-
1st May 2020, 07:05 PM
#3341
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st May 2020 07:05 PM
# ADS
Circuit advertisement
-
1st May 2020, 07:15 PM
#3342
Senior Member
Devoted Hubber
Sivaji Ganesan Untold Story | Exclusive Interview with Sivaji Chandrasekaran | அன்று முதல் இன்று வரை
உலகம் போற்றும் உத்தமர்.ஆலயம் இல்லா ஆண்டவன் .விளம்பரம் தேடா வள்ளல்.கலியுக கர்ணன் சிவாஜி அவர்கள்
உலகம் போற்றும் உத்தமர்.ஆலயம் இல்லா ஆண்டவன் .விளம்பரம் தேடா வள்ளல்.கலியுக கர்ணன் சிவாஜி அவர்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st May 2020, 07:18 PM
#3343
Senior Member
Devoted Hubber
எம்ஜிஆர் ஜானகிகாக சிவாஜி கணேசன் அரசியல் தேர்தலில் நின்று தோற்று போனபோது இந்த தோல்வி எனக்கு ஏற்பட்ட தோல்வி இல்லை இது எனது தந்தை எம்ஜிஆருக்கு ஏற்பட்ட தோல்வி எனது தாயார் ஜானகி அம்மையாருக்கு ஏற்பட்ட தோல்வி இந்த தோல்வி எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் என்று தனது வெறுப்பையும் ஆதங்கத்தையும் வெளிபடுத்தினார்.
Thanka fri...
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st May 2020, 07:20 PM
#3344
Senior Member
Devoted Hubber
கண்ணதாசன் சொல்வதை போல அரசியல் கற்று கொள்ள வேண்டும் என்றால் முதலில் சூழ்ச்சிகளை கற்று கொள்ள வேண்டும் என்பதை போல சிவாஜி சூழ்ச்சிகளை கற்று கொண்ட இருந்தால் இன்று அவர் தனது கட்சிக்கு மட்டும் தலைவராக இல்லாமல் தமிழ்நாட்டுக்கே தலைவராக மாறியிருப்பார்.
Thanks fri...
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st May 2020, 07:22 PM
#3345
Senior Member
Devoted Hubber
#சிவாஜியின்_கொடைத்_தன்மை_உண்மை_என்ன?என்னமோ 'எம்ஜியார் மட்டுந்தான் கொடைவள்ளல், சிவாஜி ஒரு கஞ்சர்' என்று வெகுகாலமாகவே தமிழ்நாட்டு ஜனங்களிடையே ஒரு பொய்யான ஒரு தகவல் பரப்பப்பட்டு வந்திருக்கிறது.அதைப் பற்றியெல்லாம் அந்த அப்பாவி என்றுமே கவலைப்பட்டதில்லை. 'சிலரைப்' போல, தான் செய்ததை விளம்பரப் படுத்தும் ஊடகத் தந்திரங்களை அவர் அறிந்தவருமில்லை.இருந்தாலும் அவரது அபிமானிகள் அவர் செய்த நற் காரியங்கள் பலவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.அது இங்கே: 1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார்.2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி.9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி.10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். பொதுவாகவே நடிப்பது ஒன்றைத் தவிர வேறு தந்திரங்கள் ஏதும் தெரியாத வெள்ளந்தி மனம் கொண்ட கலைஞன் சிவாஜி. அதனால்தான் திரையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஜொலித்த அந்த மகா கலைஞனால் அரசியலில் நிலைக்க முடியவில்லை. என்றாலும் என்னைப் போன்ற கோடிக்கணக்கானோர் நெஞ்சில், இந்தக் கட்டை வேகும் வரையிலும் அவர் வாழ்ந்திருப்பார், இன்னும் வரும் நூற்றாண்டுகளுக்கும் அவர் செய்த நடிப்புச் சாதனைகள் நிலைத்திருக்கும்
Thanks fri...
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st May 2020, 07:24 PM
#3346
Senior Member
Devoted Hubber
யாருக்குதெரியும்இந்தமகாகர்ணனின்அருமை.திருச்சிஅருகேதிருவானைக்காவல்கோவிலில்உள்ளயானைநடிகர்திலகம்சிவாஜியால்வழங்கப்பட்டது.அந்தயானையைபராமரிக்கமுடியாதநிலையில்கோவில்நிர்வாகம்திரு.சிவாஜியிடம்எங்கள்கோவில்வருமானத்தில்யானைக்குதீனிபோடமுடியவில்லை.வேறுகோவிலுக்குயானையைகொடுத்துவிடுங்கள்என்றுகூறினார்களாம்.அதற்குநடிகர்திலகம்நாளைவாருங்கள்பதில்சொல்கிறேன்.என் றுகூறினாராம்.ஒருவாரம்வரைபதில்வராதகாரணத்தால்கோவில்நிர்வாகம்மீண்டும்நடிகர்திலகத்தைகாணசென்றபோது!அவர்சொன்னவார்த்தைநிர்வாகத்திற்குஅதிர்ச்சிஅழித்தது.என்னவென்றால்கோவிலுக்குஅருகேஇரண்டுஏக்கர்நிலம்வாங்கியுள்ளதாகவும்.அந்தவிளைநிலத்தில்பயிர்செய்துவரும்வருமானத்தில்கோவிலுக்கும்யானைக்கும்.யானைபாகனுக்கும்.விவசாயிக்கும்கொடுக்கஏற்பாடுசெய்துள்ளதாகவும்.யானைபாகனுக்கும்.விவவசாயிக்கும்.வீடுஒன்றுஅமைத்துததருவதாகவும்கூறிஅதிர்ச்சிஅளித்தார்.நடிகர்திலக ம்.இன்றுவரைநடந்துகொண்டிருக்கிறது.அந்தயானைஇறந்தபிறகுமீண்டும்ஒருயானையைவாங்கிகொடுத்துள்ளார்.கலைவாரிசுஇளையதிலகம்பிரபுஅவர்கள்என்றுகோவிலுக்குசமீபத்தில்சென்றபோதுசொன்னார்யானைபாகன்.சொல்லாமல்செய்யும்கலியுககர்ணன்குடும்பம்.கஜதானம்(யானைதானம்)செய்வதுநாடுசெழிப்புடன்எந்தவிதபஞ்சம்இல்லாமல்மக்கள்வாழசெய்யும்தானம்.இதுபோல்கோவில்களுக்குஆறுயானைவாங்கிகொடுத்துள்ளார்.நடிகர்திலகம் என்பதுகுறிப்பிடதக்கது.தனக்கெனவாழாமல்நாடும்.ஊரும்வாழவழிவகுத்தஇந்தமாபெரும்தலைவனைஎன்றென்றும்போற்றிவணங்குவோம்
Thanks fri...
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st May 2020, 07:26 PM
#3347
Senior Member
Devoted Hubber
சிவாஜியின் திரிசூலம் 200வது பட விழா மதுரையில் நடைபெற்றபோது பைலட் பிரேம்நாத் பட தயாரிப்பாளர் சலீம் சிவாஜியின் மார்பளவு உருவ தங்க சிலையை சிவாஜிக்கு பரிசளி த்தார்.இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு விலை உயர்ந்த பரிசுப் பொருள் யாரும் இதற்க்கு முன் வழங்கியதில்லைசிங்கப்பூர் அரசு சுதந்திரம் பெற்று 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தங்க சுரங்கம் படத்தை அதிகார ப் பூர்வமாக தேர்ந்தெடுத்துசிங்கப்பூர் வெளி விவகார மந்திரி முன்னிலையில் சிறப்பு காட்சி காட்டப்பட்ட பெருமை சிவாஜியின் நடிப்புக்கு கிடைத்த பெருமையாகும்
Thanks fri...
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st May 2020, 07:29 PM
#3348
Senior Member
Devoted Hubber
அறுபதுகளின் இறுதியில் பால் தாக்கரே தமிழ் படங்களை மும்பையில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய திரைப்படங்கள் ஓடிய தியேட்டர்களை அவரது தொண்டர்கள் தாக்கிக் கொண்டு இருந்த காலம்.அப்போது சிவாஜி நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டு இருந்திருக்கிறது.அதை தடுக்க வேண்டும் என்று சொன்ன சிவசேனா தொண்டர்களுக்கு , பால் தாக்கரே சொன்ன பதில் இதுதான் ' சிவாஜி பார்க்கில் இருக்கும் மராட்டிய சிவாஜி சிலை செய்ய பெரிய நிதி உதவி அளித்தவர் சிவாஜி கனேசன்.அவரால்தான் தென்னிந்தியாவில் சிவாஜியின் புகழ் பரவியது.அவரது சினிமாவின் படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது' என்றாராம்.அமெரிக்க அரசால் அதிகார பூர்வமாக அழைக்கப்பட்டு கவுரவ படுத்தப் பட்ட ஒரே இந்திய நடிகர் சிவாஜி கணேசன்!.
Thanks fri...
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st May 2020, 09:06 PM
#3349
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தின் நடிப்பை காட்சிக்கு காட்சி அங்குளம் அங்குளமாக திரைத்துறையில் ஆராய்ச்சி பயிலும் துறையினருக்கு விளக்கும் எடிட்டர் திரு பி.லெனின் அவர்கள்,
Thanks.. Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st May 2020, 09:07 PM
#3350
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks