-
29th January 2020, 03:07 PM
#1901
Senior Member
Devoted Hubber
ஐஸ்வச்சா வரி தள்ளுபடி ஒருவருக்கு.ஆனால் எங்கள் சிங்கத்தமிழன் நேர்மை யாருக்கு வரும் #வருமான_வரி_சிவாஜியின்_நேர்மை.
1980 - சிவாஜிக்கு காங்கிரஸில் 5 MP தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. திருச்சி, கரூர், கோவை, ஈரோடு, தென் சென்னை தொகுதிகளில் சிவாஜி சிபாரிசு செய்யும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். அனைவரும் வெற்றியும் பெறுகின்றனர். அதில் தென் சென்னையில் வென்ற திரு.R.வெங்கட்ராமன் அவர்கள் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
சிவாஜியின் வரவு செலவுகளை அவரது தம்பி சண்முகம் பராமரித்து வந்...தார். ஒரு நாள் அவரது தணிக்கையாளர் சிவாஜியிடம் வந்து வருமான வரி தாக்கல் செய்ததில் சிறு தவறு நடந்து விட்டது. நம்ம வெங்கட்ராமனுக்கு ஒரு போன் செய்தால் போதும் சரி செய்து விடலாம் என்கிறார். கோபத்தின் உச்சிக்கே சென்ற சிவாஜி நீங்கள் செய்த தவறுக்கு நான் அவரிடம் கெஞ்ச வேண்டுமா! அதோடு அவர் எனக்கு அமைச்சரல்ல. இந்த நாட்டிற்கு நிதி அமைச்சர். கட்சிகாரங்கிற உறவெல்லாம் தேர்தலோடு முடிஞ்சிப் போச்சி. தவறு செஞ்சது நீங்கள்தான் அபராதத்தை கட்டித் தொலையுங்க! தம்பி இன்னொரு தடவை தப்பு நடந்துச்சி அபராத தொகையை இவனுங்க சம்பளத்திலே பிடிச்சு கட்டிடு என்று கத்திவிட்டு ஷுட்டிங்சென்று விட்டார்.
(திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற "நடிகர் திலகம் ஒரு நேர்மையாளர்" நிகழ்ச்சியில் திரு.வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் உரையிலிருந்து).
நன்றி Vijay Rai Kumar.
..............................................
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th January 2020 03:07 PM
# ADS
Circuit advertisement
-
29th January 2020, 03:17 PM
#1902
Senior Member
Devoted Hubber
ஒவ்வொரு எழுத்தாளர் க்கும் ஒரு பிரத்யேக நடை உண்டு.. அது போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடையும் புகழ் பெற்ற ஒன்று. ¶
அந்த காலத்தில் 'கல் தூண்' என்று படம் வந்தது. மேஜர்சுந்தர் ராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்திருந்தார். ¶
ஒர் காட்சியில் சிவாஜி கம்பீரமாக நடந்து வர வேண்டும், எப்படி நடப்பது என மேஜர் சொல்லிக்கொடுத்தார். ¶
... ஆனால் அது அவருக்கே பிடிக்கவில்லை.. இன்னொரு விதமாக மாற்றினார்.. அதுவும் திருப்தி இல்லை. ¶
சிவாஜி சொன்னார் : ரொம்ப கஷ்டப்படாதே... நான் சில டைப்ல நடந்து காட்டுறேன்.. உனக்கு எது புடிக்குதோ அதை செலக்ட் பண்ணு... ஷூட்டிங்ல அதை ஃபாலோ பண்றேன் என சொல்லி விட்டு பத்து விதங்களில் நடந்து காட்டினார் சிவாஜி... மேஜர் அசந்து போனார்... நடிப்பின் அகராதிக்கு , நடிப்பு சொல்லத்தர முயன்ற தன் அசட்டுத் தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டார். ¶
என்னதான் நடிகர் திலகம் என பிறர் பாராட்டினாலும் இயக்குனர் சொன்னபடி நடிப்பதுதான் நல்லது என கருத்துடையவர் சிவாஜி.
நன்றி Jeyavelu Kandaswami
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th January 2020, 07:50 AM
#1903
Senior Member
Devoted Hubber
" உங்கள் மந்தையில் இருந்து இரண்டுஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன..இரண்டும் சந்திட்ட போதுபேச முடியவில்லையே. "
இன்று 30.01.2020 இரவு 11.00 மணிக்கு ஜெயா டிவி யில் - நடிகர்திலகம் நடித்த வெற்றி படம். !!!
... " ஞான ஒளி " படத்தை கண்டு களியுங்கள். !!!
சிவாஜி, சாரதா, மேஜர்சுந்தராஜன் நடித்து உள்ளனர். !!!
நன்றி Jeyavelu Kandaswami
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th January 2020, 09:59 AM
#1904
Senior Member
Devoted Hubber
ஸ்டண்ட் நடிகருக்கும் அவரது சீடர்களுக்கும் கணேசன் எப்பொழுதும் சிம்ம சொற்பனமாக திகழ்ந்தார்.
கனவிலும் நினைவிலும் ஸ்டண்ட் நடிகருக்கும் அவரது சீடர்களுக்கும் கண்களுக்குள் கணேசன்
விரலைவிட்டு குடைந்து கொண்டிருந்தார். இத்தனைக்கும் கணேசன் மற்றவர்களைப்பற்றி
எவ்வித அக்கறையும் கொள்ளாமல் தானும் தன் வேலையுமாக இருந்தார்.
தி மு க வில் கணேசன் செல்வாக்குடன் இருப்பது மு க உட்பட பலருக்க பிடிக்காமல் இருந்தது,
புதிதாக புகுந்து கொண்ட ஸ்டண்ட் நடிகருக்கு வசதியாகிவிட்டது.
தன்னுடன் ஒன்றாக திரிந்தவன் தி மு க வில் புகழுடன் இருப்பதா? குழி பறிப்பு தொடங்கியது.
கட்சிக்கு நிதி பற்றாக்குறை ஈடு செய்ய பலருக்கும் வேண்டுகோள்.அதிக நிதி திரட்டியவவருக்கு
பாராட்டு விழா.கட்சியில் கணேசனை பிடிக்காதவர்களை கோஷ்ட்டி சேர்த்துக்கொண்டு ஸ்டண்ட் நடிகர் காய் நகர்த்தினார்.
படங்களில் காட்டுவார்களே வில்லன் கோஷ்ட்டிகளின் தந்திரங்களை அதேபோன்று,ஸ்டண்ட் நடிகர் படங்களில்தான்
கதாநாயகன் பங்களிப்பு ,வெளியே முழுக்க முழுக்க வில்லத்தனம்.
வில்லன் கோஷ்ட்டிகளின் பங்களிப்புடன் அதிகம் நிதி திரட்டிய கணேசனை ஓரம் கட்டி
தனக்கு பொன்னாடையை தானே போர்த்திக்கொண்டார் ஸ்டண்ட் நடிகர் பாரத் பட்டத்தை அபகரித்ததுபோல,
பொன்மனச்செம்மல் பட்டத்தை பெற்றுக்கொண்டதைபோல .
தான் அதிக நிதி திரட்டிக்கொடுத்தும், தன்னை நிராகரித்தது துரோகி ஸ்டண்ட் நடிகரினதும் ஏனைய துரோகிகளினதும்
கைங்கரியம் என்பதை தெரிந்து கொண்டு சபரிமலை சென்றவர்தான் கணேசன்.
ஸ்டண்ட் நடிகர் போன்று 5 ரூபாய் கொடுத்துவிட்டு 5000 ரூபாய்க்கு புகழ் பெற்றவரல்ல கணேசன்.
லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டு ஸ்டண்ட் நடிகரது தந்திரத்தாலும் அவரது கை கூலிகளாலும் கஞ்சன் என பெயர் வாங்கியவர்தான் கணேசன்.
நல்லவன் என பெயர் வாங்கிய கெட்டவனல்ல எங்கள் கணேசன்
கெட்டவன் என பெயர் வாங்கிய நல்லவன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th February 2020, 07:26 AM
#1905
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th February 2020, 10:46 AM
#1906
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th February 2020, 06:10 AM
#1907
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th February 2020, 06:32 AM
#1908
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th February 2020, 09:27 PM
#1909
Junior Member
Senior Hubber
ஆட்சி பலம் அரசியல் பலம் பண பலம் இருந்தும் சாதிக்க முடியாத நடிகரின் பல பழைய படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்ட போதும் ஒரு படம் கூட தமிழகமெங்கும் 2 வாரங்கள் ஓட லாயக்கில்லாத நிலைமை அவர்களுக்கு காரணம் இப்போது அவருடைய படங்களை 3 மணி நேரம் இந்த தலைமுறையால் உட்கார்ந்து பார்க்க முடியாது சோரம்போன சண்டை காட்சிகளும் வள வளா கதையின் வேகமும் இந்த தலைமுறை மக்களால் சகிக்க முடியாது --இன்றைய படங்களில் சண்டை காட்சிகள் காட்சி அமைப்புகள் காலத்திற்கேற்றார் போல் வித்யாசமாக வெளிப்படுத்துகிறார்கள் இப்போதுள்ள நடிகர்கள் --ஆனால் சிவாஜி அவர்களின் படங்கள் இன்னும் எத்தனை தலைமுறை ஆனாலும் நினைத்து பார்க்க முடியாத வேடங்களையும் நடிப்பையும் வெளிப்படுத்திய மகான் மற்றும் பிறவி நடிகர் எங்கள் சிவாஜி --அதனால் தான் கர்ணன் தமிழகத்தில் 14 திரைகளில் 50 நாட்கள் 3 திரைகளில் 75 நாட்கள் சென்னையில் 150 நாட்கள் என சரித்திர சாதனை கண்டது -- அது மட்டுமே காலத்தால் அழியாத காதல் காவியம் வசந்த மாளிகையும் 5 ஊர்களில் 25 நாட்கள் என வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இப்படி ஒரு சாதனையும் ஒரு மறு வெளியீட்டு படமும் செய்யாத அந்த நடிகரின் படங்கள் இரண்டு நாள் மூன்று நாள் என இடைவெளிக்காக திரையிடப்படும் படங்களின் எண்ணிக்கையை கொண்டு தம்பட்டம் அடித்துக்கொள்பவரை நினைத்தால் சிரிப்புதான் வருது.நாங்கள் சாதித்து காட்டி விட்டோம் --உங்கள் நடிகரின் ஒரு படமாவது நாடெங்கும் 2 வாரம் காணட்டும் எங்களோடு போட்டி போடுங்கள் அது வரை உங்கள் நடிகரை நாங்கள் ஒரு போட்டியாளராகவே கருதவில்லை
-
8th February 2020, 09:32 PM
#1910
Junior Member
Senior Hubber
நம் எல்லோருக்கும் தெரியும் இந்த படம் எப்போது எடுத்தது என்றுதைபூச திருநாளில் முருகன் அடிமை திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிக ளின்நினைவாக .......அண்ணன் சிவாஜி அவர்களின் மணி விழாவில் மேடை ஏறிய வாரியார் சுவாமிகள் மணி விழா தம்பதிகளை வாழ்த்தி விட்டு பேசும் போது ....சிவாஜி ஒரு கஞ்சன்சிவாஜி மஹா கஞ்சன்என்றெல்லாம் பேசுகிறார்கள்இந்த கணேசன்வள்ளல் கணேசன்வாழும் கர்ணன் சிவாஜி கணேசன்ஆன்மீகத்திற்காக எவ்வளவு அள்ளி அள்ளி கொடுத்து இருக்கிறார் என்று எவனுக்காவது தெரியுமாநான் அவரிடம் வாங்கியே பழக்க பட்டவன் ஆனால் இன்று நான் வாழ்த்துக்களை வழங்க வந்துள்ளேன் என்று கூறி என்அப்பன் முருகன் அருள் இவருக்கு என்றும் உண்டு என்று வாழ்த்தினார் நன்றி திரு சதா வெங்கட் ராமன்#நன்றி விஜயா ராஜ்குமார்
Bookmarks