Page 65 of 210 FirstFirst ... 1555636465666775115165 ... LastLast
Results 641 to 650 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #641
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல்:
    துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.

    அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!

    திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.

    எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.

    திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர். "எங்கள் தங்கம்" திரைப்படத்தில் ஒரு பாடலில் முழு பகுத்தறிவு பிரச்சாரமே செய்து நடித்தார்.

    அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்...........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #642
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யம்*(இணைய*தளம் ) -1,00,000 சாதனை*பதிவுகள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்,பக்தர்கள், விசுவாசிகள்,அபிமானிகள்*அனைவருக்கும் மகிழ்ச்சியான , இனிப்பான, வியப்பான செய்தி என்னவென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யத்தில்* (இணைய தளத்தில் ) 1,00,000* பதிவுகள் என்கிற இமாலய சாதனையை* (26 பாகங்கள் மூலம் - ஒரு பாகம் என்பது 400 பக்கங்கள் கொண்டது )*நமது எம்.ஜி.ஆர். பக்தர்கள் சிலரின் சீரிய முயற்சியால் செய்யப்பட்டு சாதனை என்கிற எவரெஸ்ட்* சிகரத்தை அடைந்துள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் பதிவாளர் என்கிற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன் .
    கீழ்கண்ட எம்.ஜிஆர். பக்தர்கள்* செய்த பதிவுகளின் எண்ணிக்கை பின்வருமாறு :
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    1.* திரு. ஆர். லோகநாதன்* ,சென்னை* * * ----------------- 27,365

    2 திரு..எஸ்.வினோத், பெங்களூரு* * * * * -------------------15,120

    3.மறைந்த திரு.முத்தையன் ,சேலம்* * --------------------11,302

    4.திரு.சைலேஷ் பாசு, அபுதாபி* * * * * * *---------------------- 7,154

    5.திரு.ரவிச்சந்திரன், திருப்பூர்* * * * * * -----------------------* 6,291

    6.திரு.யுகேஷ் பாபு , சென்னை* * * * * -----------------------* 5,135

    7.திரு.சுஹாராம், மன்னார்குடி* * * * * ----------------------* 4,925

    8.திரு.ராமமூர்த்தி , வேலூர்* * * * * * *------------------------ 4,383

    9.திரு.கலியபெருமாள், பாண்டிச்சேரி ------------------- 3,153

    10.திரு.ரூப் குமார், சென்னை* * * *-------------------------* 2,962

    11.திரு.செல்வகுமார், சென்னை* * -----------------------* 2,555

    12. திரு.* ஜெய்சங்கர், சேலம்* * * * *------------------------* 1,821

    13.திரு.சி.எஸ்.குமார், பெங்களூரு* * -------------------* *1,385

    14.திரு.வி.பி.சத்யா* ,சென்னை* * * * *----------------------1,209

    15.திரு.ஸ்ரீதர் (தமிழ் இந்து நாளிதழ் ),சென்னை --- 1,113

    16.திரு. பாஸ்கரன், இலங்கை* * * * * * *----------------* * * *921

    மேற்கண்டவர்களை தவிர, திருவாளர்கள் சுந்தர பாண்டியன், ராமலிங்கம் மூப்பனார், மஸ்தான் சாஹிப் போன்ற சிலரும் நூற்று கணக்கில் பதிவுகள் செய்துள்ளார்கள் .மேற்படி இமாலய சாதனை படைக்க காரணமாக இருந்த அனைத்து பதிவாளர்கள், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு*சார்பில் கோடான கோடி நன்றிகள் .

    குறிப்பு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மய்யம் (இணைய தளம் ) 20/10/2005 அன்று*திரு.பயிரா (bayera* )என்பவரால் துவக்கப்பட்டது .மேற்கண்ட தகவல்களை*பகிர்ந்த திரு.எஸ்.வினோத், பெங்களூரு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

    ஆர். லோகநாதன் ,
    ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை .

    * * * ***

  4. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  5. #643
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தன்னை கடினமாக வருத்திக்கொண்டு தன் ரசிகர்களை மகிழ்விக்கவேண்டும் என்பதற்காக, குறுகிய காலத்தில் அதிக படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தவர் எம். ஜி. ஆர்.

    இன்றைக்கு கிராபிக்சில் செய்வதை
    50 ஆண்டுகளுக்கு முன்பே 'மிட்சல்' கேமரா மூலம் படமாக்கத்திலும்,
    எம். ஜி. ஆரது அயராத உழைப்பிலும் இரட்டை வேட படங்கள் மூலம் சாதனை படைத்திருக்கிறார்கள்.

    'நாடோடி மன்னன்' படத்தில் நாடோடியும் மன்னனும் கை குலுக்கி கொள்வதும், 'ராஜா தேசிங்கு' படத்தில் இருவரும் கட்டிப்பிடித்து அழுவதும், 'குடியிருந்த கோயில்' படத்தில் ஆனந்தும் பாபுவும் கடைசியில் (காண்க படம்) கட்டித் தழுவுவதும், 'மாட்டுக்கார வேலன்'
    படத்தில் வேலனைச்சுற்றி ரகு வருவதும் என்று அனைத்தும் 'ஹெட் மாஸ்க்'
    (head mask) மூலம்
    (மாற்று நடிகரின் உருவத்தில்
    அசல் நடிகரின் தலையைப் பொருத்துவது) படமாக்கப்பட்டுள்ளது.
    இதில் சிறு பிசிறு கூட இல்லாமல் படமாக்கப்பட்ட சாதனை எம். ஜி. ஆரால்
    மட்டுமே நிகழ்த்தப்பட்டதாகும். அதற்கு அவரது உழைப்பு அசாத்தியமானது.

    இது பற்றி 2019 செப்டம்பர் மாத
    'இதயக்கனி' யில், 'எல்லாம் அறிந்த
    எம். ஜி. ஆர்.' தொடரில்
    விரிவாக எழுதியுள்ளேன்.

    மீள்பதிவு
    ...
    Ithayakkani S Vijayan with Plato Rajagopalan..........
    .

  6. #644
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியாரை ம*தித்த வாத்தியார்#

    அது 1976 பாராளுமன்ற தேர்த*ல் நேர*ம். நான் 9ஆம் வ*குப்பு திருச்சி பேட்டைவாய்த்தலை த*னியார் ப*ள்ளியில் ப*டித்து வ*ந்தேன். ப*ள்ளி முடிந்து வீட்டிற்கு ந*ட*ந்து செல்கிறேன். எனக்கு பின்னால் ஒரு 100 அடி இடைவெளியில் எங்க*ள் ப*ள்ளியின் த*மிழ் வாத்தியாரும் வ*ருகிறார். (ந*ம்நாடு ப*ட* வாத்தியார் நாகைய்யா போல் தோற்ற*ம் உள்ளவ*ர்).
    ச*ற்று தூர*ம் ந*ட*ந்த*தும் எதிர்திசையில் வேக*மாக இர*ண்டு கார்க*ளும் அத*ற்கு பின்னால் திற*ந்த* ஜீப் ஒன்றும் வ*ந்த*ன. அந்த* ஜீப்பில் வெள்ளை வெளேறென ஒளிபிம்ப*ம் போல் தெரிந்த*து. யாரென பார்த்தால் ந*ம்ம வாத்தியார் புன்னகை முக*த்துட*ன் இருக*ர*ம் கூப்பியும் கை அசைத்த*வாரும் அதில் வ*ந்து கொண்டிருந்தார். நான் "த*லைவ*ரே" என்று க*த்த என்னைப்பார்த்தும் கைகாட்டி விட்டு சென்றார். பிற*கு என் பின்னால் ச*ற்று தொலைவில் வ*ந்த* த*மிழாசிரிய*ர் அருகே வ*ண்டி சென்ற*தும் திடீரென நின்ற*து. ந*ம் த*லைவ*ர் அவ*ருக்கு ஜீப்பில் நின்ற*வாரே வ*ணக்கம் செலுத்திவிட்டு உத*வியாளரிட*ம் ஏதோ கூற சில ஆப்பிள் ப*ழ*ங்க*ள் அவ*ர் கைக்கு வ*ந்த*ன. அதை ஒரு பையில் போட*ச்சொல்லி பின் அதை அப்ப*டியே த*லைவ*ர் அந்த ஆசிரிய*ருக்கு வ*ழ*ங்கி மீண்டும் வ*ணக்கம் சொல்லி உட*ன் புற*ப்ப*ட்டு சென்றார். இவையெல்லாம் ஒரு 20 நொடிக*ளில் நிக*ழ்ந்த*ன. அந்த த*மிழாசிரிய*ரோ பிர*ம்மை பிடித்த*வ*ர்போல் வாய*டைத்து நின்றார். மறுநாள் முத*ல் சாமான்ய*ரான த*ன்னையும் ம*தித்து வ*ணக்கம் சொல்லி த*லைவ*ர் ப*ழ*ங்க*ளை அளித்த*தை அனைவ*ரிட*மும் கூறி அக*மகிழ்ந்தார்.

    " ஆசிரிய* பெரும*க்க*ளுக்கு இந்த* வாத்தியார் நேச*னின் அன்பு வாழ்த்துக்க*ள்............

  7. #645
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.மறைந்த போது கவிஞர் வாலி எழுதிய இரங்கட் பா.....இனி நான் யாரை பாடுவேன்...

    பொன்மனச்செம்மலே !என் பொழுது
    புலரக் கூவிய சேவலே !
    உனக்கென்று நான் எழுதிய முதல்
    வரியில்தான் உலகுக்கு என் முகவரி
    தெரிய வந்தது !
    என் கவிதா விலாசம் உன்னால்தான்
    விலாசமுள்ள கவிதையாயிற்று!
    இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னமே
    என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ !
    என்னை வறுமைக் கடல் மீட்டு
    வாழ்க்கைக் கரை சேர்த்த படகோட்டியே !
    கருக்கட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!
    நான் பாடிய பாடல்களை நீ பாடிய பிறகு
    தான் நாடு பாடியது
    ஏழை எளியவயர்களின் வீடு பாடியது !
    இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாதவன்
    இன்று இல்லையென்று போனான்
    இனி நான் யாரை பாடுவேன்...?
    புரட்சித் தலைவனே !நீ இருந்த போது உன் அடக்கத்தைப் பார்த்து நாடு
    தொழுதது....
    இன்று இறந்த பின்பு உன் அடக்கத்தைப் பார்த்து நாடு அழுதது !
    வைகை ஆறும் பொன்னி ஆறும் வற்றிப்போகலாம் !
    நீ வற்றாத வரலாறல்லவா !
    கலைத்தாயின் தலை மகனே !
    கோட்டையில் கொழுவிருந்ததால்
    மட்டும் நீ 'சி எம்'அல்ல கோடம்பாக்கத்திலும் கர்ஜித்துக்
    கொண்டிருந்த சீயம் தான் !
    இன்று படத்தை நிரப்பப் பலர் இருக்கிறார்கள் !
    உன் இடத்தை நிரப்பத்தான் எவரும் இல்லை !
    நான் மனிதர்களில் நடிகர்களைப்
    பாரத்திருக்கின்றேன் ஆனால் நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன்
    நீதான் !
    அதனால்தான்...நீ நோயுற்ற போது ..தங்களது வாழ்நாட்களின்
    மிச்சத்தை உன் கணக்கில் வரவு வைத்து விட்டு எத்துணையோ பேர் தங்கள்
    கணக்கை முடித்துக்கொண்டு தீக்குளித்தார்கள் !
    என் இதய தெய்வமே! உன் இறப்பில் நான் இரண்டாவது முறையாக என் தாயை இழந்தேன் !
    இனி நான் யாரை பாடுவேன்...?..........

  8. #646
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை நகர சாதனைகளில்
    மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியங்கள்.

    முன்பும்..... நேற்றும்....

    அரங்கு : பாரகன்
    *******************
    1950 : மந்திரி குமாரி
    112 நாட்கள்...
    1958 : நாடோடி மன்னன்
    133 நாட்கள்.....

    50 நாட்கள்...
    ஜெனோவா
    தாய் மகளுக்கு க.தாலி
    56 நாட்கள்...
    மன்னாதி மன்னன்
    70 நாட்கள்
    பாசம் 84 நாட்கள்
    ஆனந்த ஜோதி
    56 நாட்கள்
    ஆசைமுகம்
    56 நாட்கள்
    தாழம்பூ
    56 நாட்கள்
    பறக்கும் பாவை
    63 நாட்கள்
    தேடி வந்த மாப்பிள்ளை
    61 நாட்கள்
    அரசகட்டளை
    35 நாட்கள்

    * அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து 133 நாளை கடந்து ஒடி அதிக வசூலை பெற்ற காவியம்.. நா.மன்னன்!
    133 நாள் ஒடி முடிய
    வசூல் : 2,56,758.07.

    தேடி வ.மாப்பிள்ளை
    61 நாள் 1, 98,365.00

    நன்றி : திருவல்லிகேணி
    எம்.ஜி.ஆர். மன்றத்தின் ரி.காரன் மலர் .............

  9. #647
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வண்ணப்பட வரலாற்றில் கலைப்பேரரசின் சாதனைகள் காணீர்...
    *************************
    * அலிபாபா
    மதுரை 141 நாள்
    சேலம் 154 நாள்
    திருச்சி 147 நாள்

    * நாடோடி மன்னன்
    சென்னை கிருஷ்ணா
    147 நாள்....
    திருச்சி
    161 நாள்...
    சேலம்
    147 நாள்....
    கோவை
    140 நாள்....

    * அன்பே வா
    சென்னை காஸினோ
    154 நாள்...
    சென்னை கிருஷ்ணா
    147 நாள்....
    மதுரை 147 நாள்

    * ஒளி விளக்கு
    இலங்கை ஜெயின்ஸ்தான்
    162 நாள்....
    ராஜா 161 நாள்
    மதுரை 147 நாள்

    * மாட்டுக்கார வேலன்
    சேலம் 156 நாள்
    திருச்சி 150 நாள்
    கோவை 144 நாள்
    ஈரோடு 142 நாள்
    நெல்லை 140 நாள்
    இலங்கை 141 நாள்

    * ரிக்க்ஷாக்காரன்
    மதுரை 161 நாள்
    சென்னை
    தேவிபாரடைஸ்
    142 நாள்...
    ஸ்ரீகிருஷ்ணா
    142 நாள்....
    திருச்சி 142 நாள்,,..
    ஈரோடு 140 நாள்....

    உரிமைக்குரல்
    ஈரோடு 155 நாள்
    கோவை 150 நாள்

    இதயக்கனி
    மதுரை 146 நாள்
    இலங்கை 141 நாள்...

    இப்படி 2,3,4,5,6....
    திரைகளில்...
    20 வாரங்களை கடந்த காவியங்கள் இதுப்போல் ஒடியுள்ளதா....

    மற்றும்
    எ.வீ.பிள்ளை
    நெல்லை 149 நாள்.
    உ.சு.வாலிபன்
    கோவை 152 நாள்
    நாளைநமதே
    இலங்கை 140 நாள்
    ஆ.ஒருவன்
    சென்னை சத்யம்
    161 நாள் (2014)
    இப்படி சாதனையில் தலைவரின் வண்ணப்படங்கள்...
    தொடரும்.........

  10. #648
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் மாநகரில் புரட்சி!
    ********************************
    வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் காவியங்கள்*
    1961 முதல் 1977 வரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்களை வெற்றி கொண்டு சாதனையை பெற்று வந்துள்ளது.*

    1961 தாய் சொல்லைத் தட்டாதே 1962 தாயைக் காத்த தனயன்
    1963 நீதிக்குப் பின் பாசம்*
    1963 பரிசு
    1964 வேட்டைக்காரன்*
    1964 பணக்கார குடும்பம்
    1965 எங்க வீட்டுப் பிள்ளை*
    1965 ஆயிரத்தில் ஒருவன்
    1966 அன்பே வா*
    1967 காவல்காரன்
    1968 ரகசிய போலீஸ் 115
    1969 அடிமைப்பெண்*
    1969 நம்நாடு
    1970 மாட்டுக்கார வேலன்*
    1970 என் அண்ணன்
    1070 எங்கள் தங்கம்*
    1971 குமரிக்கோட்டம்*
    1971 ரிக்க்ஷாக்காரன்*
    1972 நல்ல நேரம்
    1973 உலகம் சுற்றும் வாலிபன்*
    1974 உரிமைக்குரல்
    1975 இதயக்கனி
    1975 பல்லாண்டு வாழ்க*
    1976 நீதிக்குத் தலைவணங்கு*
    1977 மீனவ நண்பன்*

    இப்படி தொடர்ந்து ஒவ்வொரு*
    ஆண்டும் 100 நாட்களை கடந்து மகத்தான வெற்றியை படைத்தவர் மக்கள் திலகம் ஒருவரே.............

  11. #649
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1969 ம் ஆண்டு அடிமைப்பெண் திரைப்பட வெற்றிக்குப் பின் வெளியான நம் நாடு திரைக்காவியத்தை பற்றி சில முக்கிய தகவல்கள்.

    எளிய முறையில் தயாரிக்கப்பட்டு மகத்தான சாதனையை உருவாக்கி சிறந்த* கருத்துக்களை திரைப்படத்தில் புகுத்தி... இன்றுவரை வெள்ளித்திரையில் வெற்றி பெற்று வரும் காவியம் மக்கள்திலகத்தின் நம் நாடு ஆகும்.

    1969 -* தீபாவளி தினத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பணம் கொட்டி வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு.... தமிழகத்தில் திரையிடப்பட்டு வசூலில் தோல்வியைத் தழுவிய படங்களுக்கு மத்தியில் நம் நாடு காவியம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ...தென்னகத்தில் அனைத்து ஏரியாக்களிலும்* சாதனையாக நிமிர்ந்து* நின்றது.

    சென்னையில் அடிமைப்பெண் திரைப்படத்திற்கு பின்* 4 திரையர ங்குகளில் வெளியிடப்பட்டு மூன்று திரையரங்கில் 100 நாட்களை கடந்து மொத்தம் 392 நாட்கள் ஓடிய காவியம் நம் நாடு ஆகும்.

    சென்னை சித்ரா, மதுரை மீனாட்சி, சேலம் பேலஸ், திருச்சி வெலிங்டன் திரையரங்குகளில் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனையை ஏற்படுத்திய இரண்டாவது காவியம் நம் நாடு ஆகும்.

    அடிமைப்பெண் திரைக் காவியத்திற்கு பின் ஐந்து மாத காலத்தில் ரூபாய் 70 லட்சத்திற்கு மேல் முதல் வெளியீட்டில் வசூலை ஏற்படுத்திக் கொடுத்த மாபெரும் காவியம் நம் நாடு ஆகும்.

    முதல் வெளியீட்டில் 39 திரையரங்கில் 50 நாட்களும், அடுத்து வெளியீட்டில் 11 திரையரங்கில் 50 நாட்களும், பெங்களூரில் 3 திரையரங்கில் 50 நாட்களும், மைசூர் சித்தூர் திருவனந்தபுரத்தில் 50 நாட்களுக்கும் கடந்து....... மொத்தம் 56 திரையரங்கில் வெற்றி வாகை சூடியது நம்நாடு காவியம்.

    இலங்கை கொழும்பிலுள்ள ஒரே ஏரியாவில்....கேப்பிட்டல் 98, பிளாசா 60* திரையரங்குகளில் நம்நாடு தொடர்ந்து 158 நாட்கள் ஓடியது. யாழ்நகரில்... வெலிங்டன் திரையரங்கில் 100 நாட்களை கடந்தது..........

  12. #650
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தில் 19 திரையரங்கில்*
    75 நாட்களை கடந்து மகத்தான சாதனை புரிந்த அடிமைப் பெண்ணுக்கு பிறகு 2 வது நம் நாடு ஆகும்.

    புதுச்சேரி, பொள்ளாச்சி, தேனி, கம்பம், சிவகங்கை என சில ஊர்களில் அடிமைப் பெண்ணை விட அதிக வசூலை நம்நாடு திரைக்காவியம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை சித்ரா, கிருஷ்ணா, சரவணா, மதுரை மீனாட்சி, திருச்சி வெலிங்டன், சேலம் பேலஸ், கோவை ராஜா, குடந்தை விஜயலட்சுமி, இலங்கை வெலிங்டன் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிய காவியம் நம் நாடு.

    இலங்கை கெப்பிட்டல் 98 நாள், பட்டுக்கோட்டை 96 நாள், மயிலாடுதுறை 96 நாள், தஞ்சை 85 நாள்,* ஈரோடு 85 நாள், கரூர் 85 நாள், வேலூர் 83 நாள், புதுச்சேரி 80 நாள் ஆகிய ஊர்களில் நூறு நாளை நெருங்கிய காவியம்.

    நம்நாடு திரைப்படம் நெல்லை 76 நாள், நாகர்கோவில் 76 நாள், திண்டுக்கல் 76 நாள், சென்னை சீனிவாசா 77 நாள் ஒடி சாதனை.

    சென்னை சரவணா திரையரங்கு திறந்து 100 நாள் ஓடிய முதல் காவியமாக நம் நாடு காவியம் திகழ்ந்தது.

    கும்பகோணம் நகரில் 1969 ல் 100 நாள் ஓடிய ஒரே திரைக்காவியம் ஆக நம் நாடு திரைக்காவியம் வெற்றி பவனி வந்தது.

    மதுரையில் மகத்தான தொடர் சாதனை புரிந்த நம்நாடு காவியம் மதுரை மீனாட்சியில் 133 நாட்களும், வெள்ளைக்கண்ணு 21 நாட்களும் , ஸ்ரீ கணேசா திரையரங்கில் 21 நாட்களும் ஓடி மொத்தம் 175 நாளில் 4 லட்சத்தை* கடந்து* காவியம் நம் நாடு ஆகும்..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •