-
22nd October 2020, 07:54 AM
#1111
Junior Member
Diamond Hubber
After hearing the story and fights of MAKKAL THILAGAM MGR from my friends me and my younger brother our mother to take us for the movie.She got permission from my father and took us to Mekala theatre.As the theatre was House full,my mother took us to Bhuveswari theatre where Thiruvilayadal was running empty.Me and my brother got disappointed and were unhappy throughout the show.Second time she took us early.Again we could not get tickets.Only the third time we were able to see the movie.Wow what a movie my God!..........
-
22nd October 2020 07:54 AM
# ADS
Circuit advertisement
-
22nd October 2020, 07:56 AM
#1112
Junior Member
Diamond Hubber
எம் தலைவரின்
"எங்க வீட்டுப்பிள்ளை" காவியம் 1965 ல் திரைக்கு வந்த 15 தினங்களில் தமிழ்நாடு எங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் படு பயங்கரமாக நடந்தது.. பலர் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார்கள்.
கரூரில் 100 நாள் கடந்து ஒடவேண்டிய எங்கவீட்டுப்பிள்ளை
துப்பாக்கி சூட்டில் 6 பேர் மரணமடைந்ததால் 2 காட்சி தான்
ஒடியது.
அப்படியும் 50 நாள் ஒடியது.
மீண்டும் 3 மாதம் கழித்து எங்கவீட்டுப்பிள்ளை
56 நாள் ஒடியது வரலாறு...
இதுப்போல் பல ஊர்களீல் ...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் மீறி மக்கள் திலகத்தின் எங்கவீட்டுப்பிள்ளை படைத்த இமாலய சாதனையை அந்த நேரத்தில் மட்டும் அல்ல
இன்று வரை தமிழ் நாட்டில் எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற முதல்வர் பதவியை....
பெண் நடை நடந்து
ஆணவ ஆட்டம் ஆடி....
தெருவிளையாடல் ஆடியும்..
போலி சிவன் வேடம் போட்டும்..
நான் அசைந்தால் ..சாந்தி...
புவனேஸ்வரி...கிரவுனும் ....
வசூல் இல்லாது ஒடும்...
என்ற ஆர்பாட்டத்தில்...
புராண பக்தி வேடம் போட்டும் முதல்வர் இல்லை...
எம்.ஜி.ஆர் ரசிகா உன் ஆணவம் பெரிதா என கேட்கும் அளவுக்கு அகந்தை கொண்ட நடிப்பு என்னும் சிவன் வேடத்தில்....
31.7.1965 ல் வெளியாகி...
31 தியேட்டரில் இழுத்து பிடித்து
50 நாளை ஒட்டி.....
அதில் 6 ஊர் மட்டமான
வசூலில் 100 நாள்....ஊர்கள்
குடந்தை 100 : 98,308.00
நாகர்கோவில் 100 : 84,720.00
கரூர் : 100. : 74,357.00
பாண்டி 100 :.98,068.00
தஞ்சை 100 : 1,02,313.00
மற்றும் நெல்லை 100 ஒட்டியும்
6 அரங்கு....
100 நாள் 6 லட்சத்தை கூட எட்டி பிடிக்க முடிய வில்லை
எல்லாமே மூதல் சென்டர் ஆகும்.
எங்கவீட்டுப்பிள்ளை
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் டோக்கன்... முறுக்கு... சோடா
விற்ற வசூலை கூட பலபடங்கள் ஒடியும் பெறவில்லை..
இதில் எங்க வீட்டுப்பிள்ளையுடன் போட்டிக்கு வந்த நால்வர் அணி படமான ""பழனி"" யும் அடங்கும்....
எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற வரலாறு காணாத வசூல் புயலினால்...
தெருவிளையாடல் உட்பட பல படங்கள் எங்க வீட்டுப் பிள்ளை திரையிட்ட அரங்கு என்னும் கடலில் மாற்றான் படம் ஒடும் தியேட்டரையே விட்டு அடித்து இழுத்து செல்லபட்டது..
1931ம் ஆண்டு
திரையுலகில் இருந்து.....
100 க்கு 100 வெற்றியை
1956 ல் மதுரை வீரன் பெற்றார்.
அதன் பின் ...
1958 ல் நாடோடி மன்னன் பெற்றார்...
அதன் பின் 7 ஆண்டுக்கு பிறகு
1965 ல் எங்க வீட்டுப்பிள்ளை பெற்றார்.
இந்த வரலாறு....
வசூல் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை உண்மையாக
எல்லா ஊர்களிலும்
( சாந்தி குத்தகை ஒன்று
இரண்டு நீங்கலாக)
தன் காவியங்கள் மூலம் மூடிசூடிய
ஏகபோக சக்கரவர்த்தி மக்கள் திலகம் ஆவார்...
எங்க வீட்டுப்பிள்ளை வரலாறு
ஆண்டு 55 யை கடந்தும் ...
வெற்றிக்கொடி வெள்ளித்திரையில் பட்டொளி
வீசி பறக்கிறது.....
சிறிய ஊரிலும் 50 நாளை கடந்த விளம்பரம் பாரீர்..
ஆதாரம் இல்லாது நாம் பதிவிடுகிறோமா....
கண் விழித்து பார்
இதுபோன்ற ஊரில் கணேசனின் 300 படத்தில் ஏதாவது 50 நாள் ஒடியுள்ளதா............bsr...
-
22nd October 2020, 08:00 AM
#1113
Junior Member
Diamond Hubber
மன்னாதி மன்னன் படத்தில் தலைவரின் நுணுக்கமான நடிப்புக்கு ஒரே ஒரு சான்று கூறுகிறேன். நாம் சில நேரங்களில் கேட்கும் பாடல்கள் நம் மனதை ஈர்ப்பதன் காரணமாக, நாள் முழுவதும் அந்தப் பாடல் வரிகளை நம்மையறியாமல் நமது வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு நம் செவியில் நுழைந்த பாடல் சிந்தையை நிறைத்திருக்கும். இதை ஆங்கிலத்தில் earworm என்று சொல்வார்கள்.
‘ஆடாத மனமும் உண்டோ’ பாடல் காட்சி முடிந்ததும் அடுத்து வரும் காட்சியின் போது, தலைவர், ஆடாத மனமும் உண்டோ என்று சன்னமான குரலில் பாடியபடியே வருவார். இதன் மூலம் அந்தப் பாடல் அந்த கதாபாத்திரத்தை எப்படி ஈர்த்துள்ளது என்பதை மனோதத்துவ ரீதியாக அருமையாக காட்டியிருப்பார் தலைவர்.
இனி மீள்பதிவு:
‘ஆடாத மனமும் உண்டோ?’
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.
கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.
‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.
அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.
அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.
சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.
எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?
மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்..........VND...
-
22nd October 2020, 07:01 PM
#1114
Junior Member
Diamond Hubber
"ராணி சம்யுக்தா" 1962 பொங்கலுக்கு வந்த சரித்திர திரைப்படம். திரைக்கதை வசனம் பாடல்கள் என முக்கிய பொறுப்புகளை கண்ணதாசன் தோளில் சுமந்து அதை செவ்வனே செய்து முடித்து வெளிவந்த படம் காலதாமதமாக வந்ததால் மக்களின் மனநிலை மாற்றத்தால் அடைய வேண்டிய பெரிய வெற்றி கை நழுவிப் போனது. சிரித்து சிரித்து சிறையிலிட்டவரின் சமூக படங்களில் லயித்து தன்னை மறந்த மக்கள் மீண்டும் சரித்திரம் காண விழையவில்லை போலும்.
இத்தனைக்கும் அருமையான பாடல்கள், தெள்ளுத்தமிழ் காதை குடையாத அற்புத வசனம், தேனில் குழைத்த பலாவின் சுவை, வசனத்தில். எதுகையும், மோனையும் பின்னி காதுக்கு இனிமை சேர்த்த படம். இறுதிக்காட்சியில் தலைவரின் மரணம் மாபெரும் வீரன் உள்நாட்டு சதியினால் கொல்லப்படுவதை மக்கள் மனம் ஏற்கவில்லை. கிளைமாக்ஸில் இனி போர்தான் முடிவு என்று தீர்வு சொல்லி படத்தை அத்துடன் முடித்திருந்தால் படத்தின் வெற்றி வேறு விதமாக இருந்திருக்கலாம்.
ஆகா! என்ன அருமையான நடிப்பு . ரஜபுத்திர வீரர்களின் வீரத்தை தலைவரின் வாள்வீச்சு, வீரத்தின் அடையாளமாக எதிரியை மன்னிக்கும் தன்மை, தன் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொண்ட ஒற்றன் வேடம் என்று பாத்திரத்தின் தன்மை அறிந்து அதை மேலும் பரிமளிக்க செய்திருப்பார். அரசவை காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும்.
தங்கவேலு ராகினி நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.
கோரி முகமதுவாக நடித்திருக்கும் நம்பியார் வில்லன் நடிப்பை இறுக்கமான முகத்துடன் வாரி வழங்கியிருப்பார். சக்கரபாணி சதிகாரனாக வந்து கதி கலங்க வைத்திருக்கிறார். நாடோடி மன்னனில் வரும் சக்கரபாணி 'மன்னர் மயங்கி விட்டார் மருந்து நன்றாக வேலை செய்கிறது' என்று சொல்லும் வில்லத்தனத்தை காட்டிலும் சற்று அதிகமான வில்லத்தனம். நல்ல அருமையான நடிப்பு. சாதுவாக நடிக்கும்
சகஸ்வரநாமம் இதில் ஜெயச்சந்திரன் வில்லனாக நடித்து பழியுணர்ச்சியை மனதில் வைத்து புழுங்கி காலம் வரும் போது அதை வெளிக்காட்டும் விதம் அவரது பண்பட்ட நடிப்பை காட்டுகிறது.
ஒவ்வொரு காட்சியிலும் கண்ணதாசன் காட்சியை மனதில் வைத்துக்கொண்டு அவர் தீட்டிய வசனம் அற்புதம். கண்ணதாசனின் அற்புத திறமையை மனதில் கொண்டே "நாடோடி மன்னனு"க்கு பிறகு இந்த பட வாய்ப்பை அவருக்கு தந்திருப்பார் என்று தெரிகிறது. வேறு சிலரிடம் கொடுத்திருந்தால்
கூழாங்கற்களை காதில் உரசி ஓசையை அதிகம் எழுப்பி காதிற்கு கதையின் இதம் தெரியாமல் காது வலி ஒன்றே தெரியும்படி எழுதி நோக்கத்தை சிதைத்து அவர் வாழ்க்கையை வளமாக்கி கொண்டிருப்பர்.
கணக்கிலடங்கா இனிமையான பாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடை போடாமல் ரசனைக்கு விருந்தாக அமைந்தது.
'முல்லை மலர்க்காடு' என்ற ஆரம்ப பாடலில் அத்தனை கவிநயம். 'ஓகோ வெண்ணிலா' 'நிலவென்ன பேசும்' எவர்கிரீன் பாடல்கள். 'சித்திரத்தில் பெண்ணெழுதி' 'அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி' போன்ற சோகப்பாடல்கள் 'மன்னவர் குலம் பாரம்மா' பாடலில் அத்தனை மன்னர்களின் பெருமையை நாட்டின் பெயரோடு சேர்த்து எழுதும் திறன் யாருக்கு வரும் கவிஞரைத்தவிர.
பிருத்வியின் மாறுவேடம் அவரின் முகத்தை மட்டுமல்ல அவரது குரலின்
மாறுபாடு மற்றும் கண்களில் தெரியும் குள்ளநரித்தனம் என்று நடிப்பிற்கே புது முகவரி தந்திருக்கும் பாங்கு படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. மாற்று நடிகராக இருந்தால் அந்தக்காட்சியில் உறுமி வேண்டாத வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு பேசி பாத்திரத்தின் தன்மையை சிதைத்து பார்க்க வந்த மக்களை வதைத்து சித்தூர் ராணி பத்மினியை போல் ஒரு மகத்தான தோல்விப்படத்தை தந்து கைபிள்ளைகளை மேலும் கதற விட்டிருப்பார்.
"சித்தூர் ராணி பத்மினி" சென்னை சாந்தியில் வெளியாகி 20 நாட்கள் ஓடி வரலாற்று சிறப்பு மிக்க வசூலை பெற்றது. 20 நாட்களில் ரூ 39191.40. பெற்று கைபிள்ளைகளை
கலங்கடித்தது. மற்ற படங்களுக்கு வடக்கயிறு, ஸ்டெச்சரோடு அலைபவர்கள் குறைந்த பட்சம் ஒரு தூக்கு கயிறு கிடைத்தாலாவது படத்தை தூக்கி நிறுத்தியிருப்பார்கள். அந்த நேரத்தில் கயித்துக்கடை ஸ்ட்ரைக்கோ என்னவோ கைபிள்ளைங்க படத்தை கைவிட்டு விட்டார்கள். சுருளி, தேங்காய், சில்க் கதாநாயகன் நாயகியாய் நடித்த படங்கள் கூட இவ்வளவு வசூல் சாதனை செய்தது கிடையாது.
நல்லவேளை கதையும் தப்பி நம்மையும் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதிகமான குளோஸப் காட்சியை தவிர்த்து போர்க்காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். படம் சென்னையில் கெயிட்டி, புவனேஸ்வரி, லிபர்டி, பிரைட்டன் என்ற நான்கு திரையரங்குகளில் வெளியாகி 56 நாட்கள் ஓடி குறைந்த பட்ச வெற்றியை பதிவு செய்தது. மற்ற முக்கிய நகரங்களில் அதிக பட்சமாக 70 நாட்கள் வரை ஓடியது. அடுத்து வந்த "மாடப்புறா" பிப் 16ல் வெளியானதால் நீடித்த ஓட்டம் தடையானது. இந்த பதிவு இத்துடன் நிறைவு செய்து கொள்ளலாம். வசூல் விபரம் உதவி: திரு சைலேஷ் அவர்கள்..........ksr.........
-
22nd October 2020, 07:02 PM
#1115
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்களின் கோரிக்கை
1. மக்கள் திலகத்தின் படஙக்ளின் நெகட்டிவ் - முழுமையாக நல்ல நிலையில் உள்ளவை எத்தனை ?
2. பல படங்கள் சேதாரத்துடன் இருந்தாலும் நவீன தொழில் நுட்பத்தில் சரி செய்ய இயலுமா ?
3. ஒளிவிளக்கு - நெகடிவ் பூனா வில உள்ளதாக தகவல் .
4. படகோட்டி - பணத்தோட்டம் இரண்டு படங்கள் நெகட்டிவ் தேவி திரை அரங்கு உரிமையாளரிடம் இருப்பதாக தகவல்
5, நல்ல திரை அரங்கில் புதுப்பிக்கப்பட்ட எம்ஜிஆர் படங்களை திரையிட அனுமதி கிடைக்க இயலுமா ?
6. தமிழக அரசிடம் முறையிட்டு வரிவிலக்கு பெற இயலுமா ?
7. கலைவாணர் அரங்கம் -உள்ளிருக்கும் ஒரு திரை அரங்கத்திற்கு எம்ஜிஆர் அரங்கம் என்று பெயர் வைக்கலாமே ?
8. எம்ஜிஆர் ஆவணங்கள்
பல ஊர்களில் பல நண்பர்களிடம் இருக்கும் அரிய பொக்கிஷங்கள் அனைத்தையும் பெற்று எம்ஜிஆர் சிறப்பு மலரில் இடம் பெற முயற்சிக்க வேண்டும் .
1936-1977 முதல் வெளியீட்டில் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள் பற்றிய முழு விளம்பரங்கள் செய்திகள் திரை அரங்கு படங்கள் சிறப்பு மலர்கள்
ரசிகர்கள் வெளியிட்ட நோட்டீஸ் மற்றும் இதர பொக்கிஷங்கள்
1977- 2020 மறுவெளியீட்டில் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள் பற்றிய முழு விளம்பரங்கள் செய்திகள் திரை அரங்கு படங்கள் சிறப்பு மலர்கள்
ரசிகர்கள் வெளியிட்ட நோட்டீஸ் மற்றும் இதர பொக்கிஷங்கள்
நண்பர்களே
இன்றைய சூழலில் எம்ஜிஆர் புகழ் காப்போம் என்று கூறும் தலைமையின் பார்வைக்கு மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைப்போம் ....vnd...
-
22nd October 2020, 07:02 PM
#1116
Junior Member
Diamond Hubber
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் மிகச் சிறந்த திரைப்பட நடிகர் மட்டுமல்ல மிகச்சிறந்த பொதுநலவாதி உயர்ந்த நோக்கங்களை உடைய ஒரு புனிதமான பிறவி ஒரு சிறந்த தர்மகர்த்தா எண்ணம் போல வாழ்வு என்று கூறுவார்கள் புரட்சித்தலைவரின் உயர்ந்த ரக எண்ணங்கள் அவரின் பிறவியிலேயே வந்தவை எனவேதான் புரட்சித் தலைவரால் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடிந்தது நான் இன்றைய அரசாங்கத்திடம் கெஞ்சி கேட்பதெல்லாம் வேறு ஒன்றும் இல்லை தயவுசெய்து புரட்சித்தலைவர் நடித்த படங்களை தேசிய மயமாக்கி அரசாங்கம் தனது சொந்த செலவில் அல்லது நமது கழக உடன்பிறப்புகள் இடம் வசூல் செய்தாவது அவர் நடித்த திரைப்படங்களை புத்தம் புது பாலியஸ்டர் பிரின்ட் ஆக நவீன சினிமாத்துறை விஞ்ஞான வல்லுனர்களின் உதவிகொண்டு புதுப்பித்து மீண்டும் நம் மக்களிடம் அந்த தெய்வீக மகானின் திரைப்படங்களை கொண்டு செல்ல வேண்டும் அந்த உத்தமர் இன் அருமை தேர்தல் வந்தால் மட்டுமே தெரியும் நிழலின் அருமை வெயிலில் தெரியும் புரட்சித்தலைவரின் அருமையும் பெருமையும் புரட்சித் தலைவரின் புகழ் மக்கள் செல்வாக்கும் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தெரியும் அந்தப் பெரியவரின் பெயரை சொல்லாமல் மக்களிடம் ஓட்டு வாங்க முடியாது எனவே பதவியில் இருக்கும் போதே அந்த மனிதனுக்கு செய்யும் கைங்கரியம் என்னவென்றால் அவர் நடித்த திரைப்படங்களை போற்றிப் பாதுகாப்பது அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தை போற்றி பாதுகாப்பது தொடர்ந்து அவரின் பெயரால் அங்கு அன்னதானம் தொடர்ந்து நடத்துவது அந்தப் புனிதர் பயன்படுத்திய பொருட்களை அருங்காட்சியமாக மிக மிக உயர்ந்த பாதுகாப்புடன் வைத்து போற்றுவது மக்கள் அவற்றை இலவசமாக கண்டு களிக்க வழிவகை செய்வது அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் இன்றளவும் உயிருடன் ஒரு சிலர் இருப்பார்கள் அவர்களிடம் பேட்டி கண்டு மலரும் நினைவுகளை மக்களிடம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது அவரைப் பற்றிய நினைவுகளை மக்களிடம் கொண்டு செல்வது எல்லாவற்றிற்கும் மேலாக அந்த மகானின் எண்ணங்கள் லட்சியங்கள் கொள்கைகளை தொடர்ந்து சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் கடைப்பிடிப்பது போன்றவை மட்டுமே இக்கால ஆட்சியாளர்கள் அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும் செய்வார்களா.... Srinivasan Kannan...
-
22nd October 2020, 07:03 PM
#1117
Junior Member
Diamond Hubber
சிவாஜி கணேசன் ரசிகர்கள் எப்போதுமே படத்தை ஓட்ட திருவிளையாடலில் ஈடுபடுவார்கள். வசூல் சாதனைகளையும் அடித்துவிடுவார்கள். எங்க வீட்டுப் பிள்ளையை திருவிளையாடல் வசூலில் வென்றது என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். இரண்டு படங்களின் 100 நாள் வசூலையும் அவர்களே போடுவார்கள். அதில் பார்த்தாலும் திருவிளையாடலை விட எங்க வீட்டுப் பிள்ளை அதிக வசூல் இருக்கும். அப்படியும் கவலையே படமாட்டார்கள். சென்னையில் மட்டும் திருவிளையாடல் கூடுதல் வசூல். அந்த உண்மையை நாம் ஒப்புக் கொண்டிருக்கிறோம். அதற்கு நியாயமான காரணமும் சொல்லி இருக்கிறோம். தியேட்டர்கள் பெரியது, சிறியது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு காரணம், திருவிளையாடல் ஓட்டப்பட்ட அவர்களது சொந்த சாந்தி தியேட்டர் ஏசி தியேட்டர். ஏசி இல்லாத தியேட்டர்களை விட ஏசி தியேட்டரில் கட்டணம் அதிகம் என்பதும் முக்கிய காரணம். அப்போது தேவி பாரடைஸ் ஏசி தியேட்டர் இருந்து எங்க வீட்டுப் பிள்ளை அதில் ரிலீஸ் ஆகியிருந்தால் திருவிளையாடலை சென்னையிலும் நசுக்கி விளையாடியிருக்கும்.
அதேபோல தங்கப்பதக்கம் படமும் சாந்தி தியேட்டரில் 23 வது வாரமே வசூல் படுத்துவிட்டது. இதனால், 168 நாளோடு கடைசி என்று ஒட்டப்பட்டு மறுநாள் முதல் அதாவது 169வது நாளில் பாக்கெட் மார் என்ற இந்திப் படம் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டது. (இந்த பாக்கெட் மார் படம்தான் மக்கள் திலகம் நடிக்க திருடாதே ஆனது ) தங்கப்பதக்கம் 23 வது வாரத்தில் அவுட்டானது பற்றி அப்போது பிலிமாலயா பத்திரிகையிலும் செய்தி வந்தது. ஆனாலும் தங்கப்பதக்கத்தை 168 நாளில் கடைசி என்று அறிவிக்கப்பட்ட பின்னும் வெள்ளிவிழா வீம்புக்காக மேலும் 8 நாட்கள் இழுத்து 176 நாட்கள் ஓட்டினர். அதிலும் கடைசி 8 நாட்களில் வசூல் 61 ஆயிரத்தை தாண்டியதாக சொல்லப்பட்டது. எல்லாக் காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனால்தான் இது நடக்கும். கூட்டமே இல்லாத படத்துக்கு கடைசி 8 நாளில் திடீரென மக்கள் அலைகடலாய் திரண்டு வந்து எல்லா காட்சிகளிலும் தியேட்டரை நிரப்பிவிட்டார்களா என்ன? வழக்கம்போல மதுரை தங்கத்தில் கர்ணனுக்கு 108 நாளில் போலி வசூல் கணக்கு காட்டியது போல இதற்கும் கணக்கு காட்டிவிட்டார்கள். அப்படியும் சென்னையில் தேவி பாரடைஸில் வாலிபனின் 13 லட்சத்து 58 ஆயிரம் வசூல் சாதனையை நெருங்கமுடியவில்லை.
இன்னொரு விஷயம்.. இன்று நடிகப் பேரரசர் கூட சிவாஜி கணேசன் சிகரெட் பிடிப்பது பற்றி சொல்லி இருக்கிறார். சிகரெட், மதுவை தெய்வ வேடத்தில் நடிக்கும்போது கூட எப்படி அவர் பயன்படுத்துகிறார். சரி..போகட்டும். சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது எல்லாம் சிவாஜி கணேசனின் சொந்த விஷயம். தெய்வ பாத்திரங்களில் நடிக்கும்போதும் லாகிரி வஸ்துக்களை அவர் உபயோகிப்பது நாம் ஏற்க முடியாவிட்டாலும் அவர் மனநிலையைப் பொறுத்தது. சரி...ஆனால், நம்மை பெற்ற தாய் கண்கண்ட தெய்வம் இல்லையா? இன்னும் சொன்னால் தெய்வத்தைவிட தாய் உயர்ந்தவர் இல்லையா? அந்த தாயார் முன்பே சிவாஜி கணேசன் சிகரெட் பிடிப்பார். எப்படி இவரால் முடிகிறது? தாயை எந்த அளவுக்கு இவர் மதித்துள்ளார்?.. இதை சிந்திக்கும்போது எல்லா தாய்மார்களையும் தன்னை பெற்ற தாயாக கருதி மதித்த மக்கள் திலகத்தை மனம் போற்றுகிறது..... இங்கே படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, தனது தாய் ராஜாமணி அம்மாளுடன் கையில் சிகரெட்டுடன் சிவாஜி கணேசன். படம் உதவி: சைலேஷ் பாசு அவர்கள் முகநூல்...... Swamy...
-
22nd October 2020, 07:04 PM
#1118
Junior Member
Diamond Hubber
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார். அவர் ஒருசமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். கண்டார். “காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் … நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன் . ஒரு சூட்” என்று கொடுத்தார் “அளவு எது ? நாயுடு கொடுத்தாரா?” என்று கேட்டார் மக்கள் திலகம் .”இல்லை , ஒரு உத்தேசம் தான் . என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன் ” என்று போடச் சொன்னார் , அத்தோடு ரூ20,000 பணம் கொடுத்தார் . “எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க “உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன், நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர் … மக்கள் திலகம் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து” என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி … எடுத்துக்குங்க ” என்றார் . இதுபோன்று எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்த சின்னச் சின்ன நிகழ்வுகள், அவர் ஒவ்வொருவரிடமும் நடந்துக் கொண்ட விதம் அவரது தாயாள குணம்,......sbb...
-
22nd October 2020, 07:07 PM
#1119
Junior Member
Diamond Hubber
எம் தலைவரின்
"எங்க வீட்டுப்பிள்ளை" காவியம் 1965 ல் திரைக்கு வந்த 15 தினங்களில் தமிழ்நாடு எங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் படு பயங்கரமாக நடந்தது.. பலர் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார்கள்.
கரூரில் 100 நாள் கடந்து ஒடவேண்டிய எங்கவீட்டுப்பிள்ளை
துப்பாக்கி சூட்டில் 6 பேர் மரணமடைந்ததால் 2 காட்சி தான்
ஒடியது.
அப்படியும் 50 நாள் ஒடியது.
மீண்டும் 3 மாதம் கழித்து எங்கவீட்டுப்பிள்ளை
56 நாள் ஒடியது வரலாறு...
இதுப்போல் பல ஊர்களீல் ...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் மீறி மக்கள் திலகத்தின் எங்கவீட்டுப்பிள்ளை படைத்த இமாலய சாதனையை அந்த நேரத்தில் மட்டும் அல்ல
இன்று வரை தமிழ் நாட்டில் எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற முதல்வர் பதவியை....
பெண் நடை நடந்து
ஆணவ ஆட்டம் ஆடி....
தெருவிளையாடல் ஆடியும்..
போலி சிவன் வேடம் போட்டும்..
நான் அசைந்தால் ..சாந்தி...
புவனேஸ்வரி...கிரவுனும் ....
வசூல் இல்லாது ஒடும்...
என்ற ஆர்பாட்டத்தில்...
புராண பக்தி வேடம் போட்டும் முதல்வர் இல்லை...
எம்.ஜி.ஆர் ரசிகா உன் ஆணவம் பெரிதா என கேட்கும் அளவுக்கு அகந்தை கொண்ட நடிப்பு என்னும் சிவன் வேடத்தில்....
31.7.1965 ல் வெளியாகி...
31 தியேட்டரில் இழுத்து பிடித்து
50 நாளை ஒட்டி.....
அதில் 6 ஊர் மட்டமான
வசூலில் 100 நாள்....ஊர்கள்
குடந்தை 100 : 98,308.00
நாகர்கோவில் 100 : 84,720.00
கரூர் : 100. : 74,357.00
பாண்டி 100 :.98,068.00
தஞ்சை 100 : 1,02,313.00
மற்றும் நெல்லை 100 ஒட்டியும்
6 அரங்கு....
100 நாள் 6 லட்சத்தை கூட எட்டி பிடிக்க முடிய வில்லை
எல்லாமே மூதல் சென்டர் ஆகும்.
எங்கவீட்டுப்பிள்ளை
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் டோக்கன்... முறுக்கு... சோடா
விற்ற வசூலை கூட பலபடங்கள் ஒடியும் பெறவில்லை..
இதில் எங்க வீட்டுப்பிள்ளையுடன் போட்டிக்கு வந்த நால்வர் அணி படமான ""பழனி"" யும் அடங்கும்....
எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற வரலாறு காணாத வசூல் புயலினால்...
தெருவிளையாடல் உட்பட பல படங்கள் எங்க வீட்டுப் பிள்ளை திரையிட்ட அரங்கு என்னும் கடலில் மாற்றான் படம் ஒடும் தியேட்டரையே விட்டு அடித்து இழுத்து செல்லபட்டது..
1931ம் ஆண்டு
திரையுலகில் இருந்து.....
100 க்கு 100 வெற்றியை
1956 ல் மதுரை வீரன் பெற்றார்.
அதன் பின் ...
1958 ல் நாடோடி மன்னன் பெற்றார்...
அதன் பின் 7 ஆண்டுக்கு பிறகு
1965 ல் எங்க வீட்டுப்பிள்ளை பெற்றார்.
இந்த வரலாறு....
வசூல் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை உண்மையாக
எல்லா ஊர்களிலும்
( சாந்தி குத்தகை ஒன்று
இரண்டு நீங்கலாக)
தன் காவியங்கள் மூலம் மூடிசூடிய
ஏகபோக சக்கரவர்த்தி மக்கள் திலகம் ஆவார்...
எங்க வீட்டுப்பிள்ளை வரலாறு
ஆண்டு 55 யை கடந்தும் ...
வெற்றிக்கொடி வெள்ளித்திரையில் பட்டொளி
வீசி பறக்கிறது.....
சிறிய ஊரிலும் 50 நாளை கடந்த விளம்பரம் பாரீர்..
ஆதாரம் இல்லாது நாம் பதிவிடுகிறோமா....
கண் விழித்து பார்
இதுபோன்ற ஊரில் கணேசனின் 300 படத்தில் ஏதாவது 50 நாள் ஒடியுள்ளதா............bsr...
-
22nd October 2020, 07:08 PM
#1120
Junior Member
Diamond Hubber
"எங்கிருந்தோ வந்த குரல் ... "
ஜெயசித்ராவுக்கு மணவாழ்த்து.
கலையுலகில் தங்களுக்கு எத்தகைய பிரச்னை ஏற்பட்டாலும் உடன்பிறவா சகோதரர் ஒருவர் இருக்கின்றார் என்று, எம்.ஜி.ஆரிடம் உள்ளன்போடு கூறி, ஆலோசனை பெற்றோர் ஏராளம்.
ஜெயசித்ரா சிறந்த குணச்சித்திர நடிகை திரையுலகில் பல வெள்ளிவிழாப் படங்களிலும், வெற்றிப் படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர். நல்ல நடிகை என்று முன்னணிக் கலைஞர்களால் பாராட்டப்பட்டவர். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சில பிரச்னைகள் வந்து திக்குமுக்காட வைத்தன. துணிச்சல்காரரான ஜெயசித்ரா சோதனைகளைச் சந்தித்துத் துவண்டு போயிருந்தார் . இவைகளெல்லாம் எம்.ஜி.ஆருக்கு எப்படித்தான் தெரியுமோ?
தொலைபேசி மணி ஒலித்தது! ஜெயசித்ரா பதட்டத்தோடு ரிசீவரை எடுத்து, காதில் வைத்தார். “ நான்தான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன். எல்லாம் கேள்விப்பட் டேன். இதுபோல் சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடி வரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக் கூடாது . தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கவலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத் துக்கொள்." தெய்வத்தின் திருக்குரல் போல் ஒலித்தது.
அவர் கூறியதைப் போலவே ஜெயசித்ராவின் வாழ்வில் சூழ்ந்த கருமேகங்கள் விலகி , ஒளி வெள்ளம் பரவியது.
"சக்தி லீலை நாட்டிய நாடகம்" அரங்கேற்றத்துக்கு வருகை தந்து வாழ்த்த வேண்டும் என்று ராமாவரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை அழைத்தார் ஜெயசித்ரர். " ஜப்பான் செல்லுகிறேன். நேரில் வந்து வாழ்த்துவதை இப்போதே வாழ்த்தி விடுகிறேன்" என்று எம்.ஜி.ஆர். முன்பே ஆசி கூறி அனுப்பி வைத்தார்.
திருமணம் செய்து கொள்ள ஜெயசித்ரா தீர்மானித்திருந்த நேரம்!
திடீரென்று ஒரு நாள் எங்கிருந்தோ டெலிபோனில் பேசினார். "திருமணம் என்பது சாதாரணமாக வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்து விடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அதுதான் அஸ்திவாரம் கவனமாகப் பார்த்து முடிவு செய். ஒன்றைத் தீர்மானித்த பின்பு எதற்காகவும் அச்சப் படாதே! உனக்கு எனது நல்வாழ்த்துக்கள்"
சிங்கப்பூர் செல்ல இருந்த எம்.ஜி.ஆர் . எங்கிருந்தோ கேபிளில் பேசினார் . அவரிடம் சென்று திருமணத்தைப் பற்றிக் கூறி ஆலோசனை பெற வேண்டுமென்று ஜெயசித்ரா நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவர் ஆலோசனையும், ஆசியும் அட்வான்சாகவே கிடைத்துவிட்டது . கணேஷ் அவர்களை ஜெயசித்ரா திருமணம் செய்து கொண்டு, நல்ல துணைவியாகவும், தாயாகவும் வாழ்கிறார்.
எப்போது ராமாவரம் தோட்டம் சென்றாலும் , " சாப்பிட்டாயா?" என்ற கேள்விதான் தாயுள்ளம் கொண்ட எம்.ஜி.ஆரிட மிருந்து முதலில் பிறக்கும்.
" இருந்த இடத்திலிருந்தே சமையல் அறைக்கு போன் செய்து, சூடாக முதலில் பொங்கல் கொடுத்துவிட்டு , அப்புறம் என்னென்ன பரிமாற வேண்டும் என்று சொல்லுவார். சாப்பிட்ட பின்புதான் பேசுவார் . ஜானகி பேசுவார் . ஜானகி அம்மாவும் அப்படித்தான் என்றார் ஜெயசித்ரா.
அமெரிக்காவிற்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக எம்..ஜி.ஆர் . சென்று திரும்பி வந்திருந்தார்.
திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான சந்நிதானத்தில் நெஞ்சுருக வேண்டிக்கொண்டு, ஜெயசித்ரா குடும்பத்துடன் சென்னை திரும்பினார் . திருப்பதி பிரசாதங்களை எடுத்துக் கொண்டு, பழங்கள் வாங்கிக் கொண்டு எம்.ஜி ஆரைப் பார்ப்பதற்கு ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றார் . உள்ளே சென்றதும் திகைத்துப்போய் நின்றுவிட்டார்!
சாதிமத பேதமின்றி பலர். குடும்பம். குடும்பமாக அங்கே கூடியிருந்தனர். வயதான மூதாட்டிகள், பிராமண குலத்தைச் சேர்ந்த மாமிகள் .. இதோ இந்தக் கஷாயத்தைச் சாப்பிடுங்கோ ஒரு குறையும் வராது . | தம்பி . இந்த மருந்து உனக்காகவே தயார் செய்தது மறக்காம தினந்தோறும் சாப்பிடு. ஆயிரம் வருஷத்துக்கு ஆரோக்கியமா இருப்பே..."
இவ்வாறு மருந்துகளை மிகவும் பாசத்தோடு நீட்டிய தாய்மார்கள் பலரையும், பழங்களையும் கோவில் பிரசாதங்களையும் வழங்கிய சகோதரிகளையும், சகோதரர்களையும், குழந்தைகளையும் கண்ட ஜெயசித்ராவுக்குக் கண்கள் கலங்கின. அவரே கூறினார் ..."
ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு, உண்மையான வாஞ்சையோடு, அவருக்காகத் துடித்த காட்சி, இன்னமும் என் நெஞ்சத்திரையில் அப்படியே தெரிகின்றது. இதைப்போல் அன்பைப் பொழிந்ததை நான் அதுவரையில் கண்டதில்லை. அவர்கள் அனைவரையும் முகமலர்ச்சியோடு தனித்தனியே விசாரித்து அனுப்பி வைத்தார். அதன் பின்பு நான் பிரசாதத்தையும், பழங்களையும் கொடுத்தேன். " நான் என்ன குழந்தையா? இதெல்லாம் எதற்கு என்று பழங்களைப் பார்த்தபடி எம்.ஜி.ஆர். கேட்டார் . பின்னர் எம்.ஜி.ஆரே அங்கிருந்த புகைப்படக்காரரை அழைத் துப் படம் எடுக்கும்படி கூறினார்.
அந்தப் புகைப்படத்தை இப்போது பொக்கிஷம் போல் ஜெயசித்ரா பாதுகாத்து வருகிறார். "மக்களோடு ஒன்றுகலந்து, மக்கள் இதயத்தில் நீக்கமற நிறைந்து, நிலைத்து வாழுகின்ற உயர்ந்த தலைவராக மட்டுமின்றி, எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும் அண்ணன் எம்.ஜி.ஆர். வாழ்ந்தார். அவரைப்போல ஒருவரைப் பார்க்க முடியுமா?" ஜெயசித்ரா விழிகள் பனிக்க என்னைப் பார்த்து கேட்டார்.
நான் கற்ற தமிழ் எனக்குக் கை கொடுக்கவில்லை. இந்த அனாதையின் வாய், பேச்சை மறந்து ஊமையாகிவிட்டது.
நன்றி : அண்ணன் "நாகை"தருமன்
.........sb.........
Bookmarks