்காதே தம்பி தூங்காதே" "தங்கைக்கோர் கீதம்" பட வசூலையாவது முறியடித்தீர்களா?
    அதையாவது நிரூபணம் செய்ய முயலுங்கள்.இதில் எதையும் நெருங்க முடியவில்லையே.
    10 வருடங்களுக்கு முன்னால் உள்ள படங்களை வசூலில் கம்பேர் செய்தால் அய்யோ பாவம் மூளை குழம்பி விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. வேண்டுமானால் "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை 1983 க்கு தகுந்தவாறு மாற்றி ஒப்பிட்டால் சரியாக இருக்கும்.

    10 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள டிக்கெட்டை. விலையை விட சுமார் 3 மடங்கு 1983 ல் அதிகம். அதை கணக்கில் எடுத்து "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை மூன்றால் பெருக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.
    23,40,000×3 = 70,20,000. இப்போ புரிகிறதா. வித்தியாசம் எவ்வளவு என்று. "வெள்ளை ரோஜா" வெறும் 30 லட்சம்தான். அதிலும் தலைகுனிவுதான்.

    போய், முக்காடு போட்டு மூலையில் அமருங்கள். அதை விட்டு விட்டு அடுத்த வேலையை ஆரம்பித்து விட்டார்கள். உள் நாட்டில் விலை போகாத மாடு வெளிநாட்டில் விலை போகுமா? என்பார்கள், அதுபோல் தமிழகத்தில் படுதோல்வியடைந்த "உத்தமன்" இலங்கையில் என்ன ஊத்திக்கொண்டதோ தெரியவில்லை, கைபுள்ளைங்க சாதனை என்று சொல்லி அடுத்த வெட்டி வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.. இனிமேல் அதை பார்க்க வேண்டும். இப்படி எதையாவது சொல்லி அரிப்பை தீர்த்துக் கொள்ள முயலும் அவர்களை பார்த்தால் பரிதாபமாக இருப்பதுடன் பாவமாகவும் இருக்கிறது. ஐயோ, பாவம்..........ks.........

  10. #909
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #காந்தீயவாதி

    #காந்தி #ஜெயந்தி #வாழ்த்துக்கள்

    ஒரிஜனல் பாய்ஸ் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து "தேசம் காக்கும்" என்ற நாடகத்தை ஆரம்பித்து நடத்த ஏற்பாடு செய்தது. நடிகர்கள் தேர்வு நடந்தது. இந்த நாடகம் காந்தியவாதி, சுதந்திர போராட்ட கதை பெரிய நாடகம் ...

    1930ல் இதில் நடிக்க எம்ஜிஆருக்கு ஒரு சிறப்பான வேடம், அதாவது தேசபக்தியுள்ள ஒரு சாமியார் வேடம், கிடைத்தது...

    நாடகம் நடத்த அன்றைய வெள்ளையர் ஆட்சி காலத்தில் போலீஸ் தடை விதித்தது. ஆனால், தடையை மீறி நாடகம் நடத்தப்பட்டது. போலீஸ் தடியடி நடத்தியது. இதில் எம்ஜிஆரும் காயமடைந்து மூர்ச்சையானார்...

    இந்த செய்தி சென்னை நகரில் மற்றும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது "தேசபக்தி" என்றதும் இந்த நாடகத்திற்கு பொதுமக்கள் ஆதரவு பெரும் அளவில் ஏற்பட்டது.

    "17 வயது பையன் சாமியார் வேசத்தில் நடிக்கிறான்..." என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது...

    பழுத்தபழம் போல், தேசபக்தியை விதைக்கும் சாமியார் வேடத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்தார் நம்ம புரட்சித்தலைவர்...

    இப்படி ஒரு காந்தீயவாதியாக தனது கலையுலக வாழ்வைத் தொடங்கினார் மக்கள்திலகம்... Bsm...

  11. #910
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மனக்கும் என கூறியவர் அண்ணா! அதன் படி நடந்து செயலில் காட்டியவர் எம் ஜி ஆர்!
    காங்கிரசும், அண்ணா தலைமையிலான திமுகவும் அரசியல் களத்தில் அனல் கிளப்பிவந்த 60 களில், எம்.ஜி.ஆரை மையமாகக் கொண்டு திமுகவில் ஒரு புயல் கிளம்பியது. அண்ணாவின் தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்கள் வரிசையில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர், எதிர் கூடாரத்திலிருந்த காமராஜர் மீது கொண்ட காதலுக்கு அந்த சம்பவம் சாட்சியானது.

    கருத்தியல் ரீதியாக எம்.ஜி.ஆரை திமுகவிடமிருந்து தனிமைப்படுத்திய அந்த சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வும்கூட. திமுகவில் ஒரு பெரிய புயலை கிளப்பிய அந்த சம்பவம் நிகழ்ந்தது 1965 ம் ஆண்டு காமராஜரின் 62 வது பிறந்தநாள் விழாவின்போது.
    ��
    சென்னை, எழும்பூர் பெரியார் திடலில் நடந்த அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், மேடையில் சற்று உணர்ச்சிவயப்பட, பின்னாளில் அது பெரும் சலசலப்பை திமுகவில் உருவாக்கியது.

    எம்.ஜி.ஆரின் சர்ச்சைக்குரிய உரை இதுதான்...

    “காமராஜரின் பிறந்த தின விழாவில் நானும் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தி, அவர் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமைப்படுகிறேன். தலைவர் காமராஜர், தோழர் காமராஜர், அய்யா காமராஜர் என்று பலர் அழைக்கும் நிலையை காமராஜர் அடைந்திருக்கிறார். எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர்; பாராட்டப்பட வேண்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களை எல்லோரும் பாராட்டித்தான் தீரவேண்டும். மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும். நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.

    கொள்கைக்காக வாழ்கிறவனை, கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும். யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும். யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும். இந்த நிலை மாறும்போது அருவருப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.
    நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் (தி.மு.க.) இருந்து விட்டுப்போனவர். அவருடைய ‘கட்டபொம்மன்’ நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார். சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை. அதுதான் நல்ல பண்பு.
    ��
    காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை. நான் அவரைவிட்டு வந்தவன் (எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர்). நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது. காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்? வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்? காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார். யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. தன்னை ஈன்றெடுத்த தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவரை 10 நிமிடங்கள், 5 நிமிடங்களுக்கு மேல் இருந்து பார்ப்பதில்லை.

    தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார். காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்? நான் ஒரு கலைஞன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். அண்ணா வழியில் நடப்பவன். அவர் கொள்கை எனது உயிர். அப்படிப்பட்ட நான் காமராஜரையும், அய்யாவையும் (பெரியார்) பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்ட முடியும்?

    இதே மேடையில்தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன். நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன். நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர். அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன். காமராஜர் இரவு-பகல் பாராமல் பாடுபடுகிறார். அவரை ஏன் பாராட்டக் கூடாது? என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது? எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித் தந்தவர் காமராஜர். ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார். நானும் அதைத்தான் சொல்கிறேன். என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்.
    ��
    பண்புள்ளவன், பகுத்தறிவுள்ளவன் அண்ணா வழியில் நடப்பவன் மாலை இடுகிறான். காமராஜர் நேரில் இருந்திருந்தால் மாலைகளைக் குவித்திருப்பேன். ஏழைகளின் நல்வாழ்வுக்காக காமராஜர் தன்னையே தியாகம் செய்து கொண்டவர், அவருடைய லட்சியத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. அவர் மேற்கொண்டுள்ள லட்சியம்தான் நம்முடைய வழி. நான் ‘நாடோடி மன்னன்’ படத்தில் சொன்ன கருத்துக்கள், போட்ட சட்டங்கள் அனைத்தையும் காமராஜர் அமல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் இலவச கல்வி என்றேன். அது நடந்து வருகிறது. உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் எல்லா வசதியும் என்று இருந்த நிலைமையை மாற்றி தாழ்ந்த வகுப்பினருக்கும் எல்லாவற்றிலும் எங்கும் முதலிடம் என்று அமைத்தவர் காமராஜர்.

    இங்கு காமராஜரை சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள். நான் இதை ஏற்க விரும்பவில்லை. ஏனென்றால், சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க மணம் வீசுவது உண்மை. ஆனால் அது தேய்ந்து மறைந்து விடுகிறது. ஆகவே சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல சரியல்ல.
    என்னைப் பொருத்தவரை காமராஜரை நான் உதயசூரியனுக்கு ஒப்பிடுகிறேன். சூரியன் கிழக்கிலிருந்து உதிர்த்து மேற்கில் மறைவதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அது மறையவில்லை. இருந்த இடத்தில்தான் இருக்கிறது. அதுபோல காமராஜரின் புகழ், தொண்டு உதயசூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இதுவரை எந்தவித தியாகமும் செய்யவில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால் தியாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு தியாகிகளால் பாராட்டுவதை கேட்கும்போது எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

    காமராஜர் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும். மக்களின் கவலைகளைப் போக்கி நல்வாழ்வைக் கொடுக்கவேண்டும். கல்யாண வீடு போல நாம் இங்கே சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதோடு நாம் சிந்திக்கவேண்டும். அதற்கு நாம் காமராஜரை வணங்கித்தான் ஆகவேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் காமராஜர் நீடூழி வாழவேண்டும்.
    ��
    ஜனநாயக சோஷலிசம் என்று காமராஜர் சொல்கிறார். இது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். சர்வாதிகார ஆட்சி வேறு, பரம்பரையாக நாட்டை ஆள்வது வேறு, ஜனநாயகத்தில் மக்கள் விருப்பத்துடன் அமல்படுத்தப்படுவது சோஷலிசம், பேதமற்ற சமுதாயம் காண்பதுதான் அதன் அடிப்படை. ராஜாஜி இங்கே முதல் அமைச்சராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனை தி.மு.க.கழகம் எதிர்த்தது. காமராஜர் முதல் அமைச்சராக வந்தவுடனேயே மாற்றப்பட்டது. காங்கிரசின் திட்டத்தை அதே காங்கிரஸ்காரர் மாற்றினார். எப்படி மாறியது? ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் கட்சிக் கொள்கையும் மாறுகிறது. அதற்கு எடுத்துக் காட்டு காமராஜர்.

    இப்படிப்பட்டவரைப் போற்றாமல் தி.மு.க.கழகத்தில் எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தி.மு.க.வின் லட்சியங்களைக் காமராஜர் நிறைவேற்ற விரும்புகிறார். அதற்குக் காலதாமதம் ஆகலாம். காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி. என்னைவிடச் சிறந்தவர்களை என் தலைவர்களாக ஏற்கிறேன். இங்கே பேசிய என்.வி. நடராஜன், ‘காமராஜர் எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டார். நல்ல ஒரு எதிர்க்கட்சி தேவைதான். காங்கிரசை தி.மு.க.கழகம் எதிர்க்கிறது. தி.மு.கவை காங்கிரஸ் எதிர்க்கிறது. இரண்டும் எதிர்க்கட்சிகள்தான். அதில் எது உயர்ந்த கட்சி என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் மனமாற்றத்திற்கேற்ப மாறும் ஆட்சிதான் தேவை.

    ஒருசமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன். அப்போது அவரது நல்ல எண்ணத்தைத்தான் கண்டேன். எண்ணி எண்ணிப் பூரித்தேன். என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. மாநகராட்சித் தேர்தலின்போது அவர் ‘வேட்டைக்காரன்’ வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நானும் பதிலுக்கு ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர், பெரிய முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர். தொண்டராய், தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்யமுடியும் என்று கருதி பதவியைத் துறந்தார்.
    ��
    சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். சிகப்பு, நான் கறுப்பு என்று (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) முகவை ராஜமாணிக்கம் குறிப்பிட்டார். மனிதனுக்கு இந்த இரண்டு ரத்தமும் தேவை. ஏதாவது ஒன்று அதிகமாகி விட்டால் வியாதிதான். கறுப்பு என்றால் களங்கம் அல்ல. இரண்டும் சேர்ந்தால்தான் ஜனநாயக சோஷலிசம் மலரும்." என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆரின் இந்தப் பேச்சு திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 'கட்சியின் முக்கியத் தலைவர் அந்தஸ்தில் இருப்பவர், எப்படி மாற்றுக்கட்சியின் தலைவரை புகழலாம்' என கட்சியில் கலகக்குரல் எழுந்தது. குறிப்பாக, 'காமராஜரை தலைவர் எனக் குறிப்பிட்டது அண்ணாவை அவமதிக்கும் செயல்' என பரபரப்பு கிளப்பினர் எம்.ஜி.ஆருக்கு எதிரான கோஷ்டியினர்.

    இருப்பினும் எம்.ஜி.ஆர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். அண்ணாவிடம் தன் நிலைப்பாட்டை அவர் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்தார். எம்.ஜி.ஆரை நன்கு புரிந்தவரான அண்ணா, மற்றவர்களின் பேச்சை பொருட்படுத்தவில்லை. .........sbb...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •