-
12th November 2019, 06:59 AM
#751
Senior Member
Devoted Hubber
நன்றி VCG tHIRUPPATHI
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th November 2019 06:59 AM
# ADS
Circuit advertisement
-
12th November 2019, 07:00 AM
#752
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th November 2019, 07:02 AM
#753
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th November 2019, 09:31 PM
#754
Junior Member
Senior Hubber
எதிர்ப்பு அனைத்து தரப்பிலும் *சிவாஜியின் அரசியியல் தெரியாமல் உளறிய எடபாடிக்கு ,ரவீந்திரன் துரைசாமி சாட்டை அடி* !நியூஸ் 18 சேனலில் பங்கேற்று பேசிய அரசியல் விமர்சகரும் பத்திரிகை ஆசிரியருமான திரு ரவீந்தரன் துரைசாமி அவர்கள் சிறப்பாக கருத்தை பதிய வைத்தார்அதாவது சிவாஜியின் அரசியல் பற்றி பேசும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சரியான வரலாறு தெரியாமல் பேசி இருக்கிறார்,எம்ஜிஆர் எமர்ஜென்சி காலத்தின் போது தனது கட்சி அதிமுகவைக் காப்பாற்றி கொள்ள பிரதமர் இந்திரா அவர்களிடம் சரணடைந்து தான் கட்சி பதவி என தக்க வைத்துக் கொண்டார், பின்னாளில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆன போதும் கூட அவரிடமும் சரணடைந்து ஆட்சியை தொடர்ந்து நடத்தினார்,பிரதமர்களிடம் சரணடைந்தவர் எம்ஜிஆர்அதே தருணத்தில் சிவாஜியிடம் பிரதமர்கள் தான் சரணடைந்தார்கள் என்பது வரலாறு,அதற்கு உதாரணம் 1984 தேர்தலில் சிவாஜியின் நிபந்தனையை ஏற்று பிரதமர் ராஜீவ் காந்தி வேட்பாளர்கள் பட்டியலை மாற்றி அறிவித்ததுஅந்தச் சூழலில் சிவாஜி தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருந்து இருந்தால் அரசியலில் சிவாஜியின் சகாப்தம் வேறு மாதிரி அமைந்திருக்கும்நன்றி ! திரு இரவீந்திரன் துரைச்சாமி அவர்களுக்கு,
-
13th November 2019, 09:43 PM
#755
Junior Member
Senior Hubber
உண்மையை வரலாற்றை சரியாக தெரிந்து கொண்டு நாகரீகமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும்✍🎥 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேடான கோடி சிவாஜி ரசிகர்களின் சார்பாக கண்டிக்கிறோம் 🎥📹 உத்தமத் தலைவர் சிவாஜியைச் சீண்டி பேட்டி என உளறிக் கொட்டும் அரசியல்வாதிகளுக்கு சரியான சவுக்கடி தந்த "ஐயன் சிவாஜி சமூக நலப்பேரவை" யின் பத்திரிக்கைச் செய்தி.. தாம் செய்யும் நல்ல காரியங்களைக் கூறி அரசியல் செய்ய வழியில்லாத வீணர்கள் பழுத்த தேசியவாதியும், நாட்டு மக்களின் நலனுக்காக தான் வளர்ந்த தேசியக் கட்சியை விட்டே வெளியேறி தன் உடன் பிறவா சகோதரனாகப் போற்றியவரின் மனைவி ஜானகி எம்ஜியாரை முதல்வராக்க பாடுபட்ட நம் உத்தமரைப் பற்றி புறம் கூற இந்த கம்பராமாயண சேக்கிழார் உளறல்வாதிகளுக்கு என்ன தகுதி உள்ளது என்பதை ஆணித்தரமாக கேட்ட சகோதரர் திரு.சந்திரசேகர் அவர்கள் கருத்தை அனைத்து சிவாஜியவாதிகளும் ஆதரிப்போம்.... ஐயன் சிவாஜி புகழை தொடர்ந்து சிறுமைப் படுத்தும் ஆளுங்கட்சியினருக்கு வருகின்ற தேர்தல்களில் சிவாஜி பக்தர்களின் சக்தியைப் புரிய வைப்போம்.. என்றும் கலை உலக முதல்வர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வழியில் கவிஞர் தின குரல் ப சிவகுமார் பிரபு (எழுத்தாளர்) மூத்த பத்திரிகையாளர் தலைமை செய்தியாளர் தமிழக காங்கிரஸ் கமிட்டி கலை பிரிவு மாநில செயலாளர் அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர் Ex நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நல பேரவை தேசியதிலகம் நடிகர் திலகம் சிவஜிகணேசன் ரசிகர் மன்றம் உலகமெங்கும் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள் பக்தர்கள் சார்பாக வும் இது கழுகு கண் இதழ் ஆசிரியர் சார்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் கலை உலக முதல்வர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்தற்கு வண்மையாக கண்டிக்கிறோம் நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்களைப் பற்றி பேசிய விமர்சன கருத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் மறு மன்னிப்பு அறிக்கை வெளியிட வேண்டும் பத்திரிகை செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் 🎥✍✍✍✍✍✍✍— with Ganesh Moorthy.
-
13th November 2019, 09:49 PM
#756
Junior Member
Senior Hubber
-
14th November 2019, 07:44 PM
#757
Junior Member
Senior Hubber
டயர் நக்கிகளுக்கு எங்கள் அடங்காதமிழன் இளங்கோவன் அவர்கள் கொடுத்த சவுக்கடி
-
14th November 2019, 07:47 PM
#758
Junior Member
Senior Hubber
அறியக் காட்சி,( அண்ணார் கொடிக்குரிச்சி முத்தையா அவர்களது போட்டோ ஆல்பத்திலிருந்து கிடைத்தது)வரலாறு தெரியாத இப்போதைய அதிமுகவின் அமைச்சர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இது,அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கூட தங்களது ஒரு கைகளைத் தூக்கித் தான் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடச் சொல்லி வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்தார்கள்,ஆனால்எங்கள் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால் கூட்டணி தர்மம் காக்க 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து பெரு நகரம் முதல் சிற்றூர்கள் வரை பிரச்சாரம் மேற் கொண்டார், நடிகர் திலகம் எத்தகைய அர்ப்பணிப்போடு பிரச்சாரம் செய்து இருந்தால் இருபுறமும் கூடி நிற்கும் கூட்டத்தினரை மகிழ்விக்கும் விதமாக தனது இரு கைகளையும் உயர்த்தி இரட்டை இலைக்கு வாக்குக் கேட்டிருக்கிறார்,வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டு மைக் முன்னாடி வந்து பேசுங்கடா??
-
14th November 2019, 07:52 PM
#759
Junior Member
Senior Hubber
தனி மனிதர்....அந்த ஒருவர் தோற்றதுதான் சரித்திரம்.எதிரிகளாலாயே தாங்கிக் கொள்ள முடியாத தோல்வி அது.அந்த தோல்வியை அவரது ரசிகர்களுக்கே நினைவூட்டுவது அவரது அரசியல் பங்காளிகள்தான்.அதை தோல்வியாக அவரது ரசிகர்களே இன்றுவரை நினைப்பது இல்லை. பின் ஏன் அடிக்கடி நினைவூட்டல்?அவர் எப்படி தோற்கலாம் என்பது தான் புரியாத புதிராக உள்ளது? இது கூட எதிர்க் கூடாரமிருந்தே!கலையுலகை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பயணித்த பாதையானது மிகவும் சுத்தமானது. அவர் வந்திருந்தாரென்றால் அரசியலின் சில சாக்கடைகளாவது சுத்தமாயிருக்கலாம் என்ற எண்ணமும் ஒரு காரணமாயிருக்கலாம்.தங்களின் கசடானஅரசியல் செயல்கள் அவர்களுக்கே சலிப்பை தந்திருக்கலாம்.ஆனாலும் மொத்த கட்சியின் செயல்பாடுகள் தடைகளை ஏற்படுத்தும் சூழலில் தான் கட்சிகள் நடந்து கொண்டிருப்பதால் அதை மீறி என்ன செய்ய முடியும்? ஓரத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் அந்த 10000 ஓட்டு வித்தியாசத்தை தங்களின் மனச்சாந்திக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.யார் யாரெல்லாம் ஜெயித்திருந்தார்கள் என்ற வரிசையை தமிழக அரசியலில் பார்த்தோமானால் அந்த வரிசை ஓட்டுப் போட்ட மக்களுக்கே அறுவெறுப்பை தரும்.சுதந்திரத்திற்கு பின்னால் கடைசியாக காமராஜருக்கு பின்னால் வந்த44 வருட அரசியல் தேர்தல் ஒரே ஒருவரின் தோல்வியைத்தான் தாங்கிக் கொள்ள முடியாதது என்ற வகையிலே பிரஸ்தாபிக்கப்படுகிறது.அப்படியானால் தோல்வியுற்றவர் எப்படிப் பட்டவராக இருந்திருக்க வேண்டும்?கண்டிப்பாக அவர் ஜெயித்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் அவரது தொண்டர்களை விட எதிர் முகாமுக்கே அதிகம் இருந்திருக்கின்றது என்பது தான் புலனாகின்றது.உங்களுக்கெல்லாம் 100 ரூபாய் தருகிறேன்.அரசாங்க கஜானாவில் 1000 ரூபாய் எடுத்துக் கொள்வேன் என்று மறைமுகமாய் விளையாடப்படும் அரசியல் களத்தில் புரியாத பாமரர்களின் ஓட்டுகள்எந்த நல்ல உண்மை வீரனுக்கு கிடைக்கும்?ஆகவே எம் திலகம் நல்ல மனிதர்.அந்த பெயர் போதும் எமக்கு!ஆனால் இந்தஅரசியல் அவலமானது , என்றுதான் சரித்திரம் பேசப்படும்.Thanks to Senthilvel sivaraj facebook
-
14th November 2019, 07:56 PM
#760
Junior Member
Senior Hubber
சிவாஜிக்கு அரசியல் தெரியாது ...எடப்பாடி சொன்னது உண்மைதான் ..--------------------------------------------------------------------------------------------------------------அரசியலை குறித்து தெளிவான ஞான அறிவு பெற்றவர் அய்யா எடப்பாடி அவர்கள் .அவர் வாயில் இருந்து முத்துக்கள் விழுகின்றது என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்யும் .சிவாஜி ரசிகர்களுக்கு ஏன்தான் கொதிப்பு வருகிறது என்று விளங்கவில்லை .தன்மானம் தொலைத்து காலை வருடி அரசியல் பதவியில்உயர வாய்ப்புகள் பல இருந்தும் எடப்பாடி போல அதனை செய்யாமல் வாழ்ந்த சிவாஜி .அரசியல்வாதியா?எடப்பாடி சொல்லுவது உண்மைதானே ?நம்பியவர்கள் கழுத்தை அறுக்காமல் நட்புக்கும் உயர்ந்த இடம் கொடுத்தது ,நண்பனுக்காக தான் வாழ்வை அழித்த சிவாஜியின் அரசியல் ,இன்றைய பீடை அரசியலுக்கு உகந்தது அல்ல என்பதை எடப்பாடி ஒத்து கொண்டு உள்ளார் ..நன்றி தான் எடப்பாடிக்கு சொல்ல வேண்டும் ..சிவாஜி மன்றத்தில் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய எடப்பாடி கொஞ்சம் சிவாஜியின் படைகளை குறித்து தெரிந்து வைத்து இருந்திருப்பார் என்று இதுவரை நம்பிக் கொண்டு இருந்தேன் ..ஆனால் காற்றில் பறந்த சருகுயென ஆட்சியில் ஏறிய மயக்கம் எடப்பாடியை மயக்கத்தில் வீழ்த்திவிட்டது ..தமிழக அரசியல் காலத்தை பதிவு செய்தால் சிவாஜி இன்றி பதிவு செய்யமுடியாது .திராவிட இயக்கம் என்று மார்பு தட்டும் நீங்கள் இன்று அடையாளமாக இருக்க ஆணிவேராக இருந்தவர் சிவாஜி .திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா ஆரம்பித்த போது,கருணாநிதியுடன் வீதிவீதியாக சென்று கட்சியை வளர்க்க நிதிசேர்த்துக் கொடுத்தவர் சிவாஜி .இதனை திராவிட வரலாற்றை குறித்து கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி நூலில் காணலாம் .1953 ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற தி மு க மாவட்ட மாநாட்டில் அண்ணா .கருணாநிதி .எம் ஜி.ஆர் .ஆகியோர் மேடையில் இருந்த போதும் ,திமுக தொண்டர்கள் சிவாஜியை பேச சொல்லுங்கள் என்று கத்தி சிவாஜிக்கு திமுக தொண்டர்கள் மத்தியில் இருந்த ஆதரவை பகிரங்கபடுத்தினார்கள் .அண்ணா தொண்டர்களின் உணர்வை மதித்து சிவாஜி முதலில் பேச சொன்னார் .சிவாஜி பேசிமுடிந்ததும் கூட்டம் கலைந்துப் போனது .அன்று கூடிய கூட்டம் சிவாஜிக்காக கூடியது என்று திராவிட தலைவர்கள் புரிந்துக் கொண்டார்கள் .விவரம் வேண்டும் என்றால் பி.சி.கணேசன் எழுதிய திரும்பி பார்க்கிறேன் என்ற நூலை புரட்டி பாருங்கள் .தமிழக அரசியல் களத்தில் நடிகன் ஒருவருக்கு முதன் முதலில் அரசியல் கட்சி போல மன்றத்தினர் தனிக்கொடி அமைத்தது சிவாஜிக்குத்தான் .திராவிட இயக்கத்தில் சிவாஜி இருந்த போது மன்றம் என்ற அமைப்பு ஒருங்கிணைப்பை காணவில்லை .ஆனாலும் காசினோ திரையரங்கில் சிவாஜி படம் ஓன்று வெளியானபோது ,சிவாஜியின் படத்தை வெள்ளை துணியில் வரைந்து கொடியாக்கி பறக்கவிட்டு இருந்தனர் .இந்த செயல் திமுகவில் சிவாஜிக்கு எதிரானவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது தனிக்கதை .எடப்பாடிக்கு இது தெரியுமா என்பது தெரியாது ?தேசிய நீரோட்டத்தில் சிவாஜி தன்னை இணைக்கும் சூழல் வந்த போதும் ,அண்ணாவின் அன்பை மறக்கவில்லை .அண்ணாவை தான் உயிராக நேசித்தார் .அண்ணாவை கடைசி வரை பூஜித்தார் .அண்ணாவின் இதயக்கனிகள் என்றவர்கள் பின்னாளில் அண்ணாவுக்கு என்ன செய்தார்கள் என்பதை மருத்துவர் மில்லரிடம் கேட்டு எடப்பாடி தெரிந்து வைத்து இருக்கலாம் .காமராஜர் என்ற பச்சை தமிழர் ஆட்சியில் இருந்த போது ,ஆட்சியை விட்டு வெளியேறியபோது ,ஒரு மனிதன் மட்டும் காமராஜர் என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இருந்தான் .பதவிக்காகவோ , பணத்திற்காகவோ அல்ல ,விசுவாசத்திற்காக ..அந்த மனிதன் சிவாஜி .எடப்பாடி கொஞ்சம் தன் அரசியல் வாழ்வை பின்னோக்கி பார்க்கவேண்டும் .அரசியல் வியாதிகளே ..1982 ஆம் ஆண்டு குமுதம் பத்திரிகை ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது .யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் என்று சிவாஜிதான் 52 சதவீதம் பெற்று முன்னிலையில் இருந்தார் .உங்க எம்ஜிஆர் கூட சிவாஜிக்கு பின்னிலையில் தான் இருந்தார் .1977 ஆம் ஆண்டு எம் .ஜி.ஆர்.கட்சி ஆரம்பித்து தேர்தலில் வென்ற வாக்கு சதவீதம் என்ன ?தமிழகத்தில் மிகவும் குறித்த வாக்கு சதவீதத்தில் வென்ற கட்சி என்ற பெயர்தானே கிடைத்தது .சிவாஜியின் அரசியலை குறித்து பேச சாக்கடைக்கு தகுதி இல்லை எனபதுதான் உண்மை .எடப்பாடி அண்ணன் புரிந்தால் நல்லது ...இல்லைஎனில் விவாதிக்க நாங்களும் தயார்....இன்பா
Bookmarks