-
25th July 2020, 06:07 PM
#3951
Senior Member
Devoted Hubber
நல்ல திரைப்படங்கள் சமூகத்தில் நல்ல பண்பை வளர்க்குமா? மனிதரின் குண நலன்களை மேம்படுத்துமா?
கண்டிப்பாக.
பொழுதுபோக்காக இருந்தாலும் திரைகலையின் முக்கிய நோக்கமே அதுவே.
அந்த வகையில் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை பார்ப்போம்.
முதலில் தன்னிலையில் இதன் தாக்கத்தை நினைத்துப் பார்க்கலாம்.தன்னிலை என்றால் தனி மனித ஒழுக்கம் பண்பு நேர்மை கடமை முதலியன முக்கியமாக எடுத்துக் கொள்ளலாம்.நடிகர்திலகம் திரைப்படங்கள் பெரும்பாலும் மற்றும் அவர் செய்த பாத்திரங்களை நினைத்து பாருங்கள்.வியட்நாம் வீடு ,தங்கப்பதக்கம் ..
இன்னும் உண்டு .இவற்றில் கடமையுணர்வை பிரதிபலித்தார்.இப் பாத்திரங்கள் தமிழரிடத்தில் பெரும் தாக்கத்தை செய்தவையே! எத்தனை பெரிய மனிதர்கள் தங்களின் கடமையுணர்வுக்கு இவர்களை முன்னுதாரணமாக சொல்லியுள்ளனர்.சமூக பரவல் என்ற வார்த்தை இப்போது அதிகமாக சொல்லப்படுகிறது.அந்த சமூக பரவல்தான் இவர் கேரக்டர்களின் மூலமாக சமூகத்தை செம்மைப்படுத்தியது எனலாம்.அந்த கேரக்டர்கள் மனதில் ஆழமாக ஊடுருவி தாங்களும் இது போல் இந்த கேரக்டர்கள் போல் நாமும் பேரெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது.இது எப்படி என்றால், சில வருடங்களுக்கு முன் சக்திமான் என்ற தொடர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது தெரியும்.அந்த கேரக்டர் போல் பல சிறுவர்கள் செய்து ஆபத்தில் மாட்டிக் கொண்டனர் தானே! சில கொலை வழக்குகளில் குற்றவாளிகள் ,தாங்கள் குறிப்பிட்ட படத்தை சொல்லி அதை பார்த்துத்தான் நாங்களும் இக் குற்றத்தை செய்தோம் என்று வாக்குமூலம் கொடுத்தார்களே! இவைகள் எல்லாம் திரைப்படங்களினால் ஏற்பட்ட பாதிப்பை குறிக்கும் உதாரணங்கள் தான் .
நல்லவை நல்லதும் தீயவை தீதுமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
நல்ல கலையை அளிப்பது ஒரு நல்ல கலைஞனின் கடமையாகும்.இந்த வகையில் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் எப்படிப்பட்ட கருத்துக்களை சொல்லியுள்ளன என்பதை யாவருமறிவர்.கருத்துக்களை தன் ஆழ்ந்த நடிப்பால் எப்படியெல்லாம் மக்களின் மனதை நிறைத்தார்.
சமூகத்தில் உயர்ந்தவர்கள் எத்தனை பேர் தங்களின் ரோல்மாடலாக நடிகர்திலகத்தின் கேரக்டர்களை சொல்லியுள்ளனர் என்பதை அவரவர் பேட்டிகளில் சொன்னதை நாம் அறிந்திருக்கலாம்.
குடும்பம், பாசம் அடுத்தது.
இதற்கு உதாரணமாக நடிகர்திலகத்தின் இந்த படத்தை தான் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றில்லை.அவ்வளவு செய்திருக்கிறார்.எப்படிப்பட்ட குணம் கொண்ட மனிதனாக இருந்தாலும் தன் குடும்பம் பாசம் என்று வரும்போது அக்கறை கொண்டவனாகத்தான் இருக்கிறான்.சுயநலம் என்று கொண்டாலும் இதுவே உண்மையாகிறது.பாசமென்று எடுத்துக் கொண்டால் தந்தையாக மகனாக அண்ணனாக தம்பியாக என்று எல்லா குடும்ப உறவுகளையும் அவர் செய்திருக்கிறார்.ஏன் சிவாஜி மட்டும் தானா திரையுலகில்? சிவாஜி என்பது அரை நூற்றாண்டு ஆதிக்கம்.ஒன்று இரண்டல்லவே! எத்தனை எத்தனை படைப்புக்கள்! அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு வரும் போது மனதில் நிச்சயம் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.சிவாஜியின் பாதிப்பு சினிமா பார்க்கும் அனைவருக்குள்ளும் இருக்கும்.என்ன! சிவாஜி ரசிகர்கள் அதிகம் பேர் சொல்வார்கள்.மற்றவர்கள் மனதில் மறைமுகமாக இருக்கும்.
தன்னிலைக்கு அடுத்து ஒற்றுமை ...
ஒற்றுமை என்று சொல்லும் போது முதலில் தேச பக்தியை சொல்ல வேண்டும்.
தேசபக்தி நிறைந்துள்ள மனிதனிடம் நிச்சயம் நல்ல எண்ணங்களும் செயல்களும் இருக்கும்.சினிமா ஒன்று இல்லாமல் இதை பார்க்கும் போது அரசின் அறிவிப்புகளும் தங்களைச் சார்ந்தோர் சொல்ல கேட்டும் இன்னும் பல கதைகள் படித்தும் தேசபக்தி சமூகத்தில் நிறைந்திருக்கும் தான்.கொடி பிடித்த குமரன் தடியடியில் சாவதை பார்க்கும் போதும், செக்கிழுத்த வஉசியின் கஷ்டங்களைப் பார்க்கும் போதும், பாரதவிலாஸ், ராஜபார்ட் ரங்கதுரை, ரத்தத்திலகம் இன்னபிற படங்களை பார்க்கும் போதும் நம் மனதில் ஏற்படுகின்ற உணர்ச்சிகள் ரசித்து விட்டுப் போகும் நிலைகள் அல்ல.எப்போதெல்லாம் மூவர்ண கொடியை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் இந்த கலைப் படைப்புகள் நெஞ்சில் வந்து காட்சிகளாய் விரிகின்றன என்பதை யார் தான் மறுக்க முடியும்? அந்த வகையிலும் சிவாஜி செய்தவை ஒன்றிரண்டா?
தமிழ்நாட்டில் மக்களின் மனதில் நிறைந்துள்ள தேசபக்திக்கு நடிகர்திலகம் படங்களும் ஓர் காரணம்.
சமுகம் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்றால் முதலில் தனி மனித ஒழுக்கம் முதலில் அவசியம்.அது இருந்தால் அடுத்து குடும்ப உறவுகளின் பண்புகள் நன்றாக இருக்கும்.இதுவே ஒற்றுமைக்கு வழியாகி விடும்.இந்த குடும்ப ஒற்றுமை நடிகர்திலகத்தின் எந்த படங்கள் சொல்லியது என்று பார்ப்போம். இந்த வகையில் முதல் படமான பராசக்தியையும் சொல்லலாம்.
கடைசி படமான பூப்பறிக்க வருகிறோம் படத்தையும் சொல்லலாம்.இடையில் நீண்ட வரிசையில் எல்லா கதை களங்களிலிலும் குடும்ப ஒற்றுமை ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதத்தில் சொல்லப்பட்டவைதான்.
தமிழ் மண்ணில் ஈரம் இருப்பதற்கு ஒரு வகையில் நடிகர்திலகம் உருகி உருகி நடித்து நம் மனதில் இறக்கிய பாத்திர படைப்புகளும் காரணமே!
ஆன்மீகம்...
கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் கொள்கை சார்ந்தது.எந்த தீய எண்ணமும் கடவுள் வழிபாட்டில் இருக்காது.பக்தியானது மனிதனை கண்டிப்பாக செம்மைப்படுத்தும்.
தீயவனிடம் கூட பக்தியில் வேஷம் குறைவாகத்தானிருக்கும்.இவ்வளவு வளர்ந்த நாகரீகத்தில் திளைக்கும் நாட்டில் கடவுள் வழிபாடும் மிக மிக அதீதமே ! மனிதர்களின் மனங்களில் பக்தி அதிகமாக பரவ கலைகளும் ஒரு காரணமே!அந்த கலைகளில் திரைப்படங்கள் என்றால் திருவிளையாடல் திருவருட்செல்வர் சரஸ்வதிசபதம் கந்தன்கருணை படங்கள் விளைவித்த தாக்கத்தை யாராலும் மறுக்க முடியாது.எத்தனை ஆயிரம் தடவை கேட்டு கேட்டு பழக்கம் ஆன இப் படங்களின் வசனம் காட்சிகள் காலம் காலமாக எத்தனை மாற்றத்தை கொண்டு வந்திருக்கும்.
கடும் குற்றங்கள் புரிவோனும் நல்ல படங்களால் முழுமையாக மாறா விடினும் சில நொடிகளாவது தவறு செய்யும்போது சஞ்சலம் அடைவான்.அந்த நொடிதான் அந்த கலை பாய்ச்சிய மின்சாரம்.இந்த வகையிலே நடிகர்திலகத்தின் புராண இதிகாச படங்கள் சமூகத்தில் பரவலான நல்ல கருத்துக்களை திணித்தது என்பதில் மிகையில்லை.
நல்லவர்களாகவே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் பார்க்கும் போது அது இன்னும் ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றன.நல்ல கலை மனதில் ஊடுருவி மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி மனதை செம்மைப்படுத்தும் ஒரு காரணியாகவே விளங்குகின்றது.சமூகத்தில் நல்ல உணர்வுகள் நடமாட நடிகர்திலகத்தின் திரைப்படங்களும் ஒரு வகையில் காரணமே!
செந்தில்வேல் சிவராஜ்...
Thanks...
செந்தில்வேல் சிவராஜ்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th July 2020 06:07 PM
# ADS
Circuit advertisement
-
25th July 2020, 06:11 PM
#3952
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th July 2020, 06:20 PM
#3953
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th July 2020, 06:22 PM
#3954
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th July 2020, 12:57 AM
#3955
Senior Member
Devoted Hubber
இந்த இரண்டு புகைப்படங்களுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது...
முதல் புகைப்படத்தில் நமது நடிகர் திலகம் காலமான சமயத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்கள் நேரடியாக அன்னை இல்லம் வந்து நமது தலைவரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய காட்சி...
ஆனால், இரண்டாம் புகைப்படத்தில் எம் பி சீட்டுக்காக ஓட்டு கேட்க வந்த பாரத பிரதமர் மோடி அவர்கள் கூட்டணி கட்சியான அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தில் ஓட்டு வாங்கி விடலாம் என கனவு கண்டு இவ்வாறு மரியாதை செய்வது போல் பாசாங்கு செய்த காட்சி...
அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்...
ஏனெனில், நாம் இதைப்பற்றி சொல்லப்போனால் ''அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'' என்று மிகவும் சாதாரணமாக கூறி பல்லை காட்டுபவர்கள் தமிழ் நாட்டிலே
நிறைய பேர் இருக்கிறார்கள்...
ஆதலால், நான் சொல்ல வந்த
விஷயமே அதுவல்ல...
முதல் புகைப்படத்தில் நமது
உத்தம தலைவர் மட்டும் தனியொரு
கடவுளாக காட்சியளிக்கிறார்...
ஆனால், இரண்டாம் புகைப்படத்தில் மட்டுமல்லாமல் சட்டசபை முதல்வர் அலுவலகம் முதற் கொண்டு அனைத்து இடங்களில் நடைபெறும் எல்லா அதிமுக நிகழ்வுகளிலும் அந்த இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டதோ அவரே அங்கு இரண்டாவதாகத்தான் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்...
அதுபோல, எங்க தலைவர் இன்று வரை யாருக்கு பின்னாடியும் இருந்ததும் இல்லை...
நாங்கள் அப்படி அவரை வைத்து இதுவரை பார்த்ததும் இல்லை...
பெருந்தலைவரின் தொண்டராக மட்டுமே நாங்கள் இன்று வரை நடிகர் திலகத்தை நேசித்து வருகிறோம்...
எங்கும் சிவாஜி...
எதிலும் சிவாஜி என்று...
சிவாஜி என்ற ஒற்றை மந்திர வார்த்தைக்காக மட்டுமே காலமெல்லாம் மயங்கி கிடக்கிறோம்...
அதுதான் சிவாஜி...
அவன்தான் சிவாஜி இரசிகன்...
Thanks M V Ram Kumar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th July 2020, 12:59 AM
#3956
Senior Member
Devoted Hubber
நேற்று டிவிச் சேனல்கள் நடிகர் திலகத்தின் 13 திரைப்படங்களை ஒளி பரப்பு செய்து விட்டபடியால்
இன்று (26-07-20) ஈடு கொடுக்கும் விதமாக
சன் லைப் சேனலில் மாலை 4 மணிக்கு,
திரிசூலம்,
Thanks Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th July 2020, 06:20 AM
#3957
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th July 2020, 08:29 AM
#3958
Senior Member
Devoted Hubber
Thanks V C G Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th July 2020, 08:30 AM
#3959
Senior Member
Devoted Hubber
Thanks V C G Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
27th July 2020, 08:30 AM
#3960
Senior Member
Devoted Hubber
Thanks V C G Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks