Page 312 of 400 FirstFirst ... 212262302310311312313314322362 ... LastLast
Results 3,111 to 3,120 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3111
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    என்றும் வசூல் சக்கரவர்த்தி
    முதல் மரியாதை
    முதல் மரியாதை படத்தில் எங்கள் இதயதெய்வம் டாக்டர் சிவாஜி நடித்து பாரதிராஜாவுக்கு திரை உலகில் ஒரு பெரும் மதிப்பு பெற்றுத்தந்த படமாகும்.
    ஆனால், சில ரசிகர்கள் முதல் மரியாதை படம் பாரதிராஜாவால் தான் ஓடியது என்று சொல்கிறார்கள். அதை நாங்கள் மறுக்கிறோம். இந்தப் படத்தைப் பொருத்தவரை பாரதிராஜா நன்றாக இயக்கி உள்ளார்; அவருக்கு எங்களுடைய நன்றி. ஆனால், அவரால் தான் ஓடியது என்பதை நாங்கள் மறுக்கிறோம். பாரதிராஜாவால் தான் ஓடியது என்றால் அதற்கு நாங்கள் ஒரு கேள்வியை கேட்கிறோம்.
    பாரதிராஜா இயக்கிய படங்கள் மொத்தம் 13. அந்த 13 படங்களில் ஒரு படமாவது ஐந்து ஊர்களில் நூறு நாட்கள் ஓடி உள்ளதா என்று நிரூபியுங்கள் பார்க்கலாம். ஆனால் பாரதிராஜா இயக்கிய 14ஆவது படைப்பில் நவரச நாயகன் டாக்டர் சிவாஜி நடித்த படம் தான் முதல் மரியாதை. இந்தப் படம் பாரதிராஜா இயக்கிய 13 படங்களை எல்லாம் வசூலில் முறியடித்து தமிழகமெங்கும் வெற்றி நடை போட்டது. மேலும், பாரதிராஜா இயக்கிய படங்களில் முதன்முதலாக 32 ஊர்களில் 50 நாளும், 14 ஊரில் 75 நாளும், 9 ஊர்களில் நூறு நாளும், 7 ஊர்களில் 125 நாளும், ஐந்து ஊர்களில் 150 நாளும், மூன்று ஊர்களில் வெள்ளிவிழாவும் ஓடியது தேவர் குல சிங்கம் சிவாஜியின் முதல் மரியாதை. மேலும் 1985 ஆம் ஆண்டில் பல பேனர்கள் தயாரித்த மசாலா படங்களை எல்லாம் வசூலில் பின்னுக்குத்தள்ளி வெற்றிக்கொடி கட்டிய முதல் மரியாதை காவியத்தின் வசூல் சாதனையை பாரீர் !
    சென்னை சாந்தி 177 நாள் - ₹ 21,36,475.20
    மதுரை குரு 127 - ₹ 7,18,340.10
    மதுரை மது 88 - ₹ 6,23,490.45
    கோவை தர்ச்சனா 177 - ₹ 15,40,617.00
    தஞ்சாவூர் கமலா 177 - ₹ 11,98,535.00
    திருச்சி மாரிஸ் 155 - ₹ 17,65,767.00
    சேலம் சங்கம் பாரடைஸ் 155 - ₹ 13,50,868.18
    ஈரோடு ஸ்டார் 148 - ₹ 8,38,839.00
    நெல்லை சிவசக்தி 109 _ ₹ 5,96,535.00
    பாண்டி அண்ணா 105 - 4,36,347.00
    ( வெறும் 10 திரையரங்குகளில் மட்டுமே ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் வசூல் கிட்டியது)
    மேலும் 1985ஆம் ஆண்டில் இரண்டு வெள்ளி விழாப் படங்களைத் தந்தவரும் தெய்வமகன் சிவாஜி அவர்கள் தான்.
    1 முதல் மரியாதை 2 படிக்காதவன்

    திருச்சி மாநகரில் 100 நாட்களில் 14 லட்சம் வசூல் பெற்ற ஒரே படம் சாதனை கலைஞரின் முதல் மரியாதை.
    கோவை தர்ச்சனா தியேட்டரில் 650 அரங்கு நிறைந்த காட்சி களைப் பெற்று வசூல் புரட்சி செய்தது எங்கள் தங்க ராஜா வின் முதல் மரியாதை.
    தஞ்சை திரைப்பட வரலாற்றிலேயே 100 நாட்களில் நடைபெற்ற 400 காட்சிகளும் ஹவுஸ்புல் ஆன ஒரே படம் கலையுலக கடவுளின் முதல் மரியாதை .
    குடந்தை காசி ஏசியில் அதிக நாட்கள் ஓடிய ஒரே படம் 88 நாட்கள் (தினசரி 4 காட்சிகள்) இந்தியாவின் முடிசூடா மன்னர் எங்கள் தலைவர் சிவாஜியின் முதல் மரியாதை.
    ஈரோடு நகரில் 148 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது கலைச் சிற்பி சிவாஜியின் முதல் மரியாதை .
    ஆர்ப்பாட்டமான விளம்பரம் செய்து ஓட்டிய முந்தானைமுடிச்சு சாதனையை அமைதியான முறையில் விளம்பரமின்றி முறியடித்த உண்மையான கொடை வள்ளலே முதல்மரியாதை ஒன்றே (ஆதாரம் கல்கண்டு 31:10:1985 )

    தொகுப்பு : V.V. ஹரி , ஜி.ஆர். ரத்தன்
    மதுரை.
    1986-ல் மதுரை ரசிகர்கள் வெளியிட்ட தாய்க்கு ஒரு தாலாட்டு திரைப்பட மலரிலிருந்து வான்நிலா விஜயகுமாரன்

    கொசுறு செய்தி :
    நடிகர் திலகத்தின் முதல் மரியாதை திரைப்படம் ரஷ்யா முழுதும் திரையிடப் படுவதற்கான உரிமை ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானது என்பது வரலாற்று சாதனை.


    Thanks .. Vaannilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3112
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    உயர்ந்த மனிதன்
    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அரிதாரம் பூசியவர்களுக்கு அங்கீகாரம் தேடிக் கொடுத்த அவதாரபுருஷன். கூத்தாடிகள் என்றும் வேஷதாரிகள் என்றும் கலைஞர்களை மக்கள் இழித்தும், பழித்தும் தூற்றிய நிலைமையை மாற்றி நடிகரும் சமுதாயத்தில் போற்றப்பட வேண்டியவன் என்ற மாற்றத்தை ஏற்படுத்தியது சிவாஜியின் மாபெரும் சாதனை.
    தனக்கு சரியென தெரிந்தால் அந்த முடிவில் உறுதியாக இருந்து, ஒழுங்கீனங்களும் வரம்பு மீறல்களும் நிறைந்த திரையுலகில் நேரம் தவறாமையை இறுதி வரை கடைபிடித்து, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது, தொழிலை தெய்வமாகப் போற்றியது, பொதுவாழ்வில் நேர்மையாக, நாணயமாக நடந்து கொண்டது ஆகிய நற்குணங்களால் ஒரு சிறந்த நடிகராக மட்டும் அன்றி ஓர் உயர்ந்த மனிதராகவும் அவர் விளங்குவதால் மரணத்தை வென்ற மாமனிதராக இன்றும் நம்மிடையே வாழ்கிறார்.
    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரால் திராவிட பாசறையில் வளர்க்கப்பட்டவர் சிவாஜி. 1954-ஆம் ஆண்டு இறுதியில் பீம்சிங் அவர்களோடு திருப்பதி சென்று சாமி கும்பிட்டு வந்ததால் திமுகவை விட்டு வெளியேறும் சூழ்நிலை. ஒரு மிகப்பெரிய இயக்கத்தின் ஆதரவை இழக்கிறோம் என்ற கவலை இல்லாமல் கடவுள் மறுப்புக் கொள்கையில் வேறுபாடு வந்தபின் அங்கே தொடர்வதில் நேர்மை இல்லை என முடிவெடுத்தார். அன்றைய நாட்களில் திராவிட இயக்கங்களின் தீவிர பிரச்சாரத்தால் உயர் ஜாதியைச் சார்ந்த பிராமண நடிகர்களே தங்கள் பக்தியை வெளிப்படையாக காட்டிக்கொள்ள தயங்கிய நேரத்தில், நெற்றி நிறைய திருநீறு பூசி படப்பிடிப்பிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பழனி சித்தநாதன் விபூதிக்கு இவரது திருநீறு பூசிய நெற்றியுடன் காட்சியளிக்கும் முகம் விளம்பரமாக பயன்படுத்தப் பட்டதே அவரது வெளிப்படையான பக்திக்கு சாட்சி.
    1954ஆம் ஆண்டு திமுகவை விட்டு விலகிய சிவாஜி எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால், எல்லாக் கட்சியினருடனும் நட்புடன், தோழமை உணர்வுடன் பழகினார்.
    இதற்குப் பல சான்றுகள் உள்ளன.

    தமிழரசு கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்கள் திருத்தணியை மீட்டு நகருக்குள் நுழைந்த போது மேள தாளம் முழங்க எல்லைப்புறத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஒரே தமிழர் நம் நடிகர் திலகம் தான்.
    சொல்லின் செல்வர் E.VK.சம்பத் அவர்கள் திமுகவை விட்டு விலகி, தமிழ் தேசிய கட்சி தொடங்கியபோது நேரில் சென்று வாழ்த்தினார்.
    பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் ஜீவா அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடத்தி ஒரு மாபெரும் தொகையை விவசாயிகள் மாநாட்டிற்கு அளித்தார்.
    கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் சார்பில் உருவான படமான குறவஞ்சியில் ஏற்கனவே நடித்தவர் திடீரென விலகிவிட,தனது நண்பர் கலைஞருக்காக முழுப்படத்தையும் குறுகிய காலத்தில் நடித்துக் கொடுத்து உதவினார்.
    தி.மு.கழகத்தின் திரு.அரங்கண்ணலுக்காக பச்சை விளக்கு படத்தில் நடித்தார்.
    அதிமுக-வின் கோவைத்தம்பி படமான மண்ணுக்குள் வைரம் படத்தில் நடித்தார்.
    திரு.ஆர். எம் .வீரப்பன் அவர்களின் சத்யா மூவிஸ் படமான புதிய வானம் படத்தில் நடித்தார்
    பெருந்தலைவர் காமராஜரின் மறைவிற்குப் பிறகு சிவாஜி தன்னை இந்திரா காங்கிரசில் இணைத்துக் கொண்டார். இந்த முடிவு சிவாஜி ரசிகர்கள் எதிர்பார்த்த முடிவிற்கு நேரெதிரான முடிவு. தமிழகம் , புதுவை மாநிலங்களில் உள்ள ரசிகர் மன்றங்கள் பலவும் கலைக்கப்பட்டன. சிவாஜியின் சகாப்தம் முடிந்தது என அரசியல்வாதிகள் தப்புக்கணக்குப் போட்டனர். ஆனால் இதைக் கண்டு சிவாஜி மனம் கலங்கவில்லை. தீபம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அரசியல் வேறு; சினிமா வேறு என்பதையும் தமிழ் திரை உலகை விட்டு சிவாஜியை எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலாது என்பது உறுதியாயிற்று. சிவாஜி சகாப்தம் மீண்டும் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.
    1988 ஆம் ஆண்டு சிவாஜி தனிக்கட்சி தொடங்கினார். முழுக்க முழுக்க தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் கட்சியை வளர்த்தார். யாரிடமிருந்தும் ஒரு பைசா கூட நன்கொடை வாங்கவில்லை. அது மட்டுமல்ல... தமுமு சார்பில் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும தேர்தல் செலவிற்காக பல லட்சங்களை தன் சொந்த சேமிப்பிலிருந்து கொடுத்தார். தேர்தல் முடிந்த பிறகு தன் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் களை அழைத்து அவருடைய சொந்தச் செலவில் அவர்கள் செய்த சுவர் விளம்பரங்களை அழித்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
    ஆனால் சுய அரசியலில், கடைசி காலத்தில் ஏற்பட்ட ஒரே ஒரு தோல்வியினால் ஆரம்ப காலத்தில் அவர் ஏறி நின்ற எவரெஸ்ட் சிகரங்கள் எல்லாம் பல்லாவரம் மலைகளை விட உயரம் குறைந்தவை என தற்போது ஒப்புதல் அளிக்கப் படுகின்றன.
    கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே எப்படி அடங்கிவிடாதோ அப்படியே அன்னாரின் சாதனைகளும் புகழும் ஒரு தோல்வியால் முடங்கிவிடாது. அது நாளுக்கு நாள் கதிரவனைப் போல் ஒளி வீசிக் கொண்டே இருக்கும்.
    கோபுரம் கீழே விழுந்தாலும் கோபுரம் தான்!
    ( இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள் நூல் /பாகம் ஒன்றிலிருந்து )
    - வான்நிலா விஜயகுமாரன்



    Thanks ,,, Vaannilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3113
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks ,,, Vaannilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3114
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இக்கட்டான காலகட்டமாக இருக்கட்டும் அல்லது வளர்ச்சிக்கு அடிகோலிடுவதாக இருக்கட்டும்,
    இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் உள்ள மக்களுக்கு உதவியவர் நடிகர் திலகம்,

    மும்பையில் நூல் நிலைய கட்டிடம் அமைய வேண்டி1965 ஆம் ஆண்டின் போது நடிகர் திலகம் நாடகம் நடத்தி பெருமளவு நிதி திரட்டிக் கொடுத்தார்,
    நாடகத்தின் விவரங்கள் இனைப்பில் உள்ளது,





    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3115
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    Thanks Gururo
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3116
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    Thanks ..Gururo
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3117
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தன்னைவிட யாரும் முன்னேறக்கூடாது முன்னேறிவிடக்கூடாது முன்னேறி இருக்கக்கூடாது

    என்ற சிறந்த கொள்கையுடையவர்தான் திருவாளர் மா கோ ரா அவர்கள்.

    தமிழில் முதல் முதலாக சினிமாஸ்கோப்பில் வெளிவந்த திரைப்படம்

    நடிகர் திலகம் நடித்து வெளிவந்த ராஜராஜசோழன்,

    ராஜராஜசோழன் படம் தயாரிக்கத் தொடங்கமுன்னரே ஸ்டண்ட் நடிகரின்

    உ சு வாலிபன் படம் வெயியிடத் தயார் நிலைக்கு வந்திருந்தது,

    நடிகர் திலகத்தின் படம் தமிழில் முதுல் சினிமாஸ்கூப் படமாக

    வெளிவரப் போகின்றது என்ற தகவல் மா கோ ரா வை நித்திரை கொள்ளவிடாமல் தவிக்கவைத்தது,

    கைகூலிகளுக்கும் நித்திரையில்லை மண்டையைபோட்டு பிய்த்துக்கொண்டார்கள்.

    ஆலோசனை சபை கூடியது உலக தொழில்நுட்பவியலாளர்களை தொடர்ப கொண்டார்கள்

    தாங்கள் படம்பிடித்த உ ச வாலிபன் பிரதிகளை சினிமாஸ்கோப்பிற்கு மாற்றிதர இயலமா?

    என கெஞ:சாத குறையாக

    முடிவ பூஜ்ஜியம்.

    மா கோ ராவின் பொன்மனம் எப்படி என்பதை பார்த்தீர்களா?

    (தானே கூட்டத்தை எற்பாடு செய்து தனது கைகூலிகள்மூலம் பொன்மனச்செம்மல்
    என்ற பட்டத்தை தனக்கு வழங்கும்படி திரு கிருபானந்தவாரியாரிடம் கேட்டு
    தனக்கத்தானே சூட்டிக்கொண்ட பட்டமல்லவா? அப்போ பொன்மனம் எப்படி
    மா கோ ராவிடம் எதிர்பார்க்கலாம்)

    உ சு வாலிபனை சினிமாஸ்கோப்பிற்கு மாற்ற முயற்சி நடந்தவேளை
    சிவாஜி ரசிகன் பத்திரிகையில் வெளிவந்த கார்ட்டுன்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3118
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை....ஊருக்கு தீமை செய்தவனில்லை....வல்லவன் ஆயினும் நல்லவன்....நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும், செயலிலும் நல்லவன்...'
    நாளை ( 23/04/2020 ) காலை 11.00 a.m. மணிக்கு முரசு டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த " படித்தால் மட்டும் போதுமா" படத்தை காண தவறாதீர்கள். ¶
    சிவாஜி, பாலாஜி, சாவித்திரி, ராஜ சுலோசனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3119
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வரலாறு தெரியாதவர்களுக்கான ஒரு நயவஞ்சக உண்மை:
    1977 ல் எம்ஜியார் சினிமா கவர்ச்சியால் முதல் மந்திரியானார்.
    1977 முதல் தீபம்...அண்ணன் ஒரு கோவில் ...
    1978 ல் அந்தமான் காதலி...தியாகம்...ஜெனரல் சக்ரவர்த்தி... பைலட் பிரேம்நாத்...என்று தொடர்ச்சியாக ...ஆரவாரமாக....ஆரப்பாட்டமாக...நூறு நாட்கள்... வெள்ளிவிழா என தலைமேல் வைத்து கொண்டாடியது....

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
    1979ல் திரிசூலம் அதுவரையிருந்தஅனைத்து ரெக்கார்டுகளையெல்லாம் தூக்கியடித்தது...அனைத்து தரப்பு மக்கள் , சிறுவர்கள் , தாய்மார்கள் அனைவரையும் காந்தம் போல் தன்பால் சிவாஜி வசீகரித்தார்...

    இப்பொழுதுதான் கோட்டையிலிருந்தவருக்கு வேர்த்து விறுவிறுத்து கிலி பிடிக்க ஆரம்பித்தது...
    தான் ஏறி வந்த சினிமா கவர்ச்சி என்ற அதே கயிரை பிடித்து சிவாஜி வந்து தன் அரியாசனத்தை பிடித்து விடுவாரோ என்று நடுநடுங்கி சதி திட்டம் போட ஆரம்பித்தார்...
    விளைவு...
    தலைவரின் புகழ் , மக்கள் அன்பு , கவர்ச்சி என்று அனைத்து இமேஜ் உடைப்பு வேலையை ஆரம்பித்தார்...

    அன்றைய காலகட்ட முன்னணி வார பத்திரிக்கைகளை மிரட்டி மற்றும் பணம் கொடுத்து அண்ணன் சிவாஜியை அவரது வயது ..உடல் பருமனை வைத்து கிண்டல் செய்து அவர் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் காதல் காட்சி மற்றும் சண்டை காட்சியில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வாரவாரம் பட்டிமன்றம் , பொது மக்கள் அளவலாவல் , பிரபல நடிகர்கள் திரை துறை பிரபலங்கள் பேட்டி... என்று தலைவரின் நெருங்கிய நண்பர்களையே (உதாரணமாக விகேயார்...மேஜர் ) மிரட்டி அல்லது விலைக்கு வாங்கி அவர்கள் வாயிலாக கருத்து என்ற பேரில் விஷத்தை மக்கள் மனதில் ஏற்றி மூளை சலவை செய்தார்...
    (ஒரு உதாரணம் )
    52 வார தொடராக கல்கி இதழில் வெளி வந்த ' சிவாஜி சகாப்தம் முடிந்து விட்டதா ? ' என்ற தொடர் ...( அவரின் வெள்ளி விழா படங்கள் வந்த கொண்டிருந்த வருடங்களில்....)

    நம் தலைவர் 'இதை யார் எதற்காக செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும் ' என்று ஒரு பேட்டியில் வேதனையுடன் சொன்னார்....
    ஒரு திரைப்படம் ஓட வேண்டமென்றால் ரசிகர்களால் மட்டும் முடியாது...வெகுஜன ஆதரவும் வேண்டும்...


    இந்த பதிவை பற்றி உங்கள் ஞாபகத்தில் இருப்பதை தயவு செய்து கமென்டில் கூறுங்கள்...அறிய ஆசை ..ஆவல்..
    நன்றி....




    Thanks Hemanathkumar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3120
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கண்ணியவானின் கதை

    மா கோ ராவின் கண்ணியத்தைப்பற்றி அவரத சீடர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்துபுழுகி தள்ளுவார்கள் .விடயம் தெரியாத மக்களும் அதனை உண்மையென நம்பிவிடுவார்கள் .ஆனால் உண்மை என்னவென்பதை தொடர்ந்து கவனியுங்கள்.
    மா கோ ராவும் அஞ:சலிதேவியும் நடித்த படம் ஒன்றின் பாடல் காட்சி படமாக்கிக்கொண்டிருந்தார்கள் அப்பொது ஒரு கட்டத்தில் அஞ:சலிதேவியின் கணுக்கால் தெரிந்துவுிட்டதாம் உடனே பிடரியில் கண்கொண்ட கண்ணிவான் அதனை கவனித்தவிட்டாராம் உடனே கண்ணியவானின் கட்டளைப்படி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மறுபடி படப்பிடிப்பு நடாத்தி கணுக்கால் தெரியாமல் காட்சியமைப்பை எடுத்து முடித்துக்கொண்டார்களாம். இதவிடயமாக கண்ணியவானின் கண்ணியத்தை கைகூலிகள் புகழ்ந்துதள்ளி மெச்சிக்கொண்டார்கள்,

    இந்தக்கண்ணியவான் நடித்த படம் ரகசிப் பொலிஸ் 115 . அப்படத்தில் நடிகை நிர்மலாவடன் ஓர் பாடல் காட்சி பாடலின்முடிவில் கண்ணிவான் நிர்மலாவை கட்டில்ஒன்றில் விழம்பில் முழுங்கால் மடித்து கால்கள் கிழே தரையில் படும்படியும் முழங்காலுக்குமேலே உடல்மழவதம் கட்டிலில் படும்படியாகவும் நிர்மலாவின் கால்கள் அகல விரித்தபடி மல்லாக்கபடுக்கவைப்பதுடன் பாடல்காட்சி நிறைவபெறும்.முடிவில்
    கமராவின்கோணம் நிர்மலாவின் அகண்ட விரிந்த கால்களக்கிடையில் காட்டப்பட்டு நிறைவடையம். அவரது உள்ஜட்டி தெரியம்படி அப்பாடல் காட்சியை நிறைவு செய்திரப்பார் கண்ணியவான்.கமராகோணம் தெரிந்த கண்ணியவானுக்கு இந்த கமரா கோணம் தெரியாமல்போய்விட்டதோ?
    .புிடரியில் கண்கொண்ட கண்ணியவானுக்கு இதுமட்டும் கண்ணில்படவில்லை.

    கணுக்கால் தெரிந்ததைவிட ஈக்காட்சி மிகபாரதுரமானது .இந்த கண்ணியவானின் கண்ணியம் போனது எங்கே?.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •