-
18th April 2020, 05:26 PM
#2951
Senior Member
Devoted Hubber
#ஒரே_ஒரு_அட்வைஸ் ஒரு நடிகனின் வாழ்வை மாற்றிய கதை!
️86 ஆம் ஆண்டு காலகட்டம் #ராஜமரியாதை திரைப்படத்திற்காக #கொடைக்கானலில் 15 நாட்கள் படப்பிடிப்பு கார்த்திக் ஜீவிதா ஜனகராஜ் செந்தில் எனஒரு நடிகர் பட்டாளமே கொடைக்கானலில் படப்பிடிப்பிற்காக தங்கியிருந்தது இவர்களோடு #நடிகர்திலகமும் தங்கியிருந்தார்.
படப்பிடிப்பின் கடைசி நாள் காட்சி முடிந்ததும் அனைவருக்கும் விருந்து பரிமாறிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சூழலில் நடிகர் கார்த்திக்கை தனியாக அழைத்த நடிகர் திலகம், "அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பிறகு தொடர்ந்து #பிளேபாய் கேரக்டராகவே செய்கிறாய் இதுபோன்ற வேடங்களை நீ தவிர்த்துவிட்டு கிராமத்து கேரக்டர்களாக நடித்து உன்னுடைய இமேஜை மாற்றிக்கொள் அதுதான் உனக்கு கைகொடுக்கும் என் அனுபவத்தில் நான் சொல்கிறேன் கிராமத்து வேடங்களை ஏற்று நடி"... என்று அறிவுரை செய்தார்.
அதன் பிறகு கார்த்திக்கின் தந்தை முத்துராமனுக்கு தனக்கும் உள்ள நட்பினை குறித்து அந்த நாளில் அவர்களுக்கு இருக்கும் நடந்த பல சுவாரசியமான தகவலை கூறி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றனர்....
நாட்கள் கடந்தன அதன் பிறகு தொடர்ந்து பிளேபாய் கேரக்டர்களாகவே
கார்த்திக்கு வந்தன. நடிகர்திலகத்தின் அட்வைஸின்படி
அதுபோன்ற படங்களை தவிர்த்தார்.
பின்பு கிராமத்து கதாபாத்திரங்களாக #பாண்டிநாட்டுதங்கம்
#பெரியவீட்டுபண்ணக்காரன்
#வருஷம்16 #கிழக்குவாசல்
#தெய்வவாக்கு #நாடோடிபாட்டுக்காரன் #நாடோடிதென்றல்
#சோலைக்குயில்
#சின்னஜமீன்
#பொன்னுமனி
என கிராமத்து கதாபாத்திரங்களாக
பட்டையை கிளப்பி மிகப்பெரும் நடிகராக திகழ்ந்தார் கார்த்திக்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு #ராணிவாரஇதழில் நேர்காணலின்போது
இந்த தகவலை கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார் கார்த்திக்.
இப்போது சொல்லுங்கள்
#ஒரேஒருஅட்வைஸ் ஒரு நடிகரின் வாழ்வையே மாற்றிக்காட்டினார் அல்லவா!
#நடிகர்திலகம் என்றால் சும்மாவா! #சகாப்தமல்லவா! அன்புடன் #லேகாஸ்ரீ
Thanks லேகாஸ்ரீ
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th April 2020 05:26 PM
# ADS
Circuit advertisement
-
18th April 2020, 08:07 PM
#2952
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th April 2020, 08:08 PM
#2953
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th April 2020, 08:08 PM
#2954
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th April 2020, 08:09 PM
#2955
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th April 2020, 08:11 PM
#2956
Senior Member
Devoted Hubber
கடந்த ஜூலை மாதம் இந்தப் பதிவை கண்டேன் இப்போது நீதி ....ரசித்துக்கொண்டிருப்பதால்மீண்டும் இந்தப் பதிவை.. பதிவிடுகிறேன்இன்று ஆண்டவன்கட்டளை என்று அமர்ந்தபோது...இல்லை..இல்லை..இன்று இதுதான் நீதி என ஆண்டவனின்கட்டளை இருந்தது சரி தேன் குடத்தில் ஒவ்வொருதுளியும் தித்திப்புத்தானே...
இந்தப்படத்தில் அப்பா ஒரேஒரு நீலநிற உடையில் கலக்கோ கலக்கு என்று கலக்கியிருக்கிறார் சிறுகோடுபோன்ற மீசை அடிக்கடி ஆனந்பைலட்டையும் நினைவூட்டியது( எந்தப்படம்முந்தியது என்ற அறிவெல்லாம் எனக்குக்கிடையாது ஆனாலும் அப்துல்ரஸாக் கோபிக்கப்போறான்..ஏன்அக்கா நான்தானே ஆண்டுரீதியாக படங்களைப்பட்டியலிட்டேனே..குறிச்சுவைக்கல்லியா எனக்கேட்பது தெரிகிறதுவயசாயிடிச்சுப்பா அக்காவ மன்னிச்சிடு)
தேறிக்கழுத நான்போற ஸ்பீடுக்கு எந்தப்பயல் என்னப்புடிக்கமுடியும்...இன்று என்மண்டையைக்குழப்பிய வார்த்தையே இதுதான்...ஆமாம் அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதிலும்கூட இந்தமாதிரி சவாலான பாத்திரங்களை ஏற்றே வந்திருக்கிறார் அந்தச்சின்னப்பையனிடம் சாப்பிடுப்பா எனக்கெஞ்சும்போதிலும் சரி..என்னமன்னிச்சிடுப்பா எனக்கேட்டு ஏறக்குறைய அவன்கால்களில் விழுந்ததோரணையிலும் சரி அவரை அவரது நடிப்புத்தொழிலுக்கு அவர்கொடுத்த ஸ்பீடை யாராலும் இன்றுவரை முந்துறது என்ன நூறுஅடி தள்ளிக்கூட பின்னால ஓடிவரமுடியவில்லையே . ..மற்றவரின் கண்களுக்குக் கொலைகாரனாகவும் கைதியாகவும் தெரிந்த ராஜா பொன்னம்மாவுக்குமட்டும் இப்பதான் இந்த ஊருக்கே ஒரு ஆம்பிள வந்ததாகத் ஏற்றுக்கொள்ளப்படுகிறார் ...இது ரொம்பவே ஸ்பீட். ..மத்தவங்கமாதிரியா நீ என் மம்மதனாச்சே எனப் பொன்னம்மா சொல்லும்போது...பொன்னம்மாவிற்கு அந்த ராஜாமீது ஒரு இது...ஆரம்பமாகியே இருந்தது ஆனால் ராஜாவுக்கு அப்படி இல்லை.எனவே .அடிப்பாவி பச்சையாகவே சொல்லுறியே எனக்கேட்க்கும்போது முகமத்தில் தோன்றும் பாவம் ..அந்த ஸ்பீடை எந்தக்கொம்பனும் நினைத்துப்பார்க்க முடியாது ..ஆனால் மோஹினிப்பிசாசு மீது ஓரளவிற்கு காதல் ஆரம்பத்திலே அரும்பியதால் ஓடுதுபார் நல்ல..படம் பாடலின் போது வாயைநெளித்துக்கைகளை இடுப்பில் வைத்துநையாண்டிபண்ணும் தோரணையிலேயே புரிந்து கொள்ளமுடிகிறது .ஒருகைதி அதிலும் இரண்டு வருடங்களுக்குப்பின் அவர்பாட்டை அவர்பார்த்துவிட்டுப்போய்விடுவார் எனும்கதையமைப்பில் பயாஸ்கோப் ராதாவுக்கு நிச்சயமாக ஒரு கனவுப்பாட்டு வந்திருக்கணுமே....அந்தச்சேட்டையெல்லாம் எங்க அப்பாடஸ்பீடான நடிப்பு.....நடை அழகு...ஸ்ரைஸ் இவற்றுக்கு முன்னால நிற்கமுடியுமா . ....நல்லவேளை தேவையில்லாத கனவில் ரெக்கை கட்டிப்பறக்கும் கண்றாவி எல்லாம் எங்க அப்பாட ஸ்பீடுக்கு முன்னால பஞ்சாப்பறந்து விடும்
மாப்பிள்ளையைக்கடத்திவந்த ராஜாவை ஊரார் எதிர்க்கும் போது பொன்னம்மாவின் வார்த்தை யாராவது ராஜாமேலகையவச்சீங்க ...அப்புறம்பொம்பளகையால அடிவாங்கய....கேவலமாகிடும் .இதே வார்த்தைகளை அந்த இயமனிடம் 21 -7-2001 அன்று நாமெல்லாம்கேட்காமல் விட்டுட்டோமே ....என்றுகூட எண்ணிப்பார்த்தேன் ...புதுமைப்பித்தனின் காலனும்கிழவியும் எனும்கதையில் வரும் ஒரு கிழவி...பலகிளவிகளைக்கேட்டிருக்கலாமே என ஒரு பச்சைப்பைத்தியக்கார எண்ணமும் தோன்றியது அதேவேளை மாப்பிள்ளையின் அப்பாவிடம் கைதிராஜா சொல்லும் ஒருவார்த்தையையே இதற்குப்பதிலாகவும் ஏற்றுக்கொண்டேன்" எங்க சாபம் உங்கள ஒன்னும்பண்ணாது"
ஆனாலும் கடவுளும்கந்தசாமியும்மாதிரி கைதிராஜாவும்கடவுளோடு மோதும் ஸ்பீட் இருக்கே அது இந்த சினிமா உலகவரலாற்றிலே எவனாலும் நெருங்கமுடியாத ஸ்பீட் யோவ் நான் ராமுவமட்டுந்தாய்யா கொலசெஞ்சேன் ஆனா...நீ அவங்க ஒவ்வொருத்தரையுமே கொலசெய்யுறியே.....
உன்ன ஆத்தங்கரையிலயும் குளத்தங்கரையிலயும் ஏன் வச்சிருக்காங்கதெரியுமா. நீ வரங்குடுக்கல்லன்னா அப்புடியே ஒன்னத் தூக்கிப்போடுறதுக்குத்தான்
என்கிட்ட இருந்து லாறியப்பறிச்சே லைசன்ஸைப் பறிச்சே பூவாவையும் பறிச்சிக்கிட்டே. ஆனா இதமட்டும் ஒன்னால பறிச்சுக்கவே முடியாது.....ஒனக்கு இருக்கிற பவர விட இதுக்குப்பவர் ஜாஸ்த்திய்யா.....இப்படியெல்லாம் பேசிநடிக்க யார் முன்வருவார்...குடிக்கிறமாதிரி நடிக்கக்கூடாது.புகைக்கூடாது என்றெல்லாம் பம்மாத்துக்காட்டாமல் கடவுளிடமே வாதம்பண்ணும் கைதி ராஜா தன் நடிப்பு வண்டியை ஓட்டும்ஸ்பீடுக்கு யாரால அவரைப் பிடிக்கமுடிந்தது
எதிரொலி படத்தில் அப்பா இறுதிக்காட்சியில் ஜட்ஜ் இருக்கையில் இருப்பார் அப்போ நாகேஷ் அவர்கள் ஒருவசனம் சொல்லுவார் அட வக்கீல் என்னா வக்கீலாகவே ஆயிடுறான் ஜட்ஜ்ன்னா ஜட்ஜ்ஜ்கவே ஆயிடுறான் எல்லாமே பொருந்துது .....
தன் ஈடு இணையற்ற நடிப்பால்
நம்மைச்சிந்திக்கவைத்தார்
நம்மைச்சகரிக்க வைத்தார்
நம்மை அழவைத்தார்
நமது பழம்பெருமைகளை நம்கண்முன் காணவைத்தார்
நமது குடும்ப உறவுகளைப்பேண வைத்தார்
பாரதவிலாஸில் இந்தியமக்களை இணையவைத்தார்
இலங்கை இளம்கூயிலோடு இசைபாடி இணையவைத்தார்
உலகநாட்டுமக்களை அவரது ரசிகப்பிள்ளைகளாக ஒன்றிணைத்தார்
கண்ணால்காணாத எத்தனையோ உறவுகளை மனதால்க்கூடப்பிரியமுடியாத பந்தத்துள் இணையவைத்தார்
சகோதரபாசத்தை இன்றுவரை எம்மிடையே பேணவைத்தார் ..ஒருதாய்வயிற்றில்பிறக்காதநம்மையெல்லாம் எங்கெங்குபிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்....வந்ததெல்லாம்சொந்தமாச்சு ..இந்தக்குழுவிலே..என இணையவைத்தார் பந்துபோல ஆடப்பாசவலைகளைத்தந்தார்
மன்னனாக...சக்கரவத்தியாக...எல்லாவற்றுக்கும்மேல ாக நாம்விரும்பும் உறவில் அவரைக்கொண்டாடிமகிழ இன்றுவரை வைத்துவிட்டு வானில் இருந்து பூமழை பொழிந்து நம்மை வாழ்த்துகிறார்....இத்தகைய உறவுகளை வளர்த்துப்பேணவைக்கும் அவரது ஸ்பீடை யார் தாண்டமுடியும் ......அவரது இடத்தை யார்நெருங்கமுடியும்.....
மொத்தத்தில் கடவுள் நம்வாழ்வில் கடன்காரனே தான் நம்மிடமிருந்து வாங்கிய அந்தமாபெரும் இமயத்திற்கு இணையாக எதையும் நம்அனைவருக்கும் ஒன்றாகத்தரவில்லை என்றபடியால்
Thanks Nalini Sritharan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th April 2020, 08:15 PM
#2957
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் 18/4/2020 இன்று மாநில தலைவர் திரு, k.சந்திரசேகரன், அவர்கள், மாவட்ட காங், தலைவர் திரு, M.S.திரவியம் அவர்கள், ஆலோசனைப்படி, திரு நங்கைகளுக்கு பேரவையின் பொது செயலர், திரு, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மற்றும் 3வது சர்கிள் காங்,தலைவர் திரு, D.k.மூர்த்தி அவர்கள் முன்னிலையில் ,E.சங்கு ராஜன், AB.குபேரன், M.ஹரிராஜ், S.விஜியகுமார்,ES.ஜெகன், V.துளசி ஆகியோர் கலந்து கொண்டு, திருநங்கைகளுக்கு நல உதவிகள் வழங்கினர்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th April 2020, 08:16 PM
#2958
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th April 2020, 08:17 PM
#2959
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th April 2020, 11:58 PM
#2960
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks