Page 109 of 210 FirstFirst ... 95999107108109110111119159209 ... LastLast
Results 1,081 to 1,090 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1081
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் பட உலகில் முன்னணி ஜோடிகளாக கொடிகட்டி பறந்த காலத்தில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம், எங்கள் தங்கம்.

    காஞ்சித்தலைவன் படம் நடித்த பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து கலைஞர் குடும்பத்திற்காக எம்ஜிஆர் செய்த படம்.. இருவர் காம்பினேஷனில் முதல் கலர் படமும்,கடைசி படமும் கூட..

    பாடல்களில் வாலியும் இசையில் எம்எஸ் விஸ்வநாதனும் கதகளி ஆடி இருப்பார்கள்..

    தங்கப் பதக்கத்தின் மேலே..
    நான் செத்துப் பொழச்சவன்டா..
    ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான்..

    என ஹிட் பாடல்கள் அடுத்தடுத்து வந்தபடியே இருக்கும். படத்தில் பத்து நிமிடங்களுக்கும் மேலாக ஒரு கதாகாலட்சேபம் வரும். மொட்டைத்தலை குடுமியுடன் எம்ஜிஆர் காலட்சேபம் செய்து ஜமாய்ப்பார்.

    மெட்ராஸ் மாகாணம் பெயர் மாற்றம், மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு, அரசு அதிகாரிகளின் மூளைகெட்டத்தனம் மகாராஷ்டிரா சிவசேனாவின் அரசியல் என வாலி பாடலை கலந்து கட்டி அடித்து நொறுக்கி இருப்பார்..

    தத்துவ பாடலோ ரொமான்டிக் பாடலோ, அரசியல் வரி இல்லாமல் இந்த படத்தில் இருக்கவே இருக்காது.

    ஜெயலலிதா கனவு காணும் ரொமான்டிக் பாடலில் கூட ,"கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்தாளு" எனப்பாடி, தான் அக்மார்க் திமுக காரன் என்பதை சொல்வார்..

    ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து உயிரையும் துரும்பாய் தான் மதித்து
    தமிழ் பெயரை காத்த கூட்டம் இது..

    திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டத்தை, நான் செத்துப் பிழைச்சவன்டா பாடலில் இப்படி அருமையாக கொண்டு வந்திருப்பார் வாலி..

    அப்போது அமைச்சர் பதவிக்கு இணையான சிறுசேமிப்புத் துறை தலைவர் பதவியில் எம்ஜிஆர் இருந்தார்.. சிறு சேமிப்பை ஊக்குவிப்பது போல் படத்தில் காட்சிகள் வைத்து நிஜ எம்ஜிஆரும் திரையில் வருவார். அவருடன் முதலமைச்சர் கருணாநிதி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் மற்றும் தமிழக அமைச்சர்களும் காட்சியில் தோன்றுவார்கள்.

    படத்தில் ஜெயலலிதாவை பார்த்து எம்ஜிஆர் பாடும் ""நான் அளவோடு ரசிப்பவன்.. " என்று முதல் வரியை வாலி எழுத," எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று அடுத்த வரியை கலைஞர் எடுத்து கொடுத்தார்.

    படப்பிடிப்பு தொடங்கிய போது உயிரோடு இருந்த முதல் அமைச்சர் அண்ணா படம் வெளியாகும்போது உயிரோடு இல்லை. படத்தில் அவருடைய சவ ஊர்வல காட்சிகள் காட்டப்பட்டன.

    திமுகவில் எம்ஜிஆர் பின்னிப்பிணைந்து கலைஞர் குடும்பத்துடன் உச்சகட்ட பாசத்துடன் ஒட்டி உறவாடிய காலகட்டம் என்பதால் இவ்வளவு விஷயங்கள் படத்தில் இடம் பெற்றன..

    எங்கள் தங்கம் படம் வெளியாகி அமோகமாய் வெற்றி கண்டது. படத்தயாரிப்பாளர் முரசொலி மாறனுக்கு லாபத்தை பெருமளவில் வாரிக்கொடுத்தது.

    எம்ஜிஆர் அவர்களும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் எங்கள் தங்கம் படத்திற்கு பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்து நடித்துக் கொடுத்தது மட்டுமன்றி படத்தை வெற்றிப்படமாகவும் ஆக்கித் தந்தனர்.

    எங்கள் தங்கம் சாதாரண ஒரு சினிமா என்றாலும், அது தொடர்பான வரலாறு மிகவும் ஆச்சரியமானவை..

    சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1970 அக்டோபர் 9 ஆம் தேதி அதாவது இதே நாளில் தான் எங்கள் தங்கம் படம் வெளியானது.. பொன்விழா ஆண்டு..

    50 ஆண்டுகளுக்குள் எவ்வளவு பெரிய மாற்றங்கள்..

    பகிரப்பட்டது.......Jeelanikhan

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1082
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நீரும் நெருப்பும் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கரிகாலன்தான். காட்டிலே மனோகரால் வளர்க்கப்பட்ட முரட்டுக் குழந்தை. மணிவண்ணனோ நகரத்தில் வசதியான வணிகர் குடும்பத்தில் வளர்வார். இந்த இரண்டு கேரக்டர்களிலும் அந்தந்த பாத்திரத்தின் தன்மை, மனோநிலைக்கேற்றபடி நடிப்பில் வேறுபாடு காட்டி முத்திரை பதித்திருப்பார் மக்கள் திலகம். மணிவண்ணன் இடது கையால் நளினமாக, சிரித்தபடி வாள் வீசுவார். கரிகாலனின் வாள் வீச்சில் முரட்டுத்தனம் இருக்கும். காட்டில் வளர்ந்தவர் காட்டடியாய் அடிப்பார். மணிவண்ணனுக்கு ஏற்படும் உணர்ச்சிகளில் தான் சிக்கித் தவிப்பது, ஜெயலலிதாவை மணிவண்ணன் காதலிப்பதைப் பார்த்து பொறாமை, அதை மனோகரிடம் போட்டுக் கொடுப்பார். மனோகர் மணிவண்ணனிடம் அதுபற்றி விசாரிப்பார். நீதான் சொல்லிக் கொடுத்தாயா? என்பது போல மணிவண்ணன் பார்க்கும்போது, மேலே எங்கோ பார்த்தபடி சட்டைக் காலரை கடித்து இழுப்பது, கடைசியில் ஆனந்தனை குத்துவாள் வீசி கொன்றுவிட்டு அவர் போடும் சத்தத்தைக் கேட்டு அசோகனிடம் சண்டையிட்டபடியே திரும்பி பார்க்கும் மணிவண்ணனிடம், ‘காரணம் நான்தான்’ என்பதை பெருமிதத்துடன் கையால் நெஞ்சில் தட்டிக் காண்பிக்கும்போது... என்று படம் முழுவதும் கரிகாலன் நடிப்பு அதகளம். அவர் இறக்கும்போது நமக்குள் ஏற்பட்ட ‘புஸ்....’ படத்தை பாதித்துவிட்டது.

    இரு மக்கள் திலகமும் மோதும் சண்டைக் காட்சி மிகவும் அற்புதமாக எடிட் செய்யப்பட்டிருக்கும். தொழில்நுட்பம், கிராபிக்ஸ் இல்லாமல் அந்தக் காலத்திலேயே இருவரும் கைகளை கோர்த்தபடி பலப்பரிட்சையில் ஈடுபடும் காட்சி ஒன்றுபோதும். பிற்காலத்தில் ஆளவந்தான் படத்தில் இரண்டு கமல்ஹாசன் இதேபோல பலப்பரிட்சை செய்யும் கிராபிக்ஸ் காட்சி பிரபலம். எம்.எஸ்.விஸ்வநாதன் ரீரிகார்டிங், பின்னணி இசை செம்ம. ஜெயலலிதாவை ஆனந்தன் ஆட்கள் குதிரையில் துரத்தும் காட்சியில் பின்னணி இசை மிரட்டும். கடவுள் வாழ்த்துப் பாடும்..... பாடல் அடிக்கடி டிவியில் போட்டே பிரபலமாகிவிட்டது. மாலை நேரத் தென்றல், கன்னி ஒருத்தி மடியில்.. பாடல்கள் இனிமையாக இருந்தாலும் பெரிய ஹிட் ஆகவில்லை. ஜெயலலிதா பாடும் ... கொண்டு வா..., ஒரு அவியல்..., ஜோதிலட்சுமியின் கட்டு மெல்ல கட்டு பாடல்களை தவிர்த்திருக்கலாம்.

    நீரும் நெருப்பும் தாமதமாக வந்திருந்தால் ரிக்க்ஷாக்காரன் வெள்ளிவிழா கொண்டாடியிருப்பார். ஒரு பிளாக்பஸ்டர் படத்துக்கு அடுத்த படம் என்றால் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். ரிக்க்ஷாக்காரனுக்குப் பிறகு நீரும் நெருப்பும் படத்துக்கும் அப்படித்தான் எகிறியது. சென்னையில் கூட்டத்தை கட்டுப்படுத்த குதிரைப்படை வந்ததே அதற்கு சாட்சி. மறுவெளியீடுகளில் நிறைய முறை வந்தது. சன் லைப், பாலிமர், வசந்த், புதுயுகம் தொலைக்காட்சிகளில் இன்னும் நீரும்நெருப்பும் அடிக்கடி ஒளிபரப்பாகிறது. கடந்த வாரம் பாலிமரில் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பானது. இந்தப் படத்துடன் வந்த சில படங்கள் மறுவெளியீடுகளில் வருவதில்லை. டிவியிலும் ஒளிபரப்பாவதில்லை. அந்தப் படங்களின் மவுசு அவ்வளவுதான். முதல்வராக இருந்த கருணாநிதி நீரும் நெருப்பும் படத்தின் முதல் காட்சிக்கு வந்து பார்த்தார். அப்போது அவர் பேசும்போது, ‘இந்தப் படம் கலையுலகுக்கு ஒரு அறைகூவல். அறைகூவல் என்று ஏன் சொல்கிறேன் என்றால் ‘சவால்..’ என்று சொன்னால் வேறு ஏதாவது வந்து தொலைக்கும்’ ... என்று பேசியதை கேட்டு விவரம் புரிந்தவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது...... Swamy...

  4. #1083
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மறக்க_முடியாத_மக்கள்திலகம்

    "படுத்துக்கொண்டே ஜெயித்தார்"

    இந்த வார்த்தைகளை கேட்டவுடன் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் 1984ம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் மக்கள் திலகத்தின் உடல் நலக்குறைவு காரணமாக, படுத்துக்கொண்டே வென்றது நினைவுக்கு வரும்..

    ஆனால்...

    மக்கள் திலகத்தின் முதல் தேர்தல் வெற்றியையும் அவர் மருத்துவ மனையில் படுத்துக்கொண்டே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    1967.ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டுவிட்டன. பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கும், அறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கும் நேரடியான கடும்போட்டி நிலவியது. திராவிட முன்னேற்ற கழகத்தில் மக்கள் திலகம் இணைந்து அறிஞர் அண்ணாவின் தலைமையை ஏற்றிருந்தார்.சென்னை- செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்ற பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

    ஆனால் எதிர்பாராத விதமாக ஜனவரி 12ம் நாள் மக்கள் திலகம் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரால் தேர்தல் பரப்புரைக்கோ-பொதுக்கூட்டங்களுக்கோ செல்லமுடியவில்லை. மக்கள் திலகத்தின் கழுத்தை சுற்றி பேண்டேஜ் போடப்பட்ட படத்தை வெளியிட்டு, மக்கள் திலகத்திற்கு வாக்களிக்க கோரும் புகைப்படங்கள் பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் உலாவந்தன.((முதல் படம்))

    தேர்தல் முடிவு வந்தபோது மக்கள் திலகம் 27000 வாக்கு வித்தியாசத்தி காங்கிரஸ் வேட்பாளரை வென்றார். இருந்தபோதும் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேரவில்லை. மக்கள் திலகத்தின் வெற்றி சான்றிதழ், சட்டமன்ற உறுப்பினருக்கான பிரமாணங்கள் ஆகியன மருத்துவ மனையில் வைத்துத்தான் அவருக்கு வழங்கப்பட்டன ((இரண்டாவது படம்)) .

    சுடப்பட்டு விட்டோமே என சிறிதும் பின் வாங்காமல் தான் சார்ந்திருந்த இயக்கத்திற்காக பாடுபட்டு படுத்துக்கொண்டே வென்றார் மக்கள் திலகம்.

    இந்த தேர்தலின் போதுதான் அண்ணா சொன்னார் "எம்.ஜி.ஆரால் வரமுடியாவிட்டால் என்ன...அவர் தொப்பியையும், கண்ணாடியையும் தட்டில் வைத்து பரங்கிமலைக்கு அனுப்புங்கள்...கழகம் பெரும் வெற்றி பெரும்" என்றார். எத்துணை சத்தியமான வார்த்தைகள்...!!!...Sritharbabu

  5. #1084
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிங்காநல்லூரில் வசித்து மறைந்த பழம்பெரும் நாடகக் கலைஞர் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது இது.

    ஒரு கூட்டத்திற்கு அண்ணா சென்றிருந்தார். நல்ல கூட்டம். வரவேற்பு. அண்ணா காரிலிருந்து இறங்கியவுடன் மேல் சட்டையில்லாமல் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் ஓடிவந்து சுற்றுமுற்றும் பார்த்தான். 'என்ன தம்பி தேடறே' என்றார் அண்ணா. 'எம்ஜிஆர் வரலையா' என்று அவரிடமே கேட்டான். 'இல்லை!' என்று அவர் பதில் சொல்லி நகர, சிறுவன் விடவில்லை, 'நீங்க யாரு? எம்ஜிஆர் கட்சியா?'. 'ஆமாம் தம்பி!' என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தார் அண்ணா.

    அந்த அளவு செல்வாக்கு அண்ணா காலத்திலேயே எம்ஜியாருக்கு இருந்நது...sbb...

  6. #1085
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆரின் #இன்வால்வ்மெண்ட்.........

    நாடோடி மன்னன் திரைக்காவியத்திற்குப் பிறகு மக்கள்திலகத்திற்கு "நல்ல இயக்குனர்" என்ற பெயர் கிடைத்தது...

    "#என்னுடைய #சீடன்" என்று சொல்லிக்கொண்டிருந்த திரு.ராஜா சந்திரசேகர்...இப்படத்தைப் பார்த்ததும்..."#நீ #எனக்கு #குருவாகி #விட்டாய்" என எம்ஜிஆரை வாயாரப் புகழ்ந்தார்...

    தமிழ்த் திரைக்கே வித்திட்ட சித்தர் கே.சுப்ரமணியம் அவர்கள், "இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, என்கிட்ட கத்துக்க வந்தியே, #நானல்லவா #உன்னிடம் #கற்கவேண்டும்" என்றார்..

    இந்த ஊக்கத்தினால் எம்ஜிஆருக்கு மீண்டும் படங்களை இயக்கும் ஆர்வம் வந்தது. உடனே கதாசிரியர் காஜா முகைதீன் @ ரவீந்தரைக் கூப்பிட்டு சில கருத்துக்களைச் சொல்லி கதை எழுதச் சொன்னார். பெரியவர் சக்ரபாணிக்கு இது பிடிக்கவில்லை...

    அவர் ரவீந்தரைக் கூப்பிட்டு, "இப்ப எதுக்கு மறுபடி படமெல்லாம்? எடுத்த படத்தால் ஏழையாகி உக்காந்திருக்கோம். வாங்கினவங்க அள்ளிக் குவிக்கிறாங்க. அவனுக்கு வேற வேலை இல்ல. அவன் சொல்றதுக்கெல்லாம் ஆடாம பேசாப் போ..."

    ஆனால் எப்படியோ பெரியவரிடம், "அண்ணா, நாம ஆரம்பிச்ச எம்ஜிஆர் பிக்சர்ஸ் சும்மா இருக்கக்கூடாது.. ஒரு படத்தோட முடித்ததுன்னு மக்கள் நினைச்சுடக்கூடாது" ன்னு சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார்...எம்ஜிஆர்

    ஆனால் இம்முறை காதல் கதை...
    அதுவும் ஒரு புரட்சியான காதல் கதை... முஸ்லீம் கேரக்டர் நான்...
    ஹீரோயின் ஒரு இந்து.
    அருணா ஆஸப் அலி மாதிரி துணிச்சலா காட்டிக்கணும்...

    "இந்தப் படத்தைப் பார்ப்பவர்களின் #மனதில் #மதத்துவேஷம் #வந்துடக்கூடாது. #பிணைப்பு #தான் #வரணும்" என்றார் எம்ஜிஆர், ரவீந்தரிடம்.

    அப்படத்திற்கு எம்ஜிஆர் வைத்த பெயர் "கேரளக்கன்னி".

    இப்படி மும்முரமாக இருந்த சமயத்தில் 1959 ஜூன் 16 ல் எம்ஜிஆரின் கால் முறிவினால் இப்படம் அப்படியே நின்றது...

    பல மாதங்களுக்குப் பின்...

    1960 ல் ராமாவரம் தோட்டம் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டது...

    அங்கு எம்ஜிஆரைத் தேடி ரவீந்தரும், சில உதவியாளர்களும் சென்றனர்.. வீட்டில் எம்ஜிஆர் இல்லாததால் அங்குள்ள காவலாளி ரத்தினத்தை கேட்டதற்கு, "அதை ஏன் கேக்குறீங்க..உங்க அண்ணன் (எம்ஜிஆர்) செய்யற கூத்தை? பாக்குமரத்தடிக்குப் போங்க - எங்கே இருக்காங்கன்னு தெரியும்...!!!"

    போய்ப்பார்த்தார்கள். வியந்தார்கள். அங்கே யோகிகள் பூமிக்கடியில் உட்கார்ந்து தவம் செய்வதைப் போல் சமாதி போன்ற குழியில் உட்கார்ந்திருந்தார்..."என்னண்ணா இருக்க இடமாயில்லை" என்று கேட்டதற்கு...

    "#மனுஷனுக்கு #எத்தனை #மாடிவீடு #இருந்தாலும் #கடைசியிலே #தேவை #இந்த #ஆறடி #தான்..." மேலும் நமது 'கேரளக்கன்னி' படத்தின் க்ளைமாக்ஸை எப்படி படமாக்குறதுன்னு ஆழமா யோசிக்கிறதுக்கு இப்படி ஒரு ஏற்பாடு...

    அதோட, "heaven in grave" னு ஒரு நாவல். அதை நம்ம நாட்டுக்கதையா மாத்தி படமெடுக்க நினைப்பு. அதுக்கும் இந்த ஒத்திகை...

    தலைவரோட 'இன்வால்வ்மெண்ட்' எந்தளவு இருக்கு பார்த்தீர்களா!!!
    அவர் பல வெற்றிகளைக் குவித்ததற்கு இதுதான் முக்கிய காரணமும் கூட............bsm...

  7. #1086
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்

    அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.

    எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்
    எம்.ஜி.ஆருடன் அவரது நேர்முக உதவியாளர் க.மகாலிங்கம். (பழைய படம்).

    எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (சனிக்கிழமை) 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய வரலாறு குறித்து அவரிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றிய க.மகாலிங்கம் கூறியதாவது:-

    1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி(செவ்வாய்க்கிழமை), தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த நாள். அன்று காலை 10 மணியளவில் எம்.ஜி.ஆர். தன் ராமாவரம் தோட்டத்தில் மிகவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். அவருடைய அந்த செயல்பாடு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேராக அவர் தன் காரில் ஏறினார். சைகை மூலம் என்னையும் காரில் ஏற சொன்னார். நானும் அவருடன் பயணமானேன்.

    கார் நேராக லாயிட்ஸ் சாலையில் உள்ள அன்னை சத்யா திருமண மண்டபத்துக்கு (தற்போதைய அ.தி.மு.க. தலைமை அலுவலகம்) சென்றது. அங்கு அவர் கட்சி பெயரை அறிவித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.ஜி.ஆர்., ‘அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் கட்டிக்காக்கவும், அவர் விட்டு சென்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது’ என்று கூறினார்.

    அண்ணாவின் வளர்ப்பு பிள்ளையாக விளங்கிய எம்.ஜி.ஆர்., அண்ணா தோற்றுவித்த இயக்கமான தி.மு.க.வில் இருந்து வஞ்சக எண்ணம் கொண்ட சில துரோகிகளால் அக்டோபர் 10-ந்தேதி நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட நாளில் இருந்து பல தலைவர்களுடன், குறிப்பாக ராஜாஜி, பெரியார் ஆகியோருடன் ஆலோசனையும், அவர்களுடைய அறிவுரைகளை ஏற்று இயக்கத்தை தொடங்கினார். தன் இதயத்தில் தெய்வமாக இருக்கும் அண்ணாவின் பெயரிலேயே ‘அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று தன் இயக்கத்துக்கு பெயரினை சூட்டினார். இயக்கத்தின் கொடியிலும் அண்ணாவை நினைவுகூறும்விதமாக அவர் உருவம் பொறித்த கொடியையும் உருவாக்கினார். இவை அனைத்தும் 8 நாட்களில் உருவானது.

    எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர்க.மகாலிங்கம்.

    எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி தன்னுடைய சொந்த கட்டிடத்தையே தலைமை அலுவலகத்துக்காக கொடுத்தார். தொடர்ந்து இயக்கம் நடத்திட தேவையான நிதியையும் அவரே அளித்தார். இதற்காக அவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஆட்சியில் அமரும் வரை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். கட்சி வளர்ச்சிக்காக அவர் ஒரு நாளுக்கு 20 மணி நேரத்துக்கு மேலாக உழைத்தவர். ஒரு புறம் திரைப்பட படப்பிடிப்பு. மற்றொருபுறம் அரசியல் பணிகள்.

    1977-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்க மக்கள் அமோக வெற்றியை அளித்தார்கள். தமிழக மக்களின் சார்பாக வெற்றி திருமகள், எம்.ஜி.ஆரை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தாள்.

    அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது இப்போது ஏற்பட்டதல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலேயே இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராகவும், மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் போன்ற மூத்த தலைவர்கள் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளனர்.

    எம்.ஜி.ஆர். தன் காலத்துக்கு பிறகு இந்த இயக்கம் வீழ்ந்து விடாமல் இருக்கவும், துரோகிகளால் சிதைந்து விடாமல் இருக்கவும் விரும்பினார். அதனை நிறைவேற்றும்விதமாக அவர் வழியே வந்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை தாய் தன் பிள்ளைகளை காப்பது போல் காத்தார். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கியபோது அரசியல் எதிரிகள், அவரை பிடிக்காத சிலர் இது நடிகர் கட்சி, இது வெறும் 50 நாட்கள், 100 நாட்கள் தான் ஓடும் என்றெல்லாம் தங்கள் கோபத்தை கேலியும், கிண்டலுமாக வெளிப்படுத்தினர். ஆனால் இந்த வசைகளையெல்லாம் தாண்டி 50-வது ஆண்டினை நோக்கி இளமை துள்ளலோடு, பீடுநடை போடும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. தமிழக மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நிழல் தரும் ஆலமரமாக, கற்பக விருட்சமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சோதனைகள் பல கடந்து, சாதனைகளை பல உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. என்றால், அது மிகையாகாது.............

  8. #1087
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னிந்தியப்படவுலகின் சாதனைப்பேரரசின் மாபெரும் புரட்சிக்காவியமான "நீரும் நெருப்பும் "காவியத்தின் சாதனையை முதல் வெளியீட்டில் மட்டுமல்ல...
    இன்று வரை அக்காவியம் படைத்து வரும் பிரமிக்க வெளியீடுகளை சாதாரண நடிகனின்....
    சில விபத்துக்களில் ஏதே 100 நாள் 175 நாள் ஒட்டிய படங்களை
    பல ஏரியாக்களில் சாதாரணமாக வென்று தூக்கி அடித்துள்ளது.
    துவம்சம் செய்துள்ளது.

    பட்டணம்மா படத்தை தவிர மற்ற மூன்று படங்கள் 10 லட்சத்தை கடந்தது என்பது முழுபூசணிக்காய்யில்
    மறைக்கும் திருட்டுதனமான வேலையாகும்...
    தியேட்டர் வாரியாக
    வசூலை வெளியிடட்டும் பார்ப்போம்....
    ஞானஒளி 10 லட்சமாம்
    பூதூற்றி அவர்களுக்குள் கைதட்டிக்
    கொள்ளாட்டும்.
    பிளாசா மட்டும் தான்
    100 நாள்.
    பிராட்வே 69
    சயானி 69
    கமலா 56
    தமிழ்நாடு 20 நாள்
    8 லட்சம் கூட வசூல் இல்லை.
    நம்மிடம் வசூல் உள்ளது.

    பொய்யின் ஆதிக்கம் மேலும் கூடிக்கொண்டே வருகிறது.......ur...

  9. #1088
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சார் ...பொய்யின் உருவங்கள் ஞானஒளி சென்னையில் 10 லட்சம் வசூல் என பொய் சொல்லி பதிவிட்டதும்..
    அதன் வசூலை முழுமையாக வெளியிட முடியாது...
    ஏன் என்றால் 8 லட்சத்தையே நெருங்காத படம் இது.

    சில விபரங்கள் கீழே..
    ++++++++++++++++++
    1971 ல் பிளாசா
    குலமா குணமா
    100 நாள் வசூல்...2,58,890.00 தான்...
    அகஸ்தியா
    பெரிய தியேட்டர்
    அங்கு சொர்க்கம்
    77 நாள் வசூல் : 1,91,998.75 தான்
    அதைவிட சிறிய தியேட்டர் டிக்கட் விலையும் குறைவு
    பிராட்வே 69 நாள்
    எவ்வளவு வசூல் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
    அடுத்து சயானி
    1974 ல்
    நேற்று இன்று நாளை
    66 நாள் வசூல்
    1,74,372.20 காசு தான்.
    இதற்கு 2 ஆண்டுக்கு முன் வெளியான ஞானஒளி 69 நாள் வசூல் எவ்வளவு என்று யூகித்துக்கொள்ளவும்.
    அடுத்து
    1976 ல் கமலா
    உழைக்கும் கரங்கள்
    50 நாள் வசூல் : 1,92,258.00
    இதற்கு 4 ஆண்டுக்கு முன் வந்த ஞானஒளி
    56 நாள் வசூல் என்ன என்பதை
    யூகித்துக்கொள்ளாவும்.
    கடைசியாக
    தமிழ்நாடு 20 நாள்
    வசூல் 50 ஆயிரம் வைத்துக்கொண்டாலும்..
    மேலே உள்ள கணக்குபடி கூட்டினாலும்
    ஞானஒளி எப்படி 10 லட்சம் வசூல் வரும்...
    பொய்யான கணக்கு வைத்து தான் இவர்களின் படங்கள் ஓட்டபட்டு பொய்யான விளம்பரம் மூலம்
    அன்று பொது மக்களையும்... படம்பார்பவர்களையும் ஏமாற்றி வந்து இருக்கிறார்கள்..
    என்னிடம் ஞானஒளி வசூல் உள்ளது..
    இவர்களின் பித்தலாட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்....ur...

  10. #1089
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் பக்தர்களுக்கும் ஐயனின் கைபிள்ளைகளுக்கும் உள்ள பிரச்னையை தீர்க்கும் பொருட்டு எது வெற்றிப் படம் என்பதை தீர்மானிக்கும் வகையில் ஒரு சில
    யோசனைகளை முன் வைப்போம்.
    பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இருவருக்கும் உள்ள பிரச்னையே வடக்கயிறு மற்றும் ஸ்டெச்சர் பிரச்சினைதான். 100
    நாட்கள் ஓட்டினால்தான் வெற்றிப்படம் என்று சொல்லும் ஐயனின் கைபுள்ளைங்க ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

    100 நாட்கள் ஓட்டிய பெரும்பாலான படங்கள் மொத்த வசூலில் பெருத்த நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன.
    உதாரணமாக மதுரையை எடுத்துக் கொள்வோம். 1950 லிருந்து 1959 வரை வெளிவந்த படங்களுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் ஓடினால் 1,50,000 வசூல் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்ற படங்களை வெற்றி படங்களாக ஏற்றுக்கொள்ளலாம்.

    இதை எப்படி தீர்மானிப்பது என்றால்
    அந்தக் காலகட்டத்தில் ஒரு காட்சி அரங்கம் நிறைந்தால் சராசரி தியேட்டரில் சுமார் 800 ரூ வசூலாக வரும். ஒரு நாளைக்கு 3 காட்சிகள் என்றால் 100 நாட்களுக்கு மொத்தம் 300 காட்சிகள் வரும். மொத்த வசூல் ரூ 240000 வரும் அதில் 60 சதமானம் என்பது சுமார் 150000 ஆகும். முதல் 4 வாரத்தில் கிட்டத்தட்ட 90 சதமானமும் 50 நாட்கள் வரை 60 சதமானமும் 50-100 வரை 30 சதமானமும் சராசரியாக எடுத்துக் கொண்டால் மொத்த சராசரி 60 சதமானம் வரும்.

    அதையே அளவு கோலாக எடுத்துக் கொள்ளலாம். 1960-69 காலத்தில் ஒரு திரைஅரங்கு நிறைந்தால் ரூ 1000. வசூலாக வரும். இந்த காலகட்டத்திற்கு குறைந்தபட்ச வசூலாக 2 லட்சமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம். அதேபோல் 70-74 காலகட்டத்தில் அரங்கு நிறைந்தால் ரூ1200 வசூலாக வரும்.
    அந்த காலத்தில் குறைந்த பட்சம் 2.50 லட்சமாக நிர்ணயம் செய்யலாம். டிக்கெட் கட்டண உயர்வு சற்று அதிகமாக இருந்ததால் 75-77 காலத்தில் அதை 3 லட்சமும் அதற்கு மேலாகவும் நிர்ணயம் செய்யலாம்.

    "மனோகரா" படத்தின் விளம்பரத்தில் 7 நாட்களில் 84000 வசூல் என்ற விளம்பரம் சரிதானா என்று பார்க்க வேண்டும் என்றால் முதலில் மனோகரா சென்னையில் எத்தனை தியேட்டரில் ஓடியது என்று பார்த்தோமானால் சுமார் 5 தியேட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 5×3=15 காட்சிகள். 7 நாளைக்கு மொத்தம் 105 காட்சிகள்.
    1 காட்சி hf க்கு சுமார் 800 என்று வைத்துக் கொண்டால் 105×800= ரூ ரூ 84000 வருகிறதா?. அப்படியானால் சரியாகத்தான் கொடுத்திருக்கிறார்கள். அதே போல் நான் சொன்ன பார்முலாவை பயன்படுத்தி ஒவ்வொரு படத்துக்கும்
    hf வசூலும் விளம்பர வசூலையும் வைத்து படம் எப்படி ஓடியது? வடக்கயிறு பயன்படுத்தினார்களா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த அடிப்படையில் படங்களை தரம்பிரித்து வெற்றி தோல்வியினை
    ஓரளவு கண்டு கொள்ளலாம். 100 நாட்கள் ஓடாத படங்கள் கூட இந்த வசூலை எட்டி விட்டால் அதை வெற்றிகரமான படமாக ஏற்றுக் கொள்ளலாம். எனவே 100 நாட்கள் ஓடியதை வெற்றியின் அளவாக ஏற்றுக் கொள்வதை விட இந்த வசூல் அடிப்படையில் வெற்றி கொள்ளும் படத்தை நாம் ஏற்றுக் கொண்டால் எந்த பிரச்னையும் வராது.

    இதற்கு குறைவான வசூல் உள்ள படங்களை வடக்கயிறு என்றுதான் சொல்ல வேண்டும். இதை அளவாக கொண்டு பார்க்கும் போது "பாகப்பிரிவினை" சிந்தாமணியில் 98 நாட்களில் ரூ 229000 வசூல் பெற்றதால் அதை நல்ல வெற்றிப் படமாக ஏற்றுக் கொள்ளலாம். முதல் 100 நாட்களில் சுமார் 80 சதவீதம் பேர் பார்த்திருக்கிறார்கள். "நாடோடி மன்னன்" குறுகிய காலத்தில் 3 லட்சத்தை தாண்டியதால் அதை ஒரு மாபெரும் வெற்றிப் படம் என்றே சொல்லலாம்.

    மற்றபடி நமக்கு கிடைத்ததெல்லாம் கைபுள்ளைங்க உருவாக்கிய தொழில் பட்டறை வசூல்தான். நியூசினிமாவில் ஓடிய "உத்தம புத்திரன்" வசூலை எடுத்துக் கொண்டால் 105 நாட்களில் 127000. வசூலாக பெற்றது என்று பட்டறை பேக்டரி சொல்லுகிறது. குறைந்த பட்சம் 150000 மாவது பெற்றிருந்தால் வெற்றிப் படம். எனவே "உத்தம புத்திரன்" நிச்சயம் வடக்கயிறு படம்தான். அதே காலகட்டத்தில் வெளியான "நாடோடி மன்னன்" 133 நாட்களில் ரூ 322000 வசூலாக பெற்ற மாபெரும் வெற்றிப்படம். நிச்சயம் வெள்ளிவிழா ஓட தகுதியான படம்.
    இதே வசூல் வடக்கயிறு பார்ட்டியின் படத்துக்கு வந்தால் படத்தை 300 நாட்களுக்கு மேல் ஓட்டி ஆண்டுவிழா
    கொண்டாடியிருப்பார்கள்.

    அதேபோல் "மதுரை வீரன்" 180 நாட்களில் ரூ 367000 மும் "எங்க வீட்டு பிள்ளை" 176 நாட்களில் ரு385000 மும் வசூலாக பெற்று மாபெரும் சாதனை செய்தது.
    அதே நேரம் "வீர பாண்டிய கட்டபொம்மன்" பெற்ற வசூல் 181 நாட்களில் ரூ 287000.தான். இதில் ஸ்கூல் பிள்ளைகளிடம் பணம் பறித்ததை கழித்தால் பாவம் மிகவும் குறைவான வசூல்தான் வரும். எப்படி வெள்ளி விழா ஓட்டினார்கள் என்று தெரிகிறதா?.

    "மனேகரா"வை 156
    நாட்கள் ஓட்டி ரூ156000 வடக்கயிறு வசூலாக பெற்று வெள்ளி விழா ஓட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டது. இது அத்தனையும் கணேசன் ரசிகர்களின் பட்டறை வசூல்தான். உண்மையான வசூல் இதை விட குறைவாக இருக்க வாய்ப்புண்டு. சிவாஜியின் "பாகப்பிரிவினை" "பட்டிக்காடா பட்டணமா" தவிர மற்ற படங்களில் பெருவாரியான படங்கள் வடக்கயிறு போட்ட படங்கள்தான் என்பது தெள்ளத் தெளிவாகிறதா!.

    இந்த வடக்கயிறு மேட்டர் சிவாஜி படத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு எந்த நடிகர் படத்தையும் ஓட்டுவதற்கு யாருக்கும் இந்த மாதிரி கைபிள்ளைகள் கிடையாது என்பதால் இந்த பிரச்னையே எழாது. அடுத்த பதிவில் "நவராத்திரி", "படகோட்டி" இதில் எது
    வெற்றிப் படம் என்று பார்க்கலாம்.
    "தங்கப்பதக்கத்தி"ன் சென்னை வசூல் எப்படி வந்தது என்பதையும் ஆராய்ந்து பார்க்கலாம்..........ksr.........

  11. #1090
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மனோகரா திரைப்படம் சென்னையில் மட்டுமே ஒரே வாரத்தில் 84 லட்சம் ???????????????? வசூல். அதுவும் 1954 ல்.. அடேங்கப்பா.. தலை சுற்றுகிறது. இப்படி பொய் சொல்கிறார்களே.. அவர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா?............அருமையான பதிவு. எளிமையான எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கம். வசூலை திருத்துவதும் போலி வசூல் விவரங்கள் கொடுப்பதும் சிவாஜி கணேசனின் ரசிகர்களுக்கு வாடிக்கை. அந்தக் காலத்தில்தான் அப்படி என்றால் இப்போது டிஜிட்டல் காலத்திலும் பொய் சொல்கிறார்கள். அப்போதே இவர்கள் பொய்யை தகர்த்து தவிடுபொடி ஆக்கினோம். இவ்வளவு தொழில்நுட்பம் வந்தபிறகு விடுவோமா?மனோகரா சென்னையில் ஒருவார வசூல் 84 ஆயிரம்தான். இன்றைய பதிவில் ஆதாரம் உள்ளது. ஆனால் இதையே பின்னாளில் 84 லட்சம் (ஒரு வாரத்திலாம்) என்று மோசடியாக திருத்தி இருக்கிறார்கள். அதையும் வெளியிட்டேன். ஏற்கனவே காஞ்சிபுரத்தில் நம்நாடு ஓடிய ராஜா தியேட்டரில் சிவந்த மண் ஓடியதாகவும் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்றதாகவும் பொய் செய்தி வெளியிட்டனர். அதையும் அம்பலமாக்கினோம். சிவந்த மண் ராஜா தியேட்டரில் ஓடவே இல்லை என்று அவர்களது பொய்யை தோலுரித்தோம். அதற்கு பதில் இல்லை. வேறு எதையோ சொல்லி குழப்புவார்கள். அவர்களது இன்னொரு பொய்யை பார்ப்போம். மதுரையில் தங்கம் தியேட்டரில் கர்ணன் படத்தில் அவர்கள் வசூல் மோசடியை பார்ப்போம். மதுரை தங்கம் தியேட்டரில் கர்ணன் 14 வாரம் அதாவது 98 நாளில் வசூல் 1 லட்சத்து 86 ஆயிரம். இது அவர்களே வெளியிட்ட ஆதாரம். அது இங்கே தருகிறேன். ஆனால், ஓடிய 108 நாளில் 1 லட்சத்து 98 ஆயிரம் வசூலாம். அந்தப் பொய்யை இங்கே அடுத்த பதிவில் தருகிறேன்.......... Swamy...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •