-
3rd September 2020, 07:52 AM
#591
Junior Member
Diamond Hubber
வீடியோவில் எம்.ஜி.ஆர்., வரலாறு!
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்க்கை வரலாற்றை, வீடியோ ஆவணமாக மாற்றியுள்ளார்,நடிகரும், தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீர். ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்., என்ற பெயரில், மொத்தம், 25 வீடியோக்கள், இதில் இடம் பெற்றுள்ளன.இது குறித்து, அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., மீது, என் தந்தை கொண்ட அளவு கடந்த பற்று காரணமாக, அவரது படங்களில், உடை அலங்கார நிபுணராக பணியாற்றினார்.
எனக்கு, எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், அப்பா மூலமாக, அவர் குறித்து கேட்டபடியே, எம்.ஜி.ஆர்., ரசிகனாகவே வளர்ந்தேன்.வரும் இளைய தலைமுறைக்கு, இதை தெரியப்படுத்தும் விதமாக, எம்.ஜி.ஆர்., வரலாற்றை வீடியோக்களாக உருவாக்கி உள்ளேன். இந்த கொரோனா காலத்தில், மனச்சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி, தன்னம்பிக்கை அளிப்பவையாக, இந்த வீடியோக்கள் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்........
எம்.ஜி.ஆர் வாழ்க்கை
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை 25 வீடியோக்களில் வெளியிட்டுள்ளார், பஷீர். எம்.ஜி.ஆர் பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்' என்ற தலைப்பில் 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவாக்கி, யூடியூப்பில் இவர் பதிவேற்றியுள்ளார்.
எட்டாவது வள்ளல்
பத்திரிகையாளர் மணவை பொன்.மாணிக்கம் எழுதிய எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட புகழ்மன செம்மல் எம்.ஜி.ஆர் ஆகிய புத்தகங்களில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர் குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை படித்து நெகிழ்ந்த பஷீர், அவற்றை வீடியோக்களாக உருவாக்கி இருக்கிறார்.
உடையலங்கார நிபுணர்
இதுபற்றி ஜெ.எம்.பஷீர், கூறும்போது, 'என் தந்தை ஜமால், எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்று காரணமாக, அவரது படங்களில் உடையலங்கார நிபுணராக பணியாற்றினார். எனக்கு எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவிலையே தவிர, அப்பா மூலமாக அரைப்பற்றி கேட்டபடி எம்.ஜி.ஆர் ரசிகனாகத்தான் வளர்ந்தேன். அவரை பார்த்துதான் மற்றவர்களுக்கு உதவும் குணத்தையும் வளர்த்துக் கொண்டேன்.
தன்னம்பிக்கை
அந்த புத்தகங்களை படித்த போது தெரிந்து கொண்ட விஷயங்கள் மற்றும் எம்ஜிஆர் பற்றி ஏற்கனவே அறிந்து கொண்ட விஷயங்களை வைத்து வீடியோவாக உருவாக்கி இருக்கிறேன். இந்த வீடியோக்களை சுமார் 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த கொரோனா காலத்தில் மனச்சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கை அளிப்பவையாக இந்த வீடியோக்கள் இருக்கும் என்கிறார் பஷீர்.........
-
3rd September 2020 07:52 AM
# ADS
Circuit advertisement
-
3rd September 2020, 12:22 PM
#592
Junior Member
Diamond Hubber
அடுத்து நாம் சிவாஜி பட வசூலில் உள்ள தில்லுமுல்லுகளைப் பற்றி பார்க்கலாம். நமது மீது அபரிமிதமான பாசம் காட்டும் ஒரு சில அன்பர்கள் இதை பார்த்து என்ன பிரயோஜனம்? என்றும் வேறு உருப்படியான வேலையை பார்க்கும் படியும் கேட்கிறார்கள். நமது தளத்தில் வேறு என்ன உருப்படியான வேலை? என்று எனக்கு தெரியவில்லை.
சரி, அவர்கள் தளத்தில் என்ன உருப்படியான வேலை செய்கிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் தளத்தில் நாட்டின் தொழில் வளர்ச்சியையும்
GDP ரேட்டையும் ஏற்றுவதற்கு அனைவரும் ஒற்றுமையாக உழைப்பதை கவனித்தேன்.. சிவாஜி நடித்த இந்த காட்சி எந்தப் படத்தில் வருகிறது?
'ப' வரிசையில் மொத்தம் எத்தனை படம்? 'கு' வரிசையில் மொத்தம் எத்தனை?.
சிவாஜி இந்த நடிகையுடன் எத்தனை படங்களில் நடித்தார்?. சிவாஜி பேசும் இந்த வசனம் எந்த படத்தில் இடம் பெற்றது? இது போன்ற தொழில் வளர்ச்சி வேகமாக நடைபெறுவதை
பார்க்கும் போது எனக்கும் தேசப்பற்று சற்று அதிகம் பீரிட ஆரம்பித்து விட்டது. ஆகவே நாமும் தேசப்பற்றுடன் சிவாஜி பட வசூலில்
நடைபெற்ற ஊழலை பற்றி பார்க்கலாம்.
'ராஜா', 'நீதி' இரண்டும் சுஜாதா சினி ஆர்ட்ஸின் பாலாஜி படங்கள்.. இரண்டு படங்களும் தொடர்ந்து 100 காட்சிகள்HF என பேப்பரில் முழு பக்க விளம்பரம் வந்ததை பார்த்திருப்பீர்கள். அதை தொடர்ந்து வந்த வசூல் விபரங்களில் உண்மை, நேர்மை இருக்கிறதா? இல்லை மக்களை ஏமாற்ற கொடுத்த பொய் விளம்பரமா? என்பதை பார்க்கலாம்.
'நீதி' படத்தின் 28 நாட்கள் வசூலை பார்த்தால் ரூ 2,45,817.60. அதாவது 28 நாட்களில் மொத்தம் 84
காட்சிகள் HF . ஒரு காட்சியின் வசூல்
ரூ 2,926.40. 'திரை மன்னன்' பத்திரிகையில் 'ராஜா'வின் 10 நாட்கள் அதாவது 30 காட்சிகளின் வசூல் சுமார்ரூ 1,08,000. அதாவது ஒரு காட்சியின் வசூல் ரூ 3,600. 'ராஜா'வுக்கு பின்தான் 'நீதி'.
இரண்டும் 1972ல் வந்த படங்கள்.'ராஜா' ஜன 26 'நீதி' டிச 7
"ரிக்ஷாக்காரன்" 1971 ல் வெளியான படம். தொடர்ந்து 100 காட்சிகள் HF வசூல்ரூ 2,72,200. அதாவது ஒரு காட்சியின் வசூல் ரூ 2,722. "ரிக்ஷாக்காரனு"க்கு பின்னால் கட்டணங்களை மாற்றி அமைத்ததில் கூடியிருக்கலாம். 'ராஜா' தொடர்ந்து 107 காட்சிகள் HF விளம்பரம் வந்ததை நாம் அறிவோம். 107 காட்சிகளின் HF வசூல் 313124.80 .
அப்படியானால் ஒரு காட்சியின் வசூல் ரூ 2926.40 . சரி HF கணக்கு சரியாக வருகிறது. அப்படியென்றால் 50 நாட்கள் 150 காட்சிகள்HF ஆனால் என்ன வசூல் வரும். மொத்தம் ரூ 4,38,960. வரவேண்டும். ஆனால் ராஜா' படத்தின் 50 நாட்கள் வசூல் ரூ 4,64,457.80. என்று விளம்பரம் செய்திருக்கிறார்களே அதெப்படி? 50 நாட்களும் தொடர்ந்து எல்லா காட்சிகளும் HF என்று வைத்தாலும் ஒரு காட்சி வசூல் ரூ 3,096.38 வருகிறது. அதற்கு வாய்ப்பில்லை.
ஆனால் 'ராஜா'50 நாட்கள் தொடர்ந்து H F ஆகவில்லை. அப்படியானால் வசூல் இதைவிட சற்று குறைவாகத்தான் வந்திருக்க முடியும்.சுமார் ரூ 25,497.80 அதிகம் வருகிறதே? சிவாஜி படங்கள் மட்டும் 50,100,175 நாட்களை ஒட்டி. வசூல்
பிச்சிகிட்டு போகும் மர்மத்தை இதற்கு முன்னால்"திருவிளையாடல்"
"தங்கப்பதக்கம்" போன்ற படங்களில்
பார்த்திருக்கிறோம்.ஆனால் "ராஜா"வும் அப்படித்தானா?. அப்படி முயற்சி செய்தும் 1971 ல் வெளியான "ரிக்ஷாக்காரன்" வசூலை நெருங்க முடியவில்லை. ரிக்ஷாக்காரன் 51 நாட்கள் மொத்த வசூல் ரூ9,15,000. ஆனால் ராஜா 50 நாட்கள் மொத்த வசூல் ரூ 8,66,000.
"ரிக்ஷாக்காரன்" ஓடி முடிய மொத்த வசூல் ரூ 16,84000 ஆனால் ராஜா ஓடி முடிய 12 லட்சத்திற்குள் முடங்கி விட்டது. 50 நாட்களிலும்,ஓடி முடியவும் ரிக்ஷாக்காரனின் மொத்த வசூலை ராஜாவால் நெருங்க முடியவில்லை என்பதே உண்மை. சில பேர் 100 மீ ஓட்டப்பந்தயம் ஓடுவான். ஆனால் 1000 மீ அவனால் ஓட முடியாது.
அது போலதான் நம்ம ராஜா வும்.
50 நாளை வேகமாக ஓட்டிய "ராஜா" 100 நாட்களை ஓட்ட முடியாமல் 100 வது நாளன்று 2 காட்சிகளோடு படத்தை நிறுத்தி விட்டார்கள். அன்று இரவு 10 மணி இரண்டாவது காட்சிக்கு ஆளே வரவில்லையா? எவ்வளவு உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்பது தெரியாதா? சிவாஜி ரசிகர்களுக்கு.
்
ஆனால் 'நீதி' ஒரு காட்சி வசூல் ரூ 2,926.40 என்று வருகிறது. அதையே 'திரை மன்னனி'ல் ரூ 3,600 என்று வருகிறது.
ஆக மூன்று செய்திகளில் ஒரு H F
காட்சிக்கு மூன்று விதமான வசூல் வருவதை நீங்கள் பார்க்கலாம்.
'நீதி'யும் தொடர்ந்து 100 காட்சிகள் HF
இந்த கண்கட்டு வித்தை சிவாஜி படங்களுக்கு மட்டும் வருவதை நாம்
சிவாஜி ரசிகர்களின் பாசம் என்பதா?
இல்லை அவர்கள் செய்யும் மோசம் என்பதா?.
இது எல்லா சிவாஜி படங்களுக்கும் அவர்கள் காட்டும் மோடி மஸ்தான் வேலைதான். எம்ஜிஆர் ரசிகர்கள் எங்கே கணக்கு பார்க்கப் போகிறார்கள் என்று கள்ளக்கணக்கை காண்பித்தார்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு நாள் நேரம் இன்மையால் இதை கவனிக்கவில்லை. சற்று ஓய்வு கிடைத்தவுடன் எடுத்த முதல் கணக்கே கோணல். எனவே அவர்கள் கணக்கு முற்றிலும் கோணலாகத்தான் இருக்கும் என்பதில் எள்முனையும் சந்தேகமும் இல்லை.
"ரிக்ஷாக்காரன்" 51 நாட்கள் வசூலை
தேவி பாரடைஸில் எளிதில் முந்திய "ராஜா"வுக்கு 100 நாட்கள் வசூலை ஏன் முந்த முடியவில்லை. 50 நாட்களுக்கு பிறகு படம் ஓடாமல் உட்கார்ந்து விட்டதா? என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் சிவாஜி ரசிகர்களுக்கு தெரியும் அந்த வித்தை. எப்போதெல்லாம் வசூல் குவிக்க வேண்டுமோ அப்போதெல்லாம் சரியாக வசூல் குவிக்கின்றன சிவாஜியின் படங்கள் அவர்கள் நினைத்தபடி.......... Courtesy: Mr.Shankar, Rtd., SBI., Tuticorin...
-
3rd September 2020, 12:45 PM
#593
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆருடன் ‘பணம் படைத்தவன்’, ‘ஒளி விளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உட்பட பல படங்களில் r.s.மனோகர் நடித்துள்ளார். தோள்களை ஆட்டி உடலைக் குலுக்கி வசனம் பேசி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். ‘காவல்காரன்’ படத்தில் குத்துச்சண்டை வீரராக மனோகர் நடித்திருப்பார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கும் மனோகருக்கும் குத்துச்சண்டை நடக்கும்.
படப்பிடிப்பின்போது மனோகரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு குத்துச்சண்டை தெரியுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘ஏதோ கொஞ்சம் தெரியும்’’ என்றார் மனோகர். இரண்டு மூன்று ஷாட்கள் முடிந்ததும் மனோகரின் பஞ்ச், தான் குத்துவதை தடுப்பது ஆகியவற்றை கவனித்த எம்.ஜி.ஆர். மனோகரிடம், ‘‘ஏன்யா பொய் சொல்றே? பெரிய சாம்பியன் மாதிரி ஃபைட் பண்றே’’ என்று கூறியபடியே அவரை செல்லமாகக் குத்தினார்.
‘அடிமைப்பெண்’ படத்தில் நடிப்ப தற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூருக்கு மனோகரை எம்.ஜி.ஆர். அழைத்துச் சென்றார். நாட கத்துக்குத் தேவையான அலங்காரப் பொருட் களுக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிரபலம். மனோ கரை அழைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் நடத்தும் நாட கங்களுக்கு தேவையான பொருட்களை எவ் வளவு வேண்டு மானாலும் வாங் கிக் கொள்ளுங்கள். எல்லாம் என்னு டைய செலவு’’ என்றார். மகிழ்ச் சியில் திக்கு முக்காடிப் போய்விட்டார் மனோகர். தனது நாடகங் களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்.
‘அடிமைப்பெண்’ படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, படிகளில் உருண்டு விழ இருந்த மனோகரை எம்.ஜி.ஆர். சரியான நேரத் தில் பிடித்து அவரைக் காப்பாற்றினார்.
நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆர்வத்துக்கு ஒரு உதார ணம். ஒருமுறை சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் மனோகரின் நாடகங்கள் பதின்மூன்று நாட் களுக்கு தொடர்ந்து நடந்தன. எல்லா நாட்களும் எம்.ஜி.ஆர். வந்து நாடகங்களைப் பார்த்தார்.
அடாது மழை பெய்தாலும் விடாமல் நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்ததும் உண்டு. அதே என்.கே.டி. கலா மண்டபத்தில் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் சார்பில் ‘சத்திய தரிசனம்’ என்ற நாடகம் நடந்தது. அது திறந்தவெளி அரங்கம். தனது மனைவி ஜானகி அம்மையாருடன் வந்து நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் மழை வந்துவிட்டது. கூடியிருந்தவர்கள் அருகே இருந்த கட்டிடங்களில் போய் ஒண்டிக் கொண்டனர். எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் மழையில் நனைந்தபடியே அமர்ந்திருந்தனர்.
இதைப் பார்த்துவிட்டு சகஸ்ரநாமம், ‘‘மழை காரணமாக நாடகத்தை நிறுத்திக் கொள்கிறோம். இன்னொரு நாள் இதை நடத்துவோம்’’ என்று அறிவித்தார். நனைந்த உடையுடன் மேடையேறிய எம்.ஜி.ஆர்., ‘‘அடாது மழை பெய்தாலும் நாடகம் பார்க்கத் தயாராக இருந்தேன். நீங்கள்தான் நிறுத்திவிட்டீர்கள். பார்த்தவரை நாடகம் சிறப்பாக இருந்தது. மீண்டும் நடத்தும்போது சொல்லுங்கள் வருகிறேன்’’ என்று பேசினார்.
அதன்படியே, பெரம்பூர் ஐ.சி.எஃப். திடலில் மறுபடியும் ‘சத்திய தரிசனம்’ நாடகம் நடந்தபோது எம்.ஜி.ஆர். சென்று பார்த்து கலைஞர்களை கவுரவித்தார்.
#படத்தில் தலைவருடன் s.v, சகஸ்ரநாமம் , t.k. பாலச்சந்திரன் , கள்ளபார்ட் நடராசன் , பக்கிரிசாமி
ஆகியோர் ..........
-
3rd September 2020, 01:24 PM
#594
Junior Member
Platinum Hubber
கோகுலம்*கதிர்*-செப்டம்பர் -2020
------------------------------------------------------
என் காசுல* உன்கட்சி கொள்கை*
---------------------------------------------------
நாடோடி மன்னன் படத்தை*முதன் முதலாக டைரக்ட்*செய்கிறார் எம்.ஜி.ஆர்.*யார் யாரையோ*வைத்து பாட்டு எழுதுகிறார் .* ஆனாலும் திருப்தி இல்லை .கடைசியில் பட்டுக்கோட்டையாரிடம் ,உன்கிட்ட*பாட்டு இருந்தா*குடு கல்யாணம் என்று கேட்டதுமே*ஒரு பாட்டை நீட்டுகிறார் .
அதில்*சும்மா*கிடந்த*நிலத்தை*என்று ஆரம்பித்து*மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே, பசி வந்திட காரணம்*என்ன மச்சான் ?* அவன் தேடிய*செல்வங்கள் வேறு இடத்திலே*சேர்வதினாலே வரும் தொல்லையடி ,தினம் கஞ்சி கஞ்சி*என்றால் பானை நிறையாது*.சிந்திச்சு முன்னேற வேணுமடி*என்ற வரிகளை*படித்து பார்த்தார்*எம்.ஜி.ஆர். பிறகு சிரித்துக் கொண்டே*,நீ ரொம்ப விவரம்* கல்யாணம் ,என் காசுல உன் கட்சி*கொள்கையை எழுதிடலாம்னு பார்க்கிறியா*? என்று கிண்டலாக கேட்டார் .
ஆனால் கடைசிவரை*எம்.ஜி.ஆர். இந்த கவிஞனை மறக்கவே இல்லை .என்னுடைய நாற்காலியில் நான்கு கால்களில் 3 கால்கள் யாருடையது என்று எனக்கு தெரியாது*. ஆனால்* அதில் ஒரு கால்*என் தம்பி பட்டுக்கோட்டை*கல்யாணசுந்தரத்துடையது என்று புகழ்ந்து கொண்டே இருந்தார் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd September 2020, 03:48 PM
#595
Junior Member
Platinum Hubber
பாத்தாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 14/08/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.ஒரு பெரிய நடிகராக, தமிழக முதல்வராக இருந்த போதிலும் இப்போது பேசுகிறார், எனக்கு இவ்வளவு மன்றங்கள் இருக்கின்றது .லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் .அது ஒரு பெரிய விஷயம் அல்ல .ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போது, பல்வேறு காரணங்களுக்காகவும்*பலரும் கூட்டம் கூட்டமாக சேர்ந்து அவரை சொந்தம் கொண்டாடுவது உண்டு .ஆனால் அவன் இறந்த பிறகு ,என்னையே நான் எடுத்துக் கொள்கிறேன் .,எவ்வளவு பேர் அவனை நினைவில் வைத்திருக்கிறார்கள் எவ்வளவு பேர் அவனது நினைவை போற்றுகிறார்கள் .என்பதில்தான் ஒரு மனிதன் வாழ்ந்ததற்கான அர்த்தம் இருக்கிறது .அப்படி எனது மறைவிற்கு பின்னால் எனது மன்றங்கள் செயல்படுமேயானால் அதுதான் எம்.ஜி.ஆர். என்கிற மனிதன் வாழ்ந்ததற்கு ஏதாவது* நியாயமான காரணம் இருக்கிறது என்று நினைப்பதற்கு அது உதவியாக இருக்கும் ஆமாம். அது உண்மைதான் .இப்போதும்கூட எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மன்றங்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவிற்கு அவருடைய பெயரில் மன்றங்கள் இருக்கிறது .* அதே போல எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள், விசுவாசிகள், அபிமானிகள் ,மக்கள் திலகம் ,புரட்சி நடிகர், புரட்சி தலைவர் ,வாத்தியார் எம்.ஜி.ஆர். என்று பல்வேறு அமைப்புகள் சமூக வலை தளங்களில் போட்டி போட்டு கொண்டு அவர் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள் .* அவருடைய புகழை இன்றைக்கும் நிலை நிறுத்திக் கொண்டு ,அவருக்காக தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் நேரத்தை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் .என்பதுதான் அவர் கேட்டாரே ஒரு கேள்வி ,என் மறைவிற்கு பின்னாலும் என்னை வாழ செய்யபோகிறவர்கள் நீங்கள்தான் என்று ,அதை அவருடைய மன்றங்களை சார்ந்தவர்கள்* நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் .
காவலர்களுக்கு, காவல்துறைக்கு பயிற்சி அளிப்பதற்கு காவலர்கள் பயிற்சி கல்லூரி சென்னையில் இயங்கி கொண்டிருக்கிறது .* காவல்துறை அதிகாரியாக உள்ள வால்டர் தேவாரம் அதில் முதல்வராக பணியாற்றுகிறார் .அவர் ஒருநாள் வகுப்பில் பேசும்போது ,ஒரு காவலர் பணியில் இருக்கும்போது எப்படி இருக்க வேண்டுமென்றால் ,என் கடமை படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்கள் அறிமுக காட்சியில் எப்படி செயல்படுகிறார் என்று பாருங்கள் என்று சொல்லி அந்த காட்சியை அவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கிறார் .* அந்த காட்சியில் ஒரு பெண் தன்னந்தனியாக ஒரு குழந்தையுடன் நள்ளிரவில், இருள் சூழ்ந்த பகுதியில் வந்து கொண்டிருக்கிறார் .திடீரென நான்கைந்து முரடர்கள் தோன்றி ,அவள் கையில் உள்ள குழந்தையையும், அவள் அணிந்திருந்த ஆபரணங்களையும் பறிக்க முயற்சிக்கின்றனர்* *அந்த சமயத்தில் காவல்துறை அதிகாரியான எம்.ஜி.ஆர்.ஒரு பைக்கில்* ரோந்து வரும்போது இதை பார்த்து விடுகிறார்*பைக்கில் இருந்து இறங்கும் நேரம்தான் தெரியும். மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து அந்த முரடர்களை அடித்து, உதைத்து, துவைத்து எடுத்து ,அந்த பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றுகிறார் .அந்த காட்சியை பார்க்கிறவர்கள் திடுக்கிட்டு போவார்கள். என்ன நடக்கிறது என்று நினைப்பதற்குள்* அந்த காட்சி நடந்து முடிந்துவிடும் .அவ்வளவு வீரம், வேகம், விவேகம், சுறுசுறுப்பு, விறுவிறுப்பு கொண்ட காட்சி அது .காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் இந்த காட்சியை பாடமாக தன் நெஞ்சில் நிலை நிறுத்திக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதற்காக காவலர் பயிற்சி கல்லூரியில் திரையிட்டு காண்பித்ததாக அதிகாரி வால்டர் தேவாரம் தானே பலமுறை நிகழ்ச்சிகளில் சொல்லி பெருமை படுத்தியுள்ளார் .
நல்ல விஷயங்களை செய்வதற்கு நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் உங்களை* தேடி 9 அடிகள் தாண்டி* நன்மைகள் வரும் .என்று பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர். கூறியுள்ளார் .* இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் .* கடந்த 24/12/2019* *அன்று எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளன்று மதுரையை சார்ந்த பக்தர் ஒருவர் அன்னதானம் அளிப்பது என்று திட்டமிடுகிறார் .* 23ந்தேதி, அதற்கான ஏற்பாடுகள், பொருட்கள் எல்லாம் வாங்கி வைத்து, சமையற்காரரை,வரவழைத்து ,ஆலோசித்து,தன் வீட்டு பக்கத்தில் ஒரு இடத்தில பந்தல் அமைத்து* நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்தார் . என்ன பிரச்னை என்றால் 23ந்தேதி மதியம் இவர் வீட்டுக்கு அருகில் ஒரு முதிய பெண்மணி இறந்து போகிறார் . இப்படி* ஒரு தடை வந்துவிட்டதே. நாளை நிகழ்ச்சியை நடத்தலாமா ,வேண்டாமா என்று குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார் .* நடந்தது என்னவென்றால் அன்று மாலையே இறந்தவரின் சடலத்தை கொண்டு போய் எரித்து இறுதி சடங்குகளை முடிக்கிறார்கள் .*பிறகு அன்னதான நிகழ்ச்சி குறித்த பணிகள் மீண்டும் துரிதமாக*தயார் செய்கிறார் . மறுநாள் ,24ந்தேதி, குறிப்பிட்ட நேரத்தில் அன்னதான நிகழ்ச்சி தொடங்குகிறது . வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் மழை வருவது போல அறிகுறி. சிலர் இவரிடம் மழைவரும் போல தெரிகிறது . எப்படி நிகழ்ச்சியை நடத்துவது . சிலர் நனைந்துவிடுவார்கள் . நமது திட்டம் நல்லபடியாக நிறைவேறுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் . ஆனாலும் நிகழ்ச்சி, பொறுமையாக,ஆரம்பித்து, முடிவில் சற்றே வேகமாக அனைவரும்*சாப்பிட்டு முடித்து விடுகிறார்கள் .மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுறுகிறது*5.15க்கு* அடைமழை பொழிய ஆரம்பித்து கொட்டி தீர்த்துவிடுகிறது . அத்தனை தடைகளையும் கடந்து* நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்த அந்த மதுரை பக்தர் ,தலைவர் எம்.ஜி.ஆர். கூறியபடி நல்லதை செய்வதற்கு ஒரு அடி எடுத்து வைத்தால்* உங்களை தேடி 9* அடிகள் தாண்டி*நன்மைகள் வந்து சேரும் என்பது நிதர்சனமான உண்மை ,. இது வாத்தியார் சொன்னது என்று***சமூக வலை தளத்தில் பதிவு செய்தார் .*
நல்லதை செய்ய நினைக்கும்போது பல தடைகள் வருவது போல தோன்றினாலும் கூட* அந்த தடைகள்*.தடம் தெரியாமல் போகும் நிச்சயம்*உங்களுக்கு பலன் கிடைக்கும் என்பது ,எம்.ஜி.ஆர். அவர்கள் அவ்வையின் சொல்லான* அறம் செய்ய விரும்பு என்பதை தன் வாழ்நாள் எல்லாம் கடைபிடித்தார் அல்லவா,அதனால்தான் மக்கள் இதயங்களில் அவர் மன்னாதி மன்னனாக வீற்றிருக்கிறார் .
வென்றாரும், வெல்வாரும் இல்லாத நிலையில் ஒளிவீசும் தலைவா ,முடியரசருக்கு இல்லாத செல்வாக்கெல்லாம் முழுமையுடன் வெற்றிபெறும் முழுமதியே ,குன்றடைய புகழ் கொண்ட குணக்குன்றே தென்னாடும், தென்னவரும் உள்ளவரை* *.மன்னா உன் திருநாமம் துலங்கவேண்டும்*உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர், உள்ளங்கள் அதை கேட்டு மகிழ வேண்டும் .நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழாவில் இந்த கவிதை வாழ்த்தி எழுதி வாசிக்கப்பட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதியால் என்பது வியப்பான செய்தி .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் ....
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.உன்னை அறிந்தால்* - வேட்டைக்காரன்*
2.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
3.காவல் துறை அதிகாரியாக எம்.ஜி.ஆர். - என் கடமை*
4.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -ரிக்ஷாக் காரன்*
5.நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*
6.நான் அளவோடு ரசிப்பவன் - எங்கள் தங்கம்*
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd September 2020, 05:45 PM
#596
Junior Member
Diamond Hubber
28வது நினைவு நாள்:
அமைச்சர் பதவியை மறுத்த ப.நீலகண்டன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த சக்ரவர்த்தி திருமகள், ராமன் தேடிய சீதை, சங்கே முழுங்கு, குமரிகோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், கணவன், காவல்காரன், கொடுத்து வைத்தவள், திருடாதே, படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். ரஜினியின் அதிக படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் மாதிரி, எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் ப.நீலகண்டன்.
எந்த விஷயத்தில் சந்தேகம் இருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் ப.நீலகண்டனிடம் தான் ஆலோசனை கேட்பார் எம்.ஜி.ஆர். அவர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படங்களில் அவரை தனது இணை இயக்குனராக வைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை கமர்ஷியல் ஹீரோவாக்கியதில் நீலகண்டனுக்கு பெரும் பங்கு உண்டு.
கடைசிவரை எம்.ஜி.ஆருடன் நட்பாக இருந்த நீலகண்டன், அவரிடம் எந்த உதவியையும் கேட்டு பெற்றதில்லை. எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆன பிறகு தன்னை வளர்த்த ப.நீலகண்டனுக்கு ஏதாவது செய்ய நினைத்தார். திரைப்படம் உள்ளிட்ட கலைத் துறைக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கி அதற்கு ப.நீலகண்டனை அமைச்சராக்க விரும்பினார். ஆனால் நீலகண்டன். உங்கள் அன்பு ஒன்றே போதும் என்று அதை மறுத்து விட்டார். அவரின் 28வது நினைவு தினம் இன்று..........
-
3rd September 2020, 05:48 PM
#597
Junior Member
Diamond Hubber
புதுக்கோட்டை நகரில் எங்கவிட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மகத்தான சாதனை மற்றும்... திரைப்பட பட்டியல்கள் எங்கவீட்டுப்பிள்ளை
82 நாட்களும், ஒளிவிளக்கு
67 நாட்களும் அடிமைப்பெண்
66 நாட்களும் ஆயிரத்தில் ஒருவன்
60 நாட்களும் குடியிருந்த கோயில்
62 நாட்களும்
நம்நாடு
60 நாட்களும், காவல்காரன்
52 நாட்களும் ரகசியபோலிஸ்115
50 நாட்களும்
ஓடி சாதனை பெற்றது. இந்த சாதனையில்
50 நாள் கூட ஓடாத சிவாஜியின் சிவந்தமண் திரைப்படம் 41 நாட்களில் எடுக்கப்பட்டு விட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாடோடி மன்னனுக்கு பின் 50 நாள் ஓடிய திரைக்காவியம் எங்கவிட்டுப்பிள்ளை அதன் பின்பு நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான நம் நாடு திரைப்படம் தேவகோட்டை நகரில் உள்ள லட்சுமி திரையரங்கில் சனி ஞாயிறு 4 காட்சியும்
மற்றும் 13 நாட்கள் மூன்று காட்சியும் ஓடி 50 நாட்கள் கடந்து சாதனையைப் படைத்தது. இங்கு உள்ள சரஸ்வதி திரையரங்கில் சிவந்தமண் 18 நாட்கள் மட்டுமே வசூல் இல்லாது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்
தக்கது..........
-
3rd September 2020, 05:49 PM
#598
Junior Member
Diamond Hubber
மதுரை சிந்தாமணி திரையரங்கில் மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் சாதனைகள்...*
அரங்கில் வெள்ளிவிழா ஓடி சரித்திரம் படைத்த காவியங்கள்*
அடிமைப்பெண் 176 நாள்
வசூல் : 4,34,643. 75*
மாட்டுக்கார வேலன்* 177 நாள்
வசூல் : 4,33,744.54
*
அரங்கில் 200 காட்சிகள் அரங்கு நிறைந்த முதல் திரைக்காவியம் இதயக்கனி.
அரங்கில் 150 காட்சிகள் அரங்கு நிறைந்த திரைக்காவியம்*
மீனவ நண்பன்.
அரங்கில் நூறு காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்த காவியங்கள்*
அடிமைப்பெண்*
மாட்டுக்கார வேலன்*
நேற்று இன்று நாளை
அரங்கில் அதிக வசூலை உருவாக்கிய திரைக்காவியம் இதயக்கனி
வசூல் : 5,52,218.33
அரங்கில் 20 வாரங்களை கடந்த திரைக்காவியங்கள்*
அ.40 திருடர்களும்*
141 நாட்கள்*
அன்பே வா*
147 நாட்கள்*
இதயக்கனி*
146 நாட்கள்.
100 நாட்களை வெற்றி கொண்ட திரைப்படங்கள் ....
ராஜகுமாரி 112 நாள்
மர்மயோகி* 104 நாள்
காவல் காரன் 126 நாள்
வசூல் : 3,01,950.76
எங்கள் தங்கம்* 107 நாள்
வசூல் : 2,75,920.91
குமரிக் கோட்டம் 105 நாள்
வசூல் : 2,51,983.08
நேற்று இன்று நாளை 119 நாள்
வசூல் : 4,05,967,78
மீனவ நண்பன் 117 நாள்
வசூல் : 4,46,814. 11
12 வாரங்களுக்கு மேல் ஓடிய திரைக்காவியங்கள்.....*
மன்னாதி மன்னன்*
84 நாட்கள்.
கண்ணன் என் காதலன்*
93 நாட்கள்*
ரகசிய போலீஸ் 115*
92 நாட்கள்**
வசூல் : 2,66,722.25
ராமன் தேடிய சீதை*
84 நாட்கள்*
வசூல் : 2,64,700.42
மற்றும் அரங்கில் திரையிடப்பட்ட திரைப்படங்கள்*
சங்கே முழங்கு 69 நாட்கள்*
மகாதேவி 63 நாட்கள்
(இரண்டு அரங்கில் வெளியிடப்பட்டது
சந்திரா 41 நாள் )
ராஜராஜன் 50 நாட்கள்*
நாம் 70 நாட்கள்*
கலங்கரை விளக்கம் 73 நாட்கள்.
அரங்கில் அதிக அளவில்*
மக்கள் திலகத்தின் காவியங்களே
100 நாட்களை கடந்து வெற்றி சாதனை புரிந்துள்ளது.*
தொடரும் சாதனைகள்..............
-
3rd September 2020, 05:55 PM
#599
Junior Member
Diamond Hubber
1954 ல் மகத்தான...
மாபெரும் சாதனைகள் பல படைத்து அவ்வாண்டில் வெளியான
"மலைக்கள்ளன்".... மனோகரா படத்தை வென்ற
வரலாறு ....காணீர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கதாநாயகனாக வலம் வந்து மிகப் பெரிய தாக்கத்தையும் வெற்றியையும் ஏற்படுத்திய வெற்றி காவியமாக பட்சிராஜா தயாரிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை படைத்த ஒரே திரை காவியமாக மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் உருவெடுத்தான்!
மலைக்கள்ளன் திரைப்படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்......
ராஜகுமாரி , மருத நாட்டு இளவரசி மந்திரிகுமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி, என் தங்கை, ஜெனோவா திரைப்படங்களுக்கு பின் மிகப்பெரிய எழுச்சியை தென்னக திரைப்பட உலகில் ஏற்படுத்திய திரைக்காவியம்...... ஒரே ஒப்பற்ற காவியம் புரட்சி நடிகரின் வெற்றி பவனில் வெளியான மலைக்கள்ளன் ஆகும்.
"கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான் தவறுமாயின் குறி வைக்கமாட்டான்" என்று மர்மயோகியில்* மக்கள் திலகம் சொன்ன கருத்துக்கு பின்.... மலைக் கள்ளனில் மக்கள் திலகம் பதித்த ஒரு வெற்றி தலைப்புதான் "மலைக்கள்ளன் வந்தான் மக்கள் உள்ளங்களை வென்றான்" என்ற கருத்துடன் மலைக்கள்ளன் பவனி வந்தான் !
1954 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் வெளியான அத்தனை படங்களுக்கும் மகுடமாக ஜொலித்த ஒரே ஒப்பற்ற திரைக்காவியம் மக்கள் பேரரசு எம்.ஜி.ஆரின் மலைக்கள்ளன் ஆகும்.
மர்மயோகி திரைப்படத்திற்குப் பின் இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட திரைக்காவியம் மலைக்கள்ளன் ஆகும்.
48 திரையரங்குகளில் வெளிவந்து தமிழகத்தில் மட்டும் 38 திரையரங்கில் திரையிடப்பட்டு அத்தனை திரையரங்குகளிலும்*
50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த ஒரே காவியம்
மலைக்கள்ளன் மட்டுமே.
புரட்சி நடிகர் திரைப்பட வரிசையில் 32 வது காவியமாக மலைக்கள்ளன் ஜொலித்தான் ! மக்கள் திலகம் தனிப்பெரும் கதாநாயகனாக வலம் வந்த பதிமூன்றாவது திரைப்படமாக மலைக்கள்ளன் மகுடம் சூட்டினான்.
1954 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட உலகில் வெளியான அத்தனை படங்களுக்கும் மகுடமாக ஜொலித்த ஒரே ஒப்பற்ற திரைக்காவியம் மக்கள் பேரரசு எம்.ஜி.ஆரின் மலைக்கள்ளன் ஆகும்.
மர்மயோகி திரைப்படத்திற்குப் பின் இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட திரைக்காவியம் மலைக்கள்ளன் ஆகும்.
48 திரையரங்குகளில் வெளிவந்து தமிழகத்தில் மட்டும் 38 திரையரங்கில் திரையிடப்பட்டு அத்தனை திரையரங்குகளிலும்*
50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த ஒரே காவியம்
மலைக்கள்ளன் மட்டுமே.
புரட்சி நடிகர் திரைப்பட வரிசையில் 32 வது காவியமாக மலைக்கள்ளன் ஜொலித்தான் ! மக்கள் திலகம் தனிப்பெரும் கதாநாயகனாக வலம் வந்த பதிமூன்றாவது திரைப்படமாக மலைக்கள்ளன் மகுடம் சூட்டினான்!
சென்னையில் 3 திரையரங்குகளில் திரையிடப்பட்டு கேசினோவில் 100 நாட்களை வெற்றி கொண்ட முதல் காவியமாக மலைக்கள்ளன் திகழ்ந்தான். பிரபாத் 12 வாரங்களும், சரஸ்வதியில்*
11 வாரங்களும்* வெற்றி கொண்டான் மலைக்கள்ளன்.
மதுரை தங்கம் திரையரங்கில் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் மாபெரும் சாதனையை... வசூலை படைத்து 1954 ஆம் ஆண்டு 2 லட்சத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்த ஒரே திரைப்படமாக மலைக்கள்ளன் திகழ்ந்தான்..........
-
3rd September 2020, 05:56 PM
#600
Junior Member
Diamond Hubber
மதுரை மாநகரில் ராஜகுமாரி, மந்திரிகுமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி திரைப்படங்களுக்கு பின் ஐந்தாவதாக 100 நாளை கடந்தது திரைக்காவியம் மலைக்கள்ளன் ஆகும்.
நெல்லை மாநகரில் ராஜகுமாரி திரைப்படத்திற்கு பின் மலைக்கள்ளன் 100 நாட்களை கடந்து வெற்றி கொண்டு சாதனையைப் பதித்தான்.
1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக ஊர்களில் நூறு நாட்களை வெற்றிகொண்ட திரைக்காவியம் புரட்சிப் பேரரசின் மலைக்கள்ளன் ஆகும். சென்னை, மதுரை, திருச்சி கோவை, சேலம், நெல்லை, இலங்கை 100 நாட்களை வெற்றிகொண்ட வேந்தனாக மலைக்கள்ளன் முடிசூடினான்.
இந்திய திரைப்பட உலகில் ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஆறு மொழிகளில்.....*
(தமிழ் ,தெலுங்கு ,கன்னடம், உருது ,இந்தி , சிங்களம்) தமிழைத் தவிர மற்ற 5 மொழிகளில் நடித்த கதாநாயகன்களை விட மக்கள் திலகம் இயற்கையாக திரையில் பவனி வந்து ஜொலித்த காட்சிகள் சிகரம் போல் ஒளிவீசியது* மலைக்கள்ளன் காவியத்தில்...*
வெள்ளித்திரையில் மலைக்கள்ளன் காவியத்தில் மக்கள் திலகம் 4* விதமான கதாபாத்திரத்தில் பல விதமான தோற்றத்தில் சாதனை படைத்தார் மலைக்கள்ளன்... ஆக குமாரதேவன் ஆக .....அப்துல் ரஹீம் ஆக .....வயோதிகராக நான்கு வேடத்தில் வந்து வெள்ளித் திரையில் தன் இயற்கை பரிமாணத்தை பதித்தார்..........
Bookmarks