-
9th September 2020, 08:51 AM
#681
Junior Member
Diamond Hubber
மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சாதனைகள்......*
1968 முதல் 1977 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களின் வரலாறு....
1968 ...*
ஒளிவிளக்கு 147 நாட்கள் குடியிருந்த கோயில் 133 நாட்கள் ரகசியபோலிஸ்115... 92 நாட்கள்*
1969.....*
மாபெரும் சாதனை படைத்த அடிமைப்பெண் 176 நாட்கள் நம்நாடு 133 நாட்கள்.
1970......*
மாபெரும் சரித்திரம் படைத்த மாட்டுக்கார வேலன் 177 நாட்கள் என் அண்ணன் 105 நாட்கள்*
எங்கள் தங்கம் 109 நாட்கள்.
தேடி வந்த மாப்பிள்ளை 70 நாள்.
1971......*
மாபெரும் சரித்திரத்தை ஏற்படுத்தி வசூலில் புரட்சி கண்ட ரிக்க்ஷாக்காரன் 161 நாட்கள் குமரிக்கோட்டம் 105 நாட்கள்*
நீரும் நெருப்பும் 84 நாட்கள்.
1972......*
மாபெரும் வெற்றியில்...*
இரண்டு அரங்கில் வெளியீட்டு ஒன்றில் ......*
நல்லநேரம் 112 நாட்கள் இதயவீணை 110 நாட்கள்*
நான் ஏன் பிறந்தேன் 70 நாட்கள் ராமன் தேடிய சீதை 84 நாட்கள் சங்கே முழங்கு 70 நாட்கள்.
1973 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சரித்திரத்தையும் வசூலையும் ஏற்படுத்திக் கொடுத்த உலகம் சுற்றும் வாலிபன்*
217 நாட்கள் ஓடி வெற்றியைப் படைத்தது.
பட்டிக்காட்டுப் பொன்னையா பதினோரு வாரங்கள் ஓடியது..........
-
9th September 2020 08:51 AM
# ADS
Circuit advertisement
-
9th September 2020, 08:52 AM
#682
Junior Member
Diamond Hubber
நாஞ்சில் மாநகரமான நாகர்கோயில் நகரில்*
இதயவீணை முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை தொடர்ந்து வெளியான வண்ணக் காவியங்கள் படைத்த வெற்றி சாதனைகள் சில.
இதயவீணை 55 நாட்களும்*
1973 உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 112 நாட்களும், பட்டிக்காட்டு பொன்னையா*
50 நாட்களும் ஒடியது.
1974 நேற்று இன்று நாளை*
77 நாட்களும்,**
உரிமைக்குரல் 83 நாட்களும்,*
சிரித்து வாழவேண்டும்*
50 நாட்களும் ஓடியது.
1975 நினைத்ததை முடிப்பவன்*
70நாட்களும், இதயக்கனி*
61 நாட்களும், பல்லாண்டு வாழ்க*
70 நாட்களும், நாளை நமதே*
40 நாட்களும் ஓடியது.
1976 நீதிக்கு தலைவணங்கு*
62 நாட்களும்,*
உழைக்கும் கரங்கள் 61 நாட்களும், ஊருக்கு உழைப்பவன்*
38 நாட்களும் ஒடியது.*
1977 நவரத்தினம் 35 நாட்களும், இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 60 நாட்களும்,*
மீனவ நண்பன் திரைப்படம்*
60 நாட்களை கடந்தும் ஒடியது.
1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 62 நாட்களும்*
ஒடி சரித்திரம் படைத்தது.
நாகர்கோவில் மாநகரில் தொடர்ந்து இப்படி 50 நாட்களையும் 75 நாட்கள் , 100 நாட்களையும்* கடந்து அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்களாக தொடர்ந்து சாதனை படைத்துள்ளது............
-
9th September 2020, 01:09 PM
#683
Junior Member
Diamond Hubber
"கப்பலோட்டிய தமிழன்" "பலே பாண்டியா" "கர்ணன்" "முரடன் முத்து" போன்ற தொடர் தோல்விகளால் துவண்டு போன பந்துலு "ஆயிரத்தில் ஒருவன்" மூலம் மீண்டு கொண்டிருந்த கால கட்டத்தில் முழுமையாக மீள வேண்டி குறைந்த
செலவில் ஒரு படம் தயாரித்து அதன்மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள விரும்பினார்.
ஏனென்றால் அவர் மிகுந்த செலவில் தயாரித்த "கப்பலோட்டிய தமிழன்" "கர்ணன்" முதலான படங்களை செலவே இல்லாமல் தயாரித்த "தாய் சொல்லை தட்டாதே" "வேட்டைக்காரன்" போன்ற படங்களின் மூலம் நிர்மூலம் ஆக்கிய "ஆயிரத்தில் ஒருவன்" அருகிலேயே இருந்து கொண்டு அதைப் போலவே செலவே செய்யாமல் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க விரும்பி பந்துலு தயாரித்த படம்தான் "நாடோடி".
படத்தில் எந்த விதமான ஆடம்பர காட்சிகளோ பெரிய செட்டிங்ஸ் போட வேண்டிய அவசியமோ இல்லாமல் எம்ஜிஆர் என்ற தனி முத்திரையை மட்டும் பயன்படுத்தி தான் எதன் மூலம் பணத்தை இழந்தோமோ அதன்மூலமே தன்னை மீட்க வேண்டி "நாடோடி" படத்தை தயாரித்து நினைத்தை முடித்தவர்தான் பந்துலு.
1966 ல் வெளியான படங்கள் மொத்தம் 9..எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையில் அதிக பட்சம் வெளியான படங்கள் வெளியான ஆண்டுகள் 1963 ம் 1966 ம். இரண்டு ஆண்டுகளிலும் தலா 9 படங்கள் வெளியானது. அதில் 1966 ம் ஆண்டு ஏப் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான வெற்றிப் படம்தான் "நாடோடி". ஜன 14 பொங்கலன்று வெளியான "அன்பேவா" இன்னும் ஓடிக் கொண்டிருக்க அடுத்தடுத்து வெளியான 4 வது படம்தான் "நாடோடி".
இன்றும் நிலை பெற்றுக் கொண்டிருக்கும் அருமையான பாடல்கள் ஒன்றே போதும் வெற்றிக்கு என்று நினைத்து எடுத்த படம். காலத்தை வென்ற பாடல்கள் மூலம் காலத்தை வென்றவனின் துணை கொண்டு குபேரனின் பொக்கிஷத்தை கவர்ந்து தான் இழந்ததை மீட்ட படம்தான் "நாடோடி". "நாடோடி"யின் மூலம் பந்துலுவின் இந்த முயற்சி அவரை ''பலே பந்துலு'' என்று சொல்ல வைத்தது.
ஒரு தயாரிப்பாளர் தன்னிறைவு அடைய வேண்டும் என்றால் அவர் தயாரித்த படத்தை அவரே தியேட்டர் வாடகை கட்டி ஓட்டுவதை விட நான்கு வாரங்கள் கூட்டத்தோடு ஓடினால் போதுமானது என்பதை உணர்ந்து தயாரித்த
படமே "நாடோடி". அவர் நினைத்தை விட மிகப்பெரிய வெற்றியை தலைவரின் முகத்தை காட்டி வென்றார் "நாடோடி"யின் மூலம்.
ஒவ்வொரு தயாரிப்பிலும் அவர் பட்ட
பாடுகளை நினைத்தால் கை சிவந்து கொடுத்த "கர்ணன்" கூட கலங்கி விடுவான் அடுத்து கொடுக்க பணமில்லாமல். படம் தீண்டாமையை ஒழித்து வள்ளல்தன்மையாலும் நல்ல மனதாலும் மக்கள் உள்ளங்களை வென்ற கதை.
தீண்டாமை நல்லவனை(நம்பியார்) கூட கெட்டவனாக்கி விடும் என்பதையும் 'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்பதை போல் நல்ல குணங்கள் தீண்டாமையை ஒழித்து கெட்டவரையும் நல்லவராக மாற்றும் என்பதையும் திரைக்கதை மூலம் எடுத்து சொன்ன விதம் அற்புதம். எம்ஜிஆர் இயல்புக்கு ஏற்ற அருமையான கதையம்சம் கொண்ட படம். நல்லவனை வில்லனாக காட்டியதால் அவர் செய்யும் வில்லத்தனம் எடுபடாமல் போனதில் ஆச்சரியமில்லை. படத்தின் வேகத்தை அது குறைப்பதோடு வில்லன் மீது பரிதாப உணர்வும் ஏற்பட செய்கிறது...
"ஆயிரத்தில் ஒருவனி"ல் ஆர்ப்பாட்டமான வசனத்தின் மூலம் புகழ் பெற்ற r.k.சண்முகம் நாடோடியில் ஆழமான வசனத்தின் மூலம் அதை தக்க வைத்துக் கொண்டார். திரையிட்ட இடங்களில் எல்லாம் முதல் 4 வாரங்கள் வெற்றி கொடி கட்டி பறந்தது.'உலகமெங்கும் ஒரே மொழி('ஒரே மனித ஜாதி) 'உள்ளம் பேசும் காதல் மொழி' என்று உடனே இரட்டுர மொழிதல் மூலம் தன்னுடைய கவித்துவத்தை பறை சாற்றும் விதம் கவிஞருக்கே உரிய தனித்துவம். எங்கு பார்த்தாலும் "நாடோடி"யின் பாடல்கள் காதுக்கு இனிமை சேர்த்ததோடு மக்களின் நாட்டுப் பற்றையும் வளர்த்தது.
'நாடு அதை நாடு' 'அன்றொரு நாள்' 'ரசிக்கத்தானே இந்த வயது" 'திரும்பி வா' போன்ற பாடல்கள் மக்களை தன் பக்கம் திரும்ப வைத்த படம்தான் "நாடோடி". முதல் பாடல் காட்சியை தவற விட்டவர்கள் மன்றலில் தென்றலை இழந்ததை போல உணர்வார்கள். அந்தப் பாடலுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். பாடல் இனிமையிலும் இனிமை, அதனினும் இனிமை இசை, அதனினும் இனிமை எம்ஜிஆர் புதுமுகம் பாரதியின் இளமை தோற்றம். இப்படி. அடுக்கிக் கொண்டே போகலாம்.
"நாடோடி"யாய் மாறிய பந்துலுவை மீண்டும் நாடு போற்றும் செல்வந்தராக மாற்றிய படம்தான் "நாடோடி" என்று சொல்லலாம்.
சென்னை பிளாசா பிராட்வே உமாவில் 57 நாட்களை கடந்தது. தமிழகத்தில் மற்ற ஊர்களிலும் 50 நாட்களை எளிதில் கடந்து சாதனை செய்தது. . மதுரை திருச்சி கோவை சேலத்தில் 10 வாரங்கள் ஓடி வெற்றி கொடியை உயர்த்தி பிடித்தது.
'c' சென்ட்டரில் அடிக்கடி வெளியாகி வெற்றி பெற்ற உன்னதமான படம்தான் "நாடோடி"..........
-
9th September 2020, 01:13 PM
#684
Junior Member
Diamond Hubber
#அதனால் #தான் #அவர் #கடவுள்
புரட்சித்தலைவரை ஒரு காலத்தில் தூற்றியவர்கள் இப்போது அவரது பெருமையை உணர்ந்து வாழ்த்துகிறார்கள். இந்த பெருமை எல்லாருக்கும் கிடைக்காது...
தர்மம் தலைகாக்கும் படத்தில் தர்மம் தலைகாக்கும்... என்ற பாடலில் ‘மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல நீங்கிவிடும். நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்’ என்று புரட்சித் தலைவர் பாடுவார்.
அதுபோல புரட்சித் தலைவரை நல்லபடி வாழவிடாமல் செய்யும் முயற்சியில் (அப்போதே அதிலும் இவர்கள் தோல்விதான் கண்டார்கள்) இறங்கியவர்கள் இப்போதும் அவர் வாசலில் வணங்கி நிற்கிறார்கள். அதனால்தான் புரட்சித் தலைவர் சாதாரண மனிதர் இல்லை. மனித உருவத்தில் வந்த தெய்வமாக விளங்குகிறார்.
மனித வடிவில் வந்து வாழ்ந்து காட்டிய தெய்வம் புரட்சித் தலைவர், எதிரிகள் உட்பட எல்லாருக்கும் அருள்தருவார்.
"ஒருபுறம் பகுத்தறிவு பேசிக்கொண்டு, மறுபுறம் சமாதியில் பாலூற்றுபவர்களுக்குக்கூட ஆன்மசுகத்தை அருளுகிறார். அவர் எல்லாவற்றையும் கடந்தவர்... அதனால்தான் அவர் கடவுள்...".........
-
9th September 2020, 01:15 PM
#685
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். செய்த சாதனைகள் எல்லாம் தெரியுமா?
எம்.ஜி.ஆர். என்றால் திரைப்பட நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல நிர்வாகியும்கூட. அவர் காலத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையா..?
1972– ம் ஆண்டு அக்டோபர் 8 – ம் தேதியன்று. பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;
”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றி கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. லஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.*
கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்பபணியாய் இருக்கும்.*
இதையும் படிங்க
அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!” என்றுஎம்.ஜி.ஆர். முழக்கமிட்டார். லஞ்ச, ஊழல் இல்லாத ஆட்சி அமையவேண்டும் என்றஎம்.ஜி.ஆரின் எண்ணம்தான் அதிமுகவாக உருவெடுத்தது.*
அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில்மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்திபுதுமை செய்தார்.தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனைகடைசிவரை காப்பாற்றவும் செய்தார்.**
1977 முதல் 1987 வரைஎம்.ஜி.ஆர். ஆட்சி – மூன்று முறை வெற்றி.* அறம் சார்ந்த அரசியல்அரங்கேறியது. குடும்ப அரசியல்கிடையாது
கட்சிக்காரர்கள்,நிர்வாகிகள், அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதால் அச்சத்துடன் இருந்தனர். பதவிபறிக்கப்படலாம்,என்பதால் தவறு செய்யப் பயந்தனர்.
அதிகாரிகளுக்கு முழுஅதிகாரம் இருந்தது. எவரேனும் ஆளுமை செலுத்த முயன்றால் – கார்டனுக்கு சொல்லிவிடுவோம்– என்றனர்.
ஒரு தவறு செய்தால் அதைதெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று சொல்லியதைப் போலவே தவறுசெய்தவர்களை தண்டித்தார்., பதவிகளில் இருந்து தூக்கினார்.
எம்.ஜி.ஆர்.ஆட்சிக்குப் பிறகு லஞ்சத்தில் பேரம் பேசுவது, பங்கு போடுவது, எல்லை பிரிப்பதுபோன்ற முறைகேடுகள் நிகழ்ந்தது கண்கூடு.
மக்கள் நலன்
நாடோடி மன்னன்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய மக்களாட்சியை, தனது ஆட்சியில்கொடுத்தார். தேச நலனைவிட மக்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை பயக்கும் திட்டம்’ என்று சொன்னதைப் போலவே,ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் நலன் முன்னிறுத்தப்பட்டது.
பசிப்பிணியைஉணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்றுசத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். இந்த திட்டம்தான் தமிழகத்தின் கல்வித்தகுதியைவானளவுக்கு உயர்த்தியுள்ளது.
சத்துணவுத்திட்டத்தில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயாக்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனால்ஆயிரக்கணக்கான குடும்பத்தில் வறுமை விலகியது.
- ரேஷன்கடைகளில் அரிசி விற்பனையை சீர்படுத்தினார். அரிசி விலையை 1.75 ரூபாய்க்குகட்டுப்படுத்தினார். ரேசன் கடையில் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதை உணர்ந்தஎம்.ஜி.ஆர். தமிழ்நாடெங்கும் 20 ஆயிரம் ரேஷன் கடைகளைத் திறந்து 20,000 பேருக்குவேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால்தான் என்றென்றும் ஏழைகள் இதயத்தில் எம்.ஜி.ஆர்.வாழ்ந்தார்.
ஒரு விளக்குத் திட்டம்எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டது. குடிசையில் வாழும் மக்களும் மின்சாரம் பெறவேண்டும்என்பதற்காக ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு இலவச மின்சார விளக்கு பொருத்துவதைலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். இதுவே பின்னர் இருவிளக்கு திட்டமாக மாற்றம்அடைந்தது.
பள்ளிமாணவர்களுக்கு படிப்பில் எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர்.உறுதியாக இருந்தார். அதனால் இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், இலவச காலனி,இலவசபற்பொடி என்று ஏகப்பட்ட உதவிகள் செய்து படிக்கவைப்பதில் அக்கறை செலுத்தினார்.
முதியோர் மீதுஎம்.ஜி.ஆருக்கு உள்ள அக்கறை அளப்பரியது. அதனால் முதியோருக்கு நாள்தோறும் மதியஉணவு, ஆண்டுக்கு இரண்டு முறை இலவச உடை, மாத உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, ஒவ்வொருவீட்டுக்கும் தலைமகனாக எம்.ஜி.ஆர். விளங்கினார்.
விவசாயிகள்,நெசவாளர்களுக்கு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், பயிர் பாதுகாப்பு, விதை மானியம்போன்றவையும் புரட்சித்தலைவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
படித்து வேலையில்லாதஇளைஞருக்கு ஊக்கத்தொகை எம்.ஜி.ஆர். காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வீட்டுக்குஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை எம்.ஜி.ஆர். லட்சியமாகக்கொண்டிருந்தார். இதற்காகவே மாதம் 9,000 வருமானத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று சட்டம் போட்டார். ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புதோன்றவே, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து சட்டத்தை வாபஸ் பெற்றார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு31% என்ற அளவில் இருந்த இட ஒதுக்கீட்டை 50% என உயர்த்தியவர் புரட்சித்தலைவர். இடஒதுக்கீடு 50%க்குள் இருக்க வேண்டும் என்று வரையறை செய்திருந்தபோதும், மக்கள் தொகைகணக்கிட்டு 50% பிற்படுத்தப்பட்டோர், 18% தாழ்த்தப்பட்டோர் என 68% இட ஒதுக்கீடுகொண்டுவர காரணமாக இருந்தார். இதனை பின்னர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம்இயற்றி சட்டபூர்வமாகக் கொண்டுவந்தார்.
மக்கள் மனம் அறிந்தவர்
எம்.ஜி.ஆர். காலத்தில்41 கிளாஸ் என்ற சந்தேக கேஸ் போடும் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதன்படி சைக்கிளில் டபுள்ஸ் செல்பவர்களை மடக்கி கை ரேகை பதிந்து, ரிமாண்ட் செய்துவந்தனர்.இதனால் கிராமத்து ஏழைகள்தான் பாதிக்கப்பட்டனர். கணவனுடன் மனைவி சைக்கிளில் செல்ல முடியவில்லை,அப்பாவுடன் மகன் சைக்கிளில் செல்ல முடியவில்லை. இந்த சட்டத்தை நீக்கினார்புரட்சித்தலைவர். இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்கவேமுடியாது.
* தமிழர்நலன் பாராட்டுவதில் எம்.ஜி.ஆரை எவரும் விஞ்சமுடியாது. ஈழத்தில் விடுதலைப்புலிகள்வலிமை பெறவும், வளர்ச்சி அடையவும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் ஏராளம். அதனால்தான்உலகமெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் வீட்டில் இன்றும் எம்.ஜி.ஆர். படம்தொங்குகிறது. பிரபாகரனுக்குக் கொடுக்கும் மரியாதையை எம்.ஜி.ஆருக்குக் கொடுத்தனர்.தமிழ் ஈழம் உருவாகவேண்டும் என்பதற்காக எதையும் செய்துகொடுக்கும் துணிச்சல்காரராகஎம்.ஜி.ஆர். இருந்தார்.
காரியம் சாதிப்பதில் வல்லவர்
பல அரசுகளால்பேசப்பட்டுவந்த கிருஷ்ணா நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கியவர் எம்.ஜி.ஆர்.சாதுர்யமாக என்.டி.ராமாராவுடன் பேசி ஒப்பந்தம் போட்டு காரியம் சாதித்தார்.
ரேஷன் அரிசி தருவதில்மத்திய அரசு சுணக்கம் காட்டுவது தெரிந்ததும் 1983-ம் ஆண்டு மெரினா பீச்சில்உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்தார்.
விமர்சனங்களை மதிப்பவர்
மதுவை தமிழகத்தில்இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கடுமையான சட்டங்களைக்கொண்டுவந்தார் முதல் முறை மதுவிலக்கு சட்டத்தில் பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை… இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, மூன்றாவது முறைபிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவசர சட்டம் கொண்டுவந்தார். ஆனால்மக்களும் எதிர்க்கட்சிகளும் இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் மதுவிலக்கைரத்து செய்தார்.
தனியார்களுக்கு கல்லூரிவழங்கியபோது கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால் எதிர்காலத்தில் தமிழர் நலனுக்கு இதுதான் சரியான திட்டம் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தீர்க்கதரிசனம் இன்றுஉண்மையாகிவிட்டது. உலகம் முழுவதும் ஐ.டி. துறையில் தமிழர்கள் சாதனை புரிந்துவெற்றிகரமாகத் திகழ்வதற்குக் காரணம் இந்த தனியார் பொறியியல் கல்லூரிகள்தான்.*.........
-
9th September 2020, 01:16 PM
#686
Junior Member
Diamond Hubber
இலங்கை திருநாட்டில் மக்கள் திலகம் திரைப்படங்கள் படைத்த மகத்தான வெற்றிகளை பல விதமாக பிரிக்கலாம்.....* 1950 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களின் சாதனை ஒட்டம்....
இலங்கை நாட்டில் இரண்டு பிரிவுகளான கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் பல பகுதிகளில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் திரையிடப்பட்டு 95 சதவீதமான வெற்றிகளை 1977 ஆம் ஆண்டு மீனவ நண்பன் திரைப்படம் வரை பெற்றுள்ளார்.
பழைய திரைப்படங்களில் பல திரைப்படங்கள் 50 நாள்* 5 வாரம்*
6 வாரம் கடந்தும் 100 நாட்களை வெற்றிகொண்டும்....உள்ளது.
பல ஏரியாக்களில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே அதிக அளவில் 100 நாட்கள் ஓடி இரண்டு திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்று சரித்திரம் படைத்துள்ளது.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மூன்று ஏரியாக்களில் வெவ்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. தலைநகர் கொழும்பில் உள்ள கேப்பிட்டல் உலகம் சுற்றும் வாலிபன் 203 நாட்களும், அதன் பின்பு விஜயா அரங்கில் 116 நாட்களும் ஒடியுள்ளது..
எந்த நடிகரின் நூறாவது திரைப்படமும் இங்கே 50 நாட்கள் கூட வெற்றி பெறவில்லை ஆனால் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு திரைப்படம் இலங்கை கொழும்பில் 162 நாட்களும், யாழ்ப்பாணம் ராஜாவில்* 161 நாட்கள் ஓடி சாதனை பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல நான்காவது வெளியீட்டில் 1979 ல் இக்காவியம் 100 நாளை கடந்தது சாதனையை பெற்றுள்ளது...........
-
9th September 2020, 01:17 PM
#687
Junior Member
Diamond Hubber
இப்படி இலங்கை நாட்டில் பல விதமான வெற்றிகளை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பெற்றுள்ளதை அடுத்து வரும் பதிவுகளில் விபரமாக பதிவிடுவோம்.*
நாட்டில் 100 நாட்களை உண்மையாக* வெற்றி கண்ட திரைப்படங்கள் பற்றிய பட்டியல்...
மந்திரிகுமாரி ,மர்மயோகி*
100 நாளை கடந்தது.
என் தங்கை 100 நாளை கடந்து ஓடியது.*
மலைக்கள்ளன் 100 நாட்களை கடந்து ஓடியது*
அலிபாபாவும் 40 திருடர்களும் மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்.
100 நாளை கடந்தது.
நாடோடி மன்னன்*
திரைப்படம் பல அரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு 5 திரையரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் ஓடியதாக தகவல்கள். இந்த தகவல்கள் கிடைத்தவுடன் பதிவிடப்படும்.
1961 ல் திருடாதே**
தாய் சொல்லை தட்டாதே 100 நாள்*
1965-ல் எங்க வீட்டு பிள்ளை* ஆயிரத்தில் ஒருவன்... 100 நாள்**
1967- ல் காவல்காரன் திரைப்படம் இரண்டு திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சாதனை பெற்றது.
1968 ல் ஒளிவிளக்கு திரைப்படம் இரண்டு மிகப்பெரிய அரங்குகளில் 150 நாட்களை*
கடந்து சாதனை.*
1969 ல் அடிமைப்பெண், நம் நாடு* 1970 ல் மாட்டுக்கார வேலன்* இரண்டு திரையரங்குகளில்*
100 நாட்களை வெற்றி கொண்டது.
1972 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் மூன்று திரைப்படங்கள் 100 நாட்களை வெற்றி கொண்டு சாதனை படைத்துள்ளது*
நல்லநேரம் திரைப்படம்*
5 அரங்கில் 50 நாட்களை கடந்து 100 நாட்களை செல்லமகால் அரங்கில் ஓடி வெற்றி கொண்டது.*
அடுத்து ராமன் தேடிய சீதை திரைப்படம் கெப்பிட்டலில் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது.*
இதயவீணை திரைப்படம் நவா திரையரங்கில் 100 நாள் ஓடியது..........
-
9th September 2020, 01:19 PM
#688
Junior Member
Diamond Hubber
எம் ஜி ஆர் திமுக வில் இருந்து நீக்கப்படுகிறார். உலகம் சுற்றும் வாலிபன ரிலீசாக போகிறது. 1973ல் திமுக சார்பில் மதுரையில் மணிநகரம் பகுதியில் திமுக பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க இரும்பு மனிதர் என அழைக்கப்படும் மதுரை முத்து அவர்களும், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கமும், எஸ்எஸ்ஆரும்...ஆற்றிய உரை...
மதுரை முத்து: "அடேய் ராமச்சந்திரா... நீ சினிமாவுல தான் சண்ட போடுவ... ஆனா நா நிஜத்துல சண்டியர்... கலைஞரையா கணக்கு கேக்குற... உன்னை வாழவே விடமாட்டேன். உன் படம் ரிலீஸ் ஆனா நா சேலைய கட்டிக்குறேன்".
டேய் ரசிக குஞ்சுகளா. உங்காளு கையில வச்சு சண்ட போடுறது ஒரிஜினல் கத்தி இல்லடா. வெறும் அட்டக்கத்தி. இனியாவது திருந்துங்கடா.. "(எம் ஜி ஆர் கட்சியை விட்டு விலகும்போது திணமணி கார்ட்டூன்... எம் ஜி ஆர் அண்ணா படத்தை எடுத்துக்கொண்டு இனி இதற்கு இங்கு வேவையில்லை என்கிறார். கருணாநிதி பக்கத்தில் இருந்த மதுரை முத்துவை காட்டி"இந்த அண்ணா என்னை காப்பார் "என்பது போல இருந்தது. மதுரை முத்து அந்த அளவு செல்வாக்கானவர்)
எஸ்எஸ்ஆர்: "அன்றைய தினம் ராஜாதேசிங்கு படத்தில் பத்மினியுடன் நான் நெருங்கி நடிக்க கூடாது என எம்ஜிஆர் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா? "
(மறுநாள் #சோ தன் 'துக்ளக்' புத்தகத்தில் "எஸ்எஸ்ஆர் சார். நீங்களும் பத்மினியும் நெருங்கி நடிப்பதை எம்ஜிஆர் தடுத்தாரா? எப்பேர்ப்பட்ட துரோகம் இது. இதனால் இந்த நாட்டுக்கே பேராபத்து வந்துவிடுமே!! இதை இந்த நாடு மறந்தால் இந்த நாட்டுக்கு விமோச்சனம் ஏது?" என கிண்டலடித்தார்)
திண்டுக்கல் எம். பி. ராஜாங்கம் :" "எனதருமை நண்பர் எஸ்எஸ்ஆரை சினிமாவில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜிஆர் தான். எங்களை பகைத்துக் கொண்டதால் இனி எம்ஜிஆர் அரசியலில் மட்டும் அல்ல. சினிமாவிலும் வாழ முடியாது"...
இதே ராஜாங்கம் அந்த கூட்டத்தை முடித்து திண்டுக்கல் திரும்பிப் செல்லும்போது தான் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிறது. அதிமுக மாயத்தேவரை நிறுத்தி மாபெரும் வெற்றி பெற்று திமுக வேட்பாளர் பொன்முத்துராமலிங்கத்தை (வேட்பாளர் தேர்ந்தெடுத்தது மதுரை முத்து) டெபாசிட் இழக்க செய்தது. எந்த ராஜாங்கம் எதிர்த்தாரோ அவரே எம்ஜிஆரின் முதல் வெற்றிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்.
கருணாநிதி எம் ஜி ஆர் செல்வாக்கு காரணமாக அதிமுக வென்றது என்பதை மறைக்க "மதுரை மாவட்ட தலைமை வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது". என மேயர் முத்து மீது பழிபோடுகிறார். முத்துவுக்கு கோபம் வருகிறது. "தேர்ந்தெடுத்த போது மறுப்பு சொல்லாமல் தோற்றவுடன் என் மீது பழி போட்டால் என்ன நியாயம் என பகிரங்கமாக கேட்டார். உடனே கருணாநிதி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் சொல்வதை கேட்க வேண்டாம் என செக் வைக்க நொந்து போன மேயர் முத்து எம் ஜி ஆரிடமே சரணடைகிறார். தலைவரும் முத்துவை கட்டித் தழுவி வரவேற்கிறார். அதிமுகவிலும் மதுரை முத்துவே மேயரானார். எஸ்எஸ்ஆரும் தன் மனைவி விஷயத்தில் கருணா நடந்து கொண்டதை பார்த்து மனம் நொந்து எம் ஜி ஆர் இடம் சரணடைகிறார். 1977 கழகம் வெற்றி பெற அதே மதுரைமணிநகரத்தில் மேயர் முத்து தலைமையில் கூட்டம். மேயர் முத்துவே இந்த தகவல்களை எல்லாம் கூறி "சென்ற கூட்டத்தில் இதே இடத்தில் நாங்கள் மூவருமே(ராஜாங்கம்,முத்து,எஸ்எஸ்ஆர்) எம்ஜிஆரை வாழ விட மாட்டோம் என முழங்கினோம். காலத்தின் கட்டளை படி நாங்க மூணுபேருமே எம்ஜிஆரிடம் சரணடைந்தோம்"
தர்மம் தலைகாக்கும் படத்தில் "நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்"என்ற எம்ஜிஆர் வார்த்தை இப்படி பலித்தது.
படித்தேன். பகிர்ந்தேன்...........
-
9th September 2020, 01:23 PM
#689
Junior Member
Diamond Hubber
#காட்டாற்று #வெள்ளத்திற்கு #மணலால் #அணைகட்டமுடியுமா???
ஒரு மனிதரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டுமென்றால் ஏதோ அவரின் ஒரு குணத்தையோ, கண்டுபிடிப்பையோ, தேசப்பற்றையோ, கொடைத்தன்மையையோ, வீரத்தையோ, அரசியலையோ, கவித்தன்மையையோ, நடிப்புத்திறனையோ... Etc... இப்படி ஏதேனும் ஒரிரு குணங்களைப் பற்றித்தான் எழுதமுடியும்...
ஆனால் மேற்கூறிய அனைத்து நற்குணங்களைப் பற்றி தனித்தனியாக நூல்கள் எழுத இயலுமென்றால் அதை, உலகிலுள்ள ஒட்டுமொத்த நற்குணங்களின் பிறப்பிடமாகத் திகழ்ந்த நம்ம வாத்தியாரைப் பற்றி மட்டும் தான் எழுதமுடியும்...
வாத்தியாரைப் பற்றி 1000 புத்தகங்களோ, அல்லது அதற்கு மேற்பட்ட புத்தகங்களோ எழுதலாம் என்று வரையறுப்பதெல்லாம் காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவது போலாகும்.
பொன்மனச்செம்மலைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல புத்தகங்களாக எழுதலாம். ஆராய்ச்சி செய்தால் பல முனைவர் பட்டங்கள் வெல்லலாம்!
‘#புரட்சித்தலைவர், #பொன்மனச்செம்மல், #மக்கள்திலகம்’, #வாத்தியார்'! என்ற இவருக்குரிய முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!
பாலசுப்பிரமணியன்,
சென்னை!............
-
9th September 2020, 07:20 PM
#690
Junior Member
Platinum Hubber
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/08/20அன்று சொன்ன*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------
பழம்பெரும் நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்றவர்கள் திரையுலகில் புகழின் உச்சியில் இருந்தாலும் கூட , தங்களுக்கான மக்களின் ஆதரவை திரட்டிக் கொண்டோ, அந்த ஆதரவை தக்க வைத்து கொள்வதற்காக பலவித மான வியூகங்கள் எதுவும் வகுக்கவில்லை . அவர்களெல்லாம் நடிகர்கள் என்ற நிலையில் மட்டுமே* இருந்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். நடிகராக இருந்ததோடு மட்டுமல்லாமல் ,நடிப்பு என்பது ஒரு தொழில், அந்த தொழில் மூலம் பலரோடு அறியப்பட வேண்டும்* . பலபேர் நம்மை அறிந்து கொள்வதால் நம்மீது பாசம் கொள்கிறார்கள் . அந்த பாசத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் சம்பாதிக்க வேண்டும் .அந்த சம்பாதித்ததை யெல்லாம் பலருக்கு தானங்கள், தருமங்கள் செய்ய வேண்டும் என்கிற வள்ளல் தன்மையை* கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனிடம் தான் கற்று அறிந்ததாக பல மேடைகளில் பேசியுள்ளார் .*
எம்.ஜி.ஆர். அவர்கள்* ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நன்கு அறிமுகம் ஆகி இருக்கும்போது வெளியூருக்கு ரயிலில் 3 வது வகுப்பில் பயணம் செய்யும் போது*தனது அடர்த்தியான பாகவதர் கிராப் வைத்த தலைமுடி மூலம் தன்னை யாரும் அறிந்து கொள்ளாத வகையில் தலையையும், முகத்தையும் மறைத்தவாறு துணியால் மூடிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார் .செம்பை பாகவதர் அவர்கள் ஏன் ஒரு கலைஞன் தன் முகத்தை மூடி மறைத்து ஓடி ஒளிந்து* பயணிக்க வேண்டும் கலைஞன் என்பவன் மக்களுக்கான சொத்து .மக்களோடு பழகினால்தான அவர்களுடைய ரசனை தெரியும் மக்களுடைய ஆதரவை பெற முடியும் நீங்கள் இப்படி ஓடி ஒளிந்து கொள்ள கூடாது .முகத்தை மறைத்துள்ள* துண்டை எடுங்கள் . நன்றாக உட்காருங்கள்*,மக்களிடம் நன்றாக பேசுங்கள் .இங்குள்ளவர்களை நன்றாக பாருங்கள். நீங்கள் பார்ப்பதால் அவர்கள் உங்களை பார்ப்பார்கள், பேசுவார்கள் .அதனால் ஏற்படும் சந்தோசம் இருக்கிறதே ,அந்த சந்தோசம் மக்களுக்கு தருபவராக நீங்கள் இருப்பீர்கள் என்று கூறி மக்களுடன் சகஜமாக பழகுங்கள்*என்று அந்த தயக்கத்தில் இருந்து விலகி, வெளியே வருமாறு செய்தவர் செம்பை பாகவதர் .
பொதுவாக ஒரு படத்திற்கு பெயர், தலைப்பு வைப்பது, நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுப்பது, வசன ஆசிரியர், ஒளிப்பதிவாளர் , எடிட்டர் ,கவிஞர்கள், இசை அமைப்பாளர் ஆகியோர் தேர்வு செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும் எம்.ஜி.ஆர். தலையிடுவதாக குற்றச்சாட்டு இருந்தது என்று சொல்வார்கள். எம்.ஜி.ஆர். தலையிட்டார் .காரணம் .இவ்வளவு பெரும் பொருட்செலவில் நாம் தயாரிக்கும் படம் மக்களுக்கு சென்றடையும் போது ,ஏதாவது ஒரு வகையில்*அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தரக்கூடிய**நல்ல கருத்துக்கள், நல்ல பாடல்கள் ,, படிப்பினைகள்,*.செய்திகள் இடம் பெற்றிருக்க வேண்டும் . வெறும் பொழுது போக்கு அம்சங்கள் மட்டும் இருந்தால் போதாது என்பதில் தீர்மானமாக இருந்தார் .* அதனால்தான் அவரது ஒவ்வொரு படமும் ஒரு பாட புத்தகமாக திகழ்கிறது .ஒரு நோயாளி படுக்கையில் இருந்தால் கூட அவரது படத்தை பார்த்ததும் எழுந்து உற்சாகமாக நடமாட முடிகிறது .
முன்பெல்லாம் அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் துவங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைத்தட்டில் இருந்து ஒலிக்கும் . ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர்* பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ செல்லும்போது இசைத்தட்டை போட வேண்டாம் . இங்குள்ள மாணவ மாணவியரை சொந்த குரலில் பாட சொல்லுங்கள் என்று கூறி* ரசிப்பார் .* அதாவது தமிழ்த்தாய் வாழ்த்து பொறுத்தவரையில் மாணவ பருவத்தில் அவர்கள் சொந்த குரலில் பாடும்போது அந்த வாழ்த்து செய்தி அவர்களின் மனதில் நன்றாக பதியும், என்று அந்த வாழ்த்து செய்திக்கு*மதிப்பு அளித்தவர் எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் மலையாளி என்று பேசப்பட்டது .அவர் தமிழ் நாட்டை* ஆள விடக்கூடாது .நாட்டை விட்டு விரட்ட வேண்டும்*என்று எதிர்க்கட்சியினர் பேசினர்* அந்த நேரத்தில்*பத்திரிகை நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பேட்டியில் என்னை மலையாளி என்று சொல்கிறார்கள் .இதை கேட்ட எனக்கு சிரிப்புத்தான் வருகிறது .* பஞ்சாபில் வாங்கிய மாடு ஒன்று, இங்குள்ள தமிழர்கள் வீட்டில் வளரும்போது இங்குள்ள புல்லை தின்று வாழ்கிறது .பால் தருகிறது .அந்த பசு மாடு பஞ்சாபில் சென்றா பால் கறக்கிறது*அதுபோல தான் இந்த ராமச்சந்திரன் .தமிழர்களூக்கான பசும்பால் தருவதுபோல்*இங்கு வாழ்கிறேன் .* அப்படி தமிழர்களுக்கு பயன்படும் ஒரு கருவியாக* உதித்தவர் எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கும் முன்பு* அவருக்கு கொள்கை இல்லை.கோட்பாடு இல்லை .கட்சி நடத்தும் நிர்வாக திறமை இல்லை .அதனால்தான் கட்சி தொடங்க தயக்கம் காட்டுகிறார் என்று புகார்கள் எழுந்தன .* கட்சி ஆரம்பித்த பின்னர் வெளியான நேற்று இன்று நாளை படத்தில் ஆளும் கட்சியை சாடியவாறு கடுமையான வசனங்கள், பாடல்கள் இருந்தன . நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து என்ற பாடலில் ,ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட்ட பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே .மக்கள்* நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்* தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்*ஊருக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் .தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார் இந்த படத்தின் வசனங்கள், பாடல்கள் , தி.மு,க. கட்சியை பாதிக்கும் என்பதால் அப்போதைய முதல்வர் கருணாநிதி படத்திற்கு பலவிதமான இடையூறுகள் ஏற்படுத்தினார் . சயானி அரங்கில் வெள்ளித்திரை கிழிக்கப்பட்டது அரங்குகளில்* *டிக்கட் வாங்க நிற்பவர்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறை தடியடி நடத்தப்பட்டது .சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன .அரங்குகளை மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டது .ஜெனெரேட்டர் மூலம் படங்கள் ஓடின . இந்த படத்தை குறிப்பாக பொதுமக்கள் பார்க்க கூடாது என்பதில் அரசு இயந்திரம் பல வழிகளில் முடுக்கி விடப்பட்டது .அனைத்தையும் மீறி அட்வான்ஸ் புக்கிங்கில் அரங்குகளில் முதல் இரண்டு நாட்களில் இரண்டு வாரங்களுக்கான டிக்கட்டுகள் விற்று தீர்ந்தன . சென்னை பிளாசா, மகாராணி அரங்குகளில் 105 நாட்களும், மதுரை சிந்தாமணி , நெல்லை பார்வதி அரங்குகளில் 119 நாட்களும் ஓடின . சுமார் 35 அரங்குகளில் 50 நாட்களும், 10க்கு மேற்பட்ட அரங்குகளில் 75 நாட்களுக்கு மேலும் ஓடி வசூல் சாதனை படைத்தது .இந்த விஷயத்தில் ஆளும் தி.மு.க.விற்கு முற்றிலும் தோல்வி ஏற்பட்டதோடு, இந்த படத்தின் வசனங்கள் பாடல்களால் ஆளும் கட்சிக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது .
நேற்று இன்று நாளை படத்திற்கு தி.மு.க.கட்சியும், மாநில அரசும் ஏற்படுத்திய இடையூறுகள், பொதுமக்கள், ரசிகர்களை தாக்கியது,காயப்படுத்தியது குறித்து எம்.ஜி.ஆர். மிகவும் வருந்தினார் .* ஆனாலும் மனம் தளராமல் ஆளும் கட்சிக்கு எதிராக தன் கட்சி தொண்டர்களுக்கு விரைவில் நல்ல ஒரு விடிவுகாலம் அமையும் .ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று* *பொது கூட்டங்களில் எம்.ஜி.ஆர். முழங்கினார் .அதற்கு பொதுமக்கள் கூடிய திரளான கூட்டமே சாட்சி .எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபிறகு பல கூட்டங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை .தொண்டர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டனர் .சிலர் கொல்லப்பட்டனர் . இந்த தியாகிகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் .என்னையே* நம்பி கட்சியில் ஈடுபட்டுள்ள இந்த மாதிரி தொண்டர்களின் நலத்திற்காகவும், ஊழலை ஒழிக்கவும், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி வெகுவிரைவில் அமையும் என்று சூளுரைத்தார் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் தொடரும்*
---------------------------------------------------------------------------------------
1.மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது -தாயை காத்த தனயன்*
2.நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு*
3.முகத்தை காட்டி காட்டி மூடி கொண்டது நியாயமா - முகராசி*
4.ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் -குடியிருந்த கோயில்*
5.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*
6.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற -- இதயக்கனி*
7.தாய் மேல் ஆணை , தமிழ் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*
8.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்* *- ரிக்ஷாக்காரன்*
9.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க .
Bookmarks