-
28th April 2020, 08:20 PM
#3941
Junior Member
Diamond Hubber
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 9-ம் தியதி
உலக அஞ்சல் தினம் (World Post Day) கொண்டாடப்படுகிறது
அக்டோபர் 9, 1874 -ல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன்
நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.
உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்திய அஞ்சல் துறை 1764இல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.
இந்திய தபால் துறை நமது தலைவரை கெளரவ படுத்தும் வகையில் இரண்டு முறை தபால் தலை வெளியிடப்பட்டது.
நன்றி
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்...... Thanks...
-
28th April 2020 08:20 PM
# ADS
Circuit advertisement
-
28th April 2020, 08:21 PM
#3942
Junior Member
Diamond Hubber
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 10
1972ஆம் ஆண்டு அக்டோப*ர் 10 ஆம் தேதியான தான் மக்கள் திலகத்தை திமுக*விலிருந்து நீக்கினார் க*ருணாநிதி. திமுக அமைச்ச*ர்க*ளும், செய*ற்குழு, பொதுக்குழு உறுப்பின*ர்க*ளும் த*ங்க*ள*து சொத்து க*ணக்கை மக்களிட*ம் ப*கிர*ங்க*மாக* வெளியிட* வேண்டும் என்று கேட்ட*த*ற்காக* இந்த* ந*ட*வ*டிக்கை.
ஆனால், உண்மையான கார*ணம் க*ட்சியை த*ன் முழுக்க*ட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், த*ன*து வாரிசுக*ளின் அர*சிய*ல் எதிர்கால*த்திற்கு எம்ஜிஆர் முட்டுக்க*ட்டையாக இருந்துவிட*க் கூடாது என்ற* க*ருணாநிதியின் சுய*ந*லமே ஆகும்......
திமுகவிற்கு தலைவரின் கடைசி கும்பிடு....
நன்றி Santhanam ADMK அவர்களே....
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்...... Thanks...
-
28th April 2020, 08:23 PM
#3943
Junior Member
Diamond Hubber
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 9-ம் தியதி
இதே தினத்தில் தான் 1948-ம் ஆண்டு ராஜமுக்தியும் , 1970-ம்
ஆண்டு *எங்கள் தங்கமும்* வெளிவந்தது...
"எங்கள் தங்கம்" திரைபடத்தின் 100வது நாள் விழா 16.1.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. அந்த விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் கலந்து கொண்டனர்..
அந்த விழாவில் பேசிய முரசொலி மாறன்:
முரசொலி பத்திரிக்கை நஷ்டத்தில் நடைபெற்ற காரணத்தினாலும் மேலும் தொடர்ந்து எங்கள் படங்கள் தோல்வி அடைந்த காரணங்களாலும் எங்களது குடும்பம் கடன்கார குடும்பமாக மாறிவிட்டது வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.. குடும்பமே தற்கொலை
செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது..இந்த நிலைமையை புரட்சிதலைவர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொன்னேன் உடனே புரட்சித்தலைவரும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த "எங்கள் தங்கம்" படத்திற்கு பணம் வாங்காமல் நடித்து கொடுத்தது மட்டுமில்லாமல் படத்தை மிகப் பெரிய வெற்றி அடைய செய்து அணைத்து சொத்துக்களையும் மீட்டு கொடுத்துள்ளனர். எங்கள்
சொத்துக்களை மட்டுமல்லாது எங்கள் மானத்தையும் மீட்டு தந்தவர்கள் புரட்சிதலைவர் மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதாவுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்,...
அதே விழாவில் திரு கருணாநிதி..
மாறன் பேசும் போது புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்த உதவியை குறிப்பிட்டு பேசினார்..குடுத்து குடுத்து சிவந்த கரம் கர்ணன். அனால் எங்கள் திராவிட கர்ணன் புரட்சி நடிகர் குடுத்து குடுத்து மேனியே சிவந்து விட்டது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் வாழ்கின்ற காரணத்தினால் அவர் வாழும் மாவட்டத்திற்கு செங்கை மாவட்டம் என பெயர் வந்தது நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மாறனின் நன்றி உணர்ச்சியை நானும் வழி மொழிகிறேன்..
நன்றி
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்..... Thanks...
-
28th April 2020, 08:24 PM
#3944
Junior Member
Diamond Hubber
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
செப்டம்பர் 26-ம் தியதி
இதே தினத்தில் தான் 1947-ம் ஆண்டு
என்.எஸ்.கே.பிலிம்ஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் இரண்டாவது கதாநாயகனாக நடித்த திரைப்படமான
"பைத்தியக்காரன் "
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்தது.
இயக்குனர்கள் - கிருஷ்ணன் பஞ்சு
தயாரிப்பாளர் - டி.ராமசுவாமி என்.எஸ்.கே பிலிம்ஸ்
கதை - எஸ்.வி.சஹஸ்ரணாமம்
இசை - சி.ஆர்.சுப்புராமன் , எம்.எஸ்.ஞானமணி
நடிப்பு - எஸ்.வி.சஹஸ்ரணாமம்
என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர், டி.பாலசுப்ரமணியம்
டி.ஏ.மதுரம், எஸ் *.டி.காந்தா,எஸ்.ஆர.ஜானகி
வெளியீடு - செப்டம்பர் 26,1947
நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்....... Thanks...
-
28th April 2020, 08:25 PM
#3945
Junior Member
Diamond Hubber
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
செப்டம்பர் 25-ம் தியதி
இதே தினத்தில் தான் 1964-ம் ஆண்டு
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் நடித்த திரைப்படமான " தொழிலாளி " வந்து மிக பெரிய வெற்றியை பெற்றது.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின்
பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
திரைப்பட சூட்டிங்கின் போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர்,
‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும்.
‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா,
‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார்.
இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார்.
இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா தேவர்.
நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்....... Thanks...
-
28th April 2020, 08:38 PM
#3946
Junior Member
Diamond Hubber
பாலாஜி வாங்கிய பட்டம்: சிவாஜி,கமல், ரஜினியை வைத்து நிறைய படங்களை
தயாரித்த பாலாஜிக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உண்டாம் அதாவது நமது மக்கள் திலகத்தை வைத்து ஒரு படத்தையாவது எடுத்திட வேண்டும் என்பதே அது. அப்போது இந்தியில் ஷோலே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் அதை தமிழில் தலைவரையும், சிவாஜி யையும் வைத்து எடுக்க ஏற்பாடு செய்த நேரத்தில் நமது தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் அந்த முயற்சி பலிக்காமல் போய் விட்டதாம். தனது சினிமாவுலக வாழ்க்கையில் நிறைவேறாமல் போனது இது ஓன்று தான் எனக் கூறுவாராம். பாலாஜி நாடகக் குழு திண்டுக்கல் சென்று கொண்டிருந்த நேரத்தில் மலைப்பாதயில் தீடீரென்று ரேடியேட்டரில் தண்ணீர் இல்லாது நின்று போக சுற்றிமுற்றி பார்த்து விட்டு ஒரு குடிசை வீட்டில் சென்று தண்ணீர் கேட்டிருக்கிறார் ஒரு குடம் தண்ணீர் கொடுத்து யாரென்று விசாரிக்கும் பொழுது நாங்கள் எல்லாம் சினிமாக் காரங்க மெட்ராஸிலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறி காலி குடத்தையும் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் கொடுத்துள்ளார் அதைப் பார்த்ததும் நீ நல்லாருப்பே எம்.ஜி.ஆரு .என்று பாட்டி சொல்ல என்னை எம்.ஜி.ஆர் ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க என பாலாஜி கேட்க எல்லோருக்குமே அள்ளிக்கொடுக்கிறவர் அவர் ஒருவர் தானேப்பா எனக்கூற சிரித்துக்கொண்டே காரில் ஏறிய பாலாஜியை நாகேஷ் இது உனக்குத் தேவையா எனக் கிண்டல் செய்துள்ளார். சினிமாவையும் சினிமா நடிகர்களைப் பற்றியும் தெரியவில்லை என்றாலும் M.G.R.ன்னு ஒரு வள்ளல் இருக்கிறார். அவர் நடிகராகத் தான் இருக்கிறார் அவர் தான் எல்லோருக்கும் கொடுப்பார் என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளார். அவரது நினைப்பை கெடுக்கக் கூடாது அது மட்டுமல்ல இது ஒரு ரசிகராக இருந்து நான் எம்.ஜி.ஆருக்குச் செய்யும் மரியாதை என்று பாலாஜி நாகேஷிடம் சொல்லி இருக்கிறார்.
"தரணி கண்ட தனிப்பிறவி", என்ற புத்தகத்திலிருந்து தொகுத்தது.
இன்றும் வாழ்கிறார் மக்கள் இதயத்தில் நம் இதயக்கனி.......... Thanks CKS.,
-
28th April 2020, 08:40 PM
#3947
Junior Member
Diamond Hubber
உலகத்தில், மொத்தம் (7) கடை ஏழு வள்ளல்கள் இரூந்தார்கள். தற்போது எட்டாவது வள்ளல். டாக்டர்:எம்.ஜி*.இராமச்சந்திரன் அவர்கள் ஆவர்.
(1) பாரி
(2) ஆய்
(3) எழினி
(4) நள்ளி
(5) மலையன்
(6) பேகன்
(7) ஓரி
(8) எம்.ஜி.இராமச்சந்திரன்.
வாழ்க கடை எட்டு வள்ளல்கள்......... Thanks.........
-
28th April 2020, 08:43 PM
#3948
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி,
தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.
அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.
இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
- மக்கள்திலகம் பற்றி நாகேஷ்...... Thanks...
-
28th April 2020, 08:49 PM
#3949
Junior Member
Diamond Hubber
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
இசையமைப்பாளர் கங்கை அமரனின் பங்களாவை மிரட்டி எழுதி வாங்காத
அருமைதலைவன்
எம்ஜிஆருக்கு பக்கத்தில்
அமர்ந்திருப்பவர்
P.H. பாண்டியன்
1977. / 1980. / 1984. /
ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில்
சேரன்மாதேவி
தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தவர்
இவருடைய அறிவாற்றலை தெரிந்துகொண்ட எம்ஜிஆர் அவர்கள் இவரை சட்டசபை சபாநாயகராக நியமித்தார்
எம்ஜிஆர் மறைந்த பிறகு
எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டு வந்தவர்களில்
இவரும் ஒருவர்
உப்பிட்ட எம்ஜிஆரை உயிருள்ளவரை நினைத்தவர்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்...... Thanks...
-
28th April 2020, 08:53 PM
#3950
Junior Member
Diamond Hubber
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருக்கும் துரோகியின் பெயர்
நவநீதகிருஷ்ணன்
மதுரை மாநகராட்சியின் துணை மேயர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்துக்கு துரோகம் செய்தவர்
1++++++++++++++++++++++++++++++
எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலகட்டத்திலேயே
மதுரை நகரிலே எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தவர் பெயர்
தங்கம்
இளவரசன்
மதுரை நகர் முழுவதும் இவர்கள் இரண்டு பேருடைய பெயரைத்தான் எம்ஜிஆர் மன்ற தோழர்களுக்கு நன்றாக தெரியும்
MGR அவர்கள் அதிமுகவை
ஆரம்பித்தபின் தங்கம் இளவரசன் இருவரும் கட்சி வளர்ச்சிக்கு பயங்கரமாக பாடுபட்டார்கள்
எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு
எம்ஜிஆர் மன்ற பொறுப்புக்கு வந்தவர் தான் நவநீதகிருஷ்ணன்
தங்கம் இளவரசன்
இவர்களைப்போல் ஆதிகாலத்திலிருந்து
எம்ஜிஆர் மன்றத்தை வைத்து அதன் வளர்ச்சிக்கு
பாடுபடாதவர்
நவநீதகிருஷ்ணன்
காலக்கொடுமை பெருக்கான் காவடி எடுத்து ஆடியது என்று பழமொழி
நவநீத கிருஷ்ணனுக்கு பதவி கிடைத்தது
தங்கம் இளவரசன் போன்றவர்கள்
மதுரை மாநகராட்சி மேயராகவே வரக்கூடிய
தகுதிபெற்றவர்கள்
ஆனால் துரோகி நவநீதகிருஷ்ணன் துணை மேயராக வந்தார்
ஜெஅணியில் இருந்து கொண்டு ஜானகி அம்மையாருக்கு எதிராக செயல்பட்டார்
இவர்களெல்லாம் எம்ஜிஆரிடம் பதவி பெறாமல் இருந்துவிட்டு
ஜானகி அம்மாவிற்கு துரோகம் செய்திருந்தால் தவறு இல்லை
MGR எம்ஜிஆரிடம் பதவிகள் அனுபவித்துவிட்டு
MGR எம்ஜிஆர் மனைவிக்கு துரோகம் செய்தார்கள்
/////////////////////////////////////?////////?///?.... Thanks...
++++++++++++++++++++++++++++?++++(?
Bookmarks