-
1st May 2020, 09:58 PM
#141
Junior Member
Diamond Hubber
எங்கவீட்டுப்பிள்ளை அடைந்த மிகப்பெரிய வெற்றிக்கு பின் அதன் வெளியீடு உரிமையை ஒரு சில இடங்களுக்கு வாங்கி இருந்த தலைவர் மிக பெரிய லாபம் பெற்றார்.
நடித்த சம்பளம் போக அதிலும் பணம் கொட்டியதால் ஒரு நாள் 5 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் நாகிரேட்டி அவர்களிடம் சேரும் படி கொடுத்துவிட.
இரு நாட்களுக்கு பின் 5 லட்சத்தி ஒரு ரூபாய் பணத்தை இது உங்களையே சேரும் என்று அவர் திருப்பி கொடுத்து விட.
அப்படி நல்லவர்கள் இருந்த சினிமாத்துறை இன்று...
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன்...நெல்லை மணி........ Thanks...
-
1st May 2020 09:58 PM
# ADS
Circuit advertisement
-
1st May 2020, 11:20 PM
#142
Junior Member
Diamond Hubber
"எம்.ஜி.ஆரின் பலமே; அண்ணன் எம்.ஜி.சக்கரபாணிதான்".
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் நினைவு நாளை ஒட்டி எம்.ஜி.ஆரின் விசுவாசி ஒருவர், அன்றைய நாளிதழில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் பலமே அவருடைய அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி தான். அவர் சொன்னதை தட்டாமல் கேட்பவர். எம்.ஜி.ஆரின் வெற்றியில் பெரும்பங்கு இவருக்குண்டு. சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தன் அண்ணனைத் தான் எல்லாமுமாக நினைத்து வந்தார் எம்.ஜி.ஆர்.
தன் அண்ணனின் திடீர் மறைவை எம்.ஜி.ஆரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னுடைய பலம் அத்தனையும் திடீரென காணாமல் போய்விட்டது போல் உணர்ந்தார். அதன் காரணமாகவோ என்னவோ அண்ணன் மறைந்த ஒரு வருடத்திலேயே தானும் விண்ணுலகை அடைந்துவிட்டார்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி மறைந்த அன்று ஒரு பத்திரிக்கையில் வெளியான செய்தியை எம்.ஜி.ஆரின் விசுவாசி இப்போது வெளியிட்டுள்ளார். அதில்:
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அண்ணன் திரு. எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்தார். ஒருவாரத்திற்கு முன்பு சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னும் உடல் நிலை சீரடையாமல் 1986 ஆகஸ்ட் 17ஆம் நாள் இரவு 12.00 மணி அளவில் உயிர் பிரிந்தது.
அண்ணனின் உடல்நிலை மோசமடைந்ததை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தன் மனைவி ஜானகி அம்மையாருடன் அன்று இரவு 8 மணிக்கு மருத்துவமனை வந்தடைந்தார். அண்ணன் உயிர் பிரியும்போதும் அருகிலேயே இருந்த எம்ஜிஆர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
எம்.ஜி.ஆருடன், சக்கரபாணியின் மனைவி மீனாட்சி அம்மாளும், அவர்களது மகன்கள் மற்றும் மகள்களும் கதறி அழுதனர். சற்று நேரத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையிலிருந்த சக்கரபாணியின் இல்லத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு எம்ஜிஆர் ஒரு பெரிய மலர் மாலையை தன் அண்ணனின் உடல்மேல் சார்த்திவிட்டு மீண்டும் கதறி அழுதார். கவர்னர் குரானா எம்ஜிஆரை தேற்றினார். பின் எம்.ஜி.ஆரை அருகில் உள்ள அறையில் அமர வைத்தனர்.
மறுநாள் உடல் அடக்கத்தின் போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் வந்தனர். திரு.கருப்பையா மூப்பனார் அவர்கள் எம்ஜிஆருடனேயே கடைசி வரை இருந்தார். இறுதிச் சடங்கின் போது சக்கரபாணிக்கு வாய்க்கரிசி போடும் நிலையில் எம்.ஜி.ஆர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்.
அவர் கையிலிருந்த அரிசியை அண்ணனின் வாயில் போட எம்.ஜி.ஆரால் இயலவில்லை. சூழ்நிலையை உணர்ந்த மூப்பனார் அவர்கள், எம்.ஜி.ஆரின் கையை பிடித்து தட்டிவிட அரிசி அண்ணனின் வாயில் விழுந்தது. பிறகு எம்ஜிஆரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்றனர்.
Posted : M.G.Nagarajan
1 May 2020 9:31 PM
Thanks for : Vinoth R
Film beat Tamil News
Published : 19:10 IST...... Thanks...
-
2nd May 2020, 08:03 AM
#143
Junior Member
Diamond Hubber
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும.........
மூன்று எழுத்து நாவிலிருக்கும்........
பேரில் என்ன இருக்கிறது என்பார்.........
சேக்ஸ்பியர்.
சமீபத்தில் கோவைக்கு ஒரு கல்லூரியில் உரையாற்ற சென்று விட்டு சென்னை திரும்புவதற்கு கோவை ரயில் நிலையத்தில் அமர்ந்து இருந்தேன்.
புகை வண்டிகள் வருவதற்கான அறிவிப்பு வருகிறது உன்னிப்பாக கவனித்து கேட்டேன் "புரட்சி தலைவர் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் நிலையம்" செல்லும் கோவை விரைவு வண்டி 3 ம் நடைமேடையில் வரவிருக்கிறது...
மறுபடியும் அறிவிப்பு. ஆங்கிலத்தில் ஹிந்தியில் மூன்று முறை வருகிறது.
ஒவ்வொரு தொடர்வண்டிக்கும்
ஒவ்வொரு அறிவிப்பிலும் தலைவர் பெயர் உச்சரிக்கப் படுகிறது .
இங்கு ஒரு சிறிய கணிதம்...
எம்ஜிஆர். சென்ட்ரலில் இறங்கி நிலைய அதிகாரி யிடம் சென்று
விவரங்கள் சேகரித்து ஒரு சிறிய கணக்கு போட்டேன்...
சென்னை எம் ஜிஆர் சென்ட்ரலிருந்து கிளம்பும் இரெயில் வண்டிகள்: 103
103 வண்டிகளும் வழிதடத்திற்கேற்ப 2லிருந்து 40ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
(உதாரணமாக சென்னையிலிருந்து மும்பைக்கு 11வண்டிகள் செல்கின்றன . ரயில்வே அட்டவணை படி
சென்னைக்கும் மும்பைக்கும் நடுவில்
10 இரயில் நிலையங்களில் நிற்கும்...
9 அறிவிப்புகள் சென்னையில் ஒலிக்கும்.
9 அறிவிப்புகள் மும்பையில் ஒலிக்கும்.
10 இடைப்பட்ட ரயிலில்வே நிலையங்களில் (நின்று செல்லும்.)
ஒவ்வொரு நிலையத்திலும் 9அறிவிப்புகள் ஒலிக்கும்.
ஒவ்வொரு அறிவிப்பிலும் தலைவர் பெயர் ஒலிக்கும் ...
போகும் போதும் ஒலிக்கும்.
வரும் போதும் ஒலிக்கும்.
மொத்தம். 1*9*12*2தடவை தலைவர் பெயர் ஒலிக்கும்...
சராசரி யாக 20 நிலையங்களில் ஒரு வண்டி நின்று செல்கிறது என்று வைத்து கொள்வோம்.
மொத்த அறிவிப்புகள் 103*20*9*2
இந்த கணக்குப்படி...
ஒருநாள் இந்தியா முழுவதும் 40ஆயிரம் தடவைகள் தலைவர் பெயர் உச்சரிக்க படுகிறது.
ஒரு மாதத்தில் இந்தியா முழுவதும் 12(1.2 மில்லியன்) லட்சம் தடவைகள் தலைவர் பெயர் உச்சரிக்க படுகிறது.
ஒரு வருடத்தில் இந்தியா முழுவதும் ஒன்றை கோடி(1.5) தடவைகள் தலைவர் பெயர் உச்சரிக்க படுகிறது...
இதைவிட பேர் வலிமைக்கு என்ன உதாரணமாம் வேண்டும்...
தலைவர் பேர் வைப்பதற்கு காரணமான அனைவருக்கும் கோடானுகோடி நன்றி.................. Thanks.........
-
2nd May 2020, 08:03 AM
#144
Junior Member
Diamond Hubber
#இறப்பு #உண்டா???
ஒரு ரசிகனின் நெகிழ்ச்சியான நினைவுகள்...
#யாழ்ப்பாணத்திலிருந்து
மக்கள் திலகத்தின் '#ஒளிவிளக்கு' திரைப்படம் 'யாழ்' ராஜா திரையரங்கில் வெளிவந்து 169 நாட்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்ற படம். பின்னர் இரண்டாவது முறையும் எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்து மீண்டும் நூறு நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. இரண்டாவது தடவை வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த சமயம் மாணவர்களான நாங்கள் (நானும் நண்பர்கள் சிலரும்) மூன்று நாட்களாக முயன்று டிக்கட் கிடைக்காத நிலையில்,
நான்காவது நாள்...
காலைக் காட்சியின்போது 'பால்கனி' டிக்கட் பெற்றுப் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு காட்சியில்.. மரணப்படுக்கையிலிருக்கும் எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கடவுளை வேண்டி செளகார் ஜானகி 'ஆண்டவனே உன் பாதங்களைக் கண்ணீரால் நீராட்டுவேன்' என்று பாடுவார். அப்பாடலின் இடையில் 'உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை, விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?' என்று வரிகள் வரும்.
அச்சமயத்தில் 'பால்கனி'யிலிருந்து பலர் விசும்பி அழத் தொடங்கினார்கள். அழுதவர்கள் அனைவரும் எம்ஜிஆரின் தீவிர பக்தர்களான ஆண் இரசிகர்கள் தான். பொதுவாக சிவாஜியின் திரைப்படங்களைப் பார்த்துப் பெண்கள் மூக்குச்சிந்தி அழுவதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் எம்ஜிஆரின் படமொன்றிற்கு அதுவும் ஆண் இரசிகர்கள் அழுததை அப்பொழுதுதான் பார்த்தேன்.
இதன் காரணமாகவே அந்தப் பாடலும், செளகார் ஜானகியும், எம்ஜிஆரும், அழுத இரசிகர்களும் என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமொன்றின் பங்காளிகளாகி விட்டார்கள். அப்பொழுது நாங்கள் நினைப்போம்...! உண்மையிலேயே
எம்ஜிஆர் இறந்தால் என்ன நடக்கும்? அவருக்கு 'இறப்பு' என்பது உண்டா? அந்த வயதில் எங்களால் எம்ஜிஆர் இறப்பதைப் பற்றி கற்பனை கூடச் செய்ய முடியாமலிருந்தது?.......... Thanks...
-
2nd May 2020, 08:08 AM
#145
Junior Member
Diamond Hubber
"என் புள்ளய பாக்க நான் கூலி வாங்கனுமா... பொன்மனச்செம்மல் நமது எம்.ஜி.ஆரிடம் பணம் வாங்க மறுத்த மூதாட்டி".
சென்னை: எம்.ஜி.ஆர், மூதாட்டிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த போது வாங்க மறுத்து, உனக்கு அம்மான்னா உசுராமே, தாய், தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன, வச்சுக்கோ, ஆண்டவன் கொடுக்குறது போதும், என்றார் அந்த மூதாட்டி இதைக் கேட்ட மக்கள் திலகம் வாயடைத்துப் போனார்.
ஃபிலிமி சீட்டில் வந்த துணுக்கு செய்தி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐,
எம்.ஜி.ஆர் ஒரு முற்றுப் பெறாத புத்தகம் தான். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட, பக்கங்கள் வளர்ந்து கொண்டே போகும். அவரைப் பற்றி எத்தனையோ வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வந்தபோதும், அந்த புத்தகங்களில் இல்லாத, ஏதாவது ஒரு சுவராஸ்யமான விசயத்தை யாராவது தினசரி சொல்லிக்கொண்டும், அது பற்றிய செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் அன்றாட வாடிக்கைதான். அது மாதிரி தான் இன்றைக்கு, ஃபிலிமி சீட்டில் வந்த குறுஞ்செய்தியை; பொன் மனச்செம்மளின் பாசமிகும் நட்புகளுடன் பகிர்ந்து கொள்ள பிரியப் படுகிறேன்.
தலைவரை பற்றி வேறு என்ன பதிவு போடலாம் என நான் இணையத்தில் தேடியபோது. இது என் கண்ணில் பட்டது.
எம்.ஜி.நாகராஜன். 1 மே 2020 11:06 pm.,...... Thanks...
-
2nd May 2020, 08:14 AM
#146
Junior Member
Diamond Hubber
"துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன்"
"துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன் என்பது இறைவனுக்கு மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்தபோதும், முதல்வரான பிறகும் தன்னை வளர்த்து விட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்கு கஷ்டம் என்றாலும், அந்த தகவல் அவரது கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து காக்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாக தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ( ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த ஆண்டுகளில்) சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி, எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கு இருந்திருக்கிறது.
நடிகை என்ற ஓரு காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது, அவர்களை அந்த கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம்.
இவரும் நடிகைகளிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தை காக்கவேண்டிய சந்தர்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
Posted : M.G.Nagarajan
2 May 2020 12:10 AM
Thanks for :
Published : Naveenan
Vikatan Vanna Thirai
யாழ் இணையம்....... Thanks...
-
2nd May 2020, 08:16 AM
#147
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் குடும்பத்திற்குப் பால்யத்தில் உதவிய அந்தத் தாய்!
https://www.thaaii.com/?p=36251
“ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளைக் கட்டாயப் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும்.
தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு’’- இது ‘நாடோடி மன்னன்’ படத்தில் இடம் பெற்ற வசனம்.
இப்படித் திரையில் முக்கியத்துவம் கொடுத்த எம்.ஜி.ஆர் படித்த பள்ளி கும்பகோணத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்தபோது, இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும்.
எளிமையான இந்தப் பள்ளியில் அவருடைய ஆறாவது வயதிலிருந்து ஒன்பதாவது வயது வரை படித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
அவர் படித்திருப்பதை நினைவூட்டும் ரிக்கார்டுகள் இன்னும் இங்கிருக்கின்றன.
அதன் படி அவர் இங்கு சேர்ந்த தேதி 22.03.1922.
பள்ளியிலிருந்து விலகிய தேதி 27.07.1925.
அதன் பிறகு தான் ஆரம்பித்தது அவருடைய பாய்ஸ் கம்பெனி நாடக வாழ்க்கை.
தமிழக முதல்வரான பிறகு இதே பள்ளிக்கு வருகை தந்திருக்கிற எம்.ஜி.ஆர் தன்னுடைய கும்பகோணத்து பால்ய வாழ்க்கை பற்றியும், பக்கத்து வீட்டிலிருந்த பெண்மணியிடம் அரிசி வாங்கிச் சாப்பிட்ட காலத்தையும் பற்றியும் குறிப்பிட்டுவிட்டுப் பேசியிருக்கிறார்.
“அன்றைக்கு நாங்கள் பசியில் வாடியபோது, அந்தத் தாய் எங்கள் அம்மாவிடம் அரிசி கொடுத்திருக்கா விட்டால், நாங்கள் உயிரோடு இருந்திருப்போம் என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?’’
பசியைப் பற்றிய நினைவுகள் கூட எப்போதும் வெப்பமானவை தான்....... Thanks...
-
2nd May 2020, 08:18 AM
#148
Junior Member
Diamond Hubber
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 18 வெள்ளி
இந்தப்படம் ராமாவரம் தோட்டத்தில் எடுக்கப்பட்டது
இன்று உழைப்பாளர் தினம்
பாட்டாளி மக்களோடு அமர்ந்து உணவு அருந்தும்
MGR
எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் நடித்த காலத்திலிருந்து
முதலமைச்சராக அமர்ந்து மரணமடையும் வரை தான்
உழைத்து
சம்பாதித்த. பணத்தை ஏழை எளிய மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த நடிகர் இந்த உலகத்தில் யாரும் இல்லை
உலகத்திலுள்ள எந்த முதலமைச்சரும் எம்ஜிஆரை போல் மரணமடையும் வரை ஏழை மக்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தை வாரி வழங்கியவர்கள் யாரும் கிடையாது........ Thanks...
-
2nd May 2020, 08:25 AM
#149
Junior Member
Diamond Hubber
தாயைக் காத்த தனயன் !
_______________________
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறி வரும் !
மங்கையென்று சொன்னவரும் மனைவியென்று சொல்லவரும் !
கனவுகளை யதார்த்தங்களாக மாற்ற துடிக்கும் காதலர்கள் !
இப்பாடல் காட்சியை பார்க்கும் வன்முறையாளனும் வாழ்க்கையின் வசந்தத்தை காண துடிப்பான் !....... Thanks...
-
2nd May 2020, 12:02 PM
#150
Junior Member
Diamond Hubber
.......... Thanks.........
Bookmarks