Page 385 of 400 FirstFirst ... 285335375383384385386387395 ... LastLast
Results 3,841 to 3,850 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #3841
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    02-07-2020,
    நடிகர் திலகத்தின் அட்டகாசமான திரைப்படங்கள்,
    தொலைக்காட்சி சேனல்களில்,

    குலமா குணமா - காலை 10:30 க்கு கேப்டன் டிவியில்,
    சொர்க்கம்- காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
    பேசும் தெய்வம் - பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
    படித்தால் மட்டும் போதுமா- பகல் 12 மணி & இரவு 7 மணிக்கும்,
    நல்லதொரு குடும்பம்- இரவு 11 மணிக்கு பாலிமர் டிவியில்,


    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3842
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அரிய படம்..

    தாயார் ராஜாமணி அம்மாள் தந்தை சின்னையா ஆகியோருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்





    Thanks Luxman Raju
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3843
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Thanks to ntfans
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

    திரைக்கலைஞர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்.~#வாணிஸ்ரீ~

    நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நான் முதன் முதலில் உயர்ந்த மனிதன் படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 14 வயது. சிவாஜி சாரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தேன். நேரில் பார்த்தது இல்லை. படப்பிடிப்பின்போது ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ என்ற பாடல் காட்சியில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது சிவாஜி சாரை பார்த்து விடலாம் என்று நினைத்தேன். கடைசி வரை அவர் வரவில்லை.
    பின்னர் கொடைக்கானல் படகு இல்லத்தில் ‘வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில்’ என்ற பாடல் படப்பிடிப்பின்போது சந்தித்தேன். அப்போது மேக மூட்டமாக இருந்தது. வெயில் வரவில்லை. திடீரென்று டைரக்டர் பஞ்சு சார் ‘ரெடி’, ‘ரெடி’ என்று கூறினார். நான் ரெடியாக தாமதம் ஆகி விட்டது. உடனே பஞ்சு சார், வாணிஸ்ரீ உனக்கு அறிவு இருக்கா? இப்படி இருந்தால் எப்படி முன்னுக்கு வருவ? என்று கூறி திட்டினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு நடித்தேன். டைரக்டர் திட்டியதால் அழுது கொண்டே இருந்தேன். அப்போது சிவாஜி சார் என்னிடம் வந்து நீ வாணிஸ்ரீதானே! இப்போ அழுதே இல்ல... இன்னும் கொஞ்ச காலத்தில் பெரிய ‘ஸ்டார்’ ஆயிடுவே. இதே டைரக்டர் பஞ்சு உன்னிடம் வந்து கால்ஷீட் கேட்பார் என்று கூறினார். அப்போது நான் 2 படங்களில் மட்டும் நடித்து இருந்தேன். அவர் எப்படி அப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அவர் இமயம் மாதிரி. சிலர் சொன்னால் அது நடக்கும் என்பார்கள். இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் முடிந்த பின்னர் கர்நாடகா மாநிலத்தில் இளைய தலைமுறை படப்பிடிப்பு நடந்தது. அப்போது தெலுங்குபடங்களில் நான் பிரபலமாகி ஐதராபாத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். அங்கிருந்து விமானத்தில் பெங்களூரு சென்று காரில் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்று சிவாஜி சாரைப் பார்த்தேன். அப்போது டைரக்டர் பஞ்சு சார் என்னிடம் வந்து என்னம்மா வாணி எப்படி இருக்கே? கஷ்டப்பட்டு வந்து இருக்கே?டேக் எடுக்கலாமா? என்று கேட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் சிவாஜி சார் என்னிடம் வந்தார்.
    வாணி, அன்று கொடைக்கானல் படகு இல்லத்தில் நான் என்ன சொன்னேன் என்று நினைவு இருக்கிறதா? அதே மாதிரி நடந்ததா? இல்லையா? அன்று உன்னைப் பார்த்தும் அப்படி சொல்லனும்ன்னு தோணிச்சு என்றார். நீ வருடத்தில் என்னுடன் 2தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.
    ஒரு மனிதனாக இவ்வளவு சாதித்து விட்டோம் என்னைப் போல ஒரு நடிகர் கிடையாது என்ற கர்வம் சிவாஜி சாரிடம் கிடையாது. குழந்தை மாதிரி பேசுவார். வெளிப்புறப்படப்பிடிப்பில்அவரது மனைவி கமலாவிடம், கமலா வாணிக்கு மீன் குழம்பு கொடு. பலகாரம் கொடு என்று சொல்லுவார்.
    அவருக்கு தான் ஒரு பெரிய நடிகர் என்ற அகந்தை கிடையாது. அவருக்கு தெரிந்த உலகம் சினிமா. தெரிந்தது நடிப்பு. பராசக்தியில் இருந்து பல்வேறு படங்கள் பற்றி தான் அதிகமாக பேசுவார். வசந்தமாளிகை படத்தை முதலில் தெலுங்கில் பிரேம நகர் என்ற பெயரில் எடுத்தார்கள். தெலுங்கு, தமிழ் மொழியில் நான் நடித்தேன்.படம் வெளியானபிறகு நான் நகைக்கடை, டெக்ஸ்டைல்ஸ், ஷாப்பிங் காம்பளக்ஸ் என்று எங்கு சென்றாலும் வசந்தமாளிகை பற்றி தான் பேசுவார்கள்.
    எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற மகான்களுடன் நடித்ததால்தான் மக்கள் இவ்வளவு நாள் என்னை நினைவு வைத்துள்ளனர். அப்போதே அவர்கள் பெரிய தூண்கள். வசந்தமாளிகையில் நடித்த போது எனக்கு 19 வயதுதான். பெரியவர்களை பார்த்துதான் நடிக்க கற்றுக் கொண்டேன். அவர்கள் கூட இருப்பதே நமக்கு பெரிய பலமாக இருக்கும். வசந்தமாளிகை படப்பிடிப்பின் போது ஊட்டியில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து மேக்-அப் போட்டு 5 மணிக்கு ஷூட்டிங் சென்று விடுவோம். இலங்கையில் வசந்த மாளிகை 52 வாரங்கள் ஓடியது. இலங்கை மக்கள் நானும், சிவாஜியும் இலங்கை வரவேண்டும் என்று விருப்பப்பட்டனர். இலங்கை பிரதமர் பண்டார நாயகா நாங்கள் இலங்கை வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
    அப்போது, சிவாஜி சார் ஒரு கையால் என் கையை பற்றிக் கொண்டும் ஒரு கையில் சூட்கேஸ் வைத்துக் கொண்டு நடப்பதைப் போலவும் பண்டார நாயகா இரு கைகளையும் விரித்து காட்டி இலங்கைக்கு வரக்கூடாது என்றுஎங்களை தடுப்பது போலவும் தினத்தந்தியில் முதல் பக்கம் கார்ட்டூன் வெளியானது. இலங்கை சென்ற போது மக்கள் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, ‘என்ன படங்க அது, காதலை இவ்வளவு புனிதமாக சொல்லி இருக்கீங்க... என்று கூறி பரவசப்பட்டனர். புதுமையான கதை அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு அதை படமாக்கிய விதம் தான் வசந்தமாளிகை வெற்றிக்கு காரணம்.
    எல்லாவற்றுக்கும் ஒரு அகராதி உள்ளது. என்ஜினீயரிங் படிக்க விரும்பினால் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. டாக்டர் படிப்பு படிக்க மருத்துவ கல்லூரி உள்ளது. சினிமான்னு வரும்போது எந்த கல்லூரியோ, புத்தகமோ இல்லை. நமக்கு முன் நடித்தவர்களைதான் நாம் பின்பற்றி நடிக்கிறோம். எனக்கு தெரிந்த வரை சிவாஜி படத்தை பார்த்தால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி எந்த கதையில் எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்வார்கள். அதற்குதான் கடவுள் சிவாஜியை படைத்தார் என்று நினைக்கிறேன். அவர் படங்களை 10 நாள் பார்த்தால் பெரிய நடிகர் ஆகி விடுவார். திரைக்கலைஞர்களின் பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.
    வசந்தமாளிகை படம் வெளி வந்து பல இடங்களில் 25 வாரம் வெள்ளி விழா கொண்டாடியது. சிவாஜி சாருடன் நானும் நிறைய ஊர்களுக்கு சென்றேன். பொள்ளாச்சியில் உள்ள அவரது நண்பர்கள் வருவார்கள். அவர்கள் வந்தால் அவர்கள் என்னை பார்க்க வருவார்கள். அப்போது சிவாஜி, ஏய் வாணி உனக்கு ஒரு கூட்டமே வருது பார் என்பார். பரவாயில்லை அனுப்புங்க என்பேன். வசந்தமாளிகைக்கு பின்னர் வாணிஸ்ரீயை பார்க்கனும் என்கிறார்கள். என்னைப் பற்றிய யாரும் கேட்க மாட்டேங்கறாங்க.. அந்தப் பெண்ணைத்தான் பாக்கனும் என்கிறார்கள். என்ன இது? என்று கிண்டலாக கூறி சிரிப்பார்.
    சில கதாபாத்திரங்களில் சிவாஜி சார் மாதிரி யாரும் நடிக்க முயாது. தத்ரூபமாக நடித்து கதாபாத்திரமாகவே மாறி விடுவார். வசந்தமாளிகை படத்தை பார்க்கும்போதே இதயத்தை வருடுவதை போல் இருக்கும். அந்த படத்தை பார்த்தால் அழுது விடுவேன். யாருக்காக பாடல்காட்சியில் ‘எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று,’ பாடுங்கள் என் கல்லறையில் அவன் பைத்தியக்காரன் என்று’ வரிகள் வரும்போதே அழுகையும் சேர்ந்து வந்து விடும். எப்போது டி.வி.யில் அந்த படத்தை பார்த்தாலும் முதலில் கண் கலங்கும். அவர் நடிப்பு பற்றி அவரிடம் பாராட்ட முடியாது. இமயமலை கிட்டபோய் நீ இமயமலை, நீ உயரமா இருக்கே, நீ ரொம்ப குளிரா இருக்கே என்று கூற முடியுமா? அவர் நடிப்பு திறமை பற்றி அவரிடம் பாராட்ட முடியாது நல்லாயிருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றுதான் கூற முடியும்.
    அதன் பிறகு நாங்கள் சந்தித்த போது வசந்தமாளிகையை ராஜேஷ் கண்ணாவும், ஹேமமாலினியும் நம்ம மாதிரி பண்ணவில்லை. நம் படம் தமிழ் படம் தான் சூப்பர்! ‘என்னமா பண்ணினோம், நாம் இரண்டு பேரும்’ என்பார். பண்ணியதே அவர்தான். அவர் எளிமையானவர். தன்னை பற்றி பெரிதாக பேச மாட்டார். அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவர் இறக்கவில்லை எல்லோருடைய இதயங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் நடிகர் அவர் மீது இருக்கும் மரியாதை நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
    தமிழ்நாட்டில் நான் எங்கே ஷாப்பிங் போனாலும் வசந்தமாளிகை கூந்தல் அலங்காரம் பற்றிதான் பேசுகிறார்கள். ஊட்டியில் என் மகளுடன் ஷாப்பிங் சென்ற போது ஊர் மக்களே திரண்டு வந்தனர். கல்யாணமாகி 30 வயதில் குழந்தை இருக்கும்போது மக்கள் வசந்தமாளிகையில் என் நடிப்பை பாராட்டிய போது அவர்கள் மனதில் எப்படி பதிவு ஆகி இருக்கிறதுஎன்று நினைத்துவியந்து போவேன்.. பெரிய மகான்கள்கூட நடித்ததால்தான் என் பெயரும் புகழும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. சிவாஜி சாருடன் உயர்ந்த மனிதன், குலமா குணமா, இளையதலைமுறை, ரோஜாவின் ராஜா, நல்லதோர் குடும்பம் உள்பட பல படங்களில் நடித்துள்ளேன். சிவாஜி சார் எத்தனையோ பேருக்கு நடிக்க வழி காட்டி இருக்கிறார். அவர் குடும்பம் நீடூழி வாழ வேண்டும். சிவாஜியின் புகழை யாராலும் குறைக்க முடியாது. அது கூடுமே தவிர குறையாது.
    அவர் உயிருடன் இருக்கும்போதே ஒவ்வொரு வருடமும், எல்லா நடிகர்களும் சேர்ந்து அவரது பிறந்தநாளில் மாலைபோட்டு சால்வை அணிவித்து அவரை பற்றி பேசி இருந்தால் அவர் சந்தோஷப்பட்டு இருப்பார். கடலில் விழுந்த கல் போல எங்கெங்கோ போய்விட்டோம். எந்த ஆழத்துக்கு போனாலும் சூரியன் தெரிந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி சினிமா கடலாக இருந்தாலும் மேலே பார்த்தால் சூரியன் தெரியும். அந்த மாதிரி சிவாஜியை மறைக்கிற மேகம் இன்னும் பிறக்கவில்லை கடவுள் தனக்கு கொடுத்த கடமையை சிறப்பாக செய்து இருக்கிறார். சிவாஜி சார் ஒரு சகாப்தம், இன்றைய பெரிய ஹீரோக்கள் யாரும் அவர் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது. அவர் கூட நான் நடித்தேன் என்பதே பெருமையாக இருக்கிறது.
    - நடிகை #வாணிஸ்ரீ


    Thanks Vasudevan Srirangarajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3844
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் எனவும் கூறினார்,
    1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
    நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.

    :- கட்டுரை வெளியீடு 19/02/1986
    தினகரன் நாளிதழ்
    நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து


    Thanks Sekar Parasuram

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #3845
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #3846
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    Thanks V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3847
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like




    Thanks V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3848
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    Thanks V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3849
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3850
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like




    Thanks V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •