Page 66 of 210 FirstFirst ... 1656646566676876116166 ... LastLast
Results 651 to 660 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #651
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் பேலஸில் 119 நாட்களும், ஜங்ஷன் ராம் திரையரங்கில் 40 நாட்களும், பிரபாத் திரையரங்கில் 35 நாட்களும் ஆகமொத்தம் தொடர் வெளியீட்டில் 196 நாட்கள் நடைபெற்றது.

    1969 ல் அடிமைப்பெண், நம் நாடு திரைக்காவியங்கள் இரண்டும் சேர்ந்து தென்னக சினிமா வரலாற்றில் ரூபாய் 2 கோடிக்கு மேல் வசூலை வாரிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    அடிமைப்பெண் 16 திரையரங்கில் 100 நாட்களும், நம் நாடு இலங்கை உட்பட 9 திரையரங்கில் 100 நாட்களும் மொத்தம் ஒரே ஆண்டில் 25 திரையரங்கில் 100 நாளை கடந்தது சாதனை.

    மதுரையில் தொடர்ந்து அடிமைப்பெண் 176 நாட்களும் நம்நாடு திரைக்காவியம் தொடர்ந்து மூன்று திரையரங்கில் திரையிடப்பட்டு 175 நாட்கள் ஒடி மதுரையில் 69 ல் சாதனையாகும்.

    தொடர்ந்து வெளியான அடிமைப்பெண் திரைக்காவியம் நம்நாடு திரைக்காவியம் சென்னை மதுரை திருச்சி சேலம் கோவை இலங்கை என 6 ஏரியாக்களில் 100 நாட்களை கடந்து முதன்மை சாதனையாகும்.

    சென்னையில் அடிமைப்பெண் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 438 நாட்கள் ஓடியது. அதனைத் தொடர்ந்து நம்நாடு திரைக் காவியம் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 392 நாட்கள் ஓடியது. ஆக மொத்தம் இரண்டு காவியங்களும் சென்னை நகரில் 830 நாட்கள் ஓடி அசுர சாதனை புரிந்தது..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #652
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையில் அடிமைப்பெண்*
    13 லட்சத்திற்கு மேலும்,நம்நாடு திரைக்காவியம் 10 லட்சத்திற்குமேலும்* கடந்து..... இரண்டாம் வெளியீட்டில் 2 திரைக்காவியங்களும்
    *7 லட்சத்திற்கு மேல் வசூலை பொழிந்து மொத்தம் 32 லட்சத்தை கடந்து...... வசூலை கொடுத்த காவியமாக பவனி வந்தது.*

    தமிழகத்திலும், இலங்கையிலும்
    1969 ல் வெளியான இரண்டு காவியங்களும் 100 நாட்களை கடந்து வெற்றி சாதனை புரிந்தது.

    தமிழகத் திரை உலகில் மட்டுமல்ல தென்னிந்திய வரலாற்றில் தொடர்ந்து வெளியான இரண்டு வண்ண காவியங்கள் அடிமைப்பெண்... நம்நாடு மிகப்பெரிய வரலாற்று சாதனை புரிந்துள்ளது.*

    125 க்கும் மேற்பட்ட ஊர்களில் இரண்டு காவியங்களும் 50 நாட்களை கடந்து சாதனை....
    வேறு எந்த நடிகரின் திரைப்படங்களும் 1969 ல் இப்படிப்பட்ட தொடர் சாதனையை செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது-...

    மேலும் அடிமைப்பெண், நம் நாடு திரைக்காவியங்களை தொடர்ந்து வெளியான மாட்டுக்காரவேலன் மிகப்பெரிய வெற்றியை மூன்றாவதாக பார்ப்போம்*

    நன்றி , வணக்கம்..........

  4. #653
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*அவர்கள் 17/8/20அன்று சொன்ன*தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------------
    திருச்சியை சார்ந்த திரு.மஜீத் அவர்கள் சகாப்தம் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.அவர்களை பற்றி அளிக்கும் தகவல்கள் கேட்டு தினம் தினம் பூரிப்பு அடைந்து வருவதாக சொல்கிறார் .* நாங்கள் எல்லாம் இன்று நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு எம்.ஜி.ஆர். என்கிற லட்சிய தலைவர்தான் காரணம் . என்று மும்பை தாராவி புலவர் ராமச்சந்திரன் போன்றவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் . எப்படி இப்படி ஒரு மனிதனால் இவ்வளவு பெரிய சக்தியை பெற முடிந்தது என்பதை நாம் தொடர்ந்து பார்ப்போமானால் நமக்கான வெளிச்ச பாதைகள் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது .**

    பொது வாழ்க்கையில் பிரச்னைகளை தட்டி கேட்க ஆளில்லை. அநியாயங்களை சுட்டி காட்ட ஆளில்லை . என்கிறபோது அந்த அநீதிகளை தட்டி கேட்கவோ, அநியாயங்களை சுட்டி காட்டவோ , யாரோ ஒருவர் வருவார் என்று காத்திருக்காமல் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் ஊருக்குள் தயார் செய்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .அநீதிகளை தட்டி கேட்கவும், அநியாயங்களை சுட்டி காட்டவும் அரசியல் பண்பாட்டையே வளர்த்தவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் ஒவ்வொரு பாடல் வரிகளிலும்* சக மனிதர்களின் மீதுள்ள அக்கறையை தெரிவிக்கும் வகையில் மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே, இது மாறுவதெப்போ , தீருவதெப்போ நம்ம கவலை . என்று சொன்னவர் . பட்ட துயர் இனி மாறும், ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்* என்று சொன்னவர், தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்று சொன்னவர் .ஆக இதையெல்லாம் மாற்றி காட்ட வேண்டிய பெரிய சக்தி என்பது இன்றைய இளைஞர்களிடம் தான் உள்ளது அந்த இளைஞர்களுக்கு ,சென்னை மாநகரத்திலே ரூ.15/-க்கு மாத வாடகைக்கு குடி இருந்தவர் தமிழகத்திலே முதல்வராக பத்தாண்டு காலத்திற்கு மேல் ஆண்டார்* என்பது வெறும் செய்தி அல்ல .அது நமக்கு ஒரு படிப்பினை, பாடம் .அவர் சொல்லிவிட்டு சென்ற பல விஷயங்கள் உங்களுக்கும், எனக்கும் ஒரு பாடமாக , படிப்பினையாக தொடர்ந்து பார்த்து வருகிறோம் .

    தமிழ் திரைப்பட உலகில் ஆரம்ப காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் , பி . யு . சின்னப்பா போன்றவர்கள் தமிழகத்தையே கட்டி போட்ட சூப்பர் ஸ்டார்களாக இருந்தார்கள் .* அந்த சூப்பர் ஸ்டார்களெல்லாம் பிடிக்க முடியாத இடத்தை எம்.ஜி.ஆரால் பிடிக்க முடிந்தது என்றால் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதால் மட்டுமல்ல ஏனென்றால் அவர்களுக்கு அப்பால் ஒரு விஷயம் மக்களை நேசிப்பது ,மக்களுடன் நெருங்கி பழகுவது ,மக்களின் தேவைகளை அறிந்து உதவுவது போன்ற ஒரு பாலம் இருந்தது*.**

    அந்த கால நடிகர்களான எம்.கே.தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும்*மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும்,புகழின் உச்சியில் இருந்தாலும் கூட*, தங்களுக்குரிய மக்களுடைய ஆதரவை, அன்பை, செல்வாக்கை தக்கவைத்து கொள்வதற்காக பல்வேறு உதவிகளை செய்து வந்தவர்களாக* இருக்கவில்லை .அவர்கள் வெறுமனே நடிகர்களாக மட்டுமே இருந்தார்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். நடிப்பு என்பது ஒரு தொழில். அந்த தொழிலின் மூலமாக பலருக்கு நாம் அறிமுகம் ஆகிறோம் .அந்த அறிமுகத்தால் பலர் நம்மை அணுகுகிறார்கள் .அப்படி அணுகும்போது மக்கள் நம்முடன் பாசமாக இருக்கிறார்கள் . அந்த பாசத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும் . அதற்காக உழைத்து சம்பாதிக்க வேண்டும் .அப்படி சம்பாதித்ததில் ஒரு பங்கைவாரி வாரி, வள்ளல் தன்மையோடு* மக்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் இருந்து தான் கற்றதாக ,எம்.ஜி.ஆர். அவர்களே பலமுறை மேடைகளில் பேசியுள்ளார் .*.மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1..ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -குடும்ப தலைவன்*

    2.யாரது யாரது தங்கமா* - என் கடமை*

    3.எம்.ஜி.ஆர்.-எம்.ஆர். ராதா உரையாடல் - நல்லவன் வாழ்வான்*

    4.புதியதோர் உலகம் செய்வோம் - பல்லாண்டு வாழ்க*

    5.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல் - ரிக்ஷாக்காரன்*

    6.எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.கிருஷ்ணன் போட்டி பாடல்-சக்கரவர்த்தி திருமகள்*

    7.ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*

  5. #654
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னிந்தியாவின் கிங் மேக்கர் !

    எம்ஜிஆர்- என் டி ஆர் இடையிலான நெருக்கம் என்பது குருவுக்கும் சீடனுக்கும் இடையிலான பந்தம் கொண்டதாகும். சினிமா துறையிலும் சரி ...அரசியல் தளத்திலும் சரி, எம்ஜிஆர் தான் அவருக்கு பிரண்டு, கைடு, பிலாஸபர் என்ற நிலையில் இருந்தார்.

    என்.டி. ஆர்., கட்சியைத் தொடங்கிய போது தெலுங்கு என்ற பெயரோடு கூடிய கட்சிப் பெயரை வைக்குமாறு ஆலோசனை சொன்னவரும் எம்ஜிஆர் தான்.

    எம்ஜிஆர் இரட்டை இலை பெற்றார் என்றால், என்.டி.ஆர் இரட்டை சக்கரம் கொண்ட சைக்கிளைச் சின்னமாகப் பெற்றார். தேர்தலின்போது சென்னையிலுள்ள டி.ஐ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சைக்கிள்களை ஆயிரக்கணக்கில் கொள்முதல் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்தவரும் எம்ஜிஆர் தான் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

    ஆந்திராவில் முதலமைச்சர் பொறுப்பில் என்.டி. ராமராவ் இருந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் தமிழக முதலமைச்சராக இருந்தார். அப்போது எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று தமிழக விழா ஒன்றில் கலந்து கொள்ள என்டிஆர் வந்திருந்தார்.

    விழா மேடையில் எம்ஜிஆர் வீற்றிருக்க...
    என்டிஆர் பேச்சை தொடங்கியபோது, "கிங் மேக்கர் ஆப் சவுத் இந்தியா" என்று ஆங்கிலத்தில் எம்ஜிஆரைத் குறிப்பிட்டவாறு உரையாற்றினார்.
    அவரின் ஆங்கில உரையைத் தமிழாக்கும் பணி அவ்வை நடராசனுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
    அப்போது அவ்வை நடராசன் மொழிபெயர்த்த அந்த வாசகத்தால் எம்ஜிஆரின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்கள் பளிச்சென ஒளிர்ந்தன. அந்த ஒரு வாசகமே அவ்வை நடராசனை ஏந்திச் சென்று எம்ஜிஆர் இதயத்தில் அமரவைத்து விட்டது. அது நீண்ட காலம் வரை நீடித்தது. அவ்வை சண்முகம், தஞ்சை தமிழ் பல்கலை கழக
    துணை வேந்தரானது அப்படித்தான்.

    அந்த மொழிபெயர்ப்பு வாசகம் இதோ...
    " தென்னகத்தின் மன்னாதி மன்னனே"

    -ஆர்.நூருல்லா- மூத்த ஊடகன்.

    திருத்தப்பட்ட பதிவு

    Ithayakkani S Vijayan.........

  6. #655
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பூனை விஜய் #சின்னவாத்தியாரே என்று பேனர் போட்டுக்கொண்டால்? எம்ஜிஆர் என்ற புலியாகிவிடுமா?..........."#குறுக்கு_வழியில்_வாழ்வ ு_தேடிடும்_திருட்டு_உலகமடா"-எம்ஜிஆர்!

    2021_தேர்தலில் தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுபவர்கள் எவரும், தான் உழைத்து சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களை எம்ஜிஆர் போல ஏழைகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களா என்ன?

    பூனை தன்னுடம்பில் கோடுகளை போட்டுக் கொண்டால் புலியாகி விடுமா?
    #திருடர்கள்_ஜாக்கிரதை_போர்டு_வைத்து_விட்டார்கள ்..!
    இனிய ஞாயிறு காலை வணக்கங்கள்!...........

  7. #656
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ எம்ஜிஆர் வாழ்க
    ஆவணி 18 வியாழக்கிழமை
    எம்ஜிஆர் ரசிகர்களே எம்ஜிஆர் பக்தர்களே

    நீங்கள் பார்க்கும் இந்த வீடியோ காட்சி
    ஆந்திரவில் தயாரித்ததெலுங்கு படத்தில் இடம்பெற்றது

    புகழ்பெற்ற கதாநாயகன் மகேஷ்பாபு நடித்த படம்

    இது ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் ஆந்திராவில் தயாரிக்கின்ற படங்களில்
    என்டி ராமராவ் படங்களையோ போட்டோக்களையோ காண்பிப்பது கிடையாது
    ஆனால் தமிழ்நாட்டில் தயாரிக்கின்ற
    பெரும்பாலான தமிழ் படங்களில்
    எம்ஜிஆரின் அழகிய திருமுகத்தை யோ
    எம்ஜிஆர் சினிமா பட பாடல்களையோ படம் பார்க்கும்

    மக்கள் முன்பாக காட்டுவார்கள்

    எம்ஜிஆர் தனி மனிதனாகஆரம்பித்த கட்சி அண்ணா திமுக

    எம்ஜிஆர் தனிமனிதனாக அரசியல் போர்க்களத்தில் நின்று மூன்று முறை வெற்றி பெற்று முதலமைச்சராக வந்தார்

    எம்ஜிஆர் மறைந்த பிறகு. எம்ஜிஆர் பெயரை சொல்லி ஜெயலலிதா முதலமைச்சராக வந்தார்

    எம்ஜிஆர் காக ஜெயலலிதாவை எம்ஜிஆர் ரசிகர்கள்ஏற்றுக் கொண்டார்கள்

    அவர் முதலமைச்சராக அமர்ந்த நாளில் இருந்து அவர் மரணமடையும் வரை

    எம்ஜிஆர் பெயரை சொல்ல விடாமல் செய்தார்
    ஆட்சி இயந்திரத்தைப் பயன்படுத்தி
    எவ்வளவு தூரம் எம்ஜிஆர் பெயரை மறக்கடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நன்றி இல்லாமல் எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்தார் ஜெயலலிதா.

    ஆனால் ஆந்திரா சினிமா உலகின் புகழ்பெற்ற கதாநாயகன் நடித்த இந்த திரைப்படத்தில்

    எம்ஜிஆர் அவர்கள் t'v.யில் பேசுகின்ற காட்சியை எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பதிவு செய்துள்ளார்கள்

    ஜெயலலிதாவை போன்றவர்கள் எம்ஜிஆர் பெயரையோ எம்ஜிஆர் படத்தையோ இருட்டடிப்பு செய்தாலும்

    எம்ஜிஆரின்நீதி நேர்மை சத்தியம் ஏதாவது ஒரு வழியில் எம்ஜிஆரின் படங்களை எம்ஜிஆரின் பாடல்களை. எம்ஜிஆரின் திருவுருவத்தையும்

    தற்போது தயாரிக்கின்ற சினிமா படங்கள் மூலம்

    ஏதாவது ஒரு காட்சியில் வெளிப்படுத்தி விடுகிறது.........

  8. #657
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "பணக்கார குடும்பம்" r.r. பிக்சர்ஸ் எம்ஜிஆரை வைத்து எடுத்த 5 வது திரைப்படம். R.r. பிக்சர்ஸ் எம்ஜிஆரை வைத்து மொத்தம் 7 படம் எடுத்தார்கள். முதல் படம் "குலேபகாவலி" 2வது படம் "புதுமைப்பித்தன்". 3வது படம் "பாசம்". நான்காவது படம்
    "பெரிய இடத்துப் பெண்". 5வது படம் தான் "பணக்கார குடும்பம்". தமிழகத்தில் 1964 ஏப் 23 ம் தேதி வெளியான படம். ஆனால் சென்னையில் மட்டும் ஏப் 24 ம் தேதி வெளியீடு. "வேட்டைக்காரன்" ஏப் 23 அன்று 100 நாட்கள் ஓடியதும் அதே தியேட்டர்களில் வெளியான படம்.

    சித்ரா பிராட்வே மேகலா ஆகிய தியேட்டர்களில் வெளியாகி 101 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது எம்ஜிஆர் குடும்ப
    கதைகளில் நடித்து அதையும் மாபெரும் வசூல் வெற்றி படமாக்க முடியும் என்பதை நிரூபித்த படம்தான் "பணக்கார குடும்பம்".
    தலைவர் எத்தனையோ குடும்ப படங்களில் நடித்தாலும் அதிலும்
    கொள்ளை கூட்டம், கள்ளக்கடத்தல் போன்ற காட்சிகளை புகுத்தி. பாதிக்கு மேல் ஆக்ஷன் காட்சிகளாக மாற்றியிருப்பார்.

    ஆனால் இதில் முழுக்க முழுக்க குடும்ப படமாகவே எடுத்து படத்தை வெகு சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பார் t.r. ராமண்ணா. படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. பாடல்கள் அத்தனையும் மிக அருமையான மெட்டுக்கள். எம்ஜிஆரின் இயல்பான நடிப்பால் "பணக்கார குடும்பம்" பெண்களை மிகவும் கவர்ந்து திரையிட்ட இடங்களிலெல்லாம் திருவிழாக்கோலம்தான்.

    அதிலும் 6 மணிக் காட்சிக்கு பெண்கள் கூட்டத்தை பார்த்தால் பெண்களுக்கென்று தனிக் காட்சி போடலாம் போலிருக்கும். மற்ற நடிகர்களின் குடும்ப படத்தை ஒரு தடவை பார்த்தாலே போதுமடா! குடும்ப வாழ்க்கை, என்று அனைவரும் கேவிக்கேவி அழ ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இந்த படத்தில் ஒரு சராசரி நேர்மையான, தன் உழைப்பால் வாழுகின்ற ஒரு ஆண்மகனாக
    தலைவர் வாழ்ந்திருப்பார்.

    எந்த இடத்திலும் முகத்தை அஷ்ட கோணலாக மாற்றவோ, அதிகமாக கத்தி நடிக்கவோ மாட்டார். முதன் முதலாக குடித்தவர் போல நடித்து ஒரு அருமையான பாடலை பாடும் காட்சி மிகவும் வரவேற்பை பெற்றது.
    முதல் பாடல் காட்சியிலேயே சைக்கிளில் பாடும் போது சம உரிமையை பாடி தனி முத்திரை பதித்து விடுவார். "இதுவரை நீங்கள் பார்த்த பார்வை" ஆகா! எத்தனை இனிமையான பாடல். பல நாள் இரவு நேரத்தில் ரேடியோவில் இந்தப் பாடலை கேட்டால் என்னை மறந்து தூங்கி விடுவேன்.

    பூ பந்து விளையாடி பாடுவதும் பின்னர் பந்தை, பயன்படுத்தி சண்டையிடும் காட்சியிலும் விசில் சத்தத்தில் தியேட்டரில் தூள் பறக்கும். இன்று இதைப்போன்று காட்சிகள் ஏராளம் இருந்தாலும்
    புது யுக்திகளை முதலில் கையாள்வதில் தலைவரை மிஞ்ச
    ஆள் கிடையாது. இந்தியில் கலரில் வந்தாலும் தமிழின் இனிமை, அதை
    இயல்பான நடிப்பால் வெளிப்படுத்திய விதம், மெல்லிசை மன்னர்களின் பாடல்கள், t.r. ராமண்ணாவின் திறமையான இயக்கம் என்று ஒவ்வொரு அம்சமும் படத்தின் வெற்றியை வெகுவாக உயர்த்தி சென்றது.

    இதையெல்லாம் விட கதையோடு இணைந்த நாகேஷின் பரம்பரை காமெடி வெகுவாக ரசிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இந்தக் காமெடியை பற்றி பேசி, ரசித்து சிரிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். முதல் சண்டை காட்சி இசை காமெடியுடன் நீச்சல் குளத்தின் அருகே வெகு இயல்பாக மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். சரோஜாதேவி தோழியருடன் விளையாடும் சடுகுடு என் பேத்தி மிகவும் விரும்பி பார்க்கும் பாடல்.. இதற்கு இணையான, இயல்பான குடும்ப படம் அதுவரை வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    மற்ற குடும்ப படங்கள் எல்லாம் ஒரு நடிகரின் பின்னாலேயே கதை காட்சியமைப்பு பின்னப்பட்டு 'மோனோ ஆக்டிங்கை' அதிகமான குளோஸப் காட்சிகள் மூலம்
    திணித்திருப்பார்கள். பார்ப்பவர்களுக்கு சற்று நேரத்தில் அலுப்பு தட்டி விடும். ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் தித்திக்கும் தேன் பாகை சுவைத்த இன்பம் அனைவருக்கும் கிட்டும் என்று உறுதியாக கூறலாம்.

    சென்னையில் மூன்று தியேட்களிலும் 101 நாட்கள் ஓடி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. மதுரை தேவியில் சித்திரை மாதத்தில் வெளியாகி 126
    நாட்கள் ஓடி தனி முத்திரை பதித்தது. மேலும் திருச்சி, கோவை, சேலம் என அத்தனை a சென்டர்களிலும் 100 நாட்களை கடந்தது. தலைவரின் குடும்ப படங்களில் "பணக்கார குடும்பம்" ஒரு குதூகலமான வெற்றியை பதிவு செய்தது. அநேக ஊர்களில் 50 நாட்களை எளிதில் கடந்து எக்காளமிட்டது..

    வேலூர் தாஜ் திரையரங்கில் 70 நாட்களை விரைவில் கடந்தது.. தூத்துக்குடி சார்லஸில் வெளியாகி 53 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடி தியேட்டரில் நினைவு பரிசு வைக்கப்பட்டது. சார்லஸில் 50 நாட்கள் ஓடுகிறதென்றால் அந்த படம் வெள்ளி விழா ஓட தகுதியான படம் என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் "பணக்கார குடும்பம்" ஏழை எளியவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும். வெற்றிப்
    படம் என்றே சொல்ல வேண்டும்..........

  9. #658
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #உலகம் சுற்றிய எம்ஜியார்#

    எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார் மக்கள் திலகம்..ந*டிக*ரான ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
    #ர*ங்கூன்
    சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார்.

    #இலங்கை
    1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.

    யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டுமல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
    இலங்கை பிரதமர் டட்லி சேனநாயகாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய்யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலைஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
    1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

    #சிங்க*ப்பூர்
    சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
    ‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

    #மாஸ்கோ
    மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
    இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்!

    #லண்ட*ன்
    பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
    லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

    #பாரீஸ்
    அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்..

    #கிழ*க்கு ஆப்பிரிக்கா
    பின்ன*ர் லண்ட*னிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!

    #மொரீஷிய*ஸ்
    நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு!
    1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!

    #அமெரிக்கா
    1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
    ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!

    இனிய மாலை வ*ணக்கத்துடன்............

  10. #659
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 18/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------
    தமிழ் சித்தர்கள் கூறும் அருள் வாக்கு ,பகைவர்களுக்கு அருள்வது என்றால் என்ன என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வாழ்க்கையில் நடத்தி காட்டி இருப்பார் .

    சாயா என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன்* ஜோடியாக டி.வி.குமுதினி என்கிற நடிகை நடித்தார் .* அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏதோ குடும்ப சிக்கல். ஒரு காட்சியில் நடிக்கும்போது சரியாக அமையாததால், ஒரு டேக், இரண்டு டேக்,முடிந்து ஆறு டேக் ஆகிவிட்டது .* குமுதினி மடியில் சாயும்போது எல்லாம் அவரது கணவர் ஏன் வேண்டுமென்றே இப்படி செய்கிறார், இப்படியெல்லாம் நடிக்க ஒத்துழைப்பு கொடுக்க முடியாது* என்று கூறி,அவர் தன் மனைவியை அழைத்து கொண்டு போய்விடுகிறார் . படத்தின் இயக்குனர் எம்.ஜி.ஆர். ஏகப்பட்ட டேக் வாங்குகிறார்*இது சரிப்பட்டு வராது* என்று கூறி அத்துடன் படத்தை நிறுத்தி விடுகிறார் .அந்த நிலையில் சாயா படம் நிறுத்தப்பட்டாலும் ,நடிகை குமுதினிக்கு வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் . சாயா படம் வெளிவரவேயில்லை . அதன் பிறகு நடிகை குமுதினி பிரபலம் ஆகிவிட்டார் .இந்த படத்தில் கெட்டபெயர் ஏற்பட்டதால் அவர் கதாநாயகன் வேடத்திற்கு நடிப்பதற்கு ஏற்றவரில்லை . அவரை மேற்கொண்டு நடிக்க வைக்க முடியாது என்று,அவதூறு கிளப்பப்பட்டு* திரை துறையில் முடிவு செய்ததால் ,சுமார் 6 ஆண்டு காலம் கதாநாயகன் வேடம் ஏற்க அவர் போராட வேண்டியிருந்தது .அந்த கட்டத்தில் சிறு வேடங்கள், துணை வேடங்களில் நடிப்பது கூட சிக்கலாக இருந்த நேரம் .*


    எம்.ஜி.ஆர். முதல்வராகி கோட்டையில் அமர்ந்துள்ளார் . ஒருநாள் நடிகை குமுதினி* தன கணவருடன்* வந்து எம்.ஜி.ஆரை சந்தித்து ,தனது வீடு ஒன்று பிரச்னையால் ஏலம் விடப்படுகிறது,நீங்கள்தான் தகுந்த உதவி செய்யவேண்டும் என்கிறார் . .விவரங்களை கேட்டறிந்த எம்.ஜி.ஆர்.*சாயா படத்தில் நடந்த சம்பவங்கள் எதையும் காட்டி கொள்ளாமல், கவலைப்படாதீர்கள் என்று சொல்லி,அவர்களுடைய வீட்டை ஏலத்தில் இருந்து மீட்டு கொடுத்தார் . வேறு ஏதாவது உதவிகள், தேவைப்பட்டாலோ, பிரச்னைகள் இருந்தாலோ மனதில் எந்த சலனமும் இல்லாமல் என்னை அணுகுங்கள் . நான்*உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று சொல்லி அனுப்பினாராம் .


    பழம்பெரும் நடிகை கண்ணாம்பா பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு தாயாராக நடித்தவர் . ஒருமுறை சொந்த படம் எடுக்க துணிந்தபோது தன் சொத்துக்களை விற்கவேண்டிய சூழ்நிலை . இருந்த ஒரு வீட்டையும் அடமானம் வைத்த பின் ஏலத்திற்கு வருகிறது . இதை அறிந்த எம்.ஜி.ஆரின் நண்பனான சாண்டோ சின்னப்ப தேவர் ,எம்.ஜி.ஆரிடம், கண்ணாம்பாவின் வீடு அடுத்த வாரம் ஏலத்திற்கு விடப்படுகிறது என்று தகவல் தெரிவிக்கிறார் .* உடனே எம்.ஜி.ஆர். விரைந்து செயல்பட்டு, அந்த வீட்டின் அடமானத்திற்கான பணத்தை கட்டி ,வீடு ஏலத்தில் போகாமல் காப்பாற்றி, பத்திரங்களை பெற்று, கண்ணாம்பாவிடம் ஒப்படைக்கிறார் . கண்ணாம்பா* எம்.ஜி.ஆரிடம் இந்த வீடு உங்களின் பெயரில் மாற்றி விடுகிறேன் .உங்கள் பொறுப்பிலேயே இருக்கட்டும் என்கிறார் . அதை ஏற்க மனமில்லாமல் எம்.ஜி.ஆர். கண்ணாம்பாவிடம் நீங்கள் உயிருடன் இருக்கும்வரையில் இந்த வீட்டில் இருந்து சுதந்திரமாக பயன்படுத்துங்கள் . எப்போது உங்களுக்கு தேவையில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்போது நான் பயன்படுத்தி கொள்கிறேன் என்று கூறினார் . அவருடைய செலவிற்கு சிரமப்படாமல் இருக்க சில படங்களில் நடிக்க சிபாரிசு செய்தார் .*அவரது சொந்த படம் ஒன்று முடிக்கும் தருவாயில் இருந்ததற்கு பண உதவி செய்து அதை முடித்து வெளியிடவும் ஏற்பாடு செய்தார் .



    ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வீடு ஏலத்திற்கு வந்ததை அறிந்து பணத்தை கட்டி, பத்திரங்களை மீட்டு வாருங்கள் என்று தன் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனிடம் சொல்லி,அவற்றை கலைவாணரிடம் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று உத்தரவிடுகிறார் .எனக்கு எவ்வளவோ உதவிகள் தம்பி ராமச்சந்திரன் செய்துவிட்டார். செய்தும் வருகிறார் .தொடர்ந்து அவரை* தொந்தரவு செய்வது எனக்கு கஷ்டமாக இருக்கிறது .எனவே இந்த பணத்தை அவரிடமே கொடுத்துவிடுங்கள் . இந்த வீடு ஏலம்* போனாலும் பரவாயில்லை என்கிறார் கலைவாணர் .இதை கேட்ட எம்.ஜி.ஆர். ,மனதில் சஞ்சலத்தோடு ,ஆர்.எம்.வீரப்பனிடம், இந்த வீடு உங்கள், பொறுப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கட்டும் . வேண்டுமானால் நீங்களே தங்கி பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றாராம் . அந்த வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன் என்று சமீபத்தில் கூட*ஒரு பேட்டியில் ஆர். எம்.வீரப்பன் கூறியுள்ளார் .


    கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி எம்.ஜி.ஆரை சந்திக்க வரும்போதெல்லாம்* ,அலுவலகமாக இருந்தாலும், ராமாவரம் தோட்டமாக இருந்தாலும், அனைவரையும் வரவேற்று* எவ்வளவு பேர் வந்தாலும் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து ,அவர்களை நன்கு உபசரித்து அவர்களுடைய கோரிக்கைகளில் எதைஎல்லாம் நிறைவேற்றலாம்*என்று பின்னர் ஓ.கே. செய்வாராம் . ஒரு நாள் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாண சுந்தரம் இந்த எம்.ஜி.ஆர். எப்போது அவரை சந்தித்து கோரிக்கைகள் பற்றி பேசினாலும், அலுவலகமாக இருந்தாலும், ராமாவரம் தோட்டமாக இருந்தாலும் முதலில் சாப்பிட வைத்து நன்கு உபசரிக்கிறார் . இதனால் நாம் கோபமாக,உணர்ச்சி பூர்வமாக எதையும் பேச முடிவதில்லை .நாம் சிறிய கூட்டத்தினராக செல்வதால்தானே அப்படி செய்கிறார் . பெரிய கூட்டமாக செல்வோம் என்று முடிவு செய்கிறார் வீட்டுக்கு சென்றால்தான் சாப்பிட சொல்கிறார் . நாம் 500 பேராக திரண்டு கட்சி அலுவலகத்திற்கு செல்வோம்*அப்போதுதான் கோரிக்கைகள் நிறைவேற்ற சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் போராட்டம் அறிவிக்கவும், போராடவும் நமக்கு வசதியாக இருக்கும் என்று எண்ணி, அ .தி.மு.க. கட்சி அலுவலகம் செல்கிறார் .அங்கிருந்து எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.அதாவது கம்யூனிஸ்ட் தலைவர் சுமார் 500 பேர்களுடன் கோரிக்கைக்கு மனு அளிக்க வந்துள்ளார் .கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்துள்ளதாக*சொல்லப்படுகிறது .இன்னும் 30 நிமிடங்களில் நான் அங்கு வந்துவிடுவேன் .அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் காவல்துறை பாதுகாப்புடன்* தங்கவைத்து உணவளியுங்கள் என்கிறார் .அனைவர்க்கும் தடபுடலாக உணவு ஏற்பாடு செய்து தரப்படுகிறது .எம்.ஜி.ஆர். நேராக கல்யாண மண்டபத்தில் நுழைகிறார்* *நீங்கள் உணவருந்தியபின் பேசலாம் என்றுதான் சற்று தாமதமாக வந்தேன் என்கிறார் எம்.ஜி.ஆர். உடனே கல்யாண சுந்தரம் இது என்ன உங்களின் போர் தந்திரமா ?எங்கு,எப்போது சந்தித்தாலும், எத்தனை பேர் வந்தாலும் ,500 பேர் வந்தாலும் விருந்தோம்பல் செய்து எங்களை சாந்தமாக்கி விடுகிறீர்கள் ,எங்களது கோரிக்கைகள் பற்றி உரிய முடிவு எடுப்பதில்லை என்று கூறுகிறார் . தமிழக முதல்வர் என்கிற வகையில் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை*நிறைவேற்ற* வேண்டியது என் கடமை . அதை நான் நிச்சயம் செய்வேன் . அனால் என்னை பார்க்க வருபவர்கள் யாரும் உணவருந்தாமல் போக கூடாது .இங்குள்ளவர்கள் அனைவரும் தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர்*அவர்கள் அனைவரையும் உபசரிப்பது இந்த ராமச்சந்திரனின் முதல் கடமை .என்று கூறியதும் கல்யாண சுந்தரம் கண் கலங்கியவாறு எம்.ஜி.ஆரின் கைகளை பற்றி கொண்டாராம் .


    எம்.ஜி.ஆர். ஒருநாள் ஸ்டுடியோவிற்கு வருகிறார் .அங்கு,படத்தொகுப்பாளர்கள்*காமிராமேன், திரைக்கதை ஆசிரியர் , ஒளி /ஒலி* பொறியாளர்கள் , ஆர்ட் டைரக்டர், இயக்குனர் ,தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் உள்ளனர் .அங்குள்ள கருவிகளை எம்.ஜி.ஆர். சுற்றி பார்த்துவிட்டு ,அனைவரிடமும் பேசி விட்டு வருகிறார் . ஒரு பிரம்மாண்ட மாளிகை செட் போடப்பட்டுள்ளது . அதை பார்த்துவிட்டு, இங்குள்ளவர்கள் எல்லாம் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள்*உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன் .இந்த பிரம்மாண்ட மாளிகையில் ஒரு குறை இருக்கிறது .யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம் என்கிறார் .யாருக்கும்* *சொல்ல* தெரியவில்லை. ,உடனே எல்லா விளக்குகளையும் ஒரு நிமிடம் அணையுங்கள் என்றார் .மீண்டும் விளக்கை ஏற்றுங்கள் என்கிறார் .அவர் ஒரு திசையை காட்டி ,தென்பகுதியில் ,ஒரு விரிசல், லைட்டிங் மாறுபாட்டால் தென்படுகிறது . இந்த லைட்டிங் சரி செய்தால் அந்த விரிசல் தெரியாமல்*மாளிகை செட் படமாக்குவதற்கு எளிதாக இருக்கும் என்கிறார் . மாளிகையின் வனப்பு நன்றாக இருக்கும் என்று மிக நுட்பமாக கண்டுபிடித்து சொல்லி அங்குள்ள திரைப்பட கல்லூரி மாணவர்களையும் ஆச்சர்யப்படுத்தி வாத்தியாராக திகழ்ந்தார் .***


    எம்.ஜி.ஆர் ஒருமுறை வெள்ள நிவாரண பணிகள் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் .ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 50பேர் கூடியுள்ளனர் .அங்கு எம்.ஜி. ஆருடன்* தலைமை செயலாளர் ,மாவட்ட ஆட்சியர் , சுகாதார துறை அதிகாரிகள்*செல்கிறார்கள் . அங்குள்ளவர்களிடம் எம்.ஜி.ஆர் கேட்கிறார் . உங்களுக்கு என்னென்ன குறைகள் உள்ளன* , என்ன உதவிகள் வேண்டும் இதுவரை அதிகாரிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் விசாரிக்கிறார் . அந்த கூட்டத்தில் இருந்து நால்வர் எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை, பட்டா தரவில்லை என்று சத்தமாக தொடர்ந்து பேசுகிறார்கள் . சிறிது நேரம் கழித்து ,காவல்துறையினரிடம் அந்த நால்வரை மட்டும் தனியே அழைத்துவர சொல்கிறார் .* உங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்று சொல்கிறீர்களே .நீங்கள் யாரை ,எங்கு சந்தித்து மனு அளித்தீர்கள் என்று கேட்க*நாங்கள் அதிகாரிகளிடம் கூறினோம், ஏன் ,மாவட்ட ஆட்சியரை கூட* சந்தித்தோம் ஒன்றும் பலனில்லை என்றனர் .ஆட்சியர் என்ன சொன்னார் என்று எம்.ஜி.ஆர். கேட்க, அவர் எங்களுக்கு கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் என்று பதில் கூறினர் . அந்த ஆட்சியர் இந்த கூட்டத்தில் இருக்கிறாரா பாருங்கள் .இருந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று எம்.ஜி.ஆர். கூற ,அவரை காணோம் .இங்கு வரவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். எம்.ஜி.ஆர். உடனே,இதோ இவர்தான் உங்கள் மாவட்ட ஆட்சியர் ..நீங்கள் வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக இங்கு பிரச்னை செய்கிறீர்கள். உங்களை 15 நாட்கள் காவலில் வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றவுடன்,உடனே எம்.ஜி.ஆர். காலில் விழுந்து ஐயா எங்களை மன்னித்து விடுங்கள் ,கட்சிக்காரர்கள் பேச்சை நம்பி தவறாக நடந்து கொண்டோம் என்று புலம்பினார்கள் . ஆட்சியரையோ, அதிகாரிகளையோ முறையாக சந்தித்து மனு அளித்து உங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு விரைவில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்* , அரசியல்வாதிகள் பேச்சை நம்பி, மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொல்லை கொடுக்க கூடாது என்று எச்சரித்து அனுப்பினார் எம்.ஜி.ஆர்.*மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------
    1.ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்*

    2.அன்று வந்ததும் இதே* நிலா - பெரிய இடத்து பெண்*

    3.பல்லாக்கு வாங்க போனேன் - பணக்கார குடும்பம்*

    4.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*

    5.எம்.ஜி.ஆர்.-கரி கோல் ராஜு உரையாடல் - நல்ல நேரம்*

    6. எம்.ஜி.ஆர்.-திருப்பதிசாமி உரையாடல் - படகோட்டி*

    7.அன்னமிட்டகை நம்மை ஆக்கி விட்ட கை- அன்னமிட்டகை*

    8. என்னை தெரியுமா* - குடியிருந்த கோயில்*

  11. #660
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பூனை விஜய் #சின்னவாத்தியாரே என்று பேனர் போட்டுக்கொண்டால்? எம்ஜிஆர் என்ற புலியாகிவிடுமா?..........."#குறுக்கு_வழியில்_வாழ்வ ு_தேடிடும்_திருட்டு_உலகமடா"-எம்ஜிஆர்!

    2021_தேர்தலில் தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுபவர்கள் எவரும், தான் உழைத்து சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களை எம்ஜிஆர் போல ஏழைகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களா என்ன?

    பூனை தன்னுடம்பில் கோடுகளை போட்டுக் கொண்டால் புலியாகி விடுமா?
    #திருடர்கள்_ஜாக்கிரதை_போர்டு_வைத்து_விட்டார்கள ்..!
    இனிய திங்கள் காலை வணக்கங்கள்!.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •