-
19th April 2020, 08:30 AM
#2981
Senior Member
Devoted Hubber
Thanks Nilaa
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020 08:30 AM
# ADS
Circuit advertisement
-
19th April 2020, 10:08 AM
#2982
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்திற்கு அமைந்த சற்றும் எதிர்பாராத சிறப்புகள்,
முதலில் பதிவிற்கான காரணம் என்னவெனில் இன்று மாலை 4 மணிக்கு சன் லைப் சேனலில்
"அம்பிகாபதி" ஒளி பரப்பாகிறது,
அம்பிகாபதி போன்ற திரைப்படங்களைத் தான் காவியம் என்று சொல்ல வேண்டும், சன் நெட்வொர்க் குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அம்பிகாபதியை பார்த்தார்களேயானால் சன் நெட்வொர்க் ஒளி பரப்பில் நடிகர் திலகம் தவிர்த்து இதர எந்த நடிகர்களின் திரைப்படங்களையும் "காலத்தை வென்ற காவியங்கள் " என்ற அடைமொழியை பயன்படுத்தியதற்கு உடனடியாக வருத்தம் தெரிவித்து விடுவார்கள்,
அந்தளவிற்கு நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே காவியங்கள் என்று பேசும் தகுதியை பெற்று இருக்கின்றன,
அம்பிகாபதி திரைக்காவியம் மாசற்ற காதலை பார்ப்போர் அனைவரையும் உணர்வுபூர்வமாக உணர வைத்த ஒரு திரை ஓவியம்,
அவ்வாறு மக்களின் ரசனையை மெருகேற்றுவதென்பது பிற நடிகர்கள் நடித்து வெற்றி பெறாத ஒன்று,
அம்பிகாபதி வெளியான தினம் 22 அக்டோபர் 1957, அம்பிகாபதியின் இயக்குநர் ப.நீலகண்டன் அதற்கு முன் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, முதல் தேதி ஆகியவற்றை இயக்கியவர், என்னக் காரணமோ அம்பிகாபதிக்குப் பின் அவர் மசாலாப் பட நடிகரின் இயக்குனரானார்,
அம்பிகாபதி மிகப்பெரிய நடிப்பு மேதைகள் இடம்பெற்ற உயர்ந்த காவியமாகவே திகழ்கிறது,
நடிகர் திலகம் பெரிதும் மதித்து வந்த மூத்த நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஆர்.மதுரம் இனை, எ.கே.ராதா, எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, பானுமதி ராமகிருஷ்ணா, கே.ஏ.தங்கவேலு, கே.டி.சந்தானம், ராஜசுலோசனா ஆகியோரெல்லாம் தங்களது பங்கிற்கு நடிப்பை கொட்டித் தீர்த்த திரைக்காவியம்,
திரைப்படம் என்னவோ காதல் காவியம் தான் ஆனால் உண்மையில் ஒரு நடிப்புக் காவியம்,
நடிகர் திலகம் என்ற டைட்டிலை முதலாக ஏந்திய பெருமைப் பெற்ற காவியம்,
நடிகர் திலகத்திற்கு அம்பிகாபதி 42 வது திரைப்படம்
நடிகர் திலகத்திற்கு எந்தப் படத்திலிருந்து "நடிகர் திலகம்" என்ற டைட்டிலை அறிமுகம் செய்து இருக்கலாம்? என்று பின்னோக்கி சென்றோமானால் அதற்கு முன்னர் தங்க மலை ரகசியத்திற்கே இருந்து இருக்கலாமே?
ஏன் அதற்கும் முன்னரே மக்களை பெற்ற மகராசிக்கு என்ன குறை செங்கோடன் பேச்சை வேறு ஒரு நடிகனால் பேசுவதென்பது நடக்கிற காரியமா?
இப்படி பின்னாடியே சென்றோமானால் கள்வனின் காதலி, தூக்குத் தூக்கி, அந்த நாள், திரும்பிப் பார்
இவ்வளவு ஏன் பராசக்தியிலேயே நடிகர் திலகம் என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அது திருப்தி பொருத்தம்,
அம்பிகாபதியில் நடித்துக் கொண்டிருந்த போது படத்தில் "நடிகர் திலகம்" என்ற டைட்டிலை பயன்படுத்த போகிறார்கள் என்று நடிகர் திலகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை, வழக்கமாக ஒவ்வொரு திரைப்படத்திலும் தனக்கே உரிய நடிப்புச் செல்வத்தை கொட்டிக் கொண்டே இருந்தார், அவ்வாறு தான் இந்த காதல் காவியமான அம்பிகாபதியிலும் பல நடிப்பு மேதைகளுக்கிடையே பரவசமூட்டும் நடிப்பு என்ற புதிய பரிணாமத்தை வழங்கி அசத்தினார், அதன் நூறு சதவீத பொருத்தம் நடிகர் திலகமாக காலமெல்லாம் கொண்டாடும் விதமாக நமக்கெல்லாம் அமைந்தது,
அம்பிகாபதியை பார்த்தவர்கள் இதில் நடிகர் திலகத்திற்கு பின்னணி குரல் டி.எம்.எஸ் கொடுத்தாரா? எனக் கேட்கும் அளவிற்கு பாடல் காட்சிகள் அத்தனை பொருத்தமானதாக அமைந்து போனது, பின்னர் வந்த வருடங்களான 70-80 களில் சினிமா ரசிகர்களின் ரசனை அதிக பாடல்களை கொண்ட திரைப்படங்கள் என்றால் சலிப்புத் தட்டுவதாக உணர்ந்த சூழலில் கூட அம்பிகாபதி பாடல்களை மெய் மறந்து ரசித்தார்கள்,
இசை மேதை ஜி.ராமனாதன் காலத்தால் அழியாதவர்,
நடிகர் திலகம் என்ற டைட்டிலை அம்பிகாபதியில் போடும்படியான யுக்தி தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் அவர்களுக்கு எப்படி தோன்றி இருக்கும்? என என் அறிவுக்கு எட்டியபடி படம் முழுக்க தேடினேன்? ஆயிரம் காட்சிகள் வந்து போகிறது? எந்தக் காட்சி காரணமாக இருக்கும்?
அம்பிகாபதி காவியத்தில் அமைந்த ஒரு கிளைமாக்ஸ் இறுதிக் காட்சி போல மற்ற காவியங்களில் அமைந்ததா?
இணைப்பில் "வடிவேலும் மயிலும் துணை " பாடல் இருக்கிறது,
ஏதோ ஒரு பாடல் காட்சி மட்டுமே கிடையாது மூன்று மணி நேர திரைப்படத்தை மூன்று நிமிட பாடல் காட்சிகளே சொல்லி விடும்,
100 பாடல்களை பாடிவிட்டீர்கள் என்ற மகிழ்ச்சி விழியில் சொல்லும் நாயகியைப் பார்த்ததுமே ஆனந்த பெருவெடிப்பு வெடித்தார்போல நடிகர் திலகமாம் சிவாஜியின் முகத்தில் பிரதிபலிக்கும் ஆனந்த விழிகள் ஒரு உலக அதிசயம்,
இல்லை 99 பாடல்களைத் தான் நீ பாடி முடித்திருக்கிறாய் என்ற இடி போன்ற அவை அறிவிப்பை கேட்டமாத்திரம் நெஞசு விம்மி மரண பெருமூச்சை விடும் மேலும் ஒரு உலக அதிசயம்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்
எனவே தான் அம்பிகாபதியைப் பொறுத்த அளவில் " நடிகர் திலகம்" சற்றும் எதிர்பாராத விதமாக "நடிகர் திலகம்" என்று டைட்டிலை கொண்டு வெளி வந்ததால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது,
அத்தனை சவால்களையுமே எதிர்கொண்டு நாம் இன்று வரை கொண்டாடும் "நடிகர் திலகம்" கிடைத்த அம்பிகாபதி என்றென்றும் காவியமாக திகழ்கிறது,
Thanks Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 10:14 AM
#2983
Senior Member
Devoted Hubber
(மீள் பதிவு,)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 10:25 AM
#2984
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 10:27 AM
#2985
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 04:54 PM
#2986
Senior Member
Devoted Hubber
அட்டகாசமான ஸ்டில்
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திரு குண்டுராவ் அவர்களுடன் நடிகர் திலகம்,
Thanks Sekar
பின்னூட்டம்
1984 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு சம்மந்தமாக பிரச்சினை ஏற்பட்ட போது ராஜீவ்காந்தியின் தூதராக அப்போது கர்நாடக முதலமைச்சராக இருந்த திரு குண்டுராவ் பெங்களூரில் இருந்த அண்ணன் நடிகர் திலகம் அவர்களை தனி விமானத்தில் டெல்லி அழைத்து சென்றார். பேச்சு வார்த்தைக்கு மன்றத்தலைவர்
திரு தளபதி சண்முகம் அவர்களும் பொதுச்செயலாளர்
திரு ராஜசேகரன் அவர்களும் வர வேண்டும் என்று அண்ணன் நடிகர் திலகம் சொல்லியதால் சென்னைக்கும் ஒரு தனி விமானம் அனுப்பி அவர்களையும் அழைத்து சென்று பேச்சு வார்த்தைக்கு உதவினார் திரு குண்டுராவ். இவர் அண்ணனின் சிறந்த நண்பர்.
.....................................
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 05:01 PM
#2987
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 05:02 PM
#2988
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 05:03 PM
#2989
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th April 2020, 05:08 PM
#2990
Senior Member
Devoted Hubber
பிள்ளைகளுக்கு பெயர்சூட்ட பெற்றோர்கள் குழுந்தைகளை அண்ணனிடம் கொடுக்கும்பொழுது..
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks