-
29th March 2020, 09:14 AM
#11
Senior Member
Devoted Hubber
நன்றி மறவாத உயர்ந்த உள்ளம்.1960ல் பாசமலர் படப்பிடிப்பு நெப்டியுன் ஸ்டுடியோவில் நடந்து கொண்டு இருந்த போது ஒரு நாள் மாலை நடுத்தர வயதுடைய பிராமணர் ஒருவர் அந்தக்கால நாகரீகத்தை ஒட்டி விசிறி மடிப்பு ஜரிகை அங்கவஸ்திரத்தைகழுத்தில் சுற்றி அணிந்த வண்ணம் கால் மேல் கால போட்டு சிவாஜிக்கு நேரே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.நீங்க தம்பி சண்முகத்தைப் பாருங்க நான் அவனுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லிடுறேன்என்று சிவாஜி சொல்லாவர் எழுந்து கும்பிட்டவாறு தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.அவர சென்ற பிறகு சிவாஜி என்னிடம் சொன்னார் இவர் பேரு கிருஷ்ணசாமி வேலூர்க்காரர்.அங்கே நாடகம் நடந்தபோது தினமும் வந்து என் நாடகத்தை பார்த்து நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து எனக்கு கைகொடுத்து பாராட்டுவார்.உங்களுக்கு சிறந்த வருங்காலம் இருக்குன்னு வாழ்த்துவார்.நான் கேட்க்காமலே எனக்கு நிறைய பொருளுதவி செஞ்சு இருக்கார்.அப்போ நல்லா வாழ்ந்தவரு இப்போ கொஞ்சம் கஸ்ட்டத்துல இருக்கார்.எவ்வளவு பணம் தேவைப் படும்னு கேட்டேன் பணம் எதுவும் வேண்டாம் வேலைக்கு எற்பாடு செய்தால் போதும்னு கேட்டார்.ஒரு காலத்தில் எனக்கு உதவி செய்தவர் நல்லா படித்தவர் அதனால் சிவாஜி ஃபிலிம்சில் அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து மாசா மாசம் ஒரு சம்பளம் போட்டுக்கொடுக்கும்படி சண்முகத்திடம் சொல்லி இருக்கிறேன்.அவர சொன்னபடி அந்த அய்யரூக்கு சிவாஜி ஃபிலிம்சில் வேலை கொடுத்தார் சண்முகம்.ஒரு வாரத்துக்கு ப்பிறகு செக் கில் சிவாஜியின் கை எழுத்து பெற வந்த அய்யர் ஒரு பணிவு மிக்க ஊழியர் போல் சிவாஜியின் அருகில் வந்து பவ்யமாக குனிந்து கை எழுத்து வாங்கி சென்றார்.நீண்ட லாலம் சிவாஜி ஃபிலிம்சில் பணியாற்றினார்.1964ல் வெளிவந்த புதிய பறவை ப்டத்துக்க்கான செட்டில்மென்ட் செக் அவர் கையால்தான் வாங்கினேன்.ஆரூர்தாஸ்
Thanks Vijaya Raj Kumar- Nadigar thilakam Fans
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th March 2020 09:14 AM
# ADS
Circuit advertisement
Bookmarks