Page 24 of 210 FirstFirst ... 1422232425263474124 ... LastLast
Results 231 to 240 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #231
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு சமயம் தலைவர் "பொம்மை" என்று அந்த நாளில் வந்த ஒரு சினிமா இதழில்.

    ஒரு ரசிகை ஒரு கேள்வி கேட்டு இருந்தார்...

    நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்...உங்கள் படத்தில் உங்களுடன் நடிக்க ஆசை முடியுமா என்று.

    அதற்கு தலைவர் பதில்.
    படிக்கும் போது அதில் கவனம் செலுத்தி நன்கு படித்து வெளியே வாருங்கள் ..நடிப்பது பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று.

    ஆனால் நம் வள்ளல் வாக்கு பின் ஒரு நாள் பலித்து விட்டது...அந்த பெண் நடிகை ஆனார்.

    தலைவருக்கே ஜோடி ஆக பின்னால் நடித்தார்.

    யார் அவர் என்றால்

    அவர் பெயர் 'பாரதி'...தலைவருடன் அவர் நடித்த படம் "நாடோடி".

    நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும் இல்லையா நண்பர்களே....நன்றி.

    வாழ்க எம்ஜியார் புகழ்...உங்களில் ஒருவன...நன்றி...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #232
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு சமயம் தலைவர் "பொம்மை" என்று அந்த நாளில் வந்த ஒரு சினிமா இதழில்.

    ஒரு ரசிகை ஒரு கேள்வி கேட்டு இருந்தார்...

    நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்...உங்கள் படத்தில் உங்களுடன் நடிக்க ஆசை முடியுமா என்று.

    அதற்கு தலைவர் பதில்.
    படிக்கும் போது அதில் கவனம் செலுத்தி நன்கு படித்து வெளியே வாருங்கள் ..நடிப்பது பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று.

    ஆனால் நம் வள்ளல் வாக்கு பின் ஒரு நாள் பலித்து விட்டது...அந்த பெண் நடிகை ஆனார்.

    தலைவருக்கே ஜோடி ஆக பின்னால் நடித்தார்.

    யார் அவர் என்றால்

    அவர் பெயர் 'பாரதி'...தலைவருடன் அவர் நடித்த படம் "நாடோடி".

    நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும் இல்லையா நண்பர்களே....நன்றி.

    வாழ்க எம்ஜியார் புகழ்...உங்களில் ஒருவன்...நன்றி...

  4. #233
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இந்த விழாவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி.
    பிரதமர் ராஜிவ் தலைமையில் சென்னையில் நடந்த கத்திப்பாரா நேரு சிலை திறப்பு விழா.
    __________________________________________

    புரட்சித்தலைவர் இறந்த போது ராஜீவ்காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தி:

    "மிகச் சிறந்த பாரதக் குடிமகனின் மரணத்துக்காக நாடு துக்கம் அனுசரிக்கிறது. எம்.ஜி.ஆர். சிறந்த தேசபக்தர். நாட்டுப்பற்று அவர் இதயத்தில் ஆழப் பதிந்து இருந்தது. இந்தியாவின் பாரம்பரியத்தில் அவர் பெருமிதம் கொண்டு இருந்தார். இந்தியாவின் ஒற்றுமையைப் புனிதமாகவும், ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை புனிதமான கடமையாகவும் அவர் கருதினார். இந்திய மக்களால் மட்டும் அல்லாமல் இலங்கை நாட்டு மக்களாலும் போற்றப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவரது மரணத்தில் என் சொந்த இழப்பு மிகப்பெரியது ஆகும். எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி, என் தாத்தா நேருவின் சிலை திறப்பு விழா ஆகும். அவரது முடிவுக்கு 36 மணி நேரத்துக்கு முன்பாக அந்த விழா நடந்தது. அப்போது என் குடும்பத்தின் 3 தலைமுறையினருடன் அவருக்கு உள்ள தொடர்பை எடுத்துக் கூறினார். இது அவரது விடைபெறும் நிகழ்ச்சி என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது," என ராஜீவ் காந்தி கூறி இருந்தார்...........

  5. #234
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகின் முதல் #எம்ஜிஆர். சிலை எது ?

    எம்.ஜி.ஆர். படங்களின் ஆஸ்தான கலை இயக்குநர், அ.தி.மு.க. கொடியை
    வடிவமைத்தவர் திரு அங்கமுத்து.
    அவர் 1988 ல் தன் கைப்பட தனது தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிளாஸ்டர் ஆப்
    பாரிஸில் சிலை வடித்து தன் திருப்திக்காக இல்லத்திலேயே வைத்திருந்தார். அங்கமுத்து காலமாகிய பின் அவர் வசித்த மாடி அறை பாதுகாக்கப்பட்டு வருகின்றது
    எம்.ஜி.ஆர். சிலையுடன், உலகின் முதல் சிலை என்ற பெருமையுடன்.

    அங்கமுத்துவின் அனுபவங்களை
    திரு கொற்றவன் பேட்டி கண்டு 'இதயக்கனி' யில் எழுதினார். அப்போதே எம்.ஜி.ஆர். சிலையும் படமெடுக்கப்பட்டு 'இதயக்கனி' யில் இடம் பெற்றது.

    Ithayakkani S Vijayan with Angamuthu Shanmugam........

  6. #235
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரவீந்தர் என்பவர் #எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.

    ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட்டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.

    பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.

    எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வரவில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.

    சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபதுலட்ச ரூபாய்க்கு சமம்.

    ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங்கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரியாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.

    எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டார்..........

  7. #236
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். நூல் வரிசை : 003

    “எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்”,

    நூலாசிரியர் – கே.பி. ராமகிருஷ்ணன்.,

    குறிப்பு : எம்.ஜி.ஆர். அவர்களின் மெயக்காபாளராக, அவரது பல படங்களுக்கு டூப்பாக, ஸ்டன்ட் நடிகராக 1957 முதல் அவர் அமரராகும் 1987வரை 30 ஆண்டுக்காலம் அவருடனேயே பயணித்தவர் என்பதால் இவர் சொல்லும் செய்திகள் அனைத்தும் அரிய பொக்கிஷமாக சுவையான நடையில் விறுவிறுப்பாக இருக்கும் அருமையான நூல்.

    நூல் விலை : Rs.100.00 (நான் வாங்கிய காலத்தின் விலை இது. தற்போதைய புதிய பதிப்புகளின் விலை மாறுபடலாம்)

    பதிப்பகம் : விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600002.

    தொலைபேசி – 044 28524074.

    தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நான் எம்.ஜி.ஆர். நூல்களை தேடித்தேடி சேகரித்து படிப்பவன். அவரை பற்றிய நூல்கள் 500க்கும் மேல் வெளியாகியுள்ள நிலையில், என்னிடம் 120 நூல்கள் மட்டுமே உள்ளது. என்னிடம் இருக்கும் நூல்களின் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விபரங்களையும் முடிந்தளவு தினம் ஒன்றாக வெளியிட முயற்சிக்கின்றேன். என்னை போன்ற எம்.ஜி.ஆர். நூல் சேகரிப்பாளர்களுக்கு இந்த நூல்களை வாங்க விரும்பினால் அவர்களுக்கு இந்த முயற்ச்சி பெரும் உதவியாக இருக்கும் என்ற நோக்கிலே. எம்.ஜி.ஆர். நூல்களை பற்றிய எனது மூன்றாவது பதிவாகும் இது.

    நீங்களும் உங்கள் சேகரிப்பில் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்களின் முன்புறத் அட்டை படத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பக, தொலைபேசி மற்றும் விலை விவரங்களையும் Commend பகுதியில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தயவு செய்து Inboxல் இட வேண்டாம். எல்லோரும் பார்க்கும் வகையில் Commend பகுதியிலியே வெளியிடுங்கள். இது நாம் எல்லோரும் நமக்குள் பரஸ்பரம் உதவி செய்வது போன்ற ஒரு நல்ல ஏற்பாடுதான். இன்றிலிருந்து நூல் வரிசை 120 வரும்வரை (அதாவது என்னிடம் இருக்கும் நூல் வரை) வேறு எந்த பதிவுகளும் இந்த முகநூலில் வராது.

    மேலும், நீங்கள் Commend பகுதியில் வெளியிடும் உங்கள் வசம் இருக்கும் எம்.ஜி.ஆர். நூல்கள் எனது சேகரிப்பில் இல்லை என்றால்.. அதையும் இதே போலவே வெளியிடுகிறேன் விபரங்கள் தந்த உங்கள் பெயருடனேயே. அதற்க்கு முன்புறத் அட்டைப்படம், நூல் பற்றிய விவரங்கள் அச்சிடபட்ட பகுதிகள் போட்டோ எடுத்து அனுப்புங்கள். ஆசிரியர் பெயர், விலை, பதிப்பக விலாசம், தொலைபேசி எண் எல்லாம் உள்அடங்கியதாக இருந்தால் மிகவும் நலம். இப்போது நான் வெளியிட்டது போலவே.

    முடிந்தளவு இதை SHARE செய்யுங்கள். அனைத்து எம்.ஜி.ஆர். பக்தர்களிடமும் சென்று சேர வசதியாகும்.

    நன்றி ஒரு எம்.ஜி.ஆர். பக்தனாக.........

  8. #237
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
    "நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம்.
    12/04/2020 அன்றைய தொடர்ச்சி ....
    இன்று
    04/05/2020

    நண்பர்களா? நயவஞ்சகர்களா?

    'திருடாதே' என்ற அந்தப் படத்தில் நான் நடிக்க விரும்
    தற்கும் அது விரைவில் வரவேண்டும் என்று எண்ணியதம்
    அந்தப்படக் கதையின் சிறப்பை நான் அறிந்திருந்ததே முக்கியக்
    காரணமாகும்.
    ஒருவனுக்கு நண்பர்கள் என்று இருப்பார்களானால், அவர்கள்
    அவனுடைய நல் வாழ்வுக்காக வேண்டி, கடிந்துரைக்க அவசியம்
    ஏற்பட்ட போதிலும் பின் வாங்காமல், அதனால் அவனுக்குத்
    தாங்கள் விரோதியாகும் நிலை ஏற்படுவதையும் பொருட்படுத்
    தாமல் அவனுக்குப் புத்திமதி கூறித் திருத்த முயன்றால்தான்
    ‘நண்பர்கள்' என்ற பெயருக்குப் பொருத்தமுடையவராவார்கள்.
    ஒரு பழமொழி உண்டு.
    எடுத்துச் சொல்லு,
    இடித்துச் சொல்லு!
    இரண்டும் பயன் தரவில்லை என்றால் அவனைத்தன்
    உள்ளத்திலிருந்து ('நண்பன்' என்ற தகுதியை விட்டு) 'எடுத்து
    எறி' என்பதே அது.
    நண்பன் செய்வது தவறுதான் என்று தெரிந்த பிறகும் அதைக்
    கண்டிக்காமல் பாராட்டிக்கொண்டே இருந்தார்களானால்
    நாளடைவில் அந்த நண்பன் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கே
    வந்து விடுவான்.
    தான் நினைப்பதுதான் சரி,
    தான் சொல்வதுதான் சரி!
    தான் செய்வதுதான் சரி,
    அதை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்;
    இல்லையென்றால் அவர்கள் தன்னை எதிர்க்கிறார்கள்;
    அலட்சியப்படுத்துகிறார்கள்; தனக்குக் கேடு செய்கிறார்கள்
    என்றே முடிவெடுத்து விடுவான். இந்த மாதிரி ஓர் எண்ணத்தை
    அவனிடம் உருவாக்குகிற அவர்கள் எப்படி நண்பர்களாவார்கள்?
    நயவஞ்சகர்கள்! நம்பிக்கைத் துரோகிகள்! இதைத் தவிர வேறு
    என்ன பெயரைச்சொல்லி அவர்களை அழைப்பது?
    ஏனென்றால், தனிப்பட்ட ஒருவனை மட்டுமா அவர்கள்
    கெடுக்கிறார்கள்! அந்தத் தனி மனிதன் புகழும் செல்வாக்கும்
    உடையவன் என்று வைத்துக்கொள்வோம். எல்லா வசதிகளையும்
    பெற்ற அவனுடைய செயல் பல கிளைகளாக விரிந்து,

    எங்கெல்லாமோ பரவி, ஒரு வலிய சமூகத்தையே கூடத் தீண்
    நாசப்படுத்திவிடக்கூடுமே!
    இதே போலத்தான் சினிமா நாடகக் கலைஞர்கள் தவறான
    ஒன்றை நியாயமென்று கருதி, தாம் எண்ணுவதுதான் சரி என்று
    முடிவு கொண்டுவிட்டால், அவர்களுடைய கலைத் திறமையின்
    வாயிலாக மக்கள் உள்ளத்தில் பதிய வைக்கும் அந்தக் கருத்துகள்
    ஒரு சமூகத்தையே தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் சக்கி
    படைத்தவைகளாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக்
    கொள்வது என்னைப் போன்றவர்களின் மிகப் பெரிய
    பொறுப்பல்லவா!
    அதுவும், ஓர் அரசியல் கொள்கையை உளமார ஏற்றுச் செயல்
    பட்டுக்கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களின் கண்
    காணிப்போ, கட்டுப்படுத்தும் பெரியவர்களின் எச்சரிக்கையோ
    இல்லாதிருந்தால் அவன் நிலை என்னாவது!
    ஆனால், அன்று எனது கருத்து நியாயமானது என்றுதான்,
    என்னிடம் எந்தப் பயனையும் எதிர்பாராத, என் வாழ்வில்
    அக்கறை கொண்ட நண்பர்களும் கருதினார்கள். எனவே,
    அவர்களும் அதை ஆதரித்தார்கள் எனினும், எனக்கு அந்த
    அனுபவம் ஏன் ஏற்பட்டது?

    சூழ்நிலை மாறிற்று!

    திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் என் விருப்பத்திற்கிணங்க, நான்
    கூறிய நிபந்தனையோடு, திருமதி சரோஜாதேவி அவர்களை
    அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
    துவக்கத்தில் நான் 'கால்ஷீட்' கொடுத்த போதெல்லாம்
    அவரும் வந்து நடித்தார்.
    இடையில் எனக்குக் கால்முறிவு ஏற்பட்டது. அதனால்
    என்னென்னவெல்லாம் ஏற்பட்டன என்பதைப் பிறகு
    சொல்கிறேன்.
    'திருடாதே' படம் என் நிலைமை காரணமாக எடுத்து முடிக்கப்
    படாமல் இருந்தது. எனக்குக் கால் குணமான பிறகு, இந்தப்
    படத்தை முடிக்கும் முயற்சி தொடங்கியபோது, ஏற்கெனவே
    அந்தப் படத்தில் புதுமுகமாக வந்து நடித்துக்கொண்டிருந்த திருமதி

    சரோஜாதேவி அவர்கள். அறிமுகமான, பிரபல நடிகை
    யாகியிருந்தார்.
    நான் தயாரித்த, 'நாடோடி மன்னன்' படம் வெளிவந்து
    அதனாலும் அவருக்குப் புகழ் ஏற்பட்டிருந்தது. வேறு பல
    நடிகர்களுடன் நடிக்கக்கூடிய வாய்ப்பையும் புகழையும் அவர்
    பெற்றிருந்தார்.
    அதனால் 'திருடாதே' படத்திற்கு நான் கொடுக்கிற கால்
    ஷீட்டை அனுசரித்து அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
    அவர் எப்போது 'கால்ஷீட் கொடுத்தாரோ, அதை அனுசரித்து
    நான் 'கால்ஷீட்' கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.
    "நீங்கள் ஏன் அவருடைய 'கால்ஷீட் டை அனுசரித்துக்
    கொடுக்க வேண்டும்?" என்று ஒரு கேள்வி கேட்கப்படலாம்!
    இந்தக் கேள்விக்கு நான் இரண்டொரு வாக்கியங்களில் பதில்
    சொல்லி விடமுடியாது.
    என்னுடைய அப்போதைய நிலைமையை அப்படியே படம்
    பிடித்துக்காட்டினால் தான் சரியான விளக்கமாக அது அமைய
    முடியும்.

    கால் முறிவுக்குப் பின்....

    நான் கால்முறிவு குணமாகி வெளிவந்தேன். அதை அடுத்து
    முதன் முதலாக நான் நடித்து வெளிவந்த ஒரு சமூகப் படம்
    குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை! அது மட்டுமல்ல.
    "எம்.ஜி. ராமச்சந்திரன் சமூகப்படத்தில் நடித்தால் ஓடாது"
    என்று கூடச் சிலர் துணிந்து சொல்லத் தொடங்கினர்.
    "இனிமேல் எம்.ஜி. ராமச்சந்திரன் ராஜ உடை போட்டுக்
    கொண்டு கத்தியைச் சுழற்றலாமே தவிர, அந்த மாதிரிப்
    படங்களுக்குத்தான் வரவேற்பு இருக்குமே தவிர, சமூகக் கதைப்
    படங்களில் நடிப்பதற்கு அவர் பொருத்தமானவரில்லை
    மக்களுக்கும் பிடிக்கவில்லை" என்ற முடிவுக்கும் சிலர் வந்திருந்
    தார்கள். இந்த முடிவுக்கு வரவேற்புத் தருவதுபோல, புதுப்
    படங்களில் நான் ஒப்பந்தமாகக் கூடிய நிலையும் ஏற்படவில்லை.

    நாடகத்தில் மீண்டும் நடிப்பது என்பதும் சுலபமில்லை
    ஏனென்றால் என் கால் முறிவுக்கு முன் என்னை வைத்து
    படமெடுத்துக்கொண்டிருந்த பலருடைய படங்கள்
    அப்படியப்படியே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அரை குறையாக
    இருந்தன. அவரவர்கள் பத்துலட்சம், பன்னிரண்டு லட்சம் என்று
    பணத்தைப் படத்தில் முடக்கியிருந்தார்கள்.
    இந்த சினிமாப் படம் இருக்கிறதே, அது ஒரு விந்தையான
    அதே நேரத்தில் ஒரு பயங்கரமான தன்மையை உடையது.
    முடிவடையாமலும், முடிவடைந்து வெளிவராமலும் தேங்கி
    விடுமானால் எவ்வளவு லட்சத்தை விழுங்கி அது
    உருவாகியிருந்தாலும், அது வெறும் 'ஸெலுலாய்ட்' என்றுதான்
    கருதப்படுமே தவிர, அதற்கு யாதொரு மதிப்பும் ஏற்படாது.
    முடிக்கப்பட்டு, வெளிவரும் படத்திற்குத்தான் மதிப்பு.
    ஆகவே, அரை குறையாக நின்றுவிட்ட என் படங்களுக்கு
    மதிப்பேற்பட வேண்டுமானால், அவை உடனே முடிக்கப்பட
    வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது.
    அவ்வாறு அவை முடிக்கப்பட வேண்டுமானால், அந்தப்
    படங்கள் வெளிவந்தால் நிச்சயம் வெற்றி அடையும் என்ற
    நம்பிக்கை, படத்தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, அந்தப்
    படங்களுக்குரிய பட விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட வேண்டும்!
    அப்படி அவர்களுக்கெல்லாம் நம்பிக்கை ஏற்பட வேண்டு
    மென்றால், நான் நடிக்கும் ஏதாவது ஒரு படம் உடனே
    வெளிவந்து, அது நன்றாக ஓடி, வெற்றியையும் பெற்றுத் தீர
    வேண்டும். அப்போதுதான் மீண்டும் என் படங்களுக்குப்
    புத்துயிரும் புதுவாழ்வும் உண்டாக முடியும் என்ற கட்டாய
    நிலைமை ஏற்பட்டிருந்தது.

    எதிர்ப்புக் கணைகள்

    இதற்கிடையில், பரணி ஸ்டூடியோவில், பிரபலமான ஒரு
    சிறந்த நடிகருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவின்போது
    பேசிய பலருள் சிலர், என்னைப் பற்றிச் சில வருந்தத்தக்க
    கூற்றுக்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களில் முக்கியமாகத்
    திரு. கண்ணதாசன் அவர்களால் பேசப்பட்ட பேச்சின் பெரும்
    பகுதி என்னைத் தாக்குவதாகவே அமைந்திருந்தது.

    திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
    "நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..........

  9. #238
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு முறை எம்.ஜி.ஆர்.மதுராந்தகம் ஏரி அருகே ஷூட்டிங் சென்று கொண்டிருந்தார்.

    கருக்கலைல் முதல் ஷாட்.

    கார் செங்கற்பட்டு அருகே போய் கொண்டிருந்த போது ஓரத்தில் ஒரு அம்பாசிடர் நின்று கொண்டிருந்தது.

    உடனே தன் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கிப் பார்த்தார்.

    உள்ளே எம்.எஸ்.சுப்புலட்சுமி.

    ''என்னம்மா இந்த நேரத்தில்?"
    ''மதியம் மதுரையில் சொந்தக்காரர் வீட்டில் க்ரகப்ப்ரவேசம், மாலை நெல்லையில் கச்சேரி, இரண்டு டயர் பஞ்சர் ''என்றதும், முதலில் தன் வண்டியில் அவர்களை ஏற்றி விட்டு 'நீங்கள் போங்கள்,நான் பார்த்து கொள்கிறேன்,உங்கள் வண்டி தயாராகி நேரே வீட்டுக்கே வந்து சேரும்''
    என்றார்.

    அவரை அனுப்பி விட்டு காத்திருந்தார்.

    ஒரு சைக்கிள் காரன் வந்தான்.

    அவனை நிறுத்தி எங்கே போறே?"

    ''மதுராந்தாகம் ஐயா என் பேரு மர்மயோகி நீங்கதான்யா வெச்சீங்க"என்றான்.

    ட்ரைவரை அழைத்து எம்.எஸ்.அம்மா காரை எப்படியாவது ரிப்பேர் செய்து கல்கி கார்டனின் விடச்சொல்லிவிட்டு மரம்யோகியின் சைகிளில்
    ஏறிக் கோண்டார்.

    மர்மயோகியை பின்னால் உட்கார வைத்து மதுராந்தகம் மண்டபத்திற்கு சென்றார்.

    மண்டபத்தில் மகிழ்ச்சி.

    மர்மயோகி சொந்தக்காரர் வீட்டுக் கல்யாணம் தான்.

    ''சைக்கிள் விலை கேட்ட ''எம்.ஜி.ஆர்.பத்து சைக்கிள் வாங்கி தந்து ஊரில் குறைந்த வாடகைக்கு விடச்சொன்னார்.

    அந்த நேரத்தில் மர்மயோகிக்கு பையன் பிற்ந்திருந்தான்.

    'புதுமைப்பித்தன்' வளர்ந்ததும் அவனை டாக்டர் ஆக்கிய எம்.ஜி.ஆர்.மதுராந்தக்கத்தில் அவனுக்கு க்ளினிக் வைத்துக் கொடுத்து மதுராந்தகம் மற்றும் இடங்கள் சுற்று வட்டார மக்களுக்கு இலவச சிகிச்சை ஏற்பாடு செய்தார்.

    அப்படிப்பட்டவர் எம்.ஜி.ஆர்...

    கச்சேரி முடிந்து சென்னை திரும்பிய எம்.எஸ்.மர்மயோகி குடும்பத்திற்கு டி.ஐ.சைக்கிள் ஏஜென்சிஸ் எடுத்து தந்தார்....

    நல்லவர்கள், நல்ல மனம் படைத்தவர்கள் அப்படித்தான்.....

    எழுத்தாளர்
    சுப்ரஜா ஸ்ரீதரன்...
    அவர்களின் வலை தளம் பக்கத்தில் இருந்து..........

  10. #239
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கொடை வள்ளல் எம்ஜிஆர் புகழ் வாழ்க

    ஜி.என்.வேலுமணியின் சரவணா ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்த படம் குடியிருந்த கோயில். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் ஜெயலலிதா, ராஜஸ்ரீ ஆகியோர் புரட்சித் தலைவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சொர்ணம் வசனம் எழுத கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 15 - 03 - 1968 அன்று படம் வெளியாகி 146 நாட்கள் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.

    எனக்கு 90களில் விவரம் தெரிந்த காலகட்டத்தில் இந்த படத்தை தியேட்டரில் காணும்பொழுது புரட்சித் தலைவரின் பெயர் போடும் போதும், புரட்சித்தலைவரின் அறிமுக காட்சியில் தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கும் ஆரவாரம் அடங்குவதற்கு நீண்ட நேரமாகும்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க...........

  11. #240
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் ஆட்சியில் இருந்தபொழுது மேலும் பல சாதனைகள் பதிவில் விடுபட்டுள்ளது..... அவைகள்...
    1 சைக்கிளில் இரண்டு பேர் செல்வதை அனுமதித்தது.
    2. ஆட்டோவில் மூன்று பேர்கள் செல்ல அனுமதித்தது.
    3 கிராமங்களுக்கு முதல்முறையாக பேரூந்து வசதி ஏற்படுத்தியது
    4 சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டத்தின்கீழ் கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு 1982 ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
    5. அதே போல் சென்னை நகரத்திற்கு உள் வட்ட சாலை, வெளிவட்ட சாலைகளுக்கு திட்டம் அனுமதி அளித்தது.
    6 பேரூந்தில் பெண்களுக்கு சரிபாதி இருக்கைகள் ஒதுக்கி ஆணையிட்டது.
    7 மதுரையில் தமிழ் சங்கம் அமைத்தது
    8 தமிழ்நாட்டில் பல கோயில்களில் ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லாமல் இருந்த நிலையை போக்கி வருமானமில்லாத எல்லா கோயில்களிலும் ஒரு வேளை பூஜைக்கு வித்திட்டார்.
    7 கல்விதுறையில் பல பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தினார் கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், ஆகியோர் பெயர்களில் அமைத்தார்.
    8 பொறியியல் படிப்பு நகர்புற மாணவர்களுக்கு மட்டும் என்பதை மாற்றி கிராமப்புற மாணவர்களையும் பொறியியல் பட்டதாரி ஆக சுய நிதி கல்லூரிகள் மூலம் வித்திட்டார்.
    9 குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிராம நகரங்களில் பல குடிநீர் திட்டங்களை அமல் படுத்தினார்
    10 சென்னை நகர் குடிநீர் பணிக்கு தனியாக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தார்.
    11 அதே போல் கோவைக்கு சிறுவாணி குடிநீர் திட்டத்தையும், மதுரைக்கு வைகை அணை குடிநீர் திட்டத்தையும் அமல்படுத்தினார்.
    112. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் சம்பந்தி உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •