Page 140 of 210 FirstFirst ... 4090130138139140141142150190 ... LastLast
Results 1,391 to 1,400 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1391
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "சிரித்து வாழ வேண்டும்"

    ‘சிரித்து வாழ வேண்டும்’... பெயரே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடியது. இதயவீணைக்கு பிறகு பத்திரிகையாளர் மணியனின் உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்தவரும் ஜெமினி அதிபர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வருமான திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டதுடன் படத்தை எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கியும் இருந்தார். மதுரையில் 100 நாள் கொண்டாடியதுடன் மற்ற சென்டர்களிலும் வசூலை அள்ளிக் குவித்த வெற்றிப் படம்.

    படம் வெளியான நேரம் சரியில்லை என்பது என் கருத்து. உரிமைக்குரல் படம் வெளியான 24வது நாளில் ‘சிரித்து வாழ வேண்டும்’ வெளியானது. உரிமைக்குரல் படம் 12 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையிலும் நெல்லையிலும் வெள்ளிவிழா கண்ட காவியம். மதுரையில் 200 நாட்கள் ஓடியது. உரிமைக்குரல் முழுமையாக ஓடி முடிந்த பின் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி இருந்தால் உரிமைக்குரல் 20 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும். அதுமட்டுமல்ல, சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையைப் போல பல சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும்.

    * இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘ஜன்ஜீர்’ படத்தின் தமிழாக்கம் சிரித்துவாழ வேண்டும்.

    *தலைவர் இதில் அப்துல் ரகுமானாகவும் இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரட்டை வேடங்களில் அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார்.

    *ரகுமானாக வரும் தலைவரின் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் ராமுவாக வரும் தலைவரோடு வாக்குவாதம் செய்து விட்டு லுங்கியை பின்னால் லேசாக உயர்த்தியபடி காலை அகட்டி வைத்து நடந்து வருவார்.

    *தனது வீட்டில் தொழுகை செய்யும் காட்சி ஒரு இஸ்லாமியர் செய்வதைப் போலவே இருக்கும்.

    *அப்துல் ரகுமான் நடத்தும் கேளிக்கை விடுதிக்கு இன்ஸ்பெக்டர் ராமு வரும் சீனில் சிவப்பு நிற சூட்டில் விடுதியை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு எடைபோட்டபடியே தலைவர் நடந்து வரும் ஸ்டைல் அவருக்கே உரியது. ரகுமான் பாய் வீசும் கத்திகளை மேக்னடிக் பெல்ட்டில் அனாயசமாக தேக்கும் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆராவரத்தில் தியேட்டரில் இருக்கைகள் உடையும்.

    * இரண்டு பேரும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகள் தலைவரின் சுறுசுறுப்புக்கு மட்டுமின்றி எடிட்டிங் திறமைக்கும் சான்று.

    *சிறுவயதில் கண்ணுக்கு எதிரே பெற்றோர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை பார்த்ததால் குற்றவாளிகளை கண்டால் உணர்ச்சிவசப்பட்டு புரட்டி எடுக்கும் மன உணர்வை, மனோகரை அடித்து துவைக்கும் காட்சியில் தலைவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

    * நம்பியார் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பிளாக் சூட்டில் வரும் தலைவரின் அழகைக் காண கண் கோடி வேண்டும். ‘என்னை விட்டு போகாதே..’ பாடலுக்கு ஆடும் நடிகை (காஞ்சனா) தலைவரை கையைப் பிடித்து ‘வாருங்கள்’ என்று இழுப்பார். தலைவர் அசையாமல் அவரை உற்றுப் பார்த்தபடியே நிற்பார். ‘ப்ளீஸ்’ என்று கோரிய பிறகுதான் நகர்வார். தன் அனுமதியின்றி யாரும் தன்னை இழுக்க முடியாது என்பதையும் பெண்கள் கூப்பிட்டால் போய்விடுபவன் அல்ல என்பதையும் அற்புதமாக இந்த ஒரு உடல் மொழியிலேயே காட்டியிருப்பார்.

    *பாடல்கள் தேனாறு. ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’... பாடல் உண்மையிலேயே நம்மையும் சூழ்நிலையை மறக்க வைக்கும். தலைவர் ஒரு பாடல் காட்சியில் அதிகமான உடைகளில் (8 உடைகள்) வந்த பாடல் இதுதான்.

    *‘பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’ பாடல் ஆரம்பிக்கும் முன், நம்பியாரின் ஆட்கள் தாக்கியதால் காயமடைந்து கட்டுக்களோடு சிகிச்சை பெற்று வரும்போது, இப்படி பண்ணி விட்டார்களே? என்ற கோபத்தையும், அடுத்து இவர்களை என்ன செய்யலாம்? என்ற யோசனையையும் முகத்தில் தேக்கியபடி வசனமே இல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருக்கும் காட்சி தலைவரின் நடிப்புத் திறனுக்கு உதாரணம்.

    *படத்தில் வசனம் இன்னொரு சிறப்பு. திரு.நம்பியாரின் வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்கும். ‘இனிமேல் மோசடி கும்பலில் இருக்க மாட்டேன்’ என்று தனது பாஸிடம் திருச்சி சவுந்தரராஜன் சொல்லிவிட்டு செல்லும்போது, ‘என்ன பாஸ், சூடா ஒரு டம்ப்ளர் ஞானப்பால் குடிச்ச மாதிரி பேசறான்?’ என்றும், உங்களது பாஸ் இப்போது என்ன செய்கிறார்? என்று நம்பியாருடன் இருக்கும் பெண் கேட்க, ‘ஒரு இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது, விவாதம்தான் நடக்கும். அதனால், நான்தான் அவரை கொன்றேன்’ என்றும் நம்பியார் கூலாக சொல்லும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வசனம் எழுதிய திரு.ஆர்.கே.சண்முகம்தான் இந்த படத்துக்கும் வசனகர்த்தா.

    சதியால் இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் தலைவர் சிறைக்கு அனுப்பப்படுவார். அங்கு தன்னைப் பார்க்க வரும் லதாவிடம், ‘கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும்’ என்று தலைவர் கூறுவார். எத்தனை உண்மையான வார்த்தைகள்..........vs.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1392
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ‘"துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன’ என்பது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்"..! -

    "நிஜத்திலும் நடிகையரின் காவலர் எம்.ஜி.ஆர்"

    ‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது.

    "எம்.ஜி.ஆரை நம்பினோர் கைவிடப்படார்"....

    சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.

    நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.

    Published: யாழ் இணையம் in வண்ணத் திரை......... MGN...

  4. #1393
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் MGR அவர்களுக்கு ரசிகர் மேல் உள்ள பாசம், அன்பு போல், வேறு எந்த நடிகருக்கும் கிடையாது. இதை பல முறை நான் நேரில் பார்த்து உள்ளேன். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி மூலம் நடந்ததை தெரிவிக்க ஆசை படுகிறேன். மும்பையில் எங்க ரசிகர் மன்றத்தின் சார்பாக "இதயக்கனி" படம் ரிலீஸ் அன்று இரவு காட்சியில் படத்தின் நாயகி ராதாசலுஜா அவர்களை வரவைத்து விழா எடுத்து கொண்டாடினோம். மன்றம் சார்பாக சிறப்பு மலர் ஒன்றை ராதாசலுஜா கையால் வெளியிட்டோம். தலைவர் சந்தித்து மலர் காண்பிக்க சென்னை புறப்பட்டு சத்யா ஸ்டூடியோ சென்றோம். தலைவர் அவர்களை சந்திக்க டைரக்டர்கள், படம் அதிபர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் என்று பல பேர் காத்து கொண்டு இருந்தார்கள். தலைவர் உதவியாளர் மூலம் நாங்க வந்த விஷயம் தெரிந்தவுடன் உடனே தலைவர் எங்களை உள்ளே வருமாறு கூறினார். தலைவர் சந்தித்து மலர் கொடுத்தோம். முதல் பக்கத்துல இருந்து கடைசி பக்கம்வரை படித்தார். மிகவும் சந்தோசம் அடைந்தார். விழாவை அதிகம் செலவு செய்து நடத்தி உள்ளீர்கள் என்று அன்புடன் கடிந்து கொண்டார்.சுமார் 10 நிமிடம்வரை எங்களுடன் இருந்தார். நாளை தோட்டத்தில் வந்து சந்திக்கவும் என்று கூறி அன்புடன் எங்களை வழிஅனுப்பி வைத்தார். எவ்வளவு பேர் காத்து இருந்தும் எங்களை உடனே சந்தித்து பேசியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆக இருந்தது. ரசிகர் மேல் தலைவருக்கு உள்ள பாசம் பரிவு, அன்பு கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தோம். இது போல பல நிகழ்ச்சிகளை பிறகு தெரிவிக்கிறேன். இது போல தலைவர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நண்பர்கள் பகிந்து கொள்ளலாம். நன்றி.... Albert Paul...

  5. #1394
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "படகோட்டி"...கொடுத்ததெல்லாம் பாடல் காட்சிகளில்.........
    ------------------
    இப் பாடலை நன்கு கவனித்து பாருங்கள்

    மீனவர்களின் ஏழ்மையை பயன் படுத்திக் கொள்ளும் முதலாளித்துவம்

    தான் எவ்வளவு முயன்றும் இவர்களின் அறியாமையை போக்க முடியவில்லையென்ற ஆதங்கம்

    உழைத்தவர்கள் தெருவில் நின்று விட்ட விரக்தி

    தன் ஆற்றாமையை , மனக்குமுறலை முகபாவங்களாலும் தன் நடையினாலும் வெளிக் கொணரும் விதம் அபாரம்

    வார்த்தைகளையும் , வாக்கியங்களையும்
    தன் உடல் மொழியால் நம்மை முழுமையாக உணரவைக்கும் நடிகர் உலகிலேயே எம் ஜி ஆர் ஒருவர் தான் .

    குறிப்பு : இப்பாடலில் ஒரு முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பது தற்செயலாக நடந்த ஒன்று அம்முதியவருக்கு மக்கள் திலகம் பணம் இரண்டாயிரம் கொடுத்து உதவினார் ....Hyd...

  6. #1395
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* மறுவெளியீடு*தொடர்ச்சி .................
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    26/11/20 முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் -ரேவதி -மக்கள் திலகம் /புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆர். இருவேடங்களில் அசத்திய*டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன்* தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .**
    தகவல் உதவி : திரு.பந்தமுத்து , மம்சாபுரம்*.

    27/11/20 முதல் ஆத்தூர்*என்.எஸ். அரங்கில்*கலை*வேந்தன்*எம்.ஜி.ஆர். வழங்கும்*நம் நாடு தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .


    30/11/20 முதல் ஆலங்குளம்*டி.பி.வி. மல்டிப்ளக்ஸ் அரங்கு ஸ்க்ரீன் 2ல்*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்*தர்மம் தலை காக்கும்*தினசரி 3 காட்சிகள்*

    30/11/20 முதல் விக்கிரமசிங்கபுரம் (தென்காசி மாவட்டம் )தாய் சினீஸ்*அரங்கில்*பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் தினசரி 2 காட்சிகள்*(மாலை / இரவு ) நடைபெறுகிறது .
    தகவல் உதவி : திரு.வி. ராஜா, நெல்லை.*

    30/11/20 முதல் சேலம்*ராஜேஸ்வரியில் நடிக மன்னன் /நடிக பேரரசர்*எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய* எங்க*வீட்டு*பிள்ளை தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
    தகவல் உதவி : திரு.சத்தியமூர்த்தி, சேலம்*.* *
    Last edited by puratchi nadigar mgr; 2nd December 2020 at 07:15 PM.

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #1396
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே* புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 25/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------------------
    ஒரு கால கட்டத்தில் தவிர்க்க முடியாத தலைவராகவும், திரை உலகின் முடிசூடா மன்னனாகவும் விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க.வில் இருந்து எப்படி நீக்கப்பட்டார் ,அதற்கான நெருக்கடிகளை எப்படி உருவாக்கினார்கள் என்பதை காலம் அறியாதது அல்ல.* மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன், குமரிக்கோட்டம், நல்லநேரம் போன்ற வெற்றி படங்கள் வந்த கால கட்டத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தன் மகன் மு.க. முத்து நடிப்பில் பிள்ளையோ பிள்ளை படம் தயாரித்து வெளியிட்டார். அந்த படத்தின் பூஜை நாளன்று* கிளாப் அடித்து துவக்கி வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .* படம் முடிவுற்று ,பிரிவியூ காட்சிக்கு எம்.ஜி.ஆர். வருகை தருகிறார் . முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் வருகை தருகின்றனர் .* பொதுவாக எம்.ஜி.ஆர். அவர்களின் படங்கள் வெளியாகின்றபோது மு.க.ஸ்டாலின் , மு.க. முத்து, மு.க. அழகிரி போன்றவர்கள்*எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பாடல், இந்த காட்சி, இந்த வசனம் நன்றாக இருந்தது . சண்டை காட்சிகள் அபாரம் என்று குழந்தை பருவத்தில் இருந்தே பாராட்டுவது வழக்கம் . பிள்ளையோ பிள்ளை படத்தை பார்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் அவரவர்க்கென்று தனி பாணி இருக்க வேண்டும்* யாரும் மற்றவர்களை போல நடிக்க முயற்சிக்க கூடாது. தனித்தன்மை இருக்க வேண்டும். அப்போதுதான் திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் என்று விமர்சனம் செய்து பேசியதோடு மு.க. முத்து வுக்கு*கடிகாரம் பரிசளித்தார் .* *.**


    இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர்க்கு பதிலடி கொடுப்பதற்காக வந்திருக்கிறது பிள்ளையோ பிள்ளை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது .தமிழகம் முழுவதும் பல இடங்களில் எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்பட்டு,*மு.க. முத்து மன்றம் துவக்கப்பட்டது .* எம்.ஜி.ஆர். அவர்கள் மனம் புண்படும்படி*தி.மு.க.வினரின் செயல்பாடுகளும், தலைமையின் செயலும் அமைந்தன .*அந்த கால கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டார் .* உதாசீனப்படுத்தப்பட்டார் .* அந்த சமயத்தில்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் கணக்கு கேட்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது*இந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்த பலர் மூலம் ரகசியமாக தகவல்கள் கிடைத்தன .* மு.கருணாநிதி, கே.அன்பழகன் போன்றவர்களின் வீட்டு மின்சார கட்டணங்கள் தி.மு.க. கட்சி நிதியில் இருந்து கட்டுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன .* கட்சி பணத்தை பல்வேறு வகைகளில் கையாடல் செய்கிறார்கள் என்று பகிரங்கமாக தெரிந்தபின்னர் தான் கணக்கு கேட்கும் விவகாரத்தை எம்.ஜி.ஆர். அவர்கள் எழுப்பினார் .* இன்றைய கால கட்டத்தில் முரசொலியில் எழுதுகிறார்களே* அது போல துரோக மனப்பான்மையுடன் எம்.ஜி.ஆர். அவர்கள் செயல்படவில்லை .* எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்த ஓ.ஏ .கே..தேவர்* சிவாஜி நாடக மன்றத்திலும், சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்துள்ளார் .எம்.ஜி.ஆர். அவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் . தி.மு.க. வின் பிரச்சார நாடக குழுவில் உறுப்பினராக இருந்தவர ஓ.ஏ.கே. தேவர் . ஓ.ஏ..கே.தேவர்*மறைந்ததும் ,முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தியவர் எம்.ஜி.ஆர். தான் .


    திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி ::* நாடோடி மன்னன் படத்தில் மன்னன் மார்த்தாண்டன் முடிசூட்டு விழாவிற்கு முன்பு புரட்சிக்காரன் வீராங்கன்*மந்திரிகள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்வார் . அதில் மன்னரை கொல்ல பழ ரசத்தில் விஷம் கலந்து கொடுக்க ஏற்பாடு நடக்கும்.* விஷம் கலந்த பழ ரசத்தை அருந்தியதும் மன்னர் மயக்கமடைவார் . அப்போது மந்திரிகள், வீராங்கனை மன்னராக வேஷமிட்டு தற்காலிகமாக நடிக்க சொல்வார்கள். வீராங்கன்* நடிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. சட்டம் இயற்றும் அதிகாரம் என் கையில் இருக்க வேண்டும். அப்போதுதான் மன்னனாக நடிக்க இணங்குவேன்* என்பார் . அப்போது மந்திரிகள் முன்பின் தெரியாதவனிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது ஆபத்தை விளைவிக்கும் .நீ புதியவன். விவரங்கள் போதாது என்று மறுத்து பேசுவார்கள் . வீராங்கன்* எனக்கு ஏர் பிடித்து உழவும் தெரியும். கத்தி பிடித்து களத்தில் சண்டையிடவும் தெரியும். உழ முடியாத மாடு, உதவாத கலப்பை இவற்றை நாங்கள் நம்புவதே இல்லை .* அமைச்சர்கள் உன் பேச்சை நம்பி அதிகாரத்தை உன் கையில் ஒப்படைக்கிறோம் . நம்பிக்கை துரோகம் செய்யமாட்டாய் என்று நம்புகிறோம். அப்போது வீராங்கன் சொல்வார் .அமைச்சரே, என்னை நம்பாமல் கெட்டவர் பலர். நம்பி கெட்டவர்கள் இன்றுவரை இல்லை என்பார்.* பின்னர் மன்னராக முடிசூட்டி கொண்டு வீராங்கன் மக்களுக்கான திட்டங்கள், கொள்கைகளை அறிவிப்பார் . குடிசைகள் அகற்றப்பட்டு . தேவையில்லாத காரணத்தால் அவை கொளுத்தப்படும் .எதிர்க்கட்சியினர்* கேள்வியில் அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்களா என்பதற்கு பணக்காரர்கள் இருப்பார்கள்,* ஏழைகள் இருக்கமாட்டார்கள் என்பார் .* 1958ல் நாடோடி மன்னன் படத்தின் மூலம் அறிவித்த பல திட்டங்களை 1977ல் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றினார் .*பல இடங்களில் குடிசைகளுக்கு பதிலாக குடிசை மாற்று வாரியம் மூலம்*கட்டிடடங்கள் கட்டப்பட்டு ஏழைகள் அதில் குடி புகுவதற்கு வழி வகுத்தவர்தான்* தங்க தலைவர் ,வாரி கொடுத்த வள்ளல், ஏழைகளின் இதயவேந்தன், வற்றாத ஜீவநதி, மறைந்து 33 ஆண்டுகளுக்கு பின்னரும் என்றும் ஏழைகளின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்*ஏழை* எளியோர் மீது அளவு கடந்த அன்பு, பாசம்* வைத்திருந்தார் .****


    குடிசை வாழ் மக்களை ஒருமுக்கிய கட்சி பிரமுகர் , வந்து என்னுடைய இடத்தில நான் மருத்துவமனை கட்ட வேண்டி இருப்பதால் அங்குள்ள 40 குடிசை வாழ் மக்களை காவல்துறையினரை விட்டு விரட்ட சொல்லுங்கள் என்று முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் விண்ணப்பிக்கிறார் . பதிலுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ,நீங்கள் அந்த ஏழை மக்களுக்கு வேண்டிய பணம் கொடுத்தால் அவர்கள் இடம் பெயர்ந்து அந்த பணத்தில் வீடு கட்டி கொள்வார்கள்.* என்றதும். அந்த பிரமுகர் அதற்கு ரூ.40 லட்சம் செலவாகும். அவ்வளவு பணம் கைவசம் இல்லை. நீங்கள் காவல்துறைக்கு தகுந்த உத்தரவிட்டு அந்த குடிசை வாழ் மக்களை அந்த இடத்தில இருந்து விரட்டி அடித்து ,காலி செய்து தாருங்கள் என்று மீண்டும் கேட்டு கொண்டார் .இதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர். அவர்க.ள் , குடிசை வாழ் மக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த பிரச்னைக்கு தீர்வு காண என்னைத்தான் அணுகுவார்கள் நீங்கள் எனக்கு முக்கியமானவர்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்*.* அவர்களை நிராதரவாக விட நான் தயாரில்லை. அந்த இடம் உங்களுக்கு சொந்தமாக இருந்தாலும், நீங்கள் பணம் கொடுத்து பிரச்னையை சுமுகமாக தீர்க்க பாருங்கள். இல்லையேல் ,இந்த பிரச்னையில் உங்களுக்கு சாதகமாக எந்த முடிவும் ,ஏழைகளுக்கு எதிராக எடுக்க என்னால் முடியாது. நீங்கள்போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார் .* இதனால் மன வருத்தத்தோடு வீடு திரும்பிய அந்த பிரமுகரிடம், அவரது கார் ஓட்டுநர் ,ஐயா, தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் பணம் வந்துள்ளது . கார் டிக்கியில் ஒருவர் வைத்துவிட்டு உங்களுக்கு தகவல் தரும்படி சொல்லிவிட்டு போனார் என்றதும். ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி அடைந்தார் அந்த பிரமுகர் . கட்சி பிரமுகரின் மனம் புண்படும்படி பேசிவிட்டோம். அனால் அவரை விடக்கூடாது என்று . அவருக்கு ஆறுதல் தரும் வகையில் பணத்தை கொடுத்து அனுப்பினார் தலைவர் நேரடியாக அந்த பிரமுகரிடம் கொடுத்திருந்தால் அது கௌரவ பிரச்னையாக இருந்திருக்கும் .அதனால் அவர் தலைவர் எம்.ஜி.ஆர். அளித்த தேநீர் அருந்தும் வேளையில் அவருடைய கார் ஓட்டுநர் மூலம் ரகசியமாக பணம் கொடுத்து உதவியிருந்தார் .****. அதே சமயத்தில் ஏழைகள் மனம் வாட கூடாது என்று கருதி கட்சி பிரமுகர் மூலம் உரிய பணத்தை கொடுக்க செய்தார்* எம்.ஜி .ஆர் . எம்.ஜி.ஆர். அவர்கள் நினைத்திருந்தால் ஒரே உத்தரவின் மூலம் உரிய நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு சாராருக்கு சாதகத்தையும் .ஒரு சாராருக்கு பாதகத்தையும் அது விளைவித்திருக்கும். ஆனால் ஒரே சமயத்தில் இரு சாராருக்கும் உதவும் வகையில் செயல்பட்டு பிரச்னையை சுமுகமாக முடித்தார் எம்.ஜி.ஆர். இந்த பிரச்னைக்கு பிறகு, அந்த பிரமுகர் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார் .**அத்தகைய பெருமைமிகு தலைவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்..


    யாராவது புகார் கொடுத்து*விட்டால்,**அவர்கள் வேண்டியவர்கள் என்பதற்காக, அந்த புகாரின் நியாயத்தை உணர்ந்து பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து எதிர் முகாமில் உள்ளவர்கள் வேதனை அடையும்படி எந்த நிகழ்வையும் நடத்த மாட்டார் .தலைவர் எம்.ஜி.ஆர்.* ஈரோடு மாவட்டம், சென்னிமலை*பகுதியில்**உள்ள கந்தசாமி என்பவர் அ.தி.மு.க. அலுவலகத்தில்**குறை*கேட்கும் நேரத்தில் தலைவரை சந்தித்து* முறையிடுகிறார் . எங்கள் பகுதியில்*வரும் தண்ணீரை சென்டெக்ஸ் என்கிற நிறுவனம் பெரும்பாலான*அளவில் எடுத்து கொள்வதால் பொதுமக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள் . தலைவர் நேரடியாக*இந்த விஷயத்தில் உத்தரவிடாமல், அந்த தண்ணீரை* சென்டெக்ஸ் நிறுவனம் எப்படி பயன்படுத்துகிறது .என்று கேட்கிறார் .தொழிற்சாலைக்கு பயன்படுத்துகிறீர்களா. அந்த தொழிற்சாலையில் எத்தனை பேர்* வேலையில்**இருக்கிறார்கள். சுமார்*200 பேர்.* அவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போனால் வேலை இழப்பு ஏற்படும். தொழிற்சாலையில் உற்பத்தி முடங்கும். உரிமையாளருக்கு வருமானம் இருக்காது*,இதற்கு மாற்று வழி காண வேண்டும் ,பொதுமக்களுக்கும் தண்ணீர் பிரச்னை தீரவேண்டும்*,*. என்று கருதி*சுகாதார அமைச்சர் திரு.ஹண்டே*அவர்களிடம் இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண சென்னிமலை பகுதி முழுவதும் 60 ஆழ்துளை கிணறுகள் அமைத்து*உதவுங்கள் என்றார். அமைச்சர் அங்கு* .ஆழ்துளை கிணறுகள்** சுமார்*30 அமைத்து தண்ணீர் போதுமான அளவிற்கு மேலாக வருவதை அறிந்து*, மீதம் உள்ள 30 ஆழ்துளை கிணறுகளை சென்னிமலையின் சுற்றுவட்டார பகுதிகளில் அமைத்து* தண்ணீர் பிரச்னையில் இருந்து அந்த பகுதி பொதுமக்களும்* நிரந்தரமாக* விடுபட*. வித்திட்டு உதவியவர்*தலைவர் எம்.ஜி.ஆர்.**இந்த வேலைகள்*நடந்து பொதுமக்கள் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைத்ததற்கு தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றி செலுத்தியதை நண்பர்கள் சென்னிமலை*விஸ்வநாதன், தங்கவேலு போன்றவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்கள் . இப்படி ஒரு பிரச்னையை அணுகும்போது தொழிலாளர்கள் வேலை இழப்பு, தொழிற்சாலை முடக்கம், உற்பத்தி பாதிப்பு, உரிமையாளர் வருமானம் , ஆகியவற்றை மட்டுமே கணக்கில் கொள்ளாமல்,*பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாது*தண்ணீர் பிரச்னையை*தீர்த்து*வைத்து,சமயோசிதமாக* சிந்தித்து**செயல்பட்டு அவர்களது உள்ளங்களில் எல்லாம் ஊடுருவிஅவர்களது இல்லங்களில் தந்தையாக, தாயாக, தனயனாக,அண்ணனாக, தம்பியாக மாறுபட்ட* பல்வேறு உருவங்களில் வாழ்ந்துஅனைவரும்*இதயதெய்வம் என்று போற்றுகிறார்கள் என்று சொன்னால்*எப்போதும் ஏழைகளுக்காகவே சிந்தித்து***இரு சாராரின் பிரச்னைகளையும் ஒரே சமயத்தில் தீர்த்து வைத்தவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.**


    கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஏழைகளை பற்றி மட்டுமே சிந்தித்த*, ஏழைகளுக்காகவே வாழ்ந்த லெனின்*என்கிற மாபெரும் புரட்சி வீரன் பற்றி கவிஞர் பாரதிதாசன்*எழுதிய கவிதை*. யுகமாக வாழ்ந்த*லெனினே, உலகாக*நின்ற**லெனினே*, உறவாக, அகமாக*, அறிவாக, அரசாக*நின்ற லெனினே*என்று வடித்ததை அப்படியே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு யுகமாக, உலகாக*, உறவாக, அகமாக*. அறிவாக, அரசாக, ஆள பிறந்த , ஆண்டு கொண்டிருக்கிற எம்.ஜி.ஆர். அவர்களே என்று நம் உள்ளங்களில் எல்லாம் மனநிறைவோடு* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்கிய இயக்கத்தை வெற்றிகரமாக இன்றைக்கு திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் ஆட்சி நடைபெறும் வேளையில்*கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை*மனதில் நிலை நிறுத்தி கொண்டவர்தான் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .காரல் மார்க்ஸ், பிரடெரிக்*ஏன்ஜெல்ஸ்**ஆகியோர் முதலீட்டு கொள்கையை உருவாக்கியவர்கள் . காரல் மார்க்ஸ் சொல்கிறார். எங்கே வேண்டுமானாலும் புரட்சி வரும் .*புரட்சி வராத இடம் என்று சொன்னால்ஒரு இடம்தான் உள்ளது அது**இந்தியாவில்தான் .* மிக எளிதாக* இந்தியாவில் புரட்சி வெடிக்க வாய்ப்பில்லை . காரணம்*மதங்கள், கொள்கைகளால் சூழப்பட்டு,* ,தங்களுக்கு தாங்களே சமாதானப்படுத்தி கொண்டு, அடிமை வாழ்வோ, அரசன் வாழ்வோ, எந்த வாழ்வாக இருந்தாலும் ,அவர்கள் ஏற்று கொள்வார்கள்** என்று சொன்ன அந்த நெறியில்தான் இந்தியாவில்தைமூர் காலம்,* முகலாயர்கள், காலம்** மங்கோலியர்கள், ஆங்கிலேயர்கள் காலம் வரையில் பல்வேறு வகைகளில், பல்வேறு காரணங்களுக்காக நாம் அடிமைப்பட்டு கிடந்தோம் .நாட்டின் சுதந்திரத்திற்காக புரட்சி வெடித்தது . சுதந்திரம்*கிடைத்தபின், தமிழகத்தில் 1972ல் புரட்சி வெடித்தது .வெறும் 4 எம்.எல்.ஏக்களை எதிர்த்து அல்ல. 184 எம்.எல்.எங்களுடன் மிருகபலம் கொண்ட*தி.மு.க. ஆட்சிக்கு வந்த*ஓராண்டிலேயே**தனியொரு, சாமான்ய*மனிதராக இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கேள்வி கணைகள்*தொடுத்தார் .* நான் அனைவரையும்*கணக்கு கேட்பேன். சாதாரண நிலையில் இருந்தவர்களில் பலர்*ஊழல்கள், குற்றங்கள், தவறுகள் செய்து கோடீஸ்வரர்கள் ஆகி இருக்கிறார்கள் . அவர்கள் முறையாக கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும். குற்றமற்றவர்கள் என்று தங்களை*நிரூபித்து கொள்ள வேண்டும் .என்று தைரியமாக, பயப்படாமல், ஒரு புரட்சி வீரனாக***தன்னை மக்களுக்கு அடையாளம் காட்டி கொண்டு*காரல்*மார்க்ஸ்*,ஏன்ஜெல்ஸ் போன்றவர்களை மிஞ்சியவர்,தான் நமது*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* அவர் தி.மு.க.வில் இருந்து தூக்கி எறியப்பட்டபோது தனியொரு தலைவராக இருந்தார். அவரை பின்பற்றி வந்தவர்கள்தான்* எம்.எம்.துரைராஜ், முனு ஆதி, ஜி.ஆர். எட்மண்ட் ,வேலப்பன், எஸ்.ஆர்.ராதா, காளிமுத்து*போன்றவர்கள் .*அதன் பின்னால் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள்* கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்கள் வந்தார்கள் . இவர்களை மட்டுமே வைத்து, கட்சி ஆரம்பித்து ,தமிழகத்தின் ஏழை எளியோருக்காக நான் புரட்சி செய்வேன் .ஊழலை ஒழிப்பேன் என்று**கூறி, காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4.25க்கு தந்த அரிசியை* கிலோவுக்கு ரூ.1/- கொடுத்த பேரறிஞர் அண்ணாவை போல* தன்னுடைய இறுதி காலம் வரையில் முதல்வராக இருந்து அதை நீடிக்க செய்த ஒப்பற்ற தலைவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் ;/காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு*

    2.பேசுவது கிளியா , இல்லை பெண்ணரசி மொழியா - பணத்தோட்டம்*

    3.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - மகாதேவி*


    4.எம்.ஜி.ஆர். - ஓ.ஏ.கே.தேவர் உரையாடல் -மதுரை வீரன்*


    5..திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*




    ***
    ****
    Last edited by puratchi nadigar mgr; 2nd December 2020 at 09:21 PM.

  9. Likes orodizli liked this post
  10. #1397
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த காட்சியை எல்லாம் பார்க்கும் போது விழிகள் பனிக்கின்றது , இப்படி எல்லாம் இனி ஒரு சீன் இப்ப வரும் படத்தில பார்க்க முடிகிறதா! தயவுசெய்து குழந்தைகளுக்கு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுங்கள், நல்ல படத்திற்கு அழைத்து செல்லுங்கள், இளவயசிலேயே நாம் நல்லவற்றை நல்ல எண்ணங்களை விதைத்தால் தான் அன்பு, பாசம், இரக்கம், மனிதாபிமானம், மரியாதை, கீழ்படிதல், இதை எல்லாம் கற்றுக் கொள்வார்கள். தலைவரோட தலைப்பே பாடம் சொல்லும். நான் மார்தட்டி மண்டை கர்வத்தோட கூட சொல்வேன் எங்கள் தலைவர் மாதிரி தலைப்பு வைக்க உலக சினிமா சரித்திரத்தில யாருமே கிடையாது . தர்மம் தான் ஜெயிக்கும், உண்மைக்கு அழிவேயில்லை, நல்ல குணங்களே சிறந்த மனிதனாக்கும், நற்செயல்களே பண்புள்ளவனாக மாற்றும். தலைவர் திரையுலக ஔவையார் னு கூட சொல்லலாம். தயவுசெய்து கண்டநாதாரிப்பயலுக படத்துக்கு கூட்டிட்டு போகாதீங்க! சின்ன மச்சான், கிறுக்கு மச்சான் பாட்டெல்லாம் கேட்க சொல்லாதீங்க. தலைப்ப பாருங்க "உங்களை நல்லா போடணும் சார்" னு ஒரு படமாம் கேவலமா இல்லை.இப்ப படமெடுக்கும் எல்லாருக்கும் அடுத்தவனுடைய பசிக்கு சோறு வைக்கவும் தெரியாது, அவங்க படத்துக்கு பேரு வைக்கவும் தெரியாது. அதனால தான் பழைய படப் பெயர்களையே மீண்டும் திருப்பி சூட்டுகிறார்கள் என்னதான் இருந்தாலும் மீதியுள்ள உணவை பிரிஜ்க்குள்ள வச்சு பரிமாருகிற மாதிரி தான் , சொந்த புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை. எனவே நான்கு தலைவர் படம் வாங்கி வீடியோவில் போட்டு காட்டுங்கள் அதுவே போதும் ....gvn...

  11. #1398
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் வணக்கங்கள் பல.

    தலைவரின் நாளை நமதே படத்தில தலைவருக்கு அப்பா வாக சிறந்த குணசித்திர நடிகர் ராகவன் அவர்கள் நடித்து இருப்பார்.

    ராகவன் அவர்கள் தலைவரை விட எட்டு வயது மூத்தவர் என்பதை கவனத்தில் கொள்ளவும்...ஜாலி ஆக சுற்றி திரியும் தலைவர் படத்தில் ஒரு நண்பர் அழைப்பின் பேரில் வெளிஊர் சென்று வேலைக்கு போகும் காட்சி படத்தில்.

    புறப்படும் முன் மகன் எம்ஜிஆர் அப்பா வி.எஸ்.ராகவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி புறப்படுவது போல காட்சி அமைப்பு.

    இயக்குனர் சேது மாதவன் அவர்களிடம் ராகவன் அவர்கள் அவர் என் காலில் விழுவது போல காட்சி வேண்டாம்...கொஞ்சம் முடிந்தால் மாற்றுங்கள் என்று சொல்ல...

    தலைவர் செய்தி அறிந்து ஏன் அவர் விருப்பம் போல காட்சியை மாற்றுங்கள் என்று சொல்ல அதன் படி...

    வெளிஊர் புறப்படும் தலைவர் தந்தை அவரிடம் சொல்லி விட்டு கை கூப்பி அவரை வணங்கி புறப்படுவது போல காட்சி மாற்ற பட..

    அந்த காட்சியில் தலைவர் ராகவன் அவர்களை கும்பிடும் போது அவர் தந்தை ஆக வாழ்த்து சொல்லுவது போல காட்சிகள் எடுக்கப்படும் போது ஆசீர்வாதம் செய்வதற்கு பதில் தலைவர் கும்பிட அவரும் திருப்பி கும்பிட்டு விட..

    6 முறை திருப்பி திருப்பி எடுத்தும் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறார் ராகவன் அவர்கள்.

    ஒரு கட்டத்தில் தலைவர் விடுங்க அப்பிடியே காட்சி இருந்து விட்டு போகட்டும் என்று சொல்ல படத்தில் காட்சி அப்பிடியே வந்த புகைப்படம் பதிவில்.

    இந்த காட்சி பற்றி ஐயா வி.எஸ்.ராகவன் சொல்லும் போது என்னை விட மூத்தவர் அவர் என்றாலும் என் மீது அவர் கொண்ட பாசத்தில் அவரை ஆசீர்வாதம் செய்வதை என் மனம் ஒப்பவில்லை.

    எனக்கு அவர் செய்த பல உதவிகள் கண் முன் எப்போதும் நிற்கும்... அவர் முதல்வர் ஆகி ஒரு விழாவில் எனக்கு கேடயம் வழங்கி சிறப்பித்த போது அந்த மேடைக்கு நான் வந்த போது...

    என் குடும்ப சூழ்நிலை காரணம் ஆக அன்று என் முகத்தில் சந்தோசம் இல்லை.
    அவருக்கு என்றே விழாவுக்கு வந்தேன்.

    எனக்கு கேடயம் வழங்கும் போது என் வாடிய முகத்தை கவனித்த அவர் அதை கொடுத்த பின்.

    என் காதில் என்ன 7 டேக் அப்பா என்ன வருத்தம் என்று கேட்க நான் கவலை மறந்து சிரித்து விட்டேன் என்று பொன்மனம் பற்றி சொல்லி மகிழ்கிறார் அவர்.

    மேடையில் கவலை தோய்ந்த முகத்துடன் தலைவர் கையால் பரிசு வாங்கும் அவரின் படமும் பதிவில் இணைக்க பட்டுள்ளது.

    நடிப்புக்கு கூட நம் தங்க தலைவரை வாழ்த்தும் தகுதி உலகில் ஒரு சிலருக்கே உண்டு என்பதை இந்த நிகழ்வு எடுத்து காட்டி இருக்கும் என்று நம்பும் நம் குழுவினர் சார்பாக.

    உங்களில் ஒருவன்.
    நன்றி...தொடரும்.

    வாழ்க தலைவர் புகழ்

    அடுத்து அடுத்து சந்திப்போம்.......

  12. #1399
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைக்கு சில பல நடிகர்கள் புதுக்கட்சி துவங்கி அல்லது துவங்க பயணம் கொண்டு இருக்கும் நேரம்..

    ஆனால் நெருப்பு ஆற்றை கடந்து வந்து வெற்றி கொடி ஏற்றிய ஒரே இயக்கம் இந்த உலகில் தலைவர் கண்ட இயக்கம் மட்டுமே.

    10.10.1972 இல் குண்டு துளைக்க முடியாத நம் இதயக்கனியை வண்டு துளைத்து விட்டது என்று ஒரு மண்டு கண்டு பிடித்து அவரை புறந்தள்ள நினைத்த நாட்கள் அவை.

    அப்போது தலைவர் தனிக்கட்சி கண்ட ஆறாம் நாள்...
    விருத்தாசலம் நகரில் மாணவர்கள் தலைவருக்கு ஆதரவாக ஊர்வலம் போக தீயசக்தி உத்தரவில் காவல்துறை தடியடி நடத்தி பலர் காயம்.

    இந்த நிகழ்வை பார்த்த தேனி உத்தமபாளையம் போடி z.k.m. உயர்நிலை பள்ளி மாணவர்கள் அன்று கௌரி மனோகர் என்ற மாணவர் தலைமையில் திலகர், முத்துவேல், போதுமணி ஆகியோர்

    பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்களை திரட்டி மாபெரும் ஊர்வலம் நடந்தது தலைவருக்கு ஆதரவு தெரிவித்து.

    எதிரே தனது ஜீப்பில் வந்த தீயசக்தி எம்.எல்.ஏ... சுருளிவேல் ஊர்வலத்தில் வந்த மாணவ செல்வங்களை பார்த்து தமிழ் அகராதியில் இல்லாத பொல்லாத வார்த்தைகள் கொண்டு நம் பொன்மன செம்மலையும் அதற்கு துணை நின்ற மாணவர்களையும் காவல்துறை முன்னிலையில் அவ்வளவு சிறப்பாக அவரின் தரத்துக்கு ஏற்றபடி பேசுகிறார்.

    மாணவர்கள் கொந்தளித்து புது வேகத்துடன் புறப்பட்டு அவரை நோக்கி ஓட தன் சொந்த ஜீப்பை திருப்பி கொண்டு தன் சொந்த ஊர் சில்ல மரத்து பட்டியில் தஞ்சம் அடைகிறார்.

    கொதித்து போன மாணவர் சமுதாயம் மூன்று நாட்களுக்குள் அந்த சட்டமன்ற உறுப்பினர் தன் வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும் என்று சொல்ல.

    சுருளிவேல் பயந்து வீட்டுக்குள் சுருண்டு விட மூன்று நாட்கள் கழித்து 10000 பேர் கொண்ட மாபெரும் ஊர்வலம் மாணவர்கள் திரண்டு கௌரிமனோகர் தலைமையில் நடத்த..

    காவல்துறையினர் நடத்திய கண்ணீர் புகை குண்டு வீச்சில் 242 பேர் நிலைமை மோசம் ஆகி மயக்கம் அடைய.

    விளைவுகளின் விபரீதம் புரிந்த தலைவர் மாணவர் குழுவினருக்கு உதவிகள் செய்ய ஆணை இட... அவர்கள் சற்றே நலம் பெற்று வீடு திரும்பிய மறுநாள் முக்கிய மேலே குறிப்பிட்ட அனைவரையும் தன் வீட்டுக்கு அழைத்து இனி இப்படி நீங்கள் செய்யக்கூடாது.

    உங்கள் எதிர்காலம் பாதிக்க பட்டு விட கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி அவர்கள் கையில் அந்த காலத்தில் அவர்கள் கண்டு இருக்க முடியாத பணத்தை கொடுக்க.

    சொந்த ஊர் திரும்பிய அவர்கள் அந்த பணத்தை கொண்டு போடி நாயக்கன் ஊர் பகுதியில் முப்பது வீடுகளுக்கு மின்சார இணைப்புக்கு முன் பணம் கட்ட...

    தலைவர் அடுத்த நாட்களில் முதல்வர் ஆக பொறுப்பை ஏற்ற பின் மாணவர் கௌரி மனோகர் அனுப்பிய வேண்டுகோள் கடிதத்தை படித்து முதல் முக்கியத்துவம் கொடுத்து.....

    அவரின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்தார்...

    பின்னாட்களில் அதே கௌரிமனோகர் தலைவரின் கொள்கைகளை இன்று வரை கடைபிடித்து வந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் நிலனவில்..

    பணம் சம்பாதிக்க என் பக்கம் யாரும் வரவேண்டாம் என்று சிலர் பகிரங்கமாக அறிக்கை விடும் அளவுக்கு இன்றைக்கு பொது வாழ்வு சீர் கெட்டு கிடக்கும் நம் நாட்டில்....தலைவர் போலவே வாழ வேண்டி அதன் படி நடந்து கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு.

    இந்த பதிவு சமர்ப்பணம்....

    Z.k.m.. உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளி ஆக தரம் உயர்த்த பட்ட நிகழ்வு, பதினெட்டாம் கால்வாய் திட்டத்தில் சோத்து பாறை அணை கட்டுதல் திட்டம், தாங்கள் முன்பணம் செலுத்திய 30 கிராமத்து வீடுகளுக்கு ஒளி விளக்கு ஏற்றியவை போன்ற நிகழ்வுகள் அந்த கௌரிமனோகர் கடிதத்தில் குறிப்பிட பட்டு இருந்தவை.

    உலகத்தில் பல கட்சிகள் தோன்றி இருக்கலாம்... இன்னும் தோன்ற இருக்கலாம் ஆனால் தான் போட்டி இட்ட முதல் பொது தேர்தலில் தான் கண்ட மக்கள் இயக்கத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்திய ஒரே தலைவன்...

    இந்த உலகில் நம்

    எம்...ஜி... ஆர்...என்ற அந்த மந்திர சொல் நாயகன் மட்டுமே.

    நன்றி...தொடரும்.

    உங்களில் ஒருவன்..

    நெல்லை மணி.

    பதிவில் படத்தில் தலைவர் நினைவு இடத்தில் இன்று நடைபெற்ற பூ அலங்காரம்...நன்றி.

    அடுத்தவர்களை குறை சொல்ல இல்ல இந்த பதிவு..

    நம்மையும் நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மட்டும்.

    தலைவர் நெஞ்சங்கள் எப்படி என்பதை உணர்த்தவே.............nm...

  13. #1400
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கொஞ்சம் ரிலாக்ஸ் 29
    --------------------------------
    இன்றையப் பதிவு முக்கியமானது மட்டுமல்ல,,சுவாரஸ்யமானதும் கூட.
    எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் தமிழுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகங்களுக்கும் அதிக வளர்ச்சி ஏற்பட்டது என்பது நமக்குத் தெரியும்!
    அண்ணா,,,பாராதியார் ,,பெரியார்,,பாரதி தாசன்--இப்படி ஒருவரைக் கூட விட்டு வைக்காமல் அனைவர் பெயர்களிலும் பல்கலைக் கழகங்கள் துவங்கங்கப்பட்டதுடன்--
    தஞ்சை தமிழ்க் கல்லூரி விருத்தி செய்யப்பட்டதுடன் தமிழ் ஆராய்ச்சி மன்றங்களும் நிறுவப்பட்டன!
    எம்.ஜி.ஆர் மலையாளி. ஒரு நடிகன் என்றெல்லாம் அன்னாட்களில் ஏகடியம் செய்தோருக்கும்,,அவரது வம்சாவளியினருக்கும் மேற் குறிப்பிட்டவை சமர்ப்பணம்!!
    எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல--
    உலகத் தமிழ் நாடு மதுரையில் நடக்கிறது!
    அரசவைக் கவிஞர் கண்ணதாசன் தலைமையிலும் புலமைப் பித்தன் தலைமையிலும் கவி அரங்கம் நடத்தப் பெற ஏற்பாடாகிறது!
    விழாக் கமிட்டியின் ஏற்பாட்டாளர் அவ்வை நடராஜன்!
    கண்ணதாசன்,,வாலியைத் தொடர்பு கொண்டு ஒரு உதவி கோருகிறார்--
    அதாவது அவரது கவியரங்கத்தை வாலி துவக்கி வைக்கும்படியும்,,பின்னால் தாம் வந்து சேர்ந்து கொள்வதாகவும் கூறுகிறார்!
    வாலி,,அவ்வை நடராஜனைத் தொடர்பு கொண்டு தம் கருத்தைத் தெரிவிக்கிறார்--
    சீனியர் கண்ணதாசனின் தலைமையிலான கவியரங்கத்தை அவரது சீடனான நான் துவங்கி வைப்பது நன்றாக இருக்காது. தவிர அது மரியாதையாகவும் இல்லை. சின்னவரிடம் -எம்.ஜி.ஆரிடம் சொல்லி என் தலைமையில் ஒரு கவியரங்கத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள்!!
    அவ்வை நடராஜன்,,தயங்கியபடியே இதனை எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்க--
    எம்.ஜி.ஆரோ திகைக்கிறார்--
    வாலி நல்லாப் பாட்டெழுதுவார்ன்னு தெரியும். அவருக்கு இதுமாதிரியான கவியரங்கத்தை நடத்துவது சிரமமாக இராதா?
    அவ்வையார் அடக்கத்துடன் செவ் வையாரிடம் சொல்கிறார்--
    இல்லேங்க வாலிக்கு அந்த அனுபவம் இருக்கு. சொல்லப்போனால் கம்பன் கழகத்தில் கண்ணதாசனுக்குப் பிறகு கவியரங்கத்துக்கு அனுமதிக்கப்பட்டவர் வாலி தான்!
    எம்.ஜி.ஆர் உடனே சொல்கிறார்--
    சரி! அப்ப மா நாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் வாலியின் தலைமையில் ஒரு கவிரங்கத்தை ஏற்பாடு செய்துடுங்க!!
    ஆனால்??
    மறு நாளே வாலிக்குப் போன் செய்து காய்ச்சுகிறார் எம்.ஜி.ஆர்--
    இங்க நான் முதல்வரா நீங்க சி.எம் மான்னு தெரியலே? நீங்க சொல்லறதை நான் கேட்க வேண்டியிருக்கு??
    இந்த இடத்தில் உன்னிப்பாக நோக்க வேண்டும்--
    புலமைப் பித்தனைப் போல் வாலி கட்சிக்காரர் இல்லை. எம்.ஜி.ஆரோ நாட்டின் முதலமைச்சர்!
    வாலியின் வேண்டுகோளை சிரித்தபடியே மறுத்திருக்கலாம்!
    வாலியின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டு வாலியிடம் சீறுகிறார் என்றால்--
    ஒரு குடும்பத் தலைவன் தன் பிள்ளையிடம் காட்டும் பாசம் கலந்த கோபத்தைப் போல் தானே--
    நீ சுற்றுலா போவதற்கு அம்மா கிட்டே பணம் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோ. ஆனால் சும்மா இப்படி ஊர் சுத்தக் கூடாது--அப்பா!!
    இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்---
    தம் கவியரங்கத்தை வாலியை விட்டு துவங்க வைக்க இசைந்த கண்ணதாசனின் நம்பிக்கை சார்ந்த பெருந்தன்மை---
    கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாமல்,,கண்ணதாசனுக்கு தம்மால் சிறுமை ஏற்படக் கூடாது என்ற விதத்திலான வாலியின் அடக்கம் சார்ந்த பெருந்தன்மை---
    நாட்டின் முதல்வராயிருந்தும் வாலியின் கவியரங்கச் சிறப்பைக் கேள்வியுற்ற மாத்திரம் அவர் தலைமையில் கவியரங்கம் நடத்த உத்தரவிட்ட எம்.ஜி.ஆரின்--பெருந்தன்மை சார்ந்த பெருந்தன்மை!!
    அன்று தமிழ் எட்டு திசைகளிலும் ஏகாந்தமாக மணம் பரப்பியது என்றால் ஏன் பரப்பாது???.........vt...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •