-
8th July 2020, 06:37 AM
#11
Senior Member
Devoted Hubber
கடந்த 1960 ல் சென்னை எழும்பூரில் உள்ள, டான்பாஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது நாங்கள் பாந்தியன் ரோடில் வசித்து வந்தோம், வீட்டிற்கு அருகே ஸ்கூல்,
என் தாயார் ஒய்.ஜி.பி.,பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியை ஆரம்பித்த நேரம். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், கட்டடம் இல்லாமல், கூரை போடப்பட்ட வகுப்பு அறைகள், பள்ளி ஆண்டு விழாவிற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்திருந்தார், அவர் தான் தலைமை, மாணவர்கள், பெற்றோர் எல்லோரும் பென்சுகளிலும் தரையிலும் உட்கார்ந்திருந்தனர், நான் சிவாஜி சாரை முதன் முறையாக அன்று தான் பார்த்தேன்.
என் தாயார் நடிகர் திலகம் சிவாஜியை வரவேற்று பேசும்போது "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்பர், எங்களுக்கு கூரை கூட இல்லை, தெய்வம் எவ்வளவு கொடுத்தாலும், மகிழ்ச்சியாக, நன்றியோடு பெற்றுக் கொள்வோம்" என்றார்.
விழாவில் நடிகர் திலகம் சிவாஜி பேசும்போது, "மொத்த ஸ்கூலுக்கும் கூரை போட முடியுமா என்று தெரியவில்லை, என்னால் முடிந்த 10 ஆயிரம் ரூபாயை இந்தப் பள்ளிக் கட்டிட நிதிக்கு நன்கொடையாக அளிக்கிறேன், இந்தப் பள்ளி கண்டிப்பாக, பெரியதாக வளரும்..." என்று வாழ்த்தினார்,
அவருடைய வாழ்த்து பலித்தது, இன்று என் தாயார் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளி, பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.
தகுதியான காரியங்களுக்கு, நிறைய தர்மம் செய்வார் நடிகர் திலகம் சிவாஜி, அவர் செய்யும் தர்ம காரியங்களை, கொடுக்கும் நன்கொடைகளை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை,
அது தான் அவருடைய உண்மையான குணம்,
:- திரு ஒய்.ஜி.எம்.அவர்கள் எழுதிய "நான் சுவாசிக்கும் சிவாஜி" என்ற நூலிலிருந்து,
Thanks Sekar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th July 2020 06:37 AM
# ADS
Circuit advertisement
Bookmarks