-
30th July 2019, 02:49 PM
#821
Junior Member
Diamond Hubber
புகழ் வெற்றி சாதனை
எம் ஜி ஆர்
இந்த மூன்று எழுத்தை வென்றவரும் இல்லை
இனி வெல்ல போவோரும் இல்லை
நினைத்ததை முடிப்பவர் எம் ஜி ஆர்
மற்றவர் நினைக்கும் முன் கொடுப்பவர் எம் ஜி ஆர்
கிள்ளி கொடுக்கும் மனம் இலலா மனிதர்கள் உள்ள உலகில் அள்ளி கொடுத்த எட்டாவது வள்ளல் எம் .ஜி .ஆர் .,புகழ் எவருக்கும் எட்டா புகழ்
வாழ்க எம். ஜி .ஆர் .,புகழ்.......... Thanks.....
-
30th July 2019 02:49 PM
# ADS
Circuit advertisement
-
30th July 2019, 08:36 PM
#822
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th July 2019, 08:40 PM
#823
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th July 2019, 09:13 PM
#824
Junior Member
Diamond Hubber
1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற தமிழ்திரைப்படங்கள் மக்களிடையே காலனிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகளை தூண்டின. 1931 ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள பேசும் படமான காளிதாஸில் தேசிய தலைவர் காந்தி பெயரும் தேசிய முழக்கம் வந்தே மாதரமும் பயன்படுத்தப்பட்டன.
1937 ஆம் ஆண்டு வெளியான “சதி அனுசுயா” வில் அனுசுயா கைராட்டையோடு திரையில் தோன்றினார். 1936 ஆன் ஆண்டு வெளிவந்த “நவீன சாரங்க தாரா’ திரைப்படத்தில் கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக போராடும் மக்கள் காந்தி குல்லா அணிந்திருந்தனர்.
திரை அரங்குகள் நகர்புறங்களிலேயே இருந்ததனால், ஊரக மக்கள் திரைப்படங்களின் தாக்கத்துக்கு ஆட்படவில்லை. இந்திய விடுதலைக்குப்பின் ஊரக பகுதிகள் மின்மயமாக்கப்பட்டவுடன், திரைப்படம் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்தது. இச்சூழலில் திமுக திரைப்படங்களை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டது.
திரைப்பட ரீதியிலான அரசியல் பரப்புரைகள் மூன்று வழிகளில் நிகழ்ந்தது எனலாம்.
நேரடியாக திரைப்பட வசனங்கள் வாயிலாக அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள்...
நேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951) பராசக்தி(1952) சொர்க்கவாசல், (1954) நாடோடி மன்னன் (1958) மற்றும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) ஆகியன.
திரைப்படங்களின் வெற்றிவிழா கூட்டங்களில் அரசியல் பிரச்சார உத்தி பின்பற்றப்பட்ட திரைப்படங்கள்...
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடிமன்னன் திரைப்படம் 100 நாட்களை தொட்ட பொழுது தி.மு.க அந்நிகழ்வை கொண்டாட வண்ணமயமான பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தியது. அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை முதலிய தி.மு.க தலைவர்கள் உரையாற்றினார்கள். கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் திரைப்படம் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தி.மு.க என காட்டவே தயாரிக்கப்பட்டது என்றார்.
1947-இல் வெளியான “ராஜகுமாரி” படத்தில் நாயகன் கருப்புச் சட்டையில் தோன்றியது தி.க தொண்டர்களை பரவசப்படுத்தியது. 1957-இல் வெளியான சக்கரவர்த்தி திருமகன் படத்தில் “உதயசூரியன்” என பெயர் தாங்கி நடித்தார்.
1963-இல் வெளியான “எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்கு “காஞ்சித்தலைவன் “ என பெயரிடப்பட்டது. இது காஞ்சியில் தோன்றிய அண்ணாவை குறிக்கும் வகையில் இத்தலைப்புச் சூட்டப்பட்டது.
1968-இல் வெளியான “புதியபூமியில்” கதிரவன் என சூரியன் பெயரைத் தாங்கி நடித்தார்.
பாடல்கள் வழியாக மட்டும் அரசியல் பிரச்சாரம் செய்த திரைப்படங்கள்...
பாடல் வரிகளிலும் எம்.ஜி.ஆர் அண்ணா புகழ் பாடினார். இதயக்கனி படத்தில் வரும் பாடல் வரிகள்;
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
“படியரிசி கிடைக்கிற காலத்திலே – நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே – நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே..”
என்ற ‘ஒளிவிளக்கு ‘ (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி (4.8 கிலோ) அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
” வாங்கைய்யா வாத்தியாரய்யா
அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!
”பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.”
”கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க…” ( நம்நாடு – 1969)
இந்த ‘நம்நாடு’ படம் மாமூல் எம்.ஜி.ஆர். •பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரையை குறித்தார்.. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் ‘துரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில ‘சுருக்’ வசனங்களும் உண்டு
” பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க.”
” யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. ”
” குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொல்லிட்டு
போயிடறாரு ” (‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜர் அடிக்கடி சொல்வாராம்)
முதலமைச்சராக இருந்த அண்ணா, நோய்வாய்பட்டு 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ‘ பதவி நாற்காலிக்காக திமுகவில் அடிபிடி நடக்கும். குழப்பம் வரும். தலைவனை பறிகொடுத்தக் கட்சி காணாமல் போய் விடும் ‘ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமூகமாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 10-2-1969ல் பதவியேற்றார். இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டு தனது ஆருயிர் நண்பர் மு.க. முதலமைச்சரான மகிழ்ச்சியை எம்.ஜி.ஆர். 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.
எம்.ஜி.ஆர். 1967ல், தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் பிழைத்ததை சுட்டிக் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியபடி தொடங்கும் ” நான் செத்து பொழச்சவன்டா. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” என்ற பாடல் தான் அது.
“ வாழை போல வெட்ட வெட்ட முளைச்சி
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா;
வந்தால் தெரியும் சேதியடா
“சந்தனப் பெட்டியில் உறங்கிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டு – அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு.
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்தை
அழகுத் தமிழில் சொல்லிச் சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா; அதனால் தோல்வியில்லையடா”
ஓடும் ரயிலை வழிமறிச்சு
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ”
அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய பங்கிருந்ததாம். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரம்கட்டி மு.கருணாநிதி ஜெயிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் உதவி செய்தாரென தகவல் உண்டு. 1970ல் எம்.ஜி.ஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.
” சூரியன் உதிச்சதுங்க…”
இங்கே காரிருள் மறஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனி சரியா பொகுமுங்க
என்ற எம்.ஜி.ஆர் பாடல் 1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.
காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.
முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)
ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, ‘மக்கள் திலகமாக’ அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும் •போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக.இத்தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்.
அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.
இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே தோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.
சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949-ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்ததற்கு எம்.ஜி.ஆரின் உழைப்பும் உண்டு......... Thanks...
-
31st July 2019, 06:41 AM
#825
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் திரைப்படத்தை காண கையில் பணம் இல்லாத போது தன்னுடைய இரத்தத்தை விற்று அவருடைய திரைப்படத்தை பார்த்த வெறி பிடித்த கூட்டம் அப்படி பட்ட அடிமட்ட கூட்டத்தை விலைக்கு வாங்க எந்த சக்தியாலும் முடியாது அவருடைய கட்சியையும் புகழையும் எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது....
வாழ்க எம் .ஜி. ஆர்., புகழ்......... Thanks...
-
31st July 2019, 06:45 AM
#826
Junior Member
Diamond Hubber
28-07-2019 ஞாயிற்று கிழமை "தினமணி" நாளிதழ் கட்டுரையின் சில பகுதிகள்.........ஊட்டி போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த வெளி இடங்களில் கண்ணுக்குக் குளிர்ச்சியான வெளிப்புறங்களில் படமாக்கினார். அதேபோல் எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் காதல் காட்சிகள்-பாடல்கள் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், இப்படத்தில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா காதல் புரியும் காட்சிகள் நேரிடையாக இல்லை.
பாசம் மற்றும் பழி உணர்வு கொண்ட இரட்டை வேடம்தான் 'அடிமைப் பெண்' படத்தில் வரும் இரு கதாநாயகிகளின் வேடம். இரு வேடங்களையும் செல்வி ஜெயலலிதா செய்திருப்பார்.. அந்தளவிற்கு அவர் நடிப்பின் மீது எம்.ஜி.ஆர் நம்பிக்கை வைத்திருந்தார். நம்பிக்கையின் வெற்றிப் பரிசாக தன் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்தில் 'அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலையும் பாடியிருப்பார் ஜெயலலிதா. இப்பாடலை பாடுவதற்கு பின்னால் சுவையான சம்பவம் நடந்தது.
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த வேறோரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, இடைவேளையில் நடன ஆசிரியர் சின்னி சம்பத்தும் - ஜெயலலிதாவும் இசையைப் பற்றி மிகவும் ஆழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தெரியாமல் இதைக் கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், பேச்சு முடிவுற்றதும் இருவரின் அருகில் வந்து, இருவரும் இசையைப் பற்றி மிகவும் ஆழமாக பேசிக்கொண்டிருந்தீர்கள், இசையைப்பற்றிய நுணுக்கங்கள் தெரியுமா என்று கேட்க, இருவரும் 'ஓ நன்றாகத் தெரியுமே' என்று கோரஸ் குரலில் சொல்ல, சரி நாளை நீங்கள் எனக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்று ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கேட்க, நிச்சயமாக பாடித் தருகிறேன் என்கிறார்.
மறுநாள் எம்.ஜி.ஆரே தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு பாடல் ஒலிப்பதிவு கூடத்திற்குச் செல்கிறார். அங்கே காத்திருந்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம், அந்தப் பாடலை இவரை வைத்து பாட வையுங்கள் என்கிறார். இப்படியாகத்தான் இப்பாடல் ஒலிப்பதிவானது. ஜெயலலிதா பல்வேறு பரிணாமத்தில் தன் முழு நடிப்பை வெளிப்படுத்திய படம். உடலுக்கு மருத்துவம் வேறு, உள்ளத்துக்கு மருத்துவம் வேறு. உள்ளத்தில் தூய்மை இருந்தால், காதலுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பயன்பட முடியும். வாழ்க்கையில் அவர்கள் முழு வெற்றியை பெறுவார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் வைத்தியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சந்திரபாபு ஆகிய மூவரும் பனிப்புயலில் சிக்கி பிரியும் போது, 'வேங்கையா நீ எங்கய்யா போன' என்று அடுக்கு மொழியில் பேசுவதும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா தப்பிப்பதற்கு "ஏமாற்றாதே ஏமாறாதே'' பாடலுக்கு முன்பாக பாலைவன மணலில் குழி தோண்டி தன்னைத்தானே புதைத்துக் கொண்டு புல்லாங்குழல் வழியாக மூச்சு விடும் காட்சியில் வருத்திக்கொண்டு நடித்திருப்பார். 1958-ஆண்டு வெளிவந்த 'நாடோடி மன்னன்" திரைப்படத்திற்குப் பிறகு, பத்தாண்டுகள் கழித்து 1968-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த 'கண்ணன் என் காதலன்' படத்தில் ரவுடி சந்திரனாக ஒரு காட்சியில் வந்து செல்வார். இதற்கடுத்து எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடித்த படம் "அடிமைப்பெண்' . இதுதான் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடித்த கடைசிப்படம். மந்திர சக்தி இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றிக் கூறி வாழ்க்கை நடத்துபவர்கள், பிறருக்கு உதவி செய்ய விரும்பினாலும் சில சமயங்களில் எப்படி தலைகீழான கதாபாத்திரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தைக் கொண்ட வேடத்தில் நடித்திருப்பார் சோ.
இப்படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும், தந்தை எம்.ஜி.ஆர் படத்தின் ஆரம்பத்திலேயே கொல்லப்படுவார். பிறகு மகன் - எம்.ஜி.ஆர்தான் படம் முழுவதும் வருவார். அதுவும் மிகவும் வித்தியாசமான ஐரோப்பிய கிராம மக்கள் அணியும் உடை. கம்ப்யூட்டர், கிராபிக்ஸ், அனிமேஷன், டிஜிட்டல் கேமரா போன்ற அதிநவீன தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் படமாக்கப்பட்ட அடிமைப் பெண் படத்தில் வெற்றிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருந்ததால் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட படத்திற்கு 2019 - ஐம்பதாவது ஆண்டு (Golden Jubilee year). ரசிகர்களுக்கு அற்புதமான படத்தை கொடுத்த எம்.ஜி.ஆர் தமிழ்த் திரை உலகம் இருக்கும் வரை போற்றப்படுவார்.
அடிமைப்பெண் தகவல்கள்:
1. கண்ணதாசன் இப்படத்தில் பாடல்கள் எழுதவில்லை
2. ஜே.பி. சந்திரபாபு பாடல் பாடாத 20 படங்களில் இதுவும் ஒன்றாகும்
3. சந்திரபாபு - எம்.ஜி.ஆருடன் நடித்த கடைசிப்படம்.
4. இப்படத்தில் நடித்ததற்காக 1969-ஆம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருதை பண்டரிபாய் பெற்றார்.
5. இப்படத்திற்கு பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி போடும் பழக்கம் ஏற்பட்டது.
6. நாயகனும்-நாயகியும் ஒரே படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் இரண்டு. ஒன்று "அடிமைப்பெண்' மற்றொன்று 'கோகுலதாஸி'.
7. "காலத்தை வென்றவன் நீ'' பாடலின் இறுதியில் வரும் ஆலாபனையை பி.சுசிலாவும் - எஸ். ஜானகியும் ஒரு நிமிடம் 3 விநாடிகள் பாடியிருப்பார்கள்.......... Thanks...
-
31st July 2019, 05:00 PM
#827
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆர் புகழ் இன்னமும் நிலைத்திருப்பது எதை காட்டுகிறது ?
எம்ஜிஆர் என்ற மாபெரும் மனிதரின் புகழ் அவர் வாழ்ந்த காலத்திலும் சரி , அவர் மறைந்து 31 ஆண்டுகள் தொடர்ந்து அவருடைய புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லுகிறது என்றல் அதற்கு உண்மையான காரணம் எம்ஜிஆரின் ரசிகர்கள் .மட்டுமே . எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எம்ஜிஆரின் புகழை எல்லா மட்டத்திலும் எடுத்து செல்வதை காண முடிகிறது . பல அரிய தகவல்களுடன் எம்ஜிஆரை பற்றிய நூலகள் நூற்றுக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளது .
லட்சக்கணக்கான , பல கோடிக்கணக்கான மக்கள் எம்.ஜி.ஆரை., நேசித்தார்கள் .இன்றும் எம்ஜிஆரின் படங்கள் தமிழ் நாட்டில் ஓடிக்கொண்டிருப்பது உலக சாதனை . குறிப்பாக கோவை , மதுரை , சென்னை போன்ற நகரங்களில் பல படங்கள் நல்ல வசூலுடன் சாதனைகள் படைத்துள்ளது .
ஊடகங்களில் எம்ஜிஆரின் படங்கள் தொடர்ந்து ஒளி பரப்புகிறார்கள் .
அரசியல் , சினிமா , மனித நேயம் மூன்று துறைகளிலும் எம்ஜிஆர் பதித்த முத்திரைகள் உலகம் உள்ளளவும் பேசப்படும் . நினைவு கூறப்படும்
எதிர் காலத்தில் இனி எவருக்கும் கிடைக்காத பெருமை எம்.ஜி.ஆர்., ஒருவருக்கே கிடைத்துள்ளது .
எம்.ஜி.ஆர் ., ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் ... எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தொண்டர்கள் பூர்வ புண்ணியம் செய்தவர்கள் என்று சொன்னால் அது கொஞ்சம் கூட மிகையன்று.........
-
1st August 2019, 08:05 PM
#828
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆர் ரசிகனுக்கு கிடைத்த பெருமைகள் .
எங்கள் எம்ஜிஆர்'' பாரத ரத்னா ''
எங்கள் எம்ஜிஆர் '' பாரத் '' - 1971
எங்கள் எம்ஜிஆர் அண்ணாவின் ''இதயக்கனி ''
எங்கள் எம்ஜிஆர் ''மக்கள் திலகம் ''
எங்கள் எம்ஜிஆர் ''புரட்சித்தலைவர் ''
எம்ஜிஆர் நினைவிடம்
எம்ஜிஆர் தோட்டம்
எம்ஜிஆர் நினைவு இல்லம்
எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகம்
எம்ஜிஆர் பிலிம் சிட்டி
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நினைவு தூண்
எம்.ஜி.ஆர் ., சென்ட்ரல் ஸ்டேஷன்
எம்.ஜி.,ஆர் ., கோயம்பேடு பேருந்து நிலையம்
உலகப்பேரவை எம்.ஜி.ஆர்., மன்றம்
எம்.ஜி.ஆர்., மன்றங்கள்
எம்.ஜி.ஆர் ., புத்தகங்கள் ..விரைவில் 1000 கின்னஸ் சாதனை ...
இன்னும் தொடரும்........ Thanks...
Last edited by suharaam63783; 1st August 2019 at 08:07 PM.
-
1st August 2019, 08:22 PM
#829
Junior Member
Diamond Hubber
கடந்த 26-07-2019 முதல் தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை காண்கிறார்... திரையரங்க உரிமையாளர்களின் அட்சய பாத்திரம், திரைப்பட விநியோகஸ்தர்களின் கற்பக விருட்சம் மக்கள் திலகம் அளிக்கும் " ரிக்க்ஷாக்காரன்"... சேலம் - அலங்கார் DTS., Courtesy: mr.Raja, Tirunelveli...
Last edited by suharaam63783; 1st August 2019 at 08:28 PM.
-
1st August 2019, 08:26 PM
#830
Junior Member
Diamond Hubber
நாளை 02-08-2019 முதல் இணைந்த 2 வது வெற்றி வாரமாக சேலம் - சரஸ்வதி dts தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது... தகவல்: திரு ராஜா, திருநெல்வேலி...
Bookmarks