Page 56 of 210 FirstFirst ... 646545556575866106156 ... LastLast
Results 551 to 560 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #551
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமில்லாமல் மறைந்த பிறகும் பல சாதனைகள் படைத்தவர் .இந்த சாதனைகள் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது .அவைகள் மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கபட வேண்டும். கின்னஸ் சாதனைக்கு எடுத்து செல்லபட வேண்டும் .கின்னஸ் சாதனைக்கு கீழ்க்கண்ட தலைப்புகளில் முயற்சி செய்யலாம்
    1 தலைவர் மறைந்த பிறகு பல புத்தகங்கள் அவர் புகழ் பாடி வந்துவிட்டன ,இன்னும் வந்து கொண்டிருக்கன்றது .இவைகளை முறை படுத்தி கின்னஸ் சாதனைக்கு எடுத்து செல்லலாம் .
    2 தலைவரின் நூற்றாண்டு இரண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்றது .உலகெங்கும் தலைவரின் பக்தர் விழா கோண்டாடினர் .அவ்வாறு சுமார் 200 விழாக்களுக்கு மேல் நடைபெற்றது .இந்த நிகழ்வு உலகில் வேறு எந்த தலைவருக்கும் நடக்காத சாகனை.இதையும் கின்னஸ் ரெக்கார்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் .
    3 திரைபடம் என்பது mass media .ஒரு கருத்தை ஒரே சமயத்தில் உலகின் எல்லா ஊரிலும் பரப்பலாம் .அந்த media வை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்து சொன்னவர் உலகிலேயே நம் தலைவர் ஒருவர் தான் .படிப்பினை சொல்லும் பாடல்களை மொழிபெயற்புடன் தொகுத்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம் .
    4 திரைபடங்களில் தலைவர் பல விதமான சண்டை காட்சிகளில் நடித்திருக்கறார் .ஒவ்வொரு விதமான சண்டை காட்சிகளையும் வர்ணனையுடன் தொகுத்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம் .
    மேற்கூறியவை சில மட்டும் தான் .வேறு ஏதாவது விடுபட்டிருந்தால் தெரிக்கும்படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் .
    கினன்னஸ் சாதனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பணியை ஒருவராக செய்ய முடியாது , பேரவை மூலமாக நடவடிக்கை எடுக்கலாம்...........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #552
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*08/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நிறைய ராஜா ராணி, படங்களில்,சரித்திர படங்களில் நடித்து கத்தி சண்டை, வாள் சண்டை போட்டு பிரபலம் ஆகியிருந்தார் .அப்போது நடிகர்* சிவாஜி கணேசன்* சில சரித்திர படங்கள், சமூக படங்கள் என்று நடித்திருந்த காலம் . ஒருமுறை இருவரும் சந்திக்க நேர்ந்தபோது ,அண்ணே,கத்தி சண்டை, வாள் சண்டை போட்டு நடிப்பது போல் சமூகப்படங்களில் கோட் சூட் அணிந்து நடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று கிண்டலாக* ஒரு கருத்தை வெளியிட்டார் .ஆனால் எம்.ஜி.ஆர். தன்னால் சமூகப்படங்களிலும் திறம்பட நடிக்க முடியும் என்று முதன் முதலில் திருடாதே படத்தில் நடித்து அமோக வரவேற்பை பெற்றார் .தொடர்ந்து தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், தர்மம் தலை காக்கும், குடும்ப தலைவன் ,நீதிக்கு பின் பாசம் என* தனது ஆத்ம நண்பர்* தேவரின் படங்களில் கோட் சூட் அணிந்து நடித்து நடிகர் சிவாஜி கணேசனே வியந்து போகும் அளவிற்கு பிரமிப்பை ஏற்படுத்தினார் .தொடர்ந்து இயக்குனர் ராமண்ணா படங்கள், நாகிரெட்டியின் எங்க வீட்டு பிள்ளை, ஏ.வி.எம்மின் அன்பே வா, சத்யா மூவிஸ்,சரவணா பிலிம்ஸ்* படங்கள் ஆகியவற்றில்பிரத்யேக உடைகள் அணிந்து* நடித்து, அந்த கால கட்டத்தின் ட்ரெண்ட் செட்டராக எம்.ஜி.ஆர். இருந்துள்ளார் .ராமன் தேடிய சீதை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன், சங்கே முழங்கு போன்ற பல படங்களில் தொப்பி,உடைகள்,ஷூ என்று அனைத்தும் ஒரே வண்ணத்தில் இருக்கும்படி அணிந்து , புதுமையை புகுத்தி, ரசிகர்களை பரவசம் அடைய செய்தார் . பல வண்ணப்படங்களில் எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வண்ண உடைகள் ,பார்ப்பதற்காகவே, பல்லாயிரம்* ரசிகர்கள் படங்களை பலமுறை பார்த்து ரசித்த காலம் உண்டு .*

    தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அவமானங்கள், கஷ்டங்கள்,பிரச்னைகள், பசிக்கொடுமை, பட்டினி என்று அவதிப்பட்டு,அவற்றையெல்லாம் சாதனைகளாக மாற்றுவது குறித்து சிந்தித்து செயல்பட்டதால்தான் திரைப்படங்களின் ஒவ்வொரு பிரேம்களையும், தனக்கான வாழ்க்கையின் படிக்கட்டுகளாக கட்டமைத்தார் . மற்றவர்களெல்லாம் திரைப்படம் என்பது*பணம்,புகழ்,பெயர் போன்றவற்றிற்கு என்று* மதிப்பளித்து நடித்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் நடிப்பது தொழிலுக்காக மட்டுமின்றி, வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை, சாதனைகளாக மாற்றி ,வெற்றியின் சிகரத்தை அடைவதில் முனைப்புடன் திட்டமிட்டு செய்தார் .அவரது ஒவ்வொரு படத்தில் இருந்தும் பாடங்களாக கற்று கொண்டவர்கள் ,பல்லாயிரம் நபர்கள், பல உயர் பதவிகளில், குறைந்த பட்சமாக ஒரு கிராம நிர்வாக அதிகாரியாகவோ, அரசு அலுவலகங்களில் குமாஸ்தாவாகவோ ,அதிகாரியாகவோ இருக்கிறார்கள் என்பது அவர் கற்று தந்த பாடங்களின் சான்று .


    நல்லவனாக வாழ்வதால்,என்ன தீமைகள் உண்டாகும், என்ன எதிர்ப்புகள் உண்டாகும் எந்த தடைகள் வந்தாலும் சரி, எந்த தோல்விகள் வந்தாலும் சரி,நல்லவனாக வாழ்வதால் என்றைக்காவது ஒரு நாள் உங்களுக்கு மிக பெரிய வெற்றியை தேடித்தரும் என்பதற்கு மிக பெரிய உதாரணமாக அவர் வாழ்ந்து காட்டினார் . அவர் படாத அவமானங்களோ, சந்திக்காத பிரச்சனைகளோ* இல்லை .,எல்லா எதிர்ப்புகளையும் தன்னுடைய சாதனைகளுக்கான* படிகளாக *மாற்றுவதற்கு அவர் துணிந்து எடுத்துக்கொண்ட ஒரே லட்சியம் நல்லவனாக வாழ்வது, நல்லதை செய்வது, அவ்வை சொன்ன* அறம் செய்ய விரும்பு என்கிற* வரிகளின்படி அறம் செய்பவராகவே வாழ்ந்து காட்டியதால்தான் காலம் கடந்து*மறைந்தும் மறையாத நிலையில் மக்கள் அவரை நேசிக்கிறார்கள் .


    1980ல் எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்படுகிறது அது நியாயமற்றது என்பதை எம்.ஜி.ஆர்.உணர்கிறார் .திரைப்படங்கள் தயாராகி வெளியிடுவதில் பிரச்னைகள் ஏற்பட்டால் நான் வெளிநாடு சென்றுவிடுகிறேன் என்று சொன்ன சில நடிகர்கள் மத்தியில் அந்த கால கட்டத்தில் ஆட்சியை கலைத்ததற்கு, நான் வேண்டியவர்களுக்கு அரசு அதிகாரம் மூலம்* தவறான வகையில்* உதவிகள் செய்தேனா,,பதவிகள் அளித்தேனா லஞ்சம் வாங்கினேனா ,ஊழல் செய்தேனா ,எந்த வகையில் என்மீது குற்றம் சாட்டுகிறார்கள்* நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது என்று வாக்காளர்களுக்கு அறிக்கை விட்டார் .அடுத்த தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வரும்போது நான் ,குற்றவாளியா, நிரபராதியா என்று தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் உள்ளது .அதன்பிறகுதான் என் வாழ்க்கை நிலை, அரசியல் நிலை குறித்து நான்*முடிவு எடுப்பேன் என்று மக்களிடம் துணிந்து நேரடியாக வேண்டுகோள்வைத்து வாக்கு கேட்ட ஒரே மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.தான் .ஒரு பொது கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.பேசியதாவது : நான் உங்களிடம் கேட்க விரும்புவது, தாய்மார்களிடம்*கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான்* நான் என்ன குற்றம் செய்தேன். ஏன் என்னை பதவியில் இருந்து இறக்கினார்கள்* நான் லஞ்சம் வாங்கினேன் என்று சொல்கிறார்களா, இல்லை ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா , இல்லை*இந்திரா காந்தி அம்மையார் சமீபத்தில் தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார்கள் .அப்போது* ஒரு வார்த்தை அதுபற்றி சொல்லவில்லை.ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் .நீதியில் நான் குறுக்கிட்டதாக சொல்கிறார்களா இல்லை. நிர்வாகத்தில் நான் தலையிட்டேனா இல்லை .என் நண்பர்களுக்கு ஏதாவது முறைகேடாக பதவிகள் ,உதவிகள் அளித்தேனா இல்லை.பின் எதற்காக நீங்கள்* வாக்களித்து**தேர்ந்தெடுத்த மந்திரிசபையை, சட்டமன்றத்தை கலைத்தார்கள் .காரணங்கள் இருந்து, நான் குற்றவாளி என்று சந்தேகித்து ,விசாரணை கமிஷன் அமைத்து,அதன்மூலம்* குற்றவாளி என்று தீர்மானித்து* அதற்கு போதிய ஆதாரங்கள் இருந்து கலைத்து இருந்தால் நான் நிச்சயமாக மீண்டும் மீண்டும் சொல்கிறேன், கவலைப்பட்டிருக்க மாட்டேன் .


    அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா, என்மீது அன்பை காட்டிய தாய்மார்களே, பெரியோர்களே,நண்பர்களே* உங்கள்மீது தான் குற்றம் சாட்டுகிறார்கள் கடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு எங்கள் வேட்பாளர்களை தோற்கடித்தீர்களாம் .நீங்கள் அவர்களை ஆதரித்து தேர்ந்தெடுத்து உள்ளீர்களாம்*எங்கள்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையாம் ஆகவே சட்டமன்றத்தை கலைத்து விட்டார்களாம் .எங்கள்மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பதை வரும் பொது தேர்தலில் நீங்கள் வாக்களித்து பதில் சொல்லியாக வேண்டும் .நானும் தெரிந்து கொண்டாக வேண்டும் . இந்த ராமச்சந்திரன் மீது எந்த குற்றத்தையும் காணாமல் இருக்கிற நிலையில் ஆட்சியில் இருந்து இறக்கிய பிறகு ,நான் குற்றவாளி என்கிற நிலையில் இல்லாத போது* குற்ற தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட அவமானத்தில் இருந்து*விடுவிக்கப்படுவதோடு எனக்கு சில உண்மைகள் தெரிந்தாக வேண்டும் என்ற வகையில்*.நான் நிரபராதியா இல்லையா என்று நிரூபிப்பதற்கு நீங்கள் வரும் தேர்தலில் அளிக்க போகும் வாக்குகள் தான் முடிவு செய்யும் , நல்ல தீர்ப்பை தரும். பேரறிஞர் அண்ணா அவர்கள் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்கள் .பிரச்னைகள் வரும்போது நான் மக்களை சந்திப்பேன் . ஏனென்றால் மகேசன் தீர்ப்பே மக்களின் தீர்ப்பு என்று அமரர் அண்ணா சொல்லியிருக்கிறார் .அந்த உங்களின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு, தீர்ப்பை எதிர்பார்த்து ,சில காலம் காத்திருப்பேன் . ஜூன் மாதம் முதல் வாரம் இதே பவானி நகருக்கு நான் வந்து உங்களிடம் பேசுவேன் .நீங்கள் அளிக்கும் தீர்ப்பை பொறுத்துதான் ,என் அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல ,தமிழகத்தில் நான் எப்படி வாழ்வது என்பது பற்றி முடிவு எடுப்பேன் என்று சொல்லி ,அனைவரும் நமது வெற்றி சின்னமாகிய இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வீர்கள், நான் நிரபராதி என்று நிரூபிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு ,அண்ணா நாமம் வாழ்க, என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி ,வணக்கம் .*மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.அன்று வந்ததும் அதே நிலா* - பெரிய இடத்து பெண்*

    2.எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி உரையாடல் -நீதிக்கு பின் பாசம்*

    3.திருவளர்செல்வியோ* - ராமன் தேடிய சீதை*

    4.பாடும்போது நான் தென்றல் காற்று -நேற்று இன்று நாளை*

    5.நல்ல நேரம் படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.

    6.எம்.ஜி.ஆர்.- எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம்நாடு*


    .

  4. #553
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    29.8.1970
    flash back.

    முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .

    டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. \பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போதுரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்பு
    சோ வின் காமெடி கலக்கல் என்று செல்லும் வேலையில் மக்கள் திலகம் -விஜயஸ்ரீ
    சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
    ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
    மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .

    மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
    டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .

    தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .

    அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .

    மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை அமைந்தது.........

  5. #554
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய காலை வ*ண*க்க*ம் ந*ண்ப*ர்க*ளே.. நேற்று நாகேஷிற்கு காஷ்மீரில் புர*ட்சித்த*லைவ*ர் செய்த* உத*வியைப்ப*ற்றி ப*திவிட்டேன்..உட*னே சிவாஜி க*ணேச*ன் ரசிக*ர்க*ள் சில*ர் ந*ல்ல
    க*ற்ப*னை..நான் நினைச்சேன் என்று கிண்ட*ல*டித்துள்ளன*ர். அவ*ர்க*ளுக்கான* பின்னூட்ட*மே இது..யூடியுப்க*ளில் சித்ரால*ட்சும*ண*ன் பேட்டி ம*ற்றும் நாகேஷின் நேர*டி பேட்டி ஒன்றிலும் இன்றும் தேடினால் க*ட்டாய*ம் கிடைக்கும்..

    முத**லில் இந்த* விவ*ர*ங்க*ள் தின*ம*ல*ர் நாழித*ழில் க*ட்டுரை வ*டிவிலும், நாகேஷ் பேட்டி ஒன்றை தொலைக்காட்சியிலும் அளித்துள்ள*தை பார்த்து, ப*டித்து ப*கிர்ந்துள்ளேன். எந்த* க*ற்ப*னை விஷ*ய*த்தையும் சேர்த்து த*லைவ*ருக்கு கொடி பிடிக்க* வேண்டிய* அவ*சிய*ம் யாருக்குமில்லை. காஷ்மீரில் ஒரே நேர*த்தில் வெவ்வேறு இட*ங்க*ளில் சித்ரா ப*வுர்ண*மி, நினைத்த*தை முடிப்ப*வ*ன், நேற்று இன்று நாளை, இத*ய*வீணை ப*ட*ப்பிடிப்பு ந*டைபெற்ற*து..எம்ஜிஆரை பொருத்த*வ*ரை லோக்க*ல் ஷூட்டிங் அல்ல*து வெளிப்புற* ப*ட*ப்பிடிப்பு எதுவானாலும் த*ன்னுட*ன் ந*டிக்கும் இணை ந*டிக*ர்க*ள் முத*ல் துணை ந*டிக*ர்க*ள் வ*ரை அவ*ர்க*ளுக்கு வ*ழ*ங்க*ப்ப*டும் உண*வு, ச*ம்ப*ள*ம், பாதுகாப்பு போன்ற*வ*ற்றில் முக்கிய* க*வ*ன*ம் செலுத்துவார்..அதில் ஏதேனும் பிசிறு த*ட்டினால் அவை ச*ரிப்ப*டுத்த*ப்ப*டும்வ*ரை ப*ட*ப்பிடிப்பே ந*ட*க்காது. என*வே அவ*ர் ந*டிக்கும் ப*ட*ங்க*ளின் முத*லாளிக*ள் ம*ற்ற* ந*டிக*ர்க*ளின் விஷ*ய*த்திலும் ந*ல்ல*வித*மாக*வே ந*ட*ப்பார்க*ள்..இதில் சிவாஜி ந*டித்த சித்ரா ப*வுர்ண*மி தொட*ர்பான ச*ம்ப*வ*ம் ஆன*தால் உங்க*ளுக்கு க*ற்ப*னையாக* தோன்றுகிற*து..இதே வேறு ஒரு ப*ட*த்தின்போது ந*ட*ந்த* ச*ம்ப*வ*ம் என்றால் ந*ம்புவீர்க*ள்..

    மேலும் சித்ரா ப*வுர்ண*மி ப*ட*ம் சிவாஜியின் ஆடிட்ட*ர்க*ள் த*யாரித்த* முத*ல்ப*ட*ம். என*வே அவ*ர்க*ளுக்காக குறைந்த* ச*ம்ப*ள*ம் பெற்றுக்கொண்டு சிவாஜி ந*டித்தார். மேலும் அவ*ர் ப*ட*ங்க*ளில் ந*டிக்கும் பிற* ந*டிக*ர்க*ளின் ந*டிப்பு தொட*ர்பான விஷ*ய*ங்க*ள் அன்றி பிற*ருக்கு ஏற்ப*டுத்த*ப்ப*ட்டுள்ள வ*ச*திக*ள், ச*ம்ப*ள*ம் போன்ற*வ*ற்றில் சிவாஜி த*லையிட*மாட்டார். இதுவும் அனைவ*ரும் அறிந்த*தே..

    சிவாஜி, க*மலா அம்மாள் ம*ற்றும் ஜெய*ல*லிதாவிற்கு ந*ல்ல ஓட்ட*ல்க*ளிலும் பிற* ந*டிக*ர் ந*டிகைக*ளுக்கு சாதார*ண* லாட்ஜுக*ளையும் ஏற்பாடு செய்திருந்த*ன*ர் ஆடிட்ட*ர்க*ள்..நாகேஷும் ஏதோ 4 நாட்க*ளில் த*ன் ப*குதி முடிந்துவிடும் என்றே ந*ம்பி வ*ந்தார். ஆனால், த*யாரிப்பாள*ரின் சிக்க*ன* ந*ட*வ*டிக்கை, ப*ட*ப்பிடிப்பிற்கு போதிய* வெளிச்ச*மின்மை ஆகிய* கார*ண*த்தால் ப*ட*ப்பிடிப்பு தாம*த*மாகிக்கொண்டே போன*து..நாகேஷ் இய*ல்பாக*வே த*யாரிப்பாள*ரே எல்லாம் பார்த்துக்கொள்வார் என்ற* நிலையில் முன்னேற்பாடுக*ளின்றியே செல்வார். இங்கு த*லைகீழாக* போன*து. நாகேஷுக்கு ஏற்க*ன*வே இருந்த* அல்ச*ர் தொந்த*ர*வுட*ன் உண*வும் ச*ரியில்லாம*ல் போக*வே உட*ல்நிலை மோச*ம*டைந்த*து..ரூமிலேயே முட*ங்கிப்போனார்.. எம்ஜிஆருக்கு இந்த* விவ*ர*ங்க*ள் செவிவ*ழிச் செய்தியாக* வ*ந்த*து. பிற*குதான் எம்ஜிஆர் நேராக* நாகேஷ் இருந்த* லாட்ஜுக்கே உரிய* ம*ருத்துவ*ருட*ன் வ*ந்து சிகிச்சை அளிக்க* வைத்தார். ந*ல்ல* உண*விற்கும் ஏற்பாடு செய்துகொடுத்தார். கையில் ப*ண*ம் 30000த்தையும் கொடுத்து ப*ட*ப்பிடிப்பில் உன்ப*குதியை விரைவில் முடிக்க*ச்சொல்லிவிட்டு விமான*ம் பிடித்து விரைவில் ஊர் போய்ச்சேரும்ப*டி அறிவுறுத்தினார் எம்ஜிஆர்..மேற்சொன்ன* நிக*ழ்வு முற்றிலும் உண்மை..........( இது போன்ற பல உண்மை விடயங்களை சிலர் மறுத்து நம்பாமல் அவர்களாகவே ஆறுதல் அடைந்து கொள்கின்றதை நாமெல்லாம் அறிந்ததுதானே).........

  6. #555
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர்_தொண்டர்கள்_நலன்

    m.g.r. மக்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கைக் கொண்டு அரசியலில் உயர்ந்தாரே தவிர, ரசிகர்களையும் தொண்டர்களையும் தனது சுயநலத்துக்காக அவர் பயன்படுத்திக் கொண்டது இல்லை. அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் அவர். தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் துடித்துப் போய்விடுவார். அவர்களது குடும்பம் அதிலிருந்து மீள உதவும்வரை ஓயமாட்டார்.

    எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச் சிகள் என்றால் அதில் பங்கேற்க வெளியூர்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் வருவார்கள். ஒருமுறை மதுரையில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். கூட்டத் துக்கு வெளியூரில் இருந்து வந்த சில தொண்டர்கள், இரவு திரும்பிச் செல்லும் போது வாகன விபத்தில் பலத்த காய மடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

    மதுரை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பு வதாக ஏற்பாடு. ஆனால், விபத்து பற்றி கேள்விப்பட்டு தனது பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டார். காயமடைந்த தொண்டர்களை சந்திக்க மறுநாள் காலை யில் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அவர் வருவது முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. திடீரென மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர். வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.

    பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொண்டர் ஒருவர் படுத்திருந்த இடத் துக்கு எம்.ஜி.ஆர். சென்றார். படுக்கை யில் கிடந்த அந்த தொண்டரின் அருகே உதவிக்கு அவரது மனைவி மட்டும் இருந்தார். அந்தப் பெண்மணியின் கோலமே அவர்களது குடும்ப நிலை மைக்கு கட்டியம் கூறியது.

    எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சி, கண வனின் நிலையால் துயரம், அந்தத் துயரை சமாளிக்க தோள் கிடைத்த நிம்மதி என எல்லாம் கலந்த உணர்ச்சிக் குவியலாய் அந்தப் பெண்மணி அழ ஆரம்பித்துவிட்டார். ‘‘ஐயா, எப்பப் பார்த் தாலும் உங்க பெயரையும் பெருமையை யும் சொல்லிக் கொண்டிருப்பாரய்யா. அவருக்கு இப்படி ஆகிவிட்டதே’’ என்று சொல்லிக் கதறினார். கிழிந்த ஆடை யுடன் பரிதாபமாகக் காட்சி அளித்த அந்தப் பெண்மணியின் கதறலைக் கண்டு எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கின.

    ‘‘கவலைப்படாதே அம்மா. உன் கணவருக்கு ஒன்றும் ஆகாது. எல்லாம் சரியாகிவிடும். நான் இருக்கிறேன்’’ என்று ஆறுதல் கூறினார். அந்த வார்டில் இருந்த டாக்டரிடம் தொண்டரின் உடல் நிலை குறித்து விசாரித்து, அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    டாக்டரிடம் பேசிவிட்டு அந்த தொண்டர் படுத்திருந்த கட்டில் அருகே சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தலையைத் தடவிக் கொடுத்து கையை இறுகப் பற்றி, ‘‘நீ எதுக்கும் கவலைப்படாதே. டாக்ட ரிடம் சொல்லியிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நீ வீடு திரும்பலாம். தைரிய மாய் இரு’’ என்றார். தனது அபிமான தலைவர் தன் கையைப் பிடித்து பேசு வதைப் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் பதில்கூட சொல்லமுடியாமல், அந்த தொண்டரின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் அருவியாய் கொட்டியது. அந்தத் தொண்டர் உட்பட காயமடைந்த தொண்டர்களின் உடல்நலம் தேறும் வரை, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

    எம்.ஜி.ஆரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கின்றனர் என் பதை விளக்கும் இன்னொரு சம்பவம். எம்.ஜி.ஆர். பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்பும்போது மதுரை அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொண்டர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்தக் குடும்பத்துக்கு வேண் டிய உதவிகளை செய்யுமாறு கட்சியின ருக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சில நாட்கள் கழித்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அவர் மதுரை வந்தார்.

    முதலில் வாடிப்பட்டிக்கு சென்று, விபத்தில் இறந்த அந்த தொண்டரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். அதன்படி, வாடிப்பட்டிக்கு காரில் சென்றார். இறந்துபோன தொண் டர் இருந்த வீடு குறுகிய சந்தில் இருந் தது. அதில் கார் செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று டிரைவர் சில விநாடிகள் குழம்பினார். இதை கவனித்த எம்.ஜி.ஆர். சட்டென காரைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டார்.

    சில நிமிடங்கள் நடைக்குப் பின், அந்த தொண்டரின் வீட்டை எம்.ஜி.ஆர். அடைந்தார். அது மிகவும் எளிமையான சிறிய வீடு. வாசலில் தனது ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த இறந்து போன தொண்டரின் படத்துக்கு மரியாதை செலுத்திய பின், குடும்பத்தாரை விசாரித்து ஆறுதல் கூறினார். கைக்குழந்தையுடன் இருந்த அந்த ஏழைத் தொண்டரின் மனைவிக்கு தைரியம் சொன்னார்.

    அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அருகே இருந்த தொண்டரின் தாயாரால் துயரத்தை அடக்க முடியவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஜி.ஆரின் தோளில் கைபோட்டு அவரை இறுகக் கட்டிப்பிடித்து, ‘‘என் மகன் போயிட்டானேப்பா, நான் என்ன செய்வேன்?’’ என்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.

    எம்.ஜி.ஆர். தோளில் அந்த மூதாட்டி உரிமையுடன் கைபோட்டாலும் அங்கிருந் தவர்களும் உதவியாளர்களும் திகைத்த னர். எம்.ஜி.ஆர். எப்படி எடுத்துக் கொள் வாரோ என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த தாயின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அந்த மூதாட் டியை விலக்க வந்தவர்களை பார்வையா லேயே தடுத்து நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.!

    அந்த தாயை அணைத்தபடி, ‘‘நானும் உங்க மகன்தான். உங்க குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன். கவலைப் படாதீங்க’’ என்று எம்.ஜி.ஆர். ஆறுதலாய் பேசினார். அந்த தாயின் சோகம் மறைந்து மனம் லேசானது!

    எம்.ஜி.ஆர். நடித்த ‘புதியபூமி’ திரைப் படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அந் தப் படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் சூப்பர் ஹிட் பாடல் இது…

    ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை

    இது ஊரறிந்த உண்மை

    நான் செல்லுகின்ற பாதை

    பேரறிஞர் காட்டும் பாதை!’


    அதிமுகவின் முதல் உறுப்பினர் எம்.ஜி.ஆர்.தான். கட்சியின் பெயரி லும் கொடியிலும் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவுக்கு முக்கியத் துவம் அளித்தார். கட்சி உறுப்பினர் அட்டையிலும் தனது படத்தைவிட அண்ணாவின் படமே பெரிதாக இருக்கும்படி செய்து, தலைவரை மதிக்கும் தொண்டர் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்தார்!.........

  7. #556
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1944ல் மிக தைரியமாக அதாவது வெள்ளையன் ஆட்சியில் ஈரோட்டு ராம்சாமி அழிச்சாட்டிய ஆட்டம் போட்டு பெரிய புராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என ஆட்டம் போட்ட காலங்களில் "நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது" என பொதுவாக சொன்னார்

    நச்சு ஆறு என்பது தாங்களே என உண்மையினை ஏற்று கொண்ட திக தரப்பு பொங்கி எழுந்தது, அண்ணா டுரை என்பவர் "கீலாசேபம்" என்றொரு கட்டுரை எழுதி பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு என பொங்கி கொண்டிருந்தார்

    ஈ.வெ.ரா விடுதலையில் தலையங்கம் எழுதினார். ‘யோக்கியமற்ற கூப்பாடுகள்’ என்ற அந்தத் தலையங்கத்தில் வாரியாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார், தாக்குதலை நியாயப்படுத்தியிருந்தார்.

    அண்ணாவுக்கும் கிருபானந்தவாரிக்கும் எழுத்துபோர் நடந்தது, அது தீவிரமாகவும் நடந்தது , வாரியாரின் தாக்குதல் முன் பேரறிஞன் பதுங்கினார்

    அதே நேரம் மணியம்மையுடன் ராம்சாமி இரண்டாம் திருமணம் , ராம்சாமியுடன் மனகசப்பு என காட்சிகள் வந்ததால் டிராக் மாற்றினார் அண்ணா

    வாரியார் சுவாமிகள் தன் இயல்பில் அவர்போக்கில் ஆன்மீக மேகமாய் பொழிந்து கொண்டிருந்தார், அவ்வப்போது திமுக வாரியார் மோதல் நடந்து கொண்டே இருந்தது

    வாரியாரின் மக்கள் அபிமானத்தை கண்ட கருணாநிதி நேரடியாக தாக்காமல் தன் அடிபொடிகள் மூலம் எழுதி தாக்கி கொண்டிருந்தார்.

    ஒரு கட்டத்தில் வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக மு. கருணாநிதியே ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருந்தார்.

    1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்தார் , அப்பொழுது வாரியார் சுவாமிகள் நெய்வேலி பக்கம் ஆன்மீக கூட்டங்களில் பேசினார் அப்பொழுது "கடவுளை நம்பாதவனுக்கு நல்மரணம் வாய்க்காது, மருத்துவம் அவனுக்கு பலன் கொடுக்காது" என்றுதான் பொதுவாக சொன்னார்

    ஆனால் அவர் அண்ணாதுரையினை சொல்லிவிட்டார் என திமுக ரவுடிகள் அவரை சூழ நின்று தாக்கினர், மக்கள் கூட்டம் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டது, காயமின்றி வாரியார் தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன*

    ஆம், அவர் பூஜை அறையில் புகுந்து உடைத்தார்கள் விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையெல்லொம் உடைத்தார்கள் , ஆனால் அன்று ஊடகம் என்பது செய்திதாளும் வானொலியும் என்பதால் விஷயம் மூடி மறைக்கபட்டது.

    அதை செய்தது திமுக அரசு என்பது ஒன்றும் ரகசியம் அல்ல*

    வாரியார் தாக்கபடும் பொழுது அவருக்கு வயது 65, அந்த முதியவரை தாக்கியது தமிழ் வீரம், அதை ரசித்து கொண்டிருந்த பெயர் திராவிட பகுத்தறிவு

    விஷயம் சட்டசபை வரை எதிரொலித்தது, வாரியாருக்கு இருந்த மிகபெரும் நற்பெயரை தமிழகம் கண்டது, மக்கள் அபிமான கிருபானந்தர் திமுகவினரால் தாக்கபட்டது மிகபெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திற்று

    ராஜாஜி மனம் வருந்தி எழுதினார், தீட்சிதர்களும் ஆதீனங்களும் களத்துக்கு வந்தனர்

    முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரி அனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள்

    ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார்.

    நிலமை எல்லை மீறி சென்றதை அவதானித்த கருணாநிதி அந்நேரம் தன்னுடன் மோத தொடங்கியிருந்த mgr சரியாக பழிவாங்கினார்

    ஆம், வாரியாரை அடித்தது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என ஆட்டத்தை திசை திருப்பினார்

    ஆனால் அதுதான் அவரின் வாழ்வில் மிகபெரும் தவறு, கடைசிவரை அவர் தலையில் அடித்து அடித்து அழுத தவறு,

    தெய்வத்தின் தண்டனை அப்படி சரியாக இருந்தது.

    வாரியாரை நேரில் சந்தித்து உண்மையினை விளக்கினார் mgr, வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக* தலைவர் அவர்தான், அப்பொழுதுதான் அவரை வாழ்த்தி அனுப்பினார் வாரியார்

    அந்த வாழ்த்தில் கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராக அமர்ந்தார் mgr, அதன் பின் கருணாநிதியால் எழமுடியவில்லை 1987ல் வந்தாலும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது

    வாரியாரால் mgr ஆசீர்வதிக்கபடும் காட்சியே mgrக்கு பெரும் வெற்றியினை பெற்று கொடுத்தது

    "பொன்மன செம்மல்" என வாரியார் சொன்ன அந்த வார்த்தையே ராமசந்திரனுக்கு அடையாளமாகி, மங்கா புகழாகி அவரை அரசர் கோலத்துக்கு ஆக்கியது

    சுமார் 30 ஆண்டுகள் திராவிட நாத்திக கோஷ்டியோடு மல்லுகட்டிய கிருபானந்த வாரியாருக்கு ரmgr மூலம் பெரும் ஆறுதல் கிடைத்தது, அத்தோடு போலி நாத்திக அடையாளம் இங்கு ஒழிய ஆரம்பித்தது

    அதன் பின்பே அம்மா முதல்வராகி ஆலயமெல்லாம் பகிரங்கமாக சென்றார், இன்று முதல்வர் பழனிச்சாமி அனுதினமும் தான் ஒரு இந்து என்பதை பகிரங்கமாக சொல்கின்றார்

    வாரியாருடன் மோதியதில்தான் திமுகவின் அழிவு தொடங்கிற்று, முருகபெருமான் தன் ஞானவேல் மூலம் அந்த அரக்க கூட்டத்தை சரித்து போட்டார்

    ஆம் வாரியார் மேலான தாக்குதலை கண்டிக்காத கருணாநிதி வாரியார் காலம் வரை எழவே இல்லை, முருகபெருமானின் அடி அப்படி இருந்தது

    வரலாற்றின் மிக பெரிய சான்று இது, ஒரு ஜெகஜால கில்லாடி ஒரு சாதாரண முருகன் கோவில் ஆண்டியிடம் தோற்று அவமானபட்ட பெரும் வரலாறு அது

    அந்த தோல்விதான் கந்த சஷ்டி கவசம் வரை திமுகவின் முதுகில் சாத்தி கொண்டிருக்கின்றது, இன்னும் சாத்தும்

    இப்பொழுது முருகனுடன் பிள்ளையாரும் சேர்ந்து திமுகவினை சாத்த தொடங்கியிருக்கின்றார்

    (இன்றுவரை வாரியார் தாக்கபட்டதற்கு திமுக தரப்பில் விளக்கமுமில்லை, மன்னிப்பு கோரவுமில்லை )........

  8. #557
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருமிகு .
    *கிருபாணந்த*
    *வாரியார்*
    ஏற்பாட்டில்*
    கட்டப்பட்டுவந்த *முருகன் கோவில் ஒன்றின்* *திருப்பணிக்காக*

    *புரட்சித் தலைவர்*
    *எம். ஜீ. ஆரை சந்தித்து*
    *நன்கொடை கேட்க* *வந்தார் வாரியார்.*

    *புரட்சித் தலைவர், உடனே "பிளாங்க் செக்" ஒன்றினை வாரியாரிடம் கொடுத்தார்.*

    பிளாங்க் செக்கை பார்த்த வாரியார்

    *தொகை எதுவும் எழுதாமல் தருகிறாரே ?*
    என *வியப்புடன்*
    *எம். ஜீ. ஆர் முகத்தை பார்த்தார்!*


    அப்போது வாரியாரிடம்
    எம்ஜிஆர்,
    *நான் எவ்வளவு தொகை என எழுதாமல் பிளாங்க் செக் தந்தது ஏன் என நினைக்கிறீர்களா ?*

    *என்னை தேடி உதவி கேட்டுவந்த, நீங்கள்*

    *மக்களுக்கு நல்ல ஒழுக்கமான விசயங்களை சொல்லி வரும் உண்மையான ஆன்மீக வாதி*
    *என்பது எனக்கு தெரியும்.*

    *நீங்கள் என்னிடம் உதவி கேட்டு வந்த பின் ,வேறு யாரிடமும் சென்று சிரமப்பட கூடாது.*

    *"நீங்கள் கட்டும் ஆலயத்துக்கு*
    *உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ"*
    *அவ்வளவு தொகையையும் எனது வங்கி கணக்கில் இருந்து தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்*
    *அதற்காக தான் பிளாங்க் செக் தருகிறேன்*

    *மக்களுக்கு நல்ல விசயங்களை சொல்லி கொடுத்து அவர்களை நல்லவர்களாக மாற்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்*.

    என கூறியதை கேட்டதும் வாரியார் ஆச்சரியமடைந்து நன்றி கூறினார்.


    *(வாரியார் பேரன்* *சொன்ன தகவல்*)
    ------------
    *சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் வாரியார்*
    , காரணம்
    *அவர் மதவாதியல்ல*

    *உண்மையான*
    *ஆன்மீக வாதியாக வாழ்ந்து மறைந்தவர்*


    mgr tv ஹமீது.........

  9. #558
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "கண்ணன் என் காதலன்" 1968 ஏப் மாதம் 25 ம் தேதி வெளியான சத்யா மூவிஸாரின் மூன்றாவது படம்.
    முதல் படம் "தெய்வத்தாய்" இரண்டாவது படம் "நான் ஆணையிட்டால்". இரண்டு நாயகிகளில் ஒருவர் ஜெயலலிதா மற்றவர் வாணிஸ்ரீ. எற்கனவே பிளாக்பஸ்டர் ஹிட்டான "குடியிருந்த கோயில்" வெளியாகி 40 நாளிலே வெளியான படம்.

    நாங்கெல்லாம் "குடியிருந்த கோயில்" பார்த்த வியப்பே இன்னும் அடங்காமல் இருக்கும் போது "கண்ணன் என் காதலன்" உடனடி வரவை அவ்வளவாக விரும்பவில்லை. அது "குடியிருந்த கோயிலி"ன் வெற்றியை பாதிக்கும் என்று நினைத்து ஒதுங்கி இருந்தோம். "குடியிருந்த கோயில்" ஓடாமலிருந்தால் "கண்ணன் என் காதலன்" ஒரு சில ஊர்களில் 100
    நாட்கள் ஓடியிருக்கும்.

    இருப்பினும் தமிழகத்திலேயே அதிகமாக மதுரை சிந்தாமணியில் 93 நாட்கள் ஓடி ரூ 2,07,112.60. வசூலாகி கணேசனின் பல 100 நாட்கள் படங்களை துவம்சம் பண்ணியிருந்தது. கர்ணன், ராமன் எத்தனை ராமனடி, என் மகன்,மோட்டார் சுந்தரம் பிள்ளை இன்னும் நிறைய சிவாஜி படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
    சிங்கம் குட்டியாக இருந்தாலும்
    சிங்கம் சிங்கம்தானே.
    அடுத்து ஜீலை 27 ல் வெளியான "தில்லானா மோகனாம்பாளு"க்காக படத்தை எடுத்து விட்டார்கள். "தில்லானா" ஒரு வாரம் லேட்டாக வந்திருந்தால் நிச்சயம் "கண்ணன் என் காதலன்" 100 நாட்கள் ஓடியிருக்கும்.

    மேலும் 60 நாட்களிலே அடுத்த படமான "புதியபூமி" ஜீன் 27 ல் வெளியானதால் அதுவும் படத்தின் நீடித்த ஓட்டத்தை தடை செய்தது.
    தூத்துக்குடியில் "குடியிருந்த கோயில்" ஓடிய அதே பாலகிருஷ்ணா தியேட்டரில்தான் வெளியாகியது கண்ணன் என் காதலன். அதனால் ரிலீஸ்
    தேதிக்கு வெளியாகவில்லை..
    "குடியிருந்த கோயில்" 70 நாட்கள் ஓடிய பிறகு "பணமா பாசமா" வை திரையிட்டார்கள்.
    அதுவும் 71 நாட்கள் ஓடிய பிறகுதான்
    அதே திரையரங்கில் "கண்ணன் என் காதலன்" வெளியானது. தலைவரின் அடுத்த. படமான புதியபூமி. ஜீன்27ல்.
    வெளியாகி காரனேஷனில் ஓடிக்கொண்டிருந்தது.

    கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு மேல் லேட் ரிலீஸ். ரசிகர்கள் நெல்லையில் சென்று பார்த்ததால் படத்தின் எதிர்பார்ப்பு சற்று குறைந்து காணப்பட்டது. திருநெல்வேலியில் ஏப் 13 ல் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த "கலாட்டா கல்யாண"த்தை 13 நாளில் தூக்கி விட்டு "கண்ணன் என் காதலனை" திரையிட்டார்கள். சென்னையில் ஸ்டார் பிரபாத் மேகலா நூர்ஜஹானில் வெளியாகி அதிக பட்சமாக 56 நாட்கள் ஓடி (மொத்தம் 224 நாட்கள்) நல்ல வசூலுடன் திரை மாற்றம் செய்யப் பட்டது. மொத்தத்தில் "கண்ணன் என் காதலன்" சத்யா மூவிஸுக்கு முதல் ரவுண்டிலேயே லாபத்தை கொடுத்த
    தொடர் வெற்றிப்படமாக அமைந்தது.

    நெல்லையில் அதன்பின் "கலாட்டா கல்யாண"த்தை தொடர்ச்சியாக ஷிப்டு பண்ண முடியாமல் "குடியிருந்த கோயில்" பார்வதியில் ஓடி முடித்தபின் மீண்டும் திரையிட்டார்கள் என்றாலும் "கலாட்டா கல்யாணம்" ஓடிய கணக்கு நெல்லையில் 13 நாட்கள்தான். 1968 தலைவருக்கு ஒரு திரைத்திருவிழாதான்.

    அந்த ஆண்டு முழுவதுமே தலைவர் படம் ஏதாவது ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டேயிருந்தது ரசிகர்களுக்கு ஒரு இன்பத்திருவிழா
    என்றே சொல்லலாம். மீண்டும் கிடைக்குமா அது போல் ஒரு வசந்த காலம். ஆனால் கணேசனுக்கு சக நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பால் ஓடிய தில்லானாவை தவிர மீதி எல்லா படங்களுமே அவரது ரசிகர்களுக்கு கசந்த காலம்தான்..........

  10. #559
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்., போல மனிதாபிமானி யாருமில்லை!
    எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி கணேசன் பற்றி, அவர்களுடன் சின்னக் குழந்தையாக நடித்துள்ள, குட்டி பத்மினி:
    எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி கூட, நிறைய படங்களில் நடித்துள்ளேன். எம்.ஜி.ஆர்., நடிக்கும் படத்தின் ஷூட்டிங் என்றால், யாருக்கும் வயிறு காயவே செய்யாது. தடபுடல் விருந்து தான் நடக்கும்.
    அவர் நடிக்கும் படத்தின் இறுதி காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கும் போது, லைட் பாய் முதல், படத்தின் துணை இயக்குனர் வரை, அனைவருக்கும் சம்பளம் சென்றடைந்து விட்டதா என, அவருக்கு நெருக்கமான நபரிடம், கண் பார்வையில், கண்ணை அசைத்து கேட்பார்.
    இல்லை, கொஞ்ச பேருக்கு பாக்கி இருக்கிறது என தெரிய வந்தால், கிளைமாக்ஸ் காட்சியை நடித்து கொடுக்காமலேயே, காரில் ஏறி கிளம்பி போய் விடுவார். உடனே, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு புரிந்து விடும். 'யாரோ நம்மை போட்டுக் கொடுத்து விட்டனர்' என்பதை அறிந்து, சம்பள பாக்கியை செட்டில் செய்வார். அதை அறிந்ததும், மீண்டும் படப்பிடிப்பில், எம்.ஜி.ஆர்., கலந்து கொள்வார்.
    அவர் ஷூட்டிங்கில் பங்கேற்கும் போது, பை நிறைய பணத்துடன் அவரின் அசிஸ்டென்ட், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருப்பார். அங்கே இருக்கும் ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன் என, யாருக்காவது பணக்கஷ்டம் என்றால், அசிஸ்டென்ட் இடம் வாங்கி கொடுப்பார்.அந்த அளவுக்கு மனிதநேயம் மிக்க ஒருவரை, நான் இதுவரை பார்த்ததே இல்லை.
    'பங்சுவாலிட்டி' எனப்படும் நேரம் தவறாமைக்கு, சிவாஜி கணேசன் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு, நேரம் தவறாமையை கடைப்பிடிப்பவர். 7:00 மணிக்கு ஷூட்டிங் என்றால், 6:00 மணிக்கே, ஸ்பாட்டிற்குள் நுழைந்து விடுவார். படத்தின் காட்சிக்கு ஏற்ப, மேக்கப் போட்டு, 7:00 மணிக்கு தயாராக இருப்பார்.
    படப்பிடிப்புக்கு இடையே ஓய்வு நேரத்தில், என் அருகே வந்து உட்கார்ந்து கொள்வார். பக்கத்து செட்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் - நடிகையர் பற்றி ஆர்வமாக கேட்பார். யார் யாருடன் சண்டை போட்டனர்; என்ன கிசுகிசு என்பதை கிண்டலாக கேட்பார். நானும், சின்னப் பிள்ளையாக இருந்ததால், அந்த ஹீரோயின், அந்த ஹீரோவிடம் இப்படி சண்டை போட்டார்; அதற்கு அவர் இப்படி பதிலளித்தார் என, நடந்ததை நடந்தபடி அப்படியே சொல்வேன்.
    நான் சொன்ன நடிகர் - நடிகையருடன் இணைந்து அவர் நடிக்கும் காட்சிகள் வரும் போது, அந்த கிசுகிசு விஷயங்களை சொல்லி, அவர்களை கிண்டல் செய்வார்; செட்டே கலகலப்பாக இருக்கும்!������������✌✌������.........

  11. #560
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வுகளில் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை அவர் ஒருவருக்கே கிடைத்துள்ளது .

    1988 முதல் 2019 எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த பெருமைகள் - சாதனைகளின் சிகரம் .

    1988ல் மத்திய அரசின் ''பாரத ரத்னா '' விருது .
    மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம்.
    மெரினாவில் எம்ஜிஆர் அருங்காட்சியகம் .
    மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு தூண்.
    அண்ணா சாலையில் எம்ஜிஆர் சிலை
    எம்ஜிஆர் நினைவு இல்லம் .
    ராமாவரம் எம்ஜிஆர் தோட்டம் . சென்னையில் எம்ஜிஆர் ஆலயம்.
    சென்னை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் ஸ்டேஷன் .
    சென்னை - கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் .
    சென்னை தரமணி எம்ஜிஆர் பிலிம் சிட்டி .
    சென்னை - எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகம் .
    சென்னை - மாதவரம் எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகம் .
    சென்னை போரூர்- பூந்தமல்லி எம்ஜிஆர் சாலை .
    எம்ஜிஆர் ஸ்டாம்ப் வெளியீடு .
    எம்ஜிஆர் உருவம் பதித்த நாணயம் .
    1989ல் ஒன்று பட்ட அதிமுக - இடைத்தேர்தலில் வெற்றி.
    1989ல் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி .
    1991ல் அதிமுக ஆட்சி .
    2001ல் அதிமுக ஆட்சி.
    2011ல் அதிமுக ஆட்சி .
    2016ல் அதிமுக ஆட்சி .
    2019ல் அதிமுக ஆட்சி தக்க வைத்தது .
    2000ல் ராஜ் டிவி நடத்திய 2000ல் ஒருவன் - எம்ஜிஆர் நிகழ்ச்சி .
    2016ல் விஜய் டிவி நடத்திய மன்னாதி மன்னன் எம்ஜிஆர் நிகழ்சி .
    பாராளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலை .
    எம்ஜிஆர் புகழ் பாடும் இதயக்கனி மாத இதழ்.
    எம்ஜிஆர் புகழ் பாடும் எம்ஜிஆர் தொடர் விழாக்கள் .
    ஆல்பர்ட் அரங்கில் நடந்த நாடோடிமன்னன் விழாவில் பங்கு பெற்ற முன்னணி அந்த கால நடிகர்கள் - நடிகைகள் .
    கலைஞர் டிவி நடத்திய மறக்க முடியுமா ? எம்ஜிஆர் சிறப்பு ஒளி பரப்பு .
    டிஜிட்டல் - ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் வெள்ளிவிழா .
    டிஜிட்டல் - அடிமைப்பெண் 300 அரங்கில் வெற்றி பவனி .
    டிஜிட்டல் - ரிக் ஷாக்காரன் .
    டிஜிட்டல் - நினைத்ததை முடிப்பவன் .
    டிஜிட்டல் - எங்கவீட்டுப்பிள்ளை . டிஜிட்டல் ரகசிய போலீஸ் 115,
    எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் முதலிடம் - கோவை .
    2வது இடம் - மதுரை . 3வது இடம் - சென்னை .
    எம்ஜிஆரின் 73 பழைய படங்கள் மறு வெளியீடுகளில் வெற்றி பவனி தொடர்கிறது.
    புதிய தமிழ் படஙக்ளில் எம்ஜிஆர் பாடல்கள் - எம்ஜிஆர் காட்சிகள் இடம் பெற்றது .
    திரை உலக பிரமுகர்கள் எம்ஜிஆரை நினைவு கூர்ந்து வருகிறார்கள் .
    ஜெயா டிவியில் தினமும் எம்ஜிஆர் பாடல்கள் 1 மணி நேரம் ஒளிபரப்புகிறார்கள் .
    உலகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது .
    திராவிடர் கழகம் - எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது .
    மதிமுக வைகோ - காமராஜர் அரங்கில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார் .
    வேலூர் வி ஐ டி கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
    எம்ஜிஆர் உலக பேரவை மாநாடு வேல்ஸ் வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
    எம்ஜிஆர் சிலையை ஏ.சி. சண்முகம் நடிகர் ரஜினி வைத்து எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகத்தில் திறந்தார் .
    பி ஆர் ஓ -பொன்விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்ஜிஆரை பாராட்டிய நடிகர்கள் - நடிகைகள் .
    டிஜிட்டலில் வெளிவர தயாராக உள்ள எம்ஜிஆர் படங்கள் அன்பே வா , அலிபாபாவும் 40 திருடர்களும் , மாட்டுக்கார வேலன் . குறிப்பாக காவல்காரன் படம் வண்ணத்தில் உருவாக உள்ளது .
    டாக்டர் பெரியசாமி - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
    டாக்டர் ஹண்டே - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
    இந்து பத்திரிகை வெளியிட்ட காலத்தை வென்ற எம்ஜிஆர் புத்தகம் . 25000 புத்தகங்கள் விற்று சாதனை .
    பம்மல் சாமிநாதன் வெளியிட்ட எம்ஜிஆர் பட ஆல்பம் .
    சத்யா வெளியிட்ட எம்ஜிஆர் ஆல்பம் ,
    31 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள் .
    பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா தலைமயில் நடிகை சௌகார் ஜானகி ஜானகி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
    பெங்களூரில் நடிகை சரோஜாதேவி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
    சமூக வலை தளங்களில் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் முதலிடம் வகிக்கிறது .
    வல்லமை - இனணய தளத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டுரை போட்டி - மிகவும் அருமை .
    எம்ஜிஆர் - remembered தொடர் கட்டுரை 7 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது .
    தமிழகத்தில் எல்லா ஊடகங்களும் ,பத்திரிகைகளும் எம்ஜிஆர் -100 சிறப்பித்தார்கள் .
    அமெரிக்கா , இங்கிலாந்து , சவூதி ,மலேசியா , சிங்கப்பூர் , இலங்கை போன்ற நாடுகளில் எம்ஜிஆர் -100 கொண்டாட்டம் .
    மய்யம் இணைய தளத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தலைப்பில் விரைவில் ஒரு லட்சம் பதிவுகளை கடக்க போகிறது .
    எம்ஜிஆர் ரசிகர்கள் பல தலை முறைகள் கடந்து புதிய தலை முறை எம்ஜிஆர் ரசிகர்களளோடு இணைந்து எம்ஜிஆரை நேசித்து கொண்டாடி வருகிறார்கள் .
    டிஜிட்டல் -எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரையிட தயார் நிலையில் உள்ளது.
    சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் எம்ஜிஆர் பெயர் சுழன்று கொண்டு வருகிறது .
    எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை ஒட்டு வங்கி நிலைத்து விட்டது .
    எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் 2022ல் பொன்விழாவை நிறைவு செய்கிறது .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அன்றும் வெற்றி . இன்றும் வெற்றி . என்றென்றும் வெற்றி.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •